The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by g-86214571, 2024-04-12 04:16:33

BAHASA TAMIL TING 5

BAHASA TAMIL TING 5

i UMA PUBLICATIONS 2020 க�ோபாலன் முத்தையா / GOPALAN MUTIHAH செல்வஜ�ோதி இராமலிங்கம் / SELVAJOTHI RAMALINGAM சரவணன் இராமச்சந்திரன் / SARAVANAN RAMACHINDRAN ஆசிரியர்கள் / PENULIS சகாதேவன் எட்டியன் / SAHADEVAN YETIAN நாராயணசாமி குப்புசாமி / NARAYANASAMY KUPPUSAMY மகேஸ்வரி சண்முகம் / MAGESWARY SHUNMUGAM பதிப்பாசிரியர்கள் / EDITOR அமலன் சகாதேவன் / AMALAN SAHADEVAN வடிவமைப்பாளர் / PEREKA BENTUK பெர்னாண்டோ இக்னேசியஸ் / FERNANDO IGNATIUS சந்திரன் கிருஷ்ணன் / SANDRAN KRISHNAN ஓவியர்கள் / ILUSTRATOR KURIKULUM STANDARD SEKOLAH MENENGAH தமிழ்மொழி BAHASA TAMIL பொறுப்பாசிரியர் / EDITOR AM ð®õ‹ TINGKATAN


ii PENGHARGAAN Penerbitan buku teks ini melibatkan kerjasama banyak pihak. Sekalung penghargaan dan terima kasih ditujukan kepada semua pihak yang terlibat: • Jawatankuasa Penambahbaikan Pruf Muka Surat, Bahagian Sumber dan Teknologi Pendidikan, Kementerian Pendidikan Malaysia. • Jawatankuasa Penyemakan Pembetulan Pruf Muka Surat, Bahagian Sumber dan Teknologi Pendidikan, Kementerian Pendidikan Malaysia. • Jawatankuasa Penyemakan Naskhah Sedia Kamera, Bahagian Sumber dan Teknologi Pendidikan, Kementerian Pendidikan Malaysia. • Pegawai-pegawai Bahagian Sumber dan Teknologi Pendidikan dan Bahagian Pembangunan Kurikulum, Kementerian Pendidikan Malaysia. • Jawatankuasa Peningkatan Mutu, Uma Publications. Semua pihak yang terlibat secara langsung atau tidak langsung dalam usaha menjayakan penerbitan buku ini. KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA KPM-2020 ISBN 978-967-434-303-3 - 0096 Cetakan Pertama 2020 © Kementerian Pendidikan Malaysia Hak Cipta Terpelihara. Mana-mana bahan dalam buku ini tidak dibenarkan diterbitkan semula, disimpan dalam cara yang boleh dipergunakan lagi, ataupun dipindahkan dalam sebarang bentuk atau cara, baik dengan cara bahan elektronik, mekanik, penggambaran semula mahupun dengan cara perakaman tanpa kebenaran terlebih dahulu daripada Ketua Pengarah Pelajaran Malaysia, Kementerian Pendidikan Malaysia. Perundingan tertakluk kepada perkiraan royalti atau honorarium. Diterbitkan untuk Kementerian Pendidikan Malaysia oleh: UMA PUBLICATIONS 85, Jalan Perhentian, Sentul, 51100 Kuala Lumpur, Malaysia. Tel : 03-40411617 Faks : 03-40440441 e-mel : [email protected] Reka Letak dan Atur Huruf : UMA PUBLICATIONS Muka taip teks : UNI-Nisha Saiz taip teks : 13 poin Dicetak Oleh : Percetakan Advanco Sdn.Bhd. (45169-K), No.19, 21 & 23, Jalan Segambut Selatan, 51200 Kuala Lumpur, Malaysia. No Siri Buku : 0096


iii 1 தொகுதி க ள் முன்னுரை மொழிக்கூறுகளுக்கான படச்சின்னங்கள் சிந்தனை வரைபடம் தொகுதிப் படர்ச்சி iv v vi vii 1 உடல் நலம் 1 3 குடும்பத்தில் இளைஞர்கள் 21 2 தகவல்யுக அடிச்சுவடுகள் 11 4 இலக்கிய வேர் 31 5 பொருள் வளர்க்கும் பொருளகம் 41 11 இல்லற இன்பம் 101 13 சுற்றுச்சூழல் 121 12 சமூகத்தில் நாம் 111 14 நாடகக் கலை 131 15 இலக்கிய உலா 141 6 மொழியும் மனிதனும் 51 8 இலக்கியச் சுவை 72 7 வாழ்வு நெறி 61 9 பொருளியல் உலகு 81 10 பூவுலகின் சொர்க்கம் 91 16 குடும்பவியல் மேம்பாடு 151 18 வனப்புமிகு வரலாறு 171 17 வங்கியியல் 161 19 பயணமோ பயணம் 181 20 கவின்மிகு மலேசியா 191 21 பொருளாதாரம் 201 22 வாழ்வும் இலக்கியமும் 211 உள்ளடக்கம்


iv முன்னு1 ரை இடைநிலைப் பள்ளிகளில் ஐந்தாம் படிவத்தில் தமிழ்மொழியைத் தேர்வில் ஒரு பாடமாகத் தெரிவு செய்ய விழையும் மாணவர்களை மனத்தில் கொண்டு இப்பாடநூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப மாணவர்களின் தமிழ்மொழி ஆளுமையையும் தரத்தையும் உயர்த்த வேண்டும் என்பதே இந்நூல் ஆசிரியர்களின் ந�ோக்கமாகும். இவற்றிற்கு ஏற்பப் பாடப் பகுதிகளின் அளவு அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலில் அடங்கியுள்ள பனுவல்கள் பன்முகத் தன்மை கொண்டவையாக உள்ளன. எஸ்.பி.எம். தேர்வினை முடித்த மாணவர்கள் தொடர்ந்து தங்களின் கல்வியைத் தொடர அல்லது வேலை வாய்ப்புகளைத் தெரிவு செய்ய உதவும் வகையில் பனுவல்கள் அமைந்துள்ளன. மேலும், தமிழ்மொழியைப் பயில விரும்பும் மாணவர்கள், மனமகிழ்ச்சியுடனும் ஆர்வமுடனும் தமிழைக் கற்ற வேண்டும் என்பதே இந்நூல் ஆசிரியர்களின் விருப்பமாகும். எனவே, இதற்கேற்பவும் பாடங்களும் நடவடிக்கைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், இந்நூல் மேல் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் அடையவேண்டிய கல்வி இலக்குகள், குறிப்பாக, தமிழ்மொழி சார்ந்த இலக்குகள், ஒட்டு மொத்தக் கல்வியியல் கோட்பாடுகள் மற்றும் சிந்தனை ஆற்றல்கள் போன்றவற்றைக் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாணவர்களின் அறிவு, சிந்தனை முதிர்ச்சிகளுக்குச் சவாலாக அமையும் வண்ணம் பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 21ஆம் நூற்றாண்டின் கல்வியியல் கூறுகளான, தொடர்புறவுத் திறன், உயர்நிலைச் சிந்தனைகள், ஆக்கச் சிந்தனைகள், அலசி ஆராயும் திறன் போன்றவையும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. இந்நூலில் தனித்துக் கற்கவும், இணைந்து கற்கவும், கூடிக் கற்கவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்மொழிக்கான பாடநூல் என்பதனால், தமிழ்மொழி, இலக்கியம், கலை, பண்பாடு சார்ந்த கூறுகள் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன. மொழியணி மற்றும் இலக்கணக் கூறுகள் பாடத்திட்ட வரையறையைப் பின்பற்றிச் சற்று ஆழமாகப் பார்க்கப்பட்டுள்ளன. அதே வேளையில், வங்கித்துறை, விவசாயம், நாட்டு இயல், தற்கால அறிவியல் தொழில்நுட்பம், சமூகம் சார்ந்த கூறுகள் பாடப் பொருள்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இப்பாடநூல் 22 தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இந்நூலின் சிறப்பு அம்சமாக, நிகர்நிலை கற்றலில் ஈடுபடுதல்; இணையத்தளத்தைப் பயன்படுத்துதல்; ஜாப்பரைப் பயன்படுத்துதல்; காணொலிகளைப் பயன்படுத்துதல் போன்றவையும் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை நன்கு பயன்படுத்தி, ஐந்தாம் படிவத்தில் அதிகமான மாணவர்கள் ஆர்வமுடன் தமிழ் கற்று, சிறந்த தேர்ச்சியினைப் பெற ஆசிரியர்கள் துணை நிற்பர் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும். இறுதியாக, இவ்வாய்ப்பினை நல்கிய கல்வி அமைச்சுக்கு எங்களின் நன்றி உரித்தாகுக. நன்றி. நூலாசிரியர்கள்


v 1 மொழிக்கூறுகளுக்கான படச்சின்னங்கள் v செவிமடுத்திடுக ð£ì‹ ªî£ì˜¹¬ìò «î´ ªð£¼¬÷ M¬óM™ «î®ì Þ‰«ï£‚°‚ °Pf†¬ìŠ ðò¡ð´ˆî¾‹. QR «ï£‚°‚ °Pf´ ü£Šð˜ (Zappar) â‹ ªêòL¬òŠ ðFMø‚è‹ ªêŒ¶ Þ‰î «ï£‚°‚ °Pf†¬ìŠ ðò¡ð´ˆî¾‹. AR «ï£‚°‚ °Pf´


vi 1 சிந்தனை வரைபடம் வட்ட வரைபடம் (சூழலுக்கு ஏற்ப வரையறுத்தல்) இணைப்பு வரைபடம் (முழுமைப் பொருளையும் பகுதியையும் பகுப்பாய்வு செய்தல்) குமிழி வரைபடம் (சொல், சொற்றொடர்களைக் கொண்டு விவரித்தல்) நிரலொழுங்கு வரைபடம் (கருத்துகளை நிரல்படுத்துதல்) பல்நிலை நிரலொழுங்கு வரைபடம் (காரணங்களையும் விளைவுகளையும் ஆராய்தல்) மர வரைபடம் (வகைப்படுத்துதல்; குழுமப்படுத்துதல்) இரட்டிப்புக் குமிழி வரைபடம் (ஒற்றுமை வேற்றுமைகளை அறிதல்) பால வரைபடம் (ஒற்றுமையைக் காணுதல்) 1 5 2 3 7 4 8 6


vii தொகுதிப் படர்ச்சி கருப்பொருள் தலைப்பு கற்றல் தரம் ம�ொழியணி/ இலக்கணம் சிந்தனை வரைபடம் உயர்நிலைச் சிந்தனைத்திறன் தொகுதி 1 உடல் நலம் 1. உடல் நலமும் வாழ்க்கை முறையும் 1.1.5 முற்றியலுகரம் பாடம் 1 இடுபணி 2 2. தூய்மையும் நலமான வாழ்வும் 2.1.10 மர வரைபடம் 3. உளநலமும் உடல் நலமும் 3.3.7 4. இலக்கணம் 5.1.5 தொகுதி 2 தகவல்யுக அடிச்சுவடுகள் 1. தொடர்புறவுக்குத் தொழில் நுட்பம் 1.2.6 திருக்குறள் 2. நம்பகத் தகவல் 2.2.8 3. மாறும் தகவல்யுகம் 3.4.34 4. செய்யுளும் மொழியணியும் 4.2.5 தொகுதி 3 குடும்பத்தில் இளைஞர்கள் 1. இளைஞர்களும் பொருளாதாரமும் 1.3.10 தன்வினை பிறவினை பாடம் 2 இடுபணி 2 வளப்படுத்துதல் 2. இளையோருக்கு ஊரடங்கு 2.3.13 3. நல்லதொரு குடும்பம் 3.4.29 4. இலக்கணம் 5.2.7 தொகுதி 4 இலக்கிய வேர் 1. இயற்கையில் மாந்தன் 1.3.11 கம்ப இராமாயணம் நிரலொழுங்கு வரைபடம் பாடம் 2 இடுபணி 1 இடுபணி 3 எதிர்காலவியல் 2. இலக்கியமும் பண்பாடும் 2.3.14 3. இயற்கை இன்பம் 3.4.32 4. செய்யுளும் மொழியணியும் 4.3.5 தொகுதி 5 பொருள் வளர்க்கும் பொருளகம் 1. பணப் பரிமாற்றம் 1.4.7 வடமொழிச் சந்தி பாடம் 2 இடுபணி 3 குறைநீக்கல் 2. மோசடி எச்சரிக்கை! 2.3.15 3. சேமிப்புத் திட்டம் 3.4.33 4. இலக்கணம் 5.3.9 தொகுதி 6 ம�ொழியும் மனிதனும் 1. மலேசியாவில் தமிழ்க்கல்வி 2. மொழிபெயர்ப்பு 3. மொழி தரும் வேலை 4. செய்யுளும் மொழியணியும் 1.5.5 2.2.8 3.3.7 4.4.5 இணைமொழி


viii கருப்பொருள் தலைப்பு கற்றல் தரம் ம�ொழியணி/ இலக்கணம் சிந்தனை வரைபடம் உயர்நிலைச் சிந்தனைத்திறன் தொகுதி 7 வாழ்வு நெறி 1. குடும்ப நலனில் நன்னெறி 1.1.5 முற்றியலுகரம் 2. அறப்போர் 2.1.11 3. சிறுகதையில் மனவியல் 3.4.36 4. இலக்கணம் 5.4.8 தொகுதி 8 இலக்கியச் சுவை 1. இலக்கிய நுகர்வு 1.2.6 திருக்குறள் பாடம் 2 இடுபணி 2 குறைநீக்கல் 2. முருகுணர்ச்சி 2.3.14 3. பயன் தரு இலக்கியம் 3.4.30 4. செய்யுளும் மொழியணியும் 4.2.5 தொகுதி 9 பொருளியல் உலகு 1. கடன் உதவி 1.3.10 பெயரெச்சம் நிரலொழுங்கு வரைபடம் பாடம் 1 இடுபணி 2 பாடம் 2 இடுபணி 1 வளப்படுத்துதல் 2. வங்கி பிறந்த கதை 2.3.15 3. வரமும் சாபமும் 3.4.31 4. இலக்கணம் 5.5.10 தொகுதி 10 பூவுலகின் ச�ொர்க்கம் 1. வெனிஸ் நகரம் 1.3.11 புறநானூறு வட்ட வரைபடம் 2. கவிச்சக்கரவர்த்தி கம்பன் 2.1.11 3. வயல்வௌி 3.4.32 4. செய்யுளும் மொழியணியும் 4.3.5 தொகுதி 11 இல்லற இன்பம் 1. குடும்ப உறவு 1.4.7 எழுவாய்த்தொடர் விளித்தொடர் பாடம் 2 இடுபணி 1 வளப்படுத்துதல் 2. குறள் காட்டும் குடும்பம் 2.3.13 3. பெண்களின் பங்கு 3.4.33 4. இலக்கணம் 5.5.11 தொகுதி 12 சமூகத்தில் நாம் 1. பண்பியல் தீர்வுகள் 2. நற்பணி 3. அறப்பணி 4. செய்யுளும் மொழியணியும் 1.3.10 2.1.10 3.4.35 4.5.5 உவமைத்தொடர்


ix கருப்பொருள் தலைப்பு கற்றல் தரம் ம�ொழியணி/ இலக்கணம் சிந்தனை வரைபடம் உயர்நிலைச் சிந்தனைத்திறன் தொகுதி 13 சுற்றுச்சூழல் 1. தூய்மைக்கேடு 1.2.6 தொகாநிலைத் தொடர் 2. நெகிழியும் நாமும் 2.2.8 3. சுற்றுச்சூழலும் மேம்பாடும் 3.4.30 4. இலக்கணம் 5.7.6 தொகுதி 14 நாடகக் கலை 1. தொடர் நாடகம் 1.4.7 திருக்குறள் 2. நாடகம் வளர்த்த தமிழ் 2.1.11 3. கலையா...? கொலையா...? 3.4.31 4. செய்யுளும் மொழியணியும் 4.2.5 தொகுதி 15 இலக்கிய உலா 1. தேர்வில் இலக்கியம் 1.3.10 தொகாநிலைத் தொடர் பாடம் 2 இடுபணி 2 வளப்படுத்துதல் 2. அறிவியல் இலக்கியம் 2.3.14 3. இலக்கிய மேடை 3.4.34 4. இலக்கணம் 5.7.7 தொகுதி 16 குடும்பவியல் மேம்பாடு 1. பெண்ணின் பெருமை 1.2.6 பழமொழி பல்நிலை நிரலொழுங்கு வரைபடம் பாடம் 2 இடுபணி 1 குறைநீக்கல் 2. குழந்தை வளர்ப்பு 2.3.13 3. விழல் நீர் 3.4.36 4. செய்யுளும் மொழியணியும் 4.7.5 தொகுதி 17 வங்கியியல் 1. முதலும் முதலீடும் 1.1.5 தொகாநிலைத் தொடர் பாடம் 2 இடுபணி 2 2. வாங்குவோம் பங்கு 2.3.15 3. பங்குச் சந்தை 3.4.29 4. இலக்கணம் 5.7.8 தொகுதி 18 வனப்புமிகு வரலாறு 1. பல்லவர் பதிப்பு 2. கீழடியில் தொன்மை 3. வரலாற்றுக் கழகம் 4. செய்யுளும் மொழியணியும் 1.1.5 2.1.10 3.4.35 4.6.5 மரபுத்தொடர்


x கருப்பொருள் தலைப்பு கற்றல் தரம் ம�ொழியணி/ இலக்கணம் சிந்தனை வரைபடம் உயர்நிலைச் சிந்தனைத்திறன் தொகுதி 19 பயணம�ோ பயணம் 1. எழில்மிகு கிழக்கு மலேசியா 1.3.11 தொகாநிலைத் தொடர் 2. போக்குவரத்து இடையூறுகள் 2.1.10 3. பார்க்க வேண்டிய காட்சி 3.4.32 4. இலக்கணம் 5.7.9 தொகுதி 20 கவின்மிகு மலேசியா 1. சுற்றுலாத் தலங்கள் 1.5.5 தொல்காப்பியம் 2. திரங்கானுவில் லண்டன் 2.2.8 3. சுற்றிப் பார்ப்போம்! 3.4.31 4. செய்யுளும் மொழியணியும் 4.3.5 தொகுதி 21 பொருளாதாரம் 1. பொருளியல் சிக்கல் 1.4.7 தொகாநிலைத் தொடர் பாடம் 2 இடுபணி 3 2. மலேசிய வங்கிகளும் செயல்பாடுகளும் 2.3.15 3. மாறிவரும் வங்கியியல் 3.4.34 4. இலக்கணம் 5.7.10 தொகுதி 22 வாழ்வும் இலக்கியமும் 1. இலக்கியம் பேணுவோம்! 1.3.10 பழமொழி குமிழி வரைபடம் பாடம் 2 இடுபணி 2 2. காப்பியப் பெருமை 2.3.14 3. இலக்கியமும் மனிதனும் 3.4.33 4. செய்யுளும் மொழியணியும் 4.7.5


1 உடல் நலம் ஒலிபரப்பப்படும் உரையை மதிப்பீடு செய்யும் வகையில் கவனமாகச் செவிமடுத்திடுக. ð£ì‹ 1 1.1.5 உடல் நலமும் வாழ்க்கை முறையும் செவிமடுத்தவற்றிலுள்ள கருத்துகளை மதிப்பீடு செய்து தொகுத்துக் கூறுவர். 1 தோழர்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம். ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்,’ என்கிறார் திருமூலர். இதை நாம் மறக்கக்கூடாது. உடல் காக்கத் துணைபுரிவது நம் உணவு முறைதான் என்பது மறுக்க முடியாத கூற்று. எனவே, உடல் காக்க, ‘உணவே மருந்து; மருந்தே உணவு,’ எனும் சித்தர்கள் காட்டிய நெறியில் நாம் வாழ முற்பட வேண்டும். இன்றைய தவறான உணவு முறையால், நம்மைப் பல்வேறு நோய்கள் வாட்டி வதைக்கின்றன. சித்தர் நெறியைப் பின்பற்றி நவதானிய உணவுகள், கீரை வகைகள், பழ வகைகள், காய்கறிகள் போன்றவற்றை நம் உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே வேளையில், உப்பு, புளி, காரம், இனிப்பு, கொழுப்பு, எண்ணெய் வகைப் பொருள்களை உணவில் அதிகமாகச் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இவை மட்டுமல்ல; அளவோடு சரியான நேரத்தில் உண்ணவும் பழக வேண்டும்.


2 த� ொகுதி 1 உரையின் பகுதிகள் உணர்த்தும் உடல் நலமும் வாழ்க்கை முறையும் பற்றிய கருத்துகளை இணையராகக் கலந்துரையாடி மர வரைபடத்தில் நிறைவு செய்க. கருத்துகளைப் பகுப்பாய்வு செய்து கூறுக. முறையான உணவுப் பழக்கம் சித்தர்நெறியைப் பின்பற்றுதல் உடல் தூய்மை காக்கும் வழிகள் கைகால்களைக் கழுவுதல் நலமான வாழ்க்கை முறைகள் உடற்பயிற்சி மேற்கொள்ளல் உடல் நலமும் வாழ்க்கை முறையும் பகுப்பாய்வு செய்த தகவல்களை மதிப்பீடு செய்து, உடல் நலமும் வாழ்க்கை முறையும் பற்றிய கருத்துகளைத் தொகுத்துக் கூறுக. உமது கருத்துகளைக் கீழ்க்காணும் முறையில் தொகுத்திடுக. 1 2 எ.கா: முன்னுரை: தலைப்பை விளக்குதல். தெரிநிலைக் கருத்து: முறையான உணவுப் பழக்கத்தைக் கொண்டிருத்தல். புதைநிலைக் கருத்து: முன்னோர் காட்டிய வழிமுறைகளைப் பின்பற்றுதல். முடிவுரை: பரிந்துரை /விளைவு / சொந்தக் கருத்து நண்பர்களே! உடல் நலத்தைக் காப்பதற்கு மற்றொரு சிறந்த வழி உடல் தூய்மையைக் காப்பதுதான். புறத்தூய்மை நீரால் அமையும் என்று வள்ளுவர் வழிகாட்டுகிறார். இந்த நெறியை இப்பொழுது நம்முள் சிலர் மறந்துவிட்டோம். முன்பெல்லாம் வெளியில் சென்று வீடு திரும்புகையில் கைகால்களைக் கழுவாமல் உள்ளே வரக்கூடாது என்ற பழக்கம் இருந்தது. வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருக்கும் நீரால் தம் கை, கால், முகம் ஆகியவற்றைக் கழுவிச் சுத்தம் செய்த பின்னரே வீட்டினுள் நுழைவர். அவ்வளவு ஏன்? புதிதாகப் பிறந்த குழந்தையைப் பார்க்கச் செல்வோர் மஞ்சள் நீரால் கை, கால் கழுவிய பின்புதான் வீட்டினுள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவர். இறப்பு நிகழ்வில் கலந்துவிட்டு இல்லம் திரும்புவோர், மஞ்சள் நீரில் குளித்துவிட்டுத்தான் வீட்டினுள்ளே நுழைவர். மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினி. கொரோனா பெருந்தொற்றின் போது, மஞ்சள் நீர் சிறந்த கைத்தூய்மியாகப் பரிந்துரைக்கப்பட்டதை நீங்கள் மறந்திருக்க முடியாது. மேலும், மஞ்சள், உணவாகக் கொள்ளும் நச்சு நாசினி. அதனால்தான் நம் முன்னோர் காலம் தொட்டு, மஞ்சளை உணவில் ஒரு முக்கியத் துணைச் சேர்க்கையாக நாம் பயன்படுத்தி வருகின்றோம். தோழர்களே! உடல், மன நல்வாழ்விற்காக நாம் சில பழக்க வழக்கங்களைக் கட்டாயம் கடைப்பிடித்தல் வேண்டும். சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளல்; உடற்பயிற்சி செய்தல்; உள்ளத்தை மகிழ்ச்சியாக வைத்திருத்தல்; தூங்கும் நேரத்தை முறைப்படுத்தல் போன்றவற்றை நம்முடைய பழக்கமாக்க வேண்டும். மேலும், கொரோனா பெருந்தொற்று போன்ற நோய் பரவும் காலத்தில், முறையான கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும். இதுவே நல்வாழ்வுக்குச் சிறந்த வழி. எனவே, முறையான வாழ்வு முறைக்குத் திரும்புங்கள். விடைபெறுகின்றேன். நன்றி, வணக்கம்.


3 வளப்படுத்துதல் நடவடிக்கையில் கலந்தாய்வு செய்யப்பட்ட கருத்துகளைப் பட்டியலிடுக. °¬øc‚è™ கலந்தாய்வுக் களத்தின் கருத்துகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்க; தொகுத்துக் கூறுக. த� ொகுதி 1 கொரோனா பெருந்தொற்று பல்வேறு துன்பங்களை ஏற்படுத்தினாலும், சில நல்விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றது. 1. 2. 3. 3 இன்றைய மக்களுக்கு உடல் நலத்தைப் பற்றிய அக்கறை குறைந்துவிட்டது; பேராசை மிகுந்துவிட்டது. தேவையில்லாததை எல்லாம் தேவை என்று எதையெதையோ தேடித் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவுதான் சிறிய நோய்கூட பெருநோயாக மாறி மக்களை வதைக்கிறது; வாட்டுகிறது. மக்களைத் தாக்குகின்ற இன்றைய நோய்களுக்கு நாம் மக்களை மட்டுமே குறை கூறுகிறோம். உண்மையில் அவர்களை மட்டுமே குற்றஞ்சாற்றுவது தவறுதான். இன்றைய வாழ்க்கை முறை அவ்வாறு ஆகிவிட்டது. அவர்கள் என்ன செய்வார்கள்? வாழ்க்கையின் தேவைகளை நிறைவு செய்ய அவர்கள் போராட வேண்டியுள்ளதே! õ÷Šð´ˆ¶î™ கீழ்க்காணும் தலைப்பை ஒட்டிய கருத்துகளைத் திரட்டி மதிப்பீடு செய்க. கருத்துகளைத் தொகுத்து வகுப்பில் கூறுக.


4 2.1.10 அறிக்கையினை மெளனமாக விரைந்து வாசித்திடுக. அறிக்கையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர். 4 ð£ì‹ 2 தூய்மையும் நலமான வாழ்வும் த� ொகுதி 1 தாமான் முகிபா குடியிருப்பாளர் சங்கம் எண்.32, பெர்சத்து சாலை, தாமான் முகிபா, 42700 பந்திங், சிலாங்கூர். நகராண்மைக் கழகத் தலைவர், தெலுக் டத்தோ நகராண்மைக் கழகம், 42700 பந்திங், சிலாங்கூர். நகராண்மைக்கழக ஊழியர்களின் அலட்சியப் போக்கும் நோய்களின் தாக்கமும் 1.0 குடியிருப்புப் பகுதியின் பின்னணி எங்களின் தாமான் முகிபா குடியிருப்புப் பகுதி, பந்திங் பட்டணத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. எங்களின் வசிப்பிடத்தில் ஏறக்குறைய 470 குடும்பங்கள் இருக்கின்றன; 1700 பேர் வசிக்கின்றனர். இங்கு மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், பூர்வக் குடியினர் எனப் பல்லின மக்கள் வசிக்கின்றனர். 2.0 வசிப்பிடத்தில் நிலவும் குறைபாடுகள் எங்கள் இருப்பிடத்தில் இதுவரை எந்தவித இடர்ப்பாடுகளும் இன்றி நாங்கள் மகிழ்வுடன் வாழ்ந்து வந்தோம். நாங்கள் நகராண்மைக் கழகம் விதிக்கும் வீட்டுவரி, பராமரிப்பு வரி முதலியவற்றை முறையாகச் செலுத்தி வருகிறோம். ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை. கடந்த இரண்டு மாதங்களாகப் பல்வேறு துன்பங்கள்; துயரங்கள்; தாங்க முடியா வேதனைகள். குறிப்பாக நகராண்மைக் கழக உறுப்பினர்கள் கால அட்டவணைக்கேற்பக் குப்பைகளை அகற்றுவதில்லை; சாக்கடைகளைத் துப்புரவு செய்வதில்லை; கால்வாய்களைத் தூர்வாராமை போன்றவற்றால் சுற்றுச்சூழல் தூய்மைக்கேடு அடைந்ததால் இங்குள்ள மக்கள் மிகவும் அல்லல்படுகிறோம். 3.0 அலட்சியப் போக்கினால் ஏற்படும் நோய்களின் தாக்கம் நகராண்மைக் கழக ஊழியர்களின் அக்கறையற்ற போக்கினால், ‘டிங்கி’ நோயின் தாக்கம் மிக வேகமாகப் பரவி வருகிறது. எங்கும் ஒரே துர்நாற்றம்; எலிகளின் பெருக்கம்; ஈக்களின் தாக்கம். என்ன செய்வது என்று அறியாமல் இருக்கிறோம். பல முறையீடுகள் செய்துவிட்டோம். ஆனால், இதுவரையிலும் ஏன் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை நாங்கள் அறிய விழைகிறோம். இந்தச் சிக்கலினால் நகராண்மைக் கழகத்தின்பால் எங்களுக்கு இருந்த நம்பிக்கை மிகவும் குறைந்து வருகிறது. முறையீட்டு அறிக்கை:


5 த� ொகுதி 1 4.0 வேண்டுகோளும் தீர்வும் ஐயா, எங்கள் வசிப்பிடத்தின் நிலைமை மேலும் மோசமடைவதற்குள், உடனடி நடவடிக்கைகளைத் தயவுசெய்து மேற்கொள்ளுங்கள். ‘நலமான வாழ்வுக்குத் தூய்மையே அடித்தளம்’ என்பதை உறுதி செய்யுங்கள். நன்றி. அறிக்கை தயாரித்தவர், 10.2.20 (இளவேந்தன் தமிழினியன்) செயலாளர், தாமான் முகிபா குடியிருப்பாளர் சங்கம் அறிக்கையினை ஆழ்ந்து வாசித்து வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவை வெளிப்படும் இடங்களை ஆய்ந்து அடையாளம் காண்க. அறிக்கையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப உரக்க வாசித்துக் காட்டுக. அறிக்கையில் காணும் லகர, ளகர, ழகர; னகர, ணகர; றகர, ரகரச் சொற்களைப் பட்டியலிட்டுச் சரியான உச்சரிப்புடன் உரக்க வாசித்துக் காட்டுக. 1 2 3 லகரம் ளகரம் ழகரம் னகரம் ணகரம் றகரம் ரகரம்


6 மருத்துவக் கையேட்டைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவை வெளிப்பட உரக்க வாசித்துக் காட்டுக. õ÷Šð´ˆ¶î™ விழிப்புடன் இருங்கள்..! ஏடிஸை ஒழியுங்கள்..! டிங்கிக் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது தெரியுமா? ‘ஏடிஸ்’ எனும் ஒருவகைக் கொசுவினால் பரவும் நோய்தான் டிங்கிக் காய்ச்சல். இந்நோய் தொடர்பாக உலகம் முழுவதும் இதுவரை சுமார் ஒரு கோடி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்த அறிகுறிகள் இருந்தால் கவனமாக இருங்கள்..! தொடர்ச்சியான காய்ச்சல், தலைவலி, பொதுவான உடல் வலி (தசை வலி, மூட்டு வலி), குமட்டல் மற்றும் வாந்தி, பல் ஈறுகளிலிருந்து குருதி வடிதல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல்; ஏடிஸ் கொசு உற்பத்தியாகும் வாழ்விடங்களை முற்றுமுழுதாக அழித்தல்; சுற்றுப்புறத்தில் தேங்கும் நீர்நிலைகளைக் கண்டறிந்து அவற்றை மூடுதல்; பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்தல்; ஒரு வாரத்திற்கு ஒருமுறை பூச்சாடிகள், நீர் தேங்கும் பாத்திரங்களைத் தூய்மைப்படுத்துதல்; தோலை மூடக்கூடிய உரிய ஆடைகள் அணிதல். தடுப்பு முறைகள் நோய்த் தடுப்பு அறிக்கையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப உரக்க வாசித்துக் காட்டுக. °¬øc‚è™ 6 இளம் வயதில் முகத்தில் சுருக்கமா? அதைத் தடுக்க வேண்டுமா? அமிலத் தன்மை கொண்ட உணவு வகைகளை உண்ணுகிறீர்களா? தவிர்த்து விடுங்கள். காய்கறி, பழ வகைகளைத் தவிர்க்கிறீர்களா? தப்பு ; தவறாமல் சாப்பிடுங்கள். வாரத்தில் ஓரிரு முறையாவது ஆரஞ்சு, சிவப்பு முள்ளங்கிச் சாறுகளை அருந்துங்கள்! கறிவேப்பிலையிலுள்ள உயிர்ச்சத்து ‘ஏ’ இளமையான சருமத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் பெரிதும் உதவும் என்பதை அறிவீர்களா? பின் எதற்குத் தாமதம்? தொடங்குங்கள். இந்த வழிமுறைகளை நாளும் பின்பற்றி வாருங்கள்..! முகச்சுருக்கம் நீங்குகிறதா இல்லையா பாருங்கள்..! த� ொகுதி 1


7 3.3.7 புள்ளிவிவரப் பட்டியலிலுள்ள விவரங்களைத் தொகுத்து எழுதுவர். மூலம் : தேசிய நல்வாழ்வுக் கழகம் (மலேசிய சுகாதார அமைச்சு) 2017 7 1. இந்த அட்டவணை எதைப் பற்றி விளக்குகிறது? 2. இந்த அட்டவணையை வெளியிட்டவர் யார்? 3. எத்தகைய மனநலப் பாதிப்புகளை மலேசிய இளைஞர்கள் எதிர்நோக்குகின்றனர்? 4. மனநலப் பாதிப்புகளால் ஏற்படும் விளைவுகள் யாவை? அவற்றை எவ்வாறு தீர்க்கலாம்? ஆய்வின் விவரங்களை மெளனமாக வாசித்தறிக. இன்றைய நிலையில் மலேசிய இளைஞர்கள் பல்வேறு மனநலப் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர். மலேசியச் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய நல்வாழ்வுக் கழகம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியிட்ட களஆய்வு இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றது. அந்த ஆய்வின் விவரங்களை ஆய்ந்தறிக. ð£ì‹ 3 உளநலமும் உடல் நலமும் மனச்சோர்வு மனப்பதற்றம் மன அழுத்தம் பாதிக்கப் படுவோர் எண்ணிக்கை 5 பேரில் ஒருவர் 5 பேரில் இருவர் 10 பேரில் ஒருவர் பாலினம் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் 17.7% 18.9% 42.3% 37.1% 10.3% 8.9% கொடுக்கப்பட்டுள்ள புள்ளிவிவரப் பட்டியலை ஒட்டிக் குழுமுறையில் கலந்துரையாடி, விவரங்களைக் கண்டறிக. புள்ளிவிவரப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு கீழ்க்காணும் கேள்விகளுக்கு விடை காண்க. 1 2 மலேசிய இளையோர்களின் மனநலப் பாதிப்பு த� ொகுதி 1


8 த� ொகுதி 1 புள்ளிவிவரப் பட்டியலில் தரப்பட்டுள்ள விவரங்களை ஆராய்ந்து அறிந்து தொகுத்து எழுதுக. õ÷Šð´ˆ¶î™ இன்றைய பள்ளி மாணவர்கள் பல்வேறு மனவுளைச்சல்களை எதிர்நோக்குகின்றனர். அவற்றையொட்டிய புள்ளிவிவரப் பட்டியல் தரப்பட்டுள்ளது. அதனை ஆராய்ந்து விவரங்களைத் தொகுத்து எழுதுக. °¬øc‚è™ 8 பட்டியலிட்ட விவரங்களைத் தொகுத்து எழுதுக. கீழ்க்காணும் அமைப்பு முறையை வழிகாட்டியாகக் கொண்டு தொகுப்பினை எழுதுக. 3 முன்னுரை - புள்ளிவிவரப் பட்டியலின் தலைப்பை ஒட்டிய விளக்கம் தெரிநிலைக் கருத்து - அட்டவணையில் இடம்பெற்றிருக்கும் விவரங்கள் - அதிகமான பாதிப்பு (விழுக்காடு, பாலினம்) - குறைவான பாதிப்பு (விழுக்காடு, பாலினம்) புதைநிலைக் கருத்து - மனநிலை பாதிப்பதற்கான காரணங்கள் / விளைவுகள் முடிவுரை - மனநிலை பாதிப்பிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் / தீர்வுகள் தவிர்க்கப்படும் உணவு வேளைகள் 2012 & 2017 ஆம் ஆண்டுகளின் ஒப்பீடு உணவைத் தவிர்ப்பதற்கான காரணங்கள் பாதிக்கப் படுவோர் எண்ணிக்கை 2012 2017 காலை உணவு (காலை6 - காலை8) 28% 30% உடல் எடை கூடிவிடும் 74% மதிய உணவு (காலை11 - மதியம் 3) 48% 48% மதிய உணவு உட்கொள்வதில் ஆர்வமின்மை 44% இரவு உணவு (மாலை6 - இரவு 10) 53% 56% போதுமான நேரம் இருப்பதில்லை 32% மூலம் : தேசிய நல்வாழ்வுக் கழகம் (மலேசியச் சுகாதார அமைச்சு) 2018 மூலம் : தேசிய நல்வாழ்வுக் கழகம் ( மலேசியச் சுகாதார அமைச்சு) 2018 காரணம் விழுக்காடு தேர்வை ஒட்டிய பயம் 50% குடும்பச் சிக்கல் 29% பிற மாணவர்கள் ஏற்படுத்தும் தொல்லைகள் 11% ஆசிரியர்களால் ஏற்படும் சிக்கல்கள் 10%


9 த� ொகுதி 1 முற்றியலுகரம் ð£ì‹ 4 இலக்கணம் சொற்குவியலில் காணும் முற்றியலுகரச் சொற்களை மட்டும் அடையாளம் கண்டு பட்டியலிடுக. 1 எல்லா உகரங்களும் (கு, சு, டு, து, பு, று, ஙு, ஞு , ணு, நு, மு, னு, யு, ரு, லு, வு, ழு, ளு) தனித்து முழுமையாக ஒலிக்கும் போது முற்றியலுகரங்களாகும். தனிக்குறிலை அடுத்து வருகின்ற வல்லின உகரம் முற்றியலுகரமாகும். நடு, விடு, உறு, பொது, பசு, படு ச ொல்லின் இறுதியில் வருகின்ற மெல்லின, இடையின உகரங்கள் முற்றியலுகரங்களாகும். அணு, விம்மு, உரு, பளு, விழு, கதவு, தாழ்வு ச ொல்லின் முதல் எழுத்தாக வரும் உகரம் முற்றியலுகரம். உலகம், குடல், புண், முன், துவர்ப்பு எ.கா: எ.கா: எ.கா: 5.1.5 முற்றியலுகரம் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர். 9 முழு விரிவு உறுமு துள்ளு உடம்பு பிறழ்வு உருவம் முடி நிறைவு ஓய்வு நகு குடம் இங்கு எது அழகு புலவு இரவு தடு பளு உணவு ஓய்வு பாட்டு எரு காசு வலு நிகழ்வு ஏவு மூக்கு தனு உழு உறவு கொசு


10 த� ொகுதி 1 பட்டியலிட்ட முற்றியலுகரச் சொற்களை வகைப்படுத்துக. கொடுக்கப்பட்ட வகைக்கேற்ப எடுத்துக்காட்டுச் சொற்களை எழுதுக. 2 3 தனிக்குறிலை அடுத்து வருகின்ற வல்லின உகர முற்றியலுகரம் சொல்லின் இறுதியில் வருகின்ற மெல்லின, இடையின உகர முற்றியலுகரம் சொல்லின் முதல் எழுத்தாக வரும் உகர முற்றியலுகரம் எ.கா: மறு எ.கா: உறுமு எ.கா: துணை 1. தனிக்குறிலை அடுத்து வருகின்ற வல்லின உகர முற்றியலுகரங்கள்: 2. ச ொல்லின் இறுதியில் வருகின்ற மெல்லின, இடையின உகர முற்றியலுகரங்கள்: 3. ச ொல்லின் முதல் எழுத்தாக வரும் உகர முற்றியலுகரங்கள்: 1. பேச்சாளரின் அருமையாக இருந்தது. 2. மக்களின் பசிபோக்கும் உலகின் தலைசிறந்த தொழில். 3. அண்ணன் வழி பல முக்கியமான ஆவணங்களை அனுப்பியிருந்தார். 4. ஆசிரியர் விளக்கமாக எடுத்துச் ச ொன்னார். முற்றியலுகரச் சொற்களைப் பயன்படுத்திப் பொருள் விளங்க வாக்கியத்தில் அமைத்துக் காட்டுக. õ÷Šð´ˆ¶î™ முற்றியலுகரச் சொற்களைக் கொண்டு வாக்கியங்களை நிறைவு செய்க. °¬øc‚è™ பதிவு அஞ்சல் முழுப் பேச்சும் பொதுக் கருத்தை உழவுத் தொழில்


11 தகவல்யுக அடிச்சுவடுகள் 11 விளக்கப்படம் தொடர்பாகக் குழுவில் கலந்துரையாடுக. ð£ì‹ 1 1.2.6 த�ொடர்புறவுக்குத் த�ொழில்நுட்பம் காரண காரியங்களை அறியக் கேள்விகள் கேட்பர். 2 2018இல் ஒரு மணித்துளியில் இணையத்தில் நடந்தவை விளக்கப்படம்: ஒரு நிமிட இணையப் பயன்பாடு 60 வினாடி 973,000 முகநூல் 3.7 மில்லியன் கூகுள் 174,000 படவரி 18 மில்லியன் குறுஞ்செய்தி 481,000 கீச்சு 187 மில்லியன் மின்னஞ்சல் 38 மில்லியன் புலனக் குறுஞ்செய்தி 1.1 மில்லியன் திண்டர் $ 862, 823 இயங்கு அலை கொள்முதல் 4.3 மில்லியன் வலையொலிப் பார்வை


12 விளக்கப்படத்தின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு 60 வினாடிகளில் இணையப் பயனர்களின் இணையப் பயன்பாடு குறித்த காரண காரியங்களை அறிய கேள்விகள் கேட்டிடுக. தகவல் பரிமாற்றப் பரிணாமத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டினை வரைபடம் விவரிக்கின்றது. இதன் காரண காரியங்களை அறியக் கேள்விகள் கேட்டிடுக. 1 2 த� ொகுதி 2 மடல் அனுப்புவதைவிட மின்னஞ்சல் அனுப்புவதை மக்கள் விரும்புகிறார்கள். ஏன்? தகவல் பரிமாற்றத்தில் புறாக்களின் பயன்பாடு ஏன் அற்றுப் போனது? எ.கா: எ.கா: èõùˆF™ ªè£œè காரணத்திற்கும் காரியத்திற்கும் தொடர்பு இருத்தல் வேண்டும். தகவல் பரிமாற்றத்தின் பரிணாம வளர்ச்சி காரண காரியம் அறிய வினவுதல் காரியம்/செயல்/ நிகழ்வு அறியும் கேள்விகள் காரணம் அறியும் கேள்விகள் இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பு பு றாக்களின் பயன்பாடு அற்றுப் போனதால் ஏற்பட்ட வி ள ை வுகள ை அ றி ய பொருத்தமான வினாக்களைக் கேட்டல். புறாக்களின் பயன்பாடு அற்றுப் போனதற்கான காரணங்களை அறிய பொருத்தமான வினாச் ச ொற்களைப் பயன்படுத்திக் கேள்விகள் கேட்டல்.


13 த� ொகுதி 2 காணொலிப் பதிவைப் பார்த்துத் திறன்பேசி வரவால் ஏற்பட்ட மாற்றங்களின் காரண காரியங்களை அறியக் கேள்விகள் கேட்டிடுக. 3 கேட்டல் பின்னூட்டு நட்புறவு நம்பிக்கை திறந்த மனப்பான்மை சைகைமொழி தகவல் பரிமாற்றத்தில் தொழில்நுட்பம் தவிர்த்து, மாந்தரிடையிலான தொடர்புறவும் முக்கியப் பங்காற்றுகின்றது. மாந்தரிடையிலான தொடர்புறவில் சில இடையூறுகள் ஏற்படுகின்றன. இந்த இடையூறுகளுக்கான காரண காரியங்களை அறிய ஏற்ற கேள்விகளைக் கேட்டிடுக. õ÷Šð´ˆ¶î™ திறன்மிகு தொடர்புறவிற்குச் சில திறன்களை விளக்கும் படங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்திறன்களின் தேவைகளுக்கான காரணங்களை அறிய ஏற்ற கேள்விகளைக் கேட்டிடுக. °¬øc‚è™ காரணம் காரியம் / செயல் / விளைவு தெளிவற்ற மொழிப் பயன்பாடு தெளிவற்ற புரிதல் எ.கா:


14 த� ொகுதி 2 மெளனமாக விரைந்து வாசித்திடுக. ð£ì‹ 2 நம்பகத் தகவல் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால், மாந்தரிடையேதகவலின் பரவலாக்கம் மிகுந்துள்ளது. உலகத்தில் தகவலை உடனே சேர்ப்பிக்க மனிதர் காட்டும் ஆர்வம் ச ொல்லி மாளாது. பலவேளைகளில் இவர்கள் காட்டும் ஆர்வம், கோளாறாகவே அமைகிறது. தகவலைப் பரப்புவதில் இவர்கள் காட்டும் ஈடுபாட்டில் சிறு அளவேனும், அத்தகவலின் உண்மையையும் நம்பகத் தன்மையையும் தேடுவதில் காட்டினால் அனைவருக்கும் நன்மை பயக்கும். நாம் தகவலைப் பரப்புவதில்தான் முனைப்புக் காட்டுகிறோமே தவிர, தகவலின் நம்பகத் தன்மையில் காட்டுவதில்லையே என்றெண்ணும்போது வேதனைதான் மிஞ்சுகிறது. ஏனிந்த நிலை ஏற்படுகிறது? பொதுவாகவே நமக்கு எப்பொழுதுமே பொறுமை இருப்பதில்லை. ஒரு தகவல் நமக்குக் கிடைத்தவுடன், அதை உடனடியாக நம் நண்பர்களுக்கும் பிறருக்கும் அனுப்பிவிட வேண்டுமென்ற அவசரமே நம்மைச் சில வேளைகளில் தவறான தகவல் பரவலுக்குத் துணைபோகச் செய்கின்றது. மேலும், எதையும் ஆராய்வதிலோ உண்மையைத் தேடிக் கண்டறிவதிலோ நமக்குப் பெரும்பாலும் ஈடுபாடும் அக்கறையும் இருப்பதில்லை. இதற்குப் பொறுமையின்மையே முக்கியக் காரணமாக அமைகிறது. இன்று மனிதரிடையே தான்தான் ஒன்றனை முதலில் செய்தேன் என்றும், தான்தான் ஒரு சம்பவத்தை முதலில் பார்த்தேன் என்றும் ச ொல்லிக் கொள்வதில் பெருமிதம் அதிகரித்து வருகின்றது. இதே நிலையைத் தகவல் பரவலிலும் காண முடிகின்றது. எதையுமே ‘நான்தான் முதலில் அனுப்பினேன்’ என்று பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமென்ற எண்ணமே தகவலை உடனே பரப்புகின்ற செயலைத் தூண்டுகின்றது. ‘எண்ணித் துணிக கருமம்’ என்கிறது வள்ளுவம். ஆனால், நாம் துணிந்துவிட்டு, பிறகுதான் எண்ணுகிறோம். சிந்தித்துச் செயல்படுவதைவிடச் செயல்பட்டுவிட்டுச் சிந்திப்பவராகத் தொடர்ந்து நாம் இருப்பதால், தகவல் பரவலிலும் அத்தகைய போக்கையே கையாளுகிறோம். வந்த தகவலின் உண்மையை அலசி ஆராயாமல் அனுப்பிவிட்டுப் பின்னர், அதன் விளைவால் நொந்து போகிறோம்; மனம் வெந்து வாடுகிறோம். 2.2.8 வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியத் தகவல்களைப் பகுத்தாய்ந்து ஒரு முடிவுக்கு வருவர்.


15 த� ொகுதி 2 தகவல் பரவலில் மற்றொரு சாராரும் உளர். ‘எனக்கு வந்த தகவலைப் பிறருக்கு அனுப்புவது என் கடமை அல்லவா?’ என்ற எண்ணம் கொண்ட கடமை வீரர்கள் இவர்கள். ‘யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற எண்ணம் கொண்டவர்கள் இவர்கள். வந்த தகவல் என்ன? அதனால் என்ன விளைவு வரும்? என்பன பற்றியெல்லாம் இவர்களுக்குக் கவலையில்லை. ‘எனக்கு ஒருவர் அனுப்பினார், நான் மற்றவருக்கு அனுப்புகிறேன்’ என்ற சிந்தனை கொண்டவர்கள் இத்தகையோர். துரித காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக, நமக்கு அனுப்பப்படுகின்ற தகவலின் நம்பகத்தன்மையையும் உண்மையையும் அறிந்து, நாம் அனுப்புகின்ற தகவல் பிறருக்கு நன்மை பயப்பதாக இருப்பதை உணர்ந்து பரவலாக்கம் செய்வது அனைவருக்கும் நன்மை பயக்கும். தகவல் பரப்பலில் ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்ற தெய்வப் புலவர் திருவள்ளுவரின் கூற்றுக்குச் செவி சாய்த்தால், அனைவருக்கும் நன்மை விளையும்; அவதூறுகளைப் பரப்பி அவமானத்தில் சிக்காமல் இருக்கலாம். மேற்கண்ட பனுவலின் கருத்துகளைக் குறித்துக் கொள்க. வகுப்பில் கலந்துரையாடுக. கலந்துரையாடிய முக்கியத் தகவல்களை இணையராகப் பகுத்தாய்ந்து வகுப்பில் படைத்திடுக. பகுத்தாய்ந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு முடிவைக் கூறுக; எழுதுக. 1 2 3 èõùˆF™ ªè£œè பகுத்தாய்ந்திட… முக்கியத் தகவல்களை அடையாளம் காண்க. கருத்துகளின் அடிப்படையில் பகுத்தாய்க. இவற்றின் அடிப்படையில் முடிவினைக் கூறுக. வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியத் தகவல்களைப் பகுத்தாய்ந்து ஒரு முடிவு கூறுக; எழுதுக. மனித வாழ்க்கையின் சுழற்சி மிகத் துரித வளர்ச்சி கண்டுள்ளது. எதையெடுத்தாலும் அதில் துரிதம் நிறைந்துள்ளது. பயணம் துரிதமடைந்துள்ளது. பாசம் துரிதம் கண்டுள்ளது; பக்தி துரிதமாகிவிட்டது; உணவு துரிதமாகிவிட்டது. மொத்தத்தில் மனித வாழ்வே துரிதமாய் மாறிவிட்டது. இந்தத் துரிதம் மாந்தனுக்கு நன்மை அளிப்பதாய் இல்லையே என்பதுதான் வேதனையளிக்கிறது. õ÷Šð´ˆ¶î™


16 த� ொகுதி 2 வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியத் தகவல்களைப் பகுத்தாய்ந்து ஒரு முடிவு கூறுக; எழுதுக. புலனத்தில் இடுகை(status)வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அனைவரும் அறிவோம். இதனைப் பொது நலனுக்கும், தனியாள் நலனுக்கும் பயன்படுத்துவதே சிறப்பு. இதற்கு மாறாக, வணக்கம் என்று அனுப்புவதும் பலவிதமான பயனற்ற பரவல் செய்திகள் அனுப்புவதும் தவிர்த்தால் நல்லது. கைப்பேசிப் பயனர்கள் கல்வி வளர்ச்சி, வேலை வாய்ப்புகள், வணிகத் தெரிவல்கள் மற்றும் பொதுவான சமூகத் தகவல்கள் போன்றவற்றை உள்ளீடு செய்யும் தளமாக இதனைப் பயன்படுத்தலாம். இதனால், வணக்கங்களால் நிறைந்த புலனக் குழுவில் பெரும் மாற்றம் ஏற்பட்டு, கைப்பேசிப் பயனர்கள் மகிழ்ச்சி அடைவர். °¬øc‚è™ துரிதத்தால், வேகத்தால் நன்மையன்றோ என நீங்கள் எண்ண வேண்டா. பயணத் துரிதத்தால் விபத்துகள் பெருகிவிட்டன. பாசத் துரிதத்தால் உறவுகளில் விரிசல்கள் மலிந்துவிட்டன. ஒரே குறுஞ்செய்தியில் இன்று பாசம், அன்பு பகிரப்படுவது, நாம் அறிந்ததுதானே! அமைதியாக இறைவனை வணங்க இன்று மனிதனுக்கு நேரமில்லை. பக்தியும் இன்று மின்னியலில் பின்னிக் கிடக்கிறது. உணவு குறித்துச் ச ொல்ல வேண்டியதில்லை. துரித வளர்ச்சியில் முதலிடம் வகிப்பது உணவுதான்! எல்லாம் உடனடிச் சமையல்; துரிதக் கடையில் உணவு. துரித உணவுக் கடைக்குச் சென்றால், கையடக்கக் கணினியில் நம் உணவின் அளிப்பாணைசமையல் கட்டிற்குச் செல்கின்றது. உணவு நம் மேசையின் மீது வந்து சேர்கின்றது. உறவுகளின் நலன் விசாரிப்பு, புலனத்தில் நடக்கின்றது. பயண ஏற்பாடுகள் முகம் பார்க்காமலே முடிந்துவிடுகின்றன; யாவும் இணைய வழியே செய்து முடிக்கப்படுகின்றன. தொழில்நுட்பம், குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பம், மாந்தரின் செயலை விரைவுபடுத்தியது மட்டுமன்று; மாந்தர் உறவில் விரிசலையும் ஏற்படுத்தி விட்டதோ என்னவோ! இப்படியே துரிதம் துரிதம் என்று ஓடி, நம் காலமும் நேரமும் சுருங்கிவிட்டன! 24 மணிநேரம் 24 நிமிடத்தில் முடிவதுபோல் இருக்கிறது! ஒரு வாரம் 7 மணிநேரத்தில் முடிகிறது! ஒரு மாதம் 30 மணிநேரத்தில் முடிகிறது! ஒரு வருடம் 30 நாள்களிலே முடிவதாய் இருக்கிறது! துரிதத்தால் மனித மரணமும் துரிதமாகிவிட்டது. 100 ஆண்டுகள் வாழ்ந்த மனிதன், இன்று 60 ஆண்டுகளைத் தொடுவதே அரிதாகிவிட்டது! நாளை?


17 த� ொகுதி 2 உரையாடலை விரைந்து வாசித்திடுக. அதன் அமைப்பைக் கண்டறிக. ð£ì‹ 3 மாறும் தகவல்யுகம் வணக்கம் முகிலா! என்ன திறன்பேசியையும் உன்னையும் பிரிக்க முடியாது போல. அன்றில் பறவைபோல் எந்நேரமும் ஒன்றிப்போய் இருக்கிறீர்கள்? வணக்கம் நகுலா. இப்பொழுதுதான் கணிதப் பாடத்தை முடித்தேன். நீ வருவதற்குச் சற்று நேரத்திற்கு முன்னர்தான், திறன்பேசி துணைகொண்டு கட்டுரைக்கான கருத்துகளைத் தேடினேன். சரி, வந்து உட்கார். திரட்டிய கருத்துகளைப் பற்றிக் கலந்துரையாடுவோம். தொடர்புக் கருவியாகத் திறன்பேசி விளங்குகிறது என்பதை முதல் கருத்தாகக் கொள்ளலாம். கற்காலம் தொடங்கி மனித இனத்தில் எவ்வாறு தகவல் பரிமாற்றம் நடந்தது என்பதை விளக்கி எழுதினாலேபோதுமானதாக இருக்குமென நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய் முகிலா? அதுவும் சரிதான் நகுலா. பறவையில் தொடங்கி மொழி உருவாகி இன்று திறன்பேசி வரையிலான வளர்ச்சியை விளக்கி எழுதினாலேயே போதுமானதாக இருக்கும். தொடர்ந்து, திறன்பேசியின் வரவு உலகை உள்ளங்கைக்குள் அடக்கிவிட்டதை மறுத்துவிட முடியுமா? இன்று, நிழற்படக் கருவியை நிழற்பட நிபுணர்கள் கைகளில் மட்டுமே காணமுடிகிறது. படம் எடுப்பது முதல் காணொலிக் காட்சி உருவாக்குவது வரை அனைத்து வேலைகளையும் இந்தத் திறன்பேசிகளே முடித்து விடுகின்றனவே நண்பா! நீ கூறுவது முற்றிலும் உண்மைதான் நண்பா. நிழற்படக் கருவியாக, `எல்லாரும் படம் பிடிக்கலாம்,’ எனும் நிலைக்கு வந்துவிட்டது. அதோடு மட்டுமா திறன்பேசியின் நீட்சி நிற்கிறது? கணிப்பான், கடிகாரம், அலாரம், பாடல் கேட்டல், வலையொலி உலா வரல், படம் பார்த்தல் என அதன் நீட்சியும் ஆட்சியும் பல்கிப் பெருகியுள்ளனவே! மனிதனின் ஆறாம் விரலாக எழுதுகோல் இருந்தது அப்போது! இப்போது மனிதனின் மூன்றாம் கரமாக மாறிவிட்டதே திறன்பேசி! சரி முகிலா, நான் புறப்படுகிறேன். கருத்துகள் போதுமென்று நினைக்கிறேன். நகுலன்: நகுலன்: நகுலன்: முகிலன்: முகிலன்: முகிலன்: (‘திறன்பேசி வளர்ச்சியினால் ஏற்படும் மாற்றங்கள்’ எனும் தலைப்பில் கட்டுரை எழுத ஆசிரியர் பணிக்கிறார். கட்டுரைக்குக் கருத்துகள் திரட்ட நகுலன், முகிலனைக் காண அவன் வீட்டிற்குச் செல்கிறான். இருவரும் உரையாடுகின்றனர்.) நாளை ஆசிரியரும் மற்ற நண்பர்களும் வேறு கருத்துகளோடும் வருவார்கள். போதுமான கருத்துகள் கிடைக்குமென்றே எண்ணுகிறேன். நான் விடை பெறுகிறேன். சரி நகுலா. நாளை சந்திப்போம், வணக்கம். 3.4.34 250 ச ொற்களில் உரையாடல் எழுதுவர்.


18 த� ொகுதி 2 உரையாடலின் அமைப்புக் கூறுகளை அறிந்து கூறுக. உரையாடலில் இடம்பெற்ற கருத்துகளைக் குழுவில் கலந்துரையாடி விளக்கி எழுதுக. தொழில்நுட்பம் கல்வியியலில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றது. பின்வரும் விளக்கப்படத்தைத் துணையாகக் கொண்டு அம்மாற்றம் குறித்து உம் நண்பரோடு உரையாடுகின்றீர். அவ்வுரையாடலை 250 சொற்களில் எழுதுக. 1 2 3 மாறிவரும் வேலைச்சந்தையில் மாணவர் கற்றோங்க வேண்டிய 21ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன்கள் கற்றல் திறன்கள் ஆய்வுச் சிந்தனை ஆக்கச் சிந்தனை இணைவாக்கம் தொடர்புறவு படிப்பறிவுத் திறன்கள் தகவல் ஊடகம் தொழில்நுட்பம் வாழ்வியல் திறன்கள் நெகிழ்வுடைமை தலைமைத்துவம் முன்னெடுப்பு ஆக்கமுடைமை சமூகவியல் èõùˆF™ ªè£œè உரையாடல் அமைப்பு: • த�ொடக்கம்: இருவரோ மூவரோ பங்கு பெறலாம்; முகமன் கூறல். • உள்ளடக்கம்: நான்கு கருத்துகள்; பேசும் கருப்பொருளையொட்டி • முடிப்பு: விடை பெறல். • மொழி: இயல்பான மொழி; மரியாதைச் ச ொற்கள், கனிவு, தொனி, உச்சரிப்பு போன்றவை. விளக்கப்படத்தை அடிப்படையாகக் கொண்டு 250 சொற்களில் உரையாடல் ஒன்றனை எழுதுக. õ÷Šð´ˆ¶î™ ‘தொழில்நுட்பம் மனித வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள்’ எனும் தலைப்பில் உம் நண்பனுடன் உரையாடுகின்றீர். உரையாடலுக்கான கருத்துகளைக் கலந்துரையாடித் திரட்டுக. °¬øc‚è™ பேச்சு மொழியறிதல் திட்டமிடலும் அட்டவணையாக்கமும் இயல்பு மொழிச் செயற்பாடறிதல் இயந்திரமனிதமயமாக்கம் கணினி நோக்கு உச்சப் பயன்மை இயந்திரக் கற்றலாக்கம் திறமிகு அமைவு


19 4.2.5 ஐந்தாம் படிவத்திற்கான திருக்குறளையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர். 19 த� ொகுதி 2 திருக்குறள் ð£ì‹ 4 செய்யுளும் மொழியணியும் நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். (605) பொருள் காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவுக்கு அதிகமான தூக்கம் ஆகிய நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம். கருத்து காலம் கடத்துதல், மறதி, சோம்பல், அதிக தூக்கம் ஆகியவை ஒருவரின் முன்னேற்றத்தைத் தடைசெய்யும். உரையாடலை வாசித்து, கற்ற குறளின் பொருளை விளக்கிக் கூறுக. 1 வணக்கம் ஐயா. நலமா? உங்களைப் பார்த்து எத்தனை நாளாகிவிட்டது! வணக்கம் மறவா. நலமே விழைகிறேன். உன்னைப் பார்த்தும் எத்தனை நாளாகிவிட்டது? பல்கலைக்கழக வாழ்க்கை எப்படி இருக்கிறது? விடுமுறையில் இருக்கிறாயா? மறவன்: ஆசிரியர்:


20 த� ொகுதி 2 20 திருக்குறளையும் அதன் பொருளையும் மனனம் செய்து ஒப்புவித்திடுக. திருக்குறளுக்கேற்ற சூழல் ஒன்றனை உருவாக்கி நடித்துக் காட்டுக. 2 3 திருக்குறளுக்கேற்ற கதை ஒன்றனை எழுதுக. õ÷Šð´ˆ¶î™ ஒருவரின் முன்னேற்றத்தைத் தடைசெய்யும் நான்கு செயல்கள் யாவை? அவற்றிற்குச் சிறு விளக்கம் தருக. எடுத்துக்காட்டைத் துணையாகக் கொள்க. °¬øc‚è™ கொடுக்கப்பட்ட பணியினைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்காமல் பின்னர் செய்து கொள்ளலாமெனக் காலத்தைத் தாழ்த்துவது காலத்தை நீட்டித்தல் ஆகும். நமக்குக் கொடுக்கப்பட்ட பணியை, கடமையைக் குறித்த காலத்தில் செய்து முடித்தல் அவசியமாகும். அப்படிச் செய்யாமல் போனால், வேலைப்பளு கூடுவதோடு பிறருக்கும் அது துன்பத்தை அளிக்கும். நாம் கெடுவது மட்டுமல்லாமல் அடுத்தவர் வேலையையும் கெடுப்பதற்கு நாமே காரணமாக அமைந்து விடுவோம். எ.கா: ஆசிரியர்: ஆம் ஐயா. ஒரு மாத கால விடுமுறையில் இருக்கிறேன். சரி, உன் நண்பன் அரசு எப்படி இருக்கிறான்? இன்னும் காலத்தைக் கடத்தியும் சோம்பியும் திரிகின்றானா? அல்லது உருப்படியாக வேலைக்குப் போகிறானா? அதை ஏன் ஐயா கேட்கிறீர்கள்? அவன் நடத்தையில் கொஞ்சமும் மாற்றம் இல்லை. பல்கலைக்கழகத்திலிருந்து வந்ததும் அவனைச் சந்திக்க அவன் வீட்டிற்குச் சென்றேன். அவன் வெளியே போய் இருப்பதாக அவன் அம்மா ச ொன்னார். மேலும், அரசு எந்த வேலைக்கும் போகாமல் காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பதாக அவன் அம்மா வேதனைபட்டுக் கொண்டார். முன்பைக் காட்டிலும் அதிகச் சோம்பலாக இருக்கிறானாம். வீட்டில் இருந்தால் தூங்கியே காலத்தைக் கழிப்பதாகவும் அரசுவின் அம்மா குறைபட்டுக் கொண்டார், ஐயா. படிக்கும் காலத்தில்தான் அப்படி இருந்தான். இன்னமும் அப்படியே இருந்தால் எப்படி? பாடத்தைக் கருதிப் படித்திருந்தாலும் பரவாயில்லை. கொடுக்கும் பாடங்களைக் காலந்தாழ்த்தியே செய்வான். பல வேளைகளில் மறந்துவிட்டதாகவும் ச ொல்வான். இன்று, அவன் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதே! காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவுக்கு அதிகமான தூக்கம் ஆகிய நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாகுமென்ற தெய்வப் புலவர் திருவள்ளுவரின் கூற்று அப்படியே அவனுக்குப் பொருந்தி வருகின்றது. மறவன்: மறவன்: ஆசிரியர்:


21 குடும்பத்தில் இளைஞர்கள் கீழ்க்காணும் சூழலை வாசித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் முறையைக் குறித்துக் கொள்க. ð£ì‹ 1 3 21 1.3.10 சிக்கலுக்குத் தீர்வு காணப் பண்புடன் பேச்சுவார்த்தை நடத்துவர். வணக்கம் திருமதி நோரிசா. நான்தான் குமரன். தேசியப் பரிவு உதவித் திட்டம் குறித்துப் பேசுவதற்காகத் தங்களிடம் அனுமதி கோரியிருந்தேன். வணக்கம், திரு.குமரன். ஓ! நீங்கள்தான் அவரா? ச ொல்லுங்கள். தற்போது இந்தக் கொரோனா நச்சுப் பெருந்தொற்றுக் காரணமாக இளைஞர்கள் பலர் வேலை கிடைக்காமல் அல்லல்படுகின்றனர். ஆனால், அரசாங்கப் பரிவுத் திட்டத்தின்கீழ் சில பிரிவினருக்கு மட்டுமே உதவித்தொகை கிடைக்கிறது. இளைஞர்கள் அனைவருக்கும் இந்த உதவித் தொகை கிடைத்தால் அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும் அல்லவா? உண்மைதான் திரு. குமரன். அனைவருக்கும் இது வழங்கப்படவில்லை என்றாலும், அரசாங்கம் பல ஆய்வுகளை நடத்தி, வேலை இழந்து அவதியுறும் இளைஞர்களுக்கு இந்தத் தொகையை வழங்கித்தானே வருகின்றது. ஆமாம் உண்மைதான். ஆனால், வேலையில்லாத் திண்டாட்டத்தில் மலேசியக் குடிமக்களில் 58.2 விழுக்காட்டினர் அதாவது 24 வயதுக்கும் குறைவாக உள்ளவர்கள். அப்படியிருக்க 21 வயத்துக்குக் கீழ்ப்பட்டோருக்கும் இந்த உதவித்தொகை வழங்குவது நல்லதுதானே? மன்னிக்கவும், எங்கள் பார்வையில் 21 வயது அடைந்தவர்களுக்கு இந்த உதவியை வழங்கினால் போதும். வேலை இல்லாத் திண்டாட்டத்தில் இருக்கும் இளைஞர்கள் ஓரளவு பயன் பெறுவார்கள். மேலும், 21 வயதுக்குக் கீழ்ப்பட்டோர்களுள் பெரும்பாலோர் மேற்கல்வியைத் தொடரும் மாணவர்கள்தாமே? நீங்கள் கூறுவதும் உண்மைதான். ஆனால், என்னுடைய கவலை எல்லாம் 21 வயதுக்குக் கீழ்ப்பட்டோருக்கும் இந்த உதவிநிதி கிடைக்க வேண்டும் என்பதுதான். இதன் மூலம் அவர்களின் குடும்பச் சுமை ஓரளவு குறைவதோடு அவர்களின் அத்தியாவசியத் தேவைகளும் பூர்த்தியாகும். இதனை நீங்கள் கருத்தில் கொண்டால், இளைஞர்களுக்குப் பயன் விளையும் என்று எண்ணுகிறேன். (இளைஞர் மன்றத்தின் நிகராளி திரு. குமரனும் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் அதிகாரி திருமதி நோரிசா பிந்தி சாமாட்டும் தேசியப் பரிவு உதவித் திட்டம் (Bantuan Prihatin Nasional) குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.) திரு. குமரன்: திரு. குமரன்: திரு. குமரன்: திரு. குமரன்: திருமதி நோரிசா: திருமதி நோரிசா: திருமதி நோரிசா: இளைஞர்களும் பொருளாதாரமும்


22 த� ொகுதி 3 மேற்கண்ட பேச்சுவார்த்தையைப் பாகமேற்று நடித்துக் காட்டுக. வழங்கப்பட்டுள்ள மொழிக்கூறுகளை மேற்கண்ட பேச்சுவார்த்தையிலிருந்து வெளிக்கொணர்க. உங்கள் வசிப்பிடப் பகுதியில் விளையாட்டு நடவடிக்கைகளை நடத்துவதற்கு அனுமதி பெறுவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்துவதுபோல் நடித்துக் காட்டுக. பின்வரும் குறிப்புகளைத் துணையாகக் கொள்க. 1 2 3 èõùˆF™ ªè£œè பண்புடன் பேசுதல்: நோக்கம் நவில்தல். செயலுக்கான விளைவுகளை விளக்குதல். பண்புடன் பேசுதல். தீர்வுக்கான ஆலோசனையைக் கேட்டறிதல். கொரோனா பெருந்தொற்றுக் காலக்கட்டத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக உங்கள் குடும்பத்தில் திருமணம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அந்நிகழ்ச்சியை நடத்துவதற்குக் காவல்துறை அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்துக. õ÷Šð´ˆ¶î™ பேச்சுவார்த்தைக்கு ஒரு சிக்கலை முன்வைத்திடுக; அதனைத் தீர்வு காண்பதற்கான ஒரு பரிந்துரையையும் வழங்கிடுக. °¬øc‚è™ இரவு நேர வேலையின் தன்மை மாற்று நடவடிக்கைகள் எழும் சிக்கல்கள் கிடைக்கும் நன்மைகள் முன்வைத்தல் ஆதரித்தல் பரிசீலித்தல் இடைமறித்தல் ஏற்றுக்கொள்ளல் நல்லது திரு. குமரன். நீங்கள் பரிந்துரைத்த கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். இதனைப் பரிசீலனை செய்து தக்க நடவடிக்கைகள் எடுக்க அமைச்சுக்குப் பரிந்துரை செய்கிறேன். மிக்க நன்றி. நன்றி. திரு. குமரன்: திருமதி நோரிசா: திருமதி நோரிசா:


23 மௌனமாக விரைந்து வாசித்திடுக. ð£ì‹ 2 இளையோருக்கு ஊரடங்கு 2.3.13 குடும்பவியல் தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர். மலேசிய அரசாங்கம் பதின்ம வயது இளைஞர்கள் இரவு வேளைகளில் வெளியே செல்வதற்கு ஊரடங்குச் சட்ட அமலாக்கம் தொடர்பாக விவாதித்து வருகிறது. இது தொடர்பாக, இளைஞர்கள் இரவு வேளையில் வெளியில் செல்ல விரும்புவதன் காரணத்தைத் தீவிரமாக ஆராய வேண்டும் என்று அரசாங்கம் கருதுகின்றது. இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் இளைஞர்கள் வெளியில் செல்வது தொடர்பாக, நடைமுறையில் உள்ள சிக்கல்களையும் அவற்றிற்கான காரணங்களையும் கண்டறிய இந்தப் பொருத்தமான ஆய்வு துணைபுரியும் என்று கருதுகிறார். இளைஞர்கள் இரவு வேளை வெளியில் செல்வதற்குக் குடும்ப நடைமுறைகள் முக்கியக் காரணமாக அமைகின்றன. பதின்ம வயதிலிருக்கும் இளைஞர்கள் இரவு வேளையில் தங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்கிறார்கள் என்றால் அதற்குப் பெற்றோர்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும். காரணம், இவர்கள் இரவு வேளையில் வெளியில் செல்கிறார்கள் என்றால் அதற்கான அவசியக் கூறுகள் பற்றி பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும். தேவை இல்லையெனில் அவர்கள் வெளியில் செல்வதைத் தடுக்க வேண்டும். இல்லையெனில் எதிர்பாராச் சம்பவங்கள் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளது. இன்றைய காலக்கட்டங்களில் இளைஞர்கள் இரவு வேளையில் வெளியில் சென்றாலேபெரும் சிக்கல்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. காரணம், இவர்களின் இரவு வேளை நடவடிக்கைகளால் பல சமூகச் சீர்கேடுகள் நிகழ்கின்றன. எடுத்துக்காட்டாக, இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கம், தகாத பாலியல் உறவு, குண்டர் கும்பல், சட்டவிரோதப் பந்தயம் போன்ற நடவடிக்கைகளை இங்குச் சான்றுகளாகப் பகரலாம். இவ்வாறான நடவடிக்கைகள் பெரும்பாலும் இரவு வேளைகளிலேயே நடைபெறுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில் இளைஞர்கள் இரவு வேளையில் வெளியில் செல்வதைத் த� ொகுதி 3


24 1. பதின்ம வயது இளைஞர்கள் இரவு வேளைகளில் வீட்டை விட்டு வெளியில் செல்வதைப் பெற்றோர்கள் எவ்வாறு தடுக்க இயலும்? 2. ‘பெற்றோர்கள் கண்டிப்புடன் இருந்தாலும்கூட அவர்களையும் மீறி வெளியில் சென்று விடுகிறார்கள்’ எனும் கூற்றை விளக்குக. 3. குடும்ப நடைமுறை எவ்வாறு பதின்ம வயது இளைஞர்கள் இரவு வேளைகளில் வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தடுக்க இயலும் என்பது தொடர்பான உமது கருத்துகளைக் கூறுக. 24 த� ொகுதி 3 தவிர்க்க வேண்டும். சில வேளைகளில் பெற்றோர்கள் கண்டிப்புடன் இருந்தாலும்கூட இளைஞர்கள் அவர்களையும் மீறி வெளியில் சென்று விடுகிறார்கள். இந்தக் காரணத்தால்தான் இந்த ஊரடங்குச் சட்டம் அவசியமாகக் கருதப்படுகிறது. இவ்வாறான ஊரடங்குச் சட்டம் வெளிநாடுகளில், குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகளில் இன்றும் அமலாக்கத்தில் உள்ளது. இது போன்ற ஊரடங்குச் சட்டம் இதுவரை குறைந்தது ஏழு நாடுகளில் அமலாக்கத்தில் உள்ளது. அதில் நியூசிலாந்து, சுவீடன், ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து போன்ற நாடுகளும் அடங்கும். பதினாறு வயதிற்கும் கீழ் உள்ளவர்கள் இரவு பத்து மணிக்கு மேல் வெளியில் செல்லலாகாது என்றும், பதினெட்டு வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் வெளியில் செல்லலாகாது என்றும் இந்த ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தும் நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இது நமது நாட்டிற்குப் பொருத்தமானதாக அமையக்கூடியதா என்பதைத் துல்லியமாக ஆராய வேண்டும். இந்த ஊரடங்குச் சட்டம் அமலாக்கம் செய்வதற்கு முன், அவர்கள் எதற்காக வெளியில் செல்கிறார்கள் என்பதை அறிய முற்பட வேண்டும். சிலர் பகுதிநேர வேலைகளுக்காக வெளியில் செல்கிறார்கள். இன்னும் சிலர் இரவு வேளைகளில் சில சிறப்பு வகுப்புகளுக்கும், தற்காப்புக் கலைபயிற்சிக் கூடங்களுக்கும், இசை வகுப்புகளுக்கும் சென்று வீடு திரும்புவதற்குத் தாமதமாக ஆகிவிடுகிறது. ஆகையால், இந்தத் தடையை அமல்படுத்துவதற்கு முன் அரசாங்கம் நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த ஊரடங்குச் சட்டம் நம் இளைஞர்களுக்குத் தேவையா இல்லையா என்பது அவரவர் ஈடுபடும் நடவடிக்கைகளைப் பொருத்தே அமைகிறது. இவ்வாறான சட்டம் நலம் பயக்குமெனில் அதனால் நாட்டிற்கும் வீட்டிற்கும் நன்மையே. வண்ணமிடப்பட்டுள்ள சொற்களுக்குச் சூழலுக்கு ஏற்ற பொருள் கூறுக. கீழ்க்காணும் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளித்திடுக. உரைநடைப் பகுதியில் உள்ள கருத்துகளை 50 சொற்களில் தொகுத்துக் கருத்துரைத்திடுக. 1 2 3


25 த� ொகுதி 3 மலேசிய நாட்டின் (2017) மக்கள் தொகையில் 29.4 விழுக்காட்டினர் பதின்ம வயது இளைஞர்கள், குறிப்பாகப் பதினெட்டு வயதிற்குக் கீழுள்ளவர்கள் ஆவர். இவர்களின் மொத்த எண்ணிக்கை 9.4 மில்லியன் ஆகும். ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியும், அதன் எதிர்காலமும் இந்த இளைஞர்கள் கையில் இருக்கிறதென்றால் அது மிகையாகாது. இந்த இளைஞர்கள் நாட்டின் கண்கள்; தூண்கள் என்று கூறுவதற்கு முன் இவர்கள் ஒவ்வொருவரும் வீட்டின் கண்களாகவும் தூண்களாகவும் இருந்து வருகின்றனர் என்பது சாலப் பொருத்தமான ஒன்று. இப்படிப்பட்ட இளைஞர்கள் இரவு வேளைகளில் தங்களது வீட்டை விட்டு வெளியில் செல்லும் வழக்கம் இன்று நம் நாட்டில் பரவலாகவே காணப்படுகிறது. குறிப்பாக இது நகர்ப்புறங்களில் அதிகமாக நிலவி வருகின்றது. வீட்டிலிருந்து வெளியில் செல்லும் இவர்கள் தீயச் செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. 2016ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி மொத்தம் 30 844 போதைப் பொருள் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 23 000 சம்பவங்கள் புதியதாகப் போதைப் பொருளைப் பயன்படுத்தும் முயற்சியாகப் பதிவாகியுள்ளன. இன்னும் குறிப்பாகக் கூறப்போனால், பதின்ம வயது இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதோடு, இன்னும் அதிகமாகிக் கொண்டும் வருகின்றது. 2012ஆம் ஆண்டில் 3 700ஆக இருந்த எண்ணிக்கை, 2013ஆம் ஆண்டில் 7 816ஆக அதிகரித்துள்ளது. அஃதாவது, ஒரே ஆண்டில் 100 விழுக்காட்டுக்கும் மேல் கூடியுள்ளது. போதைப் பொருள் தவிர்த்து இதே காலக்கட்டத்தில் திருமணத்திற்கு முன் மகப்பேறு அடையும் சம்பவங்களின் எண்ணிக்கை மொத்தம் 81 000 ஆகப் பதிவாகியுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் குடும்பக் கட்டமைப்பையும் நல்லுறவையும் பெரும் அளவில் பாதிப்புக்குள்ளாக்கும் எனும் அச்சம் தற்போது மூத்த தலைமுறையினருக்கு வந்துள்ளது. எது எப்படியிருப்பினும் இளைஞர்கள் இரவில் செல்வதைத் தடுக்கும் பொறுப்பு பெற்றோர்களிடமே உள்ளது என்பதும் தீர யோசிக்க வேண்டிய ஒன்றாக அமைகிறது. 1. இளைஞர்கள் நாட்டிற்கும் வீட்டிற்கும் கண்களாகவும் தூண்களாகவும் உள்ளனர் எனக் கூறப்படுவதற்கான காரணம் என்ன? 2. 2012ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டிற்குள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் 100 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்திருப்பதற்குக் காரணங்கள் எவையாக இருக்கும் என்று ஊகித்துக் கூறுக. 3. `இளைஞர்கள் இரவில் வெளியில் செல்வதைத் தடுக்கும் பொறுப்பு பெற்றோர்களிடமே உள்ளது,’ எனும் கூற்றுத் தொடர்பான உமது கருத்து என்ன? கீழ்க்காணும் உரைநடைப் பகுதியை வாசித்துத் தொடர்ந்துவரும் வினாக்களுக்குப் பதிலளித்திடுக. õ÷Šð´ˆ¶î™ மேலே உள்ள பனுவலின் அடிப்படையில், ஆண்டு வாரியாக நீங்கள் அறிந்துகொண்ட தகவல்களை நிரலொழுங்கு வரைபடத்தில் எழுதுக. °¬øc‚è™


26 த� ொகுதி 3 ð£ì‹ 3 நல்லத�ொரு குடும்பம் 3.4.29 250 ச ொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுவர். பனுவலை மேலோட்டமாக விரைந்து வாசித்திடுக. இவ்வுலகில் மனித இனம் தோன்றியது முதல் இன்றைய நாள் வரை, மானிடவியலில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. தனிமனிதர்கள் சேர்ந்து குடும்பமாகவும், குடும்பங்கள் ஒன்றிணைந்து சமூகமாகவும், சமூகங்கள் இணைந்து நாடாகவும் உருப்பெறுகின்ற நிலையை நாம் அறிகிறோம். இந்தப் பரிணாமத்தில் குடும்பம் மிகவும் முக்கியப் பங்கை வகிக்கின்றது என்றால் அது மிகையாகாது. சீரான குடும்பம் சிறப்பான சமுதாயத்தை உருவாக்கும். சிறந்த சமுதாயம் நல்ல குடிமக்களை உருவாக்கும். அதனால்தான், ‘நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள். பல்கலைக்கழகம் எனப் பெயரிடும் அளவிற்குக் குடும்ப உறுப்பினர்களின் செயற்பாடு அமைய வேண்டும். முதலாவதாக, குடும்பத்தில் ஒற்றுமை நிலவ வேண்டும். ஒற்றுமை இல்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும் எனும் பழமொழிக்கேற்பக் குடும்பத்தில் ஒற்றுமை இல்லையெனில், குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுப் பிளவுபட்டு, இறுதியில் குடும்பமே சின்னாபின்னமாகப் போய்விடும். உண்மையில், ஒற்றுமையான குடும்பத்தில் இருக்கும் சகோதரர்கள், சகோதரிகள் ஆகியோருக்கிடையே நெருக்கம் அதிகமாக இருக்கும். இப்படி நெருக்கமாக இருக்கும் நிலையில், அவர்களிடையே புரிந்துணர்வு அதிகமாக இருக்கும். இதனால், குடும்ப ஒற்றுமை மேலோங்கும்; நல்ல பண்புமிக்க குடிமக்களாக உருவாகுவர். அடுத்து, குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாக வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாக வேண்டுமெனில், குடும்ப உறுப்பினர்கள் விடுமுறைக் காலங்களில் சுற்றுலாவோ சிற்றுலாவோ மேற்கொள்ளலாம். குடும்பமாக ஒன்றிணைந்து, இவ்வாறான மனமகிழ் நடவடிக்கைகள் மேற்கொள்வதால் குடும்ப உறுப்பினர்களிடையே மகிழ்ச்சிகரமான சூழல் உருவாகும். இந்த மகிழ்ச்சிகரமான சூழல் குடும்ப உறுப்பினர்களிடையே நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து உதவும் மனப்பான்மையோடு உறவுகொள்வதற்கு இந்த மகிழ்ச்சியான சூழல் ஏதுவாக இருக்கும்.


27 த� ொகுதி 3 27 மேலும், குடும்பத்தில் மரியாதைப் பண்புகள் போற்றப்பட வேண்டும். பொதுவாக, இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர்களிடையே இந்த மரியாதைப் பண்பு குறைந்து வருகின்றது. இளைய வயதுடையவர்கள் வயதில் மூத்தவர்களை மரியாதையின்றி அழைப்பது வழக்கமாகி வருகின்றது. அண்ணன் அல்லது அக்காள் உறவு முறைகளை அண்ணன், அக்காள் என்று அழைக்காமல் அவர்களைப் பெயர் ச ொல்லி அழைப்பதுவும் கண்டிக்கத்தக்கதாகும். மேலும் பலர் ‘வாடா; போடா’ என்றும், ‘வாடி; போடி’ என்றும், ‘அது; இது’ என்றும் அழைப்பது மரியாதைப் பண்புக்கு இழுக்காக அமைகிறது. ஆகவே, மரியாதைப் பண்பு என்பதைக் குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும். குடும்பத்தில் அவர்கள் கற்றுக் கொள்ளும் மரியாதை, சிறிய நிலையில் இருந்தாலும் இந்தத் தொடக்கம் அவர்களின் வாழ்வில் மரியாதைப் பண்புடன் நடந்து கொள்வதற்கு அடிப்படையாக அமையும். அடுத்ததாக, குடும்ப உறுப்பினர்கள் உடல்நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய இயலும் எனும் பழமொழிக்கேற்பக் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ வேண்டுமெனில், குடும்ப உறுப்பினர்கள் உடல்நலத்தைப் பேண வேண்டும். இவ்வாறு உடல்நலத்தைப் பேணுவதற்கு வாரத்தில் இரண்டு முறை குடும்ப உறுப்பினர்களோடு மெதுநடைப் பயிற்சி, வனதள நடைப் பயிற்சி, மலையேறுதல், நீச்சல் போன்ற ஆரோக்கியமான நடவடிக்கைகளில் ஈடுபடலாம். இதன்வழி, அவர்களின் சுகாதாரத்தைப் பேணிக் காக்க இயலும். இவ்வாறான குடும்பங்களில் நோய் நொடி ஏதுமின்றி மகிழ்ச்சிகரமான வாழ்க்கைச் சூழலை மேற்கொள்ளலாம். ஆகவே, நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் எனும் கூற்றுப்படி, குடும்பம் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் மரியாதைப் பண்புமிக்க சமுதாயமாகவும் உடல்நலத்தோடும் வாழ்ந்து வந்தால், அந்தக் குடும்பம் சிறந்த குடும்பமாகத் திகழும். இவ்வாறான நிலை ஒவ்வொரு குடும்பத்திலும் ஏற்பட்டால் வீடும் சிறக்கும்; நாடும் மேன்மையுறும்.


28 த� ொகுதி 3 வாசித்த பனுவலிலுள்ள கருத்துகளை வகைப்படுத்திக் குறிப்புகளாக எழுதுக. ‘குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வு’ எனும் தலைப்பிற்கேற்ற முன்னுரை எழுதுக. கீழ்க்காணும் குறிப்புகளைத் துணையாகக் கொள்க. மேற்கண்ட தலைப்பை அடிப்படையாகக் கொண்டு 250 சொற்களுக்குள் கட்டுரை ஒன்றனை எழுதுக. 1 2 3 குடும்பம் என்றால் என்ன? இன்றைய சூழலில் எவ்வாறெல்லாம் குடும்ப ஒன்றுகூடல் நடைபெறுகின்றது? நம் நாட்டில் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வுகள் எவ்வாறு நடைபெறுகின்றன? குடும்ப ஒன்றுகூடலால் ஏற்படும் நன்மைகள். `அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்,’ எனும் தலைப்பில் 250 சொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை ஒன்றனை எழுதுக. õ÷Šð´ˆ¶î™ உம் நண்பர் ஒருவர் தம் குடும்பத்தினரை விட்டு ஒதுங்கி இருக்க நினைக்கின்றார். அவருடைய இந்தச் செயலைச் சுட்டிக்காட்டித் திருத்தும் வண்ணம் சில அறிவுரைகளைக் கூற விரும்புகிறீர். அந்த அறிவுரைகளை ஒரு பத்தியில் எழுதுக. °¬øc‚è™ கருத்துகள் முக்கியக் கருத்து துணைக் கருத்து கருத்து 1 உறவினர்களிடையே கருத்துப் பகிர்வு அல்லது அனுபவப் பகிர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. கருத்து 2 நெருக்கம் அதிகமாகும், ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும்.


29 த� ொகுதி 3 5.2.7 தன்வினை, பிறவினை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர். பின்வரும் சொற்களைத் தன்வினை, பிறவினை என வகைப்படுத்தி எழுதுக. 1 தன்வினை, பிறவினை ð£ì‹ 4 இலக்கணம் தன்வினை • தம்பி படித்தான். • தாத்தா உண்டார். • ஆசிரியர் கட்டுரை எழுதினார். பாடினாள் கட்டினான் திருத்தினான் ஆடினான் மாற்றினாள் பாடுவித்தாள் கட்டுவித்தான் திருத்துவித்தான் ஆட்டுவித்தான் மாற்றுவித்தாள் பிறவினை • தம்பி படிப்பித்தான். • தாத்தா உண்பித்தார். • ஆசிரியர் கட்டுரை எழுதுவித்தார். தன்வினை எழுவாய் தானே செய்யும் செயலைக் குறிப்பது தன்வினையாகும். பிறவினை எழுவாய் பிறரைக் கொண்டு செய்விக்கும் செயல் பிறவினையாகும். எ.கா: எ.கா: படிப்பி செய்தான் கற்பிப்பார் நடந்தான் செய்வி தேடினான் சேர்கிறேன் உண்பிப்பான் தொடுத்தாள் அடக்கு கம்பர் எழுதினார் இவ்வாக்கியத்தில் கம்பர் என்னும் எழுவாய் எழுதும் செயலைத் தானே செய்வதால் அது தன்வினை வாக்கியமாகிறது. கம்பர் எழுதுவித்தார் இவ்வாக்கியத்தில் கம்பர் என்னும் எழுவாய் எழுதும் செயலைப் பிறர்கொண்டு செய்விப்பதால் அது பிறவினை வாக்கியமாகிறது. எ.கா: எ.கா:


30 த� ொகுதி 3 30 அட்டவணையை நிறைவு செய்க. உமக்குத் தெரிந்த தன்வினை பிறவினை சொற்களைப் பட்டியலிடுக. 2 3 தன்வினை பிறவினைச் சொற்கள் கொண்ட வாக்கியங்களை எழுதுக. õ÷Šð´ˆ¶î™ வாக்கியத்தில் தன்வினை பிறவினைச் சொற்களைக் கோடிடுக. °¬øc‚è™ தன்வினை பிறவினை தட்டுவார் பாய்ச்சுவித்தான் உருள்வான் எழுப்புவித்தார் வருந்துவான் 1. பல்லவ மன்னர்கள் தமிழ் நாட்டில் பல கோயில்களைக் கட்டுவித்தனர். 2. ஆசிரியர் பாடம் கற்பிக்கும்போது மாணவர்கள் அனைவரும் கவனமாகச் செவிமடுத்தனர். 3. அவன் தனக்குத் தெரிந்த தகவல்களைத் தெளிவாக எழுதினான். 4. அகழ்வாராய்ச்சியாளர்கள் கீழடி அகழ்வாராய்ச்சிப் பகுதியில் தமிழர் நாகரிகத்தை வெளிப்படுத்தும் பொருள்களைக் கண்டுபிடித்தனர். 5. ‘ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரோ’ எனும் பாடல் பொருள் பொதிந்தது. தன்வினை பிறவினை தன்வினை: பிறவினை:


31 இலக்கிய வேர் ð£ì‹ 1 இயற்கையில் மாந்தன் 4 31 இணையராக, இக்கவிதை வரிகளில், காலையில் கதிரவன் உதிக்கும் காட்சியின் சூழலைக் கவிஞர் எவ்வாறு வருணித்துக் கூறுகிறார் என்பதை வருணனை செய்து கூறுக. 1 வருணனையைக் கூர்ந்து செவிமடுத்திடுக. மனித வாழ்வை அழகு செய்ய இறைவன் தந்த அருட்கொடையே இயற்கை என்னும் அருஞ்செல்வம். இயற்கையின் அழகை இரசித்து மகிழ்வதில் ஏற்படும் உள்ளக் களிப்புக்கு ஈடு இணை இல்லை. உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் இயற்கையை இரசித்து மகிழ்ந்தால், அதன் அழகை அருமையான ச ொல்லோவியமாக வருணித்துக் காட்டலாம். அது கவிதையாகவும் வெளிப்படலாம். காலையில், கிழக்கு வானில் உதிக்கும் கதிரவனின் தோற்றத்தை இரசித்து மகிழ்ந்த உள்ளம், கவிதையாய் அதனை வடித்த அழகைச் செவிமடுத்து அதன் நயத்தை அறிக. எழுந்த கதிர் இளங்கதிர் எழுந்தான்; ஆங்கே இருளின் மேல் சினத்தை வைத்தான்; களித்தன கடலின் புட்கள் எழுந்தன கைகள் கொட்டி! ஒளிந்தது காரி ருள்போய்! உள்ளத்தில் உவகை பூக்க இளங்கதிர், பொன்னி றத்தை எங்கணும் இறைக்க லானான் - பாரதிதாசன் கடலும் இளங்கதிரும் எழுந்தது செங்க திர்தான் கடல்மிசை! அடடா எங்கும் விழுந்தது தங்கத் தூற்றல்! வெளியெல்லாம் ஒளியின் வீச்சு! முழங்கிய நீர்ப்ப ரப்பின் முழுதும்பொன் னொளி பறக்கும், பழங்கால இயற்கை செய்யும் புதுக்காட்சி பருகு தம்பி! - பாரதிதாசன் 1.3.11 சூழலை வருணனை செய்வர். எ.கா: அஃது அதிகாலை நேரம். இருள் படர்ந்த கிழக்கின் வானில் இளங்கதிர் எழுச்சியுடன் எழுந்தான். இருளின் மீது கதிரவனுக்குக் கோபம் போலும்! அந்தக் கோபத்தைச் சூரியன் இருளின் மீது காட்ட, அது தன் கருமை நீங்கிச் சிவந்து போனது..,


32 த� ொகுதி 4 காணொலியில் காணும் கடற்கரைக் காட்சியினைக் கண்டு அதற்கான வருணனைக் கூறுகளைக் கூர்ந்து நோக்கிக் கண்டறிக. சூழலுக்குப் பொருத்தமான வருணனைச் சொற்களைக் குழு முறையில் கலந்தாய்ந்து பட்டியலிடுக. காணொலியில் கண்டு களித்த கடற்கரையின் சூழலை வருணித்துக் கூறுக. பட்டியலிட்ட வருணனைச் சொற்களைத் துணையாகக் கொள்க. 2 3 வலையொலியில் நீங்கள் காணுகின்ற பினாங்குக் கொடிமலையின் இயற்கை அழகினையும் காட்சிகளின் சூழல்களையும் வருணித்துக் கூறுக. கீழ்க்காணும் குறிப்புகளைத் துணையாகக் கொள்க. °¬øc‚è™ தொடர்வண்டிப் பயணத்தில் கண்டுகளிக்கும் இயற்கை அழகு மலை உச்சியில் இருந்து பார்க்கையில் தோன்றும் பினாங்குத் தீவின் இயற்கைச் சூழல் சுற்றிச் சூழ்ந்திருக்கும் செடிகொடிகள் செழித்து வளர்ந்திருக்கும் காட்சியின் அழகு செயற்கைத் தோட்டங்களின் இயற்கைத் தோற்றம் மக்கள் இயற்கையை இரசித்து மகிழும் காட்சி ‘டெம்ளர் பூங்கா’ உல்லாசத் தளத்திற்குத் குடும்பத்தோடு உல்லாசப் பயணம் மேற்கொண்டிருக்கிறீர்கள். அங்கு, மேலிருந்து கீழ் வீழும் அருவியின் அழகு, இயற்கைத் தோற்றங்கள், இயற்கைச் சூழலோடு அமைந்துள்ள தங்குவிடுதியின் அமைதியான அமைப்பு போன்ற இயற்கையின் அழகில் மனத்தைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். ‘டெம்ளர் பூங்காவில்’ நீங்கள் காண்கின்ற காட்சிகளின் சூழல்களை வருணித்துக் கூறுக. õ÷Šð´ˆ¶î™


33 பனுவலை மௌனமாக வாசித்து, முக்கியக் கருத்துகளைக் கண்டறிக. ð£ì‹ 2 இலக்கியமும் பண்பாடும் 2.3.14 இலக்கியம் தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர். வாசிக்கும் முன்… ‘இறைவனின் படைப்பில் உச்சம் மனிதன்; மனிதனின் படைப்பில் உச்சம் அவன் உருவாக்கிய மொழி; மொழியின் படைப்பில் உச்சம் இலக்கியம்’. இலக்கியம் பற்றி இவ்வாறு உயர்வாகக் கூறப்படுவது ஏன்? உம் நண்பர்களுடன் கலந்துரையாடி அறிக. இலக்கியம் இனவரலாற்றின் வேர் இலக்கியத்திற்கும் மக்களின் வாழ்க்கை முறைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஓர் இனத்தின் வரலாற்றுப் பெருமையையும் தொன்மையின் சிறப்பையும் பண்பாட்டு நடைமுறையையும் அறிந்துகொள்ள வேண்டுமானால், அந்த இனம் சார்ந்த இலக்கியத்தின் வழியாகவே நம்மால் அவற்றை அறிந்துகொள்ள முடியும். மக்களின் வாழ்வியல் முறைகளின் செயல்பாடுகளே இலக்கியத்தின் பாடுபொருளாக மலர்கின்றன. எனவேதான், ஓர் இனத்தின் வாழ்வியல் கூறுகளை அறிவதற்கு இலக்கியத்தை நாடும் தேவை நமக்கு ஏற்படுகிறது. இலக்கியம் என்பது வாழ்க்கை மெய்மத்தின் நகல் என்று அறிஞர் பிளேட்டோ குறிப்பிடுவார். வாழ்க்கையை நகல் எடுத்துக் காட்டுவது இலக்கியம். அது படைக்கப்படும் காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்விடம், பயன்படுத்திய மொழி, அவர்களின் கலை, பண்பாட்டுக் கூறுகள் போன்றவற்றை எடுத்துக்காட்டும் காலக் கண்ணாடியாக விளங்குகிறது. இலக்கியத்தின் இந்தப் பொதுமை நெறிக்கும் சிறப்புக்கும் தமிழ் இலக்கியங்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. தமிழ் இலக்கியத்திற்கு ஒரு நீண்ட நெடிய தனித்த இலக்கிய மரபு இருக்கின்றது. தமிழ் இலக்கியங்களைப் படைத்த புலவர்கள், தாம் வாழ்ந்த சூழலை மிகவும் சிறப்பான முறையில் இலக்கியங்களில் எடுத்துக்காட்டியுள்ளனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்களின், உணவு வகை, தொழில்வகைகள், கலைகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், வாழ்க்கைமுறை ஆகியவற்றைத் தாங்கள் இயற்றிய இலக்கியங்களின் வாயிலாகப் புலவர்கள் நயத்தோடு வெளிப்படுத்தியுள்ளனர். அவைமட்டுமல்லாமல், உயர்ந்த கற்பனை, விழுமிய உணர்ச்சி, அழகிய வடிவமைப்பு ஆகிய இலக்கியத்தின் அழகியல் கூறுகளோடு படிப்பவரை இன்பத்தில் ஆழ்த்தும் வண்ணம் இலக்கியங்களைத் தமிழில் கலைநயமாய் வடித்துள்ளனர். த� ொகுதி 4


34 தமிழில் உள்ள இலக்கியங்களுள் மிகவும் பழமையானவைசங்க இலக்கியங்கள் ஆகும். இவைபல புலவர்களால் பாடப்பெற்றவை. பழந்தமிழ்ப் புலவர்கள் சங்க இலக்கியத்தை அகம், புறம் என இரு வகையாகப் பகுத்துப் படைத்துள்ளனர். அகத்துறை இலக்கியம் காதலைப் பற்றியும் புறத்துறை இலக்கியம் வீரம், கொடைத்திறன் போன்றவற்றையும் பாடுபொருளாகக் கொண்டு அமைந்துள்ளன. சங்ககாலத் தமிழர்கள், காதலையும் வீரத்தையும் வாழ்வியல் ஒழுக்கமாக நெறிப்படுத்தி ஒழுகினர். அந்த ஒழுக்கமே சங்க இலக்கியத்தின் உயிர்நாடியாக விளங்குகிறது. இந்த உயர் ஒழுக்க நெறிமுறையினைச் சங்கப் புலவர்கள் அழகிய கலை நயத்தோடு தங்கள் படைப்பில் பதிவு செய்துள்ளனர். சங்ககாலத்தில் தனிமனித வாழ்க்கையில் நட்பு, பகை, விருப்பு, வெறுப்பு, அன்பு, வன்பு முதலிய உணர்ச்சிகளும் இடம்பெற்றன. ஆனால், சங்கப் புலவர்கள் சமுதாயப் பொதுமைக்காகவும் பண்பாட்டைக் காப்பாற்றுவதற்காகவும் பிறர் பழிதூற்றாமல் இருப்பதற்காகவும் தனி மனிதனின் உயர்ந்த பண்பினையே தேர்ந்தெடுத்துத் தங்கள் இலக்கியங்களில் படைத்துள்ளனர். சங்க இலக்கியம் தன் உயர்ந்த இலக்கிய நெறிகளால் இன்றும் தமிழின் ஆணிவேராய் விளங்கி நிற்கிறது. கேள்விகளுக்குப் பதில் கூறுக; எழுதுக. 1 1. இலக்கியம் வாழ்க்கையின் நகல் என்று கூறப்படுவது குறித்து உமது கருத்து என்ன? கலந்துரையாடி விளக்குக. 2. ஓர் இனத்தின் வரலாற்றை அறிவதற்கு இலக்கியத்தை நாட வேண்டிய கட்டாயத் தேவை உள்ளதா? ஏன்? விளக்கிக் கூறுக. 1. ‘இலக்கியம் ஒரு காலக் கண்ணாடி’ இக்கூற்றை விளக்குக. 2. தமிழ் இலக்கியம் எத்தகைய கூறுகளைத் தனது பொதுமை நெறியாகக் கொண்டுள்ளது? 3. தமிழ் இலக்கியங்கள் கொண்டுள்ள சிறப்பியல்புகள் யாவை? விளக்கி எழுதுக. 4. சங்க இலக்கியத்தின் பாடுபொருள்கள் எவற்றைத் தழுவி அமைந்திருக்கின்றன? 5. சங்கப் புலவர்கள் எத்தகைய உயர்நெறிப் பண்பினைத் தமது படைப்பில் போற்றினர்? ஏன்? பனுவலில் வண்ணமிட்ட சொற்களுக்குச் சூழலுக்குப் பொருந்தும் வகையில் பொருள் கண்டு கூறுக; எழுதுக. வினாக்களுக்கு விடை எழுதுக. 2 3 த� ொகுதி 4


35 த� ொகுதி 4 இப்போது நீங்கள் படித்தவை ஐக்கூ கவிதைகள் எனப்படும். ஜப்பானிய இலக்கியத்திலிருந்து தமிழுக்கு வந்த இலக்கிய வடிவம். இது, சின்னஞ் சிறிய மூன்று அடிகளால் ஆனது. மூன்று வரிகளில் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளின் காட்சிகளை அழுத்தமாய், ஆழமாய்க் கோடிட்டுக் காட்டும் தன்மையுடையது. எளிய வடிவமாக இருந்தாலும் ஐக்கூ கவிதை நுண்ணிய உணர்வுகளைத் தன்னுள் பதியமிடுகிறது. கவிதைகளின் இறுக்கம், ச ொற்களின் சுருக்கம், பொருளின் பெருக்கம் போன்ற கூறுகளைக் கொண்டிருப்பதால், வாசிப்போரைக் கவிதை இன்பத்தில் மூழ்க வைக்கும் ஆற்றல்மிக்கதாய், ஐக்கூ விளங்குகிறது. ஐக்கூ கவிதைகளில் கவிஞன் ஓர் அனுபவத்தைக் குறைந்த ச ொற்களில் கற்பனை கலவாமல் காட்சிகளாகவும் நேரிடையாகயும் பதிவு செய்யவேண்டும். இந்தப் பிரபஞ்சத்தின் மர்மங்களை, அன்றாட நிகழ்வுகளை, மனத்தின் நுட்பமான உணர்வுகளை விளக்கிக் காட்டும் ஆற்றல் கொண்டவை ஐக்கூ கவிதைகள். சுருங்கி நிற்கும் அதன் மொழிநடை யாரையும் படிக்கத் தூண்டும். மரபுக் கவிதைக்குப் பொய் (கற்பனை) அழகு என்றால் ஐக்கூவிற்கு மெய்தான் அழகு என்று அமைகிறது. நம் மலேசியாவில் 90களில்தான் ஐக்கூ முகம் காட்டத் தொடங்கியது. ந. பச்சைபாலன் செம்மொழி மாநாட்டின் மலேசியக் கட்டுரைகள் 2010 (மாற்றங்களுடன்) வினாக்களுக்கு விடை எழுதுக. 1. ஐக்கூ கவிதைகள் எந்த மொழியில் தோற்றம் கண்டு தமிழுக்கு வந்தன? 2. ஐக்கூ கவிதைகள் எத்தகைய தன்மைகளை உள்ளீடாகக் கொண்டுள்ளன? 3. மரபுக் கவிதைக்கும் ஐக்கூ கவிதைக்கும் உள்ள வேறுபாடு என்ன? தமிழ் இலக்கியங்களை நாடிக் கற்கும் போக்கு இன்றைய இளைஞர்களிடையே மிகவும் குறைந்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால், இன்னும் ஐம்பது ஆண்டுகளில் நம் நாட்டுப் படைப்பிலக்கியத்துறையில் ஏற்படவிருக்கின்ற பாதிப்பை 50 சொற்களில் தொகுத்து எழுதுக. õ÷Šð´ˆ¶î™ எதிர்காலவியல் பனுவலை ஆழ்ந்து வாசித்திடுக. °¬øc‚è™ ஐக்கூ கவிதைகள் மழைத்திட்டி கப்பல் விடும் பிள்ளை கண்ணீரில் அம்மா பெய்யத் தொடங்கியது மழை நல்ல வேளை குடை இல்லை உணவைக் கொஞ்சம் சிந்தி உண்ணுங்கள் எறும்புகள் வரும் நேரம்


36 த� ொகுதி 4 ð£ì‹ 3 இயற்கை இன்பம் சித்திரை பிறந்தது பனுவலை வாசித்து, வருணனைக் கூறுகளை உய்த்துணர்க. சித்திரை மாதத்தில் இளவேனிற் காலம் தொடங்குகின்றது. இளவேனிற் காலம், இன்ப சுகம் தரும் காலம். அப்போது, பசுமையான செழுஞ்சோலைபார்க்குமிடமெங்கும் கண்ணுக்கு விருந்தளிக்கும். மாஞ்சோலை மெல்லிய தளிராடை புனைந்து இலங்கும்; வேம்பின் கொம்பிலே பூத்த சிறுவெண்மலர்கள் புதுமணம் கமழும்; தென்னை மரங்கள் இனிமையான இளநீரைத் தரும்; பனை மரங்கள் சுவையான பதநீரைக் கொடுக்கும். வசந்தகாலம் பிறந்ததென்று மகிழ்ந்து, பசுங்கிளிகள் மழலை மொழிபேசி, மரக்கிளைகளிலே கொஞ்சிக் குலாவும்; கருங்குயில்கள் மறைந்து நின்று கூவும். புதுமணம் புரிய விரும்புவோர் சித்திரையின் வரவை மெத்த ஆசையுடன் நோக்குவர். திருமணத்திற்குரிய சூழ்நிலை அப்போது இயல்பாக அமைந்திருக்கும்; பகலவன் ஒளி தருவான். வீடு தோறும் நெல்லும் பிறவும் நிறைந்திருக்கும். தென்றல் என்னும் இளங்காற்று வீசிக்கொண்டிருக்கும். இனிய திருமணம் இன்பமாக நடைபெறும். இயற்கை அன்னை இனிய கோலத்தில் இலங்கும் காலம் இளவேனிற் காலம். மாந்தர் ஐம்பொறிகளாலும் இன்பம் நுகர்தற்குரிய இன்பம் பொங்கும் காலம். பனியால் நலிந்த மக்கள் பகலவன் ஒளியைக் கண்டு, ‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்’ என்று இன்புற்று ஏத்தும் இனிய காலம். மூலம் : இரா.பி.சேதுபிள்ளை - தமிழின்பம் 3.4.32 250 ச ொற்களில் வருணனைக் கட்டுரை எழுதுவர். பனுவலில் வருணனை எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதைக் குழுவில் கலந்துரையாடிக் கூறுக; விளக்குக. 1 உங்கள் உறவினர் வீட்டுத் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டுள்ளீர். அந்தத் திருமண நிகழ்வுகளை இலக்கிய நயத்தோடு வருணித்து எழுதுக. இத்தலைப்பிற்கான சட்டகத்தைத் தயார் செய்க. வருணனைத் தன்மைகளைக் கொண்ட முதன்மை வாக்கியங்களை எழுதுக. நிரலொழுங்கு வரைவினைத் துணை கொள்க. 2 விருந்துண்ணல், உணவின் சுவை, அனைவரும் மகிழ்ந்திருக்கும் காட்சி திருமண மண்டபத் தோற்றம், திருமண மேடை அலங்கரிப்பு, சீர்வரிசை வரவேற்பு, முன்வாசல் அலங்காரம், வரவேற்புக் கோலம் மணமக்கள் வருகை, திருமணம் நடக்கும் விதம், தாலி கட்டும் நேரப் பரபரப்பு, வாழ்த்தும் முறை


37 த� ொகுதி 4 பயணத்தின் சூழல் வெளிப்புறக் காட்சி இரசித்த காட்சிகள் இல்லம் திரும்பும் சூழல் உமது பள்ளியில் இயங்கும் தமிழ்மொழிக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கேமரன் மலை சுற்றுலாவில் கலந்து கொண்டிருக்கிறீர். அங்கு 3 கேமரன் மலைக்குச் செல்லும் சாலை அமைப்பு (பாம்புபோல் வளைந்து வளைந்து இருப்பது) இடையிடையே நெஞ்சை வருடும் காட்சிகள் விடுதியின் சூழலமைவு வானத்தைத் தொட்டுவிடத் துடிக்கும் மலைத்தொடர்கள் பனியை ஆடையாய்ப் போர்த்திய சுற்றுச் சூழல் படியமைத்து மேல் செல்லும் நிலப்பரப்பு காணக் கண் நூறு வேண்டும் வணிக வீதியின் சூழல்கள் ரோஜா மலர்த் தோட்டம் - காலைப் பனியினை இதழ்களில் தாங்கிய மலர்களின் அழகு… பட்டாம் பூச்சிப் பூங்கா - பூச்சிகளின் இறகில் கடவுளின் ஓவிய விளையாட்டு… தேயிலைத் தோட்டம் – பசுமை பாய் விரித்துப் படர்ந்திருந்த காட்சி, தேயிலையைப் பறிக்கும் பெண்களின் தோற்றம் வானில் நிலவின் எழில் தோற்றம் பனித்தூறல் , சில்லென்ற காற்றின் இதம் இயற்கையின் சிரிப்பு நீர் கண்டு கொண்டிருக்கின்ற கேமரன் மலையின் அழகை வருணித்து, 250 சொற்களில் வருணனைக் கட்டுரை ஒன்றனை எழுதுக. கீழ்வருவனவற்றை வழிகாட்டியாகக் கொள்க.


38 த� ொகுதி 4 மெர்டேக்கா சதுக்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறீர்கள். அந்தக் கொண்டாட்டத்தின் காட்சிகளை இலக்கிய நயத்தோடு õ÷Šð´ˆ¶î™ °¬øc‚è™ èõùˆF™ ªè£œè வருணனை: • வருணனைக் கட்டுரை, தான் உள்ளார்ந்து இரசித்து மகிழும் உணர்வுகளை வெளிப்படுத்திக் காட்டும் கட்டுரை வகையைச் சார்ந்ததாகும். • இவ்வகைக் கட்டுரையினை நல்ல மொழியாற்றலுடனும் இலக்கிய நயத்துடனும் வருணனைக் கூறுகளுடனும் எழுத வேண்டும். • நல்ல மொழியணிகள், உவமைகள், உருவகங்கள், காட்சிப்படுத்தும் தன்மைகளைக் கொண்டு, காணும் காட்சிகளை எழுத வேண்டும். • நேரடியாக நடக்கின்ற நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தும் வேளையில், வருணனைகள் படிக்கின்றவர்களுக்கு அந்தச் சூழலில் இருப்பதைப் போன்ற உணர்வினை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும். தீபாவளிப் பண்டிகையை ஒட்டி நடைபெறும் தீபாவளிச் சந்தை ஒன்றில் உங்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டிருக்கிறீர்கள். அந்தத் தீபாவளிச் சந்தையின் பரபரப்பான சூழலை, பின்வரும் குறிப்புகளைத் துணையாகக் கொண்டு வருணித்து எழுதுக. • வாடிக்கையாளரின் நெரிசல் - மக்களின் நடமாட்டத் தன்மை • துணிமணிகள் மற்றும் சந்தைப் பொருள்களை அடுக்கி வைத்திருக்கும் அழகு • வாடிக்கையாளர்களை வணிகர்கள் கூவி அழைக்கும் பாங்கு வருணித்து 250 சொற்களில் வருணனைக் கட்டுரை எழுதுக.


39 கம்ப இராமாயணம் ( கம்பர் ) ð£ì‹ 4 செய்யுளும் மொழியணியும் 4.3.5 ஐந்தாம் படிவத்திற்கான பல்வகைச் செய்யுளையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர். இயற்கை இன்பம் தலை வணக்கம் மன்னா! இவர் ஒரு புதுப் புலவர். தங்களின் அறிவிப்புக்கு ஏற்ப, இயற்கையின் இன்பத்தைக் குறித்துப் பாடல் இயற்றி வந்திருக்கிறாராம். வணக்கம் புலவரே! இறைமையின் அருட்கொடை இயற்கை. அதன் இன்பத்தைக் குறித்த பாடலை இயற்றி வந்துள்ளீரா? ஆம் மன்னா! இயற்கை இன்பத்தை எடுத்தாண்டு பாடல் எழுதி வந்துள்ளேன். ஆகா! அவை மணக்க அள்ளித் தெளியுங்கள் தங்களின் ஆழ்ந்த வரிகளை.., இதோ பாடுகிறேன் மன்னா! குயிலினம் வதுவை செய்ய, கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை அயில்விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகு செய்ய, பயில்சிறை அரச அன்னம் பன்மலர் பள்ளி நின்றும் துயிலெழ, தும்பி காலைச் செவ்வழி முரல்வ சோலை. ஆகா! ஆழமான வரிகள். அழகான நயங்கள். அவை அறிய, செய்யுளின் பொருளையும் விளக்குங்கள் புலவரே! குயிலினம் தம் இணைகளோடு சேர்ந்திருக்கவும் கூர்விழியுடைய நாட்டியப் பெண்கள் ஆடலரங்கத்திற்கு அழகு செய்ய ஆடுவதைப் போன்று மயில்கள் மரக்கிளைகளில் நாட்டியமாடவும் நெருங்கிய சிறகுகளையுடைய அன்னப்பறவையானது தாமரை மலர்களினின்றும் துயில் எழவும் அக்காலை வேளையில் வண்டுகள் உதயராகம் பாடவும் உடைய சோலை என்பதே இச்செய்யுளின் பொருள் மன்னா! தலைமைப் புலவர்: புலவர்: புலவர்: புலவர்: சோழன்: சோழன்: சோழன்: (குலோத்துங்கச் சோழ மன்னனின் அரசவை கூடியது. அமைச்சர்களும் புலவர்களும் குழுமியிருக்கிறார்கள்) த� ொகுதி 4 இயற்கை இன்பம் குயிலினம் வதுவை செய்ய, கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை அயில்விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகு செய்ய, பயில்சிறை அரச அன்னம் பன்மலர் பள்ளி நின்றும் துயிலெழ, தும்பி காலைச் செவ்வழி முரல்வ சோலை. பொருள் குயிலினம் தம் இணைகளோடு சேர்ந்திருக்கவும் கூர்விழியுடைய நாட்டியப் பெண்கள் ஆடலரங்கத்திற்கு அழகு செய்ய ஆடுவதைப் போன்று மயில்கள் மரக்கிளைகளில் நாட்டியமாடவும் நெருங்கிய சிறகுகளையுடைய அன்னப்பறவையானது தாமரை மலர்களினின்றும் துயில் எழவும் அக்காலை வேளையில் வண்டுகள் உதயராகம் பாடவும் உடைய சோலை.


40 த� ொகுதி 4 தலைமைப் புலவர்: தலைமைப் புலவர்: சோழன்: சோழன்: சோழன்: இயற்கை, இன்பத்தின் ஊற்று.., உள்ளம் அள்ளிப் பருகும் வெள்ளம்.., ஆகா! பாடல் அருமை! பொருளோ புதுமை. கற்பனையில் ஆழ்ந்த நயம். அமைச்சரே பரிசுப் பொருள் ஐயாயிரம் பொன்னை இவருக்கே அளியுங்கள். பொறுங்கள் மன்னா! இவர் புலவரல்லர்.., புளுகர்! கம்ப இராமாயணத்திலிருந்து, கம்பரின் பாடலைத் திருடித் தம் பாடலாகப் பாடிப் பிதற்றுகிறார். என்ன? சோழனின் அவையிலே புலமைமையில் பொய்மையா? வெட்கப்படுகிறேன் புலவரே. மன்னிக்க வேண்டும் மன்னா. தலைமைப் புலவர் கூறியதைப் போல் நான் பொய்யனுமல்லன்; புரட்டனுமல்லன்… நான்தான் தொடக்கத்திலேயே, இயற்கை இன்பத்தை எடுத்தாண்டு பாடல் எழுதி வந்துள்ளேன் என்று கூறினேனே! நான் இப்பாடலை எடுத்தாண்டது கம்ப இராமாயணத்தில் இருந்துதான். இப்படிச் செய்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லை? இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது? கம்ப இராமாயணம் காட்டாத இயற்கையின் இன்பத்தையா நாம் எழுதிட முடியும்? இன்று எல்லாரும் அந்த அருங்காவியத்தைப் படிப்பதில்லை; போற்றுவதுமில்லை. கம்பரின் கவித்துவத்தை மீட்டுரு செய்யவே இப்படிச் செய்தேன். இக்காவியத்தின் மீது கவன ஈர்ப்புச் செய்யவே இச்செயல் புரிந்தேன். அடடா! எங்களைப் பொறுத்தருளுங்கள் புலவரே! தங்கள் நன்னோக்கம் புரிந்தது. தங்களைப் புண்படுத்திய இந்த அவையை மன்னியுங்கள். புலவர்: புலவர்: நாடகக் காட்சியினைப் பாகமேற்று நடித்துக் காட்டுக. 1 நாடகக் காட்சியில் அடங்கியுள்ள செய்யுளின் பொருளை ஊகித்துக் கூறுக; எழுதுக. செய்யுள் அடிகள் விவரிக்கும் சிறப்புகளை விளக்கிடுக. 2 3 கம்ப இராமாயணச் செய்யுள் காட்டும் இயற்கை இன்பத்தையும் அதில் காணும் உவமை அழகு, பொருளின் நயம் ஆகியவற்றையும் விளக்கிக் கூறுக. õ÷Šð´ˆ¶î™ °¬øc‚è™ கம்ப இராமாயணச் செய்யுளினைப் பொருளோடு வாசித்து மகிழ்க.


Click to View FlipBook Version