தேசியக் க�ோட்பாடு மலேசியர்களிடையே ஒருமைப்பாட்டையும் சகிப்புத் தன்மையையும் ஏற்படுத்துகிறது. தேசியக் க�ோட்பாடு நாட்டின் மீது விசுவாச நட்பையும் பற்றுதலையும் வளர்ப்பதில் வழிகாட்டியாக அமைகின்றது. இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் க�ோட்பாடு தத்தம் சமயப் போதனைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் கட்டுப்பட்ட சமுதாயத்தை உருவாக்குவதில் பங்காற்றுகிறது. உண்மைதான் ஜூலியா. சமய நம்பிக்கை க�ொண்ட சமூகத்தினால் பொறாமை, துரோகம், கையூட்டு, தவறான போதைப்பொருள் பயன்பாடு, நன்னெறிச் சீர்குலைவு ஆகியவற்றைத் தவிர்க்க இயலும். பல்வேறு சமயங்களையும் நம்பிக்கைகளையும் கொண்டாடுதல் 1 2 இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் க�ோட்பாடு பணிவுமிக்க, இறைவனின் கருணைக்கு எப்பொழுதும் நன்றி கூறிப் போற்றிடும் மலேசிய மக்களை உருவாக்கியுள்ளது. 3 தேசியக் தேகக�ோட்பாட்பாட்டின் பங்பங்கு சமயப் போதனைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பதால் நமக்குக் கிடைக்கும் நன்மைகளை ஐந்து நிமிடங்களுக்குள் குறிப்பெழுதுக. நடவடிக்கை விரைவாக எழுதுதல் மலேசியர்களின் அன்றாட வாழ்க்கையில் தேசியக் க�ோட்பாட்டின் பங்கை விளங்கிக் க�ொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல். ஆசிரியர் குறிப்பு 44
சிறுவயது முதலே நாட்டுப்பற்று விதைக்கப்படுகிறது. சமுதாய ஒற்றுமையை வலுப்படுத்துதல் தேசியக் க�ோட்பாடு நாட்டை நேசிக்கும் உணர்வுமிகு சமுதாயத்தை உருவாக்கவல்லது. நாட்டிற்காக விசுவாசமும் தியாகமும் செய்யத் தயாராக இருக்கும் சமுதாயத்தை நாட்டுப்பற்று வளர்க்கிறது. மேலும், நாட்டுப்பற்றானது நாட்டின் இறையாண்மை அடையாளங்களான 'ஜாலூர் கெமிலாங்', நாட்டின் சின்னம், 'நெகாராகூ' பாடல் ஆகியவற்றை மதிக்கும் மலேசியர்களை உருவாக்குகிறது. மலேசியச் சமூகத்தினர் பகிர்ந்துணர்வையும் சகிப்புத் தன்மையையும் அமல்படுத்துவது அவசியம். தேசியக் க�ோட்பாட்டின் வாயிலாகச் சமயம், பிற இனப் பண்பாடு ஆகியவற்றை மக்கள் விளங்கிக் க�ொள்வத ோடு மதிக்கவும் வழிகாட்டுகிறது. ஒரு நாட்டிற்குச் சட்டம் ஏன் அவசியம்? நாட்டுப்பற்று மிக்க மலேசிய சமுதாயத்தை உருவாக்குதல் சட்டங்களை மதிக்கும் பழக்கத்தை வளர்த்தல் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் குற்றச்செயல்களில் மக்கள் ஈடுபடாதிருக்க தேசியக் க�ோட்பாடு வழிகாட்டுகிறது. சட்டங்களைக் கடைப்பிடிப்பது அமைதியையும் சுபிட்சத்தையும் ஏற்படுத்தும். இளையோர் போதைப் பொருள் விடுவிப்பு இயக்கம். மூலம்: www.aadk.gov.my. 45
நன்னெறியைப் பதியச் செய்தல் தேசியக் க�ோட்பாடு மலேசிய சமுதாயத்தினரிடையே உயரிய மரியாதையையும் நன்னடத்தையையும் ஊட்டுகிறது. இந்த நெறியானது சமுதாயத்தில் நல்லிணக்கமான தொடர்பையும் ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பையும் உருவாக்குகிறது. சமூக வாழ்க்கையில் நன்னெறி ஏன் அவசியம்? தன்னெறிமிகு சமுதாயத்தை உருவாக்குதல் தேசியக் க�ோட்பாடு சகிப்புத்தன்மை, ஒத்துழைப்பு ஆகியவற்றின்வழி நாட்டின் பல்வேறு இனங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துகிறது. தன்னெறியை உருவாக்குவதில் தேசியக் க�ோட்பாட்டின் அவசியத்தை மலேசியர்கள் புரிந்து க�ொள்ள வேண்டும். உயர்நெறி என்பது மாறாத் தன்மையும் தூய நேர்மைப் பண்பும் ஆகும். கல்வி, பணி, வாழ்க்கை ஆகியவற்றில் மிகச் சிறந்த நிலையை அடைய இத்தன்மை காரணமாகிறது. இந்த உயர்நெறிமிக்கப் பண்பானது தேர்வில் பார்த்து எழுதுதல் போன்ற எதிர்மறை நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து நம்மைத் தவிர்க்கச் செய்கிறது. சச�ொொற்க்களஞ்சியம் ளஞ்சியம் 10.3.3 K10.3.6 விரைந்து பதிலளி தேசியக் க�ோட்பாடு மலேசிய சமுதாயத்தினரிடையே மிகச்சிறந்த தன்னெறியை உருவாக்குகிறது. மேலும், உயர்நெறிமிக்க தனிநபரை உருவாக்கவும் பங்காற்றுகிறது. மலேசியர்களிடையே தன்னெறியை உருவாக்குவதற்குத் தேசியக் க�ோட்பாடு ஏன் அவசியம்? 46
இந்த அலகு தேசியக் க�ோட்பாடு உருவாக்க வரலாற்றையும் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணங்களையும் விவரிக்கிறது. தேசியக் க�ோட்பாட்டின் நோக்கமும் அமலாக்கம் தொடர்பான புரிதலும் நாட்டுப்பற்று மிக்க குடிமக்களை உருவாக்குதலை விவரிக்கின்றது. இவ்வுணர்வு அடுத்த அலகில் மலேசிய சமுதாயம் தொடர்பாகக் கற்க உள்ளதை விளங்கிக் க�ொள்ள உதவுகிறது. • பல்வேறு சமயங்களையும் நம்பிக்கைகளையும் க�ொண்டாடுதல் • நாட்டுப்பற்றுமிக்க மலேசிய சமுதாயத்தை உருவாக்குதல் • சட்டங்களை மதிக்கும் பழக்கத்தை வளர்த்தல் • சமுதாய ஒற்றுமையை வலுப்படுத்துதல் • நன்னெறியைப் பதியச் செய்தல் • தன்னெறிமிகு மலேசிய சமுதாயத்தை உருவாக்குதல் தேசியக் கோட்பாட்டின் பின்னணி தேசியக் கோட்பாட்டின் நோக்கமும் நெறிகளும் தேசியக் கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணங்கள் • பொருளாதார நடவடிக்கை வேறுபாடு • வெவ்வேறான வசிப்பிடச் சூழல் • மாறுபட்ட அரசியல் புரிதல் • ஐந்து நோக்கம் • ஐந்து க�ோட்பாடு இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் பேரரசருக்கும் நாட்டுக்கும் விசுவாசம் செலுத்துதல் அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல் சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல் நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல் தேசியக் கோட்பாட்டின் பங்கு மீட்டுணர்வோம் 47
உனது அனுபவத்தின் அடிப்படையில் சூழலுக்குப் பொருத்தமான தேசியக் க�ோட்பாட்டினை எழுதுக. இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல் அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல் நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல் சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல் அம்சார் பள்ளியிலிருந்து வெகு தொலைவில் தங்கியிருக்கும் மாணவன். அவன் பள்ளிக்குச் சென்று வர மிதிவண்டியைப் பயன்படுத்தினான். பயணம் முழுவதும் அம்சார் தன் பாதுகாப்பைக் கருத்தில் க�ொண்டு எப்பொழுதும் சாலை விதிமுறைகளையும் சட்டங்களையும் கடைப்பிடித்தான். புறப்பாட நடவடிக்கை முடிந்து பள்ளியிலிருந்து திரும்பும் போது மர்டியானா கைத்தடி ஊன்றிய மூதாட்டி ஒருவர் சாலையைக் கடக்கச் சிரமத்தை எதிர் நோக்கியதைக் கவனித்தாள். அம்மூதாட்டி பாதுகாப்பாகச் சாலையின் மறுபுறம் செல்ல மர்டியானா உதவினாள். ஏதன் மலாயாப் பல்கலைக்கழகச் சட்டத்துறை பட்டதாரி. அவர் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். ஏதன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் சட்டங்கள் இயற்றும் செயல்முறையில் ஈடுபட்டுள்ளார். கீதாவின் குடும்பத்தினர் அண்டை வீட்டாருடன் இனப்பாகுபாடின்றி பழகுவதற்கு முக்கியத்துவம் வழங்குபவர்கள் ஆவர். ஒருநாள் கீதாவின் அப்பா குளிர்க் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கீதாவின் குடும்பத்தினரும் அண்டை வீட்டாரும் கீதாவின் அப்பா வழக்க நிலைக்குத் திரும்பிட தத்தம் நம்பிக்கைக்கு ஏற்ப வேண்டினர். சர்ஜித் சிங் மலேசியத் தற்காப்பு அமைச்சின் கீழ் க�ொமண்டோ பயிற்சியில் கலந்துக�ொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ராணுவத் துறையில் மிகுந்த ஈடுபாடு க�ொண்டவர். அவர் நாட்டின் சுதந்திரத்தை நிலைநாட்டவும் நேசமிகு நாட்டின் இறையாண்மையைக் காக்கவும் தம் உயிரைத் துறக்கத் தயாராக இருந்தார். கோட்பாடு சூழல் 1 2 3 4 5 சிந்தித்துப் பதிலளி சிந்தித்துப் பதிலளி என்னை வருடுக 48
தேசியக் க�ோட்பாட்டை உய்த்துணர்ந்து அமல்படுத்துதல் ஒன்றுபட்ட, நல்லிணக்கமிகு, சுபிட்சமான சமுதாயத்தை உருவாக்க இயலும். தேசியக் க�ோட்பாடு ஒவ்வொரு மலேசியக் குடிமகனுக்கும் வாழ்க்கை வழிகாட்டியாக இருத்தல் வேண்டும். சமுதாயம் ஒருவரை ஒருவர் புரிந்து, விட்டுக் க�ொடுக்கும் நெறியானது சமூக நல்லிணக்கத்தையும் சுபிட்சத்தையும் உருவாக்கும். நாடு சமுதாய நல்லிணக்கமும் சுபிட்சமும் மிக்க சமூகம் நாட்டின் நிலைத்தன்மையையும் முன்னேற்றத்தையும் வலுப்படுத்தும். தனிநபர் தேசியக் க�ோட்பாட்டை உய்த்துணர்ந்து அமல்படுத்துவது நம்மைப் பண்புமிக்க, புரிதல்மிகு தனிநபராக உருவாக்கும். நாட்டைடை நேேசிப்ப்போோம் 49
மலேசிய சமுதாயம் நல்லிணக்கத்துடன் வாழும் பல்லின மக்களைக் கொண்டது ஆகும். இந்த அலகில் மலேசியாவின் பல்லின மக்கள், குடியிருப்புப் பகுதிகள், பொருளாதார நடவடிக்கைகள், இசைக்கருவிகள், நடனங்கள், விளையாட்டுகள் ஆகியவற்றோடு சமுதாயத்தினரிடையே காணப்படும் நாட்டுப்புறக் கதைகள் பற்றியும் விவாதிக்க உள்ளோம். 4 தலைப்பு 11: நாம் மலேசியர் அலகு சாரம் மலேசிய இனங்கள் 50
நீங்கள் ககற்கப் பப�ோோவது என்ன்ன? AKPS அடிப்பப்படை வரலா டை வரலாற்ற்றுச் சிந்த றுச் சிந்தனைனைத் திறன்ன் குடியியல் நெறி 1 மலேசியாவின் பல்லின மக்கள். 2 அன்றும் இன்றும் மலேசிய சமுதாயத்தினரின் குடியிருப்பும் பொருளாதார நடவடிக்கைகளும். 3 மலேசிய சமுதாயத்தினரின் இசைக்கருவிகளும் பாரம்பரிய நடனங்களும். 4 மலேசிய சமுதாயத்தினரின் பாரம்பரிய விளையாட்டுகள். 5 மலேசிய சமுதாயத்தினரிடையே காணப்படும் உள்ளூர்ச் சார்ந்த நாட்டுப்புறக் கதைகள். 1 அன்றும் இன்றும் மலேசிய சமுதாயத்தினரின் குடியிருப்பு, பொருளாதார நடவடிக்கைகளின் மாற்றத்தையும் தொடர்ச்சியையும் விளக்குகின்றது. 2 பாரம்பரிய விளையாட்டுகளில் ஆக்கச் சிந்தனையை மேம்படுத்துகிறது. 3 மலேசிய இனங்களுக்கிடையே பாரம்பரிய இசைக்கருவிகளின் ஒருமைப்பாட்டை அறிதல். • மகிழ்ச்சி • மதித்தல் 51
மலேசிய சமுதாயம் பல்வேறு வழித்தோன்றல், சமயம், பண்பாடு அடங்கிய பல்லின மக்களைக் கொண்டது. மலேசியாவில் காணப்படும் பல்லின மக்களில் மலாய்க்காரர், சீனர், இந்தியர், பூர்வக்குடியினர், ஈபான், மெலானாவ், கடசான்டூசுன், பிடாயு, பாஜாவ், இரானுன் ஆகியோர் அடங்குவர். குடிமக்களாகிய நாம் அனைவரின் சுபிட்சத்திற்காக இத்தனித்துவத்தைப் போற்றுதல் வேண்டும். இந்தியச் சமூகத்தில் பெரும்பாலோர் தமிழ்மொழி பேசுகின்றனர். எனினும் தெலுங்கு, மலையாளம் மொழிகளைப் பேசுவோரும் உள்ளனர். இந்தியச் சமூகத்தில் பெண்கள் புடவையும் ஆண்கள் வேட்டியும் அணிகின்றனர். மலாய்ப் பிராந்தியத்தில் வாழும் இஸ்லாம் சமயத்தினரான இவர்கள் மலாய்மொழியைப் பயன்படுத்திப் பேசுவதோடு மலாய்ச் சடங்கு சம்பிரதாயங்களையும் அமல்படுத்துகின்றனர். பெண்கள் பாஜூ கூரோங்கையும் ஆண்கள் பாஜு மெலாயுவையும் அணிவதிலிருந்து மலாய்ச் சமூகத்தில் பாரம்பரிய உடைகளை அடையாளம் காண இயலும். மலாய்க்காரர் பெரும்பாலான சீனச் சமூகத்தினர் மெண்டரின் மொழியைப் பயன்படுத்துவதோடு ஹ�ொக்கியன், ஹக்கா, கெந்தனிஸ் ஆகிய வட்டார மொழிகளையும் பயன்படுத்துகின்றனர். பெண்கள் பட்டுப் போன்ற மெல்லிய துணியால் நெய்யப்பட்ட சியூங்சாம் எனப்படும் ஆடையையும் ஆண்கள் சங்சானை அணிவதிலிருந்தும் சீனச் சமூகத்தில் பாரம்பரிய உடைகளை அடையாளம் காண இயலும். சீனர் இந்தியர் ஈபானியர் மலேசியாவின் பல்லின மக்கள் பல்வேறு மூலங்களின் வாயிலாக ஒவ்வோர் இனத்தவரின் அடையாளத்தை அடையாளங்காண மாணவர்களுக்கு வழிகாட்டுதல். சரவாக்கின் மிகப் பெரிய இனக்குழுவினர் ஆவர். இவ்வினத்தினர் தொடர்பு கொள்ளும்போது ஈபானிய மொழியில் பேசுகின்றனர். புவா கும்பு (pua kumbu) கொண்டு, நெய்து அலங்கரிக்கப்பட்ட பாரம்பரிய ஆடைகளையே ஈபானியப் பெண்கள் காவாய்த் திருநாள், திருமண வைபவம் போன்றவற்றில் அணிவர். பாஜூ பூரோங்கும் கெலாம்பியும் ஈபானிய ஆண்களின் ஆடைகளில் ஒன்றாகும். இணையராக, நாம் அவசியம் உள்ளூர்ப் பண்பாட்டின் தனித்தன்மையைப் போற்ற வேண்டும் என்பதைப் பற்றிக் கலந்துரையாடுக. 11.1.1 K11.1.7 ஆசிரியர் குறிப்பு நடவடிக்கை கலந்துரையாடுதல் 52
சீனாவிலிருந்த வந்த வணிகர்கள் உள்ளூர் மக்களைத் திருமணம் செய்ததன்வழி மலாக்காவில் இந்தச் சமூகத்தினர் தோன்றினர். அவர்கள் ஆண்களைப் ‘பாபா’ எனவும் பெண்களை ‘ஞ�ோஞா’ எனவும் குறிப்பிடுகின்றனர். அவர்கள் மெலாயுபாபா வட்டார மொழியில் பேசுகின்றனர். இச்சமுதாயத்தினரின் வாழ்க்கைமுறை, பேச்சு, சடங்கு, பாரம்பரியம், உணவு ஆகியன உள்ளூர்ப் பண்பாட்டோடு அதிகம் கலந்துவிட்டன. பின்னல் கெபாயா, பாத்தேக் கைலி ஆகியன அவர்களின் பாரம்பரிய ஆடைகள் ஆகும். பாபா, ஞ�ோஞா பூர்வக்குடியினர் கைவினைத்திறன் அருங்காட்சியகம் கோலாலம்பூரில் ஜாலான் டாமான்சாராவில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம்வழி பூர்வக்குடியினரின் கைவினைப் பண்பாட்டுப் பாரம்பரியத்தை நிலைநிறுத்த உதவும். கட்டளை: 1. பின்வரும் ஆய்வைச் செய்து முடிக்க மாணவர்களை நான்கு குழுவாகப் பிரித்தல். அ. பூர்வக்குடியினரின் பின்னணியையும் மக்கள் அமைப்பையும் அறிதல். ஆ. குடியிருப்பும் அன்றாட நடவடிக்கைகளும். இ. இசைக்கருவிகளும் உடை அலங்காரமும். ஈ. நம்பிக்கையும் நீத்தார் கடனும். 2. அங்குச் சென்று வந்த பின்னர் ஒவ்வொரு குழுவினரும் தங்களின் தரவுகளைப் படைக்க வேண்டும். சபாவில் மிகப் பெரிய குழுவினர். இவர்கள் தத்தம் இனக்குழுவினருக்கு ஏற்ப வெவ்வேறு மொழிகளில் பேசுகின்றனர். தனித்துவமிகு இவர்களின் பாரம்பரிய ஆடையும் இனக்குழுக்களிடையே வேறுபட்டு இருக்கிறது. இவ்வுடை பெரும்பாலும் திருமணம், கெஅமாத்தான் விழா போன்ற அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் அணியப்படுகிறது. கடசான்டூசுன் மூலம்: Tan Chee-Beng, 2021. The Baba of Melaka. Selangor: SIRD. பூர்வக்குடிகள் கைவினைத்திறன் அருங்காட்சியகம். தீபகற்ப மலேசியாவில் பூர்வக்குடியினர் நெகிரிட்டோ (செமாங்), செனோய், மெலாயு புருட்டோ என மூன்று பெரிய குழுக்களில் காணப்படுகின்றனர். ஆற்றல்மிகு கைவினைத் திறன், பச்சிலை மருந்துகள் தயாரித்தல், இனக்குழுக்களுக்கேற்ற மொழிப் பயன்பாடு ஆகிய பாரம்பரியக் கூறுகளை நிலைநிறுத்தியது அவர்களின் தனிச்சிறப்பாகும். பூர்வக்குடியினர் 53
போர்த்துகீசியர்கள் உள்ளூர் மக்களைத் திருமணம் செய்ததன் வழி செரானி சமூகத்தினர் தோன்றினர். இவர்கள் யுரேஷியர் எனவும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் 'கிறிஸ்தாங்' மொழியும் ஆங்கிலமொழியும் பேசுகின்றனர். இச்சமூகத்தினர் தனித்துவமான மொழி, பண்பாட்டு முறை, இசையைக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் புகழ்பெற்ற நடனங்கள் 'பிரன்யோ' (branyo), 'ப்ராபெய்ரா' (frapeirra) ஆகும். இந்திய வணிகர்கள் உள்ளூர் மக்களைத் திருமணம் செய்ததன் வாயிலாகச் செட்டி சமூகத்தினர் தோன்றினர். இவர்களில் பெரும்பாலானோர் மலாக்காவில் வசிக்கின்றனர். கிரியோல் மலாய்மொழி அவர்களின் பேச்சு மொழியாகும். அவர்கள் பின்னல் கெபாயா, பாத்தேக் கைலி ஆகிய பாரம்பரிய உடைகளைப் பொது விழாக்களின்போது அணிகின்றனர். செட்டி இவர்களின் குடியிருப்புகள் பெர்லிஸ், கெடா, பேராக், கிளந்தான் ஆகிய மாநிலங்களில் அதிகம் உள்ளன. இவ்வினத்தவர் சயாம், மலாய் மொழிகளைப் பேசப் பயன்படுத்துகின்றனர். இவர்களின் புத்தாண்டின்போது சொங்க்ரான் (songkran) பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். வாட்களில் (wat) நடத்தப்படும் சமய நிகழ்ச்சிகளுக்குப் பாரம்பரிய ஆடையை அணிந்து செல்வார்கள். சயாமியர் 1. மாணவர்களைக் குழுவாரியாகப் பிரித்தல். 2. நம்பகமான இணைய மூலத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு குழுவினரும் மலேசியாவின் பிற இனங்களின் தனித்துவமான தகவல்களைத் திரட்டுதல். 3. மாணவர்கள் தங்கள் தரவுகளைப் படைத்தல். தகவல் தொலைத் தொடர்பு தொழில்நுட்பம் (TMK) 21ஆம் நூற்றாண்டுக் ககற்ற்றல் திறறன் செரானியர் ‘கிரியோல்’ (Kreaol) என்பது இரு வெவ்வேறு மொழிக் கலப்பினால் தோன்றும் மொழியாகும். ச�ொற்களஞ்சியம் பஞ்சாபியமொழி சீக்கியர்களின் தாய்மொழி ஆகும். சீக்கிய ஆடவர்கள் முட்டிவரை நீளமான சட்டையும் அதற்கேற்ற காற்சட்டையும் (tahmat/tamba) சர்பானும் அணிவர். சீக்கியப் பெண்கள் சல்வார் கமீஸ் எனப்படும் பஞ்சாபிய ஆடையுடன் துப்பட்டா அல்லது தலைசால்வையும் அணிவர். சீக்கியர் 54
சரவாக்கில் பல்லின மக்கள் வாழ்கின்றனர். அவர்களுள் மெலாயு, பிடாயு, கென்ஞா, கெலாபிட், மெலானாவ், பிசாயா, கெடாயான், காயான், பெனான், லுன் பாவாங் ஆகியோரும் அடங்குவர். பல்வகை இனங்களைக் கொண்ட இச்சமூகத்தினரின் தனித்துவம் மொழி, சமயம், நம்பிக்கை, பாரம்பரிய உடை, தத்தம் கலாச்சாரம் ஆகியவற்றின் வேறுபாடுகளிலிருந்து தெளிவாகக் காணமுடிகிறது. சபாவிலும் பல்லின மக்கள் வாழ்கின்றனர். அவர்களுள் பாஜாவ், பிசாயா, மூருட், கெடாயான், இரானுன், ருங்குஸ், சுலுக், மெலாயு புருணை, ஓராங் சுங்கை ஆகியோரும் அடங்குவர். இவர்களும் மொழி, சமயம், பண்பாடு ஆகியவற்றில் தனித்துவம் பெற்றுள்ளனர். மலேசியாவின் தனித்துவம் பல்லின மக்கள் சகிப்புத் தன்மையுடன் வாழ்வதில் காணப்படுகிறது. மலேசியப் பல்லின மக்களைப் பற்றி அறிவதும் கற்பதும் தகவல்களைப் பகிர்வதும் நாட்டை நேசிக்கும் சமுதாயத்தினரை உருவாக்கும். இனங்களுக்கிடையிலான சகிப்புத் தன்மை, ஒற்றுமையின் அடித்தளம் என ஏன் கூறப்படுகின்றது? 11.1.1 K11.1.6 K11.1.8 சரவாக்கின் பிற இனத்தவர் சபாவின் பிற இனத்தவர் மலேசியாவின் பல்லின மலேசியாவின் பல்லினத்தத்தவரர்களின் த ்களின் தககவலல்களைப் பகிர் ்களைப் பகிர்ந்ந்து கொள்வ ொள்வதன் அவசியத்தை த்தையும் உள்ளுர்ப் பண யும் உள்ளுர்ப் பண்பா்பாட்டின் தனித்துவ ட்டின் தனித்துவத்தை த்தைப் போற் போற்றுவதை தையும் விளங்ளங்கிக்க் கொள்ள ொள்ள மாணவரர்களுக்க்கு வழிககாட்டுதல். ாட்டுதல். ஆசிரியர் குறிப்பு மெலாயு கென்ஞா மெலானாவ் பிடாயு மூருட் ருங்குஸ் பாஜாவ் இரானுன் 55
சுபிட்சமிகு மலேசியா மலாய்ச் சமூகத்தினர் • கிராமம், கடற்கரை, ஆற்றங்கரை ஓரங்களில் வாழ்ந்தனர். • விவசாயம், மீன்பிடி, சிறு வியாபாரம், பொதுச்சேவை துறைகளில் ஈடுபட்டனர். சீனச் சமூகத்தினர் • சிறு பட்டணங்களிலும் நகரங்களிலும் வாழ்ந்தனர். • சுரங்கத் தொழிலாளர்களாகவும் வியாபாரிகளாகவும் வேலை செய்தனர். குடிமக்கள் வசிப்பதற்குப் பொருத்தமான நில அமைப்பை மலேசியா கொண்டுள்ளது. அதிகமான இயற்கை விளைவளம், பல்வகைப் பொருளாதார நடவடிக்கைகள் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்தது. விடுதலைக்கு முன்னர் வேறுபட்ட பொருளாதாரம், தொழில் அடிப்படையில் இருப்பிடம் அமைந்திருந்தது. அன்றும் இன்றும் மலேசிய சமுதாயத்தினரின் குடியிருப்புப் பகுதிககளும் பொ பொருளாதார நடவடிக் ருளாதார நடவடிக்கைககைகளும் அன்று மீன்பிடி நடவடிக்கை ரப்பர் தொழிற்சாலை இந்தியச் சமூகத்தினர் • தோட்டப்புறங்களிலும் புறநகரங்களிலும் வாழ்ந்தனர். • தோட்டத் தொழிலாளர்களாகவும் சிறுவணிகர்களாகவும் துறைமுகத் தொழிலாளர்களாகவும் வேலை செய்தனர். பூர்வக்குடிச் சமூகத்தினர் • பேராக், சிலாங்கூர், கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களின் உள்புறங்களில் வாழ்ந்தனர். • கைவினைப் பொருள்கள் தயாரித்தல், வேட்டையாடுதல், காட்டு வளங்களைத் திரட்டுதல் ஆகியவற்றில் ஈடுபட்டனர். 56
சுதந்திர மலேசிய உருவாக்கத்திற்குப் பின்னர் நம் நாடு மேலும் சுபிட்சம் பெற்று வருகிறது. தலைவர்கள் நாட்டின் மேம்பாட்டிற்காகப் பல்வேறு கொள்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இனங்களின் அடிப்படையிலான பொருளாதார நடவடிக்கைகளைக் களையும் முயற்சிகள் வெற்றி பெற்று வருவதைக் காணமுடிகிறது. சமுதாயத்தில் சகிப்புத்தன்மை வெற்றிகரமாக ஊட்டப்பட்டு அவர்கள் ஒன்றிணைந்து பணியாற்றும் வல்லமையைப் பெற்றிருப்பதுடன் ஒரே வீடமைப்புப் பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். 11.1.2 K11.1.6 இன்று சரவாக் சமூகத்தினர் • பிடாயு, கென்ஞா, கெலாபிட் சமூகத்தினர் உட்புறப்பகுதிகளில் நெல் சாகுபடி செய்தும் காட்டு வளங்களைச் சேகரித்தும் வாழ்ந்தனர். • ஈபான், பிசாயா சமூகத்தினர் ஆற்றுப் பள்ளத்தாக்குக்கு அருகில் விவசாயிகளாக இருந்தனர். • மெலாயு, மெலானாவ், கெடாயான் சமூகத்தினர் கடலோரங்களில் வியாபாரிகளாகவும் படகு செய்பவர்களாகவும் சவ்வரிசி உற்பத்தியாளர்களாகவும் வாழ்ந்தனர். சபா சமூகத்தினர் • மூருட் சமூகத்தினர் உட்புறப்பகுதிகளில் விவசாயிகளாகவும் காட்டு வளங்களைச் சேகரிப்பவர்களாகவும் வாழ்ந்தனர். • பெரும்பாலான கடசான்டூசுன், ருங்குஸ் சமூகத்தினர் உட்புறப்பகுதிகளில் வாழ்ந்தனர். கடசான்டூசுன் இனத்தவர் நெல் பயிரீட்டிலும் ருங்குஸ் இனத்தவர் ஆக்கப்பூர்வமான தொழிற்கலையிலும் புகழ்பெற்று விளங்கினர். • பாஜாவ் இனத்தவர் விவசாயிகளாகவும் மீனவர்களாகவும் தொழில் செய்தனர். • மெலாயு புருணை, இரானும், சுலுக் சமூகத்தினர் கடலோரங்களில் மீனவர்களாகவும் படகு செய்பவர்களாகவும் வியாபாரிகளாகவும் வாழ்ந்தனர். சுயநலத்தைவிட நாட்டின் சுபிட்சமே மிக முக்கியம் என எண்ணும் மக்களின் மனப்பான்மையே ஒற்றுமைமிகு மலேசிய உருவாக்கத்திற்குக் காரணமாகும். மலேசியர்கள் ஒன்றாகவும் சுபிட்சத்துடனும் நன்முறையில் வாழவும் அடையப் பெற்ற பொருளாதார வளப்பம்வழி வழிவகுத்துள்ளது. மலேசிய சமுதாயத்தினரின் அன்றிலிருந்து இன்றுவரையிலுமான குடியிருப்புகளையும் பொருளாதார நடவடிக்கைகளையும் விளங்கிக்கொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல். ஆசிரியர் குறிப்பு 57
இசைக்கருவிகளும் நடனங்களும் பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் கலைகள் ஆகும். நம் நாட்டில் வாழும் பல்லினத்தவர் தங்களுக்கென சிறப்பும் கவர்ச்சியும் மிக்க இசைக்கருவிகளையும் நடனங்களையும் கொண்டுள்ளனர். இந்தப் பாரம்பரியம் நம் நாட்டிற்கே உரிய தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளது. நம் நாட்டு இசைக்கருவிகளும் நடனங்களும் மத்திய கிழக்கு, சீனா, இந்தியா, மலாய்ப் பிரதேசக் கூறுகளைக் கொண்டுள்ளன. இசைக்கருவிகள் உள்நாட்டுப் பண்பாட்டில் இசைக்கருவிகளின் தனித்துவத்தை நாம் ஏன் போற்ற வேண்டும்? அங்குலோங் மூங்கிலால் செய்யப்படுகிறது. அன்சாக் எனப்படும் சட்டகத்தில் பிணைக்கப்படுகிறது. அங்குலோங் (Angklung) கம்போஸ் (Gambus) நஃபிரி (Nafiri) கெடொக் (Geduk) கெடொக் என்பது இரு பக்கம் கொண்ட ஒருவகை மத்தளம் ஆகும். இரண்டு முகப்பகுதிகளும் மாட்டின் தோலைக் கொண்டு நிபோங் கட்டையால் இறுகக் கட்டிப் பிணைக்கப்படுகிறது. கம்போஸ் எனப்படுவது பலா மரக்கட்டை போன்ற உறுதியான கட்டையில் தயாரிக்கப்படுகிறது. நஃபிரி உலோகத்தால், பெரும்பாலும் வெள்ளியால் செய்யப்படுகிறது. குழாய்ப் பகுதி தட்டையாகவும் பூ வடிவ வேலைப்பாடுடனும் மறுசுழற்சிப் பொருள்களான நீர் தயாரிக்கப்படுகிறது. உறிஞ்சி, டின் மற்றும் இயற்கை வளங்களான வாழை இலை, நெல்தண்டு, தென்னங்கீற்று ஆகியவற்றைக் கொண்டு இசைக்கருவியை உருவாக்குக. மலாய்ச் சமூகத்தினர் மூலம்: Nik Mustapha Nik Mohd Salleh, 2009. Alat Muzik Tradisional dalam Masyarakat Malaysia. Kuala Lumpur: Kementerian Penerangan Komunikasi dan Kebudayaan Malaysia. மலேசிய சசமுதாயத்தின் பார முதாயத்தின் பாரம்ப ம்பரிய இசை சைக்கருவி கககளும் நடனங்களும் பெரும்பாலான இசைக்கருவிகள் அவற்றை உருவாக்கியவரின் திறமையைக் காட்டுகின்றன. ஏனெனில், இயற்கை வளங்களும் இயற்கைப் பொருள்களான விலங்குகளின் தோல், தாவரங்கள், கனிமப் பொருள்களும் அவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளன. நடவடிக்கை மலேசிய இனவாரியாக இசைக்கருவிகளை அடையாளங்காண மாணவர்களுக்கு வழிகாட்டுதல். 58 ஆசிரியர் குறிப்பு
போ (Bo) பொற்றாளம் வீணை லியூஃகின் (Liu Qin) லியூஃகின் நரம்பு இசைக்கருவியாகும். கொம்பு அல்லது நெகிழியால் அதன் விசை செய்யப்படுகிறது. பொற்றாளம் வெண்கலத்தால் செய்யப்பட்டதாகும். இரண்டு பக்கமும் மோதப்படும்போது ஓசை எழுகிறது. கெண்டாங் (Gendang) கெண்டாங் இரண்டு தடிக்கோல்களைக் கொண்டு கொட்டும்போது இயங்குகிறது. இஃது உறுதியான கட்டையால் செய்யப்படுகிறது. செருலிங் (Seruling) செருலிங் அல்லது ஜூடி ஒரே மூங்கிலைக் கொண்டு செய்யப்பட்ட கருவி ஆகும். அதில் ஓசை எழுப்ப எட்டுத் துளைகள் உள்ளன. மத்தளம் மத்தளம் ஆட்டுத் தோலால் செய்யப்பட்ட இரு முகம் கொண்ட மேளம் ஆகும். இது கட்டையால் செதுக்கப்பட்டுக் கயிறு கொண்டு பிணைக்கப்பட்டுள்ளது. புல்லாங்குழல் மூங்கிலால் செய்யப்பட்டது ஆகும். ஊதியவாறே மூங்கில் துவாரங்களை விரல்களால் மூடித் திறக்கும் போது ஓசை எழுகிறது. 'ப்போ' எனவும் அழைக்கப்படும் 'போ', வட்டமான ஒரு ஜோடித் தட்டுப் போன்றது ஆகும். பெரும்பாலும் 'போ' வெண்கலத்தால் செய்யப்படுகிறது. வீணை உறுதியான பலா மரக்கட்டையால் செய்யப்பட்டு மேற்பாகம் முழுவதும் அழகுற செதுக்கப்பட்டிருக்கும். ஏழு நரம்புகளைக் கொண்ட இக்கருவியை மீட்டும்போது இசை எழுகிறது. சீனச் சமூகத்தினர் இந்தியச் சமூகத்தினர் புல்லாங்குழல் மூலம்: Pertubuhan Kesenian dan Kebudayaan India Malaysia. 59
சரவாக் சமூகத்தினர் சபா சமூகத்தினர் எங்கெருராய் ஈபானிய சமூகத்தில் பிரசித்தி பெற்றது. மூங்கிலால் செய்யப்பட்ட இக்கருவி உலர்ந்த பூசணியோடு இணைக்கப்படுகின்றது. நம் நாட்டின் பல்லின மக்களிடையே இசைக்கப்பட்டு வரும் பாரம்பரிய இசைக்கருவிகள் வெற்றிகரமாக மிகச் சிறந்த இசைக்கலைப் பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளன. நாட்டின் பாரம்பரியத்தை இட்டுச் செல்லவேண்டிய தலைமுறை என்ற முறையில் நம் நாட்டில் இசைக்கலையின் தனித்துவத்தைப் போற்றுவது அவசியம் ஆகும். சொம்போத்தோன், கடசான்டூசுன் சமூகத்தினரிடையே பிரசித்தி பெற்றது. மூங்கிலால் செய்யப்பட்ட இது மெழுகைக் கொண்டு உலர்ந்த பூசணியில் இணைக்கப்படுகிறது. தொங்குங்கோன், கடசான்டூசுன் சமூகத்தினரிடையே பிரசித்தி பெற்றது. இந்த இசைக்கருவி போரிங் வகை மூங்கில்களால் இருமுனைகளிலும் பிணைக்கப்படுகிறது. ஒரு முக கெண்டாங் இசைக்கருவி ஈபானியர்களிடையே கெதேபோங் என அறியப்படுகிறது. இது பெலியான், தாப்பாங் கட்டைகளால் செய்யப்பட்டது. கெண்டாங்கின் ஒரு பக்கம் ஆட்டுத் தோல் அல்லது மான் தோலால் மூடப்பட்டிருக்கும். எங்கெருமோங் ஈபான், பிடாயு, மெலானாவ் சமூகத்தில் பிரசித்தி பெற்றது. வெண்கலத்தால் செய்யப்பட்ட இது கோங் வகை இசைக்கருவியாகும். எங்கெருராய் (Engkerurai) எங்கெருமோங் (Engkerumong) கெண்டாங் காயான், கெலாபிட், (Gendang) கென்ஞா சமூகத்தினரால் சாபே அதிகமாக இசைக்கப்படுகின்றது. மெராந்தி மரக்கட்டையால் செய்யப்பட்ட சாபே நரம்புகள் இணைக்கப்பட்டு மீட்டும்போது ஓசை எழுகிறது. சாபே (Sape) கூலின்தாங்கான் எனப்படுவது உலோகத்தால் செய்யப்பட்ட சிறு கோங் வகை கருவிகளாகும். இந்த இசைக்கருவியை பாஜாவ், கடசான் சமூகத்தினர் அதிகம் இசைக்கின்றனர். கூலின்தாங்கான் (Kulintangan) சொம்போத்தோன் (Sompoton) தொங்குங்கோன் (Tongkungon) தொந்தொக் என்பது மெர்பாவ் கட்டையால் செய்யப்பட்ட உருளை வடிவ கெண்டாங் ஆகும். ருங்குஸ் சமூகத்தினரிடையே அதிகம் காணப்படும் இந்த இசைக்கருவி சபாவில் உள்ள இனக்குழுவினரிடையே பல்வேறு பெயர்களில் அறியப்படுகின்றது. தொந்தொக் (Tontog) 60
மலேசியச் சமூகத்தினரிடையே பல்வகைப் பாரம்பரிய நடனங்கள் உள்ளன. ஒவ்வோர் இனத்தவரும் படைக்கும் நடனக் கலை அசைவுகளுக்குக் குறிப்பிட்ட பொருளும் நோக்கமும் உள்ளன. பாரம்பரிய நடனங்கள் சாபின் (Zapin) நடனம் மாக்யோங் (Makyung) நடனம் • முன்பு இந்நடனம் ஆண்களால் ஆடப்பட்டது. எனினும், தற்போது ஆண்களும் பெண்களும் இணையராக ஆடுகின்றனர். • கம்பூஸ், கெண்டாங், ரெபானா, மாராகாஸ் ஆகிய முதன்மை இசைக்கருவிகள் இந்நடனத்துடன் சேர்த்து இசைக்கப்படும். • திருமணங்களிலும் விழாக்களிலும் மனமகிழ்வை ஏற்படுத்துவது சாபினின் நோக்கமாகும். • நடனம், இசை, பாடல் ஒன்றிணைந்த நாடகக் கலையாகும். • தாவாக், கோங், கெண்டாங் ஈபு, கெண்டாங் அனாக், சானாங், கெசி, செருனாய், ரெபாப் ஆகியன மாக்யோங் நடனத்துடன் சேர்த்து இசைக்கப்படும் இசைக்கருவிகளாகும். • முன்பு பொதுமக்கள் மாக்யோங் நடனத்தை அரண்மனையிலும் நாட்டின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும் மட்டுமே காணும் வாய்ப்பைப் பெற்றனர். சிங்க நடனம் • இந்நடனம் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம், புதிய கடை திறப்பு விழா, முக்கியப் பிரமுகர்கள் வரவேற்பு ஆகிய நிகழ்ச்சிகளில் படைக்கப்படுகிறது. • போ, கெண்டாங் பெசார், கோங் ஆகியன இந்நடனத்துடன் சேர்த்து இசைக்கப்படும் இசைக்கருவிகளாகும். • நல்லிணக்கம், அமைதி, செழுமை ஆகியவற்றின் அடையாளமாக இந்நடனம் ஆடப்படுகிறது. 61
• தொன்றுதொட்டே இந்தியர்கள் இந்நடனத்தை ஆடி வருகின்றனர். • பிரபஞ்சம் தொடர்பான குறிப்பிட்ட பொருளை இந்நாட்டியத்தின் அங்க அசைவுகள் உணர்த்துகின்றன. • இந்திய சமுதாயப் பண்பாட்டு நிகழ்ச்சிகளின் தொடக்க அங்கமாகப் பரத நாட்டியம் ஆடப்படுகிறது. பரத நாட்டியம் • இந்நடனம் சரவாக்கிலுள்ள ஈபான் இனக்குழுவினருக்குப் போர் முறைகளைக் கற்றுக் கொடுக்கவும் மனமகிழ்விற்காகவும் வழிபாட்டிற்காகவும் கற்பிக்கப்பட்டது. • பேபேன்டாய் (bebendai), கேதேபோங் (ketebong), எங்கெருமோங், தாவாக் (tawak) ஆகியன இதனுடன் சேர்ந்து இசைக்கப்படும் இசைக்கருவிகளாகும். • இந்நடனம் காவாய் திருநாளின்போது, வழிபாட்டிற்காகவும் மனமகிழ்விற்காகவும் ஆடப்படுகிறது. ஙாஜாட் (Ngajat) நடனம் 1. மாணவர்களைக் குழு வாரியாகப் பிரித்தல். 2. ஒவ்வொரு குழுவினரும் மலேசியாவில் காணப்படும் பாரம்பரிய நடனங்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டுதல். 3. கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கொண்டு ஒவ்வொரு குழுவினரும் அந்நடனத்தை ஆடிக் காட்டுவதோடு அதன் சிறப்புகளையும் விளக்க வேண்டும். 4. இறுதியாகப் பல்லின மலேசிய மக்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதலின் முக்கியத்துவத்தை விவரிக்க மாணவர்களைப் பணித்தல். மூலம்: Rohana Sali dan Mohamed Roselan Malek, 1995. Tarian Tradisional. Selangor: Penerbitan Prisma Sdn.Bhd. நடவடிக்கை ப�ோலச் செய்தல் மூலம்: Pertubuhan Kesenian dan Kebudayaan India Malaysia. K11.1.8 62
• இந்நடனத்தைச் சீக்கியச் சமூகத்தினர் ஆடுகின்றனர். • இந்நடனத்தின் முக்கிய இசைக்கருவிகள் டிரம் டோல், ஹைர்மொனிக்கா, பெரிய கட்டை, தம்பரின் ஆகும். • குடும்ப, பொது நிகழ்ச்சிகளில் இந்நடனம் ஆடப்படுகிறது. • இந்நடனம் பூர்வக்குடி சமூகத்தினரின் அடையாளமாகும். பூக்கள், தென்னை ஓலை, பாலாஸ், நிப்பா ஓலை, மரப்பட்டை ஆகியவற்றைச் செவாங் நடனம் ஆடுபவர் தோள்பட்டைத் துணியாக அலங்கரித்துக் கொள்வர். • செந்தோங் மூங்கில், கெண்டாங், கேரேப், பென்சோல், தெதாவாக் போன்ற இசைக்கருவிகள் இந்நடனத்தில் பயன்படுத்தப்படும். • வழிபாடு, மருத்துவம், பொது நிகழ்ச்சிகளில் இந்நடனம் ஆடப்படும். செவாங் (Sewang) நடனம் இன்று பாரம்பரிய நடனங்கள் மலேசிய சமுதாயத்தினரிடையே நல்லுறவை ஊட்டுகின்றன. இன்றைய சந்ததியினர் தனித்துவமிக்க உள்ளூர்ப் பண்பாட்டில் பெருமை கொள்வதோடு இப்பாரம்பரியத்தைப் பறைச்சாற்றி நம் இன மாண்பினை உலக அளவில் மணம் கமழச் செய்ய வேண்டும். 11.1.3 K11.1.7 • இந்நடனம் சபாவில் கடசான்டூசுன் இனத்தவரால் ஆடப்படுகிறது. இந்நடனம் கடசான் இனத்தவரால் சுமாசாவ் எனவும் டூசுன் இனத்தவரால் சுமாயாவ் எனவும் அறியப்படுகிறது. • இந்நடனத்துடன் இணைந்து வரும் முக்கிய இசைக்கருவி கோங் ஆகும். • இந்நடனம் நெல் உணர்வை மதிக்கும் வகையில் படைக்கப்படுகிறது. கெஅமாத்தான் விழாவை முன்னிட்டும் படைக்கப்படும் நிகழ்ச்சியாகும். சுமாசாவ் (Sumazau) நடனம் மலேசிய சமுதாயத்தினரிடம் காணப்படும் இசைக்கருவிகளையும் நடனங்களையும் அறிந்து கொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல். ஆசிரியர் குறிப்பு பங்ரா (Bhangra) நடனம் 63
பாரம்பரிய விளையாட்டுகளில் தாழ்வார விளையாட்டு, தள விளையாட்டு, திறந்தவெளி விளையாட்டு ஆகியன அடங்கும். இவ்விளையாட்டுகளைச் சிறுவர்களும் முதியவர்களும் தனியாகவோ குழுவாகவோ விளையாடுவர். ஒத்துழைப்பு, ஆக்கச் சிந்தனை, ஆரோக்கியப் போட்டியாற்றல் ஆகியவற்றைப் பாரம்பரிய விளையாட்டுகள் நம் நாட்டின் பல்லின சமுதாயத்தில் வளர்க்கின்றன. நம் நாட்டுப் பாரம்பரிய விளையாட்டுகள் மத்திய கிழக்கு, சீனா, இந்தியா, மலாய்ப் பிரதேசக் கூறுகளைக் கொண்டுள்ளன. தாழ்வார விளையாட்டு • இணையர் விளையாட்டான இதில் விளையாட்டாளர்கள் பல்லாங்குழி என்று அழைக்கப்படும் பலகையில் வரிசைக்கிரமமாகக் காயைக் (கோலி) கொண்டு குழியை நிரப்ப வேண்டும். • முந்தைய காலத்தில் குழிகள் மண்ணில் தோண்டப்பட்டு நொய்வ விதை அல்லது சிறு கற்கள் காய்களாகப் பயன்படுத்தப்பட்டன. பல்லாங்குழி • குறைந்தபட்சம் இருவரை உள்ளடக்கிய இவ்விளையாட்டு பெரும்பாலும் பெண்களால் விளையாடப்படும். இவ்விளையாட்டில் ஐந்து அல்லது ஏழு சிறு கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. • எல்லாக் கற்களையும் புறங்கையில் வைத்துக் கொண்டு மேல் நோக்கி எறிய வேண்டும். பின்னர் அவற்றை மீண்டும் உள்ளங்கையில் பிடிக்க வேண்டும். அவ்வாறு உள்ளங்கையில் பெறப்பட்ட கற்களின் எண்ணிக்கை, புள்ளிகளாகக் கணக்கிடப்படுகிறது. • கல்லாங்காய் விளையாட்டு 'செலாம்புட்' எனவும் 'பத்து தூஜோ' எனவும் அறியப்படுகிறது. கல்லாங்காய் (Batu Seremban) மூலம்: Syed Mahadzir, 2009. Permainan Tradisi Rakyat (Siri Khazanah Budaya). Kuala Lumpur: E1 Publication Sdn. Bhd. மலேசிய சசமுதாயத்தினரின் பார முதாயத்தினரின் பாரம்ப ம்பரிய விளைளையாட்டுககள் கோ(Go) அல்லது வெய்கி(Weiqi) • பலகை விளையாட்டான இஃது இணையராகக் கருப்புக் காய்களையும் வெள்ளைக் காய்களையும் கொண்டு விளையாடப்படுகிறது. • விளையாட்டாளர்கள் வியூகங்களைத் திட்டமிட்டு எதிரியின் பெரும் பகுதியை ஆக்கிரமிப்பர். 64
பல்லாங்குழி, கல்லாங்காய், கபடி, தாதிங் லாவி, எய்தல், மூங்கில் துப்பாக்கி, பிரம்புப் பந்து, கெதின்திங், டின்கள் வீசுதல், கெத்துக் கெலி ஆகியன நாட்டின் தேசியப் பாரம்பரியம் ஆகும். • இவ்விளையாட்டைத் தனிநபராக விளையாடலாம். • கயிற்றில் பிணைக்கப்பட்ட ஒரு யோயோ தேவை. அதன் கைப்பிடிகளைக் கையில் பிடித்துக் கொள்ள வேண்டும். யோயோ கயிற்றில் சுழலவும் கீழே விழாமல் தடுப்பதற்கும் கைத்தடி பயன்படுகிறது. விளையாட்டாளர்கள் பல்வேறு நிலைகளில் தத்தம் திறமைக்கேற்பச் செயல்பட முடியும். யோயோ சீனா (Yoyo Cina) அல்லது டியாபோலோ (Diabolo) • இவ்விளையாட்டு பாம்பும் ஏணியும் விளையாட்டு போன்று இருவர் முதல் நால்வர் வரை விளையாடக்கூடியது. விளையாட்டாளர் உருட்டப்படும் சோழிகளின் எண்களுக்கு ஏற்ப நகர வேண்டும். • இறுதிக் கட்டத்தை விரைவாகச் சென்றடையும் விளையாட்டாளர்களைப் பொறுத்தே வெற்றி அமையும். பரமபதம் அல்லது தாயம் சதுரங்கம் • இஃது இணையர் விளையாட்டாகும். இவ்விளையாட்டு ஒரு போர் போன்ற படை பலத்தைக் காட்டும். • எதிரியை ஆக்கிரமித்தல் அல்லது குறிப்பாக அரசரைத் தோற்கடித்தல் இவ்வாட்டத்தில் வெற்றியைக் குறிக்கும். உங்களுக்குத் தெரியுமா பாரம்பரிய விளையாட்டுகள் என்னை வருடுக 65
தள விளையாட்டு • இது சீனச் சமூகத்தினரின் பாரம்பரிய விளையாட்டு. மலாய்ச் சமூகத்தினர் இவ்விளையாட்டைத் தாத்திங் லாவி என அழைக்கின்றனர். இன்று இவ்விளையாட்டை எல்லா இனத்தவரும் விளையாடுகின்றனர். • விளையாட்டாளர் மூன்று அல்லது நான்கு கோழி இறகுகளை நொய்வ அல்லது தடிப்பான அட்டைகளுடன் இணைத்துக் கட்டுவர். காலால் அதிக முறை தட்டுதல் அடிப்படையில் வெற்றி கணக்கிடப்படுகிறது. சாப் தே (Chap Teh) • இவ்விளையாட்டு, இந்தியச் சமூகத்தினரின் தள விளையாட்டாகும். இரு குழுக்கள் விளையாடும் இவ்விளையாட்டில் ஒரு குழுவில் எழுவர் இடம் பெறுவர். • எதிரணி விளையாட்டாளரைத் தொடத் தம் அணியிலிருந்து தாக்குதல் விளையாட்டாளரை அனுப்ப வேண்டும். தொடப்படும் விளையாட்டாளர் ஆட்டத்திலிருந்து விலக்கப்பட்டு எதிரணிக்குப் புள்ளிகள் வழங்கப்படும். கபடி பிரம்புப் பந்து (Sepak Raga) • இவ்விளையாட்டு மலாக்கா மலாய் மன்னராட்சி காலந்தொட்டே விளையாடப்படுகிறது. இன்று எல்லா இனத்தவராலும் குழு முறையில் விளையாடப்படுகிறது. • இவ்விளையாட்டு ஓர் ஆட்டக்காரர் பிரம்புப் பந்தை மற்றோர் ஆட்டக்காரருக்குக் கையால் வீசுவதிலிருந்து தொடங்குகிறது. பந்தைப் பெறுபவர் பல முறை கால்களில் தாங்கி, மற்றொரு விளையாட்டாளரிடம் உதைப்பர். இவ்வாறு சுழல் முறையில் பந்தைக் கீழே விழாமல் தற்காப்பர். 66
திறந்தவெளி விளையாட்டு நம் சமுதாயத்தினரின் திறமையையும் ஆக்கச் சிந்தனையையும் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகளில் அறிய முடிகிறது. சகிப்புத்தன்மை, ஒற்றுமை ஆகியவற்றின் வாயிலாக உள்ளூர்ப் பண்பாட்டின் தனித்துவத்தைப் பேணும் மலேசியக் குடிமக்களை உருவாக்க முடியும். 11.1.4 K11.1.6 வாவ் (Wau) • வாவ் பட்டம் விடுதல் வழக்கமாக அறுவடைக்குப் பின்னர் விளையாடப்படும். வாவ் பட்டத்தை இருவர் விளையாடுவர். ஒருவர் பட்டத்தினைப் பிடிக்க மற்றொருவர் அதன் நூலைப் பிடித்திருப்பார். • காற்று வீசும்போது நூலைக் காற்றின் எதிர்ப் புறமாக இழுத்து மெல்ல நூலை விட்டும் இழுத்தும் பட்டம் உயர எழும்பச் செய்யப்படுகிறது. • தீபாவ் விளையாட்டைச் சரவாக்கின் மெலானாவ் சமூகத்தினர் கவுள் விழாவின் (Pesta Kaul) போது விளையாடுவர். • மூங்கில் அல்லது அத்தாப்பு மரத்தண்டு கொண்டு பிரமீடு வடிவத்தில் அடுக்கடுக்காகத் தீபாவ் அமைக்கப்பட்டிருக்கும். இதன் நுனிப்பகுதி பிரம்பைக் கொண்டு சங்கிலித் தொடராக ஊஞ்சலைப் போன்று தொங்கவிடப்பட்டிருக்கும். தீபாவ் ஊசலாட முடியாத நிலையை அடையும்வரை விளையாட்டாளர்கள் சுழல் முறையில் குதிப்பர். தீபாவ் (Tibau) • இவ்விளையாட்டுப் பெரும்பாலும் சபா, கோத்தா பெலுட்டில் பொது நிகழ்ச்சிகளின்போது விளையாடப்படுகிறது. • பரிசுப் பெட்டி உயரமான கம்பத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும். விளையாட்டாளர்கள் வட்டமாக நின்று அப்பெட்டியை விழச் செய்ய வேண்டும். அப்பெட்டியினுள் பணம், உணவு அல்லது கவர்ச்சியான பொருள்கள் பரிசாக வைக்கப்பட்டிருக்கும். சேப்பாக் மங்கிஸ் (Sepak Manggis) பம்பரம் (Gasing) • இவ்விளையாட்டுப் பம்பரம் சுழற்றுதல் (gasing uri), பம்பரம் அடித்தல் (gasing pangkah) என இருவகையில் விளையாடப்படும். • பம்பர விளையாட்டில் கயிற்றைச் சுற்றிக் கட்டுதல், பம்பரத்தைச் சுற்றிக் கட்டுதல், பம்பரத்தைச் சுழற்றுதல், வெட்டுதல், பம்பரத்தை எடுத்தல் எனப் பல படிநிலைகள் உள்ளன. மிக நீண்ட நேரம் சுழலும் பம்பரத்தின் வாயிலாக விளையாட்டாளரின் திறன் சோதிக்கப்படுகிறது. மலேசிய சமுதாயத்தில் காணப்படும் பாரம்பரிய விளையாட்டுகளை அறிய மாணவர்களுக்கு வழிகாட்டுதல். ஆசிரியர் குறிப்பு 67
உண்மைதான் டாமியா. சீக்கிரம் பாட்டி, எங்களுக்குக் காத்திருக்கப் பொறுமை இல்லை. இன்று, பாட்டி உங்களுக்குச் சீ லுன்சாயும் சுரக்காய்களும் கதையைக் கூறப் போகிறேன். மேலும், பாட்டி உங்களுக்குச் சபாவின் நுனுக் ராகாங் பழங்கதையையும் சரவாக்கின் சந்துபோங் இளவரசி பழங்கதையையும் கூறப் போகிறேன். நாட்டுப்புறக் கதைகள் என்பது முந்தைய காலம் தொட்டே சமுதாயத்தில் தோன்றி வளர்ந்த கதைகள் ஆகும். ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு இக்கதைகள் செவிவழிக் கதைகளாகக் கூறப்படுகின்றன. இக்கதைகளுக்குத் தனி உரிமை இல்லாததால், அனைவருக்கும் இது பொதுவுடைமையாகி விட்டது. நாட்டுப்புறக் கதைகள் அறிவுரை, படிப்பினை தருவதோடு மனமகிழ்வையும் கொடுக்கின்றன. நாட்டுப்புறக் கதைகளைக் கேட்பதன் பயன் என்ன? நாட்டுப்புறக் கதைகள் என்றால் என்ன? எனக்குத் தெரிந்தவரை நாட்டுப்புறக் கதைகள் எனப்படுவன பழங்கதை, கட்டுக்கதை, நகைச்சுவைக் கதை, விலங்குகள் கதை, காப்பியக் கதை போன்றவை ஆகும். மலேசிய சசமுதாயத்தின் உள்ளூர்த் த முதாயத்தின் உள்ளூர்த் தனன்மைமை கொண்ட கொண்ட நாட்டுப்புறக் கதைகள் விரைந்து பதிலளி 68
அரசரின் ஏவலாளிகள் நீண்ட நேரம் துடுப்புச் செலுத்திய பின்னர், “நீங்கள் துடுப்புச் செலுத்துவது பார்த்து எனக்குப் பரிதாபமாக உள்ளது. நீங்கள் விருப்பப்பட்டால் உங்கள் களைப்பு நீங்க பாடலொன்று கற்றுத் தருகிறேன்", என்று சீ லுன்சாய் கூறினான். சீ லுன்சாயின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது, எனினும், சீ லுன்சாய் பாடத் தொடங்கினான். “சீ லுன்சாய் சுரைக்காய்களுடன் குதிக்கிறான். விட்டுவிடு! விட்டுவிடு!” அரசரின் ஏவாலாளியும் பிறரும் இப்பாடலில் ஈடுபாடு கொண்டு, பாடத் தொடங்குகின்றனர். “சீ லுன்சாய் சுரக்காய்களுடன் குதிக்கிறான். விட்டுவிடு! விட்டுவிடு!” இப்படியே பல முறை மீண்டும் மீண்டும் பாடியதால் அவர்கள் அலட்சியம் ஆகின்றனர். அரசர்களையும் பெருந்தலைவர்களையும் கேலி செய்ததற்காக அரசரால் தண்டனை விதிக்கப்பட்டதிலிருந்து சீ லுன்சாய் கதை தொடங்குகிறது. அரசரின் ஏவலாளிகள் சீ லுன்சாயை ஒரு சாக்குப் பையில் வைத்துப் படகில் ஏற்றி நடுக்கடலை நோக்கிச் செல்கின்றனர். சாக்கின் உள்ளிருந்து சீ லுன்சாய் படகில் சில சுரைக்காய்கள் இருப்பதைக் காண்கிறான். சீ லுன்சாயும் சுரைக்காய்களும் (Si Luncai dengan Labu-labunya) மேற்காணும் கதையை வாசித்திடுக. 1. சீ லுன்சாயிடம் காணப்பட்ட சிறப்புகள் யாவை? 2. சீ லுன்சாயின் பண்போடு தொடர்புடைய பழமொழியைக் குறிப்பிடுக. 3. இக்கதையிலிருந்து பெறும் படிப்பினையை விவரிக்கவும். 1 2 3 அவர்களின் அலட்சியத்தைப் பார்த்து, சீ லுன்சாய் சாக்கிலிருந்து வெளியேறி, அச்சாக்கினுள் சில சுரைக்காய்களை நிரப்பினான், இரண்டு சுரைக்காய்களை மட்டும் எடுத்துக்கொண்டு படகிலிருந்து குதித்து அதனைக் கொண்டு நீந்திச் செல்கிறான். நடுக்கடல் சென்றடைந்ததும் அரச ஏவலாளிகள் சீ லுன்சாய் பத்திரமாகக் கரையை அடைந்தது தெரியாமல், சாக்கினுள் இருப்பதாக எண்ணி, சுரைக்காய்கள் கொண்ட அச்சாக்கினைக் கடலில் வீசுகின்றனர். 4 நடவடிக்கை பனுவல் ஆய்வு மூலம்: Othman Puteh dan Aripin Said, 2010. Himpunan 366 Cerita Rakyat Malaysia. Kuala Lumpur: Utusan Publications & Distributors. 69
சந்துபோங் இளவரசி சிறப்பாக நெசவு நெய்யவும், செஜின்ஜாங் இளவரசி திறமையாக நெல் குத்தவும் அறிந்திருந்தனர். அவர்கள் அக்கிராமத்தை வளப்பமுறச் செய்தனர். சந்துபோங் இளவரசியும் செஜின்ஜாங் இளவரசியும் பாசிர் கூனிங் (Pasir Kuning), பாசிர் பூத்தே (Pasir Putih) ஆகிய இரண்டு அண்டை கிராமங்களுக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்த விண்ணிலிருந்து பூமிக்குத் தோன்றியவர்கள். தங்களுக்கிடையே சண்டையிடக் கூடாது எனவும் அதை மீறினால் தகுந்த விளைவைச் சந்திக்க வேண்டி வரும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தனர். சரவாக்கில் சந்துபோங் சங் புத்ரி (Santubong Sang Puteri) எனும் பழங்கதை உள்ளது. சந்துபோங் இளவரசியிடமும் செஜின்ஜாங் இளவரசியிடமும் காணப்பட்ட திறமைகள் யாவை? விரைந்து பதிலளி மூலம்: Othman Puteh dan Aripin Said, 2010. Himpunan 366 Cerita Rakyat Malaysia. Kuala Lumpur: Utusan Publications & Distributors. 70
இதனிடையே இருவரும் மாத்தாங்கைச் (Matang) சேர்ந்த செராபி இளவரசரை (Putera Serapi) விரும்பினர். இதனால், இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் பின் வாங்க விரும்பவில்லை. செஜின்ஜாங் இளவரசி, விரைந்து நெல் குத்தும் உலக்கையை வீச அது சந்துபோங் இளவரசியின் கன்னத்தில் பட்டுவிட்டது. சந்துபோங் இளவரசியும் பதிலுக்கு நூல் நெய்யும் கட்டையால் குத்த அது செஜின்ஜாங் இளவரசியின் தலையில் பட்டது. 1. மாணவர்கள் வட்டத்தில் இருத்தல். 2. ஒரு நிமிடத்தில் ஒரு பந்தை ஒருவர் மற்றொருவருக்குச் சுழல் முறையில் அனுப்புதல். 3. ஒரு நிமிடத்திற்குப் பின்னர் பந்தை இறுதியாக வைத்திருக்கும் மாணவன் தனக்குத் தெரிந்த நாட்டுப்புறக் கதையைக் கூற வேண்டும். ஒரு கதை முடிந்ததும் விளையாட்டை மீண்டும் தொடருதல். இந்த விதி மீறலால் இடி இடித்தது; மின்னல் மின்னியது. அதே நேரத்தில் வானில் ஒளி தோன்றி இரண்டு இளவரசிகளும் மலைகளாக உருமாறினர். சந்துபோங் இளவரசி மீது உலக்கை பட்டதால், சந்துபோங் மலையின் விளிம்பு சற்றுத் தெறித்தும் ஒரு பகுதி சிதைந்தும் காணப்படுகிறது. நூல் நெய்யும் கட்டையால் குத்தப்பட்டுச் செஜின்ஜாங் இளவரசியின் தலை உடைந்து சிதறிப் பூலாவ் கெரா (Pulau Kera) , பூலாவ் சாத்தாங் (Pulau Satang), பூலாவ் தாலாங் தாலாங் (Pulau Talang-talang) என ஆகியது. சுழற்சி நேரம் (Circle Time) 21ஆம் நூற்றாண்டுக் ககற்ற்றல் திறறன் 71
அந்தக் கோழி இறக்கைகளை அசைக்கும் இடத்திலெல்லாம் விழுந்த மக்கள் ஆங்காங்கே தங்கள் குடியிருப்பை அமைத்துக் கொண்டனர். இறுதியில் மக்கள் பிரிந்து தங்களுக்கென வட்டார மொழிகளை உருவாக்கிக் கொண்டனர். நாட்டுப்புறக் கதைகளின் சிறப்பு நம் நாட்டின் பல்வகைப் பண்பாட்டைப் பிரதிபலிக்கின்றது. அடுத்த தலைமுறைக்காக நாட்டுப்புறக் கதைகளின் பாரம்பரியத்தைத் தற்காக்க வேண்டும். 11.1.5 சபா, தம்புனானில் நுனுக் ராகாங் பழங்கதை பல்லினத்தவர் தோன்றியதைக் குறிப்பிடுகிறது. இக்கதை சுங்கை லீவாகு (Sungai Liwagu) சமூகத்தினர் நுனுக் மரத்தடியில் ஓய்வெடுப்பதிலிருந்து தொடங்குகிறது. ஒரு நாள் தங்க நிறக் கொண்டையுடைய ராட்சதத் சிவப்புக் கோழி அவ்விடத்திற்கு வந்தது. அக்கம்பத்து மக்கள் கூட்டங் கூட்டமாக அதன் இறக்கைகள் மீது ஏறி அமர்ந்து அதனுடன் சேர்ந்து பறந்தனர். சபாவில் நுனுக் ராகாங் (Nunuk Ragang) எனும் பழங்கதை உள்ளது. நாட்டுப்புறக் கதைகளைப் புரிந்துகொண்டு அதனைப் படிப்பினையாகக் கொள்ளுமாறு மாணவர்களுக்கு வழிகாட்டுதல். ஆசிரியர் குறிப்பு மூலம்: Jacqueline Pugh-Kitingan dan Cifford Sather. “Storytelling in Sabah and Sarawak” dlm. GhulamSarwar Yousof, 2004. Performing Arts dalam Encyclopedia of Malaysia. Kuala Lumpur: Didier Millet. ச�ொற்களஞ்சியம் நுனுக் ராகாங் எனப்படுவது ஒரு வகை சிவப்பு ஆரா மரம் ஆகும். 72
மலேசியாவில் பல்வகை இனத்தினர்: • மலாய்க்காரர் • சீனர் • இந்தியர் • ஈபானியர் • கடசான்டூசுன் • பூர்வக் குடியினர் • பாபா ஞ�ோஞா • செட்டி • சீக்கியர் • சயாமியர் மலேசிய சமுதாயத்தில் காணப்படும் இசைக்கருவிகளும் பாரம்பரிய நடனமும். • மாக்யோங் நடனம், சாப்பின் நடனம், சிங்க நடனம், பரதநாட்டியம், ஙாஜாட் நடனம், சுமாசாவ் நடனம், செவாங் நடனம், பங்ரா நடனம் ஆகியன பாரம்பரிய நடனங்கள் ஆகும். அன்றும் இன்றும் மலேசிய சமுதாயக் குடியிருப்புகளும் பொருளாதார நடவடிக்கைகளும். மலேசிய சமுதாயத்தின் பாரம்பரிய விளையாட்டுகள் • தாழ்வார விளையாட்டு • தள விளையாட்டு • திறந்தவெளி விளையாட்டு மலேசிய சமுதாயத்தின் உள்ளூர்த் தன்மை கொண்ட நாட்டுப்புறக் கதைகள். • சீ லுன்சாயும் சுரைக்காய்களும் • சந்துபோங் சங் புத்ரி இளவரசி பழங்கதை • நுனுக் ராகாங் பழங்கதை - மலாய்க்காரர் (அங்குலோங், கம்பூஸ், நஃபிரீ, கெடொக்) - சீனர் (கெண்டாங், போ, லியூஃகின், செருலிங்) - இந்தியர் (புல்லாங்குழல், பொற்றாளம், மிருதங்கம், வீணை) • அன்று - குடியிருப்புப் பொருளாதார நடவடிக்கை இனவாரியாக வேறுபட்டிருந்தது. • இன்று - பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஏற்பக் குடியிருப்பு வேறுபடவில்லை. இந்த அலகு நம் நாட்டின் இனங்களிடையே காணப்படும் தொழில், குடியிருப்பு, இசைக்கருவி, நடனம், விளையாட்டு, நாட்டுப்புறக் கதைகள் ஆகியவற்றை விவரிக்கின்றது. இந்த அலகை விளங்கிக்கொள்வதன்வழி இனங்களுக்கிடையே மதிக்கும் மனப்பான்மையும் ஒற்றுமை உணர்வும் மேம்படும். தொடர்ந்து அடுத்த அலகு நம் நாட்டின் பல்லின மக்களின் சமயம், நம்பிக்கை ஆகியவற்றின் தனித்துவத்தை விவரிக்கின்றது. - சரவாக்கில் உள்ள சமூகத்தினர் (சாபே, எங்கெருராய், எங்கெருமோங், கெண்டாங்) - சபாவில் உள்ள சமூகத்தினர் (கூலின்தாங்கான், சொம்போத்தோன், தொங்குங்கான், தொந்தொக்) • இசைக்கருவிகள் மீட்டுணர்வோம் • செரானி • சரவாக்கின் பிற சமூகத்தினர் • சபாவின் பிற சமூகத்தினர் 73
1. படங்களில் காணப்படும் பாரம்பரிய விளையாட்டுகளைப் பெயரிடுக. (i) _______________ (ii) _______________ (iii) _______________ (iv) _______________ 2. அடுத்த தலைமுறைக்குப் பாரம்பரிய விளையாட்டுகளை நிலைநிறுத்தும் வழிமுறையைப் பரிந்துரை செய்க. _______________ அ கீழ்க்காணும் படங்களின் அடிப்படையில் கேள்விகளுக்குப் பதிலளி: ஆ மேற்காணும் படம் நம் நாட்டின் பாரம்பரிய நடனத்தைக் காட்டுகின்றது. 1. நடனத்தைப் பெயரிடுக. _______________ 2. நண்பருடன் சேர்ந்து படிமுறைகளுக்கு ஏற்ப இந்த நடன உத்தியைக் கற்றிடுக. 3. நம் நாட்டில் உனக்குத் தெரிந்த வேறு பாரம்பரிய நடனங்கள் யாவை? _______________ (i) (ii) (iii) (iv) சிந்தித்துப் பதிலளி சிந்தித்துப் பதிலளி என்னை வருடுக 74
நம் நாட்டின் இனப் பல்வகையை அவர்களின் பொருளாதார நடவடிக்கைகள், குடியிருப்புகள், இசைக்கருவிகள், நடனங்கள், விளையாட்டுகள், நாட்டுப்புறக் கதைகள் ஆகியவற்றிலிருந்து அறிய முடிகிறது. நம் நாட்டின் அனைத்து இனத்தவரின் பண்பாடு, சடங்கு ஆகியவற்றை மேலும், நேசிக்க இது வழிவகுக்கிறது. நாடு நற்பண்பும் நன்னெறியும் கொண்ட குடிமகனால் நாட்டின் பெயர் உலக அரங்கில் போற்றப்படும். தனிநபர் மலேசியர்கள் என்ற முறையில் நாம் பிற இனத்தவரின் சடங்குகளையும் பண்பாட்டையும் அறிவதோடு மதிக்கவும் வேண்டும். சமுதாயம் பிற இனத்தவரின் சடங்கு, பண்பாட்டையும் மதிப்பதன் வாயிலாக நற்பண்பு மிக்கச் சமுதாயத்தை உருவாக்கிட இயலும். நாட்டைடை நேநேசிப்போ ப்போம் 75
5 மலேசியாவில் பல்வகைச் சமயமும் நம்பிக்கையும் உள்ளன. இந்த அலகு சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பல்வகைச் சமயம், நம்பிக்கைகளை விவரிப்பதோடு கூட்டரசு அரசியலமைப்பில் இஸ்லாமிய சமயத்தின் நிலையையும் குறிப்பிடுகிறது. பிற சமயங்களின் நிலையும் கூட்டரசு அரசியலமைப்பில் குறிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர்த்து இந்த அலகு மலேசியாவில் காணப்படும் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான தகவல்களையும் வழங்குகிறது. புத்ரா பள்ளிவாசல், புத்ராஜெயா தலைப்பு 11: நாம் மலேசிய மக்கள் அலகு சாரம் சமயமும் நம்பிக்கையும் 76
1 மலேசியாவில் பல்வேறு சமயங்கள், நம்பிக்கைகள் பற்றிய அடிப்படை வரலாற்றுக் கூறுகளை விளங்கிக் கொள்ளல். 2 கூட்டரசு அரசியலமைப்பில் இஸ்லாம், பிற சமயங்கள் நிலையைப் பற்றிய பொருள் விளக்கம் செய்தல். 3 மலேசியாவில் எல்லாச் சமயங்களின் வழிபாட்டுத்தலங்கள் தொடர்பாக நம்பகமான சான்றுகளை ஆராய்தல். 1 மலேசியாவில் காணப்படும் பல்வேறு சமயங்களும் நம்பிக்கைகளும். 2 கூட்டரசு சமயமாக இஸ்லாமிய சமயத்தின் நிலை. 3 கூட்டரசு அரசியலமைப்பில் பிற சமயங்களின் நிலை. 4 மலேசிய வழிபாட்டுத் தலங்களின் பெயர்கள். தோக்கோங் போ ஆன் கியோங், கங்கார், பெர்லிஸ். (Tokong Poh Aun Keong, Kangar, Perlis.) • மதித்தல் • அன்புடைமை முருகன் திருத்தலம் பத்துமலை, சிலாங்கூர் செயிண்ட் கேத்தேடிரல் தேவாலயம், சரவாக், கூச்சிங். (Gereja St. Thomas’s Cathedral, Kuching, Sarawak.) நீங்க்கள் ககற்க்கப் ப�ோோவது என்ன? வது என்ன? AKPS அடிப்படப்படை வரலாற்ற்றுச் சிந்த றுச் சிந்தனைனைத் திறன்ன் குடியியல் நெறி 77
மலேசியா பல்லின மக்களைக் கொண்டிருப்பதால் தனித்துவமிக்க நாடாகத் திகழ்கிறது. அத்தோடு மலேசியர்கள் பல்வேறு சமயங்களையும் நம்பிக்கைகளையும் கடைப்பிடித்து வருகின்றனர். மலேசியாவில் இஸ்லாம், கிறிஸ்து, பௌத்தம், இந்து, சீக்கியம் எனப் பல்வேறு சமயங்கள் உள்ளன. அத்தோடு கன்பூசியஸ், த ௌ போதனைகளும் உள்ளன. ஆட்சியாளர், வணிகர், சமயக்குழுவினர் எனப் பல்வேறு வழிகளில் இச்சமயங்கள் பரவின. இஸ்லாமிய சமயம் வாழ்க்கையின் எல்லாக் கூறுகளையும் உள்ளடக்கியது. இஸ்லாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்கள் 'அல்லாவை' மட்டுமே வழிபடுவர். இஸ்லாம் கோட்பாடு (Rukun Islam), இமான் கோட்பாடு (Rukun Iman) என இரண்டு நிலை நம்பிக்கைகளைக் கொண்டுள்ளது. இஸ்லாமிய போதனை அல்குர்ஆன், ஹதிஸ் (Hadis) அடிப்படையில் அமைந்துள்ளது. கிறிஸ்துவ சமயத்தைக் கொண்டு வந்தவர் இயேசு கிறிஸ்து (Jesus Christ) என்று கிறிஸ்துவர்கள் நம்புகின்றனர். இச்சமயத்தைப் பின்பற்றுபவர்களுக்கு தேவாலயங்களில் சமய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் சிறப்பு நாளாக ஞாயிற்றுக்கிழமை ஒதுக்கப்பட்டுள்ளது. இச்சமயத்தின் புனித மறை பைபிள் ஆகும். மலேசியாவில் சமயம் ஹதிஸ் எனப்படுவது நபிகள் நாயகம் அவர்களின் பேச்சு, நடவடிக்கை, தனி வாழ்க்கையைப் பற்றி அவரது நண்பர்கள் வழி அறிந்தது ஆகும். கிறிஸ்துவ சமயம் மலேசியாவில் சமயமும் நம்பிக்கையும் இஸ்லாமிய சமயம் சொற்களஞ்சியம் இஸ்லாமிய, கிறிஸ்துவ புனித மறைகளைக் குறிப்பிடுக. விரைந்து பதிலளி மலேசியாவில் காணப்படும் சமயப் போதனைகள், நம்பிக்கைகள் பற்றி விளங்கிக்கொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல். ஆசிரியர் குறிப்பு அல்குர்ஆன் மறை (Kitab al-Quran) பைபிள் மறை (Kitab Bible) 78
இச்சமயத்தைப் பின்பற்றுபவர்கள் சித்தார்த்த கௌதமர் உருவாக்கிய போதனைகளை அமல்படுத்துகின்றனர். இவர் புத்தர் என அறியப்படுகின்றார். புத்தரின் போதனை நான்கு மேன்மையான உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது. இவற்றை அடைய எட்டு அடுக்குப் பாதை வழி அடையாளம் காணலாம் எனப் பௌத்தர்கள் நம்புகின்றனர். புத்த மதத்தினரின் புனித மறை திபிதாகா. சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்தவர் குருநானாக் (Guru Nanak) ஆவார். பஞ்சாபியர்கள் இச்சமயத்தைப் பின்பற்றுபவர்கள். இச்சமயத்தின் பாரம்பரியமும் போதனையும் பஞ்சாபிய வரலாறு, சமூகம், பண்பாடு சார்ந்ததாகும். சீக்கிய சமயத்தினர் வாஹேகுரு (Waheguru) ஒருவரே கடவுள் என நம்புகிறார்கள். சீக்கிய சமுதாயத்தினரின் புனிதமறை குரு கிராந்த் சாஹிப் ஆகும். இச்சமயத்தைப் பின்பற்றுபவர்கள் வாழும்போது மனிதர்களின் நடத்தைக்கும் மறுபிறப்பிற்கும் தொடர்புடைய கர்மாவை நம்புகின்றனர். இந்துக்களின் மூல நூல் வேதம் என அழைக்கப்படுகிறது. கர்மா என்றால் என்ன? 1. பல குழுவை அமைத்திடுக. 2. புனித மறையின் படத்தைக் கூர்ந்து கவனித்திடுக. 3. மலேசிய சமுதாயத்தினரால் கடைப்பிடிக்கப்படும் எல்லாச் சமயங்களிலும் காணப்படும் போதனைகள் தொடர்பான தகவல்களைத் திரட்டுக. 4. குழு முறையில் கலந்துரையாடுக. ப�ௌத்த சமயம் இந்து சமயம் சீக்கிய சமயம் மூலம்: Mohd Rosmizi Abdul Rahman, 2011. Agama-Agama di Dunia. Bandar Baru Nilai: Penerbit Universiti Sains Islam Malaysia. பட ஆய்வு 21ஆம் நூற்றாண்டுக் ககற்ற்றல் திறறன் விரைந்து பதிலளி திபிதாகா மறை (Kitab Tipitaka) வேதம் (Kitab Veda) புனித குரு கிராந்த் சாஹிப் மறை (Kitab Sri Guru Granth Sahib) 79
கன்பூசியஸ் போதனையைத் தோற்றுவித்தவர் குங் பூ சீ (Kung Fu Tze) ஆவார். கன்பூசியஸைப் பின்பற்றுபவர்கள் அதன் போதனைகள் உயரிய நன்னெறிக் கோட்பாடுகள், மனிதாபிமானம், ஒழுக்கம், பெற்றோர்களிடத்தில் பற்றைக் கொண்டிருப்பதை வலியுறுத்துவதாக நம்புகின்றனர். கன்பூசியஸ் போதனைகள் அனலேக் நூலில் அடங்கியுள்ளன. த ௌ போதனைகளை உருவாக்கியவர் லவ் சூ (Lao Tzu). த ௌ போதனைகளைப் பின்பற்றுபவர்கள் பிரபஞ்சத்துடன் கூடிய நல்லிணக்கமிகு வாழ்க்கை முக்கியம் என நம்புகிறார்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் த ௌ எனும் வாழ்க்கை நெறி முடிவு செய்கிறது. த ௌ போதனைகள் த ௌ தி ஷிங் எனும் நூலில் அடங்கியுள்ளன. நம் வாழ்க்கையில் சமயம் ஏன் முக்கியமானதாகக் கருதப்படுகிறது? த ௌ தி ஷிங் நூல் (Buku Tao Te Ching) ககன்பூசியஸ் ன்பூசியஸ் பப�ோதன ோதனை ததௌ பப�ோதன ோதனை அனலேக் நூல் (Buku Analek) மூலம்: Cheu Hock Tong, 1988. Chinese Beliefs and Practice in South East Asia. Subang Jaya: Pelanduk Publication (M) Sdn.Bhd. குழு வாரியாக, வாழ்க்கையோடு சமய வழக்கு, நம்பிக்கையின் முக்கியத்துவத்தைத் தொடர்புபடுத்துக. கிடைக்கப் பெற்ற தரவுகளை ஆக்கச் சிந்தனையுடன் படைத்திடுக. நடவடிக்கை கன்பூசியஸ் போதனையில் வலியுறுத்தப்படும் நன்னெறிக் கோட்பாடுகள் யாவை? விரைந்து பதிலளி 11.2.1 K11.2.6 80
• தெமியார், செமாய் பூர்வக்குடி இனக்குழுவினர் தீய ஆன்மாக்களை விரட்ட வழிபாடு நடத்துகின்றனர். மலேசியாவின் ஒரு பகுதியினர் தத்தம் நம்பிக்கைகளைப் பின்பற்றுகின்றனர். அவர்களின் நம்பிக்கை இயற்கையைச் சார்ந்து உள்ளது. இந்நம்பிக்கை அனிமிஸ்மா (animisme) என அறியப்படுகிறது. இச்சமூகத்தினர் குகை, மரம் அல்லது பெரிய பாறை போன்றவற்றில் மதிக்கத்தக்க முன்னோர்களின் ஆவி உள்ளதாக நம்புகின்றனர். மலேசிய சமுதாயத்தினரின் நம்பிக்கைகள் • பூர்வக்குடியினர் தீய ஆன்மாக்களால் நோய் ஏற்படுகிறது என நம்புகின்றனர். பூலாவ் கேரி பூர்வக்குடி இனக்குழுவினர் கடற்கரை வழிபாடு செய்வதன் நோக்கம் என்ன? • பூலாவ் கேரியைச் சேர்ந்த, 'மா மேரி' (Mah Meri) பூர்வக்குடி இனக்குழுவினர் பாதுகாப்பிற்காகவும் மன்னிப்புக் கோரவும் கடற்கரை வழிபாடு செய்கின்றனர். மூலம்: Jasiman Ahmad dan Rosnah Ramli, 1997. Siri Kebudayaan Masyarakat Malaysia: Masyarakat Orang Asli. Melaka: Associated Educational Distributors (M) Sdn. Bhd. விரைந்து பதிலளி தீபகற்ப மலேசியாவின் பூர்வக்குடியினரின் நம்பிக்கைகள் மா மேரி பூர்வக்குடி இனக்குழுவினர் கடற்கரை வழிபாடு. மூலம்: Astro Awani. 81
சரவாக், சபா சமூகத்தினரின் நம்பிக்கைகள் மீரிங் (Miring) சடங்கு நடத்தப்படுகிறது. மூலம்: Utusan Borneo. பிசாயா சமூகத்தினர் எதற்காக தமரொக் வழிபாட்டை நடத்துகின்றனர்? விரைந்து பதிலளி பிசாயா இனத்தினர் நடத்தும் தமரொக் (Tamarok) வழிபாடு. விவசாயியாகப் பணிபுரியும் பிசாயா சமூகத்தினர் அமானுஷ்ய சக்தியை நம்புகின்றனர். • புதிய விவசாயப் பகுதியைத் திறக்கும் முன் அமானுஷ்ய சக்தியின் இடையூறுகளைத் தவிர்க்க ஜம்பி மந்திரம் ஓதப்படுகிறது. • அமானுஷ்ய சக்தியை நோயாளியின் உடலிலிருந்து விரட்டுவதற்கு அவர்கள் தமரொக் வழிபாட்டை மேற்கொள்கின்றனர். மூலம்: Persatuan Bisaya, Sarawak. ஈபானியச் சமூகத்தினரில் சிலர் பெதாரா (Petara / கடவுள்) எல்லா அறிகுறிகளையும் முன் கூட்டியே கனவிலும் எண்ணத்திலும் காட்டுவதாக நம்புகின்றனர். • மீரிங் சடங்கு போன்று பல்வேறு முறைகளில் பெதாரா (கடவுள்) வழிபடப்படுகிறது. • மந்திரங்களை ஓதுவதிலிருந்து மீரிங் சடங்கு தொடங்குகிறது. • மீரிங் சடங்கை லெமாம்பாங் (Lemambang) எனும் ஓதுவார் நடத்துவார். 82
மலேசியர்கள் பின்பற்றும் எல்லாச் சமயங்களும் எப்போதும் நல்லவற்றையே செய்யக் கற்பிக்கின்றன. பிற இனத்தவரின் சமயப் பண்பாட்டைப் புரிந்தும் மதித்தும் நடப்பதால் அமைதியும் சுபிட்சமும் உறுதிசெய்யப்படுகிறது. மேலும், சமுதாயம் அன்றாட வாழ்க்கையில் சமய நம்பிக்கைகளின் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்வது அவசியமாகும். சபாவில் கெஅமாத்தான் விழாவின்போது மாகாவாவ் (Maga'au) சடங்கு. மூலம்: Kadazandusun Cultural Association. மலேசியாவில் காணப்படும் பல்வகையான நம்பிக்கைகளை விளங்கிக்கொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல். ஆசிரியர் குறிப்பு ஙெடுவாங் (Ngeduang) சடங்கு மூலம்: Nandra Hitong, Penyelidik Masyarakat Bajau. 11.2.1 ஙெடுவாங் சடங்கை மேற்கொள்ளும் பாஜாவ் சமூகத்தினர் இன்றும் உள்ளனர். • இச்சடங்கின்போது இறந்தவரின் குடும்பத்தினர் வருகையாளர்களுக்கு உணவளிப்பர். சபாவின் மேற்குக் கரை பகுதியில் (கோத்தா பெலுட்) இச்சடங்கு நடத்தப்படுகிறது. • கிழக்குக் கரையில் அமைந்துள்ள செம்பூர்ணா தீவில் பாஜாவ் சமூகத்தினர் மகோம்போ (Mag'ombo) சடங்கை மேற்கொள்கின்றனர். • ஆசியும் நல்வாழ்வும் பெற்றிட முன்னோர்களின் ஆன்மாவை மதிக்கும் வண்ணம் மகோம்போ சடங்கை நடத்துகின்றனர். கடசான்டூசுன் சமூகத்தினர் கினோரோஹிங்கானை நம்புகின்றனர். • பாதுகாப்பும் அடைக்கலமும் வேண்டக் கூடிய கடவுளாகக் கினோரோஹிங்கான் (Kinorohingan) திகழ்கிறார். • மாகாவாவ் (மாகாவ்) சடங்கு வாயிலாக அவர்கள் நெல் விளைச்சலுக்குக் காரணமான சக்தியை நம்புகின்றனர். • இச்சடங்கிற்குப் போபோஹிஜான் (Bobohizan) எனும் மாந்திரீகத் தலைவர் தலைமையேற்கிறார். 83
கூட்டரசு அரசியலமைப்பு 3(1)இன் உள்ளடக்கத்தைக் குறிப்பிடுக. விரைந்து பதிலளி கூட்டரசு சமயமாக இஸ்லாமிய சமயத்தின் நிலையை எல்லா இனத்தவரும் ஏற்றுக் கொண்டனர். புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் நிலைநிறுத்த நாம் இந்த அரசியலமைப்பின் விதிகளை மதிக்க வேண்டும். மூலம்: Perlembagaan Persekutuan. அரசியலமைப்பில் இஸ்லாமிய சமயம் கூட்டரசு அரசியலமைப்பில் இஸ்லாமிய சமயத்தின் நிலையை விளங்கிக்கொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல். ஆசிரியர் குறிப்பு பல்வேறு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் மலாயா அரசியலமைப்பு ஆணையம் 1957க்குக் (Suruhanjaya Perlembagaan Tanah Melayu 1957) கோரிக்கை மனு அனுப்பியதன்வழி இஸ்லாமிய சமயம் கூட்டரசின் அதிகாரப்பூர்வ சமயமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இஸ்லாமிய சமயம் கூட்டரசு சமயமாக அங்கீகரிக்கப்பட்டு அதன் நிலை கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 3இல் (Perkara 3, Perlembagaan Persekutuan) நிலைநிறுத்தப்பட்டது. கூட்டரசு அரசியலமைப்பில் இஸ்லாமிய சமயத்தின் நிலை தொடர்பான மாற்றங்களுக்கு மாட்சிமை தாங்கிய மாமன்னரும் மலாய் அரசர்களும் ஒப்புதல் தர வேண்டும். 11.2.2 Islam ialah agama bagi Persekutuan tetapi agama lain boleh diamalkan dengan aman dan damai di mana-mana bahagian Persekutuan. Di dalam tiap-tiap negeri selain negeri-negeri yang tidak mempunyai Raja, kedudukan Raja sebagai Ketua Agama Islam di negerinya ... Perlembagaan negeri Melaka, Pulau Pinang, Sabah dan Sarawak memperuntukkan kedudukan Yang di-Pertuan Agong sebagai Ketua Agama Islam di negeri itu. ... Yang di-Pertuan Agong menjadi Ketua Agama Islam Wilayah Persekutuan Kuala Lumpur, Labuan dan Putrajaya. Perkara 3 (1) Perkara 3 (2) Perkara 3 (3) Perkara 3 (5) கூட்டரசு அரசியலமைப்பு 84
11.2.3 K11.2.7 கூட்டரசு அரசியலமைப்பில் பிற சமயங்களை அமைதியுடனும் பாதுகாப்புடனும் பின்பற்ற முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தத்தம் சமயங்களையும் நம்பிக்கைகளையும் பின்பற்றும் உரிமையைப் பெற்றுள்ளனர். கூட்டரசு அரசியலமைப்பின்படி சமய சுதந்திரம் பிற இனத்தவரைப் புரிந்துகொண்டு மதித்து வாழும் சமுதாயத்தை உருவாக்குகிறது. நாம் மலேசியாவில் சமயங்களை அமல்படுத்துவதன் அவசியத்தை உய்த்துணர்ந்து மதித்தல் வேண்டும். மூலம்: Perlembagaan Persekutuan. அரசியலமை லமைப்பில் பி ப்பில் பிறற சமயங்க்களின் நிலைலை கூட்டரசு அரசியலமைப்பில் பிற சமயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல். ஆசிரியர் குறிப்பு பிரிவு 3, பிரிவு 11 கூட்டரசு அரசியலமைப்பு என்னை வருடுக பல்லின சமயத்தையும் நம்பிக்கைகளையும் மதிப்பது ஒற்றுமையை ஏற்படுத்தும். கலந்துரையாடுக. Perkara 11 (1) Perkara 11 (3) (a) Tiap-tiap orang berhak menganuti dan mengamalkan agamanya dan tertakluk pada fasal (4) mengembangkannya. Tiap-tiap kumpulan agama berhak– (a) menguruskan hal ehwal agamanya sendiri;... கூட்டரசு அரசியலமைப்பு 85
ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் வழிபாட்டுத் தலங்களைக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு வழிபாட்டுத் தலமும் தத்தம் சமயங்களுக்கு ஏற்பக் குறிப்பிட்ட தன்மைகளை அடையாளமாகக் கொண்டுள்ளன. வழிபாட்டுத் தலங்களின் கட்டடக் கலைகள் பல்வேறு வடிவங்களையும் பிரதிபலிப்பையும் கொண்டுள்ளன. வழிபாட்டுத் தலங்கள் சமய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடங்களாக விளங்குகின்றன. பள்ளிவாசல் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமாகும். • 1963ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இது 27 ஆகஸ்ட்டு 1965ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. • இதன் கட்டடக்கலை நவீனம், இஸ்லாம், உள்ளூர்த் தன்மைகளைக் கொண்டதாகும். • இங்கு ஒரே நேரத்தில் 15 ஆயிரம் பேர் தொழுகைக்குக் கூடும் வசதி உள்ளது. • தேசியப் பள்ளிவாசல் நிர்மாணிப்பு, மலேசியாவின் அதிகாரப்பூர்வ சமயமான இஸ்லாத்தின் மேன்மையைக் காட்டுகிறது. • 18ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டது. • மலாய்ப் பிராந்தியத்தில் மிகப் பழமையான பள்ளிவாசலில் ஒன்று. • இது கம்போங் நீலாம் பூரி, கோத்தா பாரு, கிளந்தானில் அமைந்துள்ளது. • இக்கட்டடக்கலை மலாய்ப் பிராந்தியத்தின் கூறுகளைக் கொண்டுள்ளது. தேசியப் பள்ளிவாசல், கோலாலம்பூர். (Masjid Negara, Kuala Lumpur). கம்போங் லாவுட் பள்ளிவாசல், கிளந்தான். (Masjid Kampung Laut, Kelantan). ) கம்போங் லாவுட் பள்ளிவாசல், கிளந்தான் தேசியப் பள்ளிவாசல், கோலாலம்பூர் இஸ்லாமிய சமயத்தினரின் வழிபாட்டுத் தலம் மலேசியப் பள்ளிவாசல்கள். மலேசியாவில் வழி மலேசியாவில் வழிபபாட்டுத்த் தலதலங்க்கள் என்னை வருடுக 86
• 1645ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. • செங் ஹூன் தெங் என்ற பெயர் பச்சை மேக வசிப்பிடம் எனும் பொருள் கொண்டதாகும். • பௌத்த, த ௌ சமயத்தைப் பின்பற்றுபவர்கள், இத்தலத்தை வழிபாடுகளுக்குப் பயன்படுத்துகின்றனர். தோக்கோங் செங் ஹூன் தெங், மலாக்கா கிறிஸ்துவர்களின் வழிபாட்டுத் தலம் தேவாலயம் எனப்படுகிறது. பெளத்த வழிபாட்டுத் தலங்கள் வாட் அல்லது தெள எனவும், கன்பூசியஸ் சமய வழிபாட்டுத் தலங்கள் தோக்கோங் எனவும் அழைக்கப்படுகின்றன. • 1830ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. • சரவாக், சிபுவில் அமைந்துள்ளது. • இதனை நிர்மாணித்தவர் சுமத்திராவின் சமயப் போதகர், துவான் ஹஜி சாலாம் மீனாங்காபாவ் (Tuan Haji Salam Minangkabau) ஆவார். • இஃது இந்தோனேசியா மத்திய ஜாவாவில் அமைந்துள்ள அகோங் டெமாக் பள்ளிவாசலின் (Masjid Agung Demak) வடிவமைப்பைக் கொண்டது. • 1893ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. • சபாவின் மிகப் பழமையான தேவாலயம். • மலேசியாவின் மிகப் பழமையான கருங்கல் தேவாலயம் ஆகும். • சபா, சண்டாகானில் அமைந்துள்ளது. • 1932ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. • கெடா, பெர்லிஸில் உள்ள சயாமிய சமூகத்தினருக்கான வழிபாட்டுத் தலம் ஆகும். • கெடாவின் மிகப் பெரிய வாட்களில் ஒன்று. • கெடா, குபாங் பாசு, கோடியாங்கில் (Kodiang) அமைந்துள்ளது. அல் காடிம் பள்ளிவாசல், சிபு, சரவாக் (Masjid Al-Qadim, Sibu, Sarawak). மூலம்: Utusan Borneo. செயிண்ட் மைக்கல் தேவாலயம் (Gereja St. Michael), சண்டாகான், சபா. வாட் பூன்யாராம் (Wat Boonyaram), பாடாங் சேரா, கெடா. தோக்கோங் செங் ஹூன் தெங் (Tokong Cheng Hoon Teng), ஹங்துவா ஜெயா, மலாக்கா. அல் காடிம் பள்ளிவாசல், சரவாக் செயிண்ட் மைக்கல் தேவாலயம், சபா வாட் பூன்யாராம், பாடாங் சேரா, கெடா கிறிஸ்துவர்கள் வழிபாட்டுத் தலம் பௌத்தம், கன்பூசியஸ், தௌ வழிபாட்டுத் தலங்கள் மூலம்: Hood Salleh, 2006. Peoples and Traditions: The Encyclopedia of Malaysia. Kuala Lumpur: Editions Didier Millet. 87
சமய வழிபாட்டுத் தலங்கள் அவற்றைப் பின்பற்றுபவர்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கியப் பங்காற்றுகின்றன. மலேசியக் குடிமகன் எனும் வகையில் வழிபாட்டுத் தலங்களில் இருக்கும்போது நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுவதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்துக்களின் வழிபாட்டுத் தலம் கோயில் எனப்படுகிறது. சீக்கியர்களின் வழிபாட்டுத் தலம் குர்துவாரா எனப்படுகிறது. இந்துக்களின் வழிபாட்டுத் தலம் சீக்கியர்களின் வழிபாட்டுத் தலம் • 1922ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. • ஜொகூர் பாரு, ஜாலான் தெப்ராவில் அமைந்துள்ளது. • 1996ஆம் ஆண்டு, கண்ணாடிகளைக் கொண்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. • இது மலேசியாவின் ஒரே முதல் கண்ணாடிக் கோயிலாக மலேசியச் சாதனைப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. • 1901ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. • இதன் இயற்பெயர் சீக்கிய டைமண்ட் ஜூப்லி டெம்பள் (Diamond Jubilee Sikh Temple) ஆகும். • இஃது அடிப்படையில் 'மூர்' கட்டடக்கலையும் நவீன அமைப்பும் கொண்டதாகும். • இந்தக் குர்துவாரா கட்டடம் பாரம்பரியத் தலமாகத் தேசியப் பாரம்பரியச் சட்டத்தின்கீழ் உள்ளது. அருள்மிகு ராஜகாளியம்மன் திருக்கோயில், ஜொகூர். வட்டா குர்துவாரா சாஹிப், பினாங்கு அருள்மிகு ராஜகாளியம்மன் திருக்கோயில், ஜொகூர் பாரு, ஜொகூர். வட்டா குர்துவாரா சாஹிப் (Wadda Gurdwara Sahib), பினாங்கு, ஜார்ஜ்டவுன். வழிபாட்டுத் தலங்களில் இருக்கும்போது நாம் ஏன் நெறிமுறைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்? 11.2.4 K11.2.5 'மூர்' கட்டக்கலை என்பது வட ஆப்பிரிக்கா, போர்த்துகீஸ், ஸ்பெயின் நாடுகளின் இணைப்புக் கட்டடக்கலை ஆகும். மலேசிய வழிபாட்டுத் தலங்களின் தகவல்கள். வழிபாட்டுத் தலங்களில் இருக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளை விளங்கிக்கொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல். ஆசிரியர் குறிப்பு சொற்களஞ்சியம் என்னை வருடுக 88
இந்த அலகு மலேசியர்களின் சமயங்கள், நம்பிக்கைகள் பற்றிய ஒரு புரிதலை வழங்குகிறது. இந்த அறிதல் மாணவர்கள் அடுத்த அலகில் பயில உள்ள மலேசியர்களின் விழாக்கள் பற்றி அறியத் துணைபுரியும். மலேசியாவில் சமயமும் நம்பிக்கையும் மலேசியாவில் வழிபாட்டுத் தலங்கள் • இஸ்லாம், கிறிஸ்து, பௌத்தம், இந்து, சீக்கியம், கன்பூசியஸ், த ௌ போதனைகள். • தீபகற்ப மலேசியாவின் பூர்வக்குடியினரின் நம்பிக்கைகள். • சரவாக், சபா சமுதாயத்தினரின் நம்பிக்கைகள். அரசியலமைப்பில் இஸ்லாமிய சமயம் • பிரிவு 3 (1) • பிரிவு 3 (2) • பிரிவு 3 (3) • பிரிவு 3 (5) அரசியலமைப்பில் பிற சமயங்களின் நிலை • பிரிவு 11 (1) • பிரிவு 11 (3) a மீட்டுணர்வோம் • இஸ்லாம் - பள்ளிவாசல் • கிறிஸ்துவம் - தேவாலயம் • பௌத்தம் - தோக்கோங், வாட் கன்பூசியஸ், த ௌ - தோக்கோங் • இந்து - கோயில் • சீக்கியம் - குர்துவாரா 89
அ காலியான இடங்களைச் சரியான பதிலைக் கொண்டு நிறைவு செய்க. ஆ வழிபாட்டுத் தலங்களின் பெயர்களை எழுதுக: 1. இஸ்லாமியர்களின் மறை ______________________ எனப்படும் . 2. சீக்கிய சமயம் ______________ போதனையின் அடிப்படையில் ஆனது. 3. கடசான்டூசுன் சமூகத்தினர் ______________ எனும் கடவுளிடம் பாதுகாப்பையும் அடைக்கலத்தையும் வேண்ட முடியும் என நம்புகின்றனர். 4. ____________ கூட்டரசு பிரதேச இஸ்லாமிய சமயத்தின் தலைவர் ஆவார். 5. சயாமிய சமூகத்தினரின் வழிபாட்டுத் தலம் ______________________ என அழைக்கப்படுகிறது. அல்குர்ஆன் குருநானாக் கினோரோஹிங்கான் மாட்சிமை தாங்கிய மாமன்னர் வாட் சிந்தித்துப் பதிலளி சிந்தித்துப் பதிலளி என்னை வருடுக 90
தனிநபர் நாம் எப்போதும் சமயப் போதனைகளைப் பின்பற்றுபவர்களாக இருப்பதன் மூலம் நல்லதொரு சகிப்புத்தன்மை கொண்ட நபராக விளங்க முடியும். சமுதாயம் சகிப்புத்தன்மை கொண்ட தனிநபர்களே நல்லிணக்கமிக்க சமுதாயத்தை உருவாக்க முடியும். நாடு நல்லிணக்கமிகு சமுதாயமே நாட்டின் சுபிட்சத்திற்கு வித்திடும். நாட்டைடை நேேசிப்ப்போோம் தேசியப் பள்ளிவாசல், கோலாலம்பூர். எல்லாச் சமயமும் அவற்றைப் பின்பற்றுபவர்களை நல்ல உள்ளமும் பரிவும் மரியாதையும் கொண்டுள்ளவர்களாக இருக்கவே கோருகிறது. வாழ்வில் அமைதியையும் பாதுகாப்பையும் போற்றவே சமயம் மனிதர்களுக்குக் கற்பிக்கின்றது. 91
மலேசியாவின் சிறப்பைப் பல்லின மக்கள், பண்டிகைகளின்வழி அறிய முடியும். இந்த அலகு மலேசிய மக்களின் முக்கியப் பண்டிகைகளையும் அவற்றைக் கொண்டாடப்படுவதன் ந�ோக்கத்தையும் விவரிக்கின்றது. மேலும், அன்று தொட்டு இன்று வரை பண்டிகைகள் கொண்டாடப்படும் முறைகளையும் இந்த அலகு விளக்குகின்றது. 6 தலைப்பு 11: நாம் மலேசிய மக்கள் அலகு சாரம் மலேசிய மக்களின் பண்டிகைகள் 92
1 மலேசியாவின் பல்வகை பண்டிகைகளின் சான்றுகளைத் தேடுதல். 2 மலேசியாவில் பண்டிகைகள் கொண்டாடப்படுவதன் காரணங்களை ஆராய்தல். 3 அன்றும் இன்றும் பண்டிகைகள் கொண்டாடும் முறையில் வேறுபாட்டைத் தேடுதல். • மகிழ்ச்சி • அன்புடைமை 1 மலேசிய மக்களின் முக்கியப் பண்டிகைகள். 2 மலேசியாவில் பண்டிகைகள் கொண்டாடுவதன் ந�ோக்கம். 3 அன்றும் இன்றும் பண்டிகைகள் கொண்டாடப்படும் முறை. மலேசியாவில் முக்கியப் பண்டிகைகள் நீங்கள் ககற்கப் போ போவது எனன்ன? AKPS அடிப்படப்படை வரலாற்ற்றுச் சிந்த றுச் சிந்தனைனைத் திறன் த் திறன் குடியியல் நெறி என்னை வருடுக 93