The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

TAMIL CHARAL 2018 IPG IPOH

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by eelan_12, 2020-03-30 11:03:57

TAMIL CHARAL

TAMIL CHARAL 2018 IPG IPOH

Keywords: TAMIL

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

தமிழ் ஆய்வியல் பிரிவின்
நடவடிக்கைகள்

51

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

தமிழ் ஆய்வியல் பிரிவின்
நடவடிக்கைகள்

52

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

முகத்திரை

கண்களில் ஈரத்துடனும் பாரமான மனதுடனும் அன்று நண்பர்களையெல்லாம் சந்தித்து
விட்டு விமலா தன் கல்லூரியின் தங்கும் விடுதிக்குள் நுழைந்தாள். அந்தச் சம்பவம்
நிகழ்ந்ததிலிருந்து அறை த�ோழியான சுந்தரி அறைக்குள் வந்து தங்குவது இல்லை.
தனிமையே விமலாவைச் சூழ்ந்து க�ொண்டு இருந்தது. “இன்னிக்கி நா ஒரு முடிவு
எடுத்தே ஆகனும். எனக்கு வேற வழி தெரிலே” என்று தனக்குள் பேசியவாறே
அறைக்குள் புகுந்த அவள் தன் கைத்தொலைபேசியை எடுத்துக் க�ொண்டு தங்கும்
விடுதியின் கட்டடத்தின் மேல் விரைந்தாள். அங்குச் சென்ற அவள் கட்டடத்தின் சுவரில்
மேல் ஏறிக் கண்களை அழுத்தமாக மூடிக் க�ொண்டாள்.

சில வினாடிகள் கழித்து, கண்களைத் திறந்து பார்த்தாள். கட்டடத்தின் உயரம்
அவள் கால்களைக் கூசச் செய்தன. அப்படி இருந்தும் என்ன பயன், அவள் வாழ்க்கையில்
நடந்த அந்தச் சம்பவம் அவளுடைய மனத்தையே கூசுகிறதே! அவள் கட்டடத்தின்
கீழே ந�ோக்கியவாறு தான் கல்லூரிக்கு வந்த முதல் நாளை நினைத்துப் பார்த்தாள்.
மனத்தில் நிறைந்த சந்தோசங்களுடன் அவளின் பெற்றோர் அவளை முதலாம் ஆண்டு
மாணவியை வகுப்பில் சேர்ப்பது ப�ோல் கல்லூரியில் நிறைய கனவுகளுடன் க�ொண்டு
வந்து சேர்த்தனர். அன்று அவளின் அப்பா கூறிய வார்த்தை அவளின் நினைவுக்கு
எட்டியது, “ டிகிரிய�ோட முடிக்காமே எப்படியாவது மாஸ்டர் முடிச்சுரு” என்று கூறியது
இன்று அவளின் நெஞ்சில் வேல் பாய்ச்சுவது ப�ோல் இருந்தது இரண்டு வாரத்திற்கு
முன்பு, விமலா ஈப்போ ஆசிரியர் கல்விக் கழகத்தில் ஆறாம் பருவத்தில் தன் காலடியை
எடுத்து வைத்தாள். கடந்த எல்லாப் பருவம் ப�ோல் இந்தப் பருவமும் நிறைய
கனவுகள�ோடும் சிறந்த தேர்ச்சி அடைய வேண்டும் என்றும் சமுதாயத்திற்கு நல்ல ஒரு
மனிதனாகத் திகழ வேண்டும் என்ற இலட்சியம் அவளின் வாழ்க்கையில் முக்கியமான
ஒன்றாகத் திகழ்ந்தது.

அன்று அவளின் இரண்டாவது பயிற்றுப்பணிக்கான பள்ளியின் பெயர், அறிவிப்புப்
பலகையில் ஒட்டப்பட்டிருந்தது. அவள் தன் பள்ளியை அறிந்தவுடன் முதலில் தன்
பெற்றோருக்குத் த�ொடர்பு க�ொண்டாள். “ அம்மா காடி என்னாச்சு, 'பிரட்டிகம்'
(பயிற்றுப்பணி) எடத்தவேற ச�ொல்லிட்டாங்க” என்றாள். அவளின் தாயும் “அதெல்லாம்
கவல படாத அப்பா பார்த்துக்குவாறு நீ படிக்கிற வேலையைக் கவனி” என்றார். “ம்மா
இப்பவே பாருங்க, கடைசி நேரத்திலே இல்லன்னு ச�ொல்லாதீங்க” என்று சற்று
அதட்டலான குரலில் தன் தாயிடம் கூறினாள். தன் தாயும் மகளின் சிந்தனையை
மாற்றுவதற்கு வேறு கதைகளைப் பேசத் த�ொடங்கினார்.

“ஒய், மேடம் என்ன பன்னுறிங்கே?” என்று கேட்டவாறே அவளின் கல்லூரியின்
நெருங்கிய த�ோழி மாலா அழைத்தாள். “இல்ல மாலா அம்மாகிட்டே ப�ோன் பேசிகிட்டு
இருக்கேன்” என்று கூறினாள். “சரி பேசிகிட்டு வா உன்கிட்டே ஒரு முக்கியமான
விசயம் பேசுனும்” அது என்ன செய்தி என்று அறிவதற்கு விமலா தன் தாயிடம், “சரிமா,
நான் அப்புறம் 'ப�ோன் பண்ணுறேன்” என்று கூறி மாலாவைப் பின்தொடர்ந்தாள். அவள்
பின்னே வருவது அறியாமல் மாலா சற்றுப் பதற்றமாக இருந்தாள். “மாலா!” என்று

53

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

விமலா அழைத்தவுடன் மாலா திடுக்கிட்டவாறே, “ஆ...ஆ.. அது ..அது வந்து என்னா
னா....” என்று தயங்கினாள்.

“ஏன், என்னாச்சு?” என்று விசயத்தை அறிவதற்கு ஆர்வமாக இருந்தால் விமலா.

“இல்லடா, அன்றைக்குச் சுந்தரி விளையாட்டாக எடுத்த உன்னோட புகைப்படம்.....”
என்று ச�ொல்லி முடிப்பதற்குள். “ஆமா நான்தான் அதே முன்பே டிலிட் பண்ணச்
ச�ொன்னனே!” என்று சற்றுப் பதற்றமான குரலில் கேட்டாள். “ சரி, நீ டென்ஷன்
ஆவாம கேளு..” என்று சற்று மெல்லிய குரலில் கூறினாள் மாலா. “சரி வேகமாகச்

ச�ொல்”, என்றாள் விமலா. “இல்லடா.. அந்தப் புகைப்படம்
இன்று முகநூலில் பரவிக் க�ொண்டிருக்கிறது”. என்று
சற்றுக் கண் கலங்கியவாறே விமலாவிடம் கூறினாள்.
இதைக் கேட்ட விமலா என்ன செய்வது அறியாது
திகைத்தாள். அதிர்ச்சியில் அவளுக்குக் கண்களில் நீர் கூட
வரவேயில்லை. மேலும், விபரங்களை மாலா விமலாவிடம்
தெரிவித்தாள். இதையெல்லாம் கேட்ட விமலாவின்
கண்களில் கண்ணீர் ச�ொரிந்தது. சற்றுத் தயங்கியவாறே
“இப்ப என்னடா பண்ணுறது?” என்று தன் நெருங்கிய
த�ோழியான மாலாவிடம் கேட்டாள்.

“வா, சென்று சுந்தரியைப் பார்க்கலாம்” என்று கூறி
விமலாவை அழைத்துச் சென்றாள். அங்குச் சென்று,
சுந்தரியைக் கண்டவுடன் விமலா வேகமான குரலில், “அன்றைக்கு உள்ள படத்தை நீ
ஏன் அழிக்கவில்லை?” என்று கேட்க, சுந்தரிக்கு ஒன்னும் தெரியாதது ப�ோல் அவளை
உற்று ந�ோக்கினாள். “பிறகு இது எப்படி வெளிவந்தது” என்று மாலா தன் கைப்பேசியில்
உள்ள முகநூலின் வாயிலாக வெளிவந்த படத்தைச் சுந்தரியிடம் காட்டினாள். அதைக்
கண்ட சுந்தரி சற்றுத் தயக்கத்துடன், “விமலா, என்ன மன்னிச்சிரு, எனக்குத் தெரியாமலே
யார�ோ என்னோட கைத்தொலைபேசிய பயன்படுத்தி இப்படிச் செஞ்சிருக்காங்க.”
என்றாள் சற்றுத் தயங்கியவாறு. இப்படியெல்லாம் நடக்க அரை மணி கழித்து, விமலாவின்
வீட்டிலிருந்து அழைப்பு வந்தது, அந்த அழைப்பை எடுப்பதற்கு அவள் சற்றுத் தயங்கினாள்.
வேறு வழியில்லாமல் அந்த அழைப்பை எடுத்துப் பேசினாள். ஆனால், இந்த முறை
அவளின் தாய�ோ அல்லது தந்தைய�ோ அழைக்கவில்லை மாறாக அவளின் அக்கா
த�ொலைபேசியில் பேசினாள். “என்ன விமலா இதெல்லாம்” என்று கூறியவாறே
விமாலாவின் பதிலுக்காகக் காத்திருந்தாள். சில வினாடிகள் கழித்து, “ எனக்கே
அறியாமல் நடந்தது அக்கா” என்று அழுது க�ொண்டே பேசினாள். “செய்றதுல்லாம்
செஞ்சிட்டு இப்போ ஏன் அழுகுற,” என்று கூறியவுடன் வீட்டில் உள்ள அனைவரின்
சிந்தனையை அவளால் யூகிக்க முடிந்தது.

யாரும் விமலாவின் மீது நம்பிக்கை வைக்கவில்லை. “சரி நாங்கள் எல்லாம்
சற்று நேரத்தில் அங்கு வருவ�ோம்” என்று கூறித் தன் அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
தன்னுடைய குடும்பமே அங்கு வருவதை எண்ணிச் சற்றுப் பதற்றமாக இருந்தாள்.

54

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

இரண்டு மணி நேரம் கழித்து, அவளுடைய பெற்றோர் உட்பட அத்தை, மாமா,
பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, அண்ணன், தம்பி என்று அனைவரும்
வந்திருந்தனர். விமலாவை நலம் விசாரிப்பதற்குக்கூட இவர்கள் அனைவரும் ஒன்று
கூடி வந்ததேயில்லை. ஆனால், இந்த விசயத்தை அறிந்தவுடன் விமலாவின் பெற்றோருக்கு
ஆறுதல் கூறவும் விமலாவைப் பார்த்துக் கண்டிப்பதற்கும் அங்கு எல்லோரும்
வந்திருந்தனர். அங்கு அனைவரும் அவரவர் பங்கிற்குத் தங்களின் கருத்தை எடுத்து
உரைத்தனர். யாரும் விமலாவிற்கு ஆறுதல் கூறும் வகையில் பேசவேயில்லை. இதை
எண்ணி விமலா மிகவும் வருத்தம் அடைந்தாள். இத்தனை காலமாகத் தன் குடும்பத்தையே
எண்ணி வாழ்ந்த விமலாவுக்கு, யாரும் அவளின் மீது நம்பிக்கை வைக்காததை எண்ணி
மிகவும் வருந்தினாள்.

தன் உயிருக்கும் மேலாக எண்ணிய தன் தந்தைகூட இன்று அவள் பக்கம்
இல்லை. விமலாவைச் சற்று எதிர்நோக்கிக் கூடப் பார்க்கவில்லை. தன் குடும்ப
உறுப்பினர்கள் பேசுவதைக் கேட்டவாறே தலையைக் கீழே ப�ோட்டிருந்தார். சில மணி
நேரம் கழித்து, எல்லோரும் அவரவர் கருத்துகளையும் கூறியவுடன் அனைவரும் வீடு
திரும்பினர். இறுதியில் விமலாவின் தாய் “ப்போன் பேசும்போது அவ்வள�ோ அதட்டலாய்ப்
பேசுவ, இப்ப ஏன் இப்படி இருக்க” என்று க�ொஞ்சம் கூட விமலாவின் விபரம் புரியாமல்
பேசினார். அவளின் தந்தைய�ோ இறுதி வரையிலும் அவளின் முகத்தைக் கூடப்
பார்க்காமல் வீடு திரும்பினார். குடும்பம் ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம்
சுற்றுச்சூழல் விமலாவைத் தாக்கியது. அவளின் நண்பர்கள் அவளைப் புறம் பேசத்
த�ொடங்கி விட்டனர். விமலாவைப் பற்றி நன்கு அறிந்தவர் கூடப், பேசும் கதையில்
சுவாரிசியம் வேண்டும் என்பதற்காகவே வெறுமனே பேசினர்.

சில நல்ல நண்பர்கள் அவளுக்கு ஆறுதல் கூறினர். “விடு விமலா... இது எல்லாம்
க�ொஞ்சம் காலம் தான், க�ொஞ்சம் நாள் கழித்து யாரும் இதைப்பற்றி ய�ோசிக்கக் கூட
மாட்டார்கள், உதாரணதுக்குப், 'பிக் ப�ோஸ் எடுத்துக்கோ, அந்த நேரத்திலே எல்லோரின்
கவனமும் பிக் ப�ோஸ் மேல தான். ஆனா இப்போ யாரும் அதைப் பற்றி ய�ோசிப்பதுகூட
இல்லை, நீ மனத்தைத் தளர விடாமல் தைரியமாக இரு, நாங்கள் இருக்கோம்” என்று
நம்பிக்கை தெரிவித்தனர். ஆனால், விமலாவின் மனது அதை ஏற்றுக் க�ொள்ளவே
இல்லை.

இன்று இந்தக் கட்டடத்தின் உச்சியில் நிற்கிறாள். தன் இரண்டு கண்களை
மூடிக்கொண்டு நிற்கிறாள். விளிம்பில் நிற்கிறாள். பல எண்ணங்கள் மனதில் நிழலாட
நிற்கிறாள். என்றோ வாசித்த, "கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னைக்
க�ொன்றுவிடும், கண்ணைத் திறந்து பார். நீ அதை வென்று விடலாம்" கலாமின்
இவ்வரிகளும் காற்றின் ம�ொழியாக அவள் மனதில் வந்து ம�ோதின.

மூடிய கண்களைத் திறந்தாள். அப்பொழுது அவள் அலைபேசி அலறியது;
அப்பாவின் அழைப்பு. அமைதியாக 'என்னப்பா' என்று ஒன்றும் நடவாது ப�ோல பேசினாள்.

*ய�ோக பிரிஷா வடிவேலு (கியு 4)

55

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

இன்னும் ஓர் ஆண்டு...!

அந்த இரண்டு பெரிய மரங்களின் கிளைகள் நுழைவாயிலில் அருகே ஆடிக்கொண்டு
குளிர்ந்த காற்றையும் நிழலையும் தந்து க�ொண்டிருந்தன. புற்றரையில் க�ொட்டிக்
கிடந்த மஞ்சள் மற்றும் ஊதா நிற ஆர்கிட் பூக்கள் இயற்கை அழகை இன்னும்
இரம்மியமாக்கியது. உள்ளே செல்வதற்கான நுழைவாயிலில் ‘செலமாட் டாதாங்’ என்றும்
வெளியே ப�ோவதற்கான நுழைவாயிலில் ‘தெரிமா காசே, ஜும்பா லகி’ என்றும்
ப�ொறிக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கே மாணவச் செல்வங்களின் கூட்டங்கள் வேறு.
இயற்கை சூழந்த அந்தப் பல்கலைக்கழகம் தலைநகரில் கம்பீரமாய் வீற்றிருந்தது; பல
அறிவு ஜீவிகளை உருவாக்கிய பெருமிதத்தில்.

மறைத்து வைத்திருக்கும் எல்லாமே ஏத�ோ ஓர் அதிசயம் தான். இந்த நான்கு
ஆண்டில் அலைந்து திரிந்து சேமித்த க�ொஞ்சமான நினைவுகளும் நிறைய அன்பும்
யாரிடமும் ச�ொல்லாமல் மறைத்து வைத்திருந்தான் கதிர். பல்கலைக்கழகத்தில் கணினி
ப�ொறியியல் படிப்பைப் படித்துக்கொண்டிருக்கிறான். அவன் ப�ொக்கிஷமாய்ச் சேர்த்து
வைத்த நினைவுகளில் முக்கியமானது மேகலா தான்.

மேகலா மிகவும் அழகான பெண். ப�ௌர்ணமி நிலவைப் ப�ோல் வட்ட வடிவிலான
முகம். கண்ணில் காந்தச் சக்தியை வைத்திருக்கிறாள் ப�ோலும் என்று கதிர் அடிக்கடி
எண்ணிக் க�ொள்வதுண்டு. இராமரின் வில் கூடத் த�ோற்று விடும் அவள் புருவ வளைவில்.
முதுகில் கறுப்பு நீர்வீழ்ச்சியாய் அவளின் கூந்தல். இப்படி உலக அழகிக்கான அத்தனை
அம்சங்களும் ப�ொருந்தியவள். அவளுக்கு ஒப்பனைகளும் ஆபரணங்களும் தேவையில்லை.
புன்னகையும் தன்னடக்கமும் அதை நிறைவு செய்து விட்டன.

கதிர் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்த ப�ோது ‘ஒரு கல்லூரியின்
கதை’ திரைப்படம் வந்தது. மாணவர்களின் விடுதியில் இப்படப் பாட்டெல்லாம் மிகவும்
பிரபலம். அதில் ந. முத்துக்குமார் வரிகளில் ஒலித்த ‘காதல் என்பது கடவுள் அல்லவா;
அது கனவு தேசத்தின் க�ோயில் அல்லவா’ பாடல் அவன் ஆன்மாவ�ோடு கலந்திருந்தது.
அவன் முதன் முதலில் மேகளாவைப் பார்த்த ப�ோது தன் இதயத்தில் ஒலித்த பாடல்
இதுதான். இன்றுவரை இப்பாடல் அவளுக்காகவே இன்னும் ஒலிக்கிறது அவன்
உயிரெங்கும்.

நூல்நிலையத்தில் தான் மேகலாவைப் பார்த்தான். பல்கலைக்கழகம் த�ொடங்கி
இரண்டு மாதங்கள் இருக்கும். தனது செய்பணிக்காக ஏத�ோ மருந்தியல் த�ொடர்பான
புத்தகங்களைத் தேடி வாசித்துக் க�ொண்டிருந்தாள். அந்த வெள்ளைச் சுடிதாரில்
சரஸ்வதியே எதிரில் புத்தகம் வாசிப்பது ப�ோல் இருந்தது. வீணை மட்டும் தான் இல்லை.
அவளை இப்படியே பார்த்துக் க�ொண்டிருக்க வேண்டும் ப�ோலத் த�ோன்றியது கதிருக்கு.
வைரமுத்துவின் காதல் கவிதைகளை எத்தனை முறை வாசித்தாலும் சலிப்பே வராது.
அவனுக்கு அப்படித்தான் மேகலாவைப் பார்ப்பதும்.

சிற்றுண்டிச் சாலையில், உடற்பயிற்சி மைதானத்தில், வகுப்புக்குச் செல்லும்
நடைப்பாதையில் என இப்படிப் பல்கலைக்கழகத்தில் எந்த இடத்தில் அவளைப்
பார்த்தாலும் அவன் கண்களுக்கு அழகாகவே தெரிந்தாள். இது என்ன? இந்த வயதின்
பிரமையா என்று கூட நினைத்திருக்கிறான். எதுகை, ம�ோனைத், தேமா, புளிமா என்று
கவிதை கூட எழுதத் தெரியாதவன் இப்பொழுது அவளை நினைத்துக் கவிதைகளையும்

56

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

எழுதுகிறான். எல்லாம் வைரமுத்துவின் வழிகாட்டலால்.

மேகலா கதிரைக் கடந்து செல்கையில் அவன் தண்டவாளமாகவும் அவள்
இரயில் பெட்டியாகவும் தெரிகிறாள் காரணம் அவனை அப்படிப் பாடுபடுத்துகிறாள்.
எவ்வளவ�ோ பேர் கதிரின் முன் கடந்து சென்றிருக்கின்றனர். ஆனால், மேகளாவின்
வருகையே அவனுக்குத் தலைப்புச் செய்தி. சினிமாவின் அத்துணை இசை இயக்குநர்களும்
அவன் பின்னால் பின்னணி இசை வாசிப்பது ப�ோல் அவன் காதுகளுக்கு மட்டும் தேனாய்க்
கேட்கும்.

இப்படியே ஓராண்டு முடியும் தறுவாயும் வந்தது. அவர்களின் பல்கலைக்கழகத்தில்
முழுக்க முழுக்க முதலாம் ஆண்டு மாணவர்களால் நடத்தப்படும் கலைத்திறன் விழாவில்
அவளை இன்னும் நெருக்கமாகப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. நிகழ்ச்சிக்குச்
சேலையில் வந்திருந்த அவளை இரசித்துக் க�ொண்டிருந்தான் கதிர். அவன் அவள்
பின்னால் வருவது கண்டிப்பாக அவளுக்குத் தெரியாமலையா இருக்கும்? இல்லை,
தெரிந்தும் தெரியாதது ப�ோல் அலட்டிக் க�ொள்ளாமல் இருக்கிறாளா? என்று தன்னையே
கேள்விக் கேட்டுக் க�ொண்டான் கதிர்.

இரண்டாம் வருடமும் ஆரம்பமானது. மேகலா இன்னும் அழகாகக்
காட்சியளித்தாள். கதிர் ப�ொறியியல் துறை பிரிவின் முதல் தளத்தில் கணினி ப�ொறியியலை
மேற்கொண்டிருந்தான். அங்கு அனைவரும் ப�ொறியியல் துறை மாணவர்களாகவே
நிரம்பியிருப்பர். மேகளாவ�ோ மருத்துவத் துறை பிரிவின் ஐந்தாம் தளத்தில் மருந்தியல்
படிப்பை மேற்கொண்டிருந்தாள். இவன் துறை பிரிவுக்கு அருகிலேயே இருந்தது
மருத்துவத் துறை பிரிவும் கலைத்துறை பிரிவும். தன் துறை பிரிவுக்கு அருகிலேயே
அவளும் இருப்பதால், அவ்வப்போது ஓய்வு நேரங்களில் அவளைத் தூரத்திலிருந்து
சந்திக்கும் வாய்ப்புக் கதிருக்குக் கிட்டியது.

மேகலா எப்பொழுதும் தன் த�ோழிகளுடனே இருப்பாள். அவள் துறை அல்லாத
மற்ற ஆண்களிடம் அவள் பேசுவது குறைவு தான். ச�ொல்லப்போனால், பேசுவதே
அபூர்வம். சிற்றுண்டிச்சாலையில் தன் த�ோழிகளுடன் அவள் அரட்டை அடிக்கும் அழகு,
இடை இடையே நெற்றியில் விழுந்த முடியைக் காத�ோரத்தின் பின்னால் நகர்த்துதல்,
த�ோழிகள் அடிக்கும் நகைச்சுவை துணுக்குகளுக்குச் சிரிக்கும் அழகு என அவளைச்
சுற்றியே கதிரின் பார்வை இருக்கும். அவள் செய்யும் ஒவ்வொன்றையும் கதிர் இரசிக்கத்
தவறியதில்லை.

இப்படியே அவளைப் பார்த்துக் க�ொண்டே சில பல எண்ணங்களைத் தனக்குள்ளே
ச�ொல்லிக்கொண்டிருந்தான். இரண்டாம் வருடப் பல்கலைக்கழகமும் முடிந்தது.
விடுமுறையும் வந்தது. அவளைப் பற்றிய சிந்தனைகளும் நிறைய வந்தன. “எப்பதான்
இந்த லீவு முடியும்னு இருக்கு. சீக்கிரமே மேகலாவைப் பார்க்கனும்,” என்று தனக்குள்ளே
புலம்பிக் க�ொண்டான் கதிர். நிலவில்லாத வானம் ப�ோல் வெறிச்சோடிக் கிடந்தது
அவனது விடுமுறை நாட்கள். தூக்கத்தில் அவன் கண்ட கனவுகளும் கறுப்பு
வெள்ளையாகத்தான் இருந்தன.

அந்தக் கதிர்வேலவனே கதிரின் பக்கம் இருக்கிறான் ப�ோலும். விழாவில் மேகளா
கதிரைப் பார்த்தாள். அவன் பார்த்ததும் சட்டென்று திரும்பி விட்டாள். கதிருக்கோ
மிகுந்த பூரிப்பு. நெடுநாள் தவம் புரிந்த முனிவருக்கு அந்த ஈசனே காட்சியளித்தால்

57

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

எப்படி இருக்கும�ோ அது ப�ோல் அளவில்லாத மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினான்.
அணையைக் கடந்த வெள்ளம் அடித்துக் க�ொண்டு வந்து ஊரைத் தாக்குவது ப�ோல்
அந்நொடி அவன் அடைந்த மனமகிழ்ச்சி அவன் நெஞ்சைத் தாக்கியது. உடல்
சிலிர்த்தது. இதயம் எகிறி விழுந்தது. விழா மேடையில் இசைக் குழுவினர் மலேசியத்
திரையிசைப் பாடலான ‘நீ பார்த்திடல் அழகு’ என்ற பாடலைப் பாடிக்கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் அந்தப் பாடல் அவனுக்கே எழுதிப் பாடியது ப�ோல் இருந்தது. ‘க்யூபிட்’
தெய்வத்துக்குத் தன் மனக்கண்ணிலே அர்ச்சனை செய்தான்.

உடலைத் தாக்கும் ந�ோய்களிலிருந்து தப்பிவிடலாம். ஆனால், மனதைத் தாக்கும்
காதல் ந�ோயிலிருந்து தப்பிவிட முடியாது. இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவனும்
நிச்சயம் அந்த ந�ோயினால் தாக்கப்பட்டிருப்பான். திருமணம் செய்யாத ஆட்கள் உண்டு.
ஆனால், காதல் செய்யாத ஆளில்லை. பாடல்களும் கவிதைகளும் கதிரின் கற்பனைக்குத்
தீனிப் ப�ோட்டது. காதல் பாடல்கள் மேலும் அவள் மேல் உள்ள நேசத்தை அதிகமாக்கியது.
இப்படியே மூன்றாம் ஆண்டும் முடிந்தது.

விடுமுறை முடிந்து பல்கலைக்கழகம் திறந்தது. இந்த நான்காவது ஆண்டிலும்
அவளைப் பார்த்துக் க�ொண்டே நாட்கள் கழிந்தன. இப்போது கதிருக்குப் பயம் வரத்
த�ொடங்கியது. அடுத்த வருடம் மேகலாவைப் பார்க்க முடியாதே என்பது தான் அதற்குக்
காரணம். இந்த வருடத்தோடு இளங்கலைப் பட்டப்படிப்பு முடிகிறது என அடிக்கடி
த�ோன்றியது.இதுவரை கதிர் மேகல்ச்ச்விடம் பேசியது இல்லை. அவளுக்கு அவன்
பெயர் தெரியுமா என்று கூடத் தெரியவில்லை. ஆனால், கதிருக்கு அவளை மிகவும்
பிடிக்கும். அவளைக் காதலித்துத் திருமணம் செய்து அந்த லட்சிய வாழ்க்கையை வாழ
வேண்டுமென ஒரு நாளும் த�ோன்றியதில்லை. அவளைப் பிடிக்கும் அவ்வளவு தான்.
ஆனால், இந்த மூன்று ஆண்டுகள் அவளிடம் பேசாமலே வீணடித்ததற்கு மிகுந்த
வருத்தம் அவனிடம் இருந்தது. அவளிடம் நட்புக்கொள்ளத்தான் இப்படித் திரிந்தான்
எனப் புரியாமலே இருந்தது. அவள் மீதான அவன் நேசத்தை அவளிடம் விரைவில்
கூறிவிட வேண்டுமென மனம் ச�ொன்னது.

இதை அவள் எப்படி எடுத்துக் க�ொண்டாலும் தனக்குச் சரிதான். ஆனால்,
அவளிடம் கண்டிப்பாகப் பேச வேண்டும். இந்தத் தயக்கத்தைத் தகர்த்தெறிவது எப்படி
என்று தான் அவனுக்குத் தெரியவில்லை. “மேகலா, உங்களை எனக்கு ர�ொம்பப்
பிடிக்கும்,” எனச் ச�ொன்னால் ப�ோதும் என்று நினைத்துக் க�ொண்டிருந்த ப�ோது,
சட்டென்று அவனைக் கடந்து சென்றாள் மேகலா. ஓர் அவசர மேகம் ப�ோல் “ப�ோய்ப்
பேசுடா பேசு” என்று உள்மனம் ச�ொல்ல, “இன்னைக்கு வேண்டாம். நாளைக்குப்
பேசுறேன். அதான் இன்னும் ஒரு வருடமிருக்கே,” என்று பதில் ச�ொன்னான்.

மேகலாவிடம் நிச்சயம் பேசிடனும். இந்த வருடம் முடிவதற்குள்.

*கலையரசி கணேசன் (கியு 4)

58

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

வெண்ணிலா

“பிரகாஷ்....பிரகாஷ்.....பிரகாஷ்....” எனப் பல முறை அழைத்தும் அவன் அதற்குச்
செவிசாய்க்காமல் செவிடன் காதில் சங்கு ஊதியது ப�ோல் அமர்ந்திருந்தான். ம�ௌனம்
அவனைச் சூழ்ந்து க�ொண்டது. ‘பிரகாஷ்’ அதுதான் பெற்றோர்கள் அவனுக்கு வைத்த
பெயர். பெயருக்கு ஏற்றவாறு பிரகாசமான முகமும் பேச்சும் க�ொண்டவன். ஆனால்,
இன்று கண்களில் ஒளி இழந்து, அவன் விழிகளிலிருந்து வெள்ள ஆறுகள் அவனது
சிவந்த கன்னங்களை வருடிச் சென்றன. அந்த ம�ௌன நிலை அவனுடைய சிந்தனை
அலைகளைக் கடந்த கால நினைவுகளுக்குக் கரம் பற்றி அழைத்துச் சென்றது.

25 ஜூன் 2014, ஆசிரியர் பயிற்சி கல்லூரிக்கான முதல் நாள் பதிவு. “த�ோ
பாருடா பிரகாஷ், உன் திங்ஸ் லா இந்தக் கறுப்பு பேக் லெ இருக்குச், சாப்பாட்டு
ப�ொருள் லா அந்தச் சின்னப் பேக் லெ இருக்கு . வேளா வேளைக்குச் சரியா சாப்பிடு
டா. காசு இல்லனா ச�ொல்லு அப்பாகிட்ட ச�ொல்லிப் பேங்கின் பண்ணி விடச் ச�ொல்றே”
என்று வாஞ்சையாகக் கூறித் தன் அன்பு மகனின் தலையைத் தன் கையால் வாரி
விட்டாள் அம்மா. என்னதான் உள்ளத்தில் கவலை இருந்தாலும் அதை வெளியே காட்டிக்
க�ொள்ளாதவனாகக் “கவலைப்படாதிங்க மா...அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீங்க
வருத்தப்படாம ப�ோங்க மா... நைட் ஒரென்டேஷன் எல்லாம் முடிஞ்ச உடனே க�ோல்
பன்றன், சரியா.... பாய்! பாய்! ” எனக் கூறித் தன் தாயின் கையை விட மனமில்லாமல்
கல்லூரியின் மண்டபத்தில் நுழைந்தான் பிரகாஷ்.

மண்டபத்தில் பதிவுப் பாரத்தைப் பெற்றுக் க�ொண்டு சக மாணவர்களுடன்
வரிசையில் அமர்ந்தான். “ ஹெல�ோ ! எக்ஸ்கியூஸ் மீ.... எனக்கு ஒரு பேன் தர
முடியுமா?” என்று யார�ோ வினவக், குரல் வரும் திசையை ந�ோக்கி ஏறெடுத்துப்
பார்த்தான். அப்பொழுது தான் அவளைக் கண்டான். ஒரு நிமிடம் அவளின் அழகில்
மயங்கி மூச்சடைத்துப் ப�ோனான் பிரகாஷ். மறு ந�ொடி எதையும் ய�ோசிக்காமல் தன்
பேனாவை எடுத்து நீட்டினான். அவள் முகத்தையே மெய் மறந்து பார்த்துக்
க�ொண்டிருந்தான். “டேய் பிரகாஷ்...இங்க பாருடா... அந்தப் ப�ொண்ணு ப�ோய் ர�ொம்ப
நேரம் ஆச்சிடா, வா நம்ப வேலைய பாக்கலாம்” என்று அருகில் அமர்ந்திருந்த முகிலன்
அவனது த�ோளைத் தட்டி அழைத்துச் சென்றான். முகிலன் பிரகாஷின் புதிய நண்பன்.
அவனின் அறைத் த�ோழனும் கூட. அன்றைய நாள் இவ்வாறே முடிந்தது.

மறுநாள், முதல் நாள் வகுப்பு ஆரம்பம். காலைக் கதிரவன் மெல்லத் தன்
கதிர்களை அள்ளி வீசி இரவுக்கு விடை க�ொடுத்துக் க�ொண்டிருந்தது. இயற்கையால்
சூழப்பட்ட கல்லூரி வளாகம் மெல்ல மெல்லப் பனியின் பிடியில் இருந்து விடுபட்டு
க�ொண்டிருந்தது. மாணவர்கள் விறுவிறுப்பாகத் தங்களின் வகுப்புகளுக்கு நடை
ப�ோட்டனர். பிரகாஷும் முகிலனும் தமிழ்ப் பிரிவு மாணவர்கள் என்பதால் இருவரும்
ஒரே வகுப்பில் அமர்த்தப்பட்டனர். தமிழ்ப்பிரிவைச் சார்ந்த பல மாணவர்கள் அந்த
வகுப்பில் இருந்தனர். முதல் நாள் வகுப்பு என்பதால் ஒருவரை ஒருவர் தங்களின்
நண்பர்களுடன் அறிமுகம் செய்து க�ொண்டனர்.

59

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

“ ஹாய் ! என் பெயர் வெண்ணிலா. நான் ரவாங் லெ இருந்து வரேன்.” என்று
யார�ோ தன்னை அறிமுகம் செய்யும் குரலைக் கேட்டுப் பின்புறம் திரும்பிப் பார்த்தான்.
நேற்று மண்டபத்தில் பார்த்த அதே வெண்சிலை தன் வகுப்பில் அமர்ந்திருப்பதைக்
கண்டு உச்சிக் குளிர்ந்தவனாக “டேய் மச்சான், நேத்துப் பார்த்த அதே ப�ொண்ணுடா !
அவளும் நம்பக் கிளாஸ் தான்டா! அய்யா ஜாலி!” என்று தனது 32 பற்களும் தெரியும்
வண்ணம் முகிலனைப் பார்த்துச் சிரித்தான். அவள் தனது த�ோழியிடம் தன்னை அறிமுகம்
செய்து க�ொண்டதன் மூலம் பிரகாஷ் அவளின் பெயரை அறிந்து க�ொண்டான்.

ஆம் ‘வெண்ணிலா’ பெயருக்கு ஏற்றவாறு முழுமதி ப�ோன்ற முகம். அவள் மிகவும்
அமைதியான அடக்கமான பெண். முல்லைக்கொடி ப�ோன்ற அவள் இடையும்
உடலமைப்பும் பார்ப்பவர்களின் கண்ணைக் கவரும் வகையில் இருப்பாள். பார்த்தவுடன்
ஓர் ஆணைத் தன் வசம் இழுக்கும் கண்கள் அவளுக்கு. வானத்தைப் ப�ோல் பரந்த மனம்
படைத்தவள். எல்லோருக்கும் பாராபட்சம் இன்றி உதவி செய்வாள். எல்லோரிடமும்
எளிதில் நட்பாகி விடுவாள். அதே ப�ோன்று தான் பிரகாஷிடமும் எளிதில் நட்பாகி
விட்டாள். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர்.

இப்படியே காலங்கள் விரைந்தோடின. இந்த இரண்டு வருடக் கல்லூரி வாழ்க்கை
அவர்களுக்கு ஒரு வசந்தக் காலமாக அமைந்தது. இருவரும் நெருங்கிப் பழகினர்.
மனதில் ஆசை இருந்தாலும் சந்தர்ப்பச் சூழலால் தம் காதலை இருவருமே
வெளிப்படுத்தவில்லை. இருவரும் வகுப்பில் சிறந்த மாணவர்கள். எப்பொழுதும் படிப்பில்
ஒருவருக்கொருவர் உதவி புரிந்து க�ொள்வர். இவ்வாறே ஒரு நாள் பாடத்தை மீள்பார்வை
செய்வதற்காகப் பிரகாஷும் வெண்ணிலாவும் வெளியே சந்தித்துக் க�ொண்டனர்.
இதையே சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் க�ொண்டு பிரகாஷ் முதலில் தன் காதலை
வெண்ணிலாவிடம் கூறினான்.

“வெண்ணிலா வெறும் அழகுக்காகவும் அறிவுக்காகவும் நான் உன்னை விரும்பல....
எனக்கு உன்னோட நல்ல மனசும் குணமும் தான் ர�ொம்பப் பிடிச்சிருக்கு.... நீ
எதிர்காலத்துல எனக்கு ஒரு நல்ல துணைவியாக மட்டுமில்லாம நல்ல வழிகாட்டியாகவும்
இருப்பேனு நம்புற... கடைசி வரைக்கும் என் கூட வருவியா வெண்ணிலா?" என்று
வினவியவன் அவளது கரங்களைப் பற்றிக் க�ொண்டான். இதைக் கேட்டதும்
செய்வதறியாத திகைத்தாள் வெண்ணிலா.

“பிரகாஷ் எனக்கும் உன்னை ர�ொம்பப் பிடிக்கும் .... என்னதான் நம்ப ரெண்டு
பெரும் ஒருத்தருக்கொடுத்தார் விரும்புனாலும் இதை என்றைக்கும் வெளியே காட்டிக்க
கூடாது... மேலும், இதனால நம்ப இரண்டு குடும்பத்துக்கும் என்றைக்கும் எந்த ஒரு
மன வேதனையும் வந்துவிடக் கூடாது. அவங்கள�ோடு கனவை நிறைவேற்றனும்.....
நல்லா படிச்சு எதிர்காலத்துல நம்ப ரவி சார் ச�ொல்ற மாதிரி நல்ல தரமான ஆசிரியரா
உருவெடுக்கணும்” என்று கூறியவள் பிரகாஷின் முகத்தைத் தன் இருக் கரங்களால்
அன்பாகப் பிடித்துக் க�ொண்டு மேலும் தன் பேச்சைத் த�ொடர்ந்தாள்.

“நம்பக் காதல் திருக் காதலா இருக்கனும். என்னைக்கும் தெருக் காதலா
ஆகிட கூடாது. நம்ப இலட்சியக் கனவை அடைவதற்கு இரண்டு பேரும் சேர்ந்து

60

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

உழைக்கனும்.. ஒருத்தருக�ொருத்தர் அன்பைப் பறிமாறி க�ொள்வது மட்டுமில்ல காதல்.
ரெண்டு பேரும் சேர்ந்து சாதிச்சி காட்டனும்.... நம்ப ரெண்டு பேரும் முதல் நிலை
பட்டதாரிகளாக ஆகணும் இதுவே நம்பல�ோட இலட்சியக் கனவாக இருக்கணும்
சரியா .....” என்று கூறியவாறே சிரித்த முகத்துடன் பிரகாஷிடம் இருந்து விடைப்பெற்றாள்.

இப்படி ஓர் அருமையான தங்கப் பதுமையைக் காதலித்தது தமக்குக் கிட்டிய
பெரும் பாக்கியமாகக் கருதி உள்ளூரே ஆனந்ததில் மூழ்கி இருந்த ப�ோது, “ அம்மா......!
” என்ற ஓர் அலறல் பிரகாஷ் காதுகளுக்கு எட்டியது. ஆனந்தச் சிரிப்புடன் விடைப்பெற்றுச்
சென்றவள் தன் கண் முன்னே ஒரு காரில் ம�ோதி இழுத்துச் செல்லப்பட்டுத் துடி
துடித்து இறந்ததைப் பார்த்த ப�ொழுது, அவன் உயிரே சற்று நேரம் நின்றுவிட்டது.
இரத்த வெள்ளத்தில் இருந்த வெண்ணிலா மெல்லத் தன் கண்களை மூடினாள்.
அப்பொழுது அவள் மூடியது அவளின் கண்களை மட்டும் அல்ல பெற்றோரின் கனவை.
மேலும், பிரகாஷ�ோடு சேர்ந்து சாதிக்க நினைத்த இலட்சியமும் அன்று தன் கதவுகளைத்
திறக்க முடியாத படித் தாழிட்டுக் க�ொண்டன.

இன்று 25 ஜூன் 2019, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கான பட்டமளிப்பு
விழா. சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று முதல் நிலை பட்டதாரியாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டான் பிரகாஷ். மேடையில் “ பிரகாஷ் ....பிரகாஷ்...பிரகாஷ்...” எனத்
தன் பெயரைப் பல முறை அழைத்தும் அவன் செவியில் அது விழவே இல்லை. கண்களில்
வழிந்தோடிய கண்ணீர�ோடு கற்சிலையாக அமர்ந்திருந்தான்!

*கலையரசி ராமு (கியு 4)

உன்னைப் பற்றி மற்றவர்கள்
என்ன நினைக்கிறார்கள் என்பதை விட

உன்னைப் பற்றி நீ

என்ன நினைக்கிறாய் என்பதே மிக மிக முக்கியமாகும்

61

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

மதிக்காவிடினும் பரவாயில்லை....!

“டிரீங் ! டிரீங்!” எனப் பள்ளி மணி ஒலிக்க, இனியனும் தனக்கு வழங்கப்பட்ட வகுப்பிற்குச்
சென்றான். வகுப்பினுள் நுழைந்தவுடன் அனைவரும் அவனைக் கேவலமாகப் பார்ப்பதைப்
ப�ோன்று பார்த்து அருகில் அமர்ந்திருக்கும் நண்பர்களிடம் ஏத�ோ பேசிக் க�ொண்டனர்.
இவ்வாறு பார்ப்பது தனக்கு ஒன்றும் புதிதில்லையே என்று மனதில் எண்ணிக் க�ொண்டு
வகுப்பின் பின் புறத்தில் உள்ள நாற்காலியில் அமர்ந்தான். வகுப்பாசிரியர் இனியனை
மற்ற மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

வழக்கம் ப�ோல், இனியன் சிற்றுண்டிச் சாலையில் உணவு உண்டு க�ொண்டிருந்தான்.
அதனைக் கண்ட, தமிழரசு அவன் அருகில் அமர்ந்தான். “என்ன இனியன், தனியா
சாப்பிடுரீங்க? இன்றைக்கு நானும் உங்க கூடச் சேர்ந்து சாப்பிடுறேன்” என்று தமிழரசு
கூற, அதற்கு இனியன் “ வாங்க, உட்காருங்க” என்று கூறினான். இத்தனை நாட்கள்
தன்னிடம் எவரும் பேச மறுத்த ப�ோது, தமிழரசு தன் அருகில் அமர்ந்து பேசுவது
அவனுக்கு வியப்பாகவே இருந்தது. தமிழரசுவிடம் உரையாடலை நீடித்துக்கொள்ள
விரும்பாமல் விரைவாகச் சாப்பிட்டு முடித்தான். பல தடவை தமிழரசு இனியனிடம் பேசி,
நட்பு க�ொள்ள முயற்சித்த ப�ோது த�ோல்வியைக் கண்டான். தமிழரசு ஆசிரியர் திரு.
கணேசன் மற்றும் திருமதி.கமலா அவர்களுக்குப் பிறந்த ஒரே மகனாவான்.

இனியனின் அருகில் அமர்ந்தவுடன் தமிழரசுவிற்குச் சற்றுச் சுலபமாக இருந்தது.
தமிழரசு இனியனிடம் பேசத் த�ொடங்கினான். எங்குச் சென்றாலும் இனியனைத் தமிழரசு
தனியாக விடுவதில்லை. அவனும் இனியனுடன் சேர்ந்தே சென்றான். வீட்டிலிருந்து
உணவு க�ொண்டு வந்தால் இனியனுக்கும் சேர்த்துக் க�ொண்டு வருவான். பல முறை
இனியன் சாப்பிட மறுத்தாலும் அவனை வற்புறுத்தியாவது சாப்பிட வைத்தான். பல
நாட்கள் உருண்டோட இனியனும் தமிழரசுவும் நெருக்கமாகத் த�ொடங்கினர்.
இருவர்களுக்கிடையே நல்ல நட்பு உருவாகத் த�ொடங்கியது. தமிழரசுவின் வீட்டிற்குச்
செல்ல இனியன் பல முறை மறுத்தாலும் தமிழரசு அவனை அழைத்துச் சென்று
பெற்றோரிடம் அறிமுகம் செய்தான். அவனின் பெற்றோரும் தமிழரசுவைப் ப�ோன்று
நல்ல குணம் படைத்தவர்கள் ப�ோலிருக்கு. சராசரி எந்த மனிதனாக இருந்தாலும் சரி,
இனியனின் த�ோற்றத்தைப் பார்த்தவுடன் கேவலமாகப் பார்த்ததுண்டு. ஆனால்
இவர்கள�ோ, அவ்வாறு இல்லாமல் இனியனிடம் இயல்பாகப் பழகுவது இனியனுக்கு
அதிர்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது. தமிழரசுவின் பெற்றோரும் இனியனைத் தன்
பிள்ளையாகவே கருதினர்.

அன்று மாலை மணி ஐந்து இருக்கும். தமிழரசுவும் இனியனும் ஒன்றாக அமர்ந்து
த�ொலைக்காட்சியைப் பார்த்துக் க�ொண்டிருந்தனர்.

“நூறு சாமிகள் இருந்தாலும், அம்மா உன்னைப் ப�ோல் ஆகிடுமா?
க�ோடி க�ோடியாய்க் க�ொடுத்தாலும் நீ தந்த அன்பு கிடைத்திடுமா? ”
என்ற பாடல் த�ொலைக்காட்சியில் இசைத்துக் க�ொண்டிருந்தது. இந்தப் பாடல்
வரிகள�ோ அல்லது பாட்டுக் காட்சி என்னவ�ோ தெரியவில்லை, இனியனின் மனதை

62

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

உருகச் செய்தது. அவனின் கண்கள் கலங்கியது; நீர் வடியத் த�ொடங்கியது. கண்களில்
வடியும் கண்ணீரைத் துடைக்கையில் தமிழரசு பார்த்து விட்டான்.

“டேய் இனியன்! ஏன்டா அழுற? என்னா ஆச்சு?” என்று தமிழரசு இனியனைக்
கேட்டவாறு அவன் கண்களைப் பார்த்தான். இனியனின் கண்களில் ஏத�ோ ஒரு ஏக்கம்,
கவலை தென்பட்டது. தமிழரசுவின் அந்த அன்பும் பாசமும் நிறைந்த குரல் இனியனை
இன்னும் அழ வைத்தது.

“எனக்கு எங்க அம்மாவைப் பார்க்கணும் ப�ோல இருக்குடா. ர�ொம்ப நாள்
ஆச்சு பார்த்து. என் அம்மா என் மேல ர�ொம்பப் பாசமா இருப்பாங்க. ஐய�ோ! பிள்ளை
இப்படிப் பிறந்துருச்சே! இந்தப் பிள்ளை வேண்டாம்னு ச�ொல்ற இந்தக் காலத்துல,
என் அம்மா இந்த மாதிரி ஒரு நாள் கூட நினைச்சதே இல்லை. கஷ்டம�ோ நஷ்டம�ோ
என் பிள்ளைய நானே பார்த்துக்கிறேனு என் அப்பாவையே எதிர்த்துப் பேசுனாங்க.
பெத்த அப்பாவே ஒதுக்கன பிறகு, என் அம்மாதான் 17 வருசமா எனக்குத் தாயாகவும்
தந்தையாகவும் இருந்தாங்க. என் அப்பா மட்டும் இல்லை. இந்தச் சமுதாயமே என்னை
ஒதுக்கி வைத்தது. நான் எப்பொழுதுமே தனியாகத்தான் இருப்பேன். எனக்கு யாருமே
வாய்ப்பு க�ொடுக்க மாட்டங்க. ஏன்? எல்லாப் பிள்ளைகளும் சரிசமம் என்று நல்லா
தெரிந்த ஆசிரியர்களும் என்னை ஒதுக்கினர். இதனால எங்க அம்மா ஸ்கூல்ல பல
தடவை சண்ட ப�ோட்டுருக்காங்க. என்னாலேயே என் அம்மா ர�ொம்ப அசிங்கப்
பட்டிருக்காங்க. எந்த அம்மாவுக்கும் இந்த மாதிரி ஒரு நிலைமை வந்திடக் கூடாது
என்று கடவுள் கிட்ட வேண்டிப்பேன். ஆனால், அந்தக் கடவுளுக்கு வேறு என்னவ�ோ
கேட்டிருக்கும் ப�ோலிருக்குது.

அன்று எப்பொழுதும் ப�ோல ஸ்கூல்போய்ட்டு வந்தேன். அம்மாவின் முகம் வாடி
இருந்தது. ஏம்மா முகம் வாடி இருக்கு? உடம்பு சரி இல்லயானு கேட்டப்ப, ஆமானு
ச�ொன்னாங்க. அன்றைக்கு எல்லாம் எனக்கு மனசே சரி இல்லை. தூங்கப் ப�ோகுறதுக்கு
முன்ன கைகால் எல்லாம் தைலம் ப�ோட்டுத் தேச்சி அம்மா கூடவே படுத்துத்
தூங்கிட்டேன். திடீரென, அம்மாவுக்கு மூச்சு வாங்க ஆரம்பிச்சுடுச்சு. அம்மா! அம்மா!
என்னாமா ஆச்சு? கேட்டேன். அம்மாவால பேசவே முடியல. அம்மாவ�ோட பார்வை
என்னைப் பார்த்தவாரே நின்றது. ஐய�ோ அம்மா என்னை விட்டுப் ப�ோய்ட்டீங்களா?
எனக்குனு யாருமா இருக்கா? இனி அம்மானு கூப்பிட யாருமே இருக்கமாட்டாங்களே.!
கூடவே இருப்பேனு ச�ொல்லிடு பாதியிலேயே ப�ோய்ட்டியே அம்மா! அம்மா எழுந்திரிங்க
அம்மா! என்னை அனாதையா விட்டுட்டுப் ப�ோகாதீங்க அம்மா! கதறினேன். ஆனால்,
அம்மா ப�ோனவுங்க ப�ோனவுங்கதான்...” என்று இனியன் ச�ொல்லி முடிப்பதற்குள் தன்
தாயின் இழப்பையும் துயரத்தையும் தாங்கிக் க�ொள்ள முடியாமல் தமிழரசுவைக் கட்டி
அணைத்துக் க�ொண்டு அழுதான்.

“அழாதடா... எனக்கு உன் கஷ்டம் புரிகிறது. அம்மா நம்பக் கூடத்தான்
இருக்காங்க. அம்மா இறந்ததுக்கு அப்புறம் அப்பா உன் கூடத்தான் இருந்தாரா?”
என்று தமிழரசு கேட்டான். கண்களைத் துடைத்துக் க�ொண்டு, “இல்லடா, என் அம்மா
ப�ோன பிறகு, என்னையும் என் த�ோற்றத்தையும் அவமானமா நினைச்ச என் அப்பா
என்னை வீட்டை விட்டுத் துரத்திவிட்டாரு. என்னைச் சுமக்காத என் அத்தை

63

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

எம்மாத்திரம்டா? அவுங்க என்னை ஒரு வேலைக்காரனாதான் பார்க்குறாங்க. உண்மைய
ச�ொல்லனும்னா ச�ொத்துக்காகத்தான் என்னைப் பார்த்துக்கிட்டாங்க” என்றான்
இனியன்.

“கவலைப்படாதடா; நான் உனக்கு இருக்கேன். என் அம்மா அப்பா உன் அம்மா
அப்பாடா. நீ எங்கக் கூட இருந்தா எங்களுக்கு அவமானம்னு நினைக்காதே. யாரு
என்ன வேண்டும் என்றாலும் ச�ொல்லிக்கிட்டு ப�ோகட்டும். எனக்கு அதைப் பற்றிக்
கவலை இல்லை. இன்றைக்கு உன்னைக் கேவலமாகப் பேசுனவுங்களுக்கு எல்லாம் நீ
கண்டிப்பா பாடம் ச�ொல்லிக் க�ொடுத்தே ஆகணும். நீ ஓர் உதாரணமா இருக்கணும்.
இதுதான் என்னோடயும் ஆசையும் அம்மாஅப்பாவ�ோட ஆசையும் கூடச் சரியா?
உன்னால முடியும். உனக்குப் பக்கபலமா நாங்க இருக்கிற�ோம்!” என்று நம்பிக்கை
ஊட்டினான் தமிழரசு.

இப்படியே வருடங்கள் சில கடந்தன. இவர்களின் ஆதரவாலும் அரவணைப்பாலும்
தமிழரசு இப்பொழுது ஆசிரியராகப் பணியாற்றுகிறான். இனியன�ோ இன்று
த�ொலைக்காட்சியில் பேட்டி க�ொடுக்கும் அளவிற்குச் சிறந்த அறுவைச் சிகிச்சை
மருத்துவராகத் திகழ்கிறான் . “ டேய் தமிழரசு! சீக்கிரமா டிவியைத் திறடா. பிள்ளை

இனியன் பேசப்போறான். என்னங்க
நீங்களும் வாங்க!” என்றால் தமிழரசுவின்
அம்மா. பெற்ற தாயைவிட அதிகமா
மகிழ்ச்சி அடைந்திருப்பாள் ப�ோல்
இருக்கிறது.

த�ொலைக்காட்சியில் வழக்கம்போல்
உரையாடல் த�ொடங்கியது.

“இந்த உலகத்துல அதுவும் இன்றைய
சமுதாயத்துல உங்கள மாதிரி உள்ளவுங்க
வெற்றி பெறுவதே பெரிய விசயம். இந்த
வெற்றியை அடைய நீங்கள் கண்டிப்பா
நிறைய இன்னல்களைத் தாண்டி வந்துருப்பீங்க. அதைப்பற்றி நீங்க பகிர்ந்து
க�ொள்ளுங்களேன்..” என்றார் பேட்டியாளர்.

“ஆமாம். நான் சந்திச்ச இன்னல்கள் கஷ்டங்கள் க�ொஞ்சம் நஞ்சம் இல்லை.
இந்த ஒரு சமுதாயமே என்னை ஒதுக்கி வைத்தது. என்னைக் கேவலமா, இழிவா
பார்த்தது. நான் நிறைய வாய்ப்புகளை இழந்தேன். இப்படிப் பிறந்தது எங்க தப்பு
இல்லையே. கடவுள் க�ொடுத்த வரம். ஏன் எங்களைப் பார்த்தா மட்டும் இந்தச் சமுதாயம்
ஏற்றுக்கொள்ள மாட்டுராங்கனுதான் எனக்கும் தெரியவில்லை. ஏன் எங்களால் நல்லா
படிக்க முடியாதா? நல்ல வேலை செய்ய முடியாதா? இல்லை எங்களுக்குத் திறமைதான்
இல்லையா? இப்படி எனக்குள் பல கேள்விகள் எழுந்தன. இந்தச் சமுதாயத்திற்கு நல்ல
பாடம் ச�ொல்லிக் க�ொடுக்க வேண்டும். அத�ோடு என்னைப் ப�ோல உள்ளவர்களுக்கு
உதாரணமா இருக்கனும்னு நினைத்தேன். கஷ்டப்பட்டுப் படித்தேன்; டாக்டர் ஆனேன்.

64

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

இன்றைக்கு என்னைப் ப�ோன்று உள்ளவர்கள் துவண்டு ப�ோகிறார்கள் என்றால் இந்தச்
சமுதாயம்தான் காரணம். இழிவா பேசிக், கேவலப்படுத்தி, ஒதுக்கி வைத்திடுராங்க.
அப்பறம் எப்படிங்க எங்கள மாதிரி உள்ளவங்க வெற்றி பெற முடியும்? இந்தச்
சமுதாயத்துக்கிட்ட ஒன்று மட்டும் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து யாரையும்
இழிவா பார்க்காதீங்க. நாங்களும் மனிதன்தான். என்னைப் ப�ோன்றவர்களுக்கும்
உணர்வுகள் உண்டு. எங்களை மதிக்காவிடினும் பரவாயில்லை மிதிக்காதீர்கள். இதை
நான் எல்லோரிடமும் தாழ்மையுடன் கேட்டுக் க�ொள்கிறேன்.” என்று தன் ஆதங்கத்தைக்
க�ொட்டித் தீர்த்தான் இனியன்.

அதற்குப் பேட்டியாளர்,“ இன்று நீங்க சிறந்த மருத்துவர் மட்டுமல்லாமல் சமுதாய
விழிப்புணர்வு மிக்கவரா இருப்பது எங்களுக்குப் பெருமையே! உங்கள் வெற்றிக்குப்
பின்னால் இருப்பவர் யார் என்பதை அறிந்து க�ொள்ள ஆசைப்படுகிற�ோம்” என்றார்

“எல்லாருடைய வெற்றிக்குப் பின்னும் அம்மா அப்பவ�ோ அல்லது காதலன்
காதலிய�ோ இருப்பாங்க. ஆனால், என் வாழ்க்கையில் வேறு. இரத்தப் பந்தங்களே
என்னைத் தூக்கிப்போட்டன. அப்படி இருக்கும் ப�ொழுது, நான் இருக்கேனு ச�ொல்லிட்டு
வந்தான். அனாதையா இருந்த என்னை, என் அம்மா அப்பா உன் அம்மா அப்பானு
ச�ொல்லி எனக்கு ஒரு குடும்பத்தையே க�ொடுத்தான். இழிவா பார்க்கிற இந்தச்
சமூதாயம் உன்னை மதிக்கணும் என்று ச�ொல்லிச் ச�ொல்லி எனக்கு ஆர்வத்தை
ஊட்டினான். அன்றைக்கு அவன் எனக்குக் க�ொடுத்த ஆர்வம் தான் இன்றைக்கு என்னை
இந்த இடத்துல உட்கார வைத்திருக்கு. காசு, பணம், பாராபட்சம் பார்க்காத அம்மாஅப்பா,
நண்பனுக்கும் மேல் உள்ள என் த�ோழன் கிடைத்ததற்கு நான் இறைவனுக்கு நன்றி
ச�ொல்லியே ஆகணும்.

நான் ஒரு திருநங்கை என்று தெரிந்தும் அவர்கள் என் கூட இருந்தாங்க.
இன்றைக்கு என் வெற்றியைக் கண்டு என்னைப் பெற்ற தாய்,தகப்பன் இவ்வளவு
சந்தோஷமும் பெருமையும் அடைந்திருப்பார்களா? என்று எனக்குத் தெரியாது. ஆனால்,
இவர்கள் மூவரும் கண்டிப்பா மகிழ்ச்சி அடைந்திருப்பாங்க..” என்று இனியன் கூறி
முடிப்பதற்குள் தமிழரசு மற்றும் அவன் பெற்றோர் கண்களில் இருந்து ஆனந்தக்
கண்ணீர் வடிந்தது.

*லேலாராணி கணேசன்(கியு 4)

அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள்.
அதுதான் உண்மையான தலைமைப் பண்பு

- டாக்டர். அப்துல் கலாம்

65

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

யார் அப்பாடக்கர்?

“நீ என்ன அவ்வள�ோ பெரிய அப்பா டக்கரா?” என்னும் வசனம் தற்காலத்தில்
தமிழகத்திலும் மலேசியாவிலும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு
வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதற்குத் தமிழ்த் திரையுலகின் தாக்கம்தான்
காரணம் என ஆணித்தரமாகக் கூறலாம். எனினும், அப்பாடக்கர் என்பதன் உண்மையான
ப�ொருள் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

இச்சொல்லானது சென்னையைச் சேர்ந்த செந்தமிழாகும். இச்சொல் தக்கர்
பாபா என்பவரின் பெயரிலிருந்து பெறப்பட்ட ச�ொல்லாகும். தக்கர் பாபா 29ஆம் திகதி
நவம்பர் மாதம் 1869இல் சவுராஷ்டிராவிலுள்ள பாவ் நகரில் பிறந்தார். இவரின் இயற்பெயர்
அம்ரித்லால் ஆகும். விதல்டாஸுக்கும் முலிபாய்கும் பிறந்த இவருக்கு ஆறு உடன்
பிறப்புகள். இவர் தமது த�ொடக்கக் கல்வியைப் பாவ் நகரிலும் ட�ோலெராவிலும்
பயின்றார். பின் இவர் பூனேவிலுள்ள ப�ொறியியல் கல்லூரியில் சேர்ந்து, 1890இல்
கட்டடப் ப�ொறியியலாளராகப் பட்டம் பெற்றார்.

1900இல், இவர் கிழக்காப்பிரிக்காவில் உள்ள உகாண்டா தண்டவாளக்

கட்டமைப்பில் மூன்று வருடம் பணியாற்றினார். பின் மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பிய

இவர் சங்கிலி மாவட்டத்தில் முதன்மை ப�ொறியியலாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின்

மும்பை நகராண்மைக்கழகத்தில் பணியாற்ற இவருக்கு வாய்ப்புக் கிட்டியது. மும்மை

அடிச்சேரிப் பகுதியில் அமைந்துள்ள குர்லா என்னும் இடத்தில் இவர் பணியமர்த்தம்

செயப்பட்டார். தனது தந்தையின் இறப்பிற்குப் பிறகு இவர் தமது பதவியை இராஜினாமா

செய்தார். பிப்ரவரி 6, 1914இல் இவர் க�ோபால கிருஷ்ணக் க�ோகலேவால்

த�ோற்றுவிக்கப்பட்ட இந்தியச் சேவகர்கள் அமைப்பின் கீழ் இணைந்து க�ோகுலத்திலும்

உத்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள மதுராவிலும் பஞ்ச இடருதவி பணிகளைச் செய்து

வந்தார். சுகாதாரமற்ற வேலைகளைக், குறிப்பாக மனிதக் கழிவுகளைக் கையால்

அள்ளிச் சுத்தம் செய்யும் சமுகத்தின் நிலையைக் கண்டு மிகவும் நெகிழ்ந்து ப�ோனார்.

அவர்களுக்கெனக் கூட்டுறவு நிலையத்தை அமைத்தத�ோடு அச்சமூகத்தின் இளைய

தலைமுறையினருக்காகப் பல பள்ளிகளை நிறுவினார். இக்காலக்கட்டத்தில் க�ோகலே

தக்கரை மகாத்மா காந்திக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவ்வறிமுகம் தக்கருக்கும்

காந்திக்குமிடையே ஒரு வலுவான உறவு வளர்வதற்கு அடித்தளமாக அமைந்தது.

1932இல் மகாத்மா காந்தியின் சாகும் வரை உண்ணா விரதப் ப�ோராட்டத்தின்
ப�ோது தக்கரின் தன்னிச்சையான பேச்சுவார்த்தை ப�ோராட்டாம் பூனே ஒப்பந்தத்திற்கு
வித்திட்டது. மகாத்மாவின் க�ோரிக்கைக்கு இணங்கத் தக்கர் ஹரிஜனச் சேவகச்
சங்கத்தின் ப�ொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக் க�ொண்டார். இச்சங்கமானது
இந்தியாவின்தாழ்த்தப்பட்டஜாதிகளின்முன்னேற்றத்திற்காகத் த�ோற்றுவிக்கப்பட்டதாகும்.
அசாம், வங்காளத் தேசம், ஒரிசா, சவுராஷ்டிரா, மகாராஷ்டிரா என இந்தியாவின் பல்வேறு
இடங்களின் உட்புறப் பகுதிக்குத் தக்கரும் மகாத்மாவும் பயணம் செய்தனர். அங்குள்ள
பழங்குடிகளையும் ஆதித் திராவிட மக்களையும் முன்னேற்றும் சேவையில் மிகவும்
தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 35 வருடங்களைத் தக்கர் ஹரிஜனச் சேவையிலேயே
கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

66

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

தக்கர் தமது வாழ்வை மிகவும் எளிமையாகக் கழித்தவர். ஒவ்வொரு முறை
இரயில் பயணம் செய்யும் ப�ோதும் மூன்றாம் தரப் பயணத்தையே மேற்கொள்வார்.
மேலும், ப�ொதுச் சேவை செய்வதற்காகத் தமது ச�ொத்து அனைத்தையும் இழந்தவர்.
ஜனவரி 19, 1951இல் இயற்கை அவருக்கு மரண வாசல் கதவைத் திறக்கும் வரை,
ஒதுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் தீண்டாமையை ஒழிப்பதற்காகவும் இவர்
அரும் பாடுபட்டவர். மேலும், வேதங்களிலும், ஞானங்களிலும் கரைகண்ட இவரிடம்
ஆன்மீகம் த�ொடர்பாக எந்தக் கேள்விக் கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும்.
இவரின் சேவை மனப்பான்மையையும் அறிவுடமையையும் கண்டு, மகாத்மா இவரைத்
தக்கர் பாபா என்று அழைத்தார். பாபா என்றால் மரியாதைக்குரியவர் என்று ப�ொருள்படும்.
தமிழகத்தில் பாபா என்னும் ச�ொல் அப்பாவாகப் பெயர் வழங்கப்பட்டு அம்ரித்லால்
அவர்கள் அப்பாதக்கராக அழைக்கப்பட்டார். அவரைப் ப�ோலவே, ஒருவன் தனது
துறையில் தெளிவாக அனைத்தையும் அறிந்தவனாக இருந்தால் அவன் பெரிய
அப்பாதக்கர் என்று ச�ொல்லப்பட்டுப் பின்னர், சென்னை உச்சரிப்பில் அப்பாடக்கர் என்று
மருவி விட்டது. இப்படிதான் அப்பாடக்கர் என்னும் ச�ொல் உருவெடுத்தது.

த�ொகுப்பு:
*பவிந்திரன் நாயுடு சிவக்குமார் (கியு 4)

பெண் தவறென்று குறுகுறுத்து
கவலை ச�ொல்ல, வருகையிலே
இட்டப�ோது சிவப்பென அறியாமல், கண்டவளென பட்டமிட்டான்,
இளிப்போன்று இதழில் ஏந்தினேன். பார்க்காமல் பதுங்கி க�ொண்டான்!
சுட்டப�ோது சுடராக இருந்ததை,
சூடிக் க�ொள்ள சாட்சியாக்கினேன். கர்வமென பேரிட்டால்,
காதல் தன்னைக் காட்டவில்லை
விழி மலர் மலர்ந்து நிற்க, கற்பம் ஒன்றை தாங்கவில்லை,
வண்டாய் தேனெடுத்தாய், காகிதத்தைத் தாங்கி நின்றேன்!
ம�ொழிகளில் பூ த�ொடுத்து,
ஆசை மாலை ப�ோட்டு நின்றாய்! *நிவேஸ்வரி சுப்ரமணியம் (கியு 4)

க�ோடி சென்மம் சேர்ந்து வாழ,
வாக்குமூலம் க�ொடுத்த பின்பும்
என்ன பாவம் செய்தேன�ோ?
இடித்து விட ஒப்பமிட்டாய்

உரிமையென ஒற்றை பதம்
கேட்டு விட்ட குற்றமாச்சோ?
வெட்டி வீரன் விரல் பதித்தான்
விழிகளைக் கலங்க வைத்தான்.

67

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

எனக்குள் ஏற்பட்ட மன அழுத்தம்

மன அழுத்தம் பற்றி நம்மில் அறிந்திருப்பதுடன் அதனை உணர்ந்திருப்பர். ஏனெனில்
இன்றைய சூழலில் இது தவிர்க்கவியலாதது. நீங்கள் உங்களுக்குச் சாதகமான
நடவடிக்கை என நினைக்கும் காரியங்களால் கூட உங்களுக்கு மன அழுத்தம்
அதிகரிக்கலாம். மன அழுத்தத்தைப் பலர் மன ந�ோயுடன் ஒப்பிட்டாலும், விஞ்ஞானிகளும்
மருத்துவர்களும் இதை உடல்ரீதியான செயல்பாடு மற்றும் சமநிலையில் குறைபாடுகளை
ஏற்படுத்தும் ஆற்றலாக இதைக் குறிக்கிறார்கள். தங்களைச் சுற்றி நடப்பவை
காரணமாக அழுத்தம் ஏற்படும் ப�ோது, அதற்கு எதிர்வினையாகச் சில இரசாயனங்கள்
சுரந்து இரத்தத்தில் கலக்கின்றன. இந்த இரசாயனங்கள் அவர்களுக்கு அதிக ஆற்றல்
மற்றும் பலத்தை அளிக்கிறது. குறைவான அளவில் மன அழுத்தம் அல்லது பதற்றம் சில
நேரங்களில் பயனுள்ளதாக அமைகிறது. இரண்டு வகையான அழுத்தங்கள் உள்ளன.
அவை நேர்மறை மற்றும் எதிர்மறை அழுத்தம். மன அழுத்தம் அதிகமாகும் ப�ோதும்
சரியாக நிர்வகிக்கப்படாமல் இருக்கும் ப�ோதும் எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன.

சமீபக் காலமாக மன அழுத்தத்தினால் தற்கொலைச் சம்பவங்கள் அதிகமாக
உள்ளன. முக்கியமாக இளைய சமுதாயத்தினர், இவ்வாறான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
காரணம் என்னவென்று பார்த்தால், கல்வி பளு, வேலை பளு மற்றும் காதல் த�ோல்வி
ஆகும். இளைய சமுதாயம் என்பதை என்னையும் குறிக்கும். மன அழுத்தம் எனக்குள்
ஏற்பட்டதுண்டா எனக் கேள்வி வரும்போது, ஆமாம் என்றுதான் கூறுவேன். நான் ஒரு
வருங்கால ஆசிரியர். நாளைய தலைமுறையை வளர்ப்பதற்குப் பெரும் பங்கே
ஆசிரியரிடம்தான் உள்ளது. அவ்வாறு இருக்கும்போது, நாம் கற்றுக் க�ொள்ள வேண்டிய
விஷயம் அதிகமே. செய்பணி முதல் ஆரம்பித்துச் , ச�ோதனைக்குப் படிப்பது, நிறைய
நடவடிக்கைகளில் ஈடுபடுவது, படைப்புகள் செய்வது, ப�ோட்டிகளுக்குச் செல்வது
இவ்வாறு நிறையவே உள்ளன. இவையெல்லாம் நம்மைச் சிறந்த ஆசிரியர்களாக
உருவாக்குவதற்காக எடுக்கும் முயற்சி என்றே கூறலாம்.. அவ்வாறு இருக்கும்போது,
எங்கிருந்து வருகிறது இந்த மனஅழுத்தம்?

குறிப்பிட்ட நேரத்தில் க�ொடுக்கப்பட்ட அனைத்து வேலைகளையும் ஒப்படைக்கும்
தருணம் வரும்போது, அவற்றினை விறுவிறுவென செய்து நாம் ஒப்படைப்போம். இங்குப்
பார்த்தால் மன அழுத்தம் ஒரு வேலையைச் சீக்கிரமாகச் செய்யத் தூண்டியுள்ளது.
ஆனால் அதே வேலைகளை நாம் துக்கமின்மைய�ோடு செய்ததனால் பின் விளைவுகள்
நிறையவே ஏற்படுகின்றன. எனக்கு மன அழுத்தம் இருக்கிறது என்று எவ்வாறு
கண்டுப்பிடித்தேன் என்றால் முதலில், என்னுடைய கண் பார்வை மங்கலானது, கைகளில்
நடுக்கம் ஏற்பட்டது, தலைப் பாரமாக இருக்கும், சிறுசிறு விஷயங்களுக்குக் க�ோபம்
ஏற்படும், தூக்கத் த�ொந்தரவுகள், குறைவான கவனம், ஞாபகமறதி, முடி க�ொட்டுதல்
இறுதியில் முக்கியமானது த�ோள்பட்டை வலி. இந்த அறிகுறி மூலம்தான் எனக்குள் மன
அழுத்தம் இருப்பதைக் கண்டறிந்தேன்.

மேலும், இந்த மன அழுத்தத்தினால், எனக்குள் கவனம் செலுத்துவதில் சிரமம்
ஏற்பட்டது, தனம்பிக்கையைச் சிறுகச் சிறுக இழந்தேன், தேவையற்ற கவலைகள்,
அதிகப் பயம், பற்களைக் கடித்தல், முடிகளை இழுத்தல், மற்றும் அதிகக் க�ோபத்தினால்
முரட்டுத்தனமான செயல்கள். அதுமட்டுமன்றி, மன அழுத்தத்தினால் களைப்பு,
தூக்கமின்மை, ஜீரணக் க�ோளாருகள், மனநிலை பாதிப்பு மற்றும் அதீதத் தலை வலி.
இவ்வாறு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. மருத்துவரிடம் சென்று மருந்துகள்

68

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

உண்ணுவதால் எந்த ஒரு தீர்வும் கிடைக்காது. இவற்றினை நாமாகவே சரி செய்ய
வேண்டும். மன அழுத்தத்தினால் ஆசிரியர்கள் தற்கொலை செய்த சம்பவங்களும் நடந்து
க�ொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறு அனைவரும் வேலை பளுவினால் தற்கொலை
செய்து க�ொண்டால் உலகில் நடமாடுவதற்கு மனிதர்களே இருக்க மாட்டார்கள்.

முதலில், இந்த மன அழுத்தத்தைக் குறைக்க நான், எனக்குப் பிடித்த சில
நடவடிக்கைகளில் ஈடுபட்டேன். எனக்குப் பிடித்தது என்னவென்றால் நடனம் ஆடுவது
மற்றும் பூப்பந்து விளையாடுவதாகும். அதற்காக நான் உங்களையும் என்னைப் ப�ோலவே
செய்யச் ச�ொல்லவில்லை. உங்களுக்கு என்ன செயல்கள் பிடிக்கின்றத�ோ, உங்களுக்காகச்
சற்று நேரத்தை ஒதுக்கிச் செய்தால் மட்டும் ப�ோதும். அடுத்ததாக, நிறைய தன்முனைப்புப்
பாடல்களைக் கேட்பேன். எனக்குத் தலை வலிய�ோ அல்லது குழப்பத்தில�ோ
இருக்கும்போது, இம்மாதிரியான பாடல்களைக் கேட்கும்போது எனக்குச் சற்று
ஆறுதலாக இருக்கும். சில நேரங்களில் அறையில் உட்கார்ந்து பாடம் செய்யப்
பிடிக்காமல் வெளியில் சென்று என்னுடைய பாடத்தைத் த�ொடருவேன். அவ்வாறு புதிய
சூழலில் செய்யும்போது எனக்குச் சிந்தனை எங்கும் ஓடாமல் நான் என் வேலையை
மட்டும் பார்ப்பேன். அதுமட்டுமின்றிச், சில நேரங்களில் நண்பர்கள�ோடு வெளியே சென்று
மனம் விட்டுப் பேசுவேன். மனம் விட்டுப் பேசும்போது, நமக்குள் இருக்கும் துக்கச்
சுமையை இறக்கி வைத்தது ப�ோல இருக்கும். இன்னொன்று நன்றாக மூச்சை இழுத்து
விடுவேன். முச்சை இழுத்து விடும்போது, நமக்குள் இருக்கும் பல குழப்பங்கள் குறைந்தது
ப�ோல உணரப்படும்.

பிடித்த நடவடிக்கைகளைச் செய்யுங்கள், நீங்கள் உங்களுக்குப் பிடித்தவர்களுடன்
நேரத்தைச் செலவிடுங்கள், அத்துடன் மன அழுத்தமும் குறைந்து நீங்களும் நீண்ட
காலம் உயிர் வாழலாம்!

*காயத்திரி சந்திரன் (கியு 4)

கல்வியால் அறிவு கூர்மைபெறும் ஆனாலும் - அது
உள்ளம் உயர்ந்தோர் உறவால்தான் பண்படும்.

-கம்பார் கனிம�ொழி

69

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

நாம் சூரியகாந்திகள்

சிந்தனைக்கு ஏன் மாற்றம் தேவை? என்ற ஐயம் சிலர் இதயங்களில் தட்டி

எழும்புகிறது. நமது வாழ்க்கையில் பண்படுத்த வேண்டிய அறிவுடைமைகளை முறையாகப்

பயன்படுத்துவதில்லை. ஒரு மனிதன் பிறந்து வளர்ச்சியடையும்போது பல மாற்றங்களுக்கும்

உள்ளாகிறான். மேலும், 3000 ஆண்டுகளுக்குச் சூரியகாந்தி மலர்களைத் தங்களின்

சிந்தனையினால் கலாச்சாரத்திற்காக உணவாகவும், மருந்தாகவும் சேர்த்துக் க�ொண்டனர்

செவ்விந்தியர்கள். தீய நடவடிக்கைகள் எனச் சூது, சினிமா, ஏமாற்றுதல் ப�ோன்ற

இன்னும் நிறைய விதமான சிந்தனைகள் இன்னும் சிலருடன் ஊட்டி விடப்படுகின்றன.

எனவே, இதிலிருந்து விடுபட மனிதர்கள் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டுச் சிந்தனையுடன்

செயல்பட வேண்டும். உதாரணமாக, நல்ல இறைவழிபாடு செய்யவும் பெரிய�ோர்களிடம்

நல்ல ஆல�ோசனையும் பெற்றிருக்க வேண்டும்.

‘கால் ஆழ் களரின் நரியடும் கண்ணஞ்சா

வேலாழ் முகத்த களிறு’

எனும் குறளுக்கு ஏற்பத் தன்னைக் க�ொள்ள வரும் தீயவைகளை வலிமை
நிறைந்த ஆற்றல�ோடு இருந்தால் தப்பித்துக் க�ொள்ளலாம். ஆனால், இதுவே
வலிமையற்றுத் திரிந்தால் சாதாரண ஊடல்கள் கூட நம்மை ஆழ்ந்தமைக்குத்
தாழ்த்திவிடும் என்று திருவள்ளுவர் இக்குறளின் மூலம் எச்சரிக்கிறார்.

த�ொகுப்பு:
*ஹேமப்பிரியா கனகலிங்கம் (யு 9)
குறிப்பு: எம்.துரைராஜ் அவர்களின் 'நினைக்கத் தெரிந்த மனமே' நூலிலிருந்து

விடிவு காலம் எப்பொழுது?

இன்றைய நவீன உலகில் நம்மால் ஒரு வினாடி நின்று என்ன நடக்கிறது என்று கூடப்
பார்க்க முடியவில்லை. காரணம் நாம் வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கிற�ோம். ஆனால்
நம்மில் பலர் எதைத் தேடி ஓடுகிற�ோம் என்று அறியாமலே இருக்கிற�ோம். பிறந்தோம்,
இருந்தோம், சென்றோம் என்ற வாழ்க்கையினை வாழ்ந்து க�ொண்டிருக்கிற�ோம். நம்
எதிரே நடக்கும் தவறுகளைக் கேள்வி கேட்க வேண்டும் என்று நினைத்திருப்போம்.
இருப்பினும் நம்மை அறியாது ஏத�ோ ஒன்று தடுத்து விடும்.

பணக்காரர் முதல் ஏழை வரை அனைவரும் தங்களின் காரியத்திலேயே
குறிக்கோளுடன் இருக்கிறார்கள். யார் எப்படிப் ப�ோனால் நமக்கென்ன என்ற சுயநலம்
அதிகரித்துவிட்டது. இப்படிப்பட்ட உலகில் மாற்றத்தைக் க�ொண்டு வர வேண்டும். நாடு
வளர்ச்சியடைகிறது. ஆனால் நம் மக்களின் சிந்தனை வளர்ச்சியடைகிறதா என்பது
புதிராகவே இருக்கின்றது. மக்களிடையே இருக்கும் அலட்சியப் ப�ோக்கே இதன்
காரணமாகும்.

*ஈஸ்வரியா சிவராமன் (யு 9)

70

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

கல்வியல் சாரல்

71

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

‘Articulate Storyline’ பயன்படுத்திப் பயில்பொருள்
உருவாக்கும் முறையும் அதன் பயனும்

‘Articulate Storyline’ என்பது ஒரு மென்பொருள் ஆகும். பயில்பொருள் என்றால்
மாணவர்கள் கற்றலை மேற்கொள்ளவும் பாடத்தைப் பற்றி மேலும் புரிதலை அதிகரித்துக்
க�ொள்ளப் பயன்படுத்தும் ஒரு பாடத்துணைப்பொருளாகவும் கருதப்படுகின்றது. இந்த
மென்பொருளானது எதிர்கால ஆசிரியரான நாம் பயில்பொருள் உருவாக்குவதற்குப்
பேருதவியாக இருக்கும் என்றால் அது மிகையில்லை. இந்தப் பயில்பொருள்
உருவாக்கத்திற்கு நாம் எளிமையான முறையில் ‘Articulate Storyline’ பயன்படுத்தி
எவ்வாறு உருவாக்கலாம் என்பதையும் அதனால் ஏற்படும் விளைப்பயனையும் சற்று
ஆராயவுள்ளோம்.

இந்த மென்பொருளானது பல்லூடகக் கூறுகளையும் பல்வகை நுண்ணறிவு
கூறுகளையும் அடக்கியது. 21ஆம் கற்றல் கற்பித்தல் அணுகுமுறைக்கு எதுவாக
அமைந்ததுதான் இந்தப் பயில்பொருள் உருவாக்கம். முதலில், பயில்பொருளை
உருவாக்குவதற்கு முன் கற்றல் கற்பித்தலில் மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கலை
ஆசிரியர் அடையாளம் காண வேண்டும். பின், அது த�ொடர்பான தரவுகளைச் சேகரிக்க
வேண்டும். நாம் உருவாக்கவிருக்கும் பயில்பொருள் மாணவர்களின் சிக்கலைக் களையும்
வண்ணம் உருவாக்க இந்தத் தரவுகள் பயன்படும்.

இதனையடுத்துத், திட்டமிடல் மிகவும் அவசியமானதாகும். எத்தனை நழுவம்
பயன்படுத்தவுள்ளோம், எம்மாதிரியான பயிற்சிகளை இணைக்கப் ப�ோகிற�ோம், கதை
வடிவிலான பாடமா, ஆசிரியர் அடிப்படையிலானதா அல்லது சுயக் கற்றலுக்கு

அடிப்படையானதா ப�ோன்றவையை முதலில்
தீர்மானிக்க வேண்டும். மேலும், எந்த
உள்ளடக்கத் தரம் மற்றும் கற்றல் தரத்தை
மையமாகக் க�ொண்டு பயில்பொருளை
அமைக்கப்படும் என்பதையும் நாம் உறுதி
செய்ய வேண்டும். சிக்கல் அடிப்படையிலான
பயில்பொருள் என்றாலும் கற்றல் தரம்
அடிப்படையிலும் இருப்பது சிறப்பாகும்.


அடுத்து, பயில்பொருள் உருவாக்கத்திற்குத்
தேவையான இசை, காண�ொளி, படம், மற்றும் குறிப்புகளை ஆசிரியர் சேகரிக்க
வேண்டும். பயில்பொருளானது மாணவர்களைக் கவரும் வண்ணம் அமைய வேண்டும்
என்றால் மாணவர்களுக்குப் பிடித்த வண்ணம் இசையும் காண�ொளியும் இருப்பது
சிறப்பாகும். ‘Articulate Storyline’ என்பது இந்தக் குறிப்புக், காண�ொளி, இசை மற்றும்
படங்களை ஒன்றிணைக்கும் ஒரு கருவியே. இசை, காண�ொளி, படம் ப�ோன்றவற்றைச்
சேகரிக்கும் ப�ொழுது ஆசிரியர்கள் மற்ற மென்பொருள்களையும் உபைய�ோகிக்கலாம்.
காட்டாக, இசையை மறுசீர் செய்வதற்கு ‘Audacity’, ‘Sound Forge’, மற்றும் ‘Sound-
wave Editor’ ப�ோன்ற மென்பொருள்கள் மிகவும் உதவியாக இருக்கும்.


72

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

மேலும், பயில்பொருளை உருவாக்கிய பின் அதனை முதலில் ச�ோதனை செய்ய
வேண்டும். நண்பர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலதரப்பட்ட பயனர்களிடம்
வழங்கி முதலில் பயில்பொருள் பற்றிய அவர்களின் கருத்துகளைச் சேகரிக்க வேண்டும்.
பயில்பொருளின் குறையை நீக்கிப் பயன்பாட்டு நிலையை அதிகரிக்க இந்த யுத்தி
மிகவும் பயனுள்ளதாக அமையும். இம்மாதிரியான வழிமுறைகளை முறையாகப்
பின்பற்றினால், நிச்சயம் ஒரு தரமான மற்றும் முழுமையான கற்றல் கற்பித்தலுக்கு
உங்களின் பயில்பொருள் வித்திடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

த�ொடர்ந்து, இந்தப் பயில்பொருளைப் பயன்படுத்திக் கற்றல் கற்பித்தலை
மேற்கொள்வது பலவகையில் ஆசிரியருக்கும் மாணவருக்கும் உதவ முடியும். ஆசிரியர்
என்று கூறினால் அறிவூட்டுபவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இன்றைய
காலத்தில் அதுமட்டுமா ஆசிரியரின் வேலை என்றால் அது சந்தேகத்திற்கு உரியதே.
ஆசிரியரின் வேலைப்பழுவைக் குறைத்து அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்த இந்தப்
பயில்பொருளானது பெரும் பங்கினை வகுக்கின்றது. ஆசிரியர்களும் இந்த
மென்பொருளை அவரவர் பாடத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க முடியும்.

அதனைத் தவிர்த்து, 21ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தல் அணுகுமுறைக்கு
ஏதுவாக ஆசிரியர் இப்பயில்பொருளைக் க�ொண்டு மாணவர்களுக்குக் கற்றல்
கற்பித்தலை மேற்கொள்ள முடியும். இம்மாதிரியான புதிய வகை அணுகுமுறை
மாணவர்களுக்குள்ளே புத்தாக்கச் சிந்தனையையும் ஆக்கச் சிந்தனையையும் அதிகரிக்க
வல்லது. மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டவும் அவர்களை விளையாட்டு மூலம்
மதிப்பீடு செய்யவும் இந்தப் பயில்பொருள் துணையாக இருக்கும். மாணவர்கள்
ஆசிரியரை மட்டும் நம்பி இருக்காமல் சுயமாகவே கற்றலை மேற்கொள்ள இந்தப்
பயில்பொருளானது மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.

இறுதியாக, வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் காலத்திற்கு ஏற்ப மாற்றம் காண
வேண்டும். மாணவர்களின் சிந்தனை மாற்றத்திற்கு இம்மாதிரியான புதுமையான
அணுகுமுறைகளும் உறுதுணையாக இருக்கும். ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல்
அணுகுமுறையில் ஆளுமையை வளர்த்துக் க�ொள்ள நிறைய தேடல்கள் வேண்டும்.
தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு இம்மாதிரியான உருவாக்கங்கள் பெரும் பங்குவகிக்கும்
என்றால் அது மிகையாகாது.

*சந்திரா நாயுடு தனராஜ் (கியு 4)

வெற்றிப் பெறுவது எப்படி என்று ய�ோசிப்பதை விட
த�ோல்வி அடைந்தது எப்படி என்று ய�ோசித்துப் பார்

நிச்சயம் நீ வெற்றிப் பெறுவாய்!

73

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

அயலகத்தில் வாழும் தமிழ்

அமெரிக்கா

அமெரிக்காவில் கலிப�ோர்னியா தமிழ்க் கல்விக்கழகம் என்று 1998-இல், வெற்றிச்
செல்வி என்பவர் 13 குழந்தைகளைக் கூட்டித் தமிழைக் கற்றுக்கொடுக்கத்
த�ொடங்கியுள்ளார்; இன்று அது ‘உலகத் தமிழ்க்கல்விக் கழகம்’ என்று பெயர் மாற்றம்
பெற்று 840 தன்னார்வ ஆசிரியர்களின் துணையுடன் 4000 மாணவர்கள�ோடு விரிவு
பெற்றுள்ளது; 5 கிளைகள், 25 பள்ளிக்கூட மையம் மேலும் லண்டன், துபாய் என்று
தனது தமிழ்மொழியைத் தமிழ்ப் பிள்ளைகளுக்குக் கற்பிக்கும் பணியில் முன்னேற்றம்
கண்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 8 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற
விகிதாச்சாரத்தில் 4 மணி நேரம் அடிப்படைத் தமிழ் கற்றுக் க�ொடுக்க முயற்சி
எடுத்துள்ளனர்.

கனடா

கனடாவில் 2,500,00 – தமிழர்கள் வாழ்கிறார்கள்; பெரும்பாலும் ஈழத்தமிழர்கள்.
ட�ொரண்ரோ பகுதியில் மட்டும் 57 தமிழ்ப் பள்ளிகளை நடத்துகிறார்கள். கனடா அரசே
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தைத் “தமிழ்மொழிக் கலாச்சார மாதமாகக்”
க�ொண்டாடப் பாராளுமன்றத்திலேயே தீர்மானம் க�ொண்டுவந்து முழு ஆதரவ�ோடு
நிறைவேற்றியுள்ளது. 1984-இல் இருந்து தமிழ் ம�ொழிக்கல்வி மன�ோண்மணியம்
சுந்தரனார் பல்கலைக் கழகத்தோடு ஒப்பந்தம் செய்துக�ொண்டு தமிழ்ப் பட்டப்படிப்பு
வரை நடத்தி வருகிறது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிலும் கடந்த 36 ஆண்டுகளாகத் தமிழ்ச் சிறுவர்களுக்குத் தமிழ்க்
கற்பிக்கும் பணி நடக்கிறது. பாலர் மலர் தமிழ்ப்பள்ளி, சைவ மன்றத்தினர், பாரதி தமிழ்ப்
பள்ளி ஈழத் தமிழ்க் கழகத்தினர் எனப் பல்வேறு அமைப்பினரும் அங்கங்கே உள்ள
தமிழ்ச் சங்கத்தினரும் தமிழ்ப் பள்ளிகளை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்;
ஆஸ்திரேலிய அரசின் சமீபத்திய ம�ொழிக் க�ொள்கையான 'ஆங்கிலம�ொழி அல்லாத
மற்றொரு ம�ொழியைக் கற்பித்தல்' என்ற புதிய க�ொள்கை மூலம் தமிழ்க் கல்வியை
அரசு உதவிய�ோடு வளர்ப்பதற்கு அங்கே வாய்ப்புக் கூடியுள்ளது.

நன்றி: டாக்டர் நல்ல பழனிசாமி, தாயகம் கடந்த தமிழ்

74

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

இலக்கியத்தில் இலக்கணம்

தமிழ் இலக்கணமானது உலகில் மிகத் த�ொன்மையானது என்று பலரும் அறிந்த

விடயமே. இருப்பினும், நம் தமிழ்ப்பள்ளி மாணவர்களில் பலர் தமிழ்மொழி மிகவும்

கடினமான ம�ொழி என ஒதுக்குகின்றனர். குறிப்பாகத், தமிழ் இலக்கணம் மிக

ஆழமானதால் நிறைய விடயங்களை மனனம் செய்ய வேண்டியுள்ளது எனக்

கூறுகின்றனர் மாணவர்கள். இலக்கணத்தையும் இலக்கியத்தையும் சிரமத்தோடு படிக்கும்

மாணவர்களுக்கு இலக்கியத்தில் இலக்கணம் உண்டு என்ற புத்தாக்கத் திறன�ோடு

சிந்திக்கச் செய்தால் மாணவர்களுக்குத் தமிழ்மொழிப் பாடமானது எவ்விதச் சிரமத்தையும்

தராது. ஆசிரியர்கள் இவ்வாறு பாடம் கற்பிப்பதால் மாணவர்கள் தமிழ்மொழியை

வெறுக்காமல் நேசிப்பர்.

அவ்வகையில் முதலில் இலக்கியத்தில் காணும் இடைச்சொல்லை ஆய்வு

செய்வோம். தமிழ் இலக்கணத்தில், ச�ொல்லியல் பகுதியில் காணப்படும் இடைச்சொல்

தமிழ்மொழியின் சிறப்பு என்றால் மிகையாகாது. பெயர்ச்சொல்லையும்

வினைச்சொல்லையும் இடமாகக் க�ொண்டு அவற்றின் முதல், இடை, கடை என்று

மூன்று நிலைகளிலும் நின்று ப�ொருள் தெளிவுக்கு வழிக்காட்டுவதே இடைச்சொல்

எனப்படுகின்றது. இடைச்சொற்களுக்குப் ப�ொருள் இருந்தாலும் அவை தனித்து

இயங்கும் ஆற்றல் இல்லாதவை. தமிழ்மொழியில் பல இடைச்சொற்கள் இருப்பினும்

ஓகார, ஏகார, மற்றும் உம்மை ஆகிய இடைச்சொற்களே முதன்மையாகக்

கருதப்படுகின்றன. கவிதைகள், செய்யுள், பாடல்கள், மற்றும் பழம�ொழிகளுக்கு

மெருகூட்டுவது இடைச்சொற்களே. தமிழ் இலக்கியங்களிலும் இலக்கணப் பகுதியைச்

சார்ந்த எடுத்துக்காட்டுகள் மற்றும் சான்றுகள் காணப்படுகின்றன.

முதலில், செய்யுளில் காணப்படும் இடைச்சொல்லைப் பலர் உணர்ந்ததில்லை
என்றால் மிகையாகாது. சான்றாக,

‘மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்(கு) இள வேனிலும்
மூசு வண்டறை ப�ொய்கையும் ப�ோன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே’

எனும் செய்யுளில் உம்மை மற்றும் ஏகார இடைச்சொல்லும் இருப்பதை
ஒவ்வொரு ஆசிரியரும் உணர்ந்து மாணவர்களிடம் இந்த அறிவைக் க�ொண்டு சேர்க்க
வேண்டும். வழக்கம் ப�ோல் அண்ணனும் தம்பியும், செடியும் க�ொடியும் எனக் கற்றுக்
க�ொடுக்காமல் இதுப�ோல் பாடல், செய்யுளில் காணப்படும் இடைச்சொற்களைச்
சான்றாகக் காட்டினால் மாணவர்கள் மேலும் ஆர்வத்தோடு பயில்வர்.

த�ொடர்ந்து, செய்யுள் மட்டுமல்லாமல் திருக்குறள்களிலும் இடைச்சொல்

பயன்படுத்தப்பட்டுள்ளது. சான்றாக,

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு’

75

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

எனும் திருக்குறளில் காணப்படும் முதற்றே எனும் ச�ொல்லில் ஏகார இடைச்சொல்
மறைந்திருப்பதைக் காணலாம். தற்போதைய 21-ஆம் நூற்றாண்டின் கல்வியில்
புத்தாக்கச் சிந்தனை, ஏரணச் சிந்தனை மற்றும் உயர்நிலைச் சிந்தனை மிக முக்கியக்
கூறாகத் திகழ்கிறது. ஆசிரியர்கள் திருக்குறள்களைக் கற்றுக் க�ொடுக்கையில்
மாணவர்களைப் புத்தாக்கத்தோடு சிந்தித்து அதில் காணும் இலக்கணக் கூறுகளை
அடையாளம் காணப் பணிக்கலாம். இதன்வழி மாணவர்கள் திருக்குறளைக் கூர்மையாகக்
கவனிப்பர்; அவற்றை ஆய்வு செய்வர்.

இடைச்சொல் மட்டுமல்லாமல் வலிமிகும், வலிமிகா இடங்கள், பெயரடை
வினையடை, சுட்டு, ப�ோன்ற இலக்கணக் கூறுகளைக் கற்றுக் க�ொடுக்கையில்
அனைவரும் பயன்படுத்தும் எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்தாது; பாடல்கள், கவிதைகள்,
திருக்குறள்கள் மற்றும் செய்யுள்களில் காணப்படும் சான்றுகளை நிறுவினால் மாணவர்கள்
ஆர்வத்தோடு பயில்வர். மேலும், இதுப�ோன்ற வழிகளைக் கையாளுவதால் மாணவர்களும்
புத்தகப் புழுக்களாக அல்லாமல் பயனுள்ள அறிவைப் பெற்றுப் பறந்து விரிந்த
சிந்தனையைப் பெறுவர்.

*ஜமுனாஸ்ரீ ப�ொன்னுசாமி (எஸ் 5)

தமிழ்ப்பேறு! தவப்பேறு!

தாய்மொழி என்பது தாயின்மொழி – அது
தாயும் நீயும் பேசும்மொழி
ஆயிரம் ம�ொழிகள் நீயறிந் தாலும்
ஆன்மா உணர்மொழி அந்தம�ொழி – அது
அன்னையின் கருவில் வந்தம�ொழி!

அன்னையின் மடியில் கிடக்கையிலே – அவள்
அன்பினைப் பாலாய்க் குடிக்கையிலே
சின்னவுன் செவியில் சில்லெனப் பாய்ந்து
தேனாய் இனித்திடக் கேட்டம�ொழி – உன்
சிந்தையில் விதைகள் ப�ோட்டம�ொழி!

த�ோளிலும் மார்பிலும் சாய்கையிலே – நீ
த�ொட்டிலில் ஆடி ஓய்கையிலே
ஏழிசை மிஞ்சிடும் தாயிசை கேட்டே
இதமாய்த் தூங்கிய பாட்டும�ொழி – அது
இதயங்கள் பேசிடும் வீட்டும�ொழி!

அன்னையை அழைத்தே அழுகையிலே – அவள்
அணைத்ததும் உடன்நீ சிரிக்கையிலே
தன்னிலை மறந்தே தாய்மனம் ப�ொங்கித்
தவிப்புடன் உன்னைக் க�ொஞ்சும�ொழி – அது
தரணியில் எதையும் மிஞ்சும�ொழி!

கவிஞர் செ.சீனி நைனா முகம்மது

76

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

ஒலியன்களின் தவறான ஒலிப்புக்கான காரணங்கள்

தாய்மொழியானது ஒருவர் பிறந்தது முதல் இறக்கும் வரை பேசி வரும் ஒரு ம�ொழியாகும்.
ப�ொதுவாக நாம் நமது எண்ணங்களைப் பேச்சு மூலமாகவும் எழுத்து மூலமாகவும்
வெளியிடுவதற்குத் தாய்மொழி சிறந்த கருவியாகப் பயன்படுகின்றது. இப்பூவுலகத்தில்
2700 ம�ொழிகள் நிலைத்து நின்றாலும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னே த�ோன்றிய
செம்மொழியான நம் தமிழ்மொழி இன்னும் ஆணிவேராய்த் தமிழர்களிடையே வேரூன்றி
நிற்கின்றது. தமிழ்மொழியானது இலக்கணத்திலும் சரி இலக்கியத்திலும் சரி சிறந்து
விளங்குகின்றது. சான்றாக,

“யாமறிந்த ம�ொழிகளிலே தமிழ்மொழிப�ோல்
இனிதாவ தெங்கும் காண�ோம்”

என்று பாரதி தமிழ்மொழியின் சிறப்பினைப் பற்றி எடுத்துரைத்தத�ோடு, தமிழ்ப்
பற்றினைத் தமிழர்களிடையே தூண்டியிருக்கிறார். அதுமட்டுமின்றித், தமிழ்
இலக்கியங்களை நன்கு சுவைத்த பாரதிதாசன் ‘கன்னல் ப�ொருள்தரும் தமிழே நீ ஓர்
பூக்காடு; நான�ோர் தும்பி!” என்று பாடியுள்ளார். இத்துணைச் சிறப்பு வாய்ந்த தமிழ்மொழி,
ம�ொழியியல் சார்ந்த சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. அதில் ஒன்றுதான் அதன் ஒலி
வடிவம்.

ஆம்! தமிழ்மொழியை இரண்டாம் ம�ொழியாகப் பயன்படுத்துவ�ோரால் தமிழ்
ஒலியன்கள் தவறாக உச்சரிக்கக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கின்றது. தமிழகம் தவிர
ஆந்திரம், கேரளம், கர்நாடகம் முதலிய மாநிலங்களில் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக்
க�ொண்டவர்கள் தமிழ்மொழியைப் பரப்புகின்றனர். மேலும், இலங்கை, ம�ொரிஷியஸ் தீவு,
மலேசியா, சிங்கப்பூர், மியான்மார், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் உள்ள
தமிழர்களிடம் தமிழ்மொழி உலா வந்து க�ொண்டிருக்கின்றது. உதாரணத்திற்குப், பல்லின
மக்கள் வாழும் நம் திருநாடான மலேசியாவை எடுத்துக் க�ொள்வோமே. இந்நாட்டில்
மலாய்க்காரர், சீனர், சீக்கியர், ஈபான், கடசான் என இன்னும் பல இனத்தவர்கள்
வாழ்ந்து வருகிறார்கள். தமிழ்மொழியைத் தமிழர்கள் மட்டுமின்றிப் பிற இனத்தவரும்
கற்றுக் க�ொண்டு பேசுகின்றனர். இதனால், நம் தமிழ்மொழியின் உச்சரிப்பும் ஒலியனும்
மாறுபடுகின்றன என்றுதான் கூற வேண்டும்.

அடுத்த கட்டமாகத், தமிழ்மொழியின் ஒலியன் வட்டார ம�ொழி வழக்கின் மூலம்
சிதைவடைய வாய்ப்புகள் ஏராளமாகக் குவிந்து கிடக்கின்றன. வட்டார ம�ொழி வழக்கு
என்று பார்த்தோமானால் தமிழ்மொழிப் பேச்சு வழக்கில் இடம் சார்ந்து அல்லது சமூகம்
சார்ந்து அல்லது த�ொழில் சார்ந்து வழங்கும் வழக்குகள் எனப் ப�ொருள் க�ொள்ளலாம்.
தமிழகத்தில் மட்டுமல்லாது உலகளவில் தமிழில் 22 வட்டார வழக்குகள் இருப்பதாக
எத்னொல�ொக் (Ethnologue) என்ற உலக ம�ொழிகள் பற்றிய பதிப்பு நிறுவனம்
தெரிவிக்கிறது. இவ்வட்டார வழக்குகளில் சமூகம், சாதி, மதம், அந்நிய ம�ொழி சார்ந்து
வட்டார வழக்குகள் வேறுபடுகின்றன. உதாரணத்திற்கு, “இங்கே” என்ற ச�ொல்
தஞ்சாவூர் பகுதிகளில் “இங்க” என்றும் திருநெல்வேலி பகுதிகளில் “இங்கென” என்றும்
இராமநாதபுரம் பகுதிகளில் “இங்குட்டு” என்றும் யாழ்ப்பணப் பகுதிகளில் “இங்கை”

77

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

என்றும், கன்னியாகுமரி மற்றும் மட்டக்களப்பில் சில பகுதிகளில் “இஞ்ஞ” என்றும்
உச்சரிக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி மலேசியாவிலும் வட்டார ம�ொழி
வழக்குகள் இருக்கின்றன. சான்றாக, வடக்கு மாநிலத்தில் வெயில் என்ற ச�ொல்லுக்குக்
“காங்கை” என்றும் தெற்கு மாநிலத்தில் “சூடு” என்றும் உச்சரிக்கின்றனர். எனவே,
வட்டார ம�ொழி வழக்கானது தமிழ்மொழியின் ஒலிப்பை மறுவச் செய்வதற்கு முக்கியக்
கரணியமாகவும் அமைகின்றது.

பாடல்களில�ோ திரைப்படங்களில�ோ ம�ொழிக் கலப்பு ஏற்படுவதை நம்மால்
ஓரளவு ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், சில ப�ொறுப்பற்ற, ம�ொழிப்பற்று அல்லாத
தமிழர்கள் தமிழ்மொழியைப் பேசத் தெரியாமல் பேசி நம் செம்மொழியைச்
சீர்க்குலைக்கின்றனர். ப�ொதுவாகத், தேசியப் பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள்
தமிழில் பேசத் தெரியாமல் ம�ொழியின் ஒலியனை நாசப்படுத்துகின்றனர். உதாரணத்திற்குத்,
தேசியப் பள்ளிக்கூடத்தில் பெரும்பாலும் மலாய் ம�ொழியில் கற்றுக் க�ொண்டதன்
விளைவால் தமிழ் ம�ொழியின் வரவை அவர்களின் நா ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றது.
ஆகவே, பிறம�ொழிப் பள்ளிக்குச் சென்று தமிழை அரை குறையாகப் பேசும்
தமிழர்களினாலே தமிழ் ஒலியன்கள் சிதைபடுகின்றன.

எனவே, தமிழ்மொழியின் ஒலியன் தவறாக உச்சரிப்பதற்குக் காரணங்கள்
ஏராளமானதாக இருக்கின்றன. ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் தமிழ்மொழியை ஏற்ற
உச்சரிப்புடன் பேச வேண்டும்; கலப்பு ம�ொழிகளைப் பயன்படுத்துபவர்கள் தூய தமிழில்
உச்சரிக்க முற்பட வேண்டும். தமிழனாகப் பிறந்த நாம் தமிழ்மொழியைச் சரியாக
உச்சரிக்கவில்லையென்றால் நாம் தமிழனாய்ப் பிறந்ததற்கு அர்த்தமில்லை.

செந்நெல் மாற்றிய ச�ோறும்- பசுநெய்
தேக்கிய கறியின் சுவையும்

தண்ணளி தானிய வகையும்- கட்டித்
தயிர�ோடு மிளகின் சாறும்

நன்மது ரஞ்செய் கிழங்கு- காணில்
நாவில் இனித்திடும் அப்பம்

உன்னை வளர்ப்பன; எனினும்- உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே

எனும் பாவேந்தர் பாரதிதாசனின் பாட்டு வரிகள், ச�ோறு, வகைவகையான குழம்பு,
கிழங்கு, பருப்பு முதலிய தானியவகைகள், நாவை ஊறச் செய்யும் அப்பம், கட்டித் தயிர்,
மிளகு ரசம் அனைத்தும் உன்னை அதாவது உனது உடலைத் தான் வளர்க்கும்; ஆனால்,
உன் உயிரையும் அதற்குள் இருக்கும் உணர்வையும் வளர்ப்பது தமிழ் மட்டுமே என்பதனை
வலியுறுத்துகின்றன.

*தினேஸ்வரி தங்கையா (ஆர் 5)

78

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

ம�ொழிக்குடும்பம்

ம�ொழி என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியத�ொரு கலை; ம�ொழியே மக்களின்
அறிவை வளர்த்து உயர்த்தும் அரிய கருவியாகவும் உள்ளது என மு.வரதராசன் (2011)
ம�ொழி வரலாறு எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். ம�ொழி ஆற்றல் வாய்ந்த கருத்துப்
பரிமாற்றத்திற்காகத் தலையாய கருவியாகவும் கருதப்படுகிறது.

மனிதனின் எண்ணங்களை, ஆசைகளைச், சிந்தனைகளைப் பல்வேறு வகையில்
ஏற்றவாறு மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்கு ஓர் ஒப்பற்ற சாதனமாகவும் இயங்கும்
தன்மை க�ொண்ட இயந்திரமாகவும் விளங்கி வருவது ம�ொழியாகும். அவ்வாறு உலகில்
எண்ணற்ற ம�ொழிகள் த�ோன்றின; வளர்ந்தன. ஆரம்பக் காலக்கட்டத்தில்
சைகைகளிலிருந்தே ம�ொழி த�ோன்றியதாகச் சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனால்,
கருத்தை உணர்த்தச் சைகைகள் ப�ோதுமானவையாக இல்லை. ஒளி குறைந்த
இடங்களில் மக்கள�ோடு த�ொடர்பு க�ொள்ள சைகை ம�ொழி பயன் தரும் வகையில்
அமையவில்லை. இம்மாதிரியான சூழலை மனிதன் தன் தேவையை நிறைவு செய்யக்
கண்டுபிடித்த ஒரு கருவியே ம�ொழியாகும்.

உலகில் 2500 முதல் 3500 ம�ொழிகள் உள்ளன என லூயிசு கூறுகிறார். குடும்ப
அடிப்படையில�ோ நிலப்பரப்பு அடிப்படையில�ோ ம�ொழிகளிடையே காணப்படும் ஒற்றுமை
வேற்றுமைக் கூறுகளின் அடிப்படையில�ோ இம்மொழிகளைப் பாகுபடச் செய்வர்.
அவ்வகையில் உலக ம�ொழிகளை 30 அல்லது 40 இனங்களாகப் பிரிப்பர். இந்திய
ம�ொழிகளின் மிகப் பெரிய இடமாகத் திகழ்வது இந்திய நாடாகக் கருதப்படுகிறது.
இதன்கண் 1600க்கும் அதிகமான ம�ொழிகளைக் க�ொண்டுள்ளன. அவ்வகையில் இந்திய
நாட்டில் இந்தோ ஆரிய ம�ொழிகள், திராவிட ம�ொழிகள், ஆஸ்திர�ோ ஆசிய ம�ொழிகள்,
சைன�ோ திபேத்திய ம�ொழிகள் என நான்கு ம�ொழிக்குடும்பங்கள் உள்ளன.

இவற்றில் இந்தோ ஆரிய ம�ொழியே அதிக மக்களால் பேசப்படும், அதாவது 73
விழுக்காடு மக்களால் பேசப்படும் ம�ொழியாகக் கருதப்படுகிறது. சமஸ்கிருதம் பழைய
இந்தோ ஆரிய ம�ொழியாகவும் பஞ்சாப், உருது, ப�ோன்ற ம�ொழிகள் புதிய இந்தோ
ஆரிய ம�ொழியாகவும் விளங்குகின்றன. இந்தோ ஆரிய ம�ொழியை அடுத்துத் திராவிட
ம�ொழிக்குடும்பமே 24 விழுக்காடு மக்களால் பயன்படுத்தப்படும் மிகப் பெரிய ம�ொழியாக
விளங்குகிறது. திராவிட ம�ொழிகளைப் பண்பட்ட ம�ொழி என்றும் பண்படா ம�ொழி
என்றும் பிரிப்பர். உலக ம�ொழிகளுள் திராவிட ம�ொழிகளில் இலக்கணக் கூறுகள்
த�ொடர்புற அமைந்துள்ளதால் இவற்றைத் தனிக் குடும்பமாகப் பிரித்துள்ளனர்.

*சங்கீதா நாதன் (எஸ் 5)

வறியவர்க்கெல்லாம் கல்வியின் வாடை
வரவிடவில்லை மதக்குருக்களின் மேடை
நறுக்கத் த�ொலைந்தது அந்தப் பீடை
நாடெல்லாம் பாய்ந்தது கல்வி நீர�ோடை

-பாரதிதாசன்

79

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

பிரதானப் பள்ளிகளில் உட்சேர்ப்புக் கல்வித் திட்டம்

"கறுப்பு இருளுக்குச் சமமாகக் கருதப்படுகிறது. கரும்பலகை தான் மாணவர்களின்
வாழ்வில் ஒளியேற்றுகிறது', எனும் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் கூற்றுக்கிணங்க
அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வாய்ப்புக் கிடைப்பது என்பது முக்கியமாகும்.
சாதாரணப் பிள்ளைகள் மட்டுமே கல்வியறிவை வளர்த்துக்கொள்ள முடியும் என்ற
எண்ணங்கள் இடம் பெற்றிருந்த காலம் மாறி இன்று சிறப்புத் தேவையுடைய
குழந்தைகளுக்கும் கல்வி வாய்ப்பு இருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.
அவ்வகையில், மலேசியக் கல்வியமைச்சு உருவாக்கிய சிறப்புக் கல்வித் திட்டங்களில்
ஒன்றுதான் உட்சேர்ப்புக் கல்வித் திட்டமாகும்.

உட்சேர்ப்புக் கல்வி என்பது சிறப்புத் தேவையுடைய மாணவர்களைப் பிற
மாணவர்களுடன் ஒன்று சேர்த்து, ஒரே ஆசிரியரால் கல்வி கற்கும் நிலையை உருவாக்கும்
ஒரு திட்டமாகும். அவ்வாறு கற்றலில் சிக்கல், கட்புலன் மற்றும் பார்வை குறைந்த
மாணவர்கள் பிரதான மாணவர்களுடன் இணைந்து பிரதான ஆசிரியரின் துணையுடன்
கற்றலை மேற்கொள்வர். இத்திட்டத்தின் முதன்மை ந�ோக்கமானது சிறப்புத்
தேவையுடைய மாணவர்கள் கல்வி மற்றும் கல்விச் சார்பற்ற திட்டங்களில் பிரதான
மாணவர்களுடன் சேர்ந்து பங்கேற்க வாய்ப்பு அளிப்பதாகும். மேலும், இத்திட்டம்
பிரதானப் பள்ளிகளில் பகுதி உட்சேர்கை மற்றும் முழு உட்சேர்க்கை என இரு
அணுகுமுறைகளில் செயல்படுகின்றது.

த�ொடர்ந்து, உட்சேர்ப்புக் கல்வி வெற்றி அடைவதற்குப் பலத்தரப்பினரின் பங்கு
தேவைப்படுகின்றன. அவற்றுள், பிரதான ஆசிரியரின் பங்கு மிக அவசியமாகும். பிரதான
ஆசிரியர் என்பவர் பிரதானப் பள்ளியில் சாதாரண மாணவர்களுக்குக் கற்றல் கற்பித்தலை
மேற்கொள்ளும் ஆசிரியராவார். இவரின் பங்கானது, சிறப்புத் தேவையுடைய மாணவரை
வகுப்பில் ஏற்றுக் கற்றல் கற்பித்தலை மேற்கொள்வதாகும். மேலும், பள்ளி நிர்வாகம்,
கருவூல ஆசிரியர், சிறப்புக் கல்வி ஆசிரியர், துணையாசிரியர், பெற்றோர் மற்றும் அரசு,
அரசு சாரா இயக்கங்களுடன் இணைந்து இத்திட்டத்தை அமல்படுத்துவதாகும்.

இவர் சிறப்புக் கல்வி ஆசிரியருடன் ஒன்றிணைந்து ஒரு மாணவரின் வளர்ச்சியைக்
கண்காணிப்பது மட்டுமில்லாமல், அதைக் குறிப்பெடுத்து அறிக்கையைத் தயார் செய்யவும்
வேண்டும். மேலும், சிறப்புக் கல்வி ஆசிரியர�ோடு கலந்துரையாடிக் கற்றல் கற்பித்தலை
எப்படி மேம்படுத்துவது என்று ஆல�ோசனையைப் பெற்றுக் க�ொள்ள வேண்டும்.
தெளிவாகக் கூறின், வகுப்புக் கற்றல் கற்பித்தலின் ப�ோது எல்லாத் தர மாணவர்களின்
தேவைக்கேற்பப் பிரதான ஆசிரியர் துலங்க வேண்டும்.

இவ்வாறு உட்சேர்ப்புக் கல்வித் திட்டம் வெற்றியடையப் பிரதான ஆசிரியர்கள்
பங்காற்றினாலும் அதை முடக்கும் வகையில் சில சவால்கள் வந்து க�ொண்டிருகின்றன.
அவற்றுள் சிறப்பு மாணவர்களிடையே எதிர்மறை மாற்றம், பிரதான ஆசிரியரிடையே
உட்சேர்ப்புக் கல்வியின் திறன்கள் குறைவாகக் காணப்படுதல், பெற்றோர்கள் பிரதான
ஆசிரியர்களின் மேல் வைக்கும் குறைவான நம்பிக்கை, பள்ளிகளில் உட்சேர்ப்புக்
கல்வித் திட்டத்தை அமல்படுத்துவதற்குப் ப�ோதுமான பாடத்துணைப் ப�ொருட்கள்

80

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

இல்லை ப�ோன்ற சவால்களைப் பிரதான ஆசிரியர்கள் சந்திக்க நேரிடும்.
முடிவாக, இன்று சிறப்புத் தேவையுடைய மாணவர்களுக்குப் பள்ளிகளில் சிறப்புக்
கல்வித் திட்டம் செயல்படுத்துவதென்பது வரவேற்க வேண்டிய ஒரு முயற்சியாகும்.
அவ்வகையில், கல்லூரியில் ஐந்து ஆண்டு காலப் பயிற்சிக்குப் பிறகு, த�ொடக்கப்பள்ளிகளில்
பிரதான ஆசிரியர்களாகப் பணிபுரியப் ப�ோகும் பயிற்சி ஆசிரியர்கள் இத்திட்டத்தின்
செயலாக்கத்தைத் தெரிந்து க�ொள்வது அவசியமாகும். பயிற்சி ஆசிரியர்கள் அனைத்து
வகை மாணவர்களுக்கும் திறன்படக் கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளும் ஆற்றலை
வளர்த்துக் க�ொள்வது என்பது காலத்தின் தேவையாகும்.

*ஷாலினி நாயர் குமரன் (கியு 4)

மெய்நிகர் கற்றல் (vle frog) தளம் என்பது அதிநவீன கற்றல்
கற்பித்தலை மாணவர்களுக்கு மேற்கொள்ளக்கூடிய ஒரு தளமாகும்.
கற்றல் கற்பித்தலைப் பல்வகைப்படுத்தி மாணவர்களை ஆர்வத்துடன்
செயல்பட வைக்கும் வண்ணம் இத்தளத்தை மலேசியக் கல்வி
அமைச்சு உருவாக்கியுள்ளது. இத்தளம் இணையத் த�ொடர்புடன்
நடத்தப்படக்கூடியதாகும். இத்தளத்தைக் க�ொண்டு கற்றல்
கற்பித்தலை மேற்கொள்ள மலேசியக் கல்வி அமைச்சு நவீன
முறையில் தயாரிக்கப்பட்ட chrome Lab மற்றும் Yes 4G இணையத்தைப்
பல பள்ளிகளுக்கு வழங்கியுள்ளது. இந்த chrome Lab – இல் 41
Chrome book அடங்கியிருக்கும். அதனுடைய மின்கலனானது 6 மணி
நேரம் பயன்படுத்தக் கூடியதாகவும் அமைக்கப்பெற்றிருக்கிறது.
ஆகவே, வகுப்பறையில் கற்றல் கற்பித்தலின் ப�ோது ஒரே நேரத்தில்
41 மாணவர்கள் அதிவேக இணையத் த�ொடர்புடன் மெய்நிகர்
கற்றலில் ஈடுபடலாம்.

நன்றி: http://sjustin-gcbtamil.blogspot.com

81

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

அணி கற்போம்

கீதாஞ்சலி திரைப்படத்தில் இடம்பெற்ற திரைப்பாடல்தான், ‘ஒரு ஜீவன் அழைத்தது’
எனும் பாடல். இப்பாடல் இசைஞானி இளையராஜாவின் இசை வண்ணத்தில்
மலர்ந்ததாகும். இப்பாடல் கவிப்பேரரசு வைரமுத்துவால் எழுதப்பட்டு இளையராஜா
மற்றும் சித்ராவால் பாடப்பட்டது.

முதலில் இப்பாடலில் உவமை அணி இடம்பெற்றுள்ளது. சான்றாக, ‘முல்லைப்
பூப் ப�ோலே உள்ளம் வைத்தாய்” எனும் வரிகளில் முல்லைப் பூ எப்படி மென்மையாக,
வெள்ளையாக மற்றும் நற்மணம் க�ொண்டதாக இருக்கிறத�ோ, அது ப�ோல அந்தப்
பெண்ணின் மனது இருக்கின்றது என்று கவிஞர் வர்ணனை செய்து உள்ளார். இதன்
புதைனிலை கருத்தானது, முல்லைப் பூ, தூய்மையானதைப் ப�ோன்று, அப்பெண்ணும்
எந்த ஒரு கள்ளக்கபடமற்றவளாகக் கருதப்படுகிறாள்.

அடுத்து, சிலேடை அணி. ஒரு ச�ொல் பல ப�ொருள் குறிப்பதையே சிலேடை
அணியாகும். கவிஞர் தன் இலக்கியத் திறமையால் இவ்வணியைச் சிறப்பாகக்
கையாண்டுள்ளார். எடுத்துக்காட்டாக, ‘என்னைக் கேளாமல் கண்ணம் வைத்தாய்,நெஞ்சில்
கண்ணம் வைத்தாய்’. இங்கு முதல் வரியில் வரும் கண்ணம் முத்தத்தைக் குறிக்கின்றது.
ஆனால், அடுத்த வரியில், துளை என்ற ப�ொருள் தருகிறது. இதன் உண்மையான
அர்த்தம் தான் அறியாமலே தன்னை நெருங்கி, நெருங்கிய பின் விட்டு விலகிச் செல்லும்
தலைவியின் பிரிவைத் தலைவனால் ஏற்றுக் க�ொள்ள முடியவில்லை.

த�ொடர்ந்து, தன்மை நவிற்சி அணி. இவ்வணியில் உள்ளதை உள்ளவாறு கூற
வேண்டும். எந்தவ�ொரு களப்படமும் தேவையில்லை. ஆகாயம் என்பது எல்லையற்றது,
வர்ணமற்றது, மற்றும் இடையற்றது. இது அனைவரும் அறிந்த உண்மை. இறைவனின்
படைப்பான ஆகாயத்தை நம்மால் எதுவும் செய்ய இயலாது. இதைத் தான் கவிஞர்
‘ஆகாயம் இரண்டாய் உடையாது’ என்று கூறியுள்ளார். இது தலைவனும் தலைவிக்கும்
இடையே என்றும் பிரிவே ஏற்படாது என்பதை உணர்த்துகிறது.

அதனை அடுத்து உயர்வு நவிற்சி அணி. ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்.
சான்றாக, ‘உன்னை நான் கண்ட நேரம் நெஞ்சில் மின்னல் உண்டானது’ எனும்
வரிகளில் மூலம் கவிஞரின் மிகைத்தன்மையைக் காணலாம். ஓர் இளம் பெண்ணைப்
பார்க்கும் ப�ொழுது ஓர் ஆடவனுக்குத் தனது நெஞ்சில் மின்னல் பாய்ந்தாற் ப�ோல ஓர்
உணர்வு உண்டாகியது. வானில் ஏற்படும் மின்னல், காதலன் காதலியைப் பார்க்கும்
ப�ொழுது ஏற்படுகிறது என மிகைப்படுத்திக் கூறியுள்ளார்.

இறுதியாக, உருவக அணி. ‘காயங்கள் எல்லாம் பூவாக’ எனும் வரிகளில்
காயங்களைப் பூக்கள�ோடு ஒப்பிடுகிறார். காயங்கள் என்பது ஒவ்வொரு மனிதனின்
வாழ்க்கையிலும் ஏற்படும் கசப்பான விஷயமாகும். ஆனால், அதைக்கூட மென்மையான
பூவ�ோடு ஒப்பிடும் திறமை கவிஞரையே சாரும். அடுத்ததாகக், ‘கண்டேனே உன்னைத்
தாயாக’ வரிகளின் மூலம் தலைவன் தன் தலைவியின் முகத்தைத் தன்னுடைய தாய்
முகமாக உருவகப்படுத்தி மகிழ்கிறான்.

*ஸ்ரீசித்ரா சேகர் (எஸ் 6)

82

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

தமிழ் இலக்கணம் கற்பதன் அவசியம்
தமிழ் இலக்கணத்தைக் கரைத்துக் குடிப்பதன்வழி நம்முடைய ம�ொழிவளம் பெருகும்.
நமது ம�ொழிவளம் பெருகினால் நம்மால் சரளமாகத் தமிழ் ச�ொற்களை வாசிக்கவ�ோ
அல்லது உச்சரிக்கவ�ோ இயலும். உதாரணத்திற்கு, இலக்கணத்தின் ச�ொல்லியலைக்
கற்பதன்வழி ம�ொழியின் பயன்பாட்டை நம்மால் அறிய இயல்கிறது. ஆகவே, இலக்கணம்
கற்பதனால் ம�ொழிவளம் பெருகும் என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது.
அதுமட்டுமின்றி, இலக்கணத்தை நன்கு கற்றுக்கொள்வதன்வழி மரபு கவிதை
எழுதும் ஆற்றல் நம்முள் ஊடுருவ அதிக வாய்ப்புண்டு. ஒருவரால் மரபு கவிதை எழுத
இயலும்போது, விழுமியங்கள் மற்றும் கலாச்சாரம் ப�ோன்ற கூறுகளை நன்கு ஆராய்வார்.
இதன்வழி, இலக்கணம் கற்கும் அவசியம் நமக்கு நன்கு விளங்குகிறது.
மேலும், இலக்கணத்தைக் கற்பதன்வழி, படைப்பிலக்கியத்தை மேம்படுத்திக்
க�ொள்ள இயல்கிறது. ஒருவரின் கற்பனை திறனால் உருவாகுவதே கவிதையாகும்.
வளர்ந்து வரும் 21ஆம் நூற்றாண்டில் படைப்பிலக்கியம் என்னும் திறமை அனைத்து
மானிடரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு கூறு ஆகும். ஆகவே, கற்பனை
ஆற்றலையும் படைப்பிலக்கியத்தையும் பெற வேண்டுமானால் இலக்கியத்தை நன்கு
கற்றல் அவசியமாகும்.

*யாழினி குணசேகரன் (யு 9)

83

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

பணித்திற மேம்பாட்டிற்கு ம�ொழியியல் அறிவு

பரந்த ந�ோக்கில் அணுகினால், மனிதனை முதலாகக் க�ொண்ட எல்லா உயிரினங்களும்
தங்களது உணர்வுகளையும் கருத்துகளையும் பரிமாற்றும் எந்த முறையும் ம�ொழி
எனலாம். மனிதர் தமக்குள்ள கருத்துகளையும் உணர்வுகளையும் த�ொடர்புறுத்தும்
முறைமையே ம�ொழியாகும். ஒலி வரிவடிவங்களில் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பே
ம�ொழி எனலாம். மிருகங்களும் தமக்கிடையே த�ொடர்புறுத்தலை நிகழ்த்துகின்றன.
இது சந்தங்களுடனும் முகபாவனையுடனும் நின்றுவிடும். ஆனால், எண்ணங்களை
வெளிப்படுத்தித் த�ொடர்புறுத்தம் ஆற்றல் மனிதனைத் தவிர்த்து ஏனைய உயிரினங்களுக்கு
இல்லை. ஆகவே, ம�ொழியை ஆக்கிய பெருமையும் அதனை அபிவிருத்தி செய்த
பெருமையும் மனிதனுக்குரியன.

ம�ொழியியல் என்ற ச�ொல்லை ஆராய்ந்து பார்த்தோமானால் ம�ொழி, இயல் என

இரண்டாகப் பகுக்க முடியும். மனிதனின் உணர்வுகளையும் கருத்துகளையும் பரிமாற்றும்

முறையை ம�ொழி எனலாம். ஒரு ப�ொருளின்

தன்மையை அல்லது குணத்தைக் குறிக்கும்

இயற்கை இயல் என்று ப�ொருள்படும்

ஆகவே, அறிவியல் அடிப்படையில்

மேற்கொள்ளப்படும் ம�ொழியைப் பற்றிய

கல்வி, ஆய்வு ப�ோன்றவை ம�ொழி அறிவியல்

என்றும், அறிவுத்துறை என்ற நிலையில்

ம�ொழியியல் எனவும் குறிப்பிடப்படுகின்றன.

ம�ொழிகளின் அமைப்பு எவ்வாறு வடிவம்

பெருகுகிறது; அந்த அமைப்பில் பங்கு

பெறும் நிலைகள், கூறுகள், அலகுகள்

ப�ோன்றவை, இவற்றிற்கு இடையே காணப்படும் த�ொடர்புகள் ப�ோன்றவை ம�ொழியியலில்

அடிப்படையாக விளங்குகிறது. பேச்சு வடிவங்களை ஆய்வின் ஆதாரங்களாக எடுத்துக்

க�ொண்டு அதன் உண்மையான இயல்பினை எடுத்துரைக்கும் காரணத்திற்காகவே

ம�ொழியின் ஒலி வடிவத்திற்கு முதன்மை தரும் நிலையில் ம�ொழியியல் ஆய்வுகள்

எழுந்தன.

ம�ொழியியல் பலவகையில் ஓர் ஆசிரியரின் பணித்திறத்தை மேம்படுத்துகிறது.
ம�ொழியியல் துறையில் சார்ந்திருக்கும் ஆசிரியர்களுக்குப் பேச்சாற்றல் வளம் இருக்கும்.
உச்சரிப்புச் சீராக இருக்கும். குறிப்பு இல்லாவிட்டாலும் தகுந்த நேரத்தில் மேடை
பேச்சாளராகத் தன்னம்பிக்கைய�ோடு பேச முடியும். மேலும், மாணவர்களுக்கிடையே
உள்ள உச்சரிப்புப் பிழைகளை அறிந்து பின் அதனைக் களைந்து மாணவர்களிடையே
உள்ள பயத்தைப் ப�ோக்கி அவர்களை ஒரு சிறந்த பேச்சாளராக உருவாக்க முடியும்.

அதுமட்டுமின்றிப், பேச்சொலியை ஆராயும் ஓர் அறிவியல் துறையான ஒலியியல்
பற்றிய அறிவானது, ம�ொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அவசியமாகும். அவற்றுள்
பேச்சொலிகள் பிறக்கும் முறை, வகைப்பாடு, மேற்கூற்று ஒலிகள், துணை ஒலிப்பு
முறைகள் ப�ோன்றவை அடங்கும். மேலும், ஆசிரியராக இருந்து ஒலியியல் வகைகளையும்

84

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

அவற்றிற்கிடையே உள்ள த�ொடர்புகளையும் முறையாகவும் அறிவியல் அடிப்படையிலும்
ஆராய்ந்து அறிவை ஆழப்படுத்திக் க�ொள்ள வேண்டும். ஏனென்றால், ம�ொழியைக் கற்க
விரும்பும் மாணவர்களுக்கு ஓர் எழுத்து எப்படி, எங்கு, எவ்வாறு பிறக்கின்றது என்பதைப்
பற்றிய சிந்தனையை உணர்த்த வேண்டிய பெரும் கடமை ஆசிரியர்களுக்கு உள்ளது.
இதன்வழி, ஆசிரியர் மாணவர்களின் உச்சரிப்புப் பிழைகளைக் களைய முடியும்.

த�ொடர்ந்து, தற்போதைய ஆய்வின்படி 30% மாணவர்கள் பின்தங்கிய நிலையில்
இருக்கக் காரணம் தாய்மொழியும் சார்பு ம�ொழியும் தான். தாய்மொழியில் மட்டும்
பழக்கப்படுத்திக் க�ொண்ட மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் சிக்கலை
எதிர்நோக்குகின்றனர். ஆக, ம�ொழியியல் துறையில் ஆளுமை பெற்ற ஓர் ஆசிரியரால்
இந்தச் சூழலை நிச்சயம் களைய முடியும்.

மாணவர்களின் சிக்கலைக் களைய ஆசிரியர்கள் பல நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டி இருப்பதால் இயல்பாகவே அவர்களின் பணித்துறையை
மேம்படுத்திக் க�ொள்கின்றனர். ம�ொழியியலை அறிந்த ஆசிரியர்கள் ஆய்வுக்
கட்டுரைகளை எழுதி அதனைப் படைத்து இத்துறையை விரிவுப்படுத்துவத�ோடு தங்களின்
பணித்திறனையும் மேம்படுத்திக் க�ொள்கிறார்கள். ம�ொழியியல் தெரிந்திருப்பதால்
ஆசிரியர்கள் எம்மொழியாக இருப்பினும் கலப்பில்லாமல் பேசுவார்கள். எம்மொழியும்
‘ஹாவாய்’ ம�ொழியைப் ப�ோன்று மருவாமலும், ‘கிரேக்க’ ம�ொழியைப் ப�ோன்று அழியாமலும்
அதனைக் காக்க முற்படுகின்றனர்.

இறுதியாக, ம�ொழியியல் அறிவைப் பயிலும்போதும் மாணவர்களுக்குப்
புகட்டும்போதும், ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பெரும் தடைகற்களாக
எண்ணாமால், தமிழாசிரியர்களுக்குத் தேவையான ம�ொழியியல் அறிவின் முக்கியத்துவத்தை
உணர்ந்து செயல்பட வேண்டும். இதன்வழித், தமிழாசிரியர் ஒருவர் தம் பணித்திற
மேம்பாட்டிற்கு ம�ொழியியல் அறிவை நன்கு பயன்படுத்திக் க�ொள்ளலாம்.

*ஹிரண்யா நல்லப்பன் (எஸ் 7)

பயணத்தின் முடிவை நெருங்கிக்கொண்டு
இருப்பவர்களைவிடப் பயணத்தின் த�ொடக்கத்தில்

இருப்பவர்களுக்கே வழிகாட்டி மிகத் தேவை.

வளர்ந்த மரங்களைவிட வளரும் பயிர்களுக்கே வேலி மிக
இன்றியமையாதது.

(அதிகைமணி, செந்தமிழ்ச் சிவநெறி)

85

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

உச்சரிப்புத் தவறுகளைக் களைந்திட ஆசிரியர்கள்
கையாள வேண்டிய நடவடிக்கைகள்

உச்சரிப்பு என்பது ஓரு ம�ொழியை எவ்வாறு பேசுவது அல்லது ஒரு ம�ொழியின் ச�ொற்களை
எவ்வாறு உச்சரிக்கப்படுகிறது என்பதாகும். அனைத்து ம�ொழிகளிலும் உதடுகள் குவித்து, வாயின்
நடுவில் இருந்து த�ொண்டையிலிருந்து மற்றும் வயிற்றிலிருந்து உருவாகும் எழுத்துகளின்
ஒலிகளே உச்சரிப்பு எனப்படுகிறது. ஆசிரியர்கள் உச்சரிப்புத் தவறுகளைக் களைந்திட
மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளின் முக்கியத்துவம் பற்பல.

அவற்றில் முதலாவதாக, ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் ர, ற, ல, ழ, ள, ண, ன
ஆகிய எழுத்துகளைச் சரியான ஒலியன்களைக் க�ொண்டு உச்சரிக்கக் கற்றுக் க�ொடுத்தார்களானால்
நிச்சயமாக மாணவர்களால் ச�ொற்களின் ப�ொருள் வேறுபாடு அறிந்து உச்சரிக்க இயலும்.
எடுத்துக்காட்டாகப், பலம் மற்றும் பழம் ஆகிய இவ்விரு ச�ொற்களையும் சரியாக
உச்சரித்தோமானால் அதன் ப�ொருள் வேறுபாட்டை நம்மால் நன்கு விளங்கிக் க�ொள்ள இயலும்.
இதனால், நாம் பேசும் கருத்துகளைப் பிறரால் தெளிவாகப் புரிந்து க�ொள்ள இயலும். இதுவே
பின்பு விளைப்பயன்மிக்கத் த�ொடர்பாடலுக்கும் வித்திடும்.

அடுத்ததாக, ஆசிரியர்கள் ஒவ்வோர் எழுத்தும் எங்கிருந்து பிறக்கிறது, எங்கே
வெளிப்படுகிறது என்று தெளிவாக வரையறுத்து மாணவர்களுக்கு உச்சரிக்கக் கற்றுக்
க�ொடுத்தார்களானால் நிச்சயமாக மாணவர்களிடத்தில் தவறான உச்சரிப்பைத் தடுத்துச் சிறந்த
பேச்சாளர்களாக அவர்களை உருவாக்க இயலும். ஏனெனில், ஒருவர் தவறான உச்சரிப்புகள�ோடு
பேசினார்களானால் அதனைக் கேட்பவர்கள் அவர்கள் மீது தாழ்ந்த எண்ணத்தைக் க�ொண்டிருக்கும்
நிலைமை ஏற்படும். ஆகவே, சரியான உச்சரிப்பானது நமது அடையாளத்தைப் பிறரிடம்
காண்பிப்பதற்கு மிகவும் அவசியமாகும்.

மேலும், தமிழ் எழுத்துகளை இப்படிதான் உச்சரிக்க வேண்டும் என்று ஒரு தெளிவான
இலக்கணத்தோடு ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக் க�ொடுத்தார்களானால்
மாணவர்களிடத்தில் சரளமாக வாசிக்கும் ஆற்றலை வளர்க்க இயலும். ஏனெனில், ச�ொற்களைச்
சரியாக உச்சரிக்கக் கற்றுக் க�ொண்டோமானால் நம்மால் அனைத்து வாசிப்புப் படிவங்களையும்
தடுமாற்றமின்றிச் சரளமாக வாசித்துக் கூற வரும் கருத்துகளைத் தெளிவாக விளங்கிக் க�ொள்ள
முடியும்.

அத�ோடு, ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில் நாபிறழ் பயிற்சி ப�ோன்ற நடவடிக்கைகளை
மேற்கொண்டார்களானால் நிச்சயமாக மாணவர்களால் பிழையற உச்சரித்துப் பேசும் ஆற்றலை
வளர்த்துக் க�ொள்ள இயலும். இவ்வாறு பேசும் ஆற்றலை வளர்த்துக் க�ொள்வதின் மூலம்
மாணவர்களால் ச�ொற்போர், பேச்சு முனை ப�ோன்ற ப�ோட்டிகளில் சிறந்த படைப்பை அளித்துக்
குன்றின் மேலிட்ட விளக்கு ப�ோலத் தங்களுடைய திறமையைப் பிறருக்கு வெளிக்கொணர
இயலும்.

இறுதியாக, ஆசிரியர்கள் சரியாக உச்சரிக்கும் ஆற்றலை மாணவர்களிடத்தில்
வளர்த்தார்களானால் வகுப்பறையில் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கையைச் சிறப்பாகச்
செயல்படுத்த இயலும். ஒலியனியல் அடிப்படையில் ஒவ்வொரு வார்த்தையையும் எவ்வாறு
உச்சரிக்க வேண்டும் என்பதை ஆசிரியர்கள் புரிந்து மாணவர்களுக்குக் கற்றுக்
க�ொடுத்தார்களானால் மாணவர்களால் பாடத்தை எளிமையாகப் புரிந்து க�ொண்டு வளமான
கற்றல் கற்பித்தலுக்கு வித்திட இயலும்.

86

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

சுருங்கக்கூறின், ஒவ்வோர் ஆசிரியரும் ம�ொழியியல் துறையில் தங்களுடைய
அறிவாற்றலை வளர்த்துக் க�ொள்வது மிகவும் அவசியமாகும். முக்கியமாக ஒவ்வோர்
பயிற்சி ஆசிரியரும் ம�ொழியியல் துறையில் சிறந்து விளங்கி மாணவர்களிடத்தில்
வளமான ம�ொழியாற்றலை வளர்க்கச் செய்வது மிகவும் அவசியமாகும்.

*நிர்மலாவதி குணசீலன் (எஸ் 5)

ஈறுகெட்ட பெயரெச்சங்கள்

த�ோட்டப் புறங்களில் த�ொடங்கிய வாழ்க்கையில்
த�ொழில்வளம் சேர்த்துத் தந்தோம் - நாம்
த�ொல்லைகள் சேர்த்துக் க�ொண்டோம்!
நாட்டிலும் ........ நல்லவர்கள் என்றே
நற்பெயர் தேடிக் க�ொண்டோம் - ஆனால்
நலிந்து வீழ்ந்து விட்டோம்!

ஒற்றுமையைப் புறந்தள்ளி வேற்றுமையை வளர்த்திங்கு
ஓ(வ�ோ)ட்டாண்டி யாகி விட்டோம் - நாம்
ஓணானாய் மாறி விட்டோம்!
கற்பதில் கேட்பதில் நன்னெறி காப்பதில்
கவனத்தை விட்டு விட்டோம் - நாம்
காக்கைப�ோல் வாழ்ந்து கெட்டோம்!

வள்ளுவன் வகுத்ததை வள்ளலார் விதைத்ததை
மேடைகளில் மட்டுமே முழங்கின�ோம் - நம்
வேதமாய் ஏற்கவே தயங்கின�ோம்!
நல்லாரின் துணையைச் சான்றோரின் பணியைக்
க�ொள்ளாது ப�ொய்யரைப் ப�ோற்றின�ோம் - நலம்
தருகின்ற வல்லவரைத் தூற்றின�ோம்!

கலைகலாச் சாரத்தில் சீரிய பண்பாட்டில்
பிழைகளைச் செழிக்க விட்டோம் - சினிமாக்
களைகளைத் தழைக்க விட்டோம்!
மூளையை முடமாக்கி ம�ோழையாய் ...
வழக்கத்தின் வழி நடந்தோம் - மூடப்
பழக்கத்தின் தடம் கிடந்தோம்!

கவிஞர் சு.நா.மாயவன்

87

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

21ஆம் நூற்றாண்டில் மதிப்புயர்வு தரும் திறன்கள்

தேசியக் கல்வித் தத்துவத்தின் அடிப்படையில் தமிழ்மொழிக் கலைத்திட்டம் மாணவரின்
அறிவாற்றல், ஆன்மீகம், உடல், உள்ளம் ஆகிய கூறுகளில் சமச்சீர் அடைய
உருவாக்கப்பட்டதாகும். மாணவர்களின் அன்றாட வாழ்க்கைக்குத் த�ொடர்புடையதாகவும்
இன்றைய சமுதாய வளர்ச்சிக்கு ஏற்புடையதாகவும் இத்திட்டம் அமைகின்றது. மேலும்,
இத்திட்டம் நன்னெறிப் பண்பு, அறிவு வளர்ச்சி, நாட்டுப் பற்று, ஒற்றுமையுணர்வு
சமுகத்தை உருவாக்குவதற்கு வழிவகுக்கின்றது. இக்கல்வித்திட்டம் ஒரு புதிய
சமுதாயத்தை உருவாக்க மிகவும் துணைப்புரிகிறது என்றால் அது மிகையாகாது.
அவ்வகையில் ஆசிரியர்கள் புதிய நூற்றாண்டில் மாணவர்களின் மதிப்புயர்வு தரும்
திறன்களை உயர்த்துவதில் மிகவும் பங்காற்றுகின்றனர்.

முதலில் ஆசிரியர்கள் பாடத்திட்டத்தை மாணவர்களின் தரத்திற்கேற்ப அமைத்தல்
வேண்டும். தற்போதைய காலக்கட்டத்தில் மாணவர்கள் ஆசிரியர்களைக் காட்டிலும்
மிகத் திறமைசாலியாக இருக்கின்றனர். ஆகவே, ஆசிரியர்கள் மாணவர்களுக்குச் சவால்
மிக்க ஒரு பாடத்திட்டத்தை மாற்றியமைப்பது அவசியமாகிறது. இதனால், மாணவர்களின்
சிந்தனைத் திறன் மேம்படுகிறது. ஆசிரியர்கள் ப�ோதிக்கும் ப�ோது மாணவர்களை
முழுமையாக ஈடுபடுத்துதல் வேண்டும். ஆசிரியர்கள் அவர்களின் பங்கினைக் குறைத்துக்
க�ொண்டு, மாணவர்களின் படைப்பை அதிகரித்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக,
ஆசிரியர்கள் பாடத்தில் ஒரு பகுதியை விளக்கிய பின், மாணவர்களை அதைப்பற்றிய
கருத்துகளைச் சக மாணவர்களுடன் பகிரச் செய்தல். இதனால், மாணவர்கள் சிந்தித்துப்
பாடத்திற்கு ஏற்பக் கருத்துகளை முன் வைப்பார்கள்.

த�ொடர்ந்து, ஆசிரியர்கள் மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை
ஊக்குவித்தல் வேண்டும். வீட்டுக்கு வெளிச்சம் தருவது சாளரம்; புத்தகங்கள் இல்லாத
வீடு, சாளரங்கள் இல்லாத சத்திரம் ப�ோன்றது". நம்மை ஏமாற்றாத, ஒரு சிறந்த
நண்பன் புத்தகம் தான். ஆகவே, தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர்கள் நாளுக்கொரு புத்தகம்
வாசிக்கும் பழக்கத்தைத் தினமும் மாணவர்களிடயே அமல்படுத்துதல் வேண்டும். மேலும்,
மாணவர்கள் ஒரு வாரத்தில் எத்தனை நூல்களைப் படித்துள்ளனர் என்பதையும்
ஆசிரியர்கள் உறுதி செய்து அவர்களில் அதிகம் வாசித்த மாணவர்களுக்குப் பரிசு
வழங்கிப் பாராட்டு செய்தல் வேண்டும். நல்ல புத்தகங்களைப் படிப்பதால் அறிவாற்றல்
வளர்வத�ோடு உயர்ந்த சிந்தனைகள் பிறக்கும்; எண்ணங்கள் நேர் பெறும்; நமது
திறமைகள் மிளிரும்; உற்சாகம் ஊற்றெடுக்கும்; ச�ோர்வு அகலும்; மனம் நிறைவு பெறும்;
முடிவுகள் எடுக்கப் புத்தகம் துணைபுரியும்! வாழ்க்கை மேம்படும்! முன்னேற வழி துலங்கும்.
த�ொடர்ந்து, மாணவர்கள் ச�ோதனையில் சிறந்த தேர்ச்சி பெற வாசிப்புப் பழக்கம்
பெரும் துணைப்புரியும்.

இறுதியாக, மேலே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவதன் வழி, ஆசிரியர்கள்
மாணவர்களின் சிந்தனைத்திறன், பல்வகை நுண்ணறிவு, வாழ்நாள் முழுதும் கல்வி மற்றும்
எதிர்காலவியல் ப�ோன்ற திறன்களை வளர்க்க முடியும். ஆகவே, ஆசிரியர்கள் சுயநலமாக
இல்லாமல், நம் ம�ொழி, நம் மதம், நம் இனம், நம் நாடு என்ற அடிப்படையில் இந்த
ஆசிரியர் பணியைச் செய்தல் வேண்டும்.

*தவனிஷா ரவிசந்திரன் (ஆர் 5)

88

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

பல்வகை நுண்ணறிவு

இன்றைய காலக்கட்டத்தில் ப�ொரும்பால�ோர், அதிலும் ஆசிரியர்கள் பல்வகை
நுண்ணறிவினைப் பற்றிப் பேசுவதைக் கேட்டிருப்போம் என்றால் அது மறுப்பதற்கில்லை.
நாம் முதலில் நுண்ணறிவு என்றால் என்ன என்பதனைக் காண்போம். ஒன்றோ அல்லது
அதற்கும் மேற்பட்ட பண்பாட்டுச் சூழலில் மதித்துப் ப�ோற்றத் தக்க வகையில்
சிக்கல்களைக் களைகின்ற ஆற்றலையும் ஆக்கத் தன்மையுடைய படைப்புகளைப்
படைப்பதும் நுண்ணறிவு என்று கருதப்படுகின்றது. வேறுவகையாகக் கூறின், பல்வேறு
சூழல்களில் புதுமையாகவும் நுட்பமாகவும் சிக்கல் களையும் ஆற்றலை மாந்தர்
க�ொண்டுள்ளனர் என்றும் அதற்கு அவர்களிடம் இயல்பாகவே அமைந்திருக்கும் பல்திற
ஆற்றல்கள் துணை நிற்கும் எனவும் நம்பப்படுகின்றது. ஆனால், இதற்கு முரணாக
அமைந்துள்ளது கார்ட்னர் என்பவரின் கருத்து. இந்த ஆற்றல்களுக்கும் மரபு வழியாகப்
பேசி வருகின்ற நுண்ணறிவுக்கும் எவ்விதத் த�ொடர்பும் இல்லை என எடுத்துரைத்துள்ளார்
கார்ட்னர்.

இக்கூற்றின் வாயிலாக, மாந்தரிடம் பல்திற ஆற்றல்கள் இருப்பதாகவும்
அவற்றை ஒவ்வொரு மாந்தரும் முழுமையாக வெளிப்படுத்தி வளர்த்துக்கொள்ளவும்
மேம்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பளிக்க வேண்டுமெனவும் பலர் கூறுகின்றனர்.
ப�ொதுவாககே, ஆசிரியரின் கற்றல் கற்பித்தல் இவ்வாற்றல்களை முழுமையாகப்
பயன்படுத்தும் வகையில் அமைந்தால் கற்றல் சிறக்கும், பல்வகைப்படுத்தப்பட்டதாக
அமையும், பட்டறிந்து கற்கும் சூழலை உருவாக்கும் எனவும் கருதுகின்றனர். சுருங்கக்
கூறின், இப்பல்திற ஆற்றல் பற்றிய அறிவினை ஆசிரியர்கள் பெற்றிருப்பதன் வழி,
அவர்கள் தத்தம் மாணவர்கள் கற்கும் பாங்கிற்கு ஏற்பக் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
உருவாக்கிக் க�ொள்ள இயலும்.

பல்திற ஆற்றலின் வகைகள்:
ம�ொழித்திற ஆற்றல்
• கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து ஆகிய ம�ொழித்திறன்களைத் தெளிவாகவும்

ஆற்றல்களுடனும் பயன்படுத்துதல்.

ஏரணக்/ கணிதத்திற ஆற்றல்
• இது அறிவியல், கணக்கியல் சிந்தனைகள�ோடு த�ொடர்புடையது.
• பகுத்தறிதல், த�ொகுத்தறிதல், காரணக்காரிய த�ொடர்புகளைக் கண்டறிதல்,

நுட்பமான சிக்கல்களைக் களைதல் ப�ோன்றவற்றையும் சிக்கலான த�ொடர்புகளைக்
கண்டு தெளிதலையும் உள்ளடக்கியது.

வெளியிடத்திற ஆற்றல்
• இதனைக் காட்சி நிலைத்திற ஆற்றல் என்றும் வழங்குவர். இது காட்சி நிலைய�ோடு

த�ொடர்புடையது.
• ப�ொருள்களைக் கண்டு அவற்றின் வடிவ அமைப்பை அடையாளங்கண்டு

89

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

க�ொள்வதையும் மனத்தில�ோ சிந்தனையில�ோ காணும் வடிவங்களைக் காட்சி
நிலைக்கு உருவம் க�ொடுக்கும் ஆற்றலையும் இஃது உள்ளடக்கியது.

இசைத்திற ஆற்றல்
• இசைத்திற ஆற்றல் சூழலில் உள்ள பல்வேறு ஒலிகளை அடையாளம் காண்பதும்

தாளம் ப�ோன்றவற்றை உணர்ந்து இரசிப்பதையும் உள்ளடக்கியுள்ளது.
• த�ொனி வேறுபடுகளை அறிதலும் இதன�ோடு த�ொடர்புடையதாகும்.
• ப�ொதுவாக, இசைக் கூறுகளைப் பயன்படுத்திப் பாடுவதும் இசைப்பதும் இதன�ோடு

த�ொடர்புடையதாகும்.

இயற்கைத்திற ஆற்றல்
• தம் சூழலிலுள்ள ப�ொருள்களின் ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் கண்டறியும்

ஆற்றல்.
• மனிதன், விலங்குகள், தாவரங்கள், உணவுகள், உடைகள் ப�ோன்ற ப�ொருள்களின்

தன்மைகள் அறிதல் ப�ோன்றவையும் இதில் அடங்கும்.

பிறரிடை உறவுத்திற ஆற்றல்
• ஒருவர் மற்றவருடன் த�ொடர்பு க�ொள்வதும் உறவு க�ொள்வதும் இந்த ஆற்றல�ோடு

த�ொடர்புடையதாகும் பிறர�ோடு கலந்துரையாடுதல், ஒத்துப்போதல், இணைந்து
பணியாற்றல், பிறரை ஊக்கப்படுத்துதல், ப�ோன்றவை இந்த ஆற்றல�ோடு
த�ொடர்புடையனவாகும்.

தன்னிசைத்திற ஆற்றல்
• இது தனி மனிதன் தன்னகத்தே எவ்வாறு ஒரு சமன்நிலை மிக்க ஆளுமையை

உருவாக்கிக் க�ொள்கின்றார் என்பதன�ோடு த�ொடர்புடைய ஆற்றலாகும்.
• சிந்தனை மீட்டுணர்தல் அல்லது சிந்தனை மீட்சி ஆன்மீக உணர்வு முதலியவற்றை

இவ்வாற்றல் உள்ளடக்கியுள்ளது.
• சுயக்கட்டுப்பாடு, சுயமாகச் செயல்படுதல் ப�ோன்றவற்றோடும் இது

த�ொடர்புடையதாகும்.
• தனிமனிதனின் பயன்விளைவுமிக்க வகையில் செயலாற்றும் தன்மையைப் பெறுதல்

இவ்வாற்றல�ோடு த�ொடர்புடையதாகும்.

உடலியக்கத்திற ஆற்றல்.
• இஃது உடலியக்கத்தோடு த�ொடர்புடைய ஆற்றலாகும்.
• பல்வேறு உடலியக்கங்களை அறிவதும் அவற்றைப் பற்றிய அறிவினைப் பெறுதலும்

இவ்விடயங்களைக் கட்டுப்படுத்தும் உடல் கூறுகளைப் பற்றி அறிதலும் இதில்
அடங்கும்.
• மனமும் உடலும் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றலையும் இது குறிக்கும்.

த�ொகுப்பு:
*யுவராணி சுப்பிரமணியம் (ஆர் 5)
*வித்தியா தர்சினி கேசவன் (ஆர் 5)

90

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

21ஆம் நூற்றாண்டுத் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில்
க�ொணரவேண்டிய

புத்தாக்கத் திறன்களும் மாற்றங்களும்

“இலக்கவியல் கல்வி மாற்றத்தைக் காணவும் ப�ொருளாதார மேம்பாட்டின் செழுமையான
வளர்ச்சிக்கும் உருமாற்றத்திற்கும் மாணவர்களுக்குப் புதிய இலத்திரலியல் த�ொழில்நுட்பக்
கருவிகள் தேவைப்படுகிறது. கல்விக் க�ொள்கைகள் இந்தப் புதிய மாற்றதினூடே
பயணிக்கச் சமூகத்தைத் தயார்படுத்துவது முக்கியம். இதன்வழி மாணவர்கள் வகுப்பறைக்கு
வெளியே உள்ள உலக�ோடு ஊடாட வகை செய்யப்பட வேண்டும். எனவே, நாட்டின்
கல்விக் க�ொள்கை இதனைத் தழுவி, 21ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன்களை
முழுமையான கல்விசால் தரநிலையை அடைய மையப்படுத்துவது அத்தியாவசியம்,”
(NCREL & Metiri Group, 2003). இதற்கேற்ப, 19ஆம் நூற்றாண்டில் த�ொடங்கிய
மலேசியத் தமிழ்க்கல்வி, 21ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கேற்ப இயங்கத்,
தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் க�ொணரவேண்டிய புத்தாக்கத் திறன்களுக்கும்
மாற்றங்களுக்கும் முக்கியத்துவம் வழங்குவது, தமிழ்க்கல்வியை மட்டுமில்லாது அதைப்
பயிலும் சமூகத்தினரையும் உயர்த்தவே செய்யும்.

முதலில், 21ஆம் நூற்றாண்டுக் கல்வி

முறைப்படி கற்றல் கற்பித்தல் நடத்தப்பட

வேண்டும். 21ஆம் நூற்றாண்டில் நுழைந்து

பதினேழு ஆண்டுகள் ஆகிவிட்டன. 21ஆம்

நூற்றாண்டுப் புதிய கற்றல் துணைக்கருவிகள்

என நான்கு கூறுகளை ஹுஸ்டன்

பல்கலைக்கழகம் வகைப்படுத்தியுள்ளது.

4C’s என்பது ஆக்கச்சிந்தனை,

ஆய்வுச்சிந்தனை, த�ொடர்பாடல்,

இணைந்து செயல்படுதல், ஆகிய

நான்கையும் உள்ளடக்கியது. இவையாவும்

தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் க�ொணரவேண்டிய மாற்றங்களுக்கு வழிவகுப்பவை.

கற்பித்தல் சூழலுக்கு உகந்த கற்றல் துணை கருவிகளைப் பயன்படுத்துவது ஓர்

ஆசிரியரின் திறனாகும்.

த�ொடர்ந்து, அதிர்மாற்ற வகுப்பறை (flipped classroom) வழித் தமிழ்மொழி
கற்றல் கற்பித்தலில் புத்தாக்கத் திறனையும் மாற்றத்தையும் வெளிக்கொணரலாம்.
அதிர்மாற்ற வகுப்பறை என்பது முறையான நிரல் கற்பித்தலுக்கு எதிர்மறையானதாகும்.
மாணவர்கள் இவ்வதிர்மாற்ற வகுப்புக்கு வரும் முன்பே முன்னறி நடவடிக்கைகளில்
ஈடுபட ஆசிரியர் ஊக்குவிப்பர். இணையம் வழி செய்முறைக் காண�ொளி, விளக்கவுரை
த�ொடர்பான ஆய்வுச்சால் கட்டுரையை வகுப்பறைக்கு வெளியே பார்த்தும் கேட்டும்
வாசித்தும் தெரிந்து க�ொள்வர்.

அடுத்ததாக, 21ஆம் நூற்றாண்டு வகுப்பறை மறுவடிவமைப்பு. இவ்வகுப்பறை
மறுவடிவமைப்பு மாணவர்களை மையமாக அமைத்துக் கற்றல் கற்பித்தல் நடக்க

91

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

ஊக்குவிக்கிறது. இன்றைய கல்விச் சூழலும் உலகளாவிய மாற்றங்களுக்கு ஈடுக�ொடுக்கவும்
நுட்பவியல் திறன் கருவிகள், இணைய இணைப்பு, சமூகம் ப�ொருளாதாரம், சுற்றுச்சூழல்
விழிப்புணர்வு மிகுந்த, சிக்கலைக் களையும் அறிவார்ந்த மாணவர்கள் சமூகத்தை
வடிவமைக்கும் ப�ொறுப்பும் ஆசிரியர்களுக்கு உண்டு. அதற்குத் தகுந்தாற்போல்
வகுப்பறையும் அமைய வேண்டும். வகுப்பறைச் சூழல் மாணவர்களின் அறிவை இயக்கச்
சாதகமாக இருந்தாலே பல விசயங்களை மாணவர்களிடத்தே க�ொண்டு செல்லலாம்.
தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் ஓர் ஆசிரியர் ஏற்படுத்த வேண்டிய மற்றொரு
மாற்றம் என்னவென்றால் மெதுநிலை கற்றல்நிலை மாணவர்களை அடையாளம்
காணுதல். மெதுநிலை கற்றல்நிலை மாணவர்கள் என்பவர்கள் கல்வியில் சற்றுப்
பின்தங்கியவர்களே. எந்த மாணவரும் இந்த 21ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன்களைப்
பெறுவதிலிருந்து விடுபட்டுவிடக்கூடாது என்பது ப�ொது ந�ோக்கமாகும். எனவே,
மெதுநிலை கற்றல் மாணவர்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு குறைநீக்கல்
கற்பித்தல் அல்லது புதிய நுட்பத் துணைக் கருவிகளைப் பயன்படுத்தி அவர்களையும்
மேன்மையுற வைப்பது ஆசிரியருக்கு ஒரு சவால் எனலாம்.
சுருங்கக்கூறின், ஒவ்வொரு தமிழாசிரியரும் தங்கள் மாணவர்களை
ம�ொழிப்பாடத்தின் வழி பக்குவப்படுத்திப் புதிய திறன்களைக் க�ொணரச் செய்து
அவர்களின் அறிவாற்றலையும் செயலாற்றலையும் வளரச் செய்ய வேண்டும். பல
மாற்றங்கள் இருப்பின் மாறுவது கல்விப்பாடம் மட்டுமில்லை; ஆசிரியர்களும் மாணவர்களும்
தான். 21ஆம் நூற்றாண்டில் வளர்ந்து வருகின்ற சமுதாயம் முன்னேறினாலே நம் சமூகம்
வெற்றி நடைப்போடும். ஆகவே, தமிழ்க்கல்வியை ஒரு கருவியாகப் பயன்படுத்திப் பல
புத்தாக்கத் திறன்களையும் மாற்றங்களையும் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் திணித்து
மாணவர்களை வளப்படுத்துதல் வேண்டும்.

*ய�ோகேஸ்வரி முனியாண்டி (கியு 4)

92

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

புணரியல் ஒரு கற்பனை

தமிழ் எனும் ஊரில் இலக்கணம் எனும் கிழவர் ஒருவர் தன் பேரனுடன் தன் ப�ொழுதைக்
கழித்துக் க�ொண்டிருந்தார். அப்பொழுது அக்கிழவரின் பேரன் “தாத்தா எனக்குக்
கல்யாண வயசு வந்துடுச்சி, அதனால கல்யாணம் பண்ணிகலாம்னு இருக்கேன். நீங்க
என்னா நினைக்குறீங்க? என்று கேட்டான். அதற்கு அவனின் தாத்தா “அதுவும் சரிதான்.
அந்தக் காலத்துல எங்களுக்கு 15 வயசுலேயே கல்யாணம் பன்னிவச்சிடுவாங்க.
இப�ோதெல்லம் 28 வயசு ஆனாலும் கல்யாணம் பன்னிக்க தயங்குறீங்க’ என்று சலிப்புடன்
கூறினார். அதற்கு அக்கிழவரின் பேரன் “அப்படியா தாத்தா?” என்று அதிர்ச்சியுடன்
கேட்டான். அதற்கு இலக்கணக் கிழவர் ‘ ஆமாம் ஐயா, அந்தக் காலத்துல நாங்க
என்ன லவ்வா பன்னோம்? இரண்டு வீட்டுகாரங்களும் ஒன்னாப் பேசி எடுக்குற முடிவுதான்.’
என்று கூறினார். அதைக் கேட்டுப் பூரிப்பு அடைந்த அக்கிழவரின் பேரன் “அந்தக்
காலத்துல கல்யாணம் எப்படி நடக்கும் தாத்தா.... க�ொஞ்சம் ச�ொல்லுங்க,” என்று
கூறித் திண்ணையில் அமர்ந்தான்.

அக்கிழவர் தன் பேரனின் வினாவிற்குப் பதிலளிக்க முன்வந்தார். ‘அந்தக்
காலத்துல நாங்க புணர்ச்சி முறையில் தான் திருமணம் பன்னுவ�ோம். அதுல இரண்டு
விதம் இருக்கு. ஒன்னு இயல்பு புணரியல், இரண்டாவது விகாரப் புணரியல். விகாரப்
புணரியல் முறையில் த�ோன்றல், திரிதல், கெடுதல்னு மூன்று விதம் இருக்கு,’ என்றார்
இலக்கணக் கிழவன். அதற்கு அவரின் பேரன் ‘ஐய�ோ இத்தனை முறைகளா? ஒன்னு
ஒன்னாச் ச�ொல்லுங்க தாத்தா நானும் தெரிஞ்சிக்குறேன். இயல்பு புணர்ச்சி முறை நா
என்னா? என்று மேலும் வினவினான்.

அதற்கு அந்தக் கிழவர் “இயல்பு புணர்ச்சி என்றால் நிலைம�ொழியின் இறுதி
மகனுக்கும் வரும�ொழியின் முதல் மகளுக்கும் கல்யாணம் நிச்சயம் செய்யும் ப�ோது
நடுவில் எந்தச் சிக்கலும் த�ோன்றாமலும் திரியாமலும் மறையாமலும் இரு வீட்டார்
சம்மதத்துடன் இயல்பாகவே ஒன்று சேருவதே ஆகும்.’ என்றார். அதனையடுத்துப்
பேரன் ‘அப்போ விகாரப் புணர்ச்சி முறை நா என்னா தாத்தா?’ என்று ஆர்வத்துடன்
கேட்டான்.

விகாரப் புணர்ச்சில மூன்று இருக்கு ஐயா. முதல் த�ோன்றல் விகாரம்.
நிலைம�ொழியின் இறுதி மகனுக்கும் வரும�ொழியின் முதல் மகளுக்கும் கல்யாணம்
நிச்சியம் செய்யும் ப�ோது நடுவில் ஏதேனும் சிக்கல் வரும்போது ஒரு புதிய நபர்
த�ோன்றி இரு விட்டாருக்கும் நடுநின்று அவர்களை ஒன்றுசேர்ப்தே ஆகும். ‘அப்போ
அடுத்த விகாரம் புணர்ச்சி என்னா தாத்தா’ என்று கேட்டான்.

‘அடுத்தது திரிதல் புணர்ச்சி. நிலைம�ொழியின் இறுதி மகனுக்கும் வரும�ொழியின்
முதல் மகளுக்கும் கல்யாணம் நிச்சியம் செய்யும் ப�ோது நடுவில் ஏதேனும் சிக்கல்
வரும்போது நிலைம�ொழியின் இறுதி மகனும் வரும�ொழியின் முதல் மகளும் சூழ்நிலைக்கு
ஏற்றவாறு திரிந்து தங்களை மாற்றிக் க�ொண்டு இரு வீட்டாரையும் இணைப்பதே
ஆகும்.

93

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

அடுத்ததாகக், கெடுதல் புணர்ச்சி. நிலைம�ொழியின் இறுதி மகனுக்கும்
வரும�ொழியின் முதல் மகளுக்கும் கல்யாணம் நிச்சயம் செய்யும் ப�ோது நடுவில் ஏதேனும்
சிக்கல் வரும்போது நிலைம�ொழியின் இறுதி மகன் தன் விருப்பத்தை மறைத்து இரு
வீட்டாரையும் இணைப்பதே ஆகும்.’ என்று கூறி முடித்தார் இலக்கணக் கிழவர்.

‘அப்ப அந்தக் காலத்துல எவ்வளவு முறைகள் இருக்கா? முடியல தாத்தா..’
என்று சளித்துக் க�ொண்டான் பேரன். அதற்கு இலக்கணக் கிழவர் ‘இப்படியல்லம்
ஒருவருக்கு ஒருவர் விட்டுக் க�ொடுத்ததினால்தான் கடைசிவரைக்கும் இரண்டு வீட்டுக்
காரங்களும் சந்தோசமா ஒன்னா வாழ்ராங்க, ஐயா. சரி வா ....ப�ொழுதாச்சு....ப�ோய்
குளிச்சிட்டு சாப்பிடலாம் என்று கூறியப்பின் இருவம் தங்கள் பணியைச் செய்யப்
புறப்பட்டனர்.

*தாமரைச் செல்வி (எஸ் 6)


நிறுத்தற்குறிகள்

அன்னையின் கருவிலே
காற்புள்ளி யானேன்

அவனியின் பிறப்பிலே
அரைப்புள்ளி யானேன்

மனையாள் அணைப்பிலே
முக்காற் புள்ளி யானேன்

மக்கள் பிறந்தனர்
முற்றுப் புள்ளி யானேன்

இளமையில் நான�ொரு
உணர்ச்சிக்குறி

இன்பமும் துன்பமும்
எனக்கு அடைப்புக்குறி

முதுமையில் நான�ொரு
கேள்விக்குறி

(தமிழ்க்குயில் கா.கலியபெருமாள்)

94

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

பல்சுவைச் சாரல்

95

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

விரிவுரையாளர் திரு. எர்னஸ் இம்மானுவல் அவர்களின்
பணிவ�ோய்வு

(HAPPY RETIREMENT MR. EARNEST)

திரு.எர்னஸ் இம்மானுவல் அவர்கள் டிசம்பர் மாதம் 31ஆம் நாள், 1960ஆம் ஆண்டில்
பேரா, தைப்பிங்கில் பிறந்தார். இவருக்கு ஓர் அண்ணனும் மூன்று அக்காள்களும்
உள்ளனர். இவரே வீட்டின் கடைக்குட்டி. இவர் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவராவார்.
திரு.எர்னஸ்கு சிறு வயது முதலே ஆசிரியப் பணியில் அதிகம் நாட்டம். இவர் பள்ளிப்
பருவத்தில் தன்னுடைய எதிர்கால ஆசை என்னவென்று கேட்கும் ப�ொழுதெல்லாம்
ஆசிரியர் ஆவது என்று தளரா மனதுடன் கூறுவாராம். இவரின் ஆசைப்படியே ஆசானாக
வர வாய்ப்புக் கிட்டியது. ஆசிரியராகப் பணியைத் த�ொடங்கிய இவர் சுமார் 37
வருடங்களுக்குப் பிறகு தனது 58ஆம் வயதில் ஈப்போ ஆசிரியர் கல்விக் கழகத்தில்
மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெறுகிறார். இவர் தமது உடல்

நலத்தின் காரணமாக முன்னதாகவே பணி ஓய்வு
பெறுகின்றார்.

தம்முடைய உடல் நலம் பாதிக்கப்பட்டதன்
விளைவாகத் தன்னால் முன்புப�ோல வகுப்பறைகளில்
உற்சாகமாகச் செயல் பட இயலவில்லை என்பதே
இவரின் ஆதங்கமாகும். இவர் ஆங்கிலப் பாடத்தை
இரண்டாம் தேர்வுப் பாடமாய்க் கற்பிப்பதில் மட்டும்
வல்லமை பெற்றவர் அல்லர், இவர் மலாய் ம�ொழியிலும்
சிறந்த தேர்ச்சிப்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகச் சிறந்த விரிவுரையாளராகப் பலரும்
ப�ோற்றும் வகையில் செயல்படும் திரு.எர்னஸ்
அவர்கள் எப்பொழுதும் வகுப்பில் வாழ்வியல்
கருத்துகளை இணைத்துப் பாடத்தைப் ப�ோதிப்பதில்
வல்லவர். மேலும், ஈப்போ ஆசிரியர் கல்விக் கழகத்தில்
இவர் “ஸ்பீக்கர்ஸ் பார்க்” எனும் மாணவர்களுக்கான பேச்சு முனை ஒன்றனைத்
துவங்கியுள்ளார். இதன்வழி, கல்லூரி மாணவர்கள் பேச்சாற்றலில் அதிகமாகப் பயன்
பெறுகின்றனர் என்பது கல்லூரி முதல்வரின் கருத்தாகும். இவர் தம் வாழ்நாளில்
கல்வித்துறையில் ஆக்ககரமான பல பங்களிப்பினை வழங்கியுள்ளார். இருப்பினும்,
தன்னைத் தானே தாழ்த்திக் க�ொண்டு தன்னடக்கத்துடன் இருப்பதே இவரின் இயல்பான
பண்பாகும்.

திரு.எர்னஸ் அவர்கள் தம் வாழ்நாட்களில் பெரும்பகுதி நாட்களைக் கல்வித்
த�ொடர்பான சேவைக்கே அர்ப்பணித்திருக்கிறார். இவர் தேசிய, அனைத்துலக
மாநாடுகளில் பலவற்றில் கலந்தும் பங்களித்தும் வருபவர். வாழ்வின் சவால்களை
எதிர்நோக்கும் வழிகள், ஆங்கிலப் பாடத்தில் வல்லமை பெற வழிமுறைகள் எனப் பல
பட்டறைகளையும் வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.

96

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

த�ொடர்ந்து, இவர் 2016இல் ‘Mentoring Skills For Supervising Teachers To-
wards Student Teacher’s Effective Teaching In Primary Classroom’ எனும் புத்தகமும்,
2013இல் Media Integration Analysis Worksheet எனும் புத்தகம் வெளியீட்டிலும் சக
எழுத்தாளராக இருந்திருக்கிறார்.
திரு.எர்னஸ் அவர்கள், இன்றைய இளைய தலைமுறையினருக்கு வழங்கும்
அறிவுரையானது, "வருங்காலச் சந்ததியினர் கட்டாயமாக இனி வரும் காலத்திற்கு
முன்னோடியாகக் க�ொண்டு வாழ வேண்டும். அதிலும் குறிப்பாக ஆசிரியர் பெருமக்கள்
தமது மாணவர்களின் நலனில் அதிகம் அக்கரை செலுத்த வேண்டும். ஏனெனில், தனி
மனிதனின் வாழ்வு ஒரு சமூகத்தையே பாதிக்கும்" என்பதாகும்.
இறுதியாக இவர் ஆசிரியர்கள் குறித்து முன் வைத்த கருத்து யாதெனில்,
"ஆசான் என்பவன் வகுப்பில் மாணவர்களிடம் அனைத்தும் அறிந்தது ப�ோல பாசாங்குச்
செய்பவன் அல்ல; அனைத்துத் துறைகளிலும் கற்றுத் தேர்ந்து, நல்ல தலைமுறையினரை
உருவாக்குபவனே ஆசான்" என்கிறார். அதிலும் இவர் வலியுறுத்தியது, "இன்றைய
இளைய தலைமுறையினரிடம் ஒற்றுமை குறைப்பாடு அதிகம் நிலவுகிறது. இது குறித்து
ய�ோசித்து, ஒவ்வொரு தனிநபரும் ஒருவருக்கொருவர் அனுசரித்து ஒற்றுமையுடன் வாழ
வேண்டும் என்பது எனது ஆசையாகும்" என்று இவர் தன் கருத்துகளை நேர்காணலின்
ப�ொழுது முன் வைத்தார்.
கல்வித்துறைக்கு அதுவும் குறிப்பாக,ம் தம் ஆங்கிலக் கல்வித் துறைக்கு
அளப்பரிய சேவையாற்றிய அருமைமிகு விரிவுரையாளர் திரு.எர்னஸ் இம்மானுவல்
அவர்கள் இவ்வாண்டோடு (டிசம்பர் 2018) பணிவ�ோய்வுப் பெற்றாலும் எண்ணற்ற
மாணவர்களின், விரிவுரையாளர்களின் மனத்தில் என்றென்றும் நிறைந்திருப்பார். அவர்
எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்துவ�ோம்.

நேர்காணல் & த�ொகுப்பு:
*திவ்யா சிவக்குமார் (எஸ் 7)

97

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

ஓர் ஆளுமையின் தேடல்

நம் கல்வி வளாகத்தின் தமிழ் ஆய்வியல் பிரிவு விரிவுரையாளருமான திரு.சுப்ரமணியம்
காளியப்பன் அவர்களின் சேவையைப் ப�ோற்றிப் பாராட்டுவதில் பெருமை க�ொள்கிற�ோம்.

பெயர் : திரு.சுப்ரமணியம் காளியப்பன்
09 செப்டம்பர் 1960
பிறந்த தேதி : திரு.காளியப்பன், திருமதி வள்ளியம்மா

பெற்றோர் :

தம்முடைய அகவாழ்விலும் புறவாழ்விலும் தமது

குறிக்கோள்களைத் தீர்மானித்துப் பல வெற்றிக்கனிகளை

வாழ்வில் பெற்றவர் கல்வியாளர், நிதி நிர்வாக ஆல�ோசகர்,

தன்முனைப்புப் பேச்சாளர், த�ொழில்முனைவர் ஐயா திரு.

சுப்ரமணியம் காளியப்பன் என்றால் அது மிகையல்ல.

இவர் 1960ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் நாள்
திரு.காளியப்பன் மற்றும் திருமதி வள்ளியம்மா எனும்
தம்பதிகளுக்கு மகனாக கெடா மாநிலத்தில் கராங்கான்
மஹாங் எனும் ஊரில் டப்ளின் த�ோட்டத்தில் பிறந்தார்.
இவருக்கு இராமன் என்ற ஓர் இளைய சக�ோதரரும்
செல்வி மற்றும் பிரேமா என இரு தங்கைகளும் உள்ளனர்.
இவர் 1988-ஆம் ஆண்டு திருமதி மாரியம்மாள் அவர்களை
மணமுடிந்தார். இவரின் துணைவியார் தலைமையாசிரியர்.
ஈப்போ மகிழம்பு தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியராகப் ப�ொறுப்பேற்றுள்ளார்.
இத்தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள். இவர்களின் மூத்த மகன் டாக்டர் பிரவின்
சுப்பிரமணியம் அவர்கள் தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி
வருகிறார். அடுத்து, இவர்களின் இரண்டாவது புதல்வனான பிரசாந்த், மின்பொறியல்
துறையில் பயின்றவர். வீட்டின் கடைக்குட்டியாகக் திகழும் மிஷாதனா ‘ஏய்ம்ஸ்’
பல்கலைக்கழகத்தில் மருந்தகத் துறையில் பயின்று வருகிறார்.

வாழ்க்கை அனுபவம்...!
இனிமை, இணக்கம், இன்பம் என்று நினைக்கையில் அனைத்தும் ஒன்றாய் வழங்குவது
இளமை பருவம் மட்டுமே. அவ்வகையில், ஐயாவின் இளமை பருவமானது இமயம் முட்டும்
வரையிலான கனவுகளைச் சுமந்த நாட்களாகும். ஐயா திரு.சுப்பிரமணியம் அவர்கள்
செல்டிங் த�ோட்டத் தமிழ்ப்பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் த�ொடங்கினார்.
அதன்பின் கெடா மாநிலத்திலுள்ள குவால கெத்தில் இடைநிலைப்பள்ளியில் பயின்றார்.
அச்சமயம் ஒரு மாதம் பேருந்து கட்டணம் ரி.ம. 3.00. இத்தொகையைக் கட்டும்
அளவிற்குக் கூட வசதியில்லாத காரணத்தால் தினமும் ‘மெர்பாவ் பூலா’ த�ோட்டம் 7
கில�ோ மீட்டர் நடந்தே பள்ளிக்குச் சென்று வீடு திரும்புவார். படிவம் 5 முடிந்து தேர்வு
முடிவு கிடைத்தவுடன் விமானியாக வேண்டுமென்ற ஆசை. மனு செய்தார். ‘Mel-
bourne’-க்குச் சென்று படிக்க அழைப்பும் ஒப்பந்த கடிதமும் வந்தது. ஆனால், குடும்பச்
சூழல் தடையானது.

பின்னர், ஐயா அவர்கள் கூலிம் ‘சுல்தான் பட்லி ஷா’ எனும் இடைநிலைப்பள்ளியில்

98

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

படிவம் ஆறு பயின்றார். இளமையில் மனத்தில் உதித்த அனைத்து வேட்கைகளும்
சவாலாகவே அமைந்தன அவருக்கு. இருந்த ப�ோதும், முயற்சி என்ற வார்த்தைக்கு
மட்டும் விடைக்கொடுக்காது வாழ்க்கையைக் கடத்தினார்.

"நீங்கள் காண விரும்பும் மாற்றங்கள் உங்களிடம் இருந்து த�ொடங்கட்டும்"
என்றார் மகாத்மா. அவற்றிற்கேற்ப மாற்றங்களை ந�ோக்கிய பயணமே ஐயாவின் கல்லூரி
வாழ்க்கை. சுகமான நினைவுகளைச் சுமக்கும் இந்தக் கல்லூரி வாழ்க்கையானது ஐயா
திரு. சுப்பிரமணியம் அவர்களுக்குப் பல படிப்பினையையும் அதே சமயம்
வெற்றிக்கனிகளையும் பெற வாய்ப்பாக அமைந்தது. சிறு வயது முதற்கொண்டே அவரின்
சாதிக்கத் துடிக்கும் எண்ணமும் விடாமுயற்சியுமே அவரின் வாழ்க்கை அழகான்
சித்திரமாக அமைய காரணமானது.

அவ்வகையில், கல்வியினை மென்மேலும் கற்று மேன்மையடைய வேண்டும்
என்பதே அவரின் முதன்மை ந�ோக்கமாக அமைந்தது. இடையூறுகளும் இன்னல்களும்
ஒருபுறம் அவரைத் தழுவ, வாழ்க்கையில் நீங்கா இடத்தினைக் கைப்பற்ற வேண்டும்
என்ற எண்ணம் மட்டுமே அவரின் வெற்றிப் பாதையை நிர்ணயிக்க கல்லூரி வாசலுக்கு
இட்டுச் சென்றது. அவ்வகையில், 1981ஆம் ஆண்டு க�ோலாலம்பூர் மலாயா
பல்கலைக்கழகத்தில் பூக�ோளம் மற்றும் தமிழ்த் துறையில் இளங்கலை பட்டப்படிப்பு
பயில வாய்ப்புக் கிட்டியது. பின் அரசாங்க உபகாரச்சம்பளம் பெற்று வெளிநாட்டு
பல்கலைக்கழகத்தில் கலைத்திட்ட, மதிப்பீட்டுத் துறையில் முதுகலை பட்டமும் பெற்றார்.

திரு.சுப்ரா ஐயா அவர்கள். 1987ஆம் ஆண்டு சித்தியவான், 'த�ோ பெர்டானா’

இடைநிலைப்பள்ளியில் பூக�ோளம் மற்றும் தமிழ்மொழி ப�ோதிக்கும் ஆசிரியராகத் தம்

பணியைத் த�ொடங்கினார். சில ஆண்டுகலுக்குப்பின், 1991இல் கிந்தா ஆசிரியர்

பயிற்சிக் கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராகப் பணியைத் த�ொடர்ந்தார். பிறகு,

1998இல் கிந்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மூடப்பட்டதால் இவருடன் சேர்ந்து 27

விரிவுரையாளர்களும் உலு கிந்தா, ஈப்போ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு மாற்றப்பட்டனர்.

முதல் 4 மாதங்கள் கல்விப் பிரிவில் விரிவுரையாளராக இருந்தார். பின்னர், தமிழ் வகுப்பு

த�ொடங்கியதால் தமிழ் ஆய்வியல் பிரிவில் தமிழ்மொழியைக் கற்பிக்கும்

விரிவுரையாளராகப் பணியில் அமர்த்தப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் தமிழ் ஆய்வியல்

பிரிவின் தலைவராகவும் ப�ொறுப்பேற்றுள்ளார். மேலும், 1991 த�ொடங்கி 2017 வரை

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கான பாடத்திட்ட உருவாக்கக் குழுவில்

செயல்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாது 2008 ஆம் ஆண்டு த�ொடங்கி 2017 வரை

ஆசிரியர் தேர்வு நேர்காணலுக்கான முகவராக இருந்துள்ளார். அரசாங்கப் பணியில் 30

ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியுள்ளார்.

திரு.க.சுப்ரமணியம் அவர்கள் பல அனுபவங்களைக் கடந்தே இன்றைய

இடத்தைப் பிடித்துள்ளார். இவர் பல்வேறு துறைகளில் பல அனுபவங்களைப் பெற்றுத்

தனக்கென ஓர் அடையாளத்தைப் பதித்துள்ளார். இவர் 1987ஆம் ஆண்டு த�ொடங்கி

கல்வியமைச்சின் பாடத்திட்ட உருவாக்கத்திலும் பாடநூல் உருவாக்கத்திலும்

பங்களித்துள்ளார். அடுத்ததாக, 1987இல் த�ொடங்கி 1994-ஆம் ஆண்டு வரை பேராக்

மாநில ஆசிரியர் பாடத்திட்டத்திற்கான முதன்மைப் பயிற்றுநராகவும் பணியாற்றியுள்ளார்.

1982 த�ொடங்கி 1993 வரை ஸ்ரீமுருகன் நிலையத்தில் பாடம் ப�ோதித்தல், பயிற்சிப்

புத்தகம் தயாரிப்பு ப�ோன்ற பணிகளிலும் பங்களித்துள்ளார். தமிழ்ப்பள்ளிகளில்

ஆசிரியர்களுக்குப் பல கற்றக் கற்பித்தல் பயிற்சிகளை 32 ஆண்டுகளாக வழங்கியுள்ளார்.

99

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

திருமிகு சுப்ரமணியம் காளியப்பன் அவர்கள் அரசுப் பணியில் DG 54 உயர்தகுதிப்
பெற்ற அரசு பணியாளர் ஆவார். கல்வித்துறையினையும் கடந்து நிதி நிர்வாகத்
துறையிலும் பல அனுபங்களைப் பெற்றுள்ளார். நிதி நிர்வகிப்பினைய�ொட்டி 20 ஆண்டு
காலம் பல இடங்களில் பயிற்சிகளையும் வழங்கியுள்ளார். ஐயா அவர்கள், மிகுந்த கடவுள்
நம்பிக்கை க�ொண்டவர்; சத்தான உணவு, சுகாதாரமான வாழ்க்கை, தேகப்பயிற்சி
ஆகியவற்றோடு இயற்கைய�ோடு ஒத்த வாழ்வை விரும்புபவர். எந்நேரமும் சுறுசுறுப்பாக
இயங்கக் கூடியவர். வாழ்வில் பீடுநடை ப�ோட, தூர ந�ோக்கு சிந்தனை வேண்டும் என்று
எண்ணுபவர்; வாழ்பவர். அக, புற வாழ்க்கையில் எப்படியும் வாழலாம் எனும் மனிதர்கள்
மத்தியில், இப்படித்தான் வாழ வேண்டும் என்ற க�ொள்கையில் வாழ்பவர்.

ஐயா, திரு.சுப்பிரமணியம் அவர்கள், தமது 12ஆவது வயது த�ொடங்கி,
நாளிதழ்களை விடாது விரும்பி வாசிக்கும் வழக்கமும் பழக்கமும் உடையவர்.
பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் அவர் பார்த்த பட்டதாரிகளின் படத்தை நேர்த்தியாக
வெட்டி தனது அறையில் ஒட்டி பத்திரப்படுத்திக் க�ொண்டு, சிறந்த முன்மாதிரியான
முன்னோடிகளை அடையாளம் கண்டு, தனக்குள்ளேயே உத்வேகத்தை வளர்த்துக்
க�ொண்டு கல்வியில் முன்னேற்றம் கண்டதாகக் கூறுகின்றார். அதுவே அவருக்குத்
தன்முனைப்பாகவும் அமைந்தது எனலாம். ஒரு நாள் தானும் இவ்வாறு இலக்கினை
அடைய வேண்டும் என்ற வைராக்கியமே அவர் கல்வித்துறையில் சிறந்து விளங்க
காரணமாக அமைந்தது என்கின்றார். அவரின் வாழ்க்கை அழகிய சிற்பமாய் அமைய
வாசிப்புப் பழக்கம் மிகவும் உறுதுணையானது என்கிறார் பெருமிதத்துடன்.

பணி ஓய்வுக்குப் பிறகு
ஐயா திரு.சுப்பிரமணியம் அவர்கள், தனது விருப்ப ஓய்வுக்குப் பிறகு எண்ணிலடங்கா
திட்டங்களைக் க�ொண்டுள்ளார். பல புதிய இடங்களுக்கும் நாடுகளுக்கும் பயணம்
மேற்கொள்ள திட்டம் வைத்துள்ளார். எந்த இடத்திற்குச் சென்றாலும், அந்த
இடத்திற்கேற்றவாறு தன்னை எளிமையாக்கிக் க�ொண்டு, அங்குள்ள சூழல�ோடு
ப�ொருந்தி வாழும் மனம் அவருக்கு உண்டு. பணி ஓய்வுக்குப் பிறகு, தீபகற்ப மலேசியாவை
வலம் வரப்போவதாகத் தெரிவித்தார். த�ொடர்ந்து, ஐயா அவர்கள், நிதி நிர்வாகத்
துறையில் பல ஆண்டு காலம் ஈடுபட்டு வருவதால், இனி வரும் காலங்களில் இத்துறையில்
முழு நேரமாக ஈடுபட ப�ோவதாகவும் கூறுகின்றார். ஐயா அவர்கள் தனக்குக் கிடைக்கும்
நிமிடத்துளிகளில் செடி நடுதல், மெதுவ�ோட்டம், புதிய மனிதர்களைச் சந்தித்தல், பழம்
பாடல்களை இரசித்தல், சமைத்தல், நலம் பேணும் தன்னார்வ நடவடிக்கைகள்
மேற்கொள்ளுதல் ப�ோன்ற பல வழிகளிலும் நிரப்பப் ப�ோவதாகக் கூறுகின்றார்.

பல ஆண்டுகள் கல்விப் பணியில் சிறந்து விளங்கிய திரு.சுப்ரமணியம் காளியப்பன்
அவர்களுக்கு நமது பாராட்டுகள்; வாத்துகள்; நன்றிகள். ஈப்போ ஆசிரியர் கல்விக்
கழகத்தினர் தங்களை என்றென்றும் நன்றியுடன் நினைவுகூர்ந்து பாராட்டுவர், ஐயா.
நன்றி. வணக்கம்.

நேர்காணல் & த�ொகுப்பு:
செ.காந்திமதி, இரா.அனுஷா, இர.தேவல�ோஷினி

100


Click to View FlipBook Version