Saiz sebenar iii Saiz sebenar முன்னுரை iv அலகு 1 அரசமைப்பு நாட்டின் அரண் 2 அலகு 2 மலேசியாவில் இஸ்லாமிய சமயம் 16 அலகு 3 மலாய்மொழி நமது பாரம்பரியம் 30 அலகு 4 நாட்டின் இறையாண்மைக்குச் சவால் 44 அலகு 5 போராட்ட எழுச்சியும் காலனித்துவ எதிர்ப்பும் 58 அலகு 6 சுதந்திர வரலாறு 74 அலகு 7 மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாட்டின் அரண் 90 அலகு 8 தேசியச் சின்னம் 108 அலகு 9 மலேசியத் தேசியக் கொடி 120 அலகு 10 மலேசியத் தேசியப் பண் 134 அலகு 11 தேசிய மொழி 148 அலகு 12 செம்பருத்தி தேசிய மலர் 162 பொருளடக்கம்
Dewan Bahasa dan Pustaka Kuala Lumpur 2020 Penulis / ஆசிரியர் • Ahmad Hishanuddin bin Ramli • Dr. Jayakumary a/p Marimuthu • Hasfalila binti Hassan Editor / பதிப்பாசிரியர் • தமிழரசி சின்னசாமி PENGURUS PROJEK / ஒருங்கிணைப்பாளர் • Mohd Muhaimi bin Abdul Rahman PENTERJEMAH / ம�ொழிபெயர்ப்பாளர் • கதிரவன் பெரியண்ணன் • ராஜேஸ்வரி முனியாண்டி • பாமா பெரியசாமி ILUSTRATOR / ஓவியர் • Rozlin Azrar bin Abd Azib • Mohd. Sazali bin Ibrahim pereka BENTUK / வடிவமைப்பாளர் • Aini binti Abd. Hamid • Awaludin bin Mohd Arof • Mogan Kumar Raju KURIKULUM STANDARD SEKOLAH RENDAH (SEMAKAN 2017)
No. Siri Buku: 0024 KK 959-221-0106041-49-2950-20101 ISBN 978-983-49-2950-3 Cetakan Pertama 2020 © Kementerian Pendidikan Malaysia 2020 Hak Cipta Terpelihara. Mana-mana bahan dalam buku ini tidak dibenarkan diterbitkan semula, disimpan dalam cara yang boleh dipergunakan lagi, ataupun dipindahkan dalam sebarang bentuk atau cara, baik dengan cara elektronik, mekanik, penggambaran semula mahupun dengan cara perakaman tanpa kebenaran terlebih dahulu daripada Ketua Pengarah Pelajaran Malaysia, Kementerian Pendidikan Malaysia. Perundingan tertakluk kepada perkiraan royalti atau honorarium. Diterbitkan untuk Kementerian Pendidikan Malaysia oleh: Dewan Bahasa dan Pustaka, Jalan Dewan Bahasa, 50460 Kuala Lumpur. No. Telefon: 03-21479000 (8 talian) No. Faksimile: 03-21479643 Laman Web: http://www.dbp.gov.my Reka Letak dan Atur Huruf: Dewan Bahasa dan Pustaka Muka Taip Teks: Murasu Anjal Saiz Muka Taip Teks: 13 poin Dicetak oleh: My Bookpal Sdn. Bhd., 13A, Jalan Taming 10, Taman Taming Jaya Industrial Park, 43300 Balakong, Selangor Darul Ehsan
Saiz sebenar iv Saiz sebenar தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிக்கான ஐந்தாம் ஆண்டு வரலாற்றுப் பாடநூல், மலேசியக் கல்வி அமைச்சின் தொடக்கப்பள்ளிக்கான தர அடிப்படையிலான கலைத்திட்ட (KSSR) சீராய்வு 2017க்கு ஏற்ப எழுதப்பட்டுள்ளது. இப்பாடநூல் பண்பு நெறி, நாட்டுப்பற்று, குடியியல், குடியுரிமை ஆகிய கூறுகளை வலியுறுத்துகின்றது. இவை போட்டியிடும் ஆற்றலையும் மலேசியக் குடிமகன் என்னும் வகையில் நாட்டுப்பற்றையும் விதைத்துத் தூய தன்னடையாளமிகு மாணவர்களை உருவாக்கும். இப்பாடநூல் பல்வகைக் கற்றல் அணுகுமுறைகளை வலியுறுத்துவதோடு, கண்டறிதல் அடிப்படையிலான கற்றல், எதிர்காலவியல், சூழலமைவு, வகுப்பறைக்கு வெளியே கற்றல், நிகழாய்வு, தகவல் தொடர்புத் தொழில்நுட்பத் திறன் 21ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. மேலும், வரலாற்றை ஆர்வமுடன் கற்க மாணவர்கள் ஆய்வு, படைப்பாக்கம், புத்தாக்கம் நிறைந்த வரலாற்றுச் சிந்தனையை உருவாக்கிட உயர்நிலைச் சிந்தனைத் திறனும் (KBAT) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மாணவர்கள் தகவல் திரட்டும் வகையில் சுயமாக ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகள் மாணவர்களுக்குப் பட்டறிவையும் திறன்களையும் வளர்ப்பதற்காகக் கொடுக்கப்பட்டன. மாணவர்கள் வரலாற்று அறிவை உய்த்துணர்ந்து, தன்னடையாளத்தை வலுப்படுத்தி சிந்தனை முதிர்ச்சி மிக்கவர்களாக உருவாகிட வேண்டும். இந்தத் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிக்கான ஐந்தாம் ஆண்டு வரலாற்றுப் பாடநூல், நான்காம் ஆண்டுக்கான வரலாற்றுப் பாடநூலின் தொடர்ச்சி ஆகும். இந்த வரலாற்றுப் பாட நூலின் கருப்பொருள் நாட்டின் இறையாண்மை ஆகும். மேலும், இப்பாடநூல் பின்வரும் நான்கு தலைப்புகளைக் கொண்டுள்ளது. இத்தலைப்புத் தனித்துவமும் சிறப்பிற்குரியதாகவும் காணப்படும் மலேசிய நாட்டின் பாரம்பரியம் குறித்ததாகும். நம் நாடு, கூட்டரசு மலேசியா அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள மலாக்கா மலாய் அரசு தொடங்கி அரசமைப்பு, இஸ்லாமிய சமயம், மலாய்மொழி எனப் பெருமைப்படத்தக்க பல்வேறு பாரம்பரியங்களைத் தொடர்ச்சியாகக் கொண்டொழுகுகிறது. இந்தப் பாரம்பரியமே இன்றைய மலேசிய அமைப்பிற்கு அடிப்படைக் கொள்கையாக அமைகின்றது. இத்தலைப்பு நம் நாட்டில் காலனித்துவத்தையும் அந்நியத் தலையீட்டையும் எதிர்த்த முந்தைய தலைவர்களின் போராட்டங்களையும் தியாகங்களையும் விவரிக்கின்றது. தன்னம்பிக்கையும் எழுச்சியின்வழி மட்டுமின்றி தலைவர்களின் அர்ப்பணிப்பை உய்த்துணர்வதோடு போற்றவும் செய்தல்வழி பள்ளிப் பருவம் முதற்கொண்டே மாணவர்களிடம் நாட்டுணர்வையும் வலுவான குடியுரிமை நெறி ஆர்வத்தையும் கிளர்ந்தெழச் செய்ய இயலும். இத்தலைப்பு அந்நிய சக்திகளின் தலையீடு, காலனித்துவம் மீதான போராட்டம், 1957ஆம் ஆண்டு சுதந்திர வரலாறு பற்றிய உட்தலைப்புகளைக் கொண்டுள்ளது. முன்னுரை தலைப்பு 6: நம் நாட்டின் பாரம்பரியம் தலைப்பு 7: நாட்டின் சுதந்திரப் போராட்டம்
Saiz sebenar v சாரம் ஒவ்வோர் அலகின் கற்றலின் பொதுவான கண்ணோட்டம். சொற்களஞ்சியம் மாணவர்கள் புரிந்து கொள்ளச் சிரமப்படும் சொற்களுக்குப் பொருள்விளக்கம் கொடுக்கப்படுகிறது. உருவாக்குவோம் வாரீர் ஒவ்வொரு அலகிலும் கற்ற தலைப்பை ஆக்கத் திறனைத் தூண்டும் நடவடிக்கை மூலம் செய்திடல் வேண்டும். உயர்நிலைச் சிந்தனைத் திறன் கேள்விகள் (KBAT) வரலாற்று நிகழ்வுகள் தொடர்பான சிந்தனையைத் தூண்டுவதற்கு உயர்நிலைச் சிந்தனைத் திறன் கேள்விகள் வழங்கப்படுவதைக் குறிக்கின்றது. குடியியல் நெறி மாணவர்களுக்கு இருக்க வேண்டிய பண்புநெறிகள். அடிப்படை வரலாற்றுச் சிந்தனைத் திறன் மாணவர்கள் சுயமாக வரலாற்று நிகழ்வுகளான சான்றுகள், நிகழ்வுகளையொட்டிய ஆய்வு ஆகியவற்றை ஆக்கச்சிந்தனை அடிப்படையில் ஆய்வுசெய்ய வகை செய்யப்பட்டுள்ளது. இவ்வரலாற்றுச் சிந்தனைத் திறன்படி அடிப்படை வரலாற்றுக் கூறுகள், காலக் கருத்துரு, காலநிரல் மாறுதல்கள், தெளிவான சான்று, கற்பனை, சிக்கல், முந்தைய சிக்கல்கள், முந்தைய கால ஒப்பீடு, மூலம் அறிதல் ஆகியன இவர்களுக்கு உதவும். நீங்கள் கற்கப் போவது என்ன? இக்கூறு, நேரடியாகவும் மறைமுகமாகவும் விளக்கம், கேள்விகள், நடவடிக்கைகள் வழி வெளிப்படுகின்றது. இத்தலைப்பு நாட்டுணர்வையும் நாட்டை நேசிப்பதையும் குறிப்பிடுவதோடு, நாட்டின் முதன்மைத் தலைவர் என்னும் முறையில் மாட்சிமை தாங்கிய மாமன்னர் அமைப்பு முறையை மதிக்கவும் விரும்பிடச் செய்தலையும் வளர்க்கிறது. இத்தலைப்பு நியமன முறை, அரசுரிமைச் சின்னங்கள், அரச அரசியலமைப்பு அதிகாரத்துறை ஆகியன நாட்டின் அரணாக அரசமைப்பைப் போற்றுவதற்கானது என்பதை விவரிக்கின்றது. இத்தலைப்பு குடியுரிமைக் கூறுகளாகத் திகழும் நாட்டின் அடையாளங்களான தேசியச் சின்னம், தேசியக் கொடி, தேசியப் பண், தேசிய மொழி, தேசிய மலர் ஆகியவற்றை விவரிக்கின்றது. நாட்டின் அடையாளங்கள் மீதான அறிவு, உய்த்துணர்வு பெருமைப்படத்தக்க நாட்டை நேசிக்கும் தன்னடையாளத்தை உருவாக்கும். தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிகளுக்கான ஐந்தாம் ஆண்டு வரலாற்றுப் பாடநூல், 12 அலகுகளில், 4 தலைப்புகளில் ஒவ்வொன்றும் தனிச்சிப்பமாக இயங்கும் ஆற்றலைக் கொண்டதாகும். ஒவ்வோர் அலகும் ஐந்தாம் ஆண்டுக்கான தர அடிப்படையிலான கலைத்திட்டம்(KSSR) சீராய்வு 2017 விவரிக்கின்றது. ஆசிரியர்கள் விவரம் சேகரிக்க உதவும் வகையில் இப்பாட நூலின் இறுதியில் துணைநூல் பட்டியலும் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் மாணவர்களும் இப்பாடநூலை எளிதாகப் பயன்படுத்த பின்வரும் சில படவுருக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தலைப்பு 8: மாட்சிமை தாங்கிய மாமன்னர் தலைப்பு 9: நம் நாட்டின் அடையாளம் AKPS
Saiz sebenar vi நடவடிக்கை சுயக் கற்றலும் வகுப்பறைக்கு வெளியே கற்றலுக்கான நடவடிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஐ- திங் (I-think), உருவாக்குவோம் வாரீர், நிகழாய்வு, எதிர்காலவியல், 21ஆம் நூற்றாண்டுக் கல்வி, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகும். உங்களுக்குத் தெரியுமா? ஒன்றனை விரிவாகவும் ஆழமாகவும் தெரிந்துகொள்ள கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் விவரங்கள் ஆகும். விரைந்து பதிலளி கற்ற வரலாற்று நிகழ்வுகள் தொடர்பான புரிதலை அறியும் வகையிலான கேள்விகளை உள்ளடக்கியுள்ளது. இக்கேள்விகள் சுருக்கமாகவும் மிதமாகவும் இருக்கும். ஆசிரியர் குறிப்பு ஆசிரியர் ஒவ்வோர் அலகின் கற்றல் கற்பித்தலை மிகச் சிறப்பாக நடத்துவதற்குத் துணை புரிகிறது. விரைவு தகவல் குறியீடு (QR CODE) மேலும் தகவல்களைக் காணொலி அல்லது ஏனைய மூலங்களிலிருந்து பெற முடியும். மீட்டுணர்வோம் ஒவ்வொரு அலகின் இறுதியிலும் பாடத்தின் சுருக்கமாக, மாணவர்கள் தாங்கள் கற்ற தலைப்பை மீட்டுணர உதவுகிறது. சிந்தித்துப் பதிலளி பல்வேறு வகையான பயிற்சிகளின் மூலம் கற்ற தலைப்பின் உள்ளடக்கத்தின் புரிதலை அறிய முடிகிறது. கற்றல் தரமும் குடியியல் கூறுகளும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் மாணவர்களின் கற்றல் கற்பித்தலின் வழி பெறப்பட்ட கற்றல் அடைவையும் தரத்தையும் குறிக்கும் அளவுகோல் ஆகும். இது மாணவர்கள் அடைய வேண்டிய கற்றல் உள்ளடக்கங்களை வெளிப்படுத்துகிறது. தேசிய வகைத் தமிழ்ப்பள்ளிக்கான ஐந்தாம் ஆண்டு வரலாற்றுப் பாடநூல், மகிழ்வான கற்றல் கற்பித்தலின் வழி வரலாற்று அறிவை மேம்படுத்துகிறது. மேலும், மாணவர்கள் தங்களின் அறிவாற்றலையும் திறனையும் முழுமை படுத்திக் கொள்வதோடு பண்புநெறிகளையும் அமல்படுத்த உதவும். மலேசிய குடிமகன் என்னும் வகையில் மாணவர்கள் தன்னடையாள உணர்வையும் பெருமிதத்தையும் உருவாக்கி நாட்டுப்பற்றை வலுப்படுத்தும். 6.1.3 K6.1.7 அல்லது குறியீட்டை அதன் சாதனத்தைப் பயன்படுத்தி வருடி Augmented Reality (AR) பயனீட்டுத் தகவல்களை அந்தப் பக்கத்தில் பெறவும். Google Play Store App Store நாட்டை நேசிப்போம் மாணவர்கள் சுயமாகத் தாம் கற்ற கூறுகளைத் தனிநபர், சமுதாயம், நாடு எனும் அடிப்படையில் மீண்டும் மதிப்பிட்டுத் தொடர்புப் படுத்த இயலும்.
Saiz sebenar 1 Saiz sebenar நாட்டின் இறையாண்மை
Saiz sebenar 2 1 Saiz sebenar 2 1897ஆம் ஆண்டு க�ோல கங்சாரில் நடைபெற்ற மலாய் அரசர்களின் முதலாவது மாநாட்டில் (தர்பார்) பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் மலாய் அரசர்களும் மலாய் ஆட்சியர்களும் (மூலம்: Arkib Negara Malaysia) இன்றைய அரசமைப்பானது தொடக்கக்கால மலாய் அரசு ஆட்சிமுறையை அடிப்படையாகக் க�ொண்டது. இன்றுவரை பின்பற்றப்படும் அரசமைப்பானது நாட்டின் பாரம்பரியத்தின் அடையாளமாக மலேசியர்களால் மதிக்கப்பட்டும் போற்றப்பட்டும் வருகிறது. இந்த அலகு அரசர், அரசு, வாடாட் கருத்துரு (konsep waadat), இறையாண்மை, துரோகம் ஆகியவற்றின் பொருளை விவரிக்கின்றது. மேலும், இவ்வலகானது அரசர்களின் நிலையையும் பங்களிப்பையும் விளக்குவதோடு இன்றும் அரசமைப்பு முறையை அமல்படுத்தும் நாடுகள் குறித்தும் விவரிக்கின்றது. சாரம் அலகு தலைப்பு 6 : நம் நாட்டின் பாரம்பரியம் அரசமைப்பு நாட்டின் அரண்
Saiz sebenar 3 Saiz sebenar 3 நீங்கள் கற்கப் போவது என்ன? 1. அரசர், அரசு என்பதன் பொருள். 2. அரசருக்கும் மக்களுக்கும் இடையிலான வாடாட் கருத்துரு. 3. இறையாண்மை, துரோகம் ஆகியவற்றின் பொருள். 4. அன்றைய, இன்றைய மலாய் அரசர்களின் நிலையும் பங்களிப்பும். 5. அரசாட்சி முறையை இன்றும் அமல்படுத்தும் நாடுகள். A அடிப்படை வரலாற்றுச் சிந்தனைத் திறன் KPS 1. அரசர், அரசு, வாடாட் கருத்துரு, இறையாண்மை, துரோகம் ஆகியவற்றைப் பொருள்விளக்கம் செய்தல். 2. அன்றைய, இன்றைய மலாய் அரசர்களின் நிலை, பங்களிப்பு ஆகியவற்றின் குறிப்பிடத்தக்கச் சான்றுகளை ஆராய்தல். 3. அரசாட்சி முறையை இன்றும் அமல்படுத்துகிற நாடுகளின் ஏற்புடைமையை (rasionalisasi) ஆராய்தல். குடியியல் நெறி மதித்தல்
Saiz sebenar 4 இறையாண்மைமிகு அரசர் அரசின் தூண் அரசர் அல்லது சுல்தான் என்பவர் இறையாண்மைமிகு அரசின் உயர்நிலை ஆட்சியாளர் ஆவார். அரசு என்பது அங்கீகரிக்கப்பட்ட முறையில் ஆட்சி செய்யப்படும் மாநிலம் அல்லது நாடு ஆகும். சுதந்திரத்திற்குப் பின்னரும் அரசமைப்பு, தொடர்ந்து பின்பற்றப்பட்டு நாட்டின் அடையாளமாக விளங்குகின்றது. நாட்டின் பாரம்பரியம் எனும் வகையில் அரசமைப்பை நாம் மதிப்பதும் நன்றி பாராட்டுவதும் அவசியம் ஆகும். 1. மாணவர்களைக் குழுவாரியாகப் பிரித்தல். 2. நம்பகமான வலைத்தளத்தைப் பயன்படுத்தி, ஒவ்வொரு குழுவும் அரசர் அல்லது சுல்தான், அரசு தொடர்பான படத் தகவல்களைத் தேடுதல். 3. மாணவர்கள் பெறப்பட்ட தகவல்களைப் படைத்தல். அரசர், அரசு என்பதன் பொருளை விளங்கிக் க�ொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல். ஐயா, இஸ்லாமிய வருகைக்குப் பின்னர்தான் அரசருக்குச் சுல்தான் எனும் விளிப்புமுறை பயன்படுத்தப்பட்டதா? 21ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன் ம் நூற்றாண்டுக் கற்றல் திறன் தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் ராஜா என்பதன் பொருள் என்ன? விரைந்து பதிலளி விரைந்து பதிலளி உங்களுக்குத் தெரியுமா? அரசமைப்பு, தொடக்கக்கால மலாய் அரசுகளின் காலந்தொட்டே பின்பற்றப்பட்டு வருகின்றது. தொடக்கக்கால மலாய் அரசுகளின் அரசாட்சி முறையில் அரசர், மிக உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளார். அரசர் அல்லது சுல்தான் மக்களையும் தனது அரசையும் ஆட்சி செய்யும் மாநிலத்தில் தலைவர் ஆவார். ஆமாம் சீமா, பெரும்பாலான மலாய் அரசர்கள் சுல்தான் எனும் விளிப்புமுறையைப் பயன்படுத்தினர்.
Saiz sebenar 5 6.1.1 K6.1.6 ராஜா அல்லது சுல்தான் மாநிலத்தின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டும் தலைவராகத் திகழ்கின்றார். தற்பொழுது ஒன்பது மாநிலம் அரசமைப்பை அமல்படுத்துகின்றன. அம்மாநிலத் தலைவர்கள் வெவ்வேறு விளிப்பு முறையைக் க�ொண்டுள்ளனர். நம் நாட்டின் பாரம்பரியமாக விளங்கும் அரசமைப்பு நாட்டின் அமைப்புக்கு அடிப்படையாக விளங்குவதால் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நாம் அனைவரும் அரசமைப்பை முழுமனத்துடன் ஏற்கவும் போற்றவும் வேண்டும். ராஜா அல்லது சுல்தான் க�ொண்ட மாநிலங்கள் மாநிலத்தின் அரண் சுல்தான் யாங் டி பெர்துவான் பெசார் ராஜா சுல்தான் சுல்தான் சுல்தான் சுல்தான் சுல்தான் சுல்தான் பெர்லிஸ் கெடா பேராக் பினாங்கு கிளந்தான் திரங்கானு பகாங் சிலாங்கூர் நெகிரி செம்பிலான் மலாக்கா ஜொகூர் மல நீரிணை ாக்கா தென் சீனக் கடல் சரவாக் சபா வ • பினாங்கு, மலாக்கா, சரவாக், சபா ஆகிய மாநிலங்களில் அரசமைப் பு இல்லை. இம்மாநிலங்களுக்குத் தலைவராக யாங் டி பெர்துவா நெகிரி, மாட்சிமை தாங்கிய மாமன்னரால் நியமிக்கப்படுகிறார். • கூட்டரசுப் பிரதேசங்களான க�ோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவான் ஆகியவற்றிற்கு மாட்சிமை தாங்கிய மாமன்னர் தலைமையேற்கிறார். • நெகிரி செம்பிலான் ராஜாவை யாங் டி பெர்துவான் பெசார் என்றும் பெர்லிஸ் ஆட்சியாளரை ராஜா என்றும் அழைப்பர். உங்களுக்குத் தெரியுமா? அரசமைப்பை அமல்படுத்துகிற மாநிலங்களைக் குறிப்பிடுக. விரைந்து பதிலளி விரைந்து பதிலளி அரசமைப்பை அமல்படுத்துகிற மாநிலங்களை அடையாளங்காண மாணவர்களுக்கு வழிகாட்டுதல். குழுவில், அரசமைப்பைப் போற்ற வேண்டியதன் அவசியத்தைப் படைப்பாக்கத்திறனோடு விவரித்திடுக. நநடவடிகக்்கைகை
Saiz sebenar 6 6.1.2 K6.1.7 “...யாம் மாட்சிமை தாங்கிய தங்களின் அருளை வேண்டுகிறேன். எல்லா மலாய் அடிமைகளும் தங்களின் பாவத்திற்கு ஆளாயிருப்பினும், எங்களை ஒதுக்காதீர்கள். தீயச் சொ ற்களால் நிந்திக்கா தீர்கள். ஒரு வேளை 'ஷாராக்' விதிகளுக்கு உட்பட்ட க�ொலையாக இருப்பினும் தங்களிடம் தயவு கூர்ந்து மன்னிப்புக் க�ோருகிறோம்." “பாமான் உமது வாக்குறுதியை யாம் ஏற்கிறோம்'. அடியேனும் தங்களிடமிருந்து வாக்குறுதியை எதிர்பார்க் கிறேன்.' .... அடியேனின் வம்சாவளிக் குழந்தைகள் தவறுகள் செய்யினும், எல்லா மலாய்க்கா ரர்களும் அடியேன் மீது துரோகம் பூண்டு பூமியில் ரத்தம் சிந்தக்கூடாது. அவர்கள் காயம் பட்டா லும் நாட்டைக் கைப்பற்றிப் பின்வாங் கும் வரையிலும் கூட." “அப்படியே ஆகட்டும் வேந்தரே, தங்களின் குழந்தைகள் முதலில் மாறிடும் பட்ச த்தில் எங்களின் குழந்தைகளும் மாறிடுவர் வேந்தரே" அரசர் விசுவாசத்திற்கும் மரியாதைக்கும் உரியவர் அரசருக்கு விசுவாசமாக இருக்கும் பண்பானது முந்தைய காலந்தொட்டு ஒவ்வொரு குடிமகனும் பின்பற்றிவரும் பழக்கமாகும். 'சுலாலாதூஸ் சாலாத்தின்' எனும் புத்தகத்தில் அரசருடனான வாடாட் உடன்பாடு காணப்படுகிறது. இவ்வுடன்பாடு ஸ்ரீ தெரி புவானாவிற்கும் மக்களுக்கும் அதாவது டெமாங் லெபார் டாவுன் உடனான வாக்குறுதி விசுவாசத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. மக்கள் அரசருக்கு விசுவாசமாக இருக்க உறுதியளித்தனர். அதே சமயம் அரசரும் மக்களை நீதிவழுவா நடுநிலைமையுடன் ஆட்சி செய்ய உறுதி அளித்தார். "ஆகட்டும் பாமான், அடியேன் இந்த உடன்பாட்டை ஏற்கிறேன்." நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இந்த வாடாட் கருத்துரு ருக்குன் நெகாராவில், 'பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்' என இரண்டாவது க�ோட்பாடாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே, மலேசியர்களாகிய நாம் அரசர் அல்லது சுல்தானுக்கு முழு விசுவாசத்தை வழங்க வேண்டும். ஒதுக்காதீர்: தள்ளி வைக்காதீர் ஷாராக்: இஸ்லாமிய சமய விதி நிந்திக்கும்: அவமதிக்கும் உடன்பாடு: ஒப்புக்கொள்ளுதல் ச�ொற்களஞ்சியம் • வாடாட் கருத்துருவை விளங்கிக் க�ொள்ள மாணவர்களுக்குத் துணை புரிதல். • மாணவர்கள் அரசமைப்பு மீதான விசுவாச நெறியின் அவசியத்தை விளக்க வழிகாட்டுதல். 1. ஐவர் க�ொண்ட குழுக்களை அமைத்தல். 2. மேற்கண்ட உரையாடலுக்கேற்பப் படைப்பாற்றல் திறனுடன் நடிக்கச் செய்தல். 21ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன் ம் நூற்றாண்டுக் கற்றல் திறன் 'சுலாலாதூஸ் சாலாத்தின்' புத்தகத்தில் காணப்படும் வாடாட் மூலவரிகள். 'சுலாலாதூஸ் சாலாத்தின்' புத்தகத்தில் காணப்படும் வாடாட் உடன்பாடு தொடர்பாக மாணவர் குழுவினரின் நடிப்புக் காட்சி. [மூலம்: A. Samad Ahmad (peny.), 1996. Sulalatus Salatin, Edisi Pelajar, Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka, hlm. 25-26] பாகமேற்று நடித்தல் வாடாட் எனப்படுவது விசுவாச உடன்படிக்கை ஆகும். உங்களுக்குத் தெரியுமா?
Saiz sebenar 7 இறையாண்மை, துரோகம் ஆகியவற்றின் கருத்துருவை மாணவர்கள் விளங்கிக் க�ொள்ள வழிகாட்டுதல். Saiz sebenar 7 6.1.3 (மூலம்: Profesor Emeritus Datuk Wira Dr. Muhammad Yusoff bin Hashim) இறையாண்மைமிகு அரசர் அரசர் அல்லது சுல்தான் என்பவர் மக்களின் விசுவாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய ஓர் அரசின் தலைவர் ஆவார். ஸ்ரீ தெரி புவானாவிற்கும் டெமாங் லெபார் டாவுனிற்கும் இடையிலான உடன்பாட்டின் வழி இறையாண்மைக் கருத்துருவும் துரோகக் கருத்துருவும் தோன்றின. இறையாண்மை இறையாண்மை எனப்படுவது தனது அரசின் மீது அரசர் அல்லது சுல்தான் க�ொண்டுள்ள மிக உயரிய அதிகார அடையாளம் ஆகும். இறையாண்மைமிகு அரசர் அல்லது சுல்தான் ஆட்சிப்புரிவதற்கு ஆளுமை, தனித்துவமிகு தன்னெறி, அறிவாற்றல் க�ொண்டிருத்தல் வேண்டும். துரோகம் துரோகம் எனப்படுவது அரசர் அல்லது சுல்தானின் ஆணையையும் கட்டளையையும் புறக்கணித்தல் ஆகும். துரோகம் புரிகின்ற மக்களுக்கு அதற்கு நிகரான தண்டனை வழங்கப்படும். இறையாண்மைமிகு அரசர் எந்நேரமும் அமைதியும் சுபிட்சமும் நிலவுவதை உறுதிச் செய்பவர். மக்கள் அவரின் ஆட்சியின் கீழ் அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ்கின்றனர். உங்களுக்குத் தெரியுமா? • ‘டாவ்லாட்’ (இறையாண்மை ) எனும் சொ ல் அரபுச் சொல்லா கும். ‘டாவ்லா’ என்பதன் பொருள் நாடு அல்லது அரசு. • துரோகம் புரிகின்ற மக்களுக்குச் சாபக்கேடு அல்லது பேரிடர் ஏற்படும். இறையாண்மை என்பதன் பொருளைக் குறிப்பிடுக. விரைந்து பதிலளி விரைந்து பதிலளி குழுவாரியாக அரசமைப்பு மீது விசுவாசம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்குதல். நநடவடிகக்்கைகை
Saiz sebenar 8 Saiz sebenar 1 2 அரசமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் அரசமைப்புப் பாரம்பரியத்தை நிலைநிறுத்தியுள்ள நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும். தொடக்கக்கால மலாய் அரசுகளின் காலம் தொட்டே அரசமைப்பு நமது இறையாண்மைக்கும் பெருமைக்கும் அடையாளமாக விளங்குகின்றது. காலத்திற்கேற்ப அரசமைப்பு பல மாற்றங்களைக் கண்டுள்ளது. தொடக்கக்கால மலாய் அரசமைப்பு பிரிட்டிஷ் காலனித்துவ அரசமைப்பு 1. அருந்தகச் சூழல் போன்று ஒரு மேசையில் மாணவர்கள் குழுவாக அமர்ந்திருத்தல். 2. ‘அரசமைப்பு இறையாண்மையைத் தற்காக்க வேண்டியதன் அவசியம்’ என்ற கலந்துரையாடல் தலைப்பை ஆசிரியர் வழங்குதல். 3. மாணவர்கள் அத்தலைப்பையொட்டி குழுவில் கலந்துரையாடுதல். 21ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன் ம் நூற்றாண்டுக் கற்றல் திறன் அருந்தகம் (Kafe) • அரசர் அல்லது சுல்தான் தங்கள் மாநிலத்தின் தலைவர். • அரசர் அல்லது சுல்தான் தமது ஆட்சியில் முழு அதிகாரம் பெற்றவர். • நிர்வாகம், சட்டம், நீதி, அரசதந்திர உறவு ஆகியவை தொடர்பான க�ொள்கைகளை அரசர் அல்லது சுல்தான் முடிவு செய்வார். • அரசை நிர்வாகம் செய்ய அரசர் அல்லது சுல்தானுக்கு ஆட்சியர்கள் உதவுகின்றனர். ஆட்சியர்கள் பாலாய் ரோங் ஸ்ரீயில் சுல்தானுடன் கலந்தாலோசிக்கும் உருப்போலி காட்சியமைப்பு. (Diorama) (மூலம்: Kompleks Sejarah Pasir Salak) தொடுவாய்க் குடியேற்ற மாநிலங்களின் ஆளுநருடன் மலாய்ச் சுல்தான்கள். (மூலம்: Arkib Negara Malaysia) • அரசர் அல்லது சுல்தான் மாநிலத் தலைவராக நிலைநிறுத்தப்பட்டார். • அரசர் அல்லது சுல்தான் ஆட்சிப் பொறுப்பில் முழு அதிகாரம் பெற்றிருக்கவில்லை. • அரசர் அல்லது சுல்தான் தங்கள் மாநிலத்தில் இஸ்லாமிய சமயத்திற்கும் மலாய்ச் சடங்கு சம்பிரதாயங்களுக்கும் தலைவர் ஆவார். • ஒவ்வொரு மாநில நிர்வாகத்தையும் நிர்வகிக்க பிரிட்டிஷ் ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.
Saiz sebenar 9 Saiz sebenar 6.1.4 K6.1.8 3 ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தில் அரசமைப்பு • அரசியலமைப்பு முடியாட்சி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. • அரசர் அல்லது சுல்தானின் அதிகாரம் மாநில அரசியலமைப்புக்கு உட்பட்டது. • மாநில நிர்வாகத்திற்கு மந்திரி பெசார் தலைமையேற்க, நிர்வாகச் சபை துணை புரிகிறது. • மாட்சிமை தாங்கிய மாமன்னர் அமைப்புமுறை சுதந்திரத்திற்குப் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. • ஒன்பது மலாய் அரசர்களும் மாட்சிமை தாங்கிய மாமன்னராகச் சுழல்முறையில் நியமிக்கப்படுகின்றனர். • நாட்டின் நிர்வாகத்தைப் பிரதமர் தலைமையேற்க அமைச்சரவை துணைபுரிகிறது. சுதந்திரத்திற்குப் பின்னர் இன்று வரையிலான அரசமைப்பு மலேசியக் குடிமக்களாகிய நாம் அரசமைப்பு இறையாண்மையை எவ்விதப் பாகுபாடின்றித் தற்காப்பது அவசியமாகும். அரசமைப்பு இறையாண்மை நாட்டின் வளப்பத்தையும் அமைதியையும் உறுதிப்படுத்துகின்றது. அரசமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களை மாணவர்கள் விளங்கிக் க�ொள்ள வழிகாட்டுதல். நிர்வாகச் சபை: நிர்வாகப் பணிகளைச் செய்யும் அமைப்பு ஆகும். அமைச்சரவை: பிரதமரையும் அமைச்சர்களையும் உள்ளடக்கிய அமைப்பு. முழு அதிகாரம்: முழுமையான அல்லது எல்லையற்ற அதிகாரம். ச�ொற்களஞ்சியம் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த பிரிட்டிஷார் தங்களது க�ொள்கைகளைத் தொடர்ந்தனர். உங்களுக்குத் தெரியுமா? ஆசிரியர் குறிப்பு ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது மலாய் மாநிலங்களின் நிர்வாகத்தை நிர்வகித்தது யார்? விரைந்து பதிலளி விரைந்து பதிலளி டிசம்பர் 1941இல் ஜப்பானிய இராணுவம் க�ோத்தா பாரு, கிளந்தான் வழியாக ஊடுருவியது. (மூலம்: Arkib Negara Malaysia) • அரசர் அல்லது சுல்தான் மாநிலத் தலைவராக நிலைநிறுத்தப்பட்டார் . • அரசர் அல்லது சுல்தான் ஆட்சிப் பொறுப்பில் முழு அதிகாரம் பெற்றிருக்கவில்லை. • அரசர் அல்லது சுல்தான் தங்கள் மாநிலத்தில் இஸ்லாமிய சமயத்திற்கும் மலாய்ச் சடங்கு சம்பிரதாயங்களுக்கும் தலைவர் ஆவார். • ஜப்பானிய ஆளுநர் மலாய் மாநிலங்களின் நிர்வாகத்தை நிர்வகித்தார். 4 மாட்சிமை தாங்கிய மாமன்னர் 14ஆம் நாடாளுமன்ற இரண்டாம் தவணைக் கூட்டத்தொடர் அரசச் சடங்கில் அதிகாரப்பூர்வத் திறப்புரை ஆற்றுகின்றார். (மூலம்: Istana Negara)
Saiz sebenar 10 அரசமைப்பு ஆட்சிமுறை உலகின் மிகப் பழமையான நிர்வாகமுறை ஆகும். அரசமைப்பு ஆட்சிமுறையில் அரசர் மிக முக்கியத் தூண் போன்றவர். தற்பொழுது உலகில் மலேசியா உட்பட 43 நாடுகள் அரசமைப்பு முறையை அமல்படுத்துகின்றன. பன்னாட்டு அரசமைப்பு Saiz sebenar 10 அரசமைப்பு இறையாண்மையைத் தற்காக்கும் முறையை வகுப்பில் படைத்தல். தகவல் தொடர்பு தொழில்நுட்பச் செயலியைப் பயன்படுத்தி இப்படைப்பைப் படைக்கலாம். மாணவர் படைப்பு 21ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன் ம் நூற்றாண்டுக் கற்றல் திறன் யுனைட்டட் கிங்டம் மஹ்க்ரிபீ அட்லாண்டிக் பெருங்கடல் யுனைட்டட் கிங்டம் மகாராணியின் கொடி (மூலம்: Khairil Annas Jusoh, 2014. Dustur Wa Salatin: Perlembagaan dan Para Sultan. Shah Alam: Yayasan Penyelidikan Transformasi) டென்மார்க் டென்மார்க் மகாராணியின் கொடி மஹ்க்ரிபீ அரசின் கொடி (மூலம்: British High Commision, Kuala Lumpur) (மூலம்: Sekretariat Kabinet Denmark, Denmark) (மூலம்: Kedutaan Negara Maghribi, Kuala Lumpur)
Saiz sebenar 11 Saiz sebenar 6.1.5 உலகில் அரசமைப்பு முறையை அமல்படுத்தும் நாடுகளை மாணவர்கள் அறிய வழிகாட்டுதல். ஆசிரியர் குறிப்பு அரசமைப்பு நாட்டின் ஒற்றுமையையும் வளப்பத்தையும் காட்டும் அடையாளமாகும். ஆகவே, அரசமைப்பு இறையாண்மையைத் தற்காக்க, மக்கள் முழு விசுவாசத்தைக் காட்டுவது அவசியமாகும். அரசமைப்பை அமல்படுத்தும் நாடுகளைக் குறிப்பிடுக. விரைந்து பதிலளி விரைந்து பதிலளி தாய்லாந்து மலேசியா இந்தியப் பெருங்கடல் பசிபிக் பெருங்கடல் மாட்சிமை தாங்கிய மாமன்னரின் கொடி தாய்லாந்து அரசின் கொடி (மூலம்: Kedutaan Negara Thailand, Kuala Lumpur) (மூலம்: Istana Negara)
Saiz sebenar 12 1 3 5 2 4 6 Saiz sebenar 12 கருவிகளும் பொருள்களும் கத்தரிக்கோல் மணிலா அட்டை நெகிழிப் பாத்திரம் அரசர் க�ொடி தூரிகை துளையிடும் கருவி கயிறு நீர் வண்ணம் பசை கிளைகள் மணல் நெகிழிப் பாத்திரத்தின் மேல் வண்ணம் பூசி அதன் உள்ளே மணலை நிரப்புக. ஒவ்வொரு நாட்டின் அரசக் க�ொடிப் படத்தை மணிலா அட்டையில் ஒட்டுக. மணிலா அட்டையில் கயிற்றைக் கட்டிக் கிளைகளில் தொங்கவிடவும். மணிலா அட்டையில் துளையிடுக. அரசக் க�ொடி, அறிவு மரம் தயாராகிவிட்டது. படைப்பாக்கத்திறனுடன் கிளைகளுக்கு வண்ணம் பூசி மணல் நிரம்பிய பாத்திரத்தின் உள்ளே நடவும். அரசக் கொடி அறிவு மரம் மாணவர்கள் அரசக் க�ொடி அறிவு மரத்தைத் தயார் செய்ய வழிகாட்டுதல். உருவாாக்குவோ ோம் வாாரீர்
Saiz sebenar 13 Saiz sebenar 1 3 4 5 இந்த அலகு, அரசமைப்பு தொடர்பான வரலாறு, வளர்ச்சி, நம் நாட்டில் மலாய் அரசர்களின் நிலை, பங்கு ஆகியவற்றை விவரிக்கின்றது. இந்த அறிவானது நாட்டின் பாரம்பரியமாக விளங்கும் அரசமைப்பு மீது பெருமை க�ொள்ளும் உணர்வை ஊட்டுகிறது. அடுத்த அலகு இஸ்லாமிய சமயம் கூட்டரசுச் சமயம் என்பதை விவரிக்கின்றது. இறையாண்மைமிகு அரசர் நாட்டின் அரண் அரசர் அல்லது சுல்தான் இறையாண்மைமிகு அரசின் உயரிய ஆட்சியாளர் ஆவார். அரசு என்பது அங்கீகரிக்கப்பட்ட முறையில் ஆட்சி செய்யப்படும் மாநிலம் அல்லது நாடு ஆகும். இறையாண்மைமிகு அரசர் இறையாண்மை என்பது அரசர் அல்லது சுல்தான் தங்கள் அரசின் மீதான உச்ச அதிகாரத்தின் அடையாளமாகும். அரசர் அல்லது சுல்தானின் ஆணையை மீறுவது துரோகம். அரசமைப்பின் மாற்றங்கள் தொடக்கக்கால மலாய் அரசுகளின் போது அரசர் அல்லது சுல்தான் முழு அதிகாரம் க�ொண்டிருந்தார். தற்பொழுது அரசர் அல்லது சுல்தானின் அதிகாரம் அரசியலமைப்புக்கு உட்பட்டுள்ளது. உலகின் அரசமைப்பு உலகின் அரசமைப்பு ஆட்சிமுறையை அமல்படுத்தும் நாடுகளில் மலேசியா, தாய்லாந்து, யுனைட்டட் கிங்டம், மஹ்க்ரிபீ, டென்மார்க் ஆகியவை அடங்கும். மீட்டுணர்வோம் 2 அரசர் மரியாதைக்கும் விசுவாசத்திற்கும் உரியவர் ஸ்ரீ தெரி புவானா (அரசர்), டெமாங் லெபார் டாவுன் (மக்கள்) இடையிலான வாடாட் அரசர், சுல்தான் மீதான மக்களின் விசுவாசத்திற்கு அடிப்படையாக அமைந்தது.
Saiz sebenar 14 அ. கீழ்க்காணும் கூற்றுகளுக்குச் சரி, பிழை என அடையாளமிடுக. ஆ. கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கு ஏற்பக் கட்டத்தில் உள்ள சொற்களுக்கு வட்டமிடுக. 1. அரசு என்பது மாநிலம் அல்லது நாட்டைச் சட்டப்படி ஆள்வதாகும். 2. தொடக்கக்கால மலாய் அரசர்களின் காலந்தொட்டே அரசமைப்பு பின்பற்றப்படுகிறது. 3. யாங் டி பெர்துவா நெகிரியை அரசர் அல்லது சுல்தான் நியமனம் செய்வார். 4. வாடாட், தெரி புவானாவிற்கும் டெமாங் லெபார் டாவுனிற்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையாகும். 5. ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது சுல்தான் தொடர்ந்து முழு அதிகாரம் க�ொண்டிருந்தார். 6. மாட்சிமை தாங்கிய மாமன்னர் அரசமைப்பு, சுதந்திரத்திற்குப் பின்னரே அறிமுகப்படுத்தப்பட்டது. சிந்தித்துப் பதிலளி இப்பக்கத்தைப் படியெடுத்து வழங்கிடுக. இறையாண்மை விசுவாசம் பிரிட்டிஷ் முழு அதிகாரம் துரோகம் சுல்தான் அரசர் இ து த பி ரி ட் டி ஷ் ம் ரா வி ம் றை ர சு ல் தா ன் ஜி து ஜா சு வி ந் யா ய் து ச் கி வி ரோ ஒ வா சு கி தா ண் யி மே சு சு க மு ச அ ர ச ர் மை க கெ வா ம் ட் ம் இ ரா ஜ து ரோ க ம் ச சி ம் க் மு ழு அ தி கா ர ம் ம் து டெ சி
Saiz sebenar 15 Saiz sebenar 16ஆவது மாட்சிமை தாங்கிய மாமன்னரான அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்- முஸ்தாபா பில்லா ஷா அவர்களின் முடிசூட்டு விழா தேசிய அரண்மனையில் நடந்தேறியது. (மூலம்: Jabatan Penerangan Malaysia) நாட்டின் பாரம்பரிய அரசமைப்பு மலேசியாவின் வளப்பத்தையும் சுபிட்சத்தையும் உறுதிச் செய்கிறது. தனிநபர் அரசமைப்பை நன்கு தெரிந்து க�ொள்வது விசுவாச உணர்வை விதைக்கும். சமுதாயம் அரசமைப்பைப் போற்றுவது மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும். நாடு இறையாண்மை அரசமைப்பு மீதான விசுவாசத்தையும் நாட்டை நேசிக்கும் பண்பையும் வலுப்படுத்தும். நாட்டை நேசிப்போம்
Saiz sebenar 16 அலகு 2 சாரம் சமூகத்தினரிடையே பல்வேறு சமயமும் நம்பிக்கைகளும் உள்ளன. இந்த அலகு மலாயாவின் சமூகத்தினரிடையே காணப்படும் சமயப் பின்னணியையும் நம்பிக்கைகளையும் விவாதிக்கின்றது. மேலும், இந்த அலகு மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் இஸ்லாமிய சமய வருகையின் வரலாறு; சுதந்திரம் வரைக்குமான மலாய் மாநிலங்களின் நிர்வாகத்தில் இஸ்லாமிய சமயத்தின் நிலை; கூட்டரசுச் சமயமாக விளங்கும் இஸ்லாமிய சமயம் ஒற்றுமையை உருவாக்குவதில் கொண்டுள்ள பங்கு ஆகியவற்றை விளக்குகின்றது. மலேசியாவில் இஸ்லாமிய சமயம் நீங்கள் கற்கப் ப�ோவது என்ன? 1. மலாயாவில் உள்ள சமூகத்தினரின் சமயமும் நம்பிக்கைகளின் பின்னணியும். 2. மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் இஸ்லாமிய சமய வருகையின் வரலாறு. 3. சுதந்திரம் வரையிலான மலாய் மாநிலங்களின் நிர்வாகத்தில் இஸ்லாமிய சமயத்தின் நிலை. 4. கூட்டரசுச் சமயமாக இஸ்லாமிய சமயத்தின் நிலை. 5. ஒற்றுமையை உருவாக்குவதில் இஸ்லாமிய சமயத்தின் பங்களிப்பு. தலைப்பு 6: நம் நாட்டின் பாரம்பரியம்
Saiz sebenar 17 மலேசியத் தேசியப் பள்ளிவாசல் (மூலம்: Koleksi Dewan Bahasa dan Pustaka) Saiz sebenar 17 A அடிப்படை வரலாற்றுச் சிந்தனைத் திறன் KPS 1. மலாயாவில் உள்ள சமூகத்தினரின் இஸ்லாமிய சமயத்தின் கால வரைக்கோடு, நம்பிக்கைகள் ஆகியவற்றை விளங்கிக் கொள்ளச் செய்தல். 2. மலாயாவில் இஸ்லாமிய சமயத்தின் வருகைக்கான குறிப்பிடத்தக்கச் சான்றுகளை ஆராய்தல். 3. இஸ்லாமிய சமயத்தில் ஒற்றுமையை உருவாக்குகின்ற பொதுமை நெறிகளைக் காட்சிநிலையில் கற்பனை செய்தல். குடியியல் நெறி பொறுப்புணர்வு மதித்தல்
Saiz sebenar 18 6.2.1 மலாயாவில் உள்ள சமூகத்தினர் தொடக்கக்காலம் தொட்டே சமயப் பிடிப்பும் நம்பிக்கைகளும் கொண்டிருந்தனர். இ்வற்றுள் இயற்கை வழிபாடு (Animisme), இந்து, பெளத்தம், இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகியவை அடங்கும். பின்பற்றப்படும் சமயம் மதிக்கப்படும் நம்பிக்கை இயற்கை வழிபாடு • இது மலாயாவில் உள்ள சமூகத்தினரின் தொடக்கக்கால நம்பிக்கையாகும். • முன்னோர்களின் ஆத்மா மீதும் அமானுஷ்ய சக்தி மீதும் நம்பிக்கை கொண்டிருந்தனர். இந்து சமயம் • மலாயாவுக்கு வணிகத்தின் வாயிலாகக் கொண்டுவரப்பட்டது. • மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டுள்ளது. பெளத்த சமயம் • மலாயாவுக்கு வணிகம் வாயிலாகக் கொண்டுவரப்பட்டது. • எட்டு உயர்நிலை நெறிகளைக் கடைப்பிடித்தல். இஸ்லாமிய சமயம் • மலாயாவுக்கு வணிகர்கள், உலாமாக்கள், சமயப் போதகர்களால் கொண்டுவரப்பட்டது. • இஸ்லாமியக் கோட்பாடுகளையும் இமான் கோட்பாடுகளையும் உறுதியாக நம்புதல். இயற்கை வழிபாடு அன்றும் இன்றும் அமலில் உள்ளது. இந்து, பெளத்தம், இஸ்லாமிய சமயங்களின் வருகை மலாயாவைப் பல்வேறு சமயத்தவர்கள் கொண்ட சமூகமாக உருவாக்கியது. போர்த்துகீஸியர், டச்சு, பிரிட்டிஷார் ஆகிய காலனித்துவ வருகை மலாயாவுக்குக் கிறிஸ்துவ சமயத்தைக் கொண்டு வந்தது. கிறிஸ்துவ சமயம் • போர்த்துகீஸிய காலனித்துவ வருகைக்குப் பின்னர் தோன்றியது. • ஏசுவை இறைவனின் குழந்தையாக நம்புதல். குழு வாரியாக, மலாயாவில் உள்ள சமயம், நம்பிக்கைகள் ஆகியவற்றின் பின்னணியைக் கலந்துரையாடுக. நநடவடிக்கை
Saiz sebenar 19 திரங்கானுவிலும் நெகிரி செம்பிலானிலும் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள், இஸ்லாமிய சமயம் மலாயாவில் இருந்துள்ளதை நிரூபிக்கின்றன. தொடக்கக்கால மலாய் அரசாட்சிக் காலந்தொட்டே இஸ்லாமிய சமயம் பரப்பப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சி சான்றுகளுள் ஒன்றான கல்வெட்டுகளை நாம் ஏன் பேண வேண்டும்? அகழ்வாராய்ச்சி மூலங்களைப் பேணுவதன் அவசியத்தை மாணவர்கள் விளங்கிக் கொள்ள வழிகாட்டுதல். மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் இஸ்லாத்தின் வருகை (மூலம்: Nik Hassan Shuhaimi Nik Abdul Rahman. “Sejarah Tulisan Jawi melalui Kajian Arkeologi di Alam Melayu” dlm. Jurnal Arkeologi Malaysia, Bil. 22, 2009) மலாயாவில் இஸ்லாத்தின் வருகைக்கான அகழ்வாராய்ச்சி சான்றுகள் ❃ 1467ஆம் ஆண்டு எனத் தேதியிடப்பட்ட பெங்காலான் கெம்பாஸ் எனும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு நெகிரி செம்பிலானில் இஸ்லாமிய சமயத்தின் வருகையை நிரூபிக்கின்றது. ❃ 1303ஆம் ஆண்டு எனத் தேதியிடப்பட்ட கோல பெராங், சுங்கை தெரெசாட்டில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு, திரங்கானுவில் இஸ்லாமிய சமயத்தின் வருகையை நிரூபிக்கின்றது. மலாயாவில் இஸ்லாமிய சமயத்தின் வருகையை நிரூபிக்கும் இரண்டு கல்வெட்டுச் சான்றுகளின் அமைவிடங்களைக் கூறுக. விரைந்து பதிலளி விரைந்து பதிலளி கல்வெட்டு, 'பிரசஸ்டி' (Prasasti) என்றும் அழைக்கப்படுகிறது. 'பிரசஸ்டி' எனும் சொல் சமஸ்கிருத மொழியிலிருந்து தோன்றியது. உங்களுக்குத் தெரியுமா?
Saiz sebenar 20 மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் இஸ்லாமிய வருகையின் காரணிகள் 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மலாக்கா புகழ் பெற்ற கடல் வாணிப மையமாக உருவானது. மலாக்கா, ஏற்றுமதி இறக்குமதி துறைமுகமாகவும் இஸ்லாமிய வணிகர்களும் இஸ்லாம் அல்லாத வணிகர்களும் கூடும் தளமாகவும் திகழ்ந்தது. மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் இஸ்லாமிய சமய வருகைக்குப் பல்வேறு காரணிகள் உந்துதலாக அமைந்தன. மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் இஸ்லாத்தைப் பரப்புவதில் சுல்தான், வணிகர்கள், உலாமாக்கள் பெரும் பங்கு வகித்தனர். ச�ொற்களஞ்சியம் ஏற்றுமதி இறக்குமதி: வெளிநாட்டுப் பொருள்களைப் பெறுவதும் உள்நாட்டுப் பொருள்களை விநியோகம் செய்வதும். துறைமுகம்: வணிகத்திற்காகப் பல்வேறு கப்பல்கள் முகாமிடும் இடம். மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் இஸ்லாமிய சமய வருகைக்கான காரணிகளை மாணவர்கள் விளங்கிக் கொள்ள வழிகாட்டுதல். இஸ்லாமிய வணிகர்களின் பங்கு அரேபியா, இந்திய நாடுகளிலிருந்து வருகை புரிந்த இஸ்லாமிய வணிகர்கள் பரப்புரை நடவடிக்கை வாயிலாக இஸ்லாத்தைப் பரப்பினர். சில வணிகர்கள் மலாக்கா மக்களை மணம்புரிந்து, உள்ளூர் மக்களிடையே இஸ்லாத்தைப் பரப்பினர். உலாமாக்களின் பங்கு மலாக்காவில் இஸ்லாத்தைப் பரப்பியவர் மெக்காவிலிருந்து வந்த சேக் அப்துல் அஜிஸ் எனும் உலாமா என்று ஹிக்காயாட் ராஜா ராஜா பாசாய் (Hikayat Raja-raja Pasai) குறிப்பிடுகிறது. இவர் ராஜா, ஆட்சியர், மலாக்கா மக்கள் இஸ்லாத்தைத் தழுவக் காரணமானார். மெகாட் இஸ்கண்டார் ஷா, பாசாய் இளவரசியைத் திருமணம் செய்து கொண்டதன் விளைவாக இஸ்லாத்தைத் தழுவினார். சுல்தான் இஸ்லாத்தைத் தழுவியதால் மலாக்கா மக்களும் அவ்வாறே இஸ்லாத்தைத் தழுவினர். சுல்தானின் பங்கு மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில், மலாக்கா வந்தடைந்ததுமே வணிகர்களும் உலாமாக்களும் தொழுகை மேற்கொள்ளும் காட்சிப்படம். (மூலம்: Muzium Sejarah dan Etnografi, Melaka)
Saiz sebenar 21 மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்திலான சட்ட அமைப்பில் இஸ்லாமிய சட்டங்களும் (Hukum Islam) உள்ளடங்கியுள்ளன. மலாக்காவில் இரண்டு சட்ட அமைப்புமுறைகள் உள்ளன. அவை மலாக்கா சட்ட மரபு (Hukum Kanun Melaka), மலாக்கா கடல் சட்ட விதிகள் (Undang-undang Laut Melaka) ஆகும். மலாயாவுக்கு இஸ்லாத்தின் வருகை, அகழ்வாராய்ச்சிக் கண்டெடுப்பு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில், இஸ்லாமிய சமய வளர்ச்சி அரசாட்சி முறைமை, சட்ட அமைப்பு, கல்வி போன்ற சமூகத்தின் பல்வேறு கூறுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியது. மலாக்கா சட்ட மரபு, மலாக்கா கடல் சட்ட விதிகள் ஆகியவற்றிற்கிடையிலான வேறுபாடுகளை மாணவர்கள் விளங்கிக் கொள்ள வழிகாட்டுதல். [மூலம்: Muhammad Yusoff Hashim, 1980. “Islam dalam Sejarah Perundangan Melaka di Abad Ke-15/16” dlm. Khoo Kay Kim (peny.) Islam di Malaysia. Kuala Lumpur: Penerbitan Persatuan Sejarah Malaysia] இந்தச் சட்டம் வாணிப நடவடிக்கைகளைச் சீரமைப்பதோடு மலாக்காவிற்கு வரும் வணிகர்களுக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. மலாக்கா சட்ட மரபு இந்தச் சட்டம் அரசர், ஆட்சியர் சிறப்புரிமையையும் பொறுப்பையும் உள்ளடக்கிய 44 பிரிவுகள் கொண்டதாகும். இந்தச் சட்டம் மலாக்கா மாநில மக்களிடையே அமைதியையும் பாதுகாப்பையும் உருவாக்கியது. இச்சட்ட அமைப்பிலுள்ள இஸ்லாமியச் சட்டம், குற்றவியல் குற்றங்களுக்கான தண்டனைகள் தொடர்புடையதாகும். மலாக்கா கடல் சட்ட விதிகள் இச்சட்டம் கடல் விதிமுறை, வாணிப விதிமுறை, வணிகப் பரிவர்த்தனை விதிமுறை தொடர்பான 25 பிரிவுகளை உள்ளடக்கியது. இச்சட்ட அமைப்பிலுள்ள இஸ்லாமியச் சட்டம் குற்றவியல், வணிகப் பரிவர்த்தனை, குடும்பவியல் போன்ற குற்றங்களுக்குரிய தண்டனைகள் தொடர்புடையதாகும். மலாக்கா சட்ட மரபு மலாக்கா கடல் சட்ட விதிகள் மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் காணப்பட்ட இரண்டு சட்ட அமைப்பு மூலங்களைக் குறிப்பிடுக. விரைந்து பதிலளி விரைந்து பதிலளி 6.2.2 (மூலம்: Pusat Kebangsaan Manuskrip Melayu, Perpustakaan Negara Malaysia)
Saiz sebenar 22 15ஆம் நூற்றாண்டில் மாநில நிர்வாகத்தில் இஸ்லாமிய சமயம் முக்கியப் பங்கை ஆற்றியுள்ளது. மலாக்கா சட்ட மரபு, மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் நிர்வாக முறைக்கு ஒரு மேற்கோளாக விளங்கியதோடு வேறு மலாய் மாநிலங்களின் சட்ட மரபுகளான பகாங் சட்ட மரபு (Hukum Kanun Pahang), பேராக் 99 சட்ட மரபு (Undang-undang 99 Perak) உருவாக்கத்திற்கும் மேற்கோளாகத் திகழ்ந்தது. (மூலம்: Koleksi Dewan Bahasa dan Pustaka) பகாங் சட்ட மரபு பேராக் 99 சட்ட மரபு சட்டம் எவ்வாறு நல்லிணக்கமிக்க மக்களை உருவாக்குகின்றது? நல்லிணக்கமிக்க சமுதாயத்தை உருவாக்குவதில் சட்டத்தின் பங்கை மாணவர்கள் அறிந்து கொள்ள வழிகாட்டுதல். நிர்வாகத்தில் இஸ்லாமிய சமயம் சட்டம் மனித வாழ்க்கையைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டது. நாட்டின் சுபிட்சம், சட்டத்தைக் கடைப்பிடிக்கும் குடிமக்களால் நிலைநிறுத்தப்படுகிறது.
Saiz sebenar 23 6.2.3 போர்த்துகீஸிய, டச்சுக் காலனித்துவத்தின்போது, இஸ்லாமியச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. எனினும், பிரிட்டிஷ் காலனித்துவத்தின் போதும் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போதும் இஸ்லாமியச் சட்டம், மலாய் மாநிலங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குப் பின்னர், பிரிட்டிஷார் மீண்டும் காலனித்துவம் செய்ததோடு இஸ்லாமியச் சட்டங்கள் தொடர்ந்து அமலாக்கப்பட்டன. அந்நிய சக்திகளின் வருகை தொடர்ந்து மாறினும் நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் இஸ்லாமிய சமயத்தின் நிலை தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு கூட்டரசு அரசியலமைப்பில் இடம்பெறச் செய்தது. பிரிட்டிஷ் காலனித்துவத்தில் இஸ்லாமியச் சட்டம் ஏன் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை? சுதந்திரம் வரையிலான மலாய் மாநிலங்களின் நிர்வகிப்பில் இஸ்லாமிய சமயத்தின் பங்கை மாணவர்கள் விளங்கிக் கொள்ள வழிகாட்டுதல். ❋ சுல்தான், தத்தம் மாநிலங்களின் இஸ்லாமிய சமயத்திற்கும் மலாய்ச் சடங்கு சம்பிரதாயத்திற்கும் தலைவராகத் திகழ்கிறார். ❋ இஸ்லாமியக் குடும்பச் சட்டத்தை மேற்கொள்ள இஸ்லாமிய சமய சபையை ஜப்பானியர் உருவாக்கினர். ஜப்பா ப்பானிய ஆக்க்கிரமிப்பு கிரமிப்புக்க் ககாலலம் ❋ சுல்தான், தத்தம் மாநிலங்களின் இஸ்லாமிய சமயத்திற்கும் மலாய்ச் சடங்கு சம்பிரதாயத்திற்கும் தலைவராகத் திகழ்ந்தார். ❋ இஸ்லாமியச் சட்டம் குடும்பவியல், பூர்வீகச் சொத்து, நன்கொடை (zakat) தொடர்பான விவகாரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. பிரிட்டிஷ் பிரிட்டிஷ் ககாலலனித்துவக்க் ககாலலம் பிரிட்டிஷ் காலனித்துவத்தின்போது சுல்தானின் பங்கைக் குறிப்பிடுக. விரைந்து பதிலளி விரைந்து பதிலளி காலனித்துவத்தின் ப�ோது
Saiz sebenar 24 6.2.4 K6.2.7 K6.2.8 1 3 2 பல்வேறு சமயம், நம்பிக்கை தோன்றலின் வாயிலாக மலேசியா தனக்கே உரிய அடையாளத்தைக் கொண்டுள்ளது. பல்வகைமை காரணமாக மலேசியா சடங்கு, பண்பாடு, பாரம்பரியத்தில் வளம் பெற்றுள்ளது. எனினும், கூட்டரசு அரசியலமைப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய சமயம் கூட்டரசுச் சமயம் ஆகும். சீன் யீ, நான் மலேசியக் குடிமகனாக இருப்பதில் பெருமைகொள்கிறேன். இஸ்லாம் கூட்டரசுச் சமயமாக இருப்பினும் பிற சமயங்களையும் அமல்படுத்த முடியும். கூட்டரசு மலேசியாவின் சமயம் ஆமாம் அமீர், நாம் ஆண்டு முழுதும் பல்வேறு சமய, இன விழாக்களான முகம்மது நபிகள் நாயகம் பிறந்தநாள், தைப்பூசம், விசாக தினம் கொண்டாடுவது ஆச்சரியப்படுவதற்கில்லை. நான் ஒரு கடசானியன். நாங்கள் கெ அமாத்தான் திருவிழாவைக் (Pesta Kaamatan) கொண்டாடுகிறோம். நான் ஓர் ஈபானியன். நாங்கள் 4 'காவாய் திருநாள்' (Hari Gawai) கொண்டாடுகிறோம். மலேசியாவின் கூட்டரசுச் சமயம் எது? விரைந்து பதிலளி விரைந்து பதிலளி மலேசியக் குடிமக்களாகிய நாம், நாட்டின் ஒற்றுமை தொடர்ந்து பேணப்பட பிற இனத்தவரின் சமயத்தையும் நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும். கூட்டரசுச் சமயமான இஸ்லாமிய சமயத்தை மதிப்பதன் அவசியம் என்ன? கெ அமாத்தான் திருவிழா, அறுவடைத் திருநாளை (semangat padi) மதிக்கும் விழாவாகும். உங்களுக்குத் தெரியுமா?
Saiz sebenar 25 ஒவ்வொரு சமயமும் அதன் பின்பற்றுநர்கள் நல்ல நெறிகளை அமல்படுத்த வலியுறுத்துகின்றது; ஒழுக்கமற்ற செயல்களுக்குத் தடை விதிக்கின்றது. இஸ்லாமிய சமயம் தன் பின்பற்றுநர்களிடையே சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் அமல்படுத்தி ஒற்றுமையை உருவாக்கி மக்கள் சுபிட்சமாக வாழ வழிவகுக்கின்றது. இஸ்லாமும் சமூக ஒற்றுமையும் அன்புடைமை • வெவ்வேறு சமயத்தவராக இருப்பினும் அன்பு செலுத்துதல்; நேசித்தல். • தேவைப்படுவோருக்கு உதவுதல். அமைதி • சந்திப்புக் கூட்டத்தின்வழி பலரின் முடிவை அறிதல். • சச்சரவு ஏற்படக் காரணமாக இல்லாதிருத்தல். ஒற்றுமையை உருவாக்கும் சமய சமத்துவம் மிதமான ப�ோக்கு • பல்வேறு வாழ்க்கைச் சூழலில் செலவு செய்தல், பேச்சு, உடை ஆகியவற்றில் மிதமான போக்கைக் கடைப்பிடித்தல். சமய சமத்துவ நெறிகளை விளங்கிக் கொள்ளும் நடவடிக்கையை மேற்கொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல். 1. நான்கு குழுக்களாக மாணவர்களைப் பிரித்தல். 2. ஒவ்வொரு குழுவினரும் நல்லிணக்கமிகு சமுதாயத்தை உருவாக்க அமல்படுத்த வேண்டிய சமயக் கூறுகளை விவாதித்துப் பட்டியலிடுதல். 3. கிடைக்கப்பெற்ற தகவல்களைப் படைத்தல். நநடவடிக்கை விட்டுக் கொடுத்தல் • பல்வேறு வேலைகளில் ஒத்துழைத்தல். • வழிபாட்டுத் தலங்களை மதித்தல். • சமயப் பின்பற்றுதலில் கட்டாயமின்மை.
Saiz sebenar 26 6.2.5 K6.2.6 (மூலம்: Koleksi peribadi Hasfalila binti Hassan) சமயத்தில் காணப்படும் மனிதநேயமும் சமத்துவமும் சுபிட்சத்தை உருவாக்குவதில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஒற்றுமை நிறைந்த மக்களை உருவாக்க இந்நெறிகளைப் பின்பற்றுவது அவசியமாகும். மனிதருக்கும் மனிதருக்குமான தொடர்பு நல்ல அபிப்பிராயம் கொள்வதோடு, சக மனிதரை மதித்தல். சுற்றுச்சூழலைப் பேணுதல், புனரமைத்தல், அழகுப்படுத்துதல். மனிதருக்கும் இறைவனுக்குமான தொடர் பு மனிதநேயம் சுபிட்சத்தின் அடித்தளம் செஜாத்ரா மலேசியா காணொலிப் பாடல் சுற்றுச்சூழலைப் பேணும் முறைகளைக் குறிப்பிடுக. விரைந்து பதிலளி விரைந்து பதிலளி 21ஆம் நூற்றாண்டின் கற்றல் திறனுக்கான நெறிகளை மாணவர்கள் விளங்கிக் கொள்ள வழிகாட்டுதல். விரைவாக எழுதுதல் பள்ளியில் ஒற்றுமையை நிலைநாட்ட நீ கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளை ஐந்து மணித்துளிகளில் குறிப்பிடுக. 21ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன் ம் நூற்றாண்டுக் கற்றல் திறன் மனிதருக்கும் சுற்றுச்சூழலுக்குமான தொடர் பு சமயப் போதனைகளை அமல்படுத்துவதோடு அது விதிக்கும் தடைகளை விட்டொழித்தல்.
Saiz sebenar 27 இந்த அலகு, மலாயாவில் ஒற்றுமையை உருவாக்கிய இஸ்லாமிய சமய நெறிகளின் மேம்பாட்டை விளக்குகின்றது. அடுத்த அலகு, மொழி நாட்டின் பாரம்பரியம் எனும் வகையில் மலாய்மொழியின் வரலாற்றையும் பங்கையும் விவாதிக்கின்றது. மீட்டுணர்வோம் இஸ்லாமும் சமூக ஒருமைப்பாடும் ¯ விட்டுக்கொடுத்தல் ¯ மனிதருக்கும் இறைவனுக்குமான தொடர்பு ¯ மிதமான போக்கு ¯ மனிதருக்கும் மனிதருக்குமான தொடர்பு ¯ அன்புடைமை ¯ மனிதருக்கும் சுற்றுச்சூழலுக்குமான ¯ அமைதி தொடர்பு மலேசியக் கூட்டரசுச் சமயம் கூட்டரசு அரசியலமைப்பில் இஸ்லாமிய சமயம் கூட்டரசுச் சமயமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. எனினும், வேறு சமயங்களையும் அமல்படுத்த முடியும். நிர்வாகத்தில் இஸ்லாமிய சமயம் ¯ மலாக்கா சட்ட மரபு ¯ மலாக்கா கடல் சட்டம் காலனித்துவ நிர்வாகத்தின்போது இஸ்லாமிய சமயம் ¯ பிரிட்டிஷ் காலனித்துவம் ¯ ஜப்பானிய ஆக்கிரமிப்பு மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் இஸ்லாத்தின் வருகை ¯ இயற்கை வழிபாடு ¯ இஸ்லாம் ¯ இந்து ¯ கிறிஸ்து ¯ பெளத்தம் பின்பற்றப்படும் சமயம் மதிக்கப்படும் நம்பிக்கை அகழ்வாராய்ச்சி சான்று ¯ கல்வெட்டு வருகைக்கான காரணிகள் ¯ இஸ்லாமிய வணிகர்களின் பங்கு ¯ உலாமாக்களின் பங்கு ¯ சுல்தானின் பங்கு
Saiz sebenar 28 காலி இடத்தைச் சரியான பதிலைக் கொண்டு நிறைவு செய்க. இஸ்லாமிய சமயம் இஸ்லாமிய சமய சபை சிந்தித்துப் பதிலளி 1. _______________ மலாயாவில் இஸ்லாமிய சமய வருகையை நிரூபிக்கின்றது. 2. நம் நாட்டின் கூட்டரசு சமயம் ________________ ஆகும். 3. ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது _________________ தோற்றுவிக்கப்பட்டது. 4. _______________ மலாக்காவின் சட்ட மூலம் ஆகும். 5. _______________ மலாக்காவிற்கு இஸ்லாமிய சமயத்தைக் கொண்டு வந்தனர். 6. _______________ ஒவ்வொரு பொருளிலும் ஆத்மாவும் அமானுஷ்ய சக்தியும் உள்ளதாக நம்புகிறது. 7. மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்குமான தொடர்பு _____________ மூலம் வெளிப்படுகின்றது. 8. வெவ்வேறு சமயத்தவராக இருப்பினும் ஒருவரை நேசித்தலும் நேசிக்கப்படுதலும் அந்நபர் _______________ அதிகம் கொண்டுள்ளதாகக் காட்டுகின்றது. இப்பக்கத்தைப் படியெடுத்து வழங்கிடுக. இயற்கை வழிபாடு மலாக்கா சட்ட மரபு அன்புடைமை வணிகர்கள் திரங்கானு கல்வெட்டு சுற்றுச்சூழலைப் பேணுதலும் புனரமைத்தலும்
Saiz sebenar 29 மலாயாவில் தொடக்கக்கால மலாய் அரசுகளின் காலந்தொட்டே இஸ்லாமிய சமயம் வேறூன்றி இருக்கிறது. மக்கள் சுபிட்சமாக வாழ்வதற்குப் புரிந்துணர்வு, ஒருவர் ஒருவரை மதித்தல் ஆகியன தொடர்ந்து நிலைநிறுத்தப்படுகிறது. தனிநபர் தன்னிடமுள்ள சமய நெறி சிறந்த ஆளுமையை உருவாக்க அவசியமாகிறது. சமுதாயம் பிற இனத்தவரின் சமயத்தையும் நம்பிக்கையையும் அறிந்து மதிப்பதன் வழி மக்கள் மகிழ்ச்சியாக வாழலாம். நாடு விட்டுக்கொடுத்தல், அன்புடைமை, இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஆகியவை நாட்டின் சுபிட்சத்திற்கு வழி வகுக்கும். நாட்டை நேசிப்போம் பிற இனத்தவரின் சமயம், நம்பிக்கைகளை மதிப்பதன்வழி மலேசியாவில் சமுதாயத்தின் ஒற்றுமையை அடைய முடிந்தது. (மூலம்: Koleksi peribadi Hasfalila binti Hassan)
Saiz sebenar 30 Saiz sebenar 30 3 அன்றைய இன்றைய சமூகத்தினரின் வாழ்க்கையில் வரலாற்றையும் பங்கையும் விளங்கிக் கொள்வதற்காக மலாய்மொழி கற்பது அவசியமாகும். நம் நாட்டின் பாரம்பரியத்தை நிலைநாட்டப் பல்வேறு முயற்சிகளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அலகு மலாய்மொழிப் பாரம்பரிய வழித்தோன்றல், உலகின் மலாய்மொழி பேசுகின்றவர் பகுதி, முந்தைய காலம் தொட்டு இன்று வரையிலான மலாய்மொழியின் பங்கு ஆகியவற்றை விவாதிக்கின்றது. அலகு தலைப்பு 6: நம் நாட்டின் பாரம்பரியம் சாரம் மலாய்மொழி நமது பாரம்பரியம்
Saiz sebenar 31 Saiz sebenar 31 நீங்கள் கற்கப் போவது என்ன? 1. மலாய்மொழியின் பாரம்பரிய வழித்தோன்றல். 2. உலகில் மலாய்மொழி பேசுகின்றவர் பகுதி. 3. அன்றும் இன்றும் மலாய்மொழியின் பங்கு. A அடிப்படை வரலாற்றுச் சிந்தனைத் திறன் KPS 1. மலாய்மொழி வரலாறு, பங்கு ஆகியவற்றின் காலநிரல் மாற்றத்தை விளங்கிக் கொள்ளல். 2. நாட்டின் பெருமைமிகு பாரம்பரியம் எனும் வகையில் மலாய்மொழியின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் முந்தைய சிக்கல்களையும் பிரச்சினைகளையும் விளங்கிக் கொள்ளல். 3. மலாய்மொழி அறிவு மொழி, ஒற்றுமை மொழி எனும் வகையில் அதன் மாற்றங்களையும் தொடர்ச்சியையும் விவரித்தல். குடியியல் நெறி மதித்தல் பொறுப்புணர்வு 'பூரோங் தெம்புவா டெங்கான் பூடாக் மாலாஸ்' எனும் நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள பழைய மலாய்மொழி எழுத்துக் கூட்டல். (மூலம்: Burong Tempua dengan Budak Malas, 1971. Johor: Pustaka Pendidekan Sdn. Bhd.)
Saiz sebenar 32 மலாய்மொழியின் நில அசல் வரைபடம் (மூலம்: Asmah Haji Omar, 2015. Ensiklopedia Bahasa Melayu. Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka) Saiz sebenar 32 மொழி மனிதனின் தொடர்புக் கருவி ஆகும். மலாய்மொழி பிலும் (filum) எனக் கூறப்படும் ஆஸ்ட்ரிக்கிலிருந்து தோன்றியது. இந்தப் பிலும்மிலிருந்துதான் அஸ்ட்ரோனேசியா குடும்பம் (rumpun) தோன்றியது. மலாய்த் தீவுக் கூட்டங்களில் பேசப்படும் வேறுபட்ட ஆயிரக்கணக்கான மொழிகளில் மலாய்மொழியும் ஒன்று. உலகில் புகழ் பெற்ற மலாய்மொழி, மிதமான வெளிக் கூறுகளை எளிதாக ஏற்றுக்கொள்ளும் இயல்புகளைப் பெற்றுள்ளதால் தொடர்ந்து விரிவடையும் மொழியாகத் திகழ்கின்றது. மலாய்மொழி பாரம்பரிய வழித்தோன்றல் ச�ொற்களஞ்சியம் பிலும்: 5000 ஆண்டுகளுக்கும் மேலான வயதைக் கொண்ட முதன்மை மொழிக் குடும்பமாகும். குடும்பம் (Rumpun): 2500– 5000 ஆண்டுகளுக்கும் மேலான வயதைக் கொண்ட மொழிக் குடும்பமாகும். மலாய்மொழியின் மூலக் குடும்பத்தைக் குறிப்பிடுக. விரைந்து பதிலளி விரைந்து பதிலளி பிலும்-ஆஸ்ட்ரிக் (Filum - Austrik) குடும்பம் - அஸ்ட்ரோனேசியா (Rumpun - Austronesia) மலாய்மொழி மலாய்மொழி பாரம்பரிய வழித்தோன்றலின் சுருக்கம் வியாட்நாம் (மெலாயு சம்பா) சுமத்திரா போர்னியோ புருணை ஜாவா ஜாவா கடல் தென் சீனக் கடல் அந்தமான் கடல் தீபகற்ப மலாயா வ சயாம் விரிகுடா போர்னியோ கடற்கரை
Saiz sebenar 33 ஆசிரியர் குறிப்பு 6.3.1 K6.3.4 மலாய்மொழி நாட்டின் பாரம்பரியம் எனும் வகையில் இனத்தின் அடையாளத்தைப் பிரதிபலிப்பதால் அவசியம் நிலைநாட்ட வேண்டும். ஒரு நாட்டின் நாகரிகத்தைக் கலை கலாச்சாரப் பாரம்பரியம், மொழி, பழக்கங்கள், பல்வேறு இனத்தவரின் வாழ்க்கைமுறை ஆகியவற்றிலிருந்தும் அறிய முடிகிறது. பண்பாட்டுத் தொடர்ச்சியை நிலைநாட்ட நாட்டின் பாரம்பரியத்தை நிலைநிறுத்த வேண்டும். • கவிதையைச் சரியான தொனியில் வாசித்திட மாணவர்களுக்கு வழிகாட்டுதல். • சுயமாகக் கவிதை எழுத மாணவர்களுக்குத் துணைபுரிதல். மலாய்மொழி பாரம்பரியத்தின் வழித்தோன்றலைக் கற்பதன் வழி மலாய்மொழி நாட்டின் பாரம்பரியமிக்கது என நம்மை விழிப்படையவும் பெருமை கொள்ளவும் செய்கிறது. 1. மேற்கண்ட கவிதையைச் சரியான தொனியுடன் வாசித்தல். 2. அக்கவிதையின் பொருளை விளங்கிக் கொள்ளுதல். 3. ‘மலாய்மொழி நாட்டின் பாரம்பரியம்’ எனும் தலைப்பில் கவிதை ஒன்றனை எழுதுதல். 4. எழுதிய கவிதையைப் படைத்தல். நநடவடிக்்கைகை நாட்டின் பாரம்பரியமிக்க மலாய்மொழியின் அவசியத்தை விளக்குதல். Bahasa Melayu Warisan Negara Bahasa Melayu sanjungan kita, Usah cemarkan keindahannya, Gunakanlah dengan bijaksana, Santun bahasa sama dijaga. Puisi Melayu tiada kurangnya, Jadi penyeri hari bahagia, Kita alunkan warisan budaya, Lambang kebanggaan kita semua. Cintailah bahasa kita, Bahasa Melayu warisan bangsa, Usahlah malu menuturkannya, Martabatkan bahasa setiap masa. Bahasa Melayu warisan kita, Ayuh semua menuturkannya, Bahasa juga menyatukan kita, Aman negara tiada sengketa. கவிதை: மலாய்மொழி நாட்டின் பாரம்பரியம்
Saiz sebenar 34 கம்போடியா மலேசியா தென் தாய்லாந்து கோகோஸ் தீவு கிறிஸ்மஸ் தீவு கிழக்கு ஆஸ்திரேலியா மடகாஸ்கார் ஸ்ரீ லங்கா இந்தோனேசியா தென் ஆப்பிரிக்கா சிங்கப்பூர் பிலிப்பைன்ஸ் தைவான் புருணை டாருஸ்சலாம் வியட்நாம் (மெலாயு சம்பா) இந்தியப் பெருங்கடல் Saiz sebenar 34 மலாய்மொழி மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலந்தொட்டுப் புகழ் பெற்ற பொக்கிஷமாக விளங்குகின்றது. உலகம் முழுதும் 'லிங்குவா பிரான்கா' அடிப்படையில் மலாய்மொழியின் பயன்பாடு படர்ந்திருந்தது. பின்வரும் கரைவரைபடம் உலகில் மலாய்மொழி பேசுகிறவர்களின் படர்ச்சியைக் காட்டுகின்றது. மலாய்மொழி பேசுவோர் வாழும் பகுதிகள் லிங்குவா பிரான்கா (Lingua Franca): இணைப்பு மொழி அல்லது சமூகத்தினரிடையிலான தொடர்பு மொழி. ச�ொற்களஞ்சியம் தென் சீனக் கடல் ஜாவா கடல் சூலு கடல் சவுதி அரேபியா உலகின் மலாய்மொழி பேசும் பகுதிகளின் படர்ச்சிகளில் சில (மூலம்: Asmah Haji Omar, 2015. Ensiklopedia Bahasa Melayu. Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka)
Saiz sebenar 35 ஆசிரியர் குறிப்பு நியூசிலாந்து ஈஸ்டர் தீவு பசிபிக் பெருங்கடல் Saiz sebenar 35 பிரான்கோய்ஸ் வெலண்டின் (Francois Valentijn) எனும் டச்சு எழுத்தாளர் 1726இல் பதிவு செய்தது: “அவர்கள் மொழியான மலாய் மொழி, கரையோர மாவட்டங்களில் பேசப்படுவது மட்டுமின்றி மலாய்த் தீவுகள் முழுவதிலும் பயன்படுத்தப்படுகிறது. கிழக்கத்திய நாடுகளில் எவ்விடத்தும் ஒவ்வொருவருக்கும் விளங்கும் மொழியாக ஐரோப்பாவில் பிரஞ்சு, லத்தின் மொழி போலவும் அல்லது இத்தாலியில் லிங்குவா பிரான்கா மொழி போலவும் போன்றது ஆகும். அந்த மொழி பார்சியிலும் அதற்கப்பால் வரையிலும் விளங்கிக்கொள்ளப்படுவதோடு மட்டுமின்றி கிழக்கில் பிலிப்பைன்ஸ் தீவுகள் வரையிலும் காணப்படுகிறது. உனக்கு இந்த மொழி தெரியவில்லையெனில் கிழக்கில் நீ கல்வியறிவு அற்றவராகக் கருதப்படுவாய்” (மூலம்: Arkib Negara Malaysia). உலகின் மலாய்மொழி பேசும் பகுதிகள் இரண்டைக் குறிப்பிடுக. விரைந்து பதிலளி விரைந்து பதிலளி உலகின் மலாய்மொழி பேசும் பகுதிகளை அடையாளங்காண மாணவர்களுக்கு வழிகாட்டுதல். 6.3.2
Saiz sebenar 36 ஆசிரியர் குறிப்பு 6.3.2 K6.3.7 மலாய்மொழியின் வளர்ச்சி மிக விரிவானது. அந்நிய ஆதிக்கத்தின் வருகை மலாய்மொழியின் சொற்களஞ்சியத்தை வளப்படுத்தியது. மலாய்மொழி இன்று சமஸ்கிருதம், அரபு, போர்த்துகீஸ், டச்சு, ஆங்கிலம், சீனம், தமிழ் ஆகிய மொழிகளின் சொற்களஞ்சியங்களைக் கொண்டுள்ளது. உச்சரிப்பில் ஒற்றுமை பிறமொழி ஆதிக்கம் சமஸ்கிருதம் அரபு போர்த்துகீஸ் ஆங்கிலம் டச்சு சீனம் தமிழ் nagara sholat camisa hospital laatje cawan kappal rajha ustaz veradha clinic balkon laici ayyaa putra aqal janela doctor negara solat kemeja hospital laci cawan kapal raja ustaz beranda klinik balkoni laici ayah putera akal jendela doktor நவீன மலாய்மொழி மலாய்மொழி, மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்ததோடு உலகம் முழுதும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. தாய்மொழியைப் பயன்படுத்துவதை நிலைநாட்ட வேண்டியதன் அவசியம் என்ன? (மூலம்: Asmah Haji Omar, 2015. Ensiklopedia Bahasa Melayu. Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka) தாய்மொழியைப் பயன்படுத்துவதை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை மாணவர்கள் விவரிக்க வழிகாட்டுதல்.
Saiz sebenar 37 ஆசிரியர் குறிப்பு 6.3.3 மலாய்மொழி நாட்டை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கை ஆற்றுகிறது. மலாய்மொழி அதிகாரப்பூர்வ மொழி, ஒற்றுமை மொழி என்பதோடு மட்டும் அல்லாமல் கல்வி, நிர்வாகம், சட்டம், பொருளாதாரம், தொடர்பு, எழுத்துப் படிவ மொழி ஆகியவற்றிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இன்றுவரை மலாய்மொழி தொடர்புமொழி எனும் வகையில் கீழ்க்காணும் துறைகளில் பயன்படுத்தப்படுவது நாட்டின் பெருமைமிகு பாரம்பரியமாகத் திகழ்கின்றது. மலாய்மொழியின் பங்கு மலாய்மொழியின் பங்கை மாணவர்கள் விளங்கிக் கொள்ள வழிகாட்டுதல். (மூலம்: Asmah Haji Omar, 2015. Ensiklopedia Bahasa Melayu. Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka) மலாய்மொழியின் பங்கைப் பட்டியலிடுக. விரைந்து பதிலளி விரைந்து பதிலளி S பொருளாதார ம�ொழி தொடர்பு ம�ொழி எழுத்துப் படிவ ம�ொழி அதிகாரப்பூர்வ ம�ொழி கல்வி ம�ொழி நிர்வாக ம�ொழி சட்ட ம�ொழி மலாய்மொழியின் பங்கு ஒற்றுமை ம�ொழி
Saiz sebenar 38 அன்று மலாய்மொழி அறிவாற்றலை வழங்கும் கல்விம�ொழி ஆகும். உலாமாக்கள் அரண்மனையில் மலாய் அரசர்களுக்குச் சமயக் கல்வியை மலாய்மொழியிலேயே வழங்கினர். இன்று மலாய்மொழி தொடர்பு ம�ொழியாகக் கற்றல் கற்பித்தலில் அறிவையும் தகவல்களையும் வழங்கப் பள்ளிகளிலும் உயர்க்கல்விக் கூடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது. கல்வி மொழி அன்று மலாக்கா மலாய் மன்னராட்சிக் கால நிர்வாகத்தில் மலாய்மொழி பயன்படுத்தப்பட்டது. இன்று மலாய்மொழி அதிகாரப்பூர்வ மொழியாக அரசு அலுவல்களில் பயன்படுத்தப்படுகிறது. நிர்வாக மொழி அன்று மலாக்கா மலாய் மன்னராட்சிக் கால நிர்வாகத்திலும் ஆட்சி முறையிலும் முக்கிய வழிகாட்டியாக விளங்கிய மலாக்கா சட்ட மரபு பதிப்பில் மலாய்மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்று மலாய்மொழி நாட்டின் சட்ட அமைப்பு முறையில் முதன்மை மொழியாகத் திகழ்கிறது. சட்ட மொழி மலாய்மொழி அறிவு மொழி என்பதன் அவசியத்தைக் குறிப்பிடுக. நிர்வாகத் துறையில் மலாய்மொழியின் பங்கைப் பட்டியலிடுக. விரைந்து பதிலளி விரைந்து பதிலளி மலாய் ம�ொழியின் பங்கு அன்றும் இன்றும்
Saiz sebenar 39 ஆசிரியர் குறிப்பு 6.3.3 K6.3.6 அன்று மலாய்மொழி லிங்குவா பிரான்கா எனும் வகையில் மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் வாணிபப் பரிவர்த்தனையை எளிதாக்கியது. இன்று மலாய்மொழி நம் நாட்டின் வாணிபப் பரிவர்த்தனையில் முதன்மை மொழியாக அமைந்துள்ளது. பொருளாதார மொழி அன்று மலாய் அரசு, வெளி அரசுகளுடன் தொடர்பு கொள்ள மலாய்மொழியைப் பயன்படுத்தியது. கிளந்தான் சுல்தான், ரைட் வில்லியம் டப் அவர்களுக்கு எழுதிய கடிதம் ஓர் எடுத்துக்காட்டாகும். இன்று மலாய்மொழி மக்களின் வட்டாரத் தொடர்பு மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது. தொடர்பு மொழி அன்று அதிகமான உயரிய படைப்புகள் மலாய்மொழியில் எழுத்துப் படிவமாக்கப்பட்டுள்ளன. இன்று நாட்டின் படைப்பாளர்களின் படைப்புகளால் மலாய்மொழி எழுத்துப் படிவ மொழியாக உலக அளவில் அங்கீகரிக்கப்படுகிறது. எழுத்துப் படிவ மொழி அனைத்துலக நிலையில் மலாய்மொழி அன்றும் இன்றும் மலாய்மொழியின் பங்கை மாணவர்கள் விளங்கிக் கொள்ள வழிகாட்டுதல். (மூலம்: Asmah Haji Omar, 2015. Ensiklopedia Bahasa Melayu. Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka) பொருத்தமான சிந்தனை வரையைப் பயன்படுத்தி அன்றும் இன்றும் மலாய்மொழியின் பங்கை ஒப்பிட்டுக் காட்டுக. நநடவடிக்்கைகை
Saiz sebenar 40 6.3.3 K6.3.5 ஒற்றுமை மொழியாக மலாய்மொழியை மேம்படுத்தும் நிகழ்ச்சி் மலாய்மொழி நம் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆகும். தேசிய மொழிச் சட்டம் 1963/67இன் வழி இதன் நிலை உறுதிப்படுத்தப்படுகிறது. அதிகாரப்பூர்வ மொழி எனும் வகையில் அன்றாட அலுவலில் தொடர்பு மொழியாக இதன் முக்கியத்துவம் இருக்கின்றது. எனினும், பல இனத்தைச் சேர்ந்த மலேசியர்கள் வேறு மொழிகளையும் சுதந்திரமாகப் பயன்படுத்தலாம். மலாய்மொழி பல்வேறு இனத்தவர்களை ஒன்றுபடுத்தும் மொழியாகும். மலாய்மொழி மிக எளிதாக விளங்கிக் கொள்ளக் கூடியது மட்டுமல்லாமல் சமுதாயத்திற்குத் தகவல்களை வழங்குவதற்கான முதன்மை தொடர்பு மொழியாக விளங்குகின்றது. தேசிய மொழி வாரம், கவிதை ஒப்புவித்தல், கவிதைக்குக் கவிதை கூறுதல், பேச்சுப் போட்டி, மேடைப் பேச்சு போன்ற நடவடிக்கைகள் பல இன மாணவர்களிடையே ஒற்றுமையை விதைக்க உதவுகிறது. இந்நடவடிக்கைகள் மறைமுகமாக மொழியின் வாயிலாக இனத்தை ஒன்றுபடுத்துகிறது. அரசு அலுவலகங்களில் மலாய்மொழிப் பயன்பாடு அதிகாரப்பூர்வ மொழியாக மலாய்மொழி ஒற்றுமை மொழியாக மலாய்மொழி மலாய்மொழியின் பங்கு அன்றும் இன்றும் மிகவும் விரிவானது. இதன் பயன்பாடு காலமாறுதலுக்கு ஏற்ப அமைகிறது. மலாய்மொழி நாட்டின் பாரம்பரியமாகத் திகழ்வதால் அவசியம் மதிக்கப்பட வேண்டும். நம் நாட்டின் ஒற்றுமை மொழியாக விளங்கும் மலாய்மொழியின் முக்கியத்துவத்தைக் குழுவாரியாகப் பட்டியலிடுக. நநடவடிக்்கைகை
Saiz sebenar 41 மலாய்மொழியின் பாரம்பரிய வழித்தோன்றல் மலாய்மொழி பேசுவோர் வாழும் பகுதிகள் • மலேசியா • இந்தோனேசியா • தென் தாய்லாந்து • பிலிப்பைன்ஸ் • புருணை • சிங்கப்பூர் • கம்போடியா • வியட்நாம் (மெலாயு சம்பா) • தென் ஆப்பிரிக்கா • ஸ்ரீ லங்கா • கோகோஸ் தீவு • தைவான் • மடகாஸ்கார் • நியூசிலாந்து • ஈஸ்டர் தீவு • சவுதி அரேபியா • கிறிஸ்மஸ் தீவு • கிழக்கு ஆஸ்திரேலியா மலாய்மொழி நாட்டின் பாரம்பரியம் மீட்டுணர்வோம் மலாய்மொழியின் பங்கு அன்றும் இன்றும் ■ அதிகாரப்பூர்வ ம�ொழி ■ ஒற்றுமை ம�ொழி ■ கல்வி ம�ொழி ■ நிர்வாக ம�ொழி ■ சட்ட ம�ொழி ■ பொருளாதார ம�ொழி ■ தொடர்பு ம�ொழி ■ எழுத்துப் படிவ ம�ொழி இந்த அலகு, மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலந்தொட்டே மலாய் மொழி பாரம்பரிய வழித்தோன்றல், மலாய்மொழி பேசுவோர் வாழும் பகுதிகள் பற்றிய விளக்கத்தை வழங்கியது. அடுத்த அலகு சுதந்திரத்தை நோக்கிய போராட்டத்தைப் பற்றி விவாதிக்கும். பிலும்-ஆஸ்ட்ரிக் (Filum - Austrik) குடும்பம் - அஸ்ட்ரோனேசியா (Rumpun - Austronesia) மலாய்மொழி மலாய்மொழி பாரம்பரிய வழித்தோன்றலின் சுருக்கம் S பொருளாதார ம�ொழி தொடர்பு ம�ொழி எழுத்துப் படிவ ம�ொழி அதிகாரப்பூர்வ ம�ொழி கல்வி ம�ொழி நிர்வாக ம�ொழி சட்ட ம�ொழி மலாய்மொழியின் பங்கு ஒற்றுமை ம�ொழி
Saiz sebenar 42 Saiz sebenar பின்வரும் கூற்றுகளை நிறைவு செய்து கட்டங்களில் அதன் சரியான விடைக்கு வட்டமிடுக. சிந்தித்துப் பதிலளி மேலிருந்து கீழ் 1. நம் நாட்டில் மலாய்மொழி ______________யின் சின்னமாகத் திகழ்கிறது. 2. மலாய்மொழி_________ மொழியையும் தழுவி இருந்தது. 3. பல உயரிய படைப்புகள் மலாய்மொழியை _____________ மொழியாகப் பயன்படுத்தின. 4. மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தில் மலாக்கா சட்ட மரபில் மலாய்மொழி ______________யாகப் பயன்படுத்தப்பட்டது. இடமிருந்து வலம் 1. மலாய்மொழி _________ கிளையிலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. 2. மலாய்மொழி நாட்டின் ________ என்பதில் பெருமை கொள்ள வேண்டும். 3. மலாய்மொழி பேசப்படும் பகுதிகளில் __________________ ஒன்றாகும். 4. லிங்குவா பிரான்கா வெவ்வேறு மொழி பேசும் சமூகத்தினரிடையே __________________ மொழியாக இருந்தது. ச க ம் சி த் டி ச் ல து அ கி ந் ண ஏ சை லா ம் அ ச ஸ் ச ச கி எ ச ரி ம ச இ ச ச வ ச ச ச அ ஸ் ட் ர�ோ னே சி யா ச ச டி உ ச சா ழி ச ச ந் ச ஸ் ச அ ச க ச லா ச ச ச ச ன் கா கி ட ச கி த�ொ ட ர் பு ச டி ச அ ச ச ச று ட் டி ச் மு ச ம் ச ண ச ரி செ க் ச ஸ் கி ச ஏ டி ந் சு ச எ ஸ் ச ச லி ங் கு வா பி ர ன் கா ச ந் ச ச ர ழு ப ஒ ச ந் கி ச ண ச டி ச லி ச லி ல்் ச ச த் ஸ் ற் ச க ம் போ டி யா ச ச ட் கி து ந் ச ந் து கி று டி ச ப அ சு ச ஜ் ப் ச ச அ லி க் வ் ச ஸ் மை ச அ ண ச ச பா ர ம் ப ரி ய ம் ச லி கு ஸ் ச கி ச கி ந் ச ஹ் ச டி ண ச ந் ச அ ஆசிரியர் இப்பக்கத்தைப் படியெடுத்து வழங்கிடுக. குறிப்பு
Saiz sebenar 43 Saiz sebenar நாட்டை நேசிப்போம் மலாய்மொழியின் பூர்வீகத்தையும் பங்கையும் அறிவதன்வழி நாம் எப்போதும் முயற்சி செய்யவும் தயாராக இருக்கவும் சவால்களை எதிர்கொள்ளவும் துணிவைப் பெறவும் தூண்டுகோலாக அமையும். நாடு நாட்டின் பாரம்பரியம் எனும் வகையில் மலாய்மொழி ஒன்றுபட்ட வளர்ச்சிமிகு நாட்டை உருவாக்கும். சமுதாயம் அறிவுமிக்க சமுதாயம் மலாய் மொழியை ஒற்றுமை மொழியாக மாண்புறச் செய்யும். தனிநபர் மலாய்மொழியின் பாரம்பரிய வழித்தோன்றலை அறிவதன்வழி அன்றாட வாழ்வில் தன்னெறியை வளப்படுத்துவர். (மூலம்: Koleksi Dewan Bahasa dan Pustaka)