The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

Kami Export - D5 BT SEJ - SEJARAH SJKT (1)

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by PREMA A/P THURAISAMY @ DORAISAMY Moe, 2023-11-03 10:39:29

Kami Export - D5 BT SEJ - SEJARAH SJKT (1)

Kami Export - D5 BT SEJ - SEJARAH SJKT (1)

Saiz sebenar 44 4 நாட்டின் வரலாற்றை ஆழமாக அறிந்து கொள்ள காலனித்துவ வரலாற்றை அவசியம் கற்க வேண்டும். அந்நியத் தலையீடும் காலனித்துவமும் நம் நாட்டில் அதிகமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. இந்த அலகு, பாதுகாப்பளித்தல் (naungan), தலையீடு, காலனித்துவம் ஆகியவற்றின் பொருளை விவரிக்கின்றது. மேலும், அந்நிய சக்திகள், வருகையின் நோக்கம், தலையீட்டாலும் காலனித்துவத்தினாலும் ஏற்பட்ட விளைவுகள் ஆகியவற்றையும் விவாதிக்கின்றது. அலகு நாட்டின் இறையாண்மைக்குச் சவால் சாரம் குடியியல் நெறி பொறுப்புணர்வு தலைப்பு 7: நாட்டின் சுதந்திரப் ப�ோராட்டம்


Saiz sebenar 45 (மூலம்: Arkib Negara Malaysia dan Kompleks Sejarah Pasir Salak) A அடிப்படை வரலாற்றுச் சிந்தனைத் திறன் KPS 1. நம் நாட்டிற்கு வருகை தந்த அந்நிய சக்திகளின் வரலாற்றுக் காலநிரலை விளங்கிக் கொள்ளுதல். 2. நம் நாட்டிற்கு அந்நிய சக்திகளின் வருகைக்கான குறிப்பிடத்தக்கச் சான்றுகளை ஆராய்தல். 3. நம் நாட்டில் அந்நிய சக்திகளின் வருகையின் காரணங்களையும் விளைவுகளையும் காணல். நீங்கள் கற்கப் ப�ோவது என்ன? 1. பாதுகாப்பளித்தல், தலையீடு, காலனித்துவம் ஆகியவற்றின் பொருள். 2. நம் நாட்டில் தலையீடு செய்து காலனித்துவம் புரிந்த அந்நிய சக்திகள். 3. அந்நிய சக்திகள் நம் நாட்டிற்கு வருகை புரிந்ததற்கான காரணிகள். 4. அந்நிய சக்திகளின் தலையீடும் காலனித்துவமும் ஏற்படுத்திய நிர்வாகம், சமூகவியல், பொருளாதாரம் ஆகியவற்றின் விளைவுகள்.


Saiz sebenar 46 முன்பு ஒரு காலத்தில் நம் நாடு அந்நிய சக்திகளின் ஆதிக்கத்திலும் காலனித்துவத்திலும் இருந்துள்ளது. நம் நாட்டின் கேந்திரத்துவமிக்க நில அமைப்பும் இயற்கை வளமும் அந்நிய சக்திகளை ஈர்த்தன. அந்நிய சக்திகள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளப் பாதுகாப்பளித்தல், தலையீடு, காலனித்துவம் ஆகிய உத்திகளைப் பயன்படுத்தின. ✯ பாதுகாப்பளித்தல் என்பது அந்நிய சக்திகள் நாட்டிற்கோ நாட்டின் ஒரு பகுதிக்கோ அரண் அளிப்பதாகும். ✯ பாதுகாப்பு அளிக்கப்பட்ட நாடுகள் நட்புறவின் அடையாளமாகவும் பாதுகாப்பிற்கு உத்தரவாதமாகவும் கப்பம் செலுத்தின. ✯ 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம்வரை பெர்லிஸ், கெடா, கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்கள் சயாமின் பாதுகாப்பின்கீழ் இருந்தன. பாதுகாப்பளித்தல் எனது தாயகத்தில் அந்நிய சக்திகள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை சயாமின் பாதுகாப்பில் இருந்த மாநிலங்கள் யாவை? விரைந்து பதிலளி விரைந்து பதிலளி கப்பம்: சிற்றரசு, பேரரசின் அதிகாரத்தை ஏற்பதன் அடையாளமாக வழங்கப்படும் பணம், தங்கமலர், உடை. தங்கமலர்: தங்கத்தாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட பூச்செடி. ச�ொற்களஞ்சியம் தங்கமலர் உருப்போலி (Replika). (மூலம்: Muzium Kota Kayang, Perlis) தங்கமலர் மூன்றாண்டுக்கு ஒருமுறை கப்பமாகச் சயாம் ஆட்சியாளருக்கு அனுப்பப்பட்டது. உங்களுக்குத் தெரியுமா?


Saiz sebenar 47 ஆசிரியர் குறிப்பு அந்நிய சக்திகளின் தலையீட்டைத் தவிர்க்க மூன்று வழிமுறைகளைக் குறிப்பிடுக. ✯ தலையீடு என்பது அந்நிய சக்திகள், மாநிலங்களின் நிர்வாகத்தில் நேரிடையாகத் தலையிடுகின்றன என்பதாகும். ✯ உள்ளூர் ஆட்சியாளர் நிர்வாகத்தை வழிநடத்துவதற்கு உதவியாகப் பிரிட்டிஷ் ரெசிடண்ட் நியமிக்கப்பட்டார். ✯ 1874ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட பங்கோர் உடன்படிக்கையின்படி மலாயாவில் பிரிட்டிஷாரின் தலையீடு பேராக்கில் தொடங்கியது. தலையீடு ✯ அந்நிய சக்திகள் ஒரு நாட்டைக் கைப்பற்றித் தன் வசப்படுத்திக் கொள்வதே காலனித்துவம் ஆகும். ✯ அந்நிய சக்திகள் கைப்பற்றிய நாட்டைத் தன்வசப்படுத்தி அரசியல், பொருளாதாரம், சமூகவியல் ஆகிய நடவடிக்கைகளைத் தன்னலம் கருதிப் பாதுகாப்பின்கீழ் வைத்திருத்தல். ✯ முதல் காலனித்துவம் போர்த்துகீஸியர்கள் மலாக்காவிலும் ஜேம்ஸ் புரூக் சரவாக்கிலும் வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனம் (Syarikat Borneo Utara British) சபாவிலும் தொடங்கியது. காலனித்துவம் • பாதுகாப்பளித்தல், தலையீடு, காலனித்துவம் ஆகியவற்றின் பொருளை விளங்கிக் கொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல். • சிந்தனை மனவரைபடத்தை நிறைவு செய்ய வழிகாட்டுதல். நாட்டின் இறையாண்மை அந்நிய சக்திகளின் தலையீட்டாலும் காலனித்துவத்தாலும் நிலைகுலைந்தது. அந்நிய சக்திகள் தங்களின் தேவைக்காகப் பல மாற்றங்களைச் செய்தன. 1. பாதுகாப்பளித்தல், தலையீடு, காலனித்துவம் ஆகியவை தொடர்பான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மரவரைபடத்தை (peta pokok) நிறைவு செய்க. 2. மரவரைபடத்தை உனது குறிப்புப் புத்தகத்தில் வரைக. 21ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன் ம் நூற்றாண்டுக் கற்றல் திறன் சிந்தனை வரைபடம் 7.1.1


Saiz sebenar 48 ஆ பாமோசா கோட்டை (மூலம்: Koleksi peribadi Hasfalila binti Hassan) மலாய் சுல்தான்களுடன் பிரிட்டிஷ் அதிகாரி (மூலம்: Arkib Negara Malaysia) கோல கெடா கோட்டை (மூலம்: Koleksi peribadi Timothy Tye) சயாம் ❃ கெடா, பெர்லிஸ், கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களுக்குச் சயாம் பாதுகாப்பளித்தது. ❃ அம்மாநிலங்களை நிர்வகிப்பதில் சயாம் சிக்கலை எதிர்நோக்கியது. ❃ 1909ஆம் ஆண்டு பாங்கோக் உடன்படிக்கையின்வழி மேற்கண்ட அனைத்து மாநிலங்களும் பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்நிய சக்திகளின் தலையீடும் காலனித்துவமும் ப�ோர்த்துகீஸ் (1511) ❃ 1511ஆம் ஆண்டில் போர்த்துகீஸ் மலாக்காவைத் தாக்கிக் காலனித்துவம் செய்தது. ❃ மலாக்கா சுல்தான், மலாக்காவை மீண்டும் கைப்பற்ற முயன்று தோல்வி கண்டார். ❃ 1641ஆம் ஆண்டில் போர்த்துகீஸியர்கள் டச்சுக்காரர்களிடம் தோல்வியுற்றனர். டச்சு (1641) ❃ 1641ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் மலாக்காவில் போர்த்துகீஸியரைத் தாக்கினர். ❃ வெற்றி பெற்ற டச்சுக்காரர்கள் 1824ஆம் ஆண்டுவரை மலாக்காவை ஆண்டனர். ❃ 1824இல் ஆங்கில-டச்சு உடன்படிக்கையின்வழி டச்சுக்காரர்கள் மலாக்காவைப் பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தனர். ❃ 1786ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பினாங்கைத் தன் வசப்படுத்தியது. ❃ 1824ஆம் ஆண்டு ஆங்கில–டச்சு உடன்படிக்கையின்வழி மலாக்கா, பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கப்பட்டது. நம் நாடு மீண்டும் காலனித்துவ ஆட்சிக்குட்பட்டால் என்ன நிகழும்? எந்தச் சக்தி மலாக்காவில் போர்த்துகீஸியரைத் தோற்கடித்தது? விரைந்து பதிலளி விரைந்து பதிலளி ஸ்ெடட்டியூஸ் (stadthuys) கட்டடம் மலாக்கா (மூலம்: Koleksi Dewan Bahasa dan Pustaka) நம் நாட்டிற்கு அந்நிய சக்திகள் தலையீடு செய்வதற்கும் காலனித்துவ நோக்கத்திற்குமே வந்தனர். அந்த அந்நிய சக்திகள் சயாம், போர்த்துகீஸ், டச்சு, பிரிட்டிஷ், ஜப்பான், புரூக் குடும்பத்தினர், வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனம் ஆகியவை ஆகும். பிரிட்டிஷ் (1786, 1824, 1826, 1874) ❃ 1826ஆம் ஆண்டு பிரிட்டிஷ், பினாங்கு, சிங்கப்பூர், மலாக்கா ஆகியவற்றைக் கொண்டு தொடுவாய்க் குடியேற்ற மாநிலங்களை அமைத்தது. ❃ 1874ஆம் ஆண்டு பிரிட்டிஷ், பேராக்கில் தலையிட்டுத் தன் செல்வாக்கை மலாயாவில் இரண்டாம் உலகப் போர்வரை நிலைபெறச் செய்தது.


Saiz sebenar 49 ஆசிரியர் குறிப்பு 7.1.2 K7.1.5 இளம்வயதில் ஜேம்ஸ் புருக் (மூலம்: Jabatan Muzium Sarawak) SBUB இயக்குநர் வாரியம் (மூலம்: Arkib Negara Malaysia) 1955 மலாயா கூட்டரசின் அமைச்சரவை (மூலம்: Arkib Negara Malaysia) பிரிட்டிஷ் இராணுவம் 1942ஆம் ஆண்டில் ஜப்பான் இராணுவத்திடம் சரண் அடைந்தது. (மூலம்: Arkib Negara Malaysia) ஜேம்ஸ் புரூக்கும் புரூக் குடும்பத்தினரும் (1841) ❃ 1841ஆம் ஆண்டு ஜேம்ஸ் புரூக் சரவாக்கைத் தம் வசப்படுத்தினார். ❃ ஜேம்ஸ் புரூக் ‘வெள்ளை ராஜா’ என அழைக்கப்பட்டார். ❃ அவரின் மறைவிற்குப் பின்னர், சரவாக் தொடர்ந்து 1946 வரை புரூக் குடும்பத்தினரால் ஆளப்பட்டது. வட ப�ோர்னியோ பிரிட்டிஷ் நிறுவனம் (SBUB) (1881) ❃ தொடக்கத்தில் வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனம் சபாவில் உள்ள நிலத்தில் தொழில் புரிய உரிமை பெற்றது. ❃ பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அரசப் பிரகடனம் பெற்ற பின், 1881ஆம் ஆண்டில் வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனம் சபாவை ஆட்சி செய்தது. ❃ வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனக் காலனித்துவம் 1946ஆம் ஆண்டுவரை தொடர்ந்தது. ஜப்பான் (1942) ❃ 1942ஆம் ஆண்டில் ஜப்பான் ஒரு வல்லரசாக உருவாகி மலாயா, சரவாக், சபாவை வெற்றிகரமாகத் தன் வசப்படுத்தியது. ❃ 1945ஆம் ஆண்டில் ஜப்பான் பிரிட்டிஷாரிடம் சரணடைந்தது. பிரிட்டிஷ் (1945,1946) ❃ பிரிட்டிஷ் மீண்டும் மலாயாவை 1945ஆம் ஆண்டு முதல் 1957ஆம் ஆண்டுவரை காலனித்துவம் செய்தது. ❃ 1946ஆம் ஆண்டில் புரூக் குடும்பத்தினர் சரவாக்கையும் வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனம் சபாவையும் பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தனர். ❃ 1963ஆம் ஆண்டுவரை பிரிட்டிஷ் சரவாக்கையும் சபாவையும் தன் வசப்படுத்தியிருந்தது. அந்நிய சக்திகளின் வருகை நம் நாட்டின் இறையாண்மையைப் பாதித்தது. எனவே, குடிமக்களாகிய நாம் அமைதி தொடர்ந்து நிலைத்திருக்க நம் நாட்டைத் தற்காக்க வேண்டும். இரண்டாம் உலகப் போர் 1939ஆம் ஆண்டில் தொடங்கி 1945ஆம் ஆண்டில் முடிவு பெற்றது. உங்களுக்குத் தெரியுமா? அந்நிய சக்திகள் நம் நாட்டில் தலையிட்டு, காலனித்துவம் செய்ததை மாணவர்கள் விளங்கிக் கொள்ளத் துணைபுரிதல். சிந்தனை வரைவு 1. தன்னெறியின் முக்கியத்துவம் தொடர்பான தகவல்களைப் பல்வேறு மூலங்களின்வழி திரட்டுதல். 2. தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரைபடத்தைத் தயார் செய்தல். 3. வகுப்பில் படைத்தல். 21ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன் ம் நூற்றாண்டுக் கற்றல் திறன்


Saiz sebenar 50 நம் நாடு இயற்கை வளமும் இயற்கை மூலமும் கேந்திரத்துவமிக்க இடத்திலும் அமைந்துள்ளது. இதுவே, அந்நிய சக்திகள் தங்களின் சுயநலத்திற்காக நம் நாட்டைக் கைப்பற்றக் காரணமாக அமைந்தது. மேலும், சமயத்தைப் பரப்பவும் தொழிற்புரட்சியை மேம்படுத்தவும் நாட்டின் சிறப்பும் அந்நிய சக்திகள் நம் நாட்டின் மீது ஈர்ப்புக் கொள்ள வழிவகுத்தன. கவர்ந்திழுக்கும் வளமான பூமி அந்நிய சக்தி அந்நிய சக்திககளின் வரு ளின் வருகைக்கான கைக்கான ககாரணிககள் கேந்திரத்துவமிக்கப் பகுதி v கிழக்கு மேற்கு வாணிப வழியில் மலாக்கா அமைந்துள்ளது. v மலாக்கா முக்கியத் தங்குமிடத் துறைமுகமாக விளங்கியது. v போர்த்துகீஸியர்களும் டச்சுக்காரர்களும் மலாய்த்தீவுகளின் மசாலைப் பொருள்களின் வாணிபத்தைத் தம் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர மலாக்காவை வசமாக்கிக் கொள்ள ஆர்வம் கொண்டனர். 15ஆம் நூற்றாண்டில் மலாக்காவின் வாணிப வழி மலாக்கா இந்தியாவிலிருந்து சீனாவிலிருந்து ஜப்பானிலிருந்து தீவு மலாய்த் களிலிருந்து வ இயற்கை மூலமும் இயற்கை வளமும் v ஈயம், எஃகு, தங்கம் போன்றவை மலாயாவின் இயற்கை வளங்களாகும். v வெட்டுமரம், பிரம்பு, பறவைக் கூடு போன்றவை சபாவின் புகழ் பெற்ற இயற்கை மூலங்கள் ஆகும். v தங்கம், ஜவ்வரிசி, கற்பூரம் ஆகியவை சரவாக்கில் காணப்படுகின்றன. இயற்கை வளம்: பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் பொருள். இயற்கை மூலம்: பூமியின் மேற்பரப்பில் காணப்படும் தாவரங்களும் விலங்குகளும். தொழிற்புரட்சி: பெரிய அளவில் பொருள்களைத் தயாரித்தல். ச�ொற்களஞ்சியம் ஈயம் வெட்டு மரம் ஜவ்வரிசி தங்கம்


Saiz sebenar 51 ஆசிரியர் குறிப்பு 7.1.3 K7.1.6 (மூலம்: Peter Lafferty, 2002. Perintis Sains Pengangkutan. Kuala Lumpur: Dewan Bahasa dan Pustaka) 1521ஆம் ஆண்டு ப�ோர்த்துகீஸியர்களால் மலாக்காவில் கட்டப்பட்ட செண்ட்போ ல் தேவாலயம் (மூலம்: Koleksi peribadi Jayakumary a/p Marimuthu) (மூலம்: Koleksi Dewan Bahasa dan Pustaka) சமயத்தைப் பரப்புதல் v அந்நிய சக்திகள் கிறிஸ்துவ சமயத்தை மலாயா உட்பட பல இடங்களில் பரப்ப எண்ணினர். v போர்த்துகீஸிய அரசர் கிறிஸ்துவ சமயத்தைப் பரப்ப கடல் பயணங்களை ஊக்குவித்தார். தொழிற்புரட்சி v 18ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி ஐரோப்பாவில் விரிவடைந்தது. v இரும்பு, எஃகு தயாரிப்பு, வாகனத் தயாரிப்பு, உணவைக் கலனிடுதல் போன்ற தொழில்துறைகள் மும்முரமாக நடைபெற்றன. v அந்நிய சக்திகள் தங்களின் பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்குப் புதிய காலனித்துவ நாடுகள் தேவைப்பட்டன. ஐரோப்பிய தொழிற்புரட்சியின் விரிவாக்கம் புகழ் v அந்நிய சக்திகள் தமக்கும் நாட்டுக்கும் புகழைச் சேர்க்க விரும்பின. v பிரிட்டிஷ் மாபெரும் காலனித்துவச் சக்தியாகத் தோன்றியது. v பினாங்கிலும் சிங்கப்பூரிலும் பிரிட்டிஷாரின் வெற்றியைப் பார்த்த ஜேம்ஸ் புரூக் சரவாக்கைத் தம் வசப்படுத்தினார். போர்ட் மார்கரீத்தா, சரவாக் அந்நிய சக்திகளின் காலனித்துவம், நாட்டின் இறையாண்மையைக் தற்காக்க வேண்டியதன் அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது. அந்நிய சக்திகளின் தலையீடும் காலனித்துவமும் மீண்டும் நிகழாமல் இருக்க குடிமக்களாகிய நாம் நாட்டுப் பற்றை அவசியம் வளர்க்க வேண்டும். நாட்டின் இறையாண்மையைத் தற்காக்க நாட்டுப்பற்றின் அவசியத்தைக் குறிப்பிடுக. தொழிற்புரட்சி ஐரோப்பாவில் எப்போது விரிவடைந்தது? உடனே பதிலளி உடனே பதிலளி அந்நிய சக்திகள் நம் நாட்டிற்கு வந்ததற்கான காரணிகளை அறிய மாணவர்களுக்கு வழிகாட்டுதல். 1. அந்நிய சக்திகள் வருகையின் காரணிகளுக்கேற்ப ஐந்து குழுக்களை அமைத்தல். 2. ஒவ்வொரு குழுவினரும் தங்களுக்கு வழங்கப்பட்ட தலைப்பையொட்டிய கூடுதல் தகவல்களைத் திரட்டுதல். 3. தகவல்களைப் படைத்து, பிற குழுவினரின் கேள்விகளுக்குப் பதிலளித்தல். தங்கமீன் கலன் 21ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன் ம் நூற்றாண்டுக் கற்றல் திறன்


Saiz sebenar 52 ஆசிரியர் குறிப்பு 7.1.4 அந்நிய சக்திகளின் தலையீடும் காலனித்துவமும் மலாயா, சரவாக், வட போர்னியோ (சபா) மாநிலங்களில் நிர்வாக முறையில் அதிக மாற்றங்களை ஏற்படுத்தின. தலையீடு, காலனித்துவத்தின் விளைவுகளினால் ஏற்பட்ட நிர்வாக மாற்றங்களை மாணவர்கள் அறிய உதவுதல். காலனித்துவத்தினால் நிர்வாகத்திற்கு ஏற்பட்ட விளைவுகள் சரவாக் (1841) ✯ முடியாட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ✯ சரவாக் ஆட்சியாளர் வெள்ளை ராஜா என அழைக்கப்பட்டார். ✯ சரவாக்கின் நிர்வாகம் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுப் பிரிட்டிஷ் ரெசிடண்டால்(Residen) நிர்வகிக்கப்பட்டது. ஐக்கிய மலாய் மாநிலங்கள் (1896) ✯ பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பகாங் ஆகியன ஐக்கிய மலாய் மாநிலங்களாக ஒருங்கிணைக்கப்பட்டன. ✯ மாநில நிர்வாகத்தை நிர்வகிக்க பிரிட்டிஷ் ரெசிடண்ட் நியமிக்கப்பட்டார். ✯ பிரிட்டிஷ் ரெசிடண்டால் இஸ்லாமிய சமய விவகாரங்களிலும் மலாய்க்காரர்களின் சடங்கு சம்பிரதாயங்களிலும் தலையீடு செய்ய இயலாது. ஐக்கியப்படாத மலாய் மாநிலங்கள் (1909, 1914) ✯ கெடா, கிளந்தான், பெர்லிஸ், திரங்கானு ஆகியன ஐக்கியப்படாத மலாய் மாநிலங்கள் என அழைக்கப்பட்டன. ✯ 1914ஆம் ஆண்டில் ஜொகூர் ஐக்கியப் படாத மாநிலங்களில் சேர்க்கப்பட்டது. ✯ பிரிட்டிஷ் ஆலோசகர் மாநில நிர்வாகத்திற்கு உதவ நியமிக்கப்பட்டார். வடப�ோர்னியோ(சபா) (1881) ✯ லண்டனில் உள்ள வடபோர்னியோ பிரிட்டிஷ் நிறுவன இயக்குநர் வாரியம், சபா நிர்வாக விவகாரங்களுக்கான கட்டளைகளைப் பிறப்பித்தது. ✯ மாநில நிர்வாகத்திற்கு ஆளுநர் தலைமையேற்றார். தொடுவாய்க் குடியேற்ற மாநிலங்கள் (1826) ✯ பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர் ஆகியன தொடுவாய்க் குடியேற்ற மாநிலங்களாக இணைக்கப்பட்டன. ✯ இந்த மாநிலங்கள் காலனித்துவ மகுடமாக விளங்கின. ✯ தொடுவாய்க் குடியேற்ற மாநிலங்களை ஆளுநர் நிர்வாகம் செய்தார். • பிரிட்டிஷ் ரெசிடண்ட், பிரிட்டிஷ் ஆலோசகர் என்பவர் அரசர் அல்லது சுல்தானுக்கு ஆலோசனை வழங்குபவர். • காலனித்துவ நாடு மகுடம் என்பது பிரிட்டிஷ் அரசு நேரிடையாக ஆட்சி செய்யும் மாநிலங்கள் ஆகும். உங்களுக்குத் தெரியுமா? முடியாட்சி: அரசாட்சி முறை ச�ொற்களஞ்சியம் சரவாக்கின் அரசாட்சிமுறை என்ன? விரைந்து பதிலளி விரைந்து பதிலளி


Saiz sebenar 53 ஆசிரியர் குறிப்பு 7.1.4 பிரிட்டிஷார் இயற்கை மூலம், இயற்கை வளம் ஆகியவற்றிலிருந்து ஆதாயம் பெறவேண்டிப் பல்வேறு மாற்றங்களை அறிமுகம் செய்தனர். இந்த மாற்றங்கள் நாட்டின் சமூகவியலிலும் பொருளாதாரத்திலும் பல விளைவுகளை ஏற்படுத்தின. நாட்டின் பொருளாதாரத்தில் காலனித்துவத்தின் விளைவுகளை அறிந்திட மாணவர்களுக்கு உதவுதல். சபாவில் செயல்படுத்தப்பட்ட வாணிப விவசாயங்களைக் குறிப்பிடுக. காலனித்துவத்தினால் ஏற்பட்ட சமூகப் ப�ொருளாதார விளைவுகள் ககாலலனித்துவத்தி னித்துவத்தினனால் ஏற்பட ற்பட்ட பப�ொொருளாதார வி ருளாதார விளைளைவுககள் நிலக்கரி மிளகு மெர்கண்டல் வங்கி, ஈப்போ ரப்பர் நடவு சுரங்கத்தொழில் வளர்ச்சி சுரங்கத்தொழில் மிகத் தீவிரமாகச் செயல் படுத்தப்பட்டது. மலாயாவில் ஈயம், சரவாக்கில் தங்கம், சபாவில் நிலக்கரி ஆகியன ஆகும். வாணிப விவசாய வளர்ச்சி ஏற்றுமதி நோக்கத்திற்கான வாணிப விவசாயம். மலாயா – செம்பனை, கரும்பு, காப்பி. சரவாக் – மிளகு. சபா – புகையிலை. ரப்பப்பர் (நொய்வ நொய்வம்) நடடவு வளர்ச்சி வு வளர்ச்சி அதிக ரப்பர் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஐரோப்பிய நிறுவனமான கத்ரியும் (Guthrie) வடபோர்னியோ பிரிட்டிஷ் நிறுவனமும் ரப்பர் நடவில் ஈடுபட்டன. நவீனன வங்ங்கிப் பபரிவர்த்தன ர்த்தனை வங்கிப் பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டது. மெர்கண்டல் வங்கி 1859ஆம் ஆண்டிலும் (Mercantile bank), தி. சார்ட்டட் வங்கி (The Chartered Bank) 1888ஆம் ஆண்டிலும் தோற்றுவிக்கப்பட்டன. விரைந்து பதிலளி விரைந்து பதிலளி வாணிபம்: வியாபாரம் தொடர்பானவை ச�ொற்களஞ்சியம்


7.1.4 K7.1.7 Saiz sebenar 54 ஆசிரியர் குறிப்பு பல்லின சமுதாய உருவாக்கம் சீனா, இந்தியா நாடுகளின் தொழிலாளர்களின் வருகை பல்லின சமுதாயத்தை உருவாக்கியது. ககாலலனித்துவத்தின் சமூ னித்துவத்தின் சமூககவியல் வி வியல் விளைளைவுககள் சீன, இந்தியத் தொழிலாளர் (மூலம்: Arkib Negara Malaysia) புதிய நகர் மேம்பாடு புதிய நகரங்கள் நிர்வாக, வாணிப, துறைமுக மையங்களாகத் தோன்றின. எடுத்துக்காட்டாக, கோலாலம்பூர், ஈப்போ, தைப்பிங், சிரம்பான், சிபு, மிரி, ஜெசல்டன் (கோத்தா கினபாலு), சண்டகான், தாவாவ் ஆகும். கல்விமுறையில் வளர்ச்சி மலாய், ஆங்கிலம், சீனம், தமிழ் எனத் தாய்மொழிக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. பட்டணங்களிலும் நகரங்களிலும் ஆங்கிலப் பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டன. எதிர்கால ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்க கல்லூரி நிலையிலான கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. 1883ஆம் ஆண்டில் சென்ட் மேரி நகர தேசியப் பள்ளி நிறுவப்பட்டது. (சபாவில் முதல் ஆங்கிலப்பள்ளி) (மூலம்: SK St. Mary Bandar, Sabah) தைப்பிங் மருத்துவமனை, 1880ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது (நாட்டின் முதலாவது மருத்துவமனை) (மூலம்: Arkib Negara Malaysia) நலத்துறை சேவை வளர்ச்சி மருத்துவமனைகளும் மருந்தகங்களும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கத் திறக்கப்பட்டன. நாட்டின் சமூகவியலில் காலனித்துவத்தின் விளைவுகளை மாணவர்கள் விளங்கிக்கொள்ள உதவுதல். ப�ோக்குவரத்து, தொடர்புத் துறை வளர்ச்சி துறைமுகங்களுக்குப் பொருள்களை எளிதில் கொண்டுச் செல்ல இருப்புப் பாதைகளும் சாலைகளும் அமைக்கப்பட்டன. அஞ்சல், தொலைவரி, தொலைபேசி சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1886ஆம் ஆண்டில் கோலாலம்பூர் இரயில் நிலையம் (மூலம்: Arkib Negara Malaysia) நாட்டின் இறையாண்மையையும் சுபிட்சத்தையும் நிலைநிறுத்த வேண்டியதன் அவசியம் என்ன? மூலப்பொருள் வளத்தைச் சுய ஆதாயத்திற்குப் பயன்படுத்திய காலனித்துவாதிகளின் செயல், நாம் நம் நாட்டின் இறையாண்மையையும் சுபிட்சத்தையும் பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. மேலும், அனைத்து நிர்வாகம், சமூகவியல், பொருளாதார மாற்றங்களும் காலனித்துவவாதிகளின் நன்மைக்கு மட்டுமே என்பதை நாம் அறிய வேண்டும். மருந்தகம்: மருந்தைப் பெற்றுக் கொள்ளும் இடம் சுய ஆதாயம்: வாய்ப்புகளைச் சுய ஆதாயத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளல். தாய்மொழிக் கல்விமுறை: தாய்மொழியிலான பயிற்றுமொழி ச�ொற்களஞ்சியம் 1960ஆம் ஆண்டுகளில் சிபு (மூலம்: Sarawak Chinese Cultural Association, 2010. Sibu of Yesterday. Edisi Kedua: Sibu: Sarawak)


Saiz sebenar 55 மீட்டுணர்வோம் எனது தாயகத்தில் அந்நிய சக்திகள் அந்நிய சக்திகள் பாதுகாப்பளித்தல், தலையீடு, காலனித்துவம் ஆகிய அணுகுமுறைகளைப் பயன்படுத்தி நாட்டின் விவகாரங்களில் தலையிட்டன. அந்நிய சக்திகளின் தலையீடும் காலனித்துவமும் சயாம், போர்த்துகீஸ், டச்சு, பிரிட்டிஷ், ஜப்பான், புரூக் குடும்பத்தினர், வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனம் ஆகியன நம் நாட்டில் தலையிட்டுக் காலனித்துவம் செய்த அந்நிய சக்திகள் ஆகும். கவர்ந்திழுக்கும் வளமான பூமி கேந்திரத்துவமிக்க அமைவிடம், இயற்கை வளம், இயற்கை மூலம், சமய விரிவாக்கம், தொழிற்புரட்சி, நாட்டின் புகழ் ஆகியன நம் நாடு காலனித்துவம் செய்யப்பட்டதற்கான முக்கியக் காரணிகள் ஆகும். காலனித்துவமும் நிர்வாக விளைவுகளும் நிர்வாக விளைவுகள் - தொடுவாய்க் குடியேற்ற மாநிலங்கள் (1826) - சரவாக் (1841) - வட போர்னியோ (சபா) (1881) - ஐக்கிய மலாய் மாநிலங்கள் (1896) - ஐக்கியப்படாத மலாய் மாநிலங்கள் (1909, 1914) ப�ொருளாதார விளைவுகள் - ரப்பர் நடவு வளர்ச்சி - சுரங்கத் தொழில் வளர்ச்சி - வாணிப விவசாய வளர்ச்சி - நவீன வங்கிப் பரிவர்த்தனை சமூகவியல் விளைவுகள் - பல்லின சமுதாயம் உருவாக்கம் - புதிய நகர் மேம்பாடு - கல்விமுறையில் வளர்ச்சி - நலத்துறைச் சேவை வளர்ச்சி - போக்குவரத்து, தொடர்புத் துறை வளர்ச்சி இந்த அலகு, நம் நாட்டில் தலையீட்டையும் காலனித்துவத்தையும் விவரிக்கின்றது. அந்நிய சக்திகள் தொடர்பான புரிதல் அடுத்த அலகில் காலனித்துவவாதிகளை எதிர்த்துப் போராடிய உள்ளூர்த் தலைவர்களை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.


Saiz sebenar 56 1 ___________ மாநிலத்திற்கு அந்நிய சக்திகள் பாதுகாப்பு வழங்குகின்றன. 2 இரண்டாம் உலகப்போரில் ______________ வெற்றிகரமாக நம் நாட்டை ஆக்கிரமித்தது. 3 பினாங்கு, ____________, சிங்கப்பூர் ஆகியன 1826ஆம் ஆண்டில் தொடுவாய்க் குடியேற்ற மாநிலங்களாக இணைக்கப்பட்டன. 4 _______________ புரட்சி அந்நிய சக்திகள் நம் நாட்டில் தலையீடும் காலனித்துவம் புரியவும் காரணமாக அமைந்தது. 5 நாட்டின் வளத்தை மேம்படுத்த _______________விவசாயப் பயிரீட்டை அறிமுகப்படுத்தினர். 6 சீன, இந்தியத் தொழிலாளர்களின் வருகை _____________ சமுதாயத்தை உருவாக்கியது. 7 மருத்துவமனையும் _____________ நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கத் திறக்கப்பட்டன. 8 இயற்கை _____________ இயற்கை மூலமும் அந்நிய சக்திகள் நம் நாட்டிற்கு வருகை புரிந்ததற்கான காரணிகள் ஆகும். 9 ஜேம்ஸ் புருக் சரவாக்கைக் கைப்பற்றிய பிறகு _____________ என அழைக்கப்பட்டார். 10 இருப்புப் பாதைகளும் சாலைகளும் பொருள்களைத் _____________ கொண்டு செல்ல அமைக்கப்பட்டன. இப்பக்கத்தைப் படியெடுத்து வழங்கிடுக. வளமும் வாணிப பல்லின மலாக்கா தொழிற் மருந்தகமும் பாதுகாப்பளிக்கும் ஜப்பான் துறைமுகத்திற்குக் வெள்ளை ராஜா சிந்தித்துப் பதிலளி ஆசிரியர் குறிப்பு அ. காலி இடங்களைக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளைத் துணையாகக் கொண்டு நிறைவு செய்க.


Saiz sebenar 57 பிரிட்டிஷ் அரசாங்கம் ஜெசல்டனை வட போர்னியோவின் தலைநகராக உருவாக்கியது. 1968ஆம் ஆண்டில் கோத்தா கினபாலு எனப் பெயர் மாற்றம் கண்டது. (மூலம்: Arkib Negara Malaysia) (மூலம்: Tourism Malaysia) அன்றும் இன்றும் Saiz sebenar 57 காலனித்துவக் காலத்தை அறிந்து கொள்வதால் இன்றைய நம் நாட்டின் இறையாண்மையை விளங்கிக் கொள்ளவும் போற்றவும் உதவும். நாட்டை நேசிப்போம் தனிநபர் மாணவராகிய நாம் நாட்டை நேசிக்கும் உணர்வைப் பெற்றிருக்க வேண்டும். சமுதாயம் நாட்டை நேசிக்கும் உணர்வு நாட்டுப் பற்றுமிகு சமுதாயத்தை உருவாக்கும். நாடு தன்னெறியும் நாட்டுப்பற்றும் கொண்ட குடிமக்கள் நாட்டின் இறையாண்மையைத் தற்காக்கும் வலிமை பெற்றவர் ஆவர். 1910ஆம் ஆண்டில் ஜெசல்டன் நகரம் கோத்தா கினபாலு நகரம்


Saiz sebenar 58 5 Saiz sebenar 58 மலாக்கா நீரிணை அலகு தலைப்பு 7 : நாட்டின் சுதந்திரப் ப�ோராட்டம் ப�ோராட்ட எழுச்சியும் காலனித்துவ எதிர்ப்பும் ட�ோல் சைட் ஹஜி அப்துல் ரஹ்மான் லிம்போங் த�ோக் ஜங்கூட் டத்தோ மகாராஜா லேலா டத்தோ பஹாமான் யாம்துவான் அந்தா அந்நிய சக்திகளின் வருகை உள்ளூர் மக்களிடையே எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியது. காலனித்துவத்தை எதிர்த்த உள்ளூர்த் தலைவர்கள், எதிர்ப்பிற்கான காரணங்கள், அந்நிய சக்திகளின் தலையீடு, ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவை இந்த அலகில் விவாதிக்கப்படுகின்றன. சாரம் பெர்லிஸ் கெடா பினாங்கு பேராக் கிளந்தான் திரங்கானு பகாங் சிலாங்கூர் நெகிரி செம்பிலான் மலாக்கா ஜொகூர்


Saiz sebenar 59 Saiz sebenar 59 தென் சீனக் கடல் நீங்கள் கற்கப் ப�ோவது என்ன? 1. அந்நிய சக்திகளின் தலையீட்டையும் காலனித்துவத்தையும் எதிர்த்த உள்ளூர்த் தலைவர்கள். 2. உள்ளூர்த் தலைவர்கள் அந்நிய சக்திகளின் தலையீட்டையும் காலனித்துவத்தையும் எதிர்த்ததற்கான காரணங்கள். 3. அந்நிய சக்திகளின் தலையீட்டையும் காலனித்துவத்தையும் எதிர்த்த உள்ளூர்த் தலைவர்களின் போராட்டங்கள். ரெந்தாப் ஷரிப் மசாஹோர் மாட் சாலே அந்தானோம் A அடிப்படை வரலாற்றுச் சிந்தனைத் திறன் KPS 1. காலனித்துவத்தையும் அந்நிய சக்திகளின் தலையீட்டையும் எதிர்ப்பதில் ஈடுபட்ட உள்நாட்டுத் தலைவர்களின் குறிப்பிடத்தக்கச் சான்றுகளை ஆராய்தல். 2. காலனித்துவத்திற்கு உள்ளூர்த் தலைவர்களின் எதிர்ப்பையும் அந்நிய சக்திகளின் தலையீட்டிற்கான காரணங்களையும் ஆராய்தல். 3. உள்ளூர்த் தலைவர்களின் போராட்டங்களையும் காரணங்களையும் அதன் விளைவுகளையும் அறிதல். பொறுப்புணர்வு அன்புடைமை குடியியல் நெறி சபா சரவாக்


Saiz sebenar 60 Saiz sebenar நானிங் போர் கரைவரைபடம் டோல் சைட் (Dol Said) இவரின் இயற்பெயர் அப்துல் சைட் பின் ஓமார். இவர் பெங்குலு நானிங் ஸ்ரீ மேரா ராஜா டோல் சைட் என்றும் அழைக்கப்பட்டார். 1773ஆம் ஆண்டில் பிறந்த இவர் செமெலிங்காங் இனக் குழுமத்தைச் சேர்ந்தவர். உள்ளூர் வீரர்களான டோல் சைட், ரெந்தாப், ஷரிப் மசாஹ�ோர், டத்தோ மகாராஜா லேலா, யாம்துவான் அந்தா, டத்தோ பஹாமான், மாட் சாலே, அந்தானோம், தோக் ஜங்கூட், ஹஜி அப்துல் ரஹ்மான் லிம்போங் ஆகியோர் அந்நிய நாட்டவர்களின் தலையீட்டையும் காலனித்துவத்தையும் எதிர்த்துப் போராடினர். இந்த வீரர்கள் தங்களுடைய நிலையையும் நிர்வாகத்தையும் அந்நிய சக்திகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள முயன்றனர். அவர்களின் வட்டாரம் சார்ந்த போராட்ட உணர்வும் வீரமும் உள்ளூர் ஆட்சியர், மக்கள் ஆகியோரின் ஆதரவைப் பெற்றுத் தந்தன. உள்ளூர் வீரர்கள் ◆ நானிங் மலாக்காவின் எல்லைப் பகுதி. ◆ பிரிட்டிஷ் நானிங் தன் காலனித்துவத்திற்கு உட்பட்டது என்று உரிமை கோரியதால் டோல் சைட் எதிர்ப்புத் தெரிவித்தார். ◆ டோல் சைட் ஆண்டு வருமானத்தில் பத்தில் ஒரு பகுதியை வரியாகப் பிரிட்டிஷாரிடம் செலுத்த மறுத்தார். ◆ டோல் சைட் நானிங்கின் இறையாண்மையைக் காக்கப் போராடினார். எதிர்ப்பிற்கான காரணம் ப�ோராட்டங்கள் ◆ 1831ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் நானிங்கை எதிர்த்துத் தோ ற்றது. உலு மூவார், சுங்கை ஊஜோங், ஸ்ரீ மெனாந்தி, ரெம்பாவ் ஆகிய பகுதிகளிலிருந்து இராணுவ உதவி பெற்றதால் டோல் சைட் வென்றார். ◆ 1832ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் மீண்டும் நானிங்கை எதிர்த்துத் தாக்கி டோல் சைட்டை வீழ்த்தியது. டோல் சைட்டுடன் இருந்தவர்கள் பிரிட்டிஷாருக்கு உதவியதால் அவர் வீழ்ந்தார். ◆ இறுதியாக, டோல் சைட் சரணடைந்தார். அவருக்கு ஓய்வு ஊதியம், நிலம் வழங்கப்பட்டு மலாக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பிரிட்டிஷார் எவ்வாறு டோல் சைட்டை வென்றனர்? விரைந்து பதிலளி விரைந்து பதிலளி நெகிரி செம்பிலான் ஜொகூர் அலோர் காஜா தாபோ குறியீடு: நானிங் ப�ோராட்டப் பகுதி மலாக்கா நீரிணை


Saiz sebenar 61 Saiz sebenar ரெந்தாப் (Rentap) எதிர்ப்பிற்கான காரணம் இவரின் இயற்பெயர் லிபாவ் அனாக் நிங்கன். இவர் சரவாக் நஙா ஸ்கராங்கில் இபான் மக்களின் தலைவர் ஆவார். ◆ ஜேம்ஸ் புரூக் நஙா ஸ்கராங்கில் இபான் மக்களின் வசிப்பிடத்தை அழித்தார். ◆ ஜேம்ஸ் புரூக் இபான் மக்களைக் கடற்கொள்ளையர்கள் எனக் கருதினார். ப�ோராட்டங்கள் ◆ 1853ஆம் ஆண்டு, ரெந்தாப் நஙா ஸ்கராங்கில் ஜேம்ஸ் புரூக்கின் தற்காப்பு அரணைத் தகர்த்தா ர். ◆ ஜேம்ஸ் புரூக் பலி தீர்க்க ரெந்தாப் பகுதியில் உள்ள 20 நீண்ட வீடுகளை எரித்தார். ◆ 1854ஆம் ஆண்டு, ஜேம்ஸ் புரூக் சுங்கை லாங்கில் ரெந்தாப்பை எதிர்த்தார். ரெந்தாப் பின்வாங்கி காட்டுக்குள் சென்று புக்கிட் சடோக்கில் (Bukit Sadok) தற்காப்பு அரண் ஒன்றை எழுப்பினார். ◆ 1861ஆம் ஆண்டு ஜேம்ஸ் புரூக் ரெந்தாப் அரணைத் தாக்கினார். ◆ ரெந்தாப் உலு எந்தாபாய்க்குப் பின் வாங்கினார். ரெந்தாப் தற்காப்பு அரண் ‘பெலியான்’ எனும் மரக்கட்டையால் அமைக்கப்பட்டது. உங்களுக்குத் தெரியுமா? ஆசிரியர் குறிப்பு ரெந்தாப் அரணைக் காட்டும் கரைவரைபடம் டோல் சைட், ரெந்தா ப் ஆகியோரின் போ ராட்டங்களையும் காரணங்களையும் மாணவர்கள் விளங்கிக் கொள்ள வழிகாட்டுதல். நஙா: இபான் மொழியில் ஆறு என்று பொருள். பெலியான்: உறுதியான மரக்கட்டை வகை. ச�ொற்களஞ்சியம் புக்கிட் சாட�ோக்கில் ரெந்தாப் அரண் புக்கிட் சாட�ோக் சிமங்காங் லிங்கா நஙா ஸ்கராங் அரண் சரிபாஸ் ஆறு குறியீடு: ஜேம்ஸ் புரூக் அரண் ரெந்தாப் அரண் 7.2.1 7.2.2 7.2.3


Saiz sebenar 62 ஷரிப் மசாஹ�ோர் (Sharif Masahor) இவரின் பெயர் ஷரிப் மசாஹ�ோர் பின் முகமட் அல் சாஹாப். இவர் இகான் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் சரவாக் சுங்கை ரெஜாங், சரிக்கேயின் ஆட்சியர் ஆவார். ◆ சரிக்கேய் பகுதியை ஆக்கிரமித்ததால் ஷரிப் மசாஹ�ோர் ஜேம்ஸ் புரூக்கை எதிர்த்தார். ◆ நிர்வாக அதிகாரங்களை ஜேம்ஸ் புரூக் அபகரித்துக் கொண்டதால் ஷரிப் மசாஹ�ோர் சரிக்கேயில் தனது ஆட்சியர் பதவியையும் அதிகாரத்தையும் இழந்தார். ◆ 1859ஆம் ஆண்டு ஷரிப் மசாஹ�ோர், டத்து பத்திங்கி அப்துல் காப்பூருடனும் தெமெ ங்கோங் ஹசிமுடனும் இணைந்து கூச்சிங்கில் உள்ள ஜேம்ஸ் புரூக்கின் குடும்பத்தை வெளியேற்ற முயன்றார். ◆ கனோவிட்டில் உள்ள சுங்கை ரெஜாங் அருகில் புரூக் அரணை ஷரிப் மசாஹ�ோர் தாக்கினார். ◆ எனினும், ஜேம்ஸ் புரூக் குடும்பத்தினர் இத்தாக்குதலை முறியடித்தனர். ◆ ஷரிப் மசாஹ�ோர் நாடு கடத்தப்பட்டார். டத்து பத்திங்கி அப்துல் காப்பூர் டச்சுக்காரர்களால் பிடிபட்டு பெதாவியில் (Betawi) சிறை வைக்கப்பட்டார். எதிர்ப்பிற்கான காரணம் ப�ோராட்டங்கள் குறியீடு: ஷரிப் மசாஹோர், டத்து பத்திங்கி அப்துல் காப்பூரின் போராட்டப் பகுதி தென் சீனக் கடல் ஈகான் கூச்சிங் சரிக்கேய் சிபு கனோவிட் காபிட் ச ரவாக் ச ப ா ரெஜாங் நதி ஷரிப் மசாஹ�ோரின் போராட்டப் பகுதியைக் காட்டும் கரைவரைபடம் ஷரிப் மசாஹ�ோர் போராட்டப் பகுதியின் பெயர் என்ன? விரைந்து பதிலளி விரைந்து பதிலளி


Saiz sebenar 63 ஆசிரியர் குறிப்பு டத்தோ மகாராஜா லேலா, ஷரிப் மசாஹ�ோர் ஆகியோரின் போராட்டங்களையும் காரணங்களையும் அறிய மாணவர்களுக்கு வழிகாட்டுதல். டத்தோ மகாராஜா லேலா (Dato' Maharaja Lela) Saiz sebenar 63 7.2.1, 7.2.2 7.2.3 K7.2.4 குறியீடு: டத்தோ மகாராஜா லேலாவின் போராட்டப் பகுதி பேராக் சிலாங்கூர் பாசீர் சாலாக் பகாங் வ பேராக் நதி பேராக்கில் டத்தோ மகாராஜா லேலாவின் போராட்டப் பகுதியைக் காட்டும் கரைவரைபடம் இவரின் பெயர் டத்தோ மகாராஜா லேலா பண்டாக் லாம். டத்தோ மகாராஜா லேலா பாசீர் சாலாக் பகுதியை நிர்வாகம் செய்த பேராக்கின் எண்மர் பெருந்தலைவர்களில் (Orang Besar Berlapan) ஒருவர். ◆ பிரிட்டிஷ் ரெசிடண்ட் J.W.W. பெர்ச் மாநில நிர்வாகத்திலும் மலாய்க்காரர்களின் மரபுவழக்குகளிலும் தலையீடு செய்தார். ◆ பிரிட்டிஷ் ரெசிடண்ட் மாநில சுல்தான் அதிகாரத்தை எடுத்துக் கொண்டார். ◆ பிரிட்டிஷார் புதிய வரிகளை அறிமுகப்படுத்தி மக்களைச் சிரமப்படுத்தினர். ◆ பிரிட்டிஷ் ரெசிடண்ட் கர்வமும் ஆணவமும் கொண்டிருந்தார். ◆ பிப்ரவரி 1875ஆம் ஆண்டு சுல்தான் அப்துல்லா, டத்தோ மகாராஜா லேலா, பேராக் மலாய் ஆட்சியர்கள் ஆகியோர் பிரிட்டிஷ் ஆதிக்கத் தை எதிர்த்த னர். ◆ செப்டம்பர் 1875ஆம் ஆண்டு டத்தோ மகாராஜா லேலா பிரிட்டிஷ் ஆலோசகரான J.W.W. பெர்ச்சைக் கொல்லப் பொறுப்பேற்றுக் கொண்டார். ◆ நவம்பர் 1875ஆம் ஆண்டு பாசீர் சாலாக் சுங்கை பேராக்கில் டத்தோ மகாராஜா லேலா ஆணையின்கீழ் செபுத்தும் (Seputum) என்பவர் J.W.W. பெர்ச்சைக் கொன்றார். ◆ 1877ஆம் ஆண்டு டத்தோ மகாராஜா லேலாவும் செபுத்துவும் கைது செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டனர். எதிர்ப்பிற்கான காரணம் ப�ோராட்டங்கள் பாசீர் சாலாக், சுங்கை பேராக்கில் J.W.W. பெர்ச் கொலைச் சம்பவ உருப்போலி காட்சி. (மூலம்: Kompleks sejarah Pasir Salak) டத்தோ மகாராஜா லேலாவின் போராட்டத்திலிருந்து என்ன கற்றுக் கொண்டாய்? அக்காலத்தில் போராடிய உள்ளூர் வீரர்களின் உடையை மறுசுழற்சிப் பொருள்களைக் கொண்டு குழுவாரியாக உருவாக்குதல். நநடவடிக்்கைகை J.W.W. பெர்ச்சின் முழுப்பெயர் ஜேம்ஸ் வீல்லர் வூட்போர்ட் பெர்ச் என்பதாகும். உங்களுக்குத் தெரியுமா?


Saiz sebenar 64 ஆசிரியர் குறிப்பு யாம்துவான் அந்தா (Yamtuan Antah) Saiz sebenar 64 யாம்துவான் அந்தாவின் இயற்பெயர் துங்கு அந்தா ராஜா ராடின். இவர் நெகிரி செம்பிலான் யாம்துவான் பெசார் அவர்களின் புதல்வர் ஆவார். ◆ சுங்கை ஊஜோங் நிர்வாகத்தில் தலை யிட்டதால் யாம்துவான் அந்தா பிரிட்டிஷாரை எதிர்த்தார். ◆ தெராச்சியைத் தனது பகுதியாக உரிமைக்கோரிய டத்தோ கிளானாவைப் பிரிட்டிஷார் ஆதரித்தனர். ◆ பிரிட்டிஷார் டத்தோ கிளானாவை ஆதரித்ததை யாம்துவான் அந்தா ஏற்றுக் கொள்ளவில்லை. ◆ பிரிட்டிஷார் மற்ற பகுதிகள் மீதும் தம் அதிகாரத்தைப் செலுத்துவர் என யாம்துவான் அந்தா அச்சம் கொண்டார். ◆ 1875ஆம் ஆண்டு பாரோயில் (Paroi) மோத ல் நடந்த து. ◆ யாம்துவான் அந்தா பாரோயைக் கைப்பற்றினார். எனினும், பிரிட்டிஷார் மீண்டும் தாக்கி இறுதியாக யாம்துவான் அந்தாவின் படையைத் தோற்கடித்தனர். ◆ இம்மோதலை ஒரு முடிவுக்குக் கொண்டு வர, 1876ஆம் ஆண்டு யாம்துவான் அந்தா பிரிட்டிஷாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ◆ இந்தப் பேச்சுவார்த்தையின் பயனாக, யாம்துவான் அந்தா, ஸ்ரீ மெனாந்தியின் யாம்துவான் பெசாராக அங்கீகரிக்கப்பட்டார். எதிர்ப்பிற்கான காரணம் ப�ோராட்டங்கள் 1. மேற்கண்ட போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கதை வசனத்தைக் குழுவாரியாக இயற்றுக. 2. நடித்துக் காட்டுக. • யாம்துவான் அந்தாவின் போராட்ட நடவடிக்கைகளை நடிக்க மாணவர்களுக்கு வழிகாட்டுதல். • நடவடிக்கையின்போது மாணவர்களின் பாதுகாப்பைக் கண்காணித்தல். நாடகம் ஸ்ரீ மெனாந்தி என்பது நெகிரி செம்பிலான் யாங் டி பெர்துவான் பெசாரின் அதிகாரப்பூர்வ இருப்பிடம். உங்களுக்குத் தெரியுமா? குறியீடு:  மெனாந்தி கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் சிலாங்கூர் ஜெலெபு உலு மூவார் தெராச்சி அம்பாஙான் ராசா கெபாயாங் தெராச்சி ஆறு மூவார் ஆறு சுங்காய் உஜோங்  மெனாந்தி ஜொஹோல் ரெம்பாவ் பெர்மாத்தாங் பாசீர் லுக்கூட் மலாக்கா  மெனாந்தி கட்டுப்பாட்டில் இருந்த பகுதியைக் காட்டும் கரைவரைபடம் 21ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன் ம் நூற்றாண்டுக் கற்றல் திறன்


Saiz sebenar 65 ஆசிரியர் குறிப்பு டத்தோ பஹாமான் (Dato' Bahaman) டத்தோ பஹாமான் ஏன் லுபோக் தெருவாவைத் தற்காக்க முயன்றார்? Saiz sebenar 65 7.2.1, 7.2.2 7.2.3 K7.2.6 டத்தோ பஹாமானின் இயற்பெயர் அப்துல் ரஹ்மான் பின் இமாம் நோ. இவரை டத்தோ பஹாமான் ஓராங் காயா செமாந்தன் என்றும் அழைப்பர். ◆ டத்தோ பஹாமான் வரி வசூலிக்கும் உரிமையை யும் ஆட்சியர் பட்டத்தையும் இழந்தார். ◆ டத்தோ பஹாமான் தன் செல்வாக்கு மிகுந்த பகுதியான லுபோக் தெருவா காவல் நிலைய நிர்மாணிப்பை எதிர்த்துப் போராடினார். ◆ 1891ஆம் ஆண்டில் டத்தோ பஹாமான் பிரிட்டிஷார் மீதான தாக்குதலுக்குத் தலைமையேற்று லுபோக் தெருவாவை மீண்டும் கைப்பற்றினார். ◆ 1892 ஆம் ஆண்டில் டத்தோ பஹாமான் செமந்தானில் பிரிட்டிஷ் தாக்குதலை முறியடித்தார். ◆ 1894ஆம் ஆண்டில் டத்தோ பஹாமான் கோல தெம்பிலிங்கையும் ஜெராம் அம்பாயையும் கைப்பற்றினார். ◆ 1895ஆம் ஆண்டில் பிரிட்டிஷார் ஜெராம் அம்பாயை மீண்டும் கைப்பற்றியபோது டத்தோ பஹாமான் கிளந்தானுக்குப் பின்வாங்கினார். எதிர்ப்பிற்கான காரணம் ப�ோராட்டங்கள் டத்தோ பஹாமான், யாம்துவான் அந்தா ஆகியோரின் போராட்டங்களையும் காரணங்களையும் மாணவர்கள் விளங்கிக் கொள்ள வழிகாட்டுதல். பகாங்கில் டத்தோ பஹாமான் போராடிய பகுதிகளின் கரைவரைபடம் Peta 2g. Peta Negeri Pahang Abad Ke-19: Kawasan Penentangan குறியீடு: போராட்டம் நடந்த பகுதிகள் கிளந்தான் திரெங்கானு பேராக் சிலாங்கூர் பகாங் ஜெராம் அம்பாய் ஜெராந்தூட் தெமெர்லோ லுபோக் தெருவா வ தென் சீனக் கடல் தெம்பெலிங் ஆறு செமந்தான் ஆறு கரைவரைபடத்தை அச்சிட்டு, டத்தோ பஹாமானின் போராட்டப் பகுதிகளைக் கருமையாக்கவும். நநடவடிக்்கைகை பகாங் ஆறு


Saiz sebenar 66 மாட் சாலே (Mat Salleh) ◆ சண்டகான், மெங்காத்தா ல், இனனாம், புலாவ் காயா ஆகிய இடங்களின் ஆட்சியாளராக மாட் சாலேவை வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனம் அங்கீகரிக்காதத ால், மாட் சாலே அவர்களை எதிர்த்தா ர். ◆ வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனம் வரிவிதிப்பிற்கான உரிமையை எடுத்துக் கொண்டு மக்களுக்குச் சுமையைத் தரும் புதிய விதிகளை விதித்தனர். ◆ 1897ஆம் ஆண்டில் மாட் சாலேவும் அவரது சகாக்களும் புலாவ் காயாவில் இருக்கும் வட போ ர்னியோ பிரிட்டிஷ் நிறுவனத்தின் அரணைத் தாக்கினர். ◆ வட போ ர்னியோ பிரிட்டிஷ் நிறுவனத்தால் மாட் சாலேவின் தற்காப்பு அரண் ரானாவில் அழிக்கப்பட்டதால், மாட் சாலே தம்புனானில் ஒரு வலுவான தற்காப்பு அரணை நிர்மானித்தார். ◆ 1900ஆம் ஆண்டில் வட போ ர்னியோ பிரிட்டிஷ் நிறுவனம் நடத்திய பெரிய தாக்குதலினால் மாட்சாலே பலியானார். ◆ தம்புனானில் உள்ள கபாயான் லாமா கிராமத்தில் மையம் கொ ண்டிருந்த மாட் சத்தோர், மாட் சாலேவின் போராட்டத்தைத் தொடர்ந்தா ர். எதிர்ப்பிற்கான காரணம் ப�ோராட்டங்கள் மாட் சாலேயின் இயற்பெயர் பெயர் டத்து படுகா முகமாட் சாலே பின் டத்து பாலு. இவரை மாட் சாலே என்றும் அழைப்பர். இவர் இனனாம் (Inanam), சபாவில் பிறந்தார். இவர் பஜாவ், சுலுக் இனத்தைச் சார்ந்தவர். டத்து படுக்கா மாட் சாலேயின் நினைவகம், தம்புனான் (மூலம்: Koleksi peribadi Sinawat Antakah) அக்காலத்து வீரர்களின் போராட்டங்களைப் போற்ற வேண்டியதன் அவசியம் என்ன? குறியீடு: காயா தீவு இனனாம் கோத்தா கினபாலு தாவாவ் லாஹாட் டத்து சண்டகான் தெருசான் புருணை டாருல்சலாம் சபா சரவாக் தென் சீனக் கடல் மாட் சாலேயின் போராட்டப் பகுதி சபாவில் மாட் சாலே போராடிய பகுதிகளைக் காட்டும் கரைவரைபடம் ரானாவ் தம்புனான் 7.2.1, 7.2.2 7.2.3 K7.2.5


Saiz sebenar 67 அந்தானோம் (Antenom) மாட் சாலே, அந்தானோம் ஆகியோரின் போராட்டங்களையும் காரணங்களையும் அறிந்து கொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல். (மூலம்: Dayu Sansalu, 2017. Antenom Pahlawan Terbilang Bangsa Murut. Kota Kinabalu: Pusaka Sabah) அந்தானோமின் இயற்பெயர் ஒந்தொரோஸ் பின் புயுசான். இவர் 1873ஆம் ஆண்டில் சிலார் பினிகிட் சலங்கிட், உலு சுங்கை தாஹ�ோல், பென்சியாங்கன் சபாவில் பிறந்தார். ◆ வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனம் முரூட் குடிகளைக் கட்டாயத் தொழிலாளர்களாகச் சாலைகள் அமைக்கப் பயன்படுத்தியது. ◆ வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனம் முன்னோர்களின் ஆவிகளுக்கு இடையூறு விளைவிப்பதாகக் கருதப்படும் காட்டுப்பகுதிகளை ஆக்கிரமிப்பதன் மூலம் மக்களின் பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் புறக்கணித்தது. ◆ புதிய வரியின் அறிமுகம் மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தியது. ◆ வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனம் குடிமக்களை விவசாயம் செய்ய அனுமதிக்கவில்லை. எதிர்ப்பிற்கான காரணம் ப�ோராட்டங்கள் சபாவில் அந்தானோம் எதிர்ப்பிற்கான இரண்டு காரணங்களைக் கூறுக. விரைந்து பதிலளி விரைந்து பதிலளி ஆசிரியர் குறிப்பு ◆ வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனத்தை எதிர்க்க முரூட் வீரர்களின் தலை வராக அந்தானோ ம் திகழ்ந்தார். மேலும், இவர் பினிட், சங்கிட், உலு சுங்கை தாஹ�ோல், பென்சியாங்கன் எனும் இடத்தில் அரண் அமைத்தார். ◆ 1915ஆம் ஆண்டில் அந்தானோம் ஈட்டி, வாள், நீள் ஊதுகுழல் (sumpit) ஆகியவற்றைப் பயன்படுத்தி வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனத்தின் மீது திடீர்த் தாக்குதல் நடத்தினார். மேலும், சுங்கை செலாங்கிட்டில் தற்காப்பு அரணை அமைத்தார். ◆ இறுதியில் தன் குடும்பம், சகாக்கள், மூரூட் இனத்தைக் காக்க அந்தானோம் வட போர்னியோ பிரிட்டிஷாரிடம் சரணடைந்தார்.


Saiz sebenar 68 தோக் ஜங்குட் (Tok Janggut) தோக் ஜங்குட்டின் இயற்பெயர் ஹஜி மாட் ஹாசான் பின் முனாஸ். இவர் 1853ஆம் ஆண்டு கம்போங் ஜெராம், பாசீர் பூத்தே, கிளந்தானில் பிறந்தார். ◆ 1915ஆம் ஆண்டில் தோ க் ஜங்கூட் பாசீர் பூத்தேவை த் தாக்கி அதனைக் கைப்பற்றினார். ◆ கம்போங் டாலாம் பூத்தேயில் முகாமிட்டிருந்த தோக் ஜங்கூட் மீது பிரிட்டிஷார் எதிர்த்தாக்குதல் நடத்தினர். ◆ அம்மோதலில் தோக் ஜங்கூட் பலியானார். ◆ பிரிட்டிஷ் அறிமுகப்படுத்திய 'பிரிட்டிஷ் ஆலோசகர் முறைமை க்கு' தோ க் ஜங்கூட் உடன்படவில்லை. ◆ சுமையாக அமைந்த வரிவசூலிப்பு முறையையும் புதிய நில விதிமுறையையும் ஏற்றுக் கொள்ள உள்நாட்டு மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். ◆ பிரிட்டிஷாரின் புதிய விதிமுறைகள் உள்ளூர் மக்களுக்குச் சிரமங்களை ஏற்படுத்தின. எதிர்ப்பிற்கான காரணம் ப�ோராட்டங்கள் பிரிட்டிஷ் ஆலோசனை முறைமை என்பது குறிப்பிட்ட மாநிலத்தில் ஓர் ஆலோசகரை நியமிக்கும் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் முறையாகும். இஸ்லாமிய சமயம், மலாய் மரபுவழக்குகள் தவிர இதர விவகாரங்களில் சுல்தானுக்கு ஆலோசனை கூறுவது பிரிட்டிஷ் ஆலோசகரின் பொறுப்பாகும். உங்களுக்குத் தெரியுமா? கிளந்தானில் தோக் ஜங்கூட் போராட்டப் பகுதிகளின் கரைவரைபடம் 1. மேற்கண்ட பகுதியை மாணவர்கள் வாசித்த பின்னர், மேற்கொள்ளும் தொடர்நடவடிக்கை. 2. ஒரு மாணவனைத் தேர்வு செய்து தயார் செய்துள்ள நாற்காலியில் தோக் ஜங்கூட்டாக அமர வைத்தல். 3. ‘தோக் ஜங்கூட்’ மாணவர்கள் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். வெப்ப நாற்காலி 21ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன் ம் நூற்றாண்டுக் கற்றல் திறன் குறியீடு: கிளந்தான் பாசீர் பூத்தே சாரிங் தென் சீனக் கடல் பிரிட்டிஷை எதிர்த்து நடந்த போராட்டப் பகுதிகள் கோலோக் நதி கிளந்தான் நதி


Saiz sebenar 69 ஆசிரியர் குறிப்பு Saiz sebenar ஹஜி அப்துல் ரஹ்மான் லிம்போங் (Haji Abdul Rahman Limbong) தோக் ஜங்குட், ஹஜி அப்துல் ரஹ்மான் போராட்டங்களையும் காரணங்களையும் மாணவர்கள் விளங்கிக் கொள்ள வழிகாட்டுதல். 7.2.1, 7.2.2 7.2.3 K7.2.6 இவரின் இயற்பெயர் ஹஜி அப்துல் ரஹ்மான் பின் ஹஜி அப்துல் ஹமிட். 1868ஆம் பிறந்த இவர் 1929ஆம் ஆண்டில் மெக்காவில் உயிர் துறந்தார். ◆ பிரிட்டிஷ் அறிமுகப்படுத்திய புதிய விதிமுறைகள் மக்களுக்குப் பெரும் சுமையை த் தந்த ன. எடுத்துக்கா ட்டாக விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான நில விதிமுறைகள் ஆகும். ◆ வரி செலுத்தாத உள்ளூர் மக்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகப் பிரிட்டிஷார் அச்சுறுத்தினர். ◆ 1922ஆம் ஆண்டில் புதிய நிலவிதிகளைப் பின்பற்றாததால் கோல தெலேமோங் விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களைப் பிரதிநிதித்து ஹஜி அப்துல் ரஹ்மான் லிம்போங் வழக்கறிஞராக நீதிமன்றத்தில் வாதாடி வெற் றி பெற்றார். ◆ 1928ஆம் ஆண்டில் விவசாயிகளும் ஹஜி அப்துல் ரஹ்மான் லிம்போங்கின் சகாக்களும் கோல பேராங் காவல் நிலையத்தைக் கைப்பற்றினர். ◆ பிரிட்டிஷார் எதிர் தாக்குதல் நடத்தினார். ஹஜி அப்துல் ரஹ்மான் லிம்போங்கைத் தூண்டுதல் குற்றத்திற்காகக் கைது செய்து மெக்காவிற்கு நாடு கடத்தினர். எதிர்ப்பிற்கான காரணம் ப�ோராட்டங்கள் நாட்டின் இறையாண்மையைத் தற்காக்க வேண்டியதன் அவசியத்தை விவரிக்கவும். பிரிட்டிஷாரை எதிர்த்த உள்ளூர் மக்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் சூழல் (மூலம்: Arkib Negara Malaysia) காலனித்துவத்திடமிருந்து தங்கள் பகுதியைப் பாதுகாப்பதற்காக நம் உள்ளூர் வீரர்களின் போராட்ட வரலாற்றிலிருந்து பல படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள முடியும். நாட்டுப்பற்று மிக்க குடிமக்கள் எனும் வகையில் வீரர்களின் போராட்டங்களையும் அவர்களின் தியாகங்களையும் போற்றுவதோடு பெருமை கொள்ள வேண்டும். திரெங்கானு மக்களின் போராட்டப் பகுதிகளைக் காட்டும் கரைவரைபடம் குறியீடு: கிளந்தான் பகாங் திரெங்கானு கோல பேராங் செதூயு தென் சீனக் கடல் திரெங்கானு மக்களின் எழுச்சிப் பகுதிகள் கோல திரங்கானு


Saiz sebenar 70 கள ஆய்வு • மலாயாவைக் கைப்பற்ற அந்நிய சக்திகளின் வருகை உள்ளூர் மக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியது. அதனையொட்டிக் கலந்துரையாடுக. • குழு அல்லது தனியாள் முறையில் செய்யலாம். • ஆய்வறிக்கை ஒன்று முதல் ஐந்து பக்கங்களுக்குள் செய்திட வேண்டும். • சரியான வடிவ முறையில் கள ஆய்வைச் செய்திட மாணவர்களுக்கு வழிகாட்டுதல். ஆய்வுச்சிக்கல் • அந்நிய சக்திகளின் தலையீட்டையும் காலனித்துவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வீரர்களையும் அதற்கான காரணங்களையும் கூறுக. • போராட்டங்களை விவரிக்கவும். • போராட்டங்களின் விளைவுகளையும் அதனால் ஏற்பட்ட படிப்பினைகளையும் விவரிக்கவும். ஆய்வின் நோக்கம் • அருங்காட்சியகம்/பழஞ்சுவடிக் காப்பகம் தொடர்பான நிறுவனங்கள் • நூல்/இதழ்/சஞ்சிகை • ஆவணம்/அறிக்கை/நாட்குறிப்பு • நாளிதழ் • தனிமனிதர் • அதிகாரப்பூர்வ வலைத்தளம் மேற்கோள்/மூலம் • தலைப்பு • ஆய்வுச் சிக்கல் • ஆய்வின் நோக்கம் • ஆய்வு அணுகுமுறை • தரவு பகுப்பாய்வு • ஆய்வின் முடிவு • முடிவு • மேற்கோள் • இணைப்பு ஆய்வு அறிக்கை பெருமைமிகு வீரர்கள் ஆசிரியர் குறிப்பு


Saiz sebenar 71 Saiz sebenar மீட்டுணர்வோம் உள்ளூர் வீரர்கள் ✿ சுங்கை ஊஜோங் கில் பிரிட்டிஷ் தலையீட்டை எதிர்த்தார். ✿ யாம்துவான் அந்தா மோதலை முடிவிற்குக் கொண்டுவர பிரிட்டிஷாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். யாம்துவான் அந்தா ✿ சரிக்கேய் பகுதியை ஜேம்ஸ் புரூக் ஆக்கிரமித்ததால் அவரை எதிர்த்தார். ✿ ஷாரிப் மசாஹ�ோர் கனோவிட்டிலுள்ள புரூக் அரணைத் தாக்கினார். ஷரிப் மசாஹ�ோர் ✿ ஜேம்ஸ் புரூக், இபான் மக்களைக் கடற்கொள்ளை யர்கள் எனக் கருதினார். ✿ ரெந்தாப் நஙா ஸ்கராங்கில் உள்ள ஜேம்ஸ் புரூக்கின் தற்காப்பு அரணைத் தாக்கினார். ரெந்தாப் உள்ளூர் வீரர்களின் அந்நிய சக்திகளின் தலையீட்டுக்கும் காலனித்துவத்திற்கும் எதிரான போராட்டத்தை இந்த அலகு விவாதிக்கிறது. இவர்களின் போராட்டத்தைப் பற்றிய புரிதல் மாணவர்கள் நாட்டின் சுதந்திர வரலாற்றை அடுத்த அலகில் புரிந்துகொள்ள உதவும். ✿ நானிங் தனது காலனி என்று பிரிட்டிஷ் கூறியது. ✿ டோல் சைட் பிரிட்டிஷ் மீது தாக்குதல் நடத்தினார். ஆனால், அவர் தோற்கடிக்கப்பட்டார். டோல் சைட் ✿ ஆட்சியர் வரிவசூலிப்பு உரிமையை இழந்தனர். ✿ டத்தோ பஹாமான் பிரிட்டிஷ் மீது தாக்குதலைத் தொடங்கி, லுபோக் தெருவாவை மீண்டும் கைப்பற்றினார். டத்தோ பஹாமான் ✿ பிரிட்டிஷ் ஆலோசனை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ✿ தோக் ஜங்குட் தாக்குதல் நடத்தி பாசீர் பூத்தேவைக் கைப்பற்றினார். தோக் ஜங்குட் ✿ வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனம் மாட் சாலேவை ச் சண்டகான், மெங்காத்தா ல், இனனாம், புலாவ் காயா ஆகிய இடங்களில் ஆட்சியாளராக அங்கீகரிக்கவில்லை. ✿ புலாவ் காயாவில் அமைந்துள்ள வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனத்தின் தற்காப்பு அரணை மாட் சாலே தாக்கினார். மாட் சாலே ✿ சாலைகள் அமைக்க வட போ ர்னியோ பிரிட்டிஷ் நிறுவனம் முரூட் குடிமக்களைக் கட்டாயத் தொழிலாளர்களாக ஆக்கியது. ✿ அந்தனோம் வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனத்தை எதிர்க்கத் தலைமையேற்று, முரூட் வீரர்களை ஒன்று திரட்டினார். அந்தானோம் ✿ புதிய நில விதி சட்டத்தை அறிமுகப்படுத்திற்காகப் பிரிட்டிஷாரை எதிர்த்தா ர். ✿ பிரிட்டிஷ் விதிகளை மீறியதற்காகக் கைது செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஹஜி அப்துல் ரஹ்மான் லிம்போங் வழக்கறிஞராகப் பிரதிநிதித்து வாதாடி வெற்றி பெற்றார். ஹஜி அப்துல் ரஹ்மான் லிம்போங் ✿ ஆட்சியர் அதிகாரங்களை இழந்தா ர். பிரிட்டிஷ் ரெசிடெண்ட் மலாய் மரபு வழக்குகளில் தலையிட்டார். ✿ டத்தோ மகாராஜா லேலா J.W.W. பெர்ச்சைக் கொல்லத் திட்டமிட்டார். டத்தோ மகாராஜா லேலா


Saiz sebenar 72 ஆசிரியர் குறிப்பு அ. சரியான விடையைக் க�ொண்டு அட்டவணையை நிறைவு செய்க. இடம் நானிங் சரிக்கேய் ஸ்ரீ மெனாந்தி ரெந்தாப் டத்தோ மகாராஜா லேலா மாவீரர் பாசீர் பூத்தே டத்தோ பஹாமான் ஹஜி அப்துல் ரஹ்மான் லிம்போங் மாட் சாலே இடம் மாவீரர் அந்தானோம் சிந்தித்துப் பதிலளி "Perajurit Tanah Air" பாடலை உற்சாகத்துடன் பாட மாணவர்களுக்கு வழி காட்டுதல். ஆ. மேற்கண்ட பாடல் வரிகளை அடிப்படையாகக் கொண்டு: அ) நற்பண்புகள் இரண்டனைக் குறிப்பிடுக. (i) ______________________________________________ (ii) ______________________________________________ ஆ) இப்பாடலில் உள்ள முதல் கண்ணியின் பொருள் என்ன? ________________________________________________ இ) நாட்டுக்காகத் தியாகம் செய்த வீரர்களின் சேவையைப் போற்றும் முறையைக் குறிப்பிடுக. _________________________________________________ Perajurit Tanah Air Inilah barisan kita Yang ikhlas berjuang Siap sedia berkorban Untuk ibu pertiwi Sebelum kita berjaya Jangan harap kami pulang Inilah sumpah pendekar kita Menuju medan bakti Andai kata kami gugur semua Taburlah bunga di atas pusara Kami mohon doa Malaysia berjaya Semboyan telah berbunyi Menuju medan bakti. Perajurit Tanah Air Lagu/lirik: Saiful Bahri


Saiz sebenar 73 Saiz sebenar காலனித்துவத்திற்கு எதிரான உள்ளூர் வீரர்களின் போராட்டங்களும் அந்நிய சக்திகளின் தலையீடும் நம் நாட்டின் இறையாண்மையைப் பேணுவதன் அவசியத்தை நமக்கு நன்கு உணர்த்துகின்றன. மலேசியத் தரைப் படை பாதுகாப்புப் படை எப்பொழுதும் நாட்டின் இறையாண்மையைத் தற்காக்கத் தயாராக உள்ளது. (மூலம்: Kementerian Pertahanan Malaysia dan Polis Diraja Malaysia) அரச மலேசிய விமானப்படை அரச மலேசியக் கடற்படை அரச மலேசியக் காவல்துறை தனிநபர் காலனித்துவத்திற்கு எதிரான வீரர்களின் தியாகங்களை உய்த்துணர்ந்து அதனைப் போற்றுவது என்னுள் ஒரு நாட்டுப்பற்றைத் தூண்டுகிறது. சமுதாயம் நாட்டுப்பற்றையும் வரலாற்றையும் உய்த்துணரும் சமூகம் நிச்சயமாகச் சமயம், இனம், நாட்டை நேசிக்கும். நாடு நாட்டை நேசிக்கும் சமூகம் நாட்டின் நலனுக்காக அமைதியையும் இறையாண்மையையும் ஒற்றுமையையும் நிலைநிறுத்த முயற்சிக்கும். நாட்டை நேசிப்போம்


Saiz sebenar 74 6 நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு நம் நாட்டுத் தலைவர்களின் அயரா உழைப்பையும் மக்களின் பங்களிப்பையும் அறிந்து கொள்ள நாட்டின் சுதந்திர வரலாற்றை அறிவது அவசியமாகும். சுதந்திர நாட்டை உருவாக்கப் பல்வேறு போராட்டங்களையும் சவால்களையும் கடந்து வந்துள்ளோம். இந்த அலகு தலைவர்களின் சுதந்திரப் போராட்டங்கள், 1957ஆம் ஆண்டு சுதந்திரப் பிரகடன நொடிப்பொழுது ஆகியவற்றை விவாதிக்கின்றது. 20 பிப்ரவரி 1956ஆம் ஆண்டில் சுதந்திரக் குழுவினர் வருகை, பண்டா ஹிலிர் மலாக்கா. (மூலம்: Arkib Negara Malaysia) அலகு சுதந்திர வரலாறு சாரம் தலைப்பு 7: நாட்டின் சுதந்திரப் ப�ோராட்டம்


Saiz sebenar 75 A அடிப்படை வரலாற்றுச் சிந்தனைத் திறன் KPS 1. நாட்டின் சுதந்திர வரலாற்றின் காலநிரல் மாற்றத்தை விளங்கிக் கொள்ளல். 2. நாட்டின் சுதந்திரத்தைத் தற்காப்பதன் அவசியத்தின் விழிப்புணர்வு மேம்பட முந்தைய சிக்கல்களை விளங்கிக் கொள்ளல். 3. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் குறிப்பிடத்தக்கச் சான்றுகளை ஆராய்தல். பொறுப்புணர்வு குடியியல் நெறி நீங்கள் கற்கப் ப�ோவது என்ன? 1. சுதந்திரத்திற்குப் போராடிய தலைவர்கள். 2. சுதந்திரத்திற்கான முயற்சிகள். 3. சுதந்திரப் பிரகடன நொடிப்பொழுது.


Saiz sebenar 76 அமாட் ப�ோஸ்தாமாம் (Ahmad Boestamam) ✯ 1946ஆம் ஆண்டில் 'அங்காத்தான் பெமுடா இன்சாப்' (API) தலைவர். ✯ 1955ஆம் ஆண்டில் மலாயா மக்கள் கட்சியைத் (PRM) தோற்றுவித்தார். ✯ 'சுவாரா ராக்யாட்' (Suara Rakyat), 'வோய்ஸ் ஓப் தி பீப்பிள்' (Voice of The People) நாளிதழ்களை வெளியிட்டார். டாக்டர் புர்ஹானுடின் அல்ஹெல்மி (Dr. Burhanuddin al-Helmi) ✯ 1945ஆம் ஆண்டின் மலாயாத் தேசிய மலாய்க்காரர்கள் கட்சியின் (PKMM) இரண்டாம் தலைவர். ✯ 1956ஆம் ஆண்டில் மலாயா இஸ்லாமியர் கட்சிக்குத் (PAS) தலைமையேற்றார். ✯ 'மலாயு ராயா' சிந்தனைக்குப் போராடினார். ✯ 'ஐக்கிய தீபகற்ப இந்தோனேசியக் குடியரசு கட்சிக்குத் (KRIS) தலைமையேற்றார். மக்களும் தலைவர்களும் சுதந்திர நாட்டின் அவசியத்தை அறிந்திருப்பர். சுதந்திரத் தலைவர்களின் அறிவாற்றலும் தீரமும் அந்நிய ஆதிக்கத்திலிருந்து நாட்டைச் சுதந்திரம் அடையச் செய்தது. தலைவர்களுக்கிடையிலான ஒருமைப்பாடு நாட்டின் சுதந்திரத்தை எளிதாக்கியது. டத்தோ ஓன் பின் ஜபார் (Dato’ Onn bin Ja’afar) ✯ 1946ஆம் ஆண்டில் மலாய் காங்கிரஸின் தலைவர். ✯ 1946ஆம் ஆண்டில் அம்னோவின் (United Malays National Organisation) முதல் தலைவர். ✯ ஜ�ொகூர் மந்திரி பெசராக நியமிக்கப்பட்டவர். ✯ மலாய்க்காரர்களை ஒன்றிணைத்து மலேயன் யூனியனை எதிர்த்தவர். ✯ மலாயா சுதந்திரக் கட்சியைத் (IMP) தோற்றுவித்தவர். சுதந்திரப் ப�ோராளிகள்


Saiz sebenar 77 7.3.1 K 7.3.5 ஈஷாக் ஹஜி முகமட் (Ishak Haji Muhammad) ✯ 1934ஆம் ஆண்டு அரசியலில் தீவிரமாக ஈடுபட மூன்றாம் நிலை மஜிஸ்திரேட் பதவியிலிருந்து விலகினார். ✯ உத்துசான் மெலாயு நாளிதழைத் தோற்றுவித்தார். ✯ 1957ஆம் ஆண்டு மலாயா தொழிலாளர் கட்சிக்குத் தலைமையேற்றார். அபு பக்கார் அல் பகீர் (Abu Bakar al-Baqir) ✯ 1934ஆம் ஆண்டு மஹாட் அல் எஹ்யா அஸ்ஷரிப்பைத் (al-Ehya Assharif) தோற்றுவித்தார். ✯ 1948ஆம் ஆண்டில் ஒரே மலாயா உயர்நிலை சமய சபையைக் (MATA) கூட்டினார். ✯ 1948ஆம் ஆண்டில் ஹிஸ்புல் முஸ்லிமின்னுக்குத் தலைமையேற்றார். துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல் ஹஜ் இப்னி அல்மர்ஹோம் சுல்தான் அப்துல் ஹமிட் ஹலிம் ஷா (Tunku Abdul Rahman Putra Al-Haj ibni Almarhum Sultan Abdul Hamid Halim Shah) ✯ அம்னோவின் இரண்டாம் தலைவர். ✯ 1952ஆம் ஆண்டில் கூட்டணிக் கட்சியைத் தோற்றுவித்தவர். ✯ 1956ஆம் ஆண்டில் லண்டன் சென்ற கூட்டரசு மலாயா சுதந்திரக் குழுவிற்குத் தலைமையேற்றார். ✯ கூட்டரசு மலாயாவின் முதலாவது பிரதமர். லண்டன் சென்ற கூட்டரசு மலாயாச் சுதந்திரக் குழுவிற்குத் தலைமையேற்றவர் யார்? விரைந்து பதிலளி விரைந்து பதிலளி • துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல் ஹஜ் இப்னி அல்மார்ஹோம் சுல்தான் ஹமிட் ஹலிம் ஷா, கெடா சுல்தானாகிய சுல்தான் ஹமிட் ஹலிம் ஷாவின் புதல்வராவார். • கூட்டணிக் கட்சி எனப்படுவது அம்னோ, மசீச, மஇகா ஆகிய உறுப்புக்கட்சிகள் இணைந்தது ஆகும். மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் அரசியலில் வலுவான உறவு அமைய இக்கட்சி அமைக்கப்பட்டது. உங்களுக்குத் தெரியுமா? சுதந்திரம் பெறுவதற்கு ஒருமைப்பாடு எவ்வளவு முக்கியமெனக் குறிப்பிடுக. நாட்டின் சுதந்திரப் போராளிகளை அறிய மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.


Saiz sebenar 78 துன் தான் செங் லோக் (Tun Tan Cheng Lock) ✯ 1945ஆம் ஆண்டு 'ஆல் மலாயன் கொன்சில் ஓப் ஜ�ோயிண்ட் ஆக்‌ஷன்'இன் (AMCJA) தலைவர். ✯ 1949ஆம் ஆண்டின் மலாயன் சீனர் சங்கத்தின் (மசீச) முதல் தலைவராவார். ✯ மசீச, அம்னோவோடு இணைந்து கூட்டணிக் கட்சி உருவாகக் காரணமானவர். ✯ சீனச் சமூகத்தினரிடையே நாட்டின் மீது விசுவாச உணர்வை விதைத்தவர். துன் அப்துல் ரசாக் பின் டத்தோ உசேன் (Tun Abdul Razak bin Dato’ Hussein) ✯ லண்டன் சென்ற கூட்டரசு மலாயாச் சுதந்திரக் குழுவின் உறுப்பினர். ✯ 1956ஆம் ஆண்டு ரசாக் அறிக்கையை அறிமுகப்படுத்தியவர். ✯ 1957ஆம் ஆண்டு கூட்டரசு மலாயாவின் முதலாவது துணைப் பிரதமர். ✯ மலாய்மொழியைப் பயிற்று மொழியாக்கியவர். டத்தோ அப்துல் வாஹாப் பின் தொ மூடா அப்துல் அசிஸ் (Dato’ Abdul Wahab bin Toh Muda Abdul Aziz) ✯ மலேயன் யூனியனின் உருவாக்கத்தை எதிர்த்தவர். ✯ 1946ஆம் ஆண்டின் அம்னோவின் முதலாவது பொதுச் செயலாளர். ✯ 1956ஆம் ஆண்டில் லண்டன் சென்ற கூட்டரசு மலாயாவின் சுதந்திரக் குழுவில் மலாய் அரசர்கள் நிகராளியாகச் சென்றார். ✯ முதலாவது பேராக் மந்திரி பெசார் ஆவார். 1. மாணவர்கள் பல குழுக்களாகப் பிரிக்கப்படுதல். 2. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தாள் கொடுக்கப்படும். நாட்டுச் சுதந்திரத்திற்குப் போராடிய போராளிகளின் போராட்டங்களைப் படைப்பாக்கத் திறன்கொண்டு எழுதுதல். 3. மாணவர்களின் படைப்பைப் பிற குழு மாணவர்களும் காண வகுப்பில் ஒட்டி வைத்தல். 4. பிற குழு மாணவர்கள் படைப்புகள் தொடர்பான தங்கள் கருத்துகளைக் குறிப்பு அட்டையில் எழுதி, அப்படைப்புகள்மீது ஒட்டுதல். களரி நடை (Gallery Walk) 21ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன் ம் நூற்றாண்டுக் கற்றல் திறன்


Saiz sebenar 79 துன் எச்.எஸ்.லீ (Tun H.S. Lee) ✯ 1949ஆம் ஆண்டின் சிலாங்கூர் மாநில மசீச கட்சியின் தலைவர். ✯ அம்னோ-மசீச ஒத்துழைப்பை முன்னெடுத்த தலைவர். ✯ இனங்களிடையே ஒற்றுமையை வளர்க்க முற்பட்டவர். ✯ 1956ஆம் ஆண்டு லண்டன் சென்ற கூட்டரசு மலாயாவின் சுதந்திரக் குழுவின் உறுப்பினர். ✯ கூட்டரசு மலாயாவின் முதல் நிதி அமைச்சர். துன் வீ.தி. சம்பந்தன் (Tun V.T. Sambanthan) ✯ 1955ஆம் ஆண்டின் மலாயன் இந்தியர் காங்கிரஸின் (மஇகா) 5ஆவது தேசியத் தலைவர். ✯ 1957ஆம் ஆண்டு சுதந்திரக் குழுவில் பங்கேற்றார். ✯ கூட்டரசு மலாயாவின் முதல் நலத்துறை அமைச்சர் ஆவார். துன் டாக்டர் இஸ்மாயில் பின் டத்தோ அப்துல் ரஹ்மான் (Tun Dr. Ismail bin Dato’ Abdul Rahman) ✯ 1951ஆம் ஆண்டின் அம்னோவின் துணைத் தலைவர். ✯ 1951-1952 ஆம் ஆண்டில் கூட்டணிக் கட்சி உருவாக்கத்தில் மசீசவுடன் பேச்சுவார்த்தை நடத்திய அம்னோவின் நிகராளி. (மூலம்: Ishak Saat, 2011. Radikalisme Melayu Perak 1945-1970. Pulau Pinang: Penerbit Universiti Sains Malaysia) சுதந்திரத்திற்குப் போராடிய போராளிகளின் பெயர்களைப் பட்டியலிட மாணவர்களுக்கு வழிகாட்டுதல். சுதந்திரப் போராளிகள் நாட்டிற்குப் பெரும் தியாகம் செய்துள்ளார்கள். சுதந்திரக் குடிமக்களாகிய நாம், தலைவர்களின் தியாகங்களையும் போராட்டங்களையும் போற்றிப் பெருமிதம் கொள்ள வேண்டும். கூட்டரசு மலாயாவின் முதலாவது நலத்துறை அமைச்சர் யார்? விரைந்து பதிலளி விரைந்து பதிலளி 7.3.1


Saiz sebenar 80 காலனித்துவ ஆட்சியின் துயரம் மக்களிடையே சுதந்திர வேட்கையைத் தூண்டியது. சமூக ஒருமைப்பாடும் பல்லினச் சமூகத் தலைவர்களுக்கிடையிலான ஒருமைப்பாடும் கூட்டரசு மலாயாவின் சுதந்திர அடைவை எளிதாக்கியது. பின்வருவன நாட்டின் சுதந்திரப் போராட்ட நிரல்களாகும். சுதந்திரம் கோரிப் ப�ோராட்டம் ஜப்பானியர் ஆக்கிரமிப்பு ஜப்பானியர் ஆக்கிரமிப்புப் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. உள்ளூர்த் தலைவர்கள் சுதந்திரத்திற்கு முழுமூச்சாய்ப் போராடினர். மலாயாவின் கம்னியூஸ்ட்டுக் கட்சி கொலை செய்தல், ஈயச் சுரங்கங்களையும் ரப்பர் தோட்டங்களையும் அழித்தல் போன்ற கொடுமைகளைப் புரிந்தது. கம்னியூஸ்டின் வன்செயல்களின் விளைவாக 1948ஆம் ஆண்டு நாடு முழுவதும் அவசரக்காலம் (darurat) பிரகடனப்படுத்தப்பட்டது. 1955ஆம் ஆண்டில் பாலிங்கில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 1960ஆம் ஆண்டில் அவசரக்காலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. மலேயன் யூனியன் புதிய காலனித்துவ வடிவமாகப் பிரிட்டிஷார் மலேயன் யூனியனை அறிமுகப்படுத்தினர். மலாய் அரசர்களின் அதிகாரத்தை அழித்தனர். டத்தோ ஓன் பின் ஜபார் மலாய்க்காரர்களுக்குத் தலைமையேற்று மலேயன் யூனியனை எதிர்த்தார். 1948ஆம் ஆண்டில் மலேயன் யூனியனுக்குப் பதிலாகக் கூட்டரசு மலாயா அமைக்கப்பட்டது. அவசரக்காலம் என்பது எதிர்பாரா விதமாகத் திடீரென ஏற்படும் துயரம் ஆகும். உங்களுக்குத் தெரியுமா? மலேயன் யூனியன் எதிர்ப்புப் போராட்டத்திற்குத் தலைமையேற்றவர் யார்? விரைந்து பதிலளி விரைந்து பதிலளி கம்னியூஸ்ட்டு அச்சுறுத்தல் 1942–1945 1946–1948 1948 1945 –


Saiz sebenar 81 7.3.2 K7.3.4 அரசியல் கட்சிகளின் தோற்றம் 1945ஆம் ஆண்டு மலாயாத் தேசிய மலாய்க்காரர்கள் கட்சி [Parti Kebangsaan Melayu Malaya (PKMM)]. 1946ஆம் ஆண்டு அம்னோ [United Malays National Organisation (UMNO)]. 1946ஆம் ஆண்டு மஇகா [Malayan Indian Congress (MIC)]. 1948ஆம் ஆண்டு ஹிஸ்புல் முஸ்லிமின் (Hizbul Muslimin). 1949ஆம் ஆண்டு மசீச [Malayan Chinese Association (MCA)]. 1951ஆம் ஆண்டு பாஸ் [Parti Islam Se-Malaya (PAS)]. தேர்தலை எதிர்நோக்க அம்னோ, மசீச, மஇகா அங்கத்துவம் பெற்ற கூட்டணிக் கட்சி அமைக்கப்பட்டது. இந்தக் கூட்டணிக் கட்சியில் மலாய்க்காரர், சீனர், இந்தியர் பிரதிநிதித்துவம் இருந்தது. இத்தேர்தலில் கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றது. துங்கு அப்துல் ரஹ்மான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். கூட்டணிக் கட்சி பிரிட்டிஷாருடன் சுதந்திரப் பேச்சுவார்த்தையை நடத்தியது. கூட்டரசு மலாயாவின் சுதந்திரம் 31 ஆகஸ்ட்டு 1957ஆம் ஆண்டு துங்கு அப்துல் ரஹ்மான் கூட்டரசு மலாயாவின் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தார். லண்டன் பேச்சுவார்த்தை மலாய் அரசர்களின் நிகராளிகளும் கூட்டணிக் கட்சியின் நிகராளிகளும் லண்டன் சென்றனர். இக்குழு லண்டன் சென்ற நோக்கம் பிரிட்டிஷாருடன் சுதந்திரம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவதற்கே ஆகும். (மூலம்: Ramlah Adam, 2003. Pejuang-pejuang Kemerdekaan. Melaka: Institut Kajian Sejarah dan Patriotisme Malaysia) நாம் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய சுதந்திரப் போராளிகளின் தியாகங்கள் என்ன? சுதந்திரம் கோரிக்கை நிகழ்வுகளை மாணவர்கள் அடையாளங்காண வழிகாட்டுதல். கூட்டரசு சட்டச் சபைக்கான தேர்தல் 1955 1956 1957 1951


Saiz sebenar 82 தலைவர்களுக்கு இடையிலான ஒருமைப்பாடு நம் நாட்டின் சுதந்திரத்திற்கு அடிப்படையாக அமைந்தது. 1956ஆம் ஆண்டில் சுதந்திரம் பெறுவதற்காகப் பிரிட்டிஷாருடன் பேச்சுவார்த்தை நடத்த லண்டனுக்குச் சென்ற சுதந்திரக் குழுவிற்கு லோர்ட் எலென் லெனொக்ஸ் போய்ட் (Lort Alan Lennox Boyd) தலைமையேற்றார். இச்சுதந்திரக் குழுவில் மலாய் அரசர்களின் நிகராளியாக நால்வரும் கூட்டணிக் கட்சியின் நிகராளியாக நால்வரும் இடம் பெற்றிருந்தனர். துங்கு அப்துல் ரஹ்மான் தலைமையில் லண்டன் சென்ற சுதந்திரக் குழுவினர். (மூலம்: Arkib Negara Malaysia) மலாய் அரசர்களின் நிகராளிகள்: டத்தோ அப்துல் வாஹாப் தொ மூடா அப்துல் அசிஸ் (பங்லீமா புக்கிட் கந்தாங்) அப்துல் அசிஸ் அப்துல் மஜிட் டத்தோ முகமட் சேத் முகமட் சைட் டத்தோ நிக் அமாட் கமில் ஹஜி மாமூட் கூட்டணிக் கட்சியின் நிகராளிகள்: துங்கு அப்துல் ரஹ்மான் டத்தோ அப்துல் ரசாக் உசேன் டாக்டர் இஸ்மாயில் அப்துல் ரஹ்மான் கெர்ணல் எச்.எஸ்.லீ சுதந்திரக் குழு காணொலி சுதந்திரக் குழுவினர் பிரிட்டிஷாரை எங்குச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்? விரைந்து பதிலளி விரைந்து பதிலளி சுதந்திரப் பேச்சுவார்த்தை


Saiz sebenar 83 இப்பேச்சுவார்த்தையின் முடிவில் கூட்டரசு மலாயாவின் சுதந்திர உடன்படிக்கை, லண்டன் உடன்படிக்கை எனவும் அறியப்பட்டது. இந்த உடன்படிக்கையில் கூட்டரசு மலாயாவின் சுதந்திர நாள் 31 ஆகஸ்ட்டு 1957 எனத் தீர்மானிக்கப்பட்டது. லண்டன், லென்கெஸ்தெர் அவுஸ் (Lancaster House) 8 ஜனவரி 1956ஆம் ஆண்டில் துங்கு அப்துல் ரஹ்மான், லோர்ட் எலென் லெனொக்ஸ் போய்ட்டுடன் இணைந்து கூட்டரசு மலாயாவின் சுதந்திர உடன்படிக்கையில் கையெழுத்திடுகிறார். (மூலம்: Arkib Negara Malaysia) கூட்டரசு மலாயாவிற்குச் சுதந்திரம் பெற நம் நாட்டுத் தலைவர்கள் கடைப்பிடித்த அணுகுமுறை என்ன? சுதந்திரக் குழுவின் நோக்கத்தை மாணவர்கள் விளங்கிக்கொள்ள வழிகாட்டுதல். 7.3.2 K7.3.5


Saiz sebenar 84 சுதந்திரப் பிரகடன காலநிரலை மாணவர்கள் விளங்கிக் கொள்ளத் துணைபுரிதல். லண்டன் பேச்சுவார்த்தை வெற்றிக்குப் பின்னர் 16 பிப்ரவரி 1956இல் சுதந்திரக் குழுவினர் கூட்டரசு மலாயாவுக்குத் திரும்பினர். 30 ஆகஸ்ட்டு 1957இல் மலாக்கா பண்டா ஹிலி்ர் திடலில் யூனியன் ஜெக் கொடி மாலை மணி 6.30க்கு இறக்கப்பட்டது. இந்த நிகழ்வை மலாக்காவின் ரெசிடண்ட் ஆணையர் எச்.ஜி.ஹெம்மட்டும் ஆயிரக்கணக்கான மக்களும் கண்டு களித்தனர். இந்நிகழ்ச்சி மலாயாவில் பிரிட்டிஷ் காலனித்துவம் முடிவுக்கு வந்ததைப் பிரதிபலித்தது. 20 பிப்ரவரி 1956இல் மலேயன் ஏர்வேஸ் விமானத்தில் சுதந்திரக் குழு பத்து பெர்ரெண்டாம் விமான நிலையத்தில் வந்து இறங்கியது. மக்கள் குதூகலத்தோடு வரவேற்றனர். துங்கு அப்துல் ரஹ்மான் 31 ஆகஸ்ட்டு 1957ஆம் நாள் நாடு சுதந்திரம் அடையும் என அறிவித்தார். துங்கு அப்துல் ரஹ்மான் மக்களைப் பார்த்துக் கை அசைக்கிறார். சுதந்திரக் குழுவினரை மக்கள் குதூகலத்துடன் வரவேற்கும் காட்சி. தலைவர்களிடையிலான ஒருமைப்பாட்டால் நம் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தது. இதனால், நாட்டில் வளப்பமும் அமைதியும் நிறைந்தது. இந்நாட்டின் குடிமக்களாகிய நாம் இதனை உணர்ந்து நாட்டின் சுபிட்சத்தையும் எதிர்காலத்தையும் காக்க ஒன்றிணைவோம். யூனியன் ஜெக் கொடி மலாக்கா பண்டா ஹிலிர் திடலில் இறக்கப்படும் காட்சி. சுதந்திரப் பிரகடன அறிவிப்பு 7.3.2 K7.3.5


Saiz sebenar 85 31 ஆகஸ்ட்டு 1957ஆம் நாள் மலாயா மக்கள் அனைவருக்கும் மிக முக்கியமான நாளாகும். அந்த நொடிப்பொழுதின் மகத்துவத்தில் நம் நாடு சுதந்திரம் பெற்றுக் காலனித்துவக் காலம் முடிவுற்றது. சுதந்திர நொடிப்பொழுது 30 ஆகஸ்ட்டு 1957ஆம் நாள் சரியாக நள்ளிரவு மணி 12.00க்கு யூனியன் ஜேக் கொடி இறக்கப்பட்டது மலாயாவில் பிரிட்டிஷ் காலனித்துவக் காலம் முடிவு பெற்றதைக் காட்டுகிறது. நள்ளிரவு 12:00 நள்ளிரவு கோலாலம்பூரில் யூனியன் ஜேக் 12:01 கொடி இறக்கப்படுகிறது. கோல கோலாலலம்பூரில்ல் மலலாயா கூட்டட்டரசுக்க் கொ கொடி ஏற்றற்றப்ப்படுகிறறது. கூட்டரசு மலாயாக் கொடி ஏற்றப்படுவது மலாயா சுதந்திர நாடு என்பதற்குச் சான்றாகிறது. கூட்டரசு மலாயாக் கொடி ஏற்றப்படுவதை நேரடியாகப் பார்த்திருப்பீர்களானால் உங்களின் மன உணர்வு எப்படி இருந்திருக்கும்? (மூலம்: Arkib Negara Malaysia)


Saiz sebenar 86 மெர்டேக்கா முழக்கக் காணொலி புகழ்மிகு சுதந்திரம் காமன்வெல்த்: முன்னாள் பிரிட்டிஷ் காலனித்துவ நாடுகளின் அமைப்பு. ச�ொற்களஞ்சியம் நாட்டின் சுபிட்சத்திற்கு வித்திடும் சுதந்திர நாட்டைத் தற்காப்பதன் அவசியத்தை மாணவர்கள் விளங்கிக் கொள்ள வழிகாட்டுதல். நாட்டின் சுதந்திரத்தைத் தற்காப்பதன் அவசியத்தைக் குழுவில் கலந்துரையாடுக. 31 ஆகஸ்ட்டு 1957- கோலாலம்பூர் மெர்டேக்கா அரங்கில் துங்கு அப்துல் ரஹ்மான் மலாய் அரசர்கள், மக்கள், 30 காமன்வெல்த் நாடுகளின் நிகராளிகள் ஆகியோரின் முன்னிலையில் கூட்டரசு மலாயாவின் சுதந்திரப் பிரகடன விழாவை நிகழ்த்தினார். துங்கு அப்துல் ரஹ்மான் ஏழு முறை ‘மெர்டேக்கா’ என முழங்கினார். மக்களும் அவரைப் பின் தொடர்ந்து உற்சாகத்துடன் முழக்கமிட்டனர். இதனூடே, தேசியப் பண் இசைக்கப்பட்டுக் கூட்டரசு மலாயாவின் கொடி ஏற்றப்பட்டது. சுதந்திரப் பிரகடனம் விடுதலை பெற்ற சுதந்திர நாடாக மலாயாவிற்குப் புதியத் துவக்கமாக அமைந்தது. ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் இறையாண்மையைத் தற்காக்க வேண்டும். சிறுவயதிலிருந்தே நாட்டுப்பற்றை விதைக்க வேண்டும். இனங்களுக்கிடையிலான நல்லுறவு சுதந்திரத்தை நிலைப்படுத்துவதற்கும் நாட்டின் சுபிட்சத்துக்கும் வழிவகுக்கும். துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல் ஹஜ் இப்னி அல்மர்ஹோம் சுல்தான் அப்துல் ஹமிட் ஹலிம் ஷா கை உயர்த்தி ‘மெர்டேக்கா’ என முழக்கமிட்டது நம் நாடு அந்நிய காலனித்துவத்திலிருந்து விடுதலையானது என்பதைப் பறைசாற்றுவதாகும். உங்களுக்குத் தெரியுமா? 7.3.3 K7.3.6


Saiz sebenar 87 மீட்டுணர்வோம் இந்த அலகில் நாட்டின் சுதந்திர வரலாற்றை நன்கு அறிந்து கொண்டனர். அடுத்த அலகில் மாட்சிமை தாங்கிய மாமன்னரின் அதிகாரங்களை அறிய இந்தப் புரிதல் துணைபுரியும். • டத்தோ ஓன் பின் ஜபார் • டாக்டர் புர்ஹானுடின் அல்ஹெல்மி • அமாட் போஸ்தாமாம் • துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல் ஹஜ் • ஈஷாக் ஹஜி முகமட் • அபு பக்கார் அல் பகீர் • துன் தான் செங் லோக் சுதந்திரம் கோரிப் ப�ோராட்டம் • அந்நிய சக்திகளின் காலனித்துவமும் கம்யூனிஸ்ட்டின் அச்சுறுத்தலும் சுதந்திரம் கோரிப் போராட்டத்திற்கு மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியது. சுதந்திரப் பேச்சுவார்த்தை • சமூக ஒருமைப்பாடும் பல்லினத் தலைவர்களுக்கும் இடையிலான ஒருமைப்பாடும் ஒத்துழைப்பும் கூட்டரசு மலாயாவின் சுதந்திர அடைவை எளிதாக்கியது. சுதந்திர நொடிப்பொழுது • 31 ஆகஸ்ட்டு 1957ஆம் நாள் மலாயா மக்கள் அனைவருக்கும் மிக முக்கிய நாளாகும். சுதந்திரம் அடைந்த அந்த நொடிப்பொழுது அந்நிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. • துன் அப்துல் ரசாக் பின் டத்தோ உசேன் • டத்தோ அப்துல் வஹாப் பின் தொ மூடா அப்துல் அசிஸ் • துன் எச்.எஸ்.லீ • துன் வீ.தி.சம்பந்தன் • துன் டாக்டர் இஸ்மாயில் பின் டத்தோ அப்துல் ரஹ்மான் சுதந்திரப் ப�ோராளிகள்


Saiz sebenar 88 அனைத்துக் கேள்விக்கும் பதிலளிக்கவும். அ) சுதந்திரப் போராட்ட நிரல் வரைபடத்தைச் சரியான விடையைக் கொண்டு நிறைவு செய்க. சிந்தித்துப் பதிலளி ஜப்பானியர் ஆக்கிரமிப்பு ஆ) சரியான விடையைக் கொண்டு நிறைவு செய்க. 1. முந்தைய தலைவர்களின் ----------------- நாடு எளிதில் சுதந்திரம் அடைந்தது. 2. தலைவர்களிடையே ஒருமைப்பாடு இருந்ததால் நாடு எளிதில் ---------------- அடைந்தது. 3. லண்டனுக்குச் சென்ற சுதந்திரக் குழு --------------- நடத்தி சுதந்திரத்திற்கு வழிவகுத்தது. 4. இனங்களுக்கிடையே ------------------ இருந்தால் நாடு சுபிட்சம் பெறும். 5. சுதந்திரம் பெற்ற நாட்டின் குடிமகனாக, நாம் அடைந்துவரும் வெற்றிகளைக் கண்டு ---------------- கொள்ள வேண்டும். சுதந்திரம் பேச்சுவார்த்தை ஒற்றுமை பெருமிதம் ஒருமைப்பாட்டால் இப்பக்கத்தைப் படியெடுத்து வழங்கிடுக.


Saiz sebenar 89 சுதந்திரப் போராட்டத்தை அறிவது நாம் சுதந்திரத்தை உய்த்துணர வழிவகுக்கிறது. ஒவ்வொருவரும் நாட்டின் சுதந்திரத்தைத் தற்காக்க எவ்விதச் சவால்களையும் தடைகளையும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். சுதந்திர நாட்டின் குடிமக்களாகிய நாம் அடுத்த தலைமுறைக்காக நாட்டின் சுதந்திரத்தை நிலைநிறுத்த வேண்டும். (மூலம்: Koleksi Dewan Bahasa dan Pustaka) நாட்டை நேசிப்போம் தனிநபர் மக்களாகிய நாம் நாட்டுப்பற்றை விதைத்துச் சுதந்திரத்தின் பொருளைப் போற்றி அதனை நேசித்திட வேண்டும். சமுதாயம் சுதந்திரத்தின் பொருளை உய்த்துணர்ந்து மக்களிடையே ஒற்றுமையை உருவாக்குவதன்வழி நாட்டின் இறையாண்மையைத் தற்காக்கலாம். நாடு நாட்டின் முன்னேற்றத்திற்காக இறையாண்மையைத் தற்காக்க வேண்டும்.


Saiz sebenar 90 Saiz sebenar 90 7 நம் நாட்டின் நிர்வாகத்தில் மாமன்னரின் அமைப்புமுறை மிக முக்கியமானது. இந்த அலகில் மாமன்னரின் ஆட்சி முறை, அரசவை மன்ற கடமைகள், அரியணை அமர்வின் சடங்குகள் ஆகியன விவாதிக்கப்படும். மேலும், இந்த அலகு மாமன்னரின் அதிகாரங்களையும் அரசுரிமைச் சின்னங்களையும் மாட்சிமை தாங்கிய பேரரசியாரைப் பற்றியும் விளக்கும். 16ஆவது மாட்சிமை தாங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல் முஸ்தப்பா பில்லா ஷா இப்னி அல்மர்ஹோம் சுல்தான் ஹஜி அமாட் ஷா அல்- முஸ்தப்பா இன் பில்லா. (மூலம்: Istana Negara) மாட்சிமை தாங்கிய மாமன்னர் ஊடகவியலாளர்களுக்கு உணவு கொடுக்கும் காணொலி. அலகு தலைப்பு 8: மாட்சிமை தாங்கிய மாமன்னர் மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாட்டின் அரண் சாரம்


Saiz sebenar 91 Saiz sebenar 91 முதலாம் மாமன்னரின் அரியணை ஏறும் சடங்கின் காணொலி. 11 செப்டம்பர் 1959ஆம் நாளன்று முதலாம் மாட்சிமை தாங்கிய மாமன்னர் துவான்கு அப்துல் ரஹ்மான் இப்னி துவான்கு முகமதுவும் பேரரசியார் துவான்கு புவான் பெசார் குர்சியா பிந்தி துவான்கு பெசார் புர்ஹானுடினும் முதல் கூட்டரசு மலாயாவின் நாடாளுமன்றத் திறப்பு விழாவிற்கு வருகை தந்தனர். (மூலம்: Arkib Negara Malaysia) நீங்கள் கற்கப் ப�ோவது என்ன? 1. நாட்டின் முகாமைத் தலைவ ராக மாமன்னர். 2. மாமன்னரைத் தேர் வு செய்வதில் அரசவை மன்றத்தின் பங்கு. 3. மாமன்னரின் அரியணை ஏறும் சடங்குகள். 4. மாமன்னரின் அதிகாரங்கள். 5. மாமன்னர், பேரரசியாரின் அரசுரிமைச் சின்னங்கள். A அடிப்படை வரலாற்றுச் சிந்தனைத் திறன் KPS 1. மாமன்னர் நாட்டின் முகாமைத் தலைவர் என்பதைப் புரிந்து கொள்ளுதல். 2. மாமன்னரைத் தேர் வு செய்வதில் அரசவை மன்றத்தின் பங்கினை ஆராய்தல். 3. மாமன்னர், பேரரசியார் ஆகியோரின் அதிகாரங்கள், அரசுரிமைச் சின்னங்கள் ஆகியவற்றை விளக்குதல். குடியியல் நெறி மதித்தல்


Saiz sebenar 92 கூட்டரசு மலாயா சுதந்திரம் அடைந்த பிறகு மாமன்னர் அமைப்புமுறை அமைக்கப ்பட்டது. மாமன்னரின் அமைப்புமுறை கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டபோ து உருவாக்கப்பட்டது. கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கேற ்ப மாமன்னர் நாட்டின் முகாமைத் தலைவ ராக நியமிக்கப்பட்டார் . நாட்டின் முகாமைத் தலைவர் மாட்சிமை தாங்கிய மாமன்னர் நாட்டின் முகாமைத் தலைவர் நாட்டின் முகாமைத் தலைவர் என்ற முறையில் மாமன்னர் சட்டத்துறை, நிர்வாக த்துறை, நீதித்துறை ஆகிய அரசு அமைப்புகளுக்குத் தலைமை ஏற்பார் . சட்டத்துறை நிர்வாகத்துறை நீதித்துறை மாமன்னர் தலை மை ஏற்கும் மூன்று அரசுத் துறைகளைக் குறிப்பிடுக. விரைந்து பதிலளி விரைந்து பதிலளி சட்டத்துறை: நாட்டின் சட்டதிட்டங்கள ை உருவாக்கும் துறை. நிர்வாகத்துறை: ஏற்றுக் கொள்ளப ்பட்ட கொள்கை களை அமல்படுத்தும் துறை. நீதித்துறை: நாட்டின் சமநீதியை நிர்வகிக்கும் துறை. ச�ொற்களஞ்சியம்


Saiz sebenar 93 8.1.1, K8.1.6 1 2 3 4 5 மாட்சிமை தாங்கிய மாமன்னரின் நியமனம் ஒன்பது மலாய் அரசர்கள் மத்தியில் நுட்பமான சுழல்முறையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. மாட்சிமை தாங்கிய மாமன்னரின் தேர் வு கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின்படி செய்யப்படுகிறது. மாட்சிமை தாங்கிய மாமன்னரின் அரசர் அமைப்பு நம் நாட்டின் ஒருமைப்பா ட்டிற்கு அரணாகத் திகழ்கிறது. குடிமக்களாகிய நாம் இந்த அமைப்பு முறையைப் போற்றுவதோடு மதிக்கவும் வேண்டும். ஒன்பது அரசர்களின் கமுக்கமான வாக்கெடுப்பின்வழி அரசவை மன்றம் மாமன்னரின் நியமனத்தை முடிவு செய் யும். மாமன்னர் நியமன நிரல்முறை வரைப டம் (மூலம்: Pejabat Penyimpan Mohor Besar Raja-raja) அரசவை மன்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாட்சிமை தாங்கிய மாமன்னர் அல்லது சுல்தான் பெயரைப் பிரகடனப்படுத்தும். அரசியலமைப்புச் சட்டம் 3ஆம் அட்டவண ைப்படி மாட்சிமை தாங்கிய மாமன்னரின் உறுதிக் கடிதம் மக்களவை க்கும் மேலவைக்கும் அனுப்பப்படும். பிரதமர் மாட்சிமை தாங்கிய மாமன்னரின் நியமனத்தை நாளிதழில் ஊடகச் செய் தியாக வெளியிடுவார். அரசவை மன்ற சட்டத்தில் மாட்சிமை தாங்கிய மாமன்னர் பதவி உறுதிமொழி எடுத்துக் கையெ ழுத்திடுவார். யோசி - இணை - பகிர் மாமன்னர் நம் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அரணாகத் திகழ்கிறார். 1. இந்த நடவடிக்கையை இருவராகச் சேர்ந் து செய்யவும். 2. பத்து நிமிடங்கள் கொடுக்கப்படும். 3. மாட்சிமை தாங்கிய மாமன்னரைப் போ ற்றுவதன் முக்கியத்துவத்தை க் குறிப்பிடுக. 4. கிடைக்கப்பெற்ற குறிப்புகளைப் படைத்திடுக. 21ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன் ம் நூற்றாண்டுக் கற்றல் திறன் நிரல்முறை வரைப ட விவரத்தைக் கொண்டு மாமன்னர் தேர்ந்தெடுக்கப்படும் முறையை முழுமைப்படுத்துக. நிரல் வரைபடம் நநடவடிகக்்கைகை • நாட்டின் உயரிய தலைவ ரான மாட்சிமை தாங்கிய மாமன்னரின் அதிகார வரம்பை அறிந்து கொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல். • ஒற்றுமையின் அரணாக விளங்கும் மாமன்னரைப் போ ற்றுவதன் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.


Click to View FlipBook Version