The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.
Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by ganesh_0074, 2021-04-06 06:14:18

BUKU TEKS - TINGKATAN 5

T. GANESH

ð£ì‹ 20 கவின்மிகு மலேசியா
1 சுற்றுலாத் தலங்கள்

வரைபடத்தை வாசித்திடுக.

 கேமரன் மலை  தாமான் நெகாரா

 செஞும் மலை  சிராத்திங் ஓய்விடம்

 ரிம்பா பார்க்

 நீர்வீழ்ச்சி

 பிரெசர் மலை  குவாந்தான்
 கெந்திங்
மலை  சுல்தான் அமாட் சா
விமான நிலையம்
 சின்னி ஏரி
 பெரா ஏரி

 பெக்கான் அருங்காட்சியகம்

 குவாலா கண்டா  திய�ோமான் தீவு
யானைகள்
சரணாலயம்

 ர�ொம்பின் தேசியப் பூங்கா

பகாங் மாநில அமைவிடங்கள்

1

வரைபடத்தை உற்றாய்ந்து அதிலுள்ள தகவல்களைக் குழுவில் கலந்துரையாடுக.

1.5.5 வரைபடத்திலுள்ள தகவல்களைய�ொட்டிக் கருத்துரைப்பர்; முடிவு கூறுவர்.

191

2

தகவல்களைய�ொட்டிக் கருத்துரைத்து முடிவு கூறுக.

3

கீழ்க்காணும் வரைபடத்தை உற்றாய்ந்து அதிலுள்ள தகவல்களின் அடிப்படையில் கருத்துரைத்திடுக;
முடிவு கூறுக.

 ஹெந்தியான் தீவு  ரெடாங் தீவு
 லதா தெம்பாக்கா
த�ொகுதி 20 அருவி

 சுல்தான் மாமூட்  காபாஸ் தீவு
விமான நிலையம்

 கெஞ்ஞீர் அணை  கெலுலுட் கடற்கரை

 ரந்தாவ் அபாங் (கடலாமை)

 செகாயு அருவி

 தேசியப் பூங்கா

 சுங்கை செரலாக் அருவி  தெங்கோல் தீவு

 தஞ்சோங் ஜாரா

 கெர்தே விமான நிலையம்

திரங்கானு மாநில அமைவிடங்கள்
192

õ÷Šð´ˆ¶î™

பின்வரும் உரையாடலில் நீர் வேந்தன் இடத்தில் இருந்தால் என்ன முடிவெடுப்பீரெனக் கூறுக.

அப்பா: வேந்தா! இங்கே வா.
வேந்தன்: இத�ோ வந்தேன் அப்பா.
அப்பா: அத�ோ அந்த மேசை மீது இரண்டு வரைபடங்கள் உள்ளன. நீயும் உன் தம்பிகளும்

கலந்துரையாடி விடுமுறைக்கு குடும்பத்தோடு எங்கே சுற்றுலா மேற்கொள்ளலாமென
முடிவு எடுங்கள்.

 பாசீர் பஜ்ஜாங் கடற்கரை தஞ்சோங் பத்து தபீர் த�ொகுதி 20
 சகுரரணங்காுல யம் தெலுக் டாலாம் பாசீர் பங்லீமா அபு

தெலுக் கெர்மா

 ஆயர் பாத்தாங் பாசிர் மாஸ் பத்து நீசான்
விமான நிலையம் பாசீர் பஜ்ஜாங்
 ரெங்கீஸ் தீவு
 ஜுவாரா கிராமம்
 காஜாங் மலை

கம்பிங் குகை

 புக்கிட் சிராவ்

 நிப்பா கிராமம் பெர்ஹெந்தியான்

 மூகுட் கிராமம் கெச்சில் தீவு பத்து பெட்டி
 மூகுட் அருவி

பாசீர் கெராஞ்சி

திய�ோமான் தீவு அமைவிடங்கள் பெர்ஹெந்தியான் கெச்சில் தீவு அமைவிடங்கள்

°¬øc‚è™

திய�ோமான் தீவு குறித்துக் கருத்துரைத்திடுக. மேற்கண்ட வரைபடத்தைத் துணையாகக் க�ொள்க.

193

த�ொகுதி 20 ð£ì‹ 2 திரங்கானுவில் லண்டன்

ம�ௌனமாக வாசித்துக் கருத்தறிக.

பாலத்தைப் பார்த்திருக்கிறீர்களா? உங்களில்
எத்தனை பேர் பாலத்தில் பயணம் செய்திருக்கிறீர்கள்?
பாலம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது
பினாங்குப் பாலமாகத்தான் இருக்கும். இல்லையேல்,
சிறுவயதில் நீங்கள் பாடிய குழந்தைப் பாடலிலுள்ள
லண்டன் நகரிலுள்ள பாலம் நினைவுக்கு வரலாம்.
லண்டன் பாலம் என்றவுடன் நம் நினைவுக்கு வரும்
மற்றொன்று அப்பாலம் திறந்து மூடும் காட்சியே
ஆகும். அந்தப் பாலத்தின் அழகை உங்களில்
எத்தனை பேர் கண்டு மகிழ்ந்திருக்கிறீர்கள்?

அ த்தகை ய ஒ ரு ப ா ல த் தி ன்
அழகைத்தான் நாம் காணப் ப�ோகிற�ோம்.
அது த�ொங்கு பாலம் என்று பெயர்
க�ொண்டது. பகலில் பார்ப்பதைக்
காட்டிலும் இரவில் அப்பாலத்தின் அழகே
தனிதான். கப்பல்கள் கடந்து செல்ல
இப்பாலம் வகை செய்கிறதென்பது
குறிப்பிடத்தக்கதாகும். கப்பல் கடந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட தென்கிழக்காசியாவின்
முதல் பாலமாக, கம்பீரமாக வீற்றிருக்கிறது. கப்பல்கள் கடந்து செல்லும் காட்சி மிக இரசிக்கத்தக்கதாக
அமைந்துள்ளது. திறப்பதற்கு இரண்டு நிமிடம், மூடுவதற்கு இரண்டு நிமிடமே எடுத்துக் க�ொண்ட
ப�ோதும், சாலைப் ப�ோக்குவரத்தைச் சரிசெய்யக் குறைந்தது இருபது நிமிடங்கள் ஆகிறது.

இப்பாலத்தின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பதாக அமைவது பதினாறு மாடிகள் க�ொண்ட நான்கு
கட்டடங்களும் இரண்டு வான்பாலங்களுமே (skybridge) ஆகும். இவற்றின் அழகிய வேலைப்பாடுகள்
நிச்சயம் காண்பவரின் மனத்தைக் க�ொள்ளை க�ொள்வனவாகும். மேலும், இவற்றின் வண்ண
வேலைப்பாடுகள் ஒருவகை மயக்கத்தைக் க�ொடுக்க வல்லன.

வடக்கிலுள்ள வான்பாலத்தின் பதினான்காம் தளத்தில் 200 பேர்களுக்கான உயர்தர உணவகம்
ஒன்று உள்ளது. தெற்கு வான்பாலத்தில் கலை காட்சிக் கூடமும் (galeri) 200 பேர்களை உள்ளடக்கும்
ந�ோக்குத் தளமும் (anjung tinjau) உள்ளன. இந்நோக்குத் தளம்வழி சுற்றுப்பயணிகள் இப்பாலம்
அமைந்துள்ள மாநகரின் அழகைக் கண்டு மகிழலாம். அஃதே இரவு வேளையென்றால் க�ொள்ளை
அழகு நம் உள்ளத்தைக் க�ொள்ளை க�ொள்ளும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

2.2.8 வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியத் தகவல்களைப் பகுத்தாய்ந்து ஒரு முடிவுக்கு வருவர்.

119944

பாலத்தின் இருமருங்கிலும் பாதசாரிகளுக்கு த�ொகுதி 20
நடைபாதை அமைத்துத் தரப்பட்டிருக்கிறது.
நீங்கள் இப்பாதையில் நடந்தபடியே பாலத்தின்
அழகையும் கடற்கரையின் அழகையும் ஒருங்கே
நுகரலாம். நீங்கள் முழுப்பாலத்தின் அழகையும்
நுகர உங்களுக்காகப் பாலத்தின் கீழ்ப்பகுதியில்
இருமருங்கிலும் தலா ஐம்பது வாகனங்கள்
நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இத்துணைச் சிறப்புகள் அமைந்த பாலத்தைக்
காண உங்கள் உள்ளம் பேருவகை க�ொள்கிறதா? இப்பாலத்தைக் காண, அதன் அழகை, நுண்ணிய
வேலைப்பாடுகளைக் காண நீங்கள் பெரும் ப�ொருள் செலவு செய்யத் தேவையில்லை. ஏன்? ஆம்,
மாணவர்களே. அந்தப் பாலம் குவாலாத் திரங்கானுவில்தான் அமைந்துள்ளது. ஜம்பாத்தான் அங்காட்
திரங்கானு (Jambatan Angkat Terengganu) என்பதுதான் அந்தப் பாலத்தின் பெயர். மேலை நாடுகளில்
மட்டுமே அற்புதமான சுற்றுலாத் தலங்கள் இருப்பதாக எண்ணம் க�ொண்டு ஏங்குபவர் பலர் உள்ளனர்.
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பது எத்துணை உண்மை. ஜம்பத்தான் அங்காட் திரங்கானு
ப�ோல பல மனங்கவர் சுற்றுலாத் தலங்கள் நம் நாட்டிலேயே உள்ளன. இச்சுற்றுலாத் தலங்களுக்கு
அடுத்த விடுமுறையில் குடும்பத்தோடு சென்று வரலாமே!

1 2

பனுவலிலுள்ள முக்கியத் தகவல்களைக் முக்கியத் தகவல்களைப் பகுத்தாய்ந்து
குறிப்பெடுத்துக் க�ொள்க. கலந்துரையாடுக.

3

பகுத்தாய்ந்த கருத்துகளைய�ொட்டி முடிவைக் கூறுக; எழுதுக.

õ÷Šð´ˆ¶î™

பனுவலின் முக்கியத் தகவல்களைப் பகுத்தாய்ந்து முடிவு கூறுக; எழுதுக.

சரவாக் செல்வோம்

ஆசியாவின் இரகசியம் என்று கருதப்படும் சரவாக் மாநிலம் இன்று தன் இரகசிய விளிம்புகளிலிருந்து
விடுபட்டு உலகப் பார்வையைத் தன்வசம் கவர்ந்து வருகின்றது. கலை, பண்பாடு, இசை, மர்மம்,
வரலாறு என்று இம்மாநிலத்தின் சிறப்பு நீண்டுக�ொண்டே ப�ோவது நமக்கொன்றும் வியப்பில்லைதான்.
அதிலும், மலேசியாவின் மிகப் பெரிய மாநிலமாகத் திகழும் சரவாக் ப�ோர்னிய�ோ தீவில் அமைந்துள்ளது.

195

த�ொகுதி 20 சரவாக் பரப்பளவில் தீபகற்ப மலேசியாவை ஒத்திருந்தாலும் அதன் நிலத்தின் பெரும்பான்மை
அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. மாந்த இனத்தின் பெட்டகமான மழைக்காடுகளைச் சூழல்
மண்டலமாகக் க�ொண்டுள்ள இம்மாநில மக்களின் நீண்ட வீடுகள் உலகப் புகழ் பெற்றனவாகும்.
மிகவும் த�ொன்மை வாய்ந்த இம்மழைக்காடுகள் கிட்டதட்ட 27 வகை பூர்வக்குடியினரின் வாழ்விடமாக
உள்ளன. இஃது அதன் மற்றொரு சிறப்பாகும். அவர்களில் ஈபான், காயான், மூருட், கெஞ்சா, கெனாவிட்,
கெடாயான், மெலானாவ், கெலாபிட், டாயாக், பெனான் ப�ோன்றோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.

பல்வேறு இனங்களைச் சரவாக் க�ொண்டிருப்பதால் கலை கலாசாரமும் பல்வகையில்
அமைந்துள்ளன. ஙஜாட் அலு, ஙஜாட் அர�ோ, டத்தூன் ஜூலுட் வகை நடனங்கள் இம்மாநிலத்தில்
மிகவும் புகழ்பெற்றனவாகும். வேளாண்மை இம்மாநில மக்களின் முக்கியத் த�ொழில் என்பதால்
சரவாக்கியர்கள் காவாய் பெருநாளை அறுவடைத் திருநாளாகக் க�ொண்டாடி மகிழ்கின்றனர்.
சரவாக்கியர்கள் கைவினைத் த�ொழில்களிலும் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வகை களிமண்ணால்
அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்படும் சரவாக் ஜாடிகள் (Sarawak Vase) இங்கு வரும்
உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளிடையே பெரும் வரவேற்பு பெற்றவை. மேலும், புவா (Pua)
கைத்தறித் துணிகள் சரவாக் மக்களின் மற்றொரு சிறப்பாகும். இந்தப் புவா வகைத் துணிகளுக்குப்
பயன்படுத்தப்படும் பல்வகை வண்ணங்கள் வேர், இலைகள், மரத்தோல் ப�ோன்ற இயற்கைப்
ப�ொருள்களை மூலமாகக் க�ொண்டுள்ளன. இவ்வகைத் துணிகளைத் திருவிழாக் காலத்தின் ப�ோதும்
திருமணத்தின் ப�ோதும் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

மூலம்: இணையத்திலிருந்து எடுத்தாளப்பட்டது

°¬øc‚è™

வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியத் தகவல்களைப் பகுத்தாய்ந்து முடிவு கூறுக.

தேசியப் பூங்கா

மழைக்காடுகளைச் சூழல் மண்டலமாகக் க�ொண்ட மலேசியாவில் அதிகமான தேசியப் பூங்காக்களைக்
க�ொண்ட மாநிலமாகச் சரவாக் திகழ்கின்றது. அவற்றுள் மூலு மலைத் தேசியப் பூங்கா, பக்கோ தேசியப்
பூங்கா, நியாத் தேசியப் பூங்கா, காடிங் மலைத் தேசியப் பூங்கா ஆகியவை மிகப் புகழ்பெற்றவை.
ஆண்டுத�ோறும் அதிகமான உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளைக் கவர்ந்திழுக்கும்
இடங்களாக இவை விளங்குகின்றன. இந்தப் பூங்காக்கள் ஐந்நூற்றுக்கும் அதிகமான உயிரினங்களுக்கு
வாழ்விடங்களாகத் திகழ்வதாக அறியப்பட்டுள்ளது. அவற்றுள் கிப்போன், ஓராங் ஊத்தான், மான்
ப�ோன்ற விலங்குகளையும் இம்மாநிலச் சின்னமான ஹ�ொர்ன்பில் பறவைகளையும் இங்கு
அதிகம் காணலாம். ராஜா புரூக் வகை வண்ணத்துப்பூச்சிகளும் உலகிலேயே மிகப் பெரிய மலரான
ரஃப்லேசியாவும் இங்கு உள்ளன.

மூலம்: இணையத்திலிருந்து எடுத்தாளப்பட்டது

196

ð£ì‹ 3 சுற்றிப் பார்ப்போம்!

வாசித்தறிக.

ஒரு நாட்டின் வளப்பம் என்பது அந்நாட்டின் ப�ொருளியல் வளத்தைக் க�ொண்டு அடையாளம் காணலாம்.
ப�ொருளியல் வளம் க�ொண்ட நாடுகள் பெரும்பாலும் நிலைத்தன்மை பெற்றிலங்குவதும் இயல்பே.
அவ்வகையில் நாட்டின் ப�ொருளியல் வளத்திற்கு ஆண்டுத�ோறும் அள்ளி வழங்கும் ஒரு துறையாகத்
திகழ்வது சுற்றுலாத்துறை என்றால் அது மிகையன்று. நம் நாட்டிலும் சுற்றுலாத்துறை, ப�ொருளியல்
வளத்தைப் பெருக்குவதில் பல்வேறு வகையில் பங்களிப்பு செய்தாலும், சுற்றுலாத்துறையால் சில
சிக்கல்களையும் நாடு எதிர்நோக்கி வருவதை யாரும் மறுத்துவிட முடியாது. எனவே, சுற்றுலா வளர்ச்சியில்
நன்மையும் தீமையும் கலந்திருப்பதை மறுப்பதற்கில்லை.

நன்மை

சுற்றுலாத்துறை நாட்டின் ப�ொருளியல் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக விளங்கி
வருகின்றது. ஒவ்வோர் ஆண்டும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை உயர்வதுடன்

அவர்கள் நம் நாட்டில் செய்கின்ற செலவுகள் த�ொடர்ந்து அதிகரித்து வருவதாகச்
சுற்றுலாத்துறை அறிக்கை காட்டுகிறது. மேலும், இவ்வாண்டுத்
த�ொடக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்வழி இந்நாட்டிற்குச்

சுற்றுலா மேற்கொண்ட சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 25.8
க�ோடியாகவும், அவர்களால் நாடு பெற்ற வருமானம் ரி.ம. 84.1 பில்லியன்
எனவும் அறிய முடிகின்றது. நாட்டின் ப�ொருளியல் பலத்திற்குச் சுற்றுலாத்துறை
த�ொடர்ந்து பங்காற்றி வருவதை இதன்வழி அறியலாம்.

தீமை

சுற்றுலாத்துறை நாட்டின் வளர்ச்சிக்கு நன்மையளிக்கும் அதே
வேளையில், சில தீமைகளையும் விளைவிக்கின்றன. வெளிநாடுகளிலிருந்து
நம் நாட்டிற்கு வருகை புரியும் சுற்றுப்பயணிகள் தங்கள் பண்பாட்டையும்
உடன்கொண்டு வருகின்றனர். மேற்கத்திய பண்பாடுகள் சில கிழக்கத்திய
பண்பாட்டுக்கு முரணானவை என்பதை நாமறிவ�ோம். ப�ொது இடங்களில்
கட்டியணைத்தல், அரைகுறை ஆடை அணிதல் ப�ோன்ற செயல்கள் பார்ப்போர்
மனத்தைப் பாதிக்க வல்லவை. இவர்களின் திறந்தவெளிப் பண்பாடு நம் நாட்டு மக்களை
முகஞ்சுழிக்கச் செய்வத�ோடு இளைய�ோர்களை வழிதவறவும் வழிக�ோலச் செய்கிறது.

3.4.31 250 ச�ொற்களில் விவாதக் கட்டுரை எழுதுவர்.

197

த�ொகுதி 20 1

‘நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சியால் ஏற்படும் விளைவுகள்’ எனும் தலைப்பில் விவாதத்திற்குரிய
இரண்டு கருத்துகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றைக் குறித்து நண்பர்கள�ோடு கலந்துரையாடி
விவாதம் செய்க.

2

‘நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சியால் ஏற்படும் விளைவுகள்’ எனும் தலைப்பிற்கான கருத்துகள்
வழங்கப்பட்டுள்ளன. அவற்றை விரிவுபடுத்தி, பத்தியமைப்பில் கருத்துகளை விவாதித்து எழுதுக.

நன்மைகள்
வேலை வாய்ப்புகள் பெருகும்.
நாட்டிற்குப் பேரும் புகழும் கிட்டும் / ப�ொருள் வளம் பெருகும்.
தீமைகள்
உள்நாட்டினரின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு.
சுற்றுப்பயணிகள் எனும் ப�ோர்வையில் விரும்பத்தகாதவர்கள் நுழைதல்.

3

திரட்டிய கருத்துகளைப் பயன்படுத்தி 250 ச�ொற்களில் நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சியால்
ஏற்படும் விளைவுகள்’ எனும் தலைப்பில் விவாதக் கட்டுரை ஒன்றனை எழுதுக.

õ÷Šð´ˆ¶î™

‘வெளிநாட்டுக்குச் சுற்றுலா மேற்கொள்வதால் ஏற்படும் விளைவுகள்’ எனும் தலைப்பில் 250
ச�ொற்களில் விவாதக் கட்டுரை ஒன்றனை எழுதுக.

°¬øc‚è™

‘சுற்றுலா செல்வதால் ஏற்படும் விளைவுகள்’ எனும் தலைப்பில் விவாதக் கட்டுரைக்கான
கருத்துகளை எழுதுக.

198

ð£ì‹ 4 செய்யுளும் ம�ொழியணியும்

த�ொல்காப்பியம்

ஓரறிவு இரண்டறிவு

உயிர்களின் பகுப்பும் சிறப்பும் மரபும் த�ொகுதி 20

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதன�ொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.

- த�ொல்காப்பியர்

ஆறறிவு மூன்றறிவு

ஐந்தறிவு நான்கறிவு

ஓரறிவு பெற்ற உயிர் என்பது உடம்பினால் அறியும் இயல்பு உடையது. இரண்டறிவு பெற்ற உயிர்
என்பது, உடம்பினாலும் வாயினாலும் அறியும் இயல்பு உடையது. மூன்றறிவு பெற்ற உயிர் என்பது,
உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் அறியும் இயல்பு உடையது. நான்கறிவு பெற்ற உயிர்,
உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் கண்ணாலும் அறியும் இயல்பு உடையது. ஐந்தறிவு
பெற்ற உயிர் என்பது உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் கண்ணாலும் செவியாலும் அறியும்
இயல்பு உடையது. ஆறறிவு பெற்ற உயிர் என்பது உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும்
கண்ணாலும் செவியினாலும் மனத்தினாலும் அறியும் இயல்பு உடையது என மரபுகளை நேர்மை
பெற உணர்ந்தவர்கள் நெறிப்படுத்தியுள்ளனர்.

4.3.5 ஐந்தாம் படிவத்திற்கான பல்வகைச் செய்யுளையும் அதன் ப�ொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.

199

1

பின்வரும் பகுதியை வாசித்து, அதன் அடிப்படையில் த�ொல்காப்பியரின் உயிர்களின் பகுப்பு,
அறிவுநிலை குறித்து நண்பர்கள�ோடு கலந்துரையாடிக் குறித்துக் க�ொள்க.

உயிரிவகைப்பாடு

தனது வாழ்வியற் சூழலில் தன்னைச் சூழ்ந்துள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்துப்

ப�ொருள்களைப் பற்றியும் தான் ப�ொதுவான அறிவுடையவனாக விளங்குவதே சூழலியல்

அறிவின் முதற்படியாகும். தனது சூழலில் என்னென்ன இருக்கின்றன? என்ற வினாவிற்கான

விடையை ஒரு குறிப்பிட்ட சூழலில் இயங்கும் அனைத்து உயிரினங்களும் அறிந்திருத்தல்

வேண்டும். இதில் விலங்குகளை ந�ோக்கும் ப�ொழுது, தமது சூழலில் இயங்கும் ப�ொருள்களில்

இவற்றை உண்ணவேண்டும், இவ்வுயிரினத்தை இம்முறையில் தாக்கி அழிக்கவேண்டும் என்னும்

நிலையில் துல்லியமான அறிவுடையனவாக விளங்குவதை அவற்றின் செயல்பாடுகள் நமக்கு

உணர்த்துகின்றன. மனிதனைப் ப�ொருத்தமட்டில் அவ்வகையில் தெளிவான அறிவுடையவனாக

த�ொகுதி 20 விளங்குகின்றானா? என்பது கேள்வியாகவே உள்ளது. பண்டைத் தமிழினம் தான் இயங்கிவரும்

சூழல் பற்றிய செறிவான அறிவைப் பெற்றிருந்தது என்பது த�ொல்காப்பியரின் கூற்றின்வழி

அறியலாம். மூலம் : நூல் திரு. வெள்ளையங்கிரி - எடுத்தாளப்பட்டது

2 õ÷Šð´ˆ¶î™

செய்யுளின்வழி நீங்கள் உணர்ந்த தமிழரின் அறிவுநுட்பத்தையும் உயிர்வகை பகுப்பையும்
கருத்துகளை விளக்கிக் கூறுக. த�ொல்காப்பியரின் செய்யுளின் துணைக�ொண்டு
ஆராய்ந்து விளக்குக.

°¬øc‚è™

அட்டவணையை நிறைவு செய்க.
த�ொல்காப்பியரின் அறிவு ந�ோட்டம்

அறிவுநிலை அறியும் ஆற்றல் எடுத்துக்காட்டு
த�ொடுதல் உணர்வு புல், மரம்
ஓரறிவு
ஈரறிவு
மூவறிவு
நான்கறிவு
ஐந்தறிவு
ஆறறிவு

200

ð£ì‹ 21 ப�ொருளாதாரம்
1 ப�ொருளியல் சிக்கல்

படத்தை உற்றுந�ோக்குக. இணையராகக் கலந்துரையாடிச் சிக்கலைக் கண்டறிந்து கூறுக.

வீட்டுக்கடன் நிலுவைக்கு மூன்று மாத மகிழுந்து வங்கிக்
வங்கி எச்சரிக்கை கடிதம் கட்டணம் செலுத்தவில்லை.
அனுப்பிவிட்டது.
பிள்ளையின் கல்விக்கடன்
கடன் அட்டை நிர்ணயத் ஆடம்பர வாழ்க்கை வங்கியில் செலுத்தப்படவில்லை.
த�ொகையைத் தாண்டிவிட்டது.
வங்கியில் சேமிப்பு இல்லை.
1

இச்சிக்கலுக்கான காரண காரியங்களை ஆராய்ந்து பட்டியலிடுக.

2

மேற்கண்ட சிக்கலுக்கான காரண காரியங்களை விவரித்துக் கூறுக.

3

உலகநாடுகள் ப�ொருளாதாரச் சிக்கலை எதிர்கொள்ளும்போது உலகவங்கி ப�ோன்ற நிதி
நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவது வாடிக்கையாகும். எனினும், இத்தகைய கடனுதவியைப்
பெறுவதில் சில நாடுகள் தயக்கம் காட்டுகின்றன. இந்தத் தயக்கத்திற்கான காரண காரியங்களை
ஆராய்ந்து விவரித்துக் கூறுக. க�ொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைத் துணையாகக் க�ொள்க.

நிதி நிறுவனங்கள் விதிக்கின்ற அத்தனை க�ொள்கைகளையும் பின்பற்ற வேண்டும்.
நிதி நிறுவனங்களின் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும்.
மறைமுகமான வெளிநாட்டு ஆதிக்கம் உருவாகிவிடும்.
நிதி நிறுவனங்கள் அறிவுரைக்கு ஏற்பவே ப�ொருளாதாரத் திட்டங்களை மேற்கொள்ள இயலும்.
நாட்டின் வளம் நிதி நிறுவனங்களால் சுரண்டப்படும்.
நாட்டின் நிருவாகப் ப�ொறுப்பு மறைமுகமாகக் கைமாறிவிடும்.
கடன் சுமை மேலும் பெருகும்.

1.4.7 சிக்கலுக்கான காரண காரியங்களை விவரித்துக் கூறுவர்.

201

õ÷Šð´ˆ¶î™

கீழ்க்காணும் சிக்கலுக்கான காரண காரியங்களை ஆராய்ந்து விவரித்துக் கூறுக.

உலகத்தின் ப�ொருளாதார நிலை ஒவ்வொரு
காலநிலையிலும் மாற்றம் கண்டு வருகிறது.
இதனால், ப�ொருளாதார ஏற்றத் தாழ்வுகளை
எல்லா உலக நாடுகளும் எதிர்நோக்கி வருகின்றன.
இந்தப் ப�ொருளாதார மாற்றங்களில் உலக நாடுகள்
சந்திக்கும் மிக முக்கியமான சிக்கலாக உருவெடுப்பது
ப�ொருளாதார மந்தநிலை. இந்தச் சிக்கல் குறித்த,
காரண காரியங்களைக் கலந்தாய்ந்து விவரித்திடுக.
இச்சிக்கலைத் தீர்ப்பதில் வங்கிகள் ஆற்றும்
பங்கினை விவரித்து விளக்குக.

கலந்துரையாடலுக்குத் துணையாகக் கீழ்க்காணும்
இணையத்தளங்களை மேலாய்வு செய்க:

https://ta.wikipedia.org/s/qs0

https://ta.wikipedia.org/wiki/மந்தநிலை

த�ொகுதி 21 °¬øc‚è™

க�ொடுக்கப்பட்டுள்ள உரையாடலை வாசித்து, சிக்கலின் காரண காரியங்களை விவரித்துக் கூறுக.

என்னங்க அடடா! எப்படி இவ்வளவு
உங்களுக்குச் செய்தி கவனக் குறைவாக
தெரியுங்களா? இருந்து விட்டார்கள்.
நம்ம பக்கத்து எவ்வளவ�ோ எளிதான
வீடு ஏலத்துக்குப் வழிமுறைகள்
ப�ோய்விட்டதாம். இருக்கின்றன.
வங்கி அதிகாரிகள் எளிதாகச் சிக்கலைக்
நேற்று அறிவிப்பு கையாண்டிருக்கலாமே..,
அறிக்கையை நாளை திரு.வாணனைப்
ஒட்டிவிட்டுப் பார்த்துப் பேசி நல்ல
ப�ோய்விட்டார்கள். வழிமுறை ச�ொல்கிறேன்.

202

ð£ì‹ 2 மலேசிய வங்கிகளும் செயல்பாடுகளும் த�ொகுதி 21

பனுவலை ம�ௌனமாக வாசித்திடுக.

மலேசிய மத்திய வங்கி (பேங்க் நெகாரா மலேசியா)

ஒரு நாட்டின் வளமையையும் வளப்பத்தையும் நிலைபெறச் செய்வதில் அந்நாட்டின் ப�ொருளாதார நிருவாகம்
முதன்மைப் பங்கு வகிக்கிறது. முறையான நிதி நிருவாகம் மற்றும் திட்டமிட்ட ப�ொருளாதார நடவடிக்கைகள்
நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்வத�ோடு த�ொடர்ச்சியான ப�ொருளாதார முன்னேற்றத்தையும் உறுதி
செய்கின்றன. இத்தகைய முகாமை வாய்ந்த பணியை ஒவ்வொரு நாட்டிலும் செயல்படும் மத்திய
வங்கிகள் தம் இன்றியமையாப் பணியாய் முன்னிலைப்படுத்திச் செயல்படுகின்றன.

மலேசியாவின் மத்திய வங்கி (பேங்க் நெகாரா மலேசியா) கடந்த 24 ஜனவரி 1959இல் நிறுவப்பட்டது.
நாட்டின் நிதி நிருவாகத்தின் மையமாகச் செயல்படும் மலேசிய மத்திய வங்கி, ஐந்து இலக்குகளைத்
தன் செயல்பாடுகளில் முதன்மைப்படுத்திச் செயல்படுகிறது. நாட்டின் பயன்பாட்டிற்கான நாணயத்தை
(ரிங்கிட் மலேசியா) வெளியிடுதல்; நாணய மதிப்பின் நிலைத்தன்மையைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்;
அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வங்கியாகச் செயல்படுதல்; நாட்டில் செயல்படும் மற்ற வணிக வங்கிகளின்
நிருவாக மையமாக விளங்குதல் மற்றும் நாட்டின் ப�ொருளாதார நிலைத்தன்மையைக் கட்டுப்படுத்துதல்
ஆகியவை மலேசிய மத்திய வங்கியின் செயற்பாடுகளாக அமைந்திருக்கின்றன.

நாட்டின் பயன்பாட்டில் உள்ள ஒரு நாணயத்தின் மதிப்பை, உறுதி செய்யும் முறைமையில் இருநிலைகள்
உள்ளன. முதலாவது, நம்மிடம் இருக்கும் நாணயத்தைக் க�ொண்டு, சந்தையில் விற்கப்படும் ப�ொருளையும்
சேவைகளையும் பெறுகின்ற ஆற்றல்; மற்றொன்று வெளிநாட்டு வணிகத்தில் நம் நாணயத்திற்கு இருக்கும்

2.3.15 வங்கியியல் த�ொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

203

த�ொகுதி 21 அந்நிய செலாவணி மதிப்பைக் காத்தல் ஆகியவையாகும். அந்த வகையில், ரிங்கிட் மலேசியாவின்
நிலைத்தன்மையை உறுதி செய்வதில் மலேசிய மத்திய வங்கி மிகுந்த கவனம் செலுத்துகிறது. குறிப்பாக,
த�ொடர்ச்சியான விலை உயர்வினால் ஏற்படும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் அனைத்துலகக்
கையிருப்பை 80.59% விழுக்காடாக நிலைநிறுத்துவதிலும் ‘பேங்க் நெகாரா’ முழுக் கவனம் செலுத்துகிறது.
மலேசிய மத்திய வங்கியின் செயல்பாடுகளில், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வங்கியாகச் செயல்படும்
பணியும் முகாமை பெறுகிறது. நாட்டின் நிருவாகத்திற்கு அச்சாணியாய் விளங்கும் கீழ்க்காணும்
பணிகளைப் ‘பேங்க் நெகாரா மலேசியா’ மேற்கொள்கின்றது :

நாட்டின் நிருவாகக் கணக்குகளைக் கையாளுதல்.
அரசாங்கத்தின் நிதித்தேவைகளுக்கு ஏற்ப முன்தொகை வழங்குதல்.
நாட்டின் கடன் சுமைகளை நிருவகித்தல்.
அனைத்துலக முதலீடுகள் த�ொடர்பான மதியுரை வழங்குதல்.
அந்நியச் செலாவணியின் செயல்பாட்டை நிருவகித்தல்.

மலேசிய மத்திய வங்கி, நாட்டில் செயல்படும் மற்ற வங்கிகளுக்கு நடுநாயகமாகவும் நிருவாக
மையமாகவும் விளங்கி வருகிறது. எல்லா வகையான வணிக வங்கிகளும் மத்திய வங்கியில்
ப�ொதுக்கணக்கை வைத்திருப்பதை மலேசிய மத்திய வங்கி கட்டாயப்படுத்துகிறது. இதன்வழி, வங்கிகளுக்கு
இடையில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் காச�ோலை பறிமாற்றங்கள்வழி ஏற்படும் கடன் நிலுவைகள்
நேர்செய்யப்படுகின்றன. மேலும், நான்கு விழுக்காடு நியமனக் கையிருப்பை எல்லா வணிக வங்கிகளும்
மத்திய வங்கியில் வைத்திருப்பதைப் ‘பேங்க் நெகாரா’ உறுதி செய்கிறது. மேலும், நடைமுறை வணிகச்
சிக்கலை எதிர்நோக்கி இருக்கும் வங்கிகளுக்குத் தேவையான இறுதிநேரக் கடனுதவியையும் ‘பேங்க்
நெகாரா’ வழங்குகிறது. இதன்வழி, வணிக வங்கிகளின் நிலைப்பாட்டிற்கும் செயல்திறனுக்கும் மத்திய
வங்கி துணை செய்கிறது. ‘பேங்க் நெகாரா’வின் இத்தகைய செயல்முறைகள் இல்லாவிட்டால் வணிக
வங்கிகளில் செயல்பாடு ஆட்டம் கண்டுவிடும்.

1

கேள்விகளுக்கு வாய்மொழியாகப் பதில் கூறுக.

1. மத்திய வங்கிகள் அமைக்கப்படுவதற்கான ந�ோக்கங்கள் யாவை?
2. பேங்க் நெகாரா மலேசியாவின் முக்கியமான செயல்பாடுகள் யாவை?
3. நாட்டின் ப�ொருளாதார வளர்ச்சிக்குப் ‘பேங்க் நெகாரா’வின் பங்கு இன்றியமையாதது.

இக்கூற்றைச் சான்றுகள�ோடு விளக்குக.

2

பனுவலில் வண்ணமிட்ட ச�ொற்களுக்குச் சூழலுக்குப் ப�ொருந்தும் வகையில் ப�ொருள் கண்டு
கூறுக; எழுதுக.

204

3 த�ொகுதி 21

கேள்விகளுக்குப் பதில் எழுதுக.

1. ஒரு நாட்டின் முன்னேற்றத்தை உறுதி செய்பவை யாவை?
2. புழக்கத்தில் உள்ள நாணயத்தின் மதிப்பு எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது?
3. மலேசிய மத்திய வங்கி நம் நாணயத்தின் மதிப்பை நிலைநிறுத்த எத்தகைய முயற்சிகளை

மேற்கொள்கிறது? விளக்கி எழுதுக.
4. மலேசிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வங்கியாகச் செயல்படும் மத்திய வங்கியின்

செயல்பாட்டுப் பணிகளுள் எதை முதன்மையாகக் கருதுகிறீர்? ஏன்? விளக்கி எழுதுக.
5. வணிக வங்கிகளின் செயல்பாட்டிற்கு, மலேசிய மத்திய வங்கி எத்தகைய உதவிகளை

வழங்குகிறது?

õ÷Šð´ˆ¶î™

கீழ்க்காணும் கூற்றினைக் குழுமுறையில் விவாதித்து 50 ச�ொற்களில் விவரித்து எழுதுக.

‘ரிங்கிட் மலேசியாவின் நிலைத்தன்மையை உறுதி செய்வதில்
மலேசிய மத்திய வங்கி மிகுந்த கவனம் செலுத்துகிறது’

°¬øc‚è™

பனுவலை ஆழ்ந்து வாசித்து, கேள்விகளுக்குப் பதில் எழுதுக.

எஸ்.எஸ்.பி.என். கல்விச் சேமிப்புத் திட்டம்

குழந்தைகளின் எதிர்காலக் கல்வி இலக்குகளை அடைய பணம் மிகப் பெரிய தேவையாக மாறி
வருகிறது. இன்று, உயர்கல்வியைத் த�ொடரும் வேளையில், பல மாணவர்களும் அவர்தம் பெற்றோரும்
பணமின்றிக் கைப்பிசைந்து நிற்கின்றனர். இந்த இக்கட்டான சூழலைத் தவிர்க்கவே ‘எஸ்.எஸ்.
பி.என்.’ எனும் கல்விச் சேமிப்புத் திட்டம் நாட்டில் த�ொடங்கப்பட்டுள்ளது. கல்விக்காகச் சேமித்து
வைக்கும் விழிப்புணர்வு பிள்ளைகளின் எதிர்காலத்தை நம்பிக்கைக்கு உரியதாக மாற்றுகிறது.
கடந்த 2004இல் இருந்து 31 ஆகஸ்ட் 2020 வரை சுமார் 46 லட்சம் எஸ்.எஸ்.பி.என். கணக்குகள்
திறக்கப்பட்டுள்ளன. இக்கணக்குகளின் வாயிலாக 676 க�ோடி வெள்ளி சேமிக்கப்பட்டுள்ளது என்பதைப்
புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதன்வழி, பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர்கள்
க�ொண்டிருக்கின்ற ப�ொறுப்புணர்வைத் தெளிவாக உணரமுடிகிறது.

1. எஸ்.எஸ்.பி.என். எனும் கல்விச் சேமிப்புத் திட்டம் த�ொடங்கப்பட்டதின் ந�ோக்கம் என்ன?
2. கல்விக்காகச் சேமிக்கும் விழிப்புணர்வு பிள்ளைகளின் எதிர்காலத்தை நம்பிக்கைக்கு

உரியதாக மாற்றுகிறது என்று கூறப்படுவது ஏன்?
3. இன்றைய பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் ப�ொறுப்புணர்வைக்

க�ொண்டிருக்கின்றனர் என்பதற்கான சான்று யாது?

205

ð£ì‹ 3 மாறிவரும் வங்கியியல்

உரையாடலை ம�ௌனமாக வாசித்து மகிழ்க.

த�ொகுதி 21 இயங்கலை ப�ொருளகச் சேவை சூழல்
யார்?
(அது பிற்பகல் நேரம். வங்கி ஒன்றில், மாறன் மட்டும் தனியே, ச�ோகமே உருவாக எங்கு?
இருக்கையில் அமர்ந்திருந்தார். காச�ோலையை வங்கிக் கணக்கில் சேர்க்க வந்த என்ன?
அவரின் நண்பர் கலை, அவரைக் கவனித்து நெருங்கி வந்து பேசுகிறார். அவர்கள் முகமன்
இருவரும் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் மின்னணுச் சேவைகள் குறித்துப் கூறுதல்
பேசுகின்றனர்) முகமன்
கூறுதல்
கலை: வணக்கம். மாறன். என்ன கப்பலே கவிழ்ந்து விட்டதைப் ப�ோல இவ்வளவு
ச�ோகமாக உட்கார்ந்து இருக்கிறீர்கள்? உரையாடல்
கூறுகள்
மாறன்: வணக்கம் கலை. வாருங்கள். வங்கியில் பணம் செலுத்த வந்தேன். என்னுடைய
முறை அறுபது எண்கள் தாண்டிப் பின்னால் இருக்கிறது. 2.30 மணிக்கு உரையாடல்
வேலைக்குப் ப�ோக வேண்டும். என்ன செய்வது என்றே தெரியவில்லை. கூறுகள்

கலை: அடடா..! பணம் செலுத்த ஏன் வங்கிக்கு வந்தீர்கள்? வீட்டில் இருந்தே
இணையத்தின்வழி செலுத்தி இருக்கலாமே.

மாறன்: (வியப்பான குரலில்) என்ன இணையத்தின் வழி செலுத்தலாமா? என்
மகனுக்கு அல்லவா பணம் அனுப்ப வேண்டும். இணையத்தின் வழி செலுத்தச்
சாத்தியமாகுமா?

கலை: எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள் மாறன்? கணினி யுகத்தில் இப்பொழுது எல்லாம்
சாத்தியம். உங்கள் மகனுக்கு மட்டுமன்று. இந்த மின்னணு வங்கிச் சேவையின்
மூலம் நம் வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்குப் பணத்தை
மாற்றுவது, மாதாந்திர கட்டணங்களைச் செலுத்துவது, மின்னியல் வணிக
நடவடிக்கைகள் மேற்கொள்வது இப்படி, எல்லாவற்றையும் வீட்டிலிருந்தே
செய்யலாம்.

மாறன்: நீங்கள் ச�ொல்வதைப் பார்த்தால் திறன்பேசி, கையடக்கத் த�ொடர்புக்
கருவிகள் வாயிலாகக்கூட, இருந்த இடத்திலிருந்தே வங்கி நடிவடிக்கைகளை
மேற்கொள்ளலாம் ப�ோல் தெரிகிறதே.

கலை: உண்மைதான். ஒரேய�ொரு வேலைதான் செய்ய வேண்டும். இந்த மின்னணு
வங்கித் தளத்தைப் பதிவிறக்கம் செய்து க�ொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள்,
தங்களுக்கு வசதியான நேரங்களில் 24 மணி நேரமும் இந்தச் சேவையைப்
பெறலாம்.

மாறன்: இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், குறிப்பிட்ட நேரத்திற்குள்
வங்கிக்கு வந்து தன் தேவைகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் என்

3.4.34 250 ச�ொற்களில் உரையாடல் எழுதுவர்.

206

ப�ோன்றவர்களுக்கு இந்த முறையானது புதிய வரவு மட்டுமன்று; புதிய வரம் உரையாடல் த�ொகுதி 21
என்றே ச�ொல்ல வேண்டும் கலை. கூறுகள்

கலை: சரியாகக் கூறினீர்கள். அதுமட்டுமல்ல மாறன், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட உணர்ச்சி
நாளில் நாம் கட்ட வேண்டிய காப்புறுதி ப�ோன்ற த�ொகைகள், வணிகம் வெளிப்பாடு
வைத்திருந்தால் த�ொழிலாளர்களுக்குக் க�ொடுக்க வேண்டிய மாதச் சம்பளம்
ப�ோன்றவற்றைக்கூட நாம் ஆணையிட்டால், வங்கி நமக்காக இந்த மின்னியல் விடை
சேவை வழி செலுத்திவிடும். பெறுதல்

மாறன்: (வருத்தம் வெளிப்படும் த�ொனியில்) அடடா…! எவ்வளவு அறியாமையில்
இருந்து காலத்தை விரயமாக்கியுள்ளேன் பாருங்கள். நேரம் கிடைக்காததால்
மின்கட்டணத்தைக்கூட இன்னும் கட்டாமல் இருக்கிறேன்.

கலை: கவலையை விடுங்கள். ப�ோனது ப�ோகட்டும். காச�ோலையைக்கூட பட்டுவாடா
இயந்திரத்தில் செலுத்தும் காலம் வந்துவிட்டது. இது அறிவியல் யுகம். உலகத்தோடு
ப�ொருந்தி வாழ்வதுதான் அறிவுடைமை என்பது வள்ளுவர் வாக்கு மாறன்.

மாறன்: (சிரிப்பு). மிகச் சரி. நான்தான் தற்குறியாய் இருந்துவிட்டேன் ப�ோலிருக்கிறது.

கலை: ஐயைய�ோ…! நான் அப்படிச் ச�ொல்லவில்லை. காலத்திற்கு ஏற்ப மாறிக்
க�ொள்ள வேண்டும் என்பதற்காக அப்படிக் கூறினேன். அதுசரி, வேலைக்கு
நேரமாகிறது என்று ச�ொன்னீர்களே, பணத்தையும் படிவத்தையும் க�ொடுங்கள்
நான் செலுத்தி விடுகிறேன்.

மாறன்: மிக்க நன்றி கலை. உற்ற நேரத்தில் இடுக்கண் களையும் தங்கள் அன்புக்கு
நன்றி.

கலை: அடடா..! சிறு உதவிதானே..! இதற்கெல்லாம் எதற்கு நன்றி?

மாறன்: சரி கலை. நான் விடை பெறுகிறேன். அடுத்த வாரம் மடிக்கணினிய�ோடு வீட்டுக்கு
வருகிறேன். மின்னணு வங்கிச் சேவையின் இயக்கத்தைச் செயல்முறைய�ோடு
விளக்குங்கள்.

கலை: நல்லது மாறன். அடுத்த வாரம் சந்திப்போம். வணக்கம்.

1

உரையாடலைப் பாகமேற்று உணர்ச்சிய�ோடு நடித்துக் காட்டுக.

2

மேற்கண்ட உரையாடல் குறித்துக் குழுமுறையில் கலந்துரையாடுக. உரையாடலில் அமைந்துள்ள
உரையாடலுக்கான அமைப்புக் கூறுகள் குறித்து ஆராய்க. உரையாடலில் கருத்துகள் பரிமாறப்படும்
வழிவகை குறித்துத் தெளிவு பெறுக. கலந்துரையாடலில் நீர் அறிந்து க�ொண்ட விளக்கங்களை
விளக்கிக் கூறுக.

207

3

நாட்டின் ப�ொருளாதார வளர்ச்சிக்குச் சிறுத�ொழில் வணிகம் முக்கியப் பங்காற்றுகிறது. இந்த
வணிகத்தின் வளர்ச்சிக்கு வங்கிகள் பெரும் பங்காற்றுகின்றன. வங்கிகள் ஆற்றும் இந்தப்
பெரும் பங்கினைப் பலரும் அறியாமல் இருக்கின்றனர். இது குறித்து உம்முடைய நண்பர்
ஒருவர�ோடு உரையாடுகின்றீர். அவ்வுரையாடலை 250 ச�ொற்களில் எழுதுக.

கீழே க�ொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி உரையாடலை எழுதுக.

ரி.ம.300 000 வரை விண்ணப்பிக்கலாம். குறைந்த வட்டி விகிதம்.
எளிமையான விண்ணப்பிக்கும் முறை; விரைந்து முடிவை அறியலாம்.
ஆறுமாத வங்கிச் சேமிப்பு அறிக்கை இருக்க வேண்டும்.
குறைவான ஆவணங்கள், உத்தரவாதம் தேவையில்லை.
தவணை முறைக் கடனைத் திருப்பிச் செலுத்த 24 மாத கால அவகாசம். குறைவான
தவணைத் த�ொகை.

உரையாடலைத் தயாரிக்கும்பொழுது கீழ்க்காணும் உரையாடல் அமைப்புக்கான
கூறுகளைக் கவனத்தில் க�ொள்க.

உரையாடல் வடிவில் இருத்தல் ஒருவர் குறைந்தது இரு முறையாவது
முகமனுடன் த�ொடங்குதல். பேசியிருத்தல்.
சூழல் எழுதியிருத்தல். (யார்?, எங்கு?, உரையாடலுக்குரிய
என்ன?)... குறியீடுகளும் உணர்ச்சிகளும்
இருவருமே கருத்துகளைப் பேசுவதாக வெளிப்படுத்தப்பட்டிருத்தல்.
இருத்தல். முடிவு - விடைபெறுதல்.

த�ொகுதி 21 õ÷Šð´ˆ¶î™

வங்கியில் கடன் பெறுவ�ோர் அதனைத் திரும்பச் செலுத்தவதில் பெரும் சிக்கலை
எதிர்நோக்குகின்றனர். இந்த நிலையை எவ்வாறு களையலாம். இதற்கான மாற்று வழிகள்
என்ன என்பது குறித்து உம்முடைய நண்பர�ோடு உரையாடுகிறீர். அந்த உரையாடலை 250
ச�ொற்களில் எழுதுக.

°¬øc‚è™

உன்னுடைய நண்பன் மேற்கல்வியைத் த�ொடர நிதியுதவி தேவைப்படுகிறது. நீ அவனுக்கு
அரசாங்க நிதியுதவிகள் பெறுவது குறித்து வழிகாட்டுகிறாய். கீழ்க்காணும் குறிப்புகளைத்
துணைக�ொண்டு அவ்வுரையாடலை எழுதுக.
• மேற்கல்வியின் அவசியம்.
• அரசாங்கக் கல்விக் கடனுதவிகளைப் (பி.டி.பி.டி.என்.) பெறும் வழிமுறைகள்.

208

ð£ì‹ 4 இலக்கணம்

த�ொகாநிலைத் த�ொடர்

த�ொகாநிலைத் த�ொடர்கள் என்றால் என்ன?

ச�ொற்றொடரில் உருபுகள�ோ ச�ொற்கள�ோ மறையாமல் வெளிப்படையாக இருந்து ப�ொருள்
தருமாயின் த�ொகாநிலைத் த�ொடர் எனப்படும்.
த�ொகாநிலைத் த�ொடர் ஒன்பது வகைப்படும். அவற்றுள் உரிச்சொற்றொடர் மற்றும்
அடுக்குத்தொடர் ஆகியவை உள்ளடங்கும்

உரிச்சொற்றொடர்: எ.கா: சாலப் பேசினாள்

ஒரு த�ொடரில் முதல் ச�ொல் உரிச்சொல்லாக இருந்து, அதனுடன் பெயர்ச்சொல்லோ,
வினைச்சொல்லோ த�ொடர்ந்து வருமாயின் அது ‘உரிச்சொற்றொடர்’ எனப்படும்.

அடுக்குத்தொடர்: எ.கா: வா! வா!
தீ! தீ!

ஒரேச�ொல் பலமுறை அடுக்கிவந்தால் அது ‘அடுக்குத்தொடர்’ எனப்படும்.

1

கீழ்க்காணும் த�ொடர்களை வாசித்து மகிழ்க. இத்தொடர்களில் அமைந்துள்ள உரிச்சொற்றொடர்களின் த�ொகுதி 21
ப�ொருளறிந்து கூறுக; எழுதுக.

சால உறு தவ நனி கூர் கழி என ஆறு ச�ொற்களும் ‘மிகுதி’, ‘பெருக்கம்’

உரிச்சொல் அறிக; மிகல் எனத் தெளிக ப�ோன்ற ப�ொருள்களைத் தரும்.

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ தாயினும் சாலப் பரிந்து - தாயைவிட மிகவும்

(மாணிக்கவாசகர்) அன்பு க�ொண்டு

ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் உறுமீன் – பெரிய மீன்
க�ொக்கு!

‘பெற்ற தாயும் பிறந்த ப�ொன்னாடும் நற்றவ நனி சிறந்தனவே - மிகச் சிறந்தவை

வானிலும் நனி சிறந்தனவே’ - (பாரதியார்)

கல்லாதான் கண்ட கழிநுட்பம் கற்றார் முன்

ச�ொல்லும் கால் ச�ோர்வு படுதலால் கழிநுட்பம் - மிக்க நுண்பொருள்

(பழம�ொழி நானூறு)

5.7.10 த�ொகாநிலைத்தொடரில் உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர் ஆகியவற்றை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

209

2

கீழ்க்காணும் வாக்கியங்களில் அமைந்துள்ள அடுக்குத்தொடரின் ப�ொருளையும் அது
பயன்படுத்தப்பட்டிருக்கும் சூழலையும் ப�ொருளையும் அறிந்து விளக்குக.

1. விடு விடு = விடு! விடு! (க�ோபம்) அவனை நான் பார்த்துக் க�ொள்கிறேன்.

2. ப�ோ ப�ோ = ப�ோ! ப�ோ! (விரைவுப்பொருள்) வெள்ளம் வந்து க�ொண்டிருக்கிறது.

3. தீ தீ = தீ! தீ! (அச்சம்) ஓடுங்கள். தீ வேகமாகப் பரவுகிறது.

4. வீழ்ந்தேன் வீழ்ந்தேன் = சதிகாரர்களின் சூழ்ச்சியால் வீழ்ந்தேன்! வீழ்ந்தேன்! (அவலம் )

5. வாருங்கள் வாருங்கள் = வாருங்கள்! வாருங்கள்! (மகிழ்ச்சி) உங்களைத்தான் எதிர்பார்த்துக்

க�ொண்டிருந்தேன்.

3

அடுக்குத்தொடர்களையும் உரிச்சொற்றொடர்களையும் வாக்கியத்தில் அமைத்துக் காட்டுக.

அடுத்து அடுத்து ஐய�ோ ஐய�ோ சால உறு
ஊர்ந்து ஊர்ந்து குலுங்கிக் குலுங்கி நனி கூர்

õ÷Šð´ˆ¶î™

அடுக்குத்தொடர்களையும் உரிச்சொற்றொடர்களையும் க�ொண்டு நிறைவு செய்க.

1. குழந்தை பாலுக்காக அம்மாவை வந்தது.

2. வாழ்க்கையின் உச்சத்தை அடைய கல்வியே வழியாகும்.

த�ொகுதி 21 3. த�ொல்பொருள் ஆய்வாளர்கள் கீழடியில் தமிழரின் த�ொன்மையைத்

த�ோண்டி எடுக்கின்றனர்.

4. நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையைக் கேட்டுக் ச் சிரித்தாள் அருள்மங்கை.

5. நீண்ட நாள்களுக்குப் பின் வீட்டுக்கு வந்த அத்தையை என்று அன்பொழுக

வரவேற்றார் அப்பா.

°¬øc‚è™

அடுக்குத்தொடர்களையும் உரிச்சொற்றொடர்களையும் தெரிவு செய்து நிறைவு செய்க.

இன்று, என் வாழ்வைச் சுற்றியிருந்த துன்ப மேகங்கள் விலகத் த�ொடங்கி விட்டன.

என் அப்பா மாரடைப்பால் திடீரென்று எங்களையெல்லாம் விட்டுச் சென்றப�ோது,

எங்களைச் சுற்றி வட்டமிட்டது. ஒருமுறை கல்விக் கட்டணத்தைக் கட்ட உதவி வேண்டி, என் தாய்மாமனை

நாடியப�ோது, என அவர் விரட்டியது, இன்னும் என்னுள் நிழலாடுகிறது.

அடேயப்பா..! எத்தகைய ? இன்று, பட்டதாரியாய் நிற்கிறேன். என் அம்மா

யுடன் என்னைக் கட்டி அணைக்கிறார்.

கடுந்துன்பம் கழிப்பேருவகை மெல்ல மெல்ல ப�ோ ப�ோ நெடும்போராட்டம்

210

22 வாழ்வும் இலக்கியமும்

ð£ì‹ 1 இலக்கியம் பேணுவ�ோம்!

விரைந்து வாசித்துக் கருத்தறிக.

இலக்கிய வளர்ச்சிக்கு ஊக்கமூட்டுவது இலக்கிய நூல்களின்
பதிப்பும் விற்பனையும் ஆகும். மலேசியாவில் இலக்கிய
நூல்கள், குறிப்பாகத் தமிழ் இலக்கிய நூல்களின் விற்பனை
அரிதாகி வருகின்றது. சில வேளைகளில் பதிப்பிக்கப்படும்
நூல்களின் விலை மிகுதியும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது.
நூல்களின் விலையைக் குறைக்க பதிப்பகத்தாருடனும்
நூலாசிரியர்களுடனும் ஒரு சிறப்புச் சந்திப்பிற்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. அந்தச் சந்திப்பைப் ப�ொறுப்பாளர்
முன்னின்று நடத்துகின்றார்.
ப�ொறுப்பாளர்: முதலில் இங்கே வருகை தந்துள்ள பதிப்பகத்தாருக்கும் நூலாசிரிய அன்பர்களுக்கும்

என் இனிய வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் க�ொள்கின்றேன். நம்
முன்னே உள்ள சிக்கல், தமிழ் நூல்கள், குறிப்பாக இலக்கியப் படைப்புகள்,

மிகவும் விலை கூடுதலாக உள்ளன என்பதாகும். ப�ொதுமக்கள், நூல்களை வாங்கி
ஆதரிக்காமைக்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகின்றது. இதனைத் தீர்க்க, இங்கே
பேச்சுவார்த்தைகளின் வழி, ஒரு நல்ல தீர்வினைக் காண முயல்வோம். தயைகூர்ந்து
உங்கள் ஒத்துழைப்பைத் தாருங்கள்.
எழுத்தாளர்: அனைவருக்கும் வணக்கம். முதலில், இம்முயற்சியைப் பாராட்டுகின்றேன். இச்சிக்கல்
இருப்பது உண்மைதான்.
பதிப்பாளர்: வணக்கம். நாங்கள் என்ன செய்வது? இன்று, பதிப்பகத்துறை சார்ந்த எல்லாப்
ப�ொருள்களின் விலைகளும் கிடு கிடுவென உயர்ந்துள்ளன. ஆகவே, பதிப்பிக்கப்பட்ட
நூல்களின் விலையும் மிகுதியாக இருக்கவே செய்யும்.
ப�ொறுப்பாளர்: நாம் இரு சாராரின் கருத்துகளையும் சீர்தூக்கிப் பார்ப்போம். இரு தரப்பினருக்கும் பாதிப்பு
வராமல், விட்டுக் க�ொடுத்து, இழப்புகள் வராமல், ஒரு தீர்வினைக் காண்போம்.
1

இச்சிக்கலைத் தீர்க்கப் பண்புடன் பேச்சுவார்த்தை நடத்துக. உங்கள் வகுப்பு மாணவர்களைப்
பதிப்பகத்தாராகவும், எழுத்தாளர்களாகவும் பாகமேற்று நடிக்கச் செய்க. சூழலையும்
பேச்சுவார்த்தையின் த�ொடக்கத்தை ஆழ்ந்தறிந்து, த�ொடர்ந்து பண்புடன் பேச்சுவார்த்தை
நடத்தித் தீர்வு காண்க.

1.3.10 சிக்கலுக்குத் தீர்வு காணப் பண்புடன் பேச்சுவார்த்தை நடத்துவர்.

211

2

உங்கள் வசிப்பிடத்தில் நூலகம் ஒன்றனை அமைப்பதில் சிக்கல் உள்ளது. எனவே, குடியிருப்போர்
இயக்கத் தலைவருடன் நீங்கள் பண்புடன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டியுள்ளது.
நீங்களும் உங்கள் நண்பரும் பாகமேற்று இப்பேச்சுவார்த்தையில் ஈடுபடுக. பின்வரும்
வழிகாட்டிகளைப் பயன்படுத்திக் க�ொள்க.

விளைவுகள் திட்டம் ந�ோக்கம்
நிதி நூலக அமைவிடம்
அமைப்பு

வசதிகள்
3

மலேசியப் படைப்பிலக்கியத் துறையில் இளைய�ோருக்கான இலக்கியம் படைப்பது குறைந்து
காணப்படுகிறது. இந்நிலையைப் ப�ோக்க, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை
நடத்துவதற்கு நீ சார்ந்த வாசகர் இயக்கம் முடிவெடுத்துள்ளது. சங்கத்தின் செயற்குழுவினர�ோடு
பண்புடன் மேற்கொள்ளப்படும் இப்பேச்சுவார்த்தையில் இளைய�ோர் இலக்கியத்தின் தேவையையும்
நன்மையையும் விளக்கி அதற்கான முயற்சிகளை எடுக்க சம்மதிக்க வைக்கிறீர்கள். அந்தப்
பேச்சுவார்த்தையை நண்பர்களுடன் இணைந்து குழு முறையில் நடத்திக் காட்டுக.

õ÷Šð´ˆ¶î™

சில புத்தகக் கடைகள் தமிழ் நூல்களை, குறிப்பாகத் தமிழ் இலக்கியப் படைப்புகளை விற்பதில்லை.
நீங்கள் உங்கள் நண்பர்கள் சிலருடன் சென்று, கடைக்காரருடன் பண்புடன் பேச்சுவார்த்தை
நடத்தித் தீர்வு காண்கின்றீர்கள். பாகமேற்று, அதனைப் பதிவு செய்து படைத்திடுக.

°¬øc‚è™

பின்வருவனவற்றைப் பயன்படுத்தி வகுப்பில் இணையராகப் பேச்சுவார்த்தை நடத்துக.
பண்போடு பேசுக.

த�ொகுதி 22 பேச்சுவார்த்தையில் இடம்பெற வேண்டியவை:

முகமன் கூறல்: வணக்கம்

சிக்கல்: இலக்கியத்தின் மீது ஈர்ப்பு இல்லை.

தீர்வுகள்: இலக்கியத்தின் அருமை; வாழ்க்கைக்கு வழிகாட்டி; நல்ல ப�ொழுதுப�ோக்கு ப�ோன்றவற்றை
முடிவுரை: எடுத்துரைத்தல். கூட்டாக நூல்கள் வாங்கி மாற்றிக் க�ொள்ளல்; அதிக செலவின்மை.
நூலகங்களைப் பயன்படுத்துதல்.
நன்றி கூறி விடைபெறுதல்.

212

ð£ì‹ 2 காப்பியப் பெருமை த�ொகுதி 22

பனுவலை ம�ௌனமாக வாசித்துக் கருத்தறிக.

வாசிக்கும் முன்னர்:
சிலப்பதிகாரம் குறித்து நீங்கள் அறிந்தவற்றைக் கூறுக.

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்

உலகச் செம்மொழிகளில் இலக்கியச் செழிப்பால்
தனித்துவம் பெற்று விளங்கும் ம�ொழி, நம் தமிழ்மொழி.
நம் தமிழ்த்தாய்க்கு அணிகலனாய் விளங்கும்
இலக்கியம் அகம், புறம் எனும் வாழ்வியல் அறத்தைத்
தாங்கி ஒளிர்கின்றது. தமிழ் இலக்கியம் தனிப்பெரும்
வரலாறு உடையது. முதலில், வாய்மொழி இலக்கியமாய்
இருந்து, தன்னுணர்ச்சிப் பாடல்களாய் மிளிர்ந்து,
நல்ல அறநெறிகளை உள்ளடக்கிக் கதைப�ொதிந்த
பாடல் இலக்கியமாய்ச் செழிப்புற்று, பின்னர், முழுமை
எய்தி காப்பியங்களில் துலங்கி நிற்பது தமிழிலக்கியம்.

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி,
வளையாபதி, குண்டலகேசி என்றமையும் நம்
ஐம்பெரும் காப்பியங்கள் தமிழின் இலக்கிய அரணாய்
அமைந்திருக்கின்றன. அறம், ப�ொருள், இன்பம், வீடு
என்னும் நால்வகை உறுதிப் ப�ொருள்களை உள்ளடக்கித்
திகழ்கின்றன. இவற்றுள், அந்தக் காலக்கட்டத்தில்
வாழ்ந்த மக்களின் வாழ்வியல் முறையையும் பண்பாட்டு
நெறிகளையும் தெளிவாய்ப் பதிவு செய்திருப்பதால்,
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சிறப்புத் தகுதி வாய்ந்த காப்பியங்களாகப் ப�ோற்றப்படுன்றன.

தமிழ்த்தாயின் கழுத்தில் இலங்கும் மணியாரமாய் விளங்கும் சிலப்பதிகாரம், தமிழ்க்காப்பியங்களுள்
தலைமைக் காப்பியமாய்த் தனித்துவம் பெற்று விளங்குகிறது. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழாய்
முகிழ்ந்த முதல் காப்பியம் சிலப்பதிகாரம். இது, உரையிடை இடப்பட்ட பாட்டுடைச் செய்யுளால் புனையப்பட்டது.
சிலப்பதிகாரம் மக்கள் காப்பியம் என்றும் ப�ோற்றப்படுகின்றது. எளிமையான மக்களின் வாழ்வைக் காப்பியம்
முழுமைக்கும் படம்பிடித்துக் காட்டுவதால் சான்றோர் இதனைக் குடிமக்கள் காப்பியம் என உளமாரப்
ப�ோற்றினர். மேலும், அரசர்களைப் பாடி வந்த தமிழ்க் காப்பிய உலகில், குடிமக்களைத் தலைமக்களாகக்
க�ொண்டு பாடப்பட்டதால் பெரிய�ோர் இதனைக் குடிமக்கள் காப்பியம் எனப் பாராட்டுவதில் வியப்பில்லை.

சிலப்பதிகாரம், அக்காலத்தில் இருந்த தமிழர்களின் கலைகளைத் தாங்கி நிற்கும் கலைக் கருவூலமாகவும்
விளங்குகிறது. அன்று, தமிழர்களின் வழக்கத்தில் இருந்த ஆடல், பாடல், கூத்து, இசைக்கருவிகள்
அனைத்தையும் அழகாகக் குறிப்பிடுகிறது. அதுமட்டுமன்றி, அவற்றை இசைக்கும் வழிமுறைகளையும்

2.3.14 இலக்கியம் த�ொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

213

த�ொகுதி 22 விளக்கி நிற்கிறது. மேலும், இயல்பான கதைப்போக்கில், பல்துறை சார்ந்த செய்திகளையும் பரவலாகத்
தாங்கி நிற்கும் தன்மையால் தமிழ்மொழியின் ஒப்புயர்வற்ற நாடகக் காப்பியமாய் நின்று நிலைக்கிறது.
சிலப்பதிகாரத்தின் கதைப்போக்குகளும் உத்திகளும் இசைப்பாடல்களும் கலை வெளிப்பாட்டு
முறைகளும் காப்பிய அமைப்பு முறையில் தனித்துவம் பெற்று விளங்குகின்றன. மக்களிடம் செல்வாக்குப்
பெற்றிருந்த ஒரு செவிவழிக் கதையைத் தம் கலைத்திறத்தால் காவியமாய்க் காட்டிய பெருமை
இளங்கோவடிகளின் புலமைக்குச் சான்றாய் அமைகின்றது.

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்தூட்டும் என்பதூஉம்
என்று முப்பொருள் தாங்கி மலர்ந்த சிலப்பதிகாரம், அரசியலில் பிழை செய்தால், அறமே எமனாய் நின்று
தண்டிக்கும்; கற்பு நெறியினை அறமாய்ப் ப�ோற்றும் பெண்டிரை உயர்ந்தோர் ப�ோற்றுவர்; முன்செய்த
தீவினை சினந்து வந்து தண்டிக்கும் என்ற உண்மைகளை வாழ்வியல் அறமாய் எடுத்துரைக்கிறது.

1

பனுவலை ஒட்டிய கேள்விகளுக்கு வாய்மொழியாகப் பதில் கூறுக; எழுதுக.

1. சிலப்பதிகாரம் தமிழர்களின் அடையாளத்தைச் சிறப்புடன் காட்டுகின்றது என்பதைச்
சான்றுகளுடன் விளக்குக.

2. ‘இலக்கியம் ஓர் இனத்திற்கான பண்பாட்டின் அடையாளம்.’ இந்தக் கூற்றுக்கான
சான்றுகளைப் பனுவலில் கண்டறிந்து விளக்குக.

2

கேள்விகளுக்குப் பதில் எழுதுக.

1. நம் தமிழ் இலக்கியம் காட்டும் அடிப்படை வாழ்வியல் அறங்கள் யாவை?
2. தமிழ்க்காப்பியங்களுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சிறப்புத் தகுதி பெற்ற

காப்பியங்களாகப் ப�ோற்றப்படுவதன் காரணம் என்ன?
3. சிலப்பதிகாரம் தலைமைக் காப்பியமாய்க் கருதப்படுவது ஏன்? இரண்டு காரணங்களைக்

கண்டறிந்து விளக்குக.
4. ‘சிலப்பதிகாரம் ஒப்புயர்வற்ற நாடகக் காப்பியம்.’ இக்கூற்றிற்கான சான்றுகளை விளக்குக;

உமது கருத்தை விவரித்திடுக.
5. இக்காலச் சூழலில் சிலப்பதிகாரத்தின் படிப்பினைகள் எவ்வாறு ப�ொருந்தும்

என்பதனை விளக்குக.

3

பனுவலில் வண்ணமிட்ட ச�ொற்களுக்குச் சூழலுக்குப் ப�ொருந்தும் வகையில் ப�ொருள் கண்டு எழுதுக.

214

õ÷Šð´ˆ¶î™ த�ொகுதி 22

இன்றைய தலைமுறையினருக்கு நமது பழைமையான இலக்கியங்களைக் கற்பதில் நாட்டம்
குறைந்து காணப்படுகிறது. இந்தக் குறைப்பாட்டைப் ப�ோக்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய
ஐந்து நடவடிக்கைகளை 50 ச�ொற்களில் எழுதுக.

°¬øc‚è™

பனுவலை ஆழ்ந்து வாசித்து, கேள்விகளுக்குப் பதில் எழுதுக.

மணிமேகலை காவியம்

தமிழில், சிலப்பதிகாரத்திற்கு அடுத்துத் த�ோன்றிய ஒரு
தனித்தமிழ்க் காப்பியம் மணிமேகலை ஆகும். மணிமேகலை
காப்பியத்தின் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார். இக்காப்பியம்
தமிழில் த�ோன்றிய முதல் ப�ௌத்த சமயக் காப்பியம்
ஆகும். இக்காப்பியம், பல்வேறு சமயச் சிந்தனைகளை
எடுத்துக் கூறுவதுடன், ப�ௌத்த சமயக் க�ொள்கைகளை
மிகச் சிறப்பாகப் ப�ோற்றுகிறது. காலத்தால் பழமையான
இக்காப்பியம், பல்வேறு கிளைக் கதைகளைக் க�ொண்டு
இலக்கியச் சுவைபடப் புனையப்பட்டுள்ளது.

மணிமேகலை காப்பியத்தின் முதன்மைப் பாத்திரம்
மணிமேகலை. அவளைச் சுற்றியே கதை நகர்கிறது. ஒரு
சாதாரணக் கணிகையர் மகளாகத் த�ோன்றி, இளவரசனான
உதயகுமரன்பால் காதல் உடையவளாய் இருந்து, உள்ளம்
தெளிந்து, அறத்தின் நாயகியாக அவள் மிளிர்வதையே இக்காப்பியம் எடுத்துரைக்கிறது. தமிழ்க்
காப்பியங்களில் பெண்ணைத் தலைமைப் பாத்திரமாகக் க�ொண்டு எழுந்த இரண்டாவது பெருங்காப்பியம்
மணிமேகலை. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், குல மகளான கண்ணகியை இல்லற மகளாகக்
காட்டி தெய்வ நிலைக்கு உயர்த்தினார். இதைவிட ஒருபடி உயர்ந்து மேலே சென்று புரட்சியைப்
படைத்திருக்கிறார், மணிமேகலையை எழுதிய சாத்தனார். அக்காலத்தில் இழிவாகக் கருதப்பட்ட
கணிகையர்க் குலத்தில் பிறந்த மாதவியைச் சிலப்பதிகாரத்தில் ஒரு கற்பரசியாக உயர்த்தியவர்
இளங்கோவடிகள். அவள் வயிற்றில் உதித்த மணிமேகலையை ஓர் அறச்செல்வியாக மேலும்
உயர்த்தி புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார் சாத்தனார்.

1. மணிமேகலை காப்பியத்தின் சிறப்புகள் யாவை?
2. மணிமேகலை காப்பியத்தில், இடம்பெற்ற மணிமேகலையின் கதாப்பாத்திரத்தில் மிளிரும்

சிறந்த பண்பு யாது?
3. சீத்தலைச் சாத்தனார் மணிமேகலை காப்பியத்தில் எத்தகைய புரட்சியைக் காட்டியுள்ளார்?

215

த�ொகுதி 22 ð£ì‹ 3 இலக்கியமும் மனிதனும்

பனுவலை ஆழ்ந்து வாசித்திடுக.

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே, மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய தமிழமுது இயக்கத்
தலைவர் அவர்களே, அவர் தம் செயலவையினர்களே, மற்றும் இந்நிகழ்விற்கு வந்துள்ள என் அன்பிற்கு
இனிய வருகையாளர்களே உங்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த வணக்கத்தைத் தெரிவித்துக்
க�ொள்கின்றேன். முதலில், இந்த இலக்கிய விழாவிற்கு என்னை அழைத்துப் பேசச் ச�ொல்லியதற்கு
நன்றி. இங்கே` கண்ணதாசனின் கவித் திறம்,’ எனும் தலைப்பில் பேசப் பணித்துள்ளனர். கண்ணதாசன்
கவிதைகள் என்பது விரிந்த கடல். அதில் சிறு துளியை மட்டும் த�ொட்டுப் பேசலாம் என நினைக்கின்றேன்.

அன்பர்களே..!,

தமிழறிந்தோர் அவையிலே பேசுகின்றேன் என்ற
மகிழ்வோடு உரையைத் த�ொடங்குகின்றேன். இங்கே,
கண்ணதாசனின் கவிதைச் சிறப்பைப்பற்றிச் சுருக்கமாகப்
பேசச் ச�ொல்லியுள்ளனர். கண்ணதாசன் வாழ்ந்த
காலத்தில் நம்மில் பலர் வாழ்ந்திருக்கின்றோம் என்பதே
நமக்குப் பெருமை. அவர் பல துறைகளைத் த�ொட்டுப்
பாடியுள்ளார். குறிப்பாகத் தாய்மையின் தகைமையைத்
தமக்கே உரிய அழக�ோடு பாடியிருக்கிறார். மாந்தனின்
வாழ்வில் தாய்மை, தன்னிகரில்லா ஒன்று. அதன்
சிறப்பைக் கண்ணதாசன் பலவாறு பாடியுள்ளார்;
மழலைச் செல்வத்தின் மேன்மையினை ஒரு தாயின்வழி
படம் பிடித்துக் காட்டுவார். தாயின் மன உணர்வைச்
ச�ொல்லால் வடித்திருப்பார் கவிஞர். அதனை மனம்
நெகிழப் பாடியுள்ளார்.

சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா?
மங்காத கண்களில் மை இட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா?

மழலையின் சிரிப்புச் சிங்காரப் புன்னகையாம்; அது வீணையின் நாதத்தையும் மிஞ்சுமாம்; மையிட்ட
அவர்களின் கண்கள் தங்கத்தையும் வைரத்தையும் புறம் தள்ளுமாம். என்னே நயம்! என்னே எளிமை!
என்னே தாய்மையின் உணர்வைச் சுட்டும் மனம்! கண்ணதாசனால் மட்டும்தான் இப்படிப் பாட இயலும்.

அடுத்து, கண்ணதாசன் அவர் நேசித்த தமிழைப் பாடிய அழகு, தனியழகு. செவிமகிழக் கேட்டு,
இன்புறும் பாட்டு.

3.4.33 250 ச�ொற்களில் தலைப்பைய�ொட்டி உரை எழுதுவர்.

216

கதிர் வெடித்துப் பிழம்பு விழ
கடல் குதித்துச் சூடாற்ற
முதுமை மிகு நிலப் பிறப்பின்
முதற் பிறப்புத் த�ோன்றி விட
நதி வருமுன் மணல் தரு முன்
நலம் வளர்த்த தமிழணங்கே
பதி மதுரை பெருவெளியில்
பாண்டியர் கை பார்த்தவளே!

கல் த�ோன்றி மண் த�ோன்றாக் காலத்தே த�ோன்றி, காலவெளியில் மிடுக்கொடு நடந்த, தமிழ்மொழியின்
சிறப்பையும் சீர்மையையும் இப்படி எவரும் பாடியதில்லை என்பர் சிலர். எளிய ச�ொல் அமைப்பில்,
தமிழ்மொழியின் த�ோற்றத்தையும், நலம் வளர்த்த மாண்பையும் தம் கவிதைக்குள் க�ொண்டு வந்து
தமிழைச் சிம்மாசனம் ப�ோட்டு அமர வைத்தவர் கண்ணதாசன். இக்கவிதையின் சிறப்பு முழுவதையும்
உணர அதனைத் தேடிப் படியுங்கள்.

அன்பர்களே!

சினிமாப் பாடல்களிலும், மாந்தர் பலரின் வாழ்வை மாற்றியமைக்கக் காரணமாய் இருந்தவை
கண்ணதாசன் பாடல்கள். அவற்றுள் ஒரு பாட்டு, வாழ்க்கைத் த�ோல்வியின் விளிம்பிற்குச் சென்றவர்களை
மீட்டெடுத்த வந்த வரிகளைக் க�ொண்டது. கேட்டுப் பாருங்கள் இதனை,

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் த�ோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!

இப்படி வாழ்க்கையை நேர்மறை ந�ோக்கில்
முனைப்புடன் பார்க்கச் செய்தவர் கவிஞர்
கண்ணதாசன். கவிஞர் வாலியே இப்பாடல் உணர்த்திய
கருத்தால் ஈர்க்கப்பட்டுத் தம்முடைய வாழ்வைச்
சீரமைத்து வெற்றிப் பெற்றார் என்றால் பாருங்களேன்!

இப்படி, கண்ணதாசனின் எத்தனைய�ோ
பாடல்கள் நம் வாழ்க்கைக்குப் பாடமாக அமைகின்றன.
அவற்றை நீங்களும் அள்ளிப் பருக வேண்டும்;
அவற்றில் திளைக்க வேண்டும்; வாழ்க்கைப் பாடமாகக்
க�ொள்ள வேண்டும் என்று கூறி விடைபெறுகின்றேன்.

நன்றி, வணக்கம்.

217

த�ொகுதி 22 1

வாசித்தறிந்த உரையில் கீழ்க்காணும் அமைப்புக் கூறுகளை அடையாளம் கண்டு எழுதுக.

• த�ொடக்கம் - அவை விளிப்பு (வணக்கம் கூறுதல்).
• கருத்துப்பகுதி - முன் விளிப்பு, முக்கியக் கருத்துகள்
• உரைக்குரிய குறியீடுகள், உணர்ச்சிகளின் வெளிப்பாடு.
• முடிவு - விடைபெறுதல் , நன்றி நவில்தல்.

2

‘தமிழ் இலக்கியங்களைக் கற்பதால் ஏற்படும் நன்மைகள்’ எனும் தலைப்பில் கருத்துகளை ஏற்ற
வரைபடக் கருவியில் திரட்டுக; சட்டகம் ஒன்றனைத் தயார் செய்க.

3

இடுபணி இரண்டில் தயாரித்த சட்டகத்தை அடிப்படையாகக் க�ொண்டு 250 ச�ொற்களில் உரை
ஒன்றனை எழுதுக.

õ÷Šð´ˆ¶î™

நம் நாட்டில் இலக்கிய உணர்வுகள் மேல�ோங்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எனும்
தலைப்பில் 250 ச�ொற்களில் உரை ஒன்றனை எழுதுக.

°¬øc‚è™

‘இலக்கியநயம்’ எனும் தலைப்பில் உரை ஒன்றனை எழுதுக. பின்வரும் கருத்துகளை வழிகாட்டியாகக்
க�ொள்க.

முன்னுரை:
• இலக்கியம் என்றால் என்ன?
• இலக்கியங்களை வாசிப்பது மகிழ்ச்சியான ப�ொழுதுப�ோக்கு.
• இலக்கியப் படைப்புகள் பண்பை வளர்க்கின்றன.
கருத்துகள்:
• மனத்திற்குப் பல வகையான சுவைகளை ஊட்டுகின்றன - இன்பம், அவலம், நகைச்சுவை,
ப�ோன்றவை (எடுத்துக்காட்டுகளை எழுதுக.)
• ம�ொழிச் சுவையைத் தருகின்றன - அடுக்கும�ொழி, நயமிக்கச் ச�ொல்லாட்சிகள் ப�ோன்றவை
(எடுத்துக்காட்டுகளை எழுதுக)
• படைப்புநயம் - வருணனை ஈர்ப்பை ஏற்படுத்தும்.
முடிவுரை: நன்றி நவில்தல்; விடைபெறுதல்.

218

ð£ì‹ 4 செய்யுளும் ம�ொழியணியும்

பழம�ொழி

பழம�ொழிகள் விளக்கம்

நம்மிடம் உதவி கேட்கும் ஒருவருக்கு உதவுவதில்
தவறில்லை. ஆனால், அவர் உதவி பெறும்
துணை ப�ோனாலும் பிணை ப�ோகாதே ப�ொருட்டுப் பிறரிடம் அவருக்காகப் பிணையாளியாக

இருக்கக்கூடாது.

மின்னுவதெல்லாம் ப�ொன்னல்ல வெளித்தோற்றத்தைக் கண்டு ஒன்றைச் சிறந்ததென
எண்ணி ஏமாந்துவிடக்கூடாது.

மனக்கவலை பலக் குறைவு கவலைமிக்க மனத்தை உடையவரின் உடல்
ச�ோர்வடைவதால் ஒரு செயலை முனைப்புடன்
செய்ய இயலாது. ஆகவே, மனக்கவலை உடையவர்
வலுவிழந்தவராகவே கருதப்படுவார்.

செய்கையைக் க�ொண்டோ முகத்தோற்றத்தைக் கண்டோ
ஒருவரின் கருத்தை அறிந்து க�ொள்ள வேண்டும்.
சைகை அறியாதவன் சற்றும் அறியான் அவ்வாறு அறிந்துக�ொள்ள முடியாதவர் எதையும்

அறிந்துக�ொள்ள முடியாதவரே ஆவார்.

கெடுவான் கேடு நினைப்பான் மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுபவன் தானே
அதற்கேற்ற பயனை அடைவான்.

1

உரையாடலைப் பாகமேற்று நடித்துக் காட்டுக. உரையாடலில் அடங்கியுள்ள பழம�ொழிகளையும்
அவற்றின் ப�ொருளையும் விளக்கிக் கூறுக.

மின்னுவது ப�ொன்னல்ல

வேலன்: நீங்கள் நாலும் தெரிந்த மனிதர். எப்படி ஏமாந்து ப�ோனீர்கள்? நம்மை நாடி த�ொகுதி 22
வருபவர்களுக்கு உதவி செய்வதில் தவறில்லை. ஆனால், இப்படியா ஏமாளியாக

4.7.5 ஐந்தாம் படிவத்திற்கான பழம�ொழிகளையும் அவற்றின் ப�ொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

219

பிணையாளியாக, கையெழுத்துப் ப�ோட்டு மாட்டிக் க�ொள்வது? துணை ப�ோனாலும் பிணை
ப�ோகாதே என்று பெரியவர்கள் கூறியிருப்பதை மறந்து விட்டீர்களே!

அருள்: என்ன செய்வது வேலன்? ர�ொம்பவும் கெஞ்சினான். நல்லவன் ப�ோல் நடித்து ஏமாற்றிவிட்டான்.
அவனின் வெளித்தோற்றத்தைக் கண்டு ஏமாந்து விட்டேன் மின்னுவதெல்லாம் ப�ொன்னல்ல
என்பது தெரியாது ப�ோயிற்று.

வேலன்: ஒருவருடைய செய்கை, முகத்தோற்றத்தைக் க�ொண்டே ஒருவரின் உண்மையான கருத்தையும்
ந�ோக்கத்தையும் அறிந்து க�ொள்ள முடியும். சைகை அறியாதவன் சற்றும் அறியான் என்பது
உங்களைப் ப�ொறுத்தவரை உண்மையாகிவிட்டது.

அருள்: உண்மைதான். நான் பெரிய ஏமாளி. விடுங்கள், மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய எண்ணுபவன்
தானே அதற்கேற்ப பயனை அடைவான். கெடுவான் கேடு நினைப்பான் என்பது உறுதியாக
நடக்கும் பாருங்கள். ம்! மாதா மாதம் நான் வங்கிக்குக் கடன் கட்ட வேண்டும். அதுதான்
கவலையாக இருக்கிறது.

வேலன்: கவலைப் படாதீர்கள் அருள். மனக்கவலை பலக் குறைவு. மனம் கவலையடைந்தால் உடல்
ச�ோர்வாகிவிடும். பிறகு எதையும் முனைப்புடன் செய்ய முடியாது. வலுவிழந்து ப�ோய் விடுவீர்கள்.
அடுத்து என்ன செய்யலாம் என்று திட்டமிடுங்கள். நானும் உதவி செய்கிறேன்.

அருள்: நல்லது வேலன். உங்கள் அன்புக்கு மிகுந்த நன்றி.

2

பழம�ொழிகளைப் ப�ொருள் விளங்க சூழலில் அமைத்து எழுதுக.

3

கற்ற பழம�ொழிகளைப் ப�ொருள் விளங்க வாக்கியத்தில் அமைத்துக் காட்டுக.

த�ொகுதி 22 õ÷Šð´ˆ¶î™

கற்றறிந்த பழம�ொழிகளில் ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்து, பழம�ொழியின் கருப்பொருளை
விளக்கும் வகையில் கதைய�ொன்றனை எழுதுக.

°¬øc‚è™

பழம�ொழிகளையும் அவற்றின் ப�ொருளையும் மனனம் செய்து ஒப்புவித்திடுக.

220

221

1

1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.

23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.

222


Click to View FlipBook Version