The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

Yellow & Black Modern Company Profile Presentation (1)

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by Darvin Nair, 2022-07-23 02:15:30

உவமைத்தொடர்

Yellow & Black Modern Company Profile Presentation (1)

உவமைத்தொடர்

கு ழு உ று ப் பி ன ர்



1 ) க வி ல ன்



2 ) த ர் வி ன்

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல



பொருள் :
துன்பத்துக்குமேல் துன்பம்

வாக்கியம :



குமரனின் முழுநேர வேலையாக இருந்த மின்னியல்
வணிகத்தில் அதிகப்படியான நஷ்டம் ஏற்பட்டது . ஆதலால் ,
குமரன் சோகத்தில் ஆழ்ந்திருந்தான் . வெந்த புண்ணில்

வேல் பாய்ச்சியது போல அவனது மனைவியின் வேலையும்
பறிப்போனது . அதனால் , குமரன் மிகுந்த வருத்தத்தில்
ஆழ்ந்தான் .

இருதலைக் கொள்ளி எறும்பு போல



பொருள் :

எந்தப் பக்கமும் சாரமுடியாத இக்கட்டான நிலை

வாக்கியம :

குணாளனின் அப்பா அவனது பிடிவாதத்தைக் கண்டித்துக்
கடுமையாகத் திட்டினார் . அவன் அழுது கொண்டே அறைக்குள்

நுழைந்தான் . அவனது அம்மா அவனைச் சமாதானப்படுத்த
முயன்றார் . ஆனால் , அவன் தனது அழுகையை நிறுத்தவில்லை .

அதனால் , அம்மா அப்பாவிடம் சென்று முறையிட்டார் . அவரும்
அம்மாவின் முறையீட்டைச் செவிமடுக்கவில்லை . இவர்கள்
இருவருக்கிடையே அம்மா இருதலைக் கொள்ளி எறும்பு
போல செய்வதறியாது தவித்தார் .

நீர்மேல் எழுத்துப் போல



பொருள் :

நிலையாமை

வாக்கியம :

சிவா ஒவ்வொரு தவணை தேர்விலும் சிறந்த
மதிப்பெண்களைப் பெற்றுவிடுவேன் எனத் தனது
பெற்றோரிடம் உறுதி கூறுவான் . ஆனால் , அவனின்
உறுதி நீர்மேல் எழுத்துப் போல நிறைவேறாமல்
போவதற்கு அவனது அலட்சியப் போக்கும் சோம்பலுமே

காரணிகளாகும் .

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

பொருள்:

ஒரு பொருள் சேதமடைவதைத் தடுக்க முடியாமை / பாதிப்பு
ஏற்படுவது உறுதி

வாக்கியம :

தன் குடும்பச் சூழலைச் சமாளிக்கும் பொருட்டு திரு .
குமரன் வட்டி முதலையிடம் கடன் வாங்கி இருந்தார் .
அந்தக் கடனைத் திருப்பிக் கட்ட முடியவில்லை . அதனால் ,
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல அதிலிருந்து
மீள முடியாமல் தவித்தார் ; மன வேதனை அடைந்தார் .

நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல

பொருள் :
நல்ல நிலையில் உள்ள ஒன்றிற்கு மெல்ல மெல்ல கேடு

விளைவித்தல்

வாக்கியம :

நல்ல தர்ம காரியங்களைச் செய்து வந்த சிவராமன் ,
தவறான நண்பர்களின் சேர்க்கையால் தனது மொத்த
பணத்தையும் சூதாட்டத்தில் இழக்க நேரிட்டது . நிலைக்குத்
மேலும் , சூதாட்டத்தில் அடிமையாகிக் கடன் வாங்கிச்
சூதாடும் தள்ளப்பட்டான் . நல்ல மரத்தில் புல்லுருவி

பாய்ந்தது போல அவனது வாழ்க்கை திசை
மாறிப்போனது .

நிலத்தினும் பெரிதே ; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே - சாரல்

கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே

விளக்கம்
மலைச் சாரலில் உள்ள கரிய கிளைகளில் பூத்துக்குலுங்கும்
குறிஞ்சி மலர்களின் தேனைக் கொண்டு தேனீக்கள் பெரிய

தேனடைகளைக் கட்டும் சிறந்த நாட்டைச் சார்ந்தவன் என்
தலைவன் . அவனுடன் நான் கொண்ட அன்பானது பூமியைவிடப்
பெரியது , வானத்தைவிட உயரமானது ; கடலைவிட ஆழமானது .

பதவுரை

கருங்கோற் - கரிய கிளைகளில்

குறிஞ்சிப் பூக் கொண்டு - மலைச்சாரலில் மலரும் குறிஞ்சிப்பூ

பெருந்தேன் இழைக்கும் - தேனைக் கொண்டு தேனடைகளைக் கட்டும் தேனீக்கள்

நாடனொடு நட்பே - நல்லாட்சி நாட்டைச் சார்ந்தவனுடன் கொண்ட நட்பு

நிலத்தினும் பெரிதே - பூமியைவிடப் பெரியது

வானினும் உயர்ந்தன்று - வானத்தைவிட உயர்ந்தது

நீரினும் ஆர் அளவின்றே- கடலைவிட ஆழமானது

நன்றி


Click to View FlipBook Version