The words you are searching are inside this book. To get more targeted content, please make full-text search by clicking here.

TAMIL CHARAL 2018 IPG IPOH

Discover the best professional documents and content resources in AnyFlip Document Base.
Search
Published by eelan_12, 2020-03-30 11:03:57

TAMIL CHARAL

TAMIL CHARAL 2018 IPG IPOH

Keywords: TAMIL

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

தமிழ் வாழ்த்து
காப்பியனை ஈன்றவளே! காப்பியங்கள் கண்டவளே!
கலைவளர்த்த தமிழகத்தின் தலைநிலத்தில் ஆள்பவளே!
தாய்ப்புலமை யாற்புவியில் தனிப்பெருமை க�ொண்டவளே!
தமிழர�ொடு புலம்பெயர்ந்து தரணியெங்கும் வாழ்பவளே!
நிலைப்பெற நீ வாழியவே! நிலைபெற நீ வாழியவே!
எங்களெழில் மலைசியத்தில் சிங்கைதனில் ஈழமண்ணில்
இலக்கியமாய் வழக்கியலாய் இனக்காவல் தருபவளே!
ப�ொங்கிவளர் அறிவியலின் புத்தாக்கம் அத்தனைக்கும்
ப�ொருந்தியின்று மின்னுலகில் புரட்சிவலம் வருபவளே!
செவ்வியலின் இலக்கியங்கள் செழித்திருந்த ப�ொற்காலம்
சேர்த்துவைத்த செயுள்வளத்தில் செம்மாந்த பழையவளே!
அவ்வியலில் வேரூன்றி அறிவுயர்ந்த தற்காலம்
அழகழகாய் உரைநடையும் ஆளுகின்ற புதியவளே!
குலங்கடந்து நெறிகடந்து நிலவரம்பின் தடைகடந்து
க�ோமகளாய்த் தமிழர்மனம் க�ொலுவிருக்கும் தமிழணங்கே!
நிலவினுக்கே பெயர்ந்தாலும் நினதாட்சி த�ொடருமம்மா!
நிறைகுறையாச் செம்மொழியே!
நிலைபெறநீ வாழியவே! நிலைபெற நீ வாழியவே!

கவிஞர் சீனி நைனா முகமது

1

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

2018' தமிழ்ச்சாரலின் உள்ளடக்கம்

UCAPAN ALU-ALUAN TUAN PENGARAH
தமிழ் ஆய்வியல் பிரிவுத் தலைவரின் வாழ்த்துரை

தமிழ்ச்சாரல் ஆல�ோசகர் உரை
தமிழ்ச்சாரல் வெளியீட்டுக் குழுத் தலைவர் உரை

தமிழ்ச்சாரல் வெளியீட்டுக் குழுவினர்
தமிழ் ஆய்வியல் பிரிவின் விரிவுரையாளர்கள்

தமிழ் ஆய்வியல் பிரிவின் நடவடிக்கைகள்
ஆய்வுச் சாரல்
ஆக்கச் சாரல்
கல்வியல் சாரல்
பல்சுவைச் சாரல்
நினைவுச் சாரல்

2

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

Ucapan Alu-Aluan Tuan Pengarah

INSTITUT PENDIDIKAN GURU KAMPUS IPOH

Salam sejahtera
Pada kesempatan ini saya ingin mengucapkan syabas dan tahniah kepada AJK Tamil
Charal dan para pensyarah Unit Pengajian Tamil (UPT) kerana berjaya menerbitkan
majalah tahunan buat kali ke-12. Sesungguhnya, penerbitan Tamil Charal ini mencerminkan
kesungguhan pihak UPT dalam menggembleng tenaga untuk menjayakan aktiviti penulisan
karya kreatif dalam kalangan siswazah guru Kampus Ipoh.

Majalah ini merupakan usaha berterusan pihak UPT dalam mencungkil bakat menulis
serta penerapan amalan membaca dalam kalangan siswazah guru Kampus Ipoh. Selain
itu, insiatif menerbitkan majalah ini membawa manfaat kepada para siswazah guru dari
aspek peningkatan pemikiran kreatif dan kritis melalui penglibatan mereka dalam
penghasilan karya sastera dan bahasa. Hal ini akan memupuk semangat para siswazah
dan menjurus mereka kepada penerbitan hasil karya yang bermutu tinggi pada masa
hadapan.

Di samping itu, pada era teknologi maklumat ini, sebagai bakal guru, siswazah harus
bersedia mengharungi cabaran untuk menyediakan diri dengan ilmu berpengetahuan
serta mengetahui alam pekerjaan mereka pada masa akan datang. Dengan melibatkan
diri dalam aktiviti sebegini, mereka dapat mempertingkatkan keperibadian demi menjadi
pendidik yang cemerlang. Justeru, pengalaman siswazah guru dalam kegiatan penulisan
sebegini dapat melahirkan generasi muda yang cekal menghadapi sebarang cabaran
pada masa hadapan.

Akhir sekali, saya ingin merakamkan setinggi-tinggi penghargaan kepada semua warga
UPT khususnya sidang redaksi serta semua pihak yang terlibat secara langsung dan
sebaliknya bagi menjayakan penerbitan majalah Tamil Charal kali ini.

Sekian, terima kasih

“BERKHIDMAT UNTUK NEGARA”

TUAN HAJI KAMARULLIZHAM B. HAZIZI
Pengarah
Institut Pendidikan Guru Kampus Ipoh
31150 Hulu Kinta, Perak

3

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

தமிழ் ஆய்வியல் பிரிவுத் தலைவரின் வாழ்த்துரை

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி (குறள் 1)
பகவன் முதற்றே உலகு

வணக்கம். மீண்டும் உங்கள் கைகளிலே தமிழ்ச்சாரல் தவழுவதைக் கண்டு பெருமிதம்
க�ொள்கிறேன். பயிற்சி ஆசிரியர்களின் கை வண்ணத்தால் மலர்ந்த கட்டுரைகளும்,
கவிதைகளும், விரிவுரையாளர்களின் கட்டுரைகளும் இம்மலருக்கு அழகு சேர்க்கின்றன.
இச்சுவடுகள் எதிர்காலத்தில் பயிற்சி ஆசிரியர்களுக்குப் பசுமையான எண்ணங்களாக
அமையும் என்பதில் ஐயமில்லை. நாம் ஆசிரியர்கள் மத்தியில் வாசிப்புப் பண்பாட்டை
உருவாக்கும் முனைப்புச் செயற்பாட்டில் த�ோல்விதான் கண்டு வருகின்றோம். ஆசிரியர்கள்
எப்பொழுது வாசிப்புப் பண்பாட்டை விடுகின்றார்கள�ோ அப்பொழுதே அவர்கள் ஆசிரியர்
பணியை விடவேண்டுமெனக் கல்வியாளர்கள் கூறுகின்றார்கள்.

மனிதர்களைக் கற்பது எவ்வாறு எனக் கற்றுக்கொள்வதே கல்வியின் இலக்காகும்.
கற்றுக் க�ொள்வதற்கான ஆற்றலானது, அறிவை விட முக்கியம். அறிவு
காலத்துக்கொவ்வாததாகப் ப�ோனாலும், கற்கும் திறனானது அனைத்து அறிவுகளுக்குமான
திறவுக�ோலாக விளங்குகின்றது. இன்று அறிவை விடக் கல்வி முக்கியம் என்ற நிலைக்கு
உயர்ந்துள்ளது. கற்றல் உளவியலின் அடிப்படைக்கூறாகவும் உயிர்ப்புத் தளமாகவும்
“வாசிப்பு” அமைகின்றது. வாசிப்பின் பன்முகச் சாத்தியப்பாடுகள் ஒருவரை மேம்பட்ட
ஆளுமைப் பண்புகளுடன் த�ொழிற்படும் ஒருவராக உருமாற்றுகின்றது. தனிமனித அறிவு
வளர்ச்சிக்கும் வாசிப்பு முக்கியமாகின்றது. மேலும், சமூக வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும்
கூட வாசிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. வாசிப்புப் பரவலாக உள்ள சமூகமே,
ஆக்க மலர்ச்சிச் சிந்தனையில் புதிய கண்டுபிடிப்புகளில் முனைப்பாக இருக்கும்.

வாசிப்பால் மட்டுமே அறிவுக்கான அடித்தளம் ப�ோடப்படும். இதுவரையான

பன்னாட்டு அனுபவம் இதனைத் த�ொடர்ந்து வலியுறுத்துகின்றது. வாசிப்பின் முக்கியத்துவம்

தெரிந்து வாசிக்கும் சமூகமாக இருக்கும் சமூகமே அறிவுச் சமூகமாக விருத்தி பெறும்.

கல்வியின் ந�ோக்கம் மனிதராக உருவாக்கும் பண்புகளைக் க�ொண்டுதருகவே அமையும்.

சுயதேடல், சுயகற்றல், சுயமரியாதை ப�ோன்ற உயரிய பண்புகளைக் கல்வி கையளிக்க

வேண்டும். ஒவ்வொருவரும் பகுத்தறிவுச் சிந்தனையுடன் சுயமாக இயங்க வேண்டும்.

எதிர்காலத்தில் சிறந்த ஆசிரியர்களாக வரவேண்டுமானால் பயிற்சி ஆசிரியர்களிடம்

சிந்தனை மாற்றமும் தேடலும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

நன்றி, வணக்கம்.

முனைவர் சேகர் நாராயணன்
தலைவர், தமிழ் ஆய்வியல் பிரிவு

4

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

தமிழ்ச்சாரல் வெளியீட்டுக் குழுவின் ஆல�ோசகர் உரை

வணக்கம். மீண்டும் தமிழ்ச்சாரலின்வழி சந்திப்பதில், சிந்திப்பதில் மகிழ்ச்சி. நம்
ஆசிரியர்கள் பன்முக ஆளுமையும் பன்முகப் பரிமாணங்களையும் உடையவர்களாக
விளங்க வேண்டும். ஆசிரியம் சார்ந்த திறன்கள�ோடு படைப்பாற்றல் திறனிலும்
பயிற்சியாசிரியர்களின் ஆளுமையும் அறிவார்ந்த சிந்தனையும் வெளிப்பட, ஈப்போ
ஆசிரியர் கல்விக் கழகத்தின் தமிழ் ஆய்வியல் பிரிவு, தமிழ்ச்சாரல் எனும் இதழை
ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகின்றது. அவ்வகையில் 2018ஆம் ஆண்டுக்கான
தமிழ்ச்சாரல் இனிதே மலந்துள்ளது.

மாறிவரும் கல்விச் சூழலுக்கேற்ப, பயிற்சியாசிரியர்கள் பல்துறை அறிவ�ோடு,
புதியன கற்கும் வேட்கைய�ோடு, நேர்மறைப் பண்புகள�ோடு, விரிந்த பார்வையும் தெளிந்த
அறிவும் க�ொண்டு சமகால, எதிர்கால மாணவர்களின் வளமான வாழ்விற்கு
வழிகாட்டக்கூடியவர்களாகத் தங்களை உருமாற்றிக் க�ொள்ள வேண்டும். அத்தகுச்
செயல்பாட்டிற்கு இந்தத் தமிழ்ச்சாரலின் பங்களிப்பும் அணி சேர்க்குமென பெரிதும்
நம்புகின்றேன்.

இவ்வாண்டின் தமிழ்ச்சாரல் வெளியீட்டுக்கு அனுமதி அளித்த ஈப்போ ஆசிரியர்
கல்விக் கழக இயக்குநர் அவர்களுக்கும் வழிகாட்டிய தமிழ் ஆய்வியல் பிரிவின் தலைவர்
அவர்களுக்கும் சக விரிவுரையாளர்களுக்கும் என் நன்றி. தமிழ்ச்சாரல் வெளியீட்டுப்
பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் க�ொண்ட செல்வன் ஸ்ரீதரன்
பாலகிருஷ்ணன் தலைமையிலான களப் பணியாளர்களுக்கும் படைப்புகளை வழங்கிய
இளம் படைப்பாளிகளுக்கும் என் பாராட்டுகள். மீண்டும் அனைவருக்கும் என் நன்றியும்
பாராட்டுகளும். நன்றி. வணக்கம்.

‘உறையில் கிடக்கும் ப�ோர்வாளைவிட,

ஊர்ந்து செல்லும் புழு கூட உயர்ந்ததுதான்’

(மேத்தா)

‘தமிழ�ோடு காப்போம் பண்பாடு’

அன்புடன்,

குணசீலன் சுப்பிரமணியம்
ஆல�ோசக விரிவுரையாளர்,
தமிழ்ச்சாரல் 2018

5

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

தமிழ்ச்சாரல் வெளியீட்டுக் குழுவின் தலைவர் உரை
அனைவருக்கும் வணக்கம். தமிழ் ஆய்வியல் பிரிவின் ஆதரவ�ோடும் வெளியீட்டுக்
குழுவினரின் ஒத்துழைப்போடும் மிகச் சிறந்த முறையில் இவ்வாண்டுக்கான இதழ்
வெளிவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் தமிழ்ச்சாரல், மாணவ
ஆசிரியர்களின் படைப்பாற்றல் திறனை வளர்க்கும் ஒரு களம் ஆகும்.
இவ்வாண்டுக்கான தமிழ்ச்சாரலில் பயிற்சி ஆசிரியர்களின் பல அறிவார்ந்த
படைப்புகள் இடம்பெற்றுள்ளன. கதை, கட்டுரை, கவிதை, கல்வியல் சார்ந்த படைப்புகள்,
பல்சுவை துணுக்குகள் என அனைத்தும் வாசிப்பவரின் சிந்தனை வளப்பத்திற்கு வித்திடும்
வகையில் அமைந்துள்ளன. அதுமட்டுமின்றி, இவ்விதழில் விரிவுரையாளர்களும்
தங்களுடைய எண்ணக் குவியல்களைப் படைப்புகளாக வழங்கியுள்ளனர். தமிழ் ஆய்வியல்
பிரிவின் அனைத்து விரிவுரையாளர்களுக்கும் எனது நன்றி.
இவ்விதழ் சிறப்பான முறையில் உருவாவதற்குப் வழிவகுத்த தமிழ் ஆய்வியல்
பிரிவின் விரிவுரையாளர்களுக்கும் ஆல�ோசக விரிவுரையாளர் திரு.குணசீலன்
சுப்பிரமணியம் அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் க�ொள்கிறேன்.
மேலும், இவ்விதழ் நன்முறையில் வெளியீடு காண தங்களது முழு ஈடுபாட்டையும்
ஒத்துழைப்பையும் வழங்கிய வெளியீட்டுக் குழுவினருக்கும் எனது பாராட்டுகளைத்
தெரிவித்துக் க�ொள்கிறேன். உதவிகள் பல நல்கிய சக நண்பர்களுக்கும்
நன்கொடையாளர்களுக்கும் எனது நன்றியினைச் சமர்ப்பிக்கிறேன். நன்றி. வணக்கம்.

இப்படிக்கு,
�தரன் பாலகிருஷ்ணன்
தலைவர், தமிழ்ச்சாரல் 2018

“நன்றே செய்; ஒன்றும் நன்றே செய்;
நன்றும் இன்றே செய்; இன்றும் இன்னே செய்”

6

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

தமிழ்ச்சாரல் 2018, வெளியீட்டுக் குழுவினர்

ஆல�ோசகர் & ஒருங்கிணைப்பாளர்:
திரு. குணசீலன் சுப்பிரமணியம்

தலைவர்: செல்வன் �தரன் பாலகிருஷ்ணன்

துணைத் தலைவர்: செல்வி டர்ஸ்னி ஜெயபாலன்

செயலாளர்: செல்வி வித்தியா தர்சினி கேசவன்

துணைச் செயலாளர்: செல்வி த�ோஷணா நல்லப்பன்

ப�ொருளாளர்: செல்வி ஜெயலட்சுமி இராமநாதன்

படைப்பிலக்கியக் குழுவினர்:

செல்வி இந்திராபானு சுப்ரமணியம் (இதழாசிரியர்)

செல்வி அனுஷா இராமு செல்வி ய�ோக பிரிஷா வடிவேலு

படைப்புத் த�ொகுப்பாளர்கள்:

செல்வி கலையரசி இராமு செல்வன் ஆதவன் சுகுமாறன்
செல்வன் பிரவின் ராஜ் சுகுமாறன் செல்வி ஐஸ்வினி முனியாண்டி
செல்வி கல்பனா அன்னப்பன் ஜெயபாலன் செல்வி அன்புமலர் சுப்ரமணியம்


7

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

தமிழ் ஆய்வியல் பிரிவு விரிவுரையாளர்கள்

இடமிருந்து வலம் :
முனைவர் சேகர் நாராயணன் (தலைவர், தமிழ் ஆய்வியல் பிரிவு),
முனைவர் அருள்நாதன் விசுவாசம், திரு. சுப்பிரமணியம் காளியப்பன் (9.9.2018 வரை),
திரு. குணசீலன் சுப்பிரமணியம், முனைவர் ம�ோகன் குமார் செல்லையா
'இப்படை த�ோற்கின்
எப்படை வெல்லும்'

தமிழ் ஆய்வியல் பிரிவுக்குப்
புது வரவாய் வந்திருக்கும்,
க�ோலலிப்பிஸ், துங்கு அம்புவான்
ஹப்சான் வளாக முன்னாள்
விரிவுரையாளர்
திரு.முத்துக்குமார் பழனிசாமி
அவர்களை அன்புடன்
வரவேற்கின்றோம்!
8

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

2018ஆம் கல்வியாண்டில்
தமிழ் ஆய்வியல் பிரிவின் நிகழ்ச்சிகள்

தமிழ்ச்சாரல் 2017 வெளியீட்டு விழா
ப�ொங்கல் பண்பாட்டு விழா
தாய்மொழி நாள்
UPSI பல்கலைக்கழகம் &

பேராங் தமிழ்ப்பள்ளி கல்விச் சுற்றுலா
இலக்கியக் களம்

த�ொன்மையின் த�ொடர்ச்சி நூல் ஆய்வரங்கம்
திரு. வி.க. சுழற்கிண்ண ச�ொற்போர்

தகவல் த�ொழில்நுட்ப பயிலரங்கம் (INFITT)
திருக்குறள் பயிலரங்கம்
பயிற்றுப்பணி

திருக்குறள் ச�ொற்பொழிவு
பணிநிறைவு விழா
தீபக் கலையிரவு

யாப்பிலக்கண வகுப்பு & பேச்சு முனை

9

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

மாணவர்க்கு

ஆசானைத் தந்தையென வணங்க வேண்டும்
அவர்சொல்லும் அறிவுரைக்கும் இணங்க வேண்டும்
கூசாமல் தன்கருத்தைக் கூற வேண்டும்
குற்றமுண்டேல் ஒப்பிமனம் மாற வேண்டும்
மாசான வார்த்தையெதும் ஆசான் மாட்டு
மறந்தேனும் ஒருப�ோதும் பேசான் என்ற
ஆசாரம் உள்ளவனே நல்ல சீடன்
அறனறிந்த நல்வாழ்விற் கருக னாவான்

குருபக்தி இல்லாத கார ணத்தால்
குழப்பங்கள் பள்ளிகளில் குமுறக் கண்டோம்
தருபுத்தி ஆசானைத் தாக்கிப் பேசித்
தமக்கேத�ோ உரிமையெனத் தருகிக் க�ொண்டு
கருமத்தைக் கல்விதனைக் கருதி டாமல்
கடமைமறந் துரிமைபுகல் கட்சி கட்டும்
சிறுபுத்தி மாணவரைச் சேர்ந்து விட்டால்
சீரழியும் பள்ளிகளின் சிறந்த சேவை!

ஓதலினும் மிகச்சிறந் த�ொழுக்க மாகும்
உண்மைதனை மாணவர்கள் உணர வேண்டும்
மேதினியில் சிறப்படைந்த மேல�ோ ரெல்லாம்
மேன்மையுற்ற காரணம்நல் ல�ொழுக்க மேதான்
வேதனைகள் வந்தாலும் விலகிப் ப�ோகும்
வெற்றிகளும் நல்லொழுக்கம் விரவி ன�ோர்க்கே!
ஆதலினால் மாணவர்நல் ல�ொழுக்கம் தன்னை
ஆருயிர்போல் கருதிஅதைக் காக்க வேண்டும்

கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

10

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

ஆய்வுச் சாரல்

11

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

வகுப்பறைக் கற்பித்தலில் பேச்சுத் திறனின் செல்வாக்கும் ஆளுமையும்

முனைவர் சேகர் நாராயணன்

தலைவர், தமிழ் ஆய்வியல் பிரிவு, ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்,

உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை மற்றொன்று
ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறையில் உயிரைப் பெறுகிறான். ஆசிரியரின்

வகுப்பறையில் அவன் அறிவைப் பெறுகிறான். வகுப்பறையில்
அடிப்படை ம�ொழித்திறன்களில் பேச்சுத்திறன் ஒருவருக்கு
இன்றியமையாததாக அமைகிறது. ஆளுமை என்பது ‘personality’
என அழைப்பர். எனவே, ஆளுமைத்திறன் மேம்பாட்டிற்கு
உடல்வளமும் உள்ளவளமும் எத்தனை இன்றியமையாதத�ோ அதே
ப�ோன்று பேச்சுத்திறனில் செல்வாக்குப் பெறுவது மிக முக்கியமாகும்.
ஆண்மை என்றாலே ஆளுமை ப�ொருந்திய என்பது ப�ொருள்.
ச�ொல்லாண்மை என்றால் ச�ொல்லை எடுத்தாளுகின்ற திறன்.
எந்தத் துறையில் இருப்பவராக இருந்தாலும் அந்தத் துறையில்
ஆளுமை மிக்கவராக இருப்பதற்குச் ச�ொல்லாண்மை தேவை.
ச�ொல்லாண்மை மிக்கவரின் ச�ொல்லைக்கேட்டு உலகமே அவர் ச�ொற்படி நடக்கும்
என்கிறார் வள்ளுவர்.

• தகவல் பறிமாற்றத்திறன்
பிறரிடம் தெரிவிக்க விரும்புகிற செய்தியைக் கேட்பவர்கள் அல்லது அதைப்படிப்பவர்கள்
உடனே கடைப்பிடிக்கும் அளவுக்குத் திறம்பட தகவலைத் தெரிவிக்கின்ற ஆற்றல் எவர்
ஒருவர் பெற்றிருக்கின்றார�ோ அவரே பேச்சுத்திறனால் ஆளுமைத்திறன் மிக்கவர். இந்த
ஆற்றலைப் பெற்றவர்களாக இருப்பவர் ஆளுமைத்திறனை மேம்படுத்திக்கொள்ள
விரும்புகிறவர்கள். இந்தத் தகவல் பரிமாற்றத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

• பேச்சே முதன்மையானது
ஒருவர் மற்றொருவருக்கு ஒரு தகவலைத் தெரிவிக்க விரும்பினால் பல்வேறு முறைகளில்
தெரிவிக்கலாம். காட்டாக, சைகைகளின் மூலம், படங்களின் மூலம் தெரிவிக்கலாம்.
இவற்றை non-verbal communication என்பர். ஆனால், ச�ொற்கள் (verbal) மூலம்தான்
நாம் மிகுதியாக தகவல்களைத் தெரிவிக்கின்றோம். ச�ொற்களைப் பயன்படுத்தித் தகவல்
தெரிவிப்பதில் எழுத்து மற்றும் பேச்சு என இருவகை இருந்தாலும், தகவல் பரிமாற்றத்தில்
முக்கால் பகுதி பேச்சு மூலம்தான் நடைபெறுகிறது. ஒரு நாளுக்குச் சராசரியாக ஒருவர்
34020 ச�ொற்களைப் பேசுகிறார்கள். ஆகவே, பேச்சே முதன்மையானது. அன்றாட
வாழ்வில் குடும்பத்தில், அலுவலகத்தில், ஆட்சி மன்றத்தில், த�ொழிலகத்தில், வணிகத்தில்
மற்றும் அக, புறவாழ்வின் அனைத்து நிலையிலும் பேச்சு மூலமே மிகுதியான தகவல்களைப்
பறிமாறிக்கொள்கின்றோம். நமது நாட்டில் எந்தத் த�ொழிலில் ஈடுப்பட்டாலும் அவற்றில்
70% துறைகளில் பணியாற்றப் பேச்சுத்திறன் மிக முக்கியம். நாம் பேசுகின்ற பேச்சு
ப�ொருள் ப�ொருந்திய மற்றும் கருத்தாழம் மிக்கவையாக அமைதல் வேண்டும். இதையே
வள்ளுவர்,

ச�ொல்லுக ச�ொல்லைப் பிறித�ோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து (குறள்: 645)

12

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

என்கிறார். அதன�ோடு, ச�ொற்களில் பயன் உடைய ச�ொற்களை மட்டுமே
ச�ொல்லவேண்டும். பயன் இல்லாத ச�ொற்களைச் ச�ொல்லவே கூடாது என்பதை,

ச�ொல்லுக ச�ொல்லின் பயனுடைய ச�ொல்லற்க
ச�ொல்லின் பயனிலாச் ச�ொல்

என்றும் வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.

• மாணவர்கள் பேச்சுத் திறனால் எதையும் சாதிக்கலாம்.
“ஆளுமை வளர்ச்சி ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கும் மிக முக்கியமான விஷயம்.
பள்ளி அல்லது கல்லூரி மாணவர்கள், வேலைக்குப் ப�ோகிறவர்கள் என யாராக
இருந்தாலும், அவர்களுக்கு ஆளுமை வளர்ச்சி மிகவும் அவசியம். பேச்சுத்திறன்,
எழுத்துத் திறன், உடை அலங்காரம், சூழ்நிலையைச் சமாளிக்கும் திறன், தலைமை
வகிக்கும் பண்பு, நேர்காணலில் பேசும் திறன் எனப் பலவும் ஆளுமைக்குள் அடங்கும்.
ஒவ்வொரு திறனும் வித்தியாசமானவை என்றாலும் ஒன்றுக்கு ஒன்று த�ொடர்பு உண்டு.

ஆளுமைத் திறனில் மிகவும் முக்கியமான இடம் பேச்சுத் திறன் என்று
அழைக்கப்படும் (Communication) கம்யூனிகேஷனுக்குதான்” என்கிறார் கார்த்திக். மேலும்
அவர், “நாம் ச�ொல்வதை உள்வாங்கி மற்றவர் புரிந்து க�ொண்டு பதில் ச�ொல்வதுதான்
கம்யூனிகேஷன். பேசும்போது சாதாரணமாகப் பேசிவிடுகிற�ோம். ஒவ்வொரு
வார்த்தையையும் உச்சரிக்கும்போதும் நாம் பேசும் தன்மை, குணம், தைரியம்,
அறிவுத்திறன் அனைத்தும் வெளிப்படும். பேச்சுத்திறனில் இரண்டு விஷயங்களைக்
கவனிக்க வேண்டும்.

ச�ொல்லக்கூடிய விஷயத்தைத் தெளிவாகச் ச�ொல்ல வேண்டும். அதே சமயம்,
அதை யாரிடம் ச�ொல்கிற�ோம�ோ, அவர்கள் கேட்கக்கூடிய நிலையில் இருக்கிறார்களா
என்று உறுதிசெய்ய வேண்டும். அதேப�ோல் மற்றவர் ச�ொல்வதை முழுமையாகக் கேட்க
வேண்டும். மற்றவர் பேசுவதைக் கேட்கும் ப�ொறுமைதான் நமக்கு இருப்பதில்லை.
கம்யூனிகேஷன் என்பது, கருத்து வேற்றுமை உண்டாகாமல், வார்த்தையால் புரியவைப்பது.
ச�ொல்ல வந்ததைத் தவறாக வெளிப்படுத்தும்போது அது கருத்து வேற்றுமை,
மனவருத்தம், உறவில் விரிசல் ப�ோன்ற பிரச்னையை ஏற்படுத்தும். இதற்கு எபெஃக்டிவ்
கம்யூனிகேஷன் (Effective Communication) அவசியம்.

சில நேரங்களில் நம்முடைய உணர்வைச் சரியாகக் கையாள முடியாமல்
ப�ோகும்போது நாம் ச�ொல்ல வருவதைத் தெரிவிக்க முடியாமல் ப�ோகும். அந்த நேரத்தில்
உணர்ச்சிவசப்படாமல் தெளிவாகச் சிந்தித்துப் பேச வேண்டும். தவறான விஷயத்தைச்
சரி என்று வாதாடக் கூடாது. வாதாடுவதைத் தவிர்த்தாலே சக நண்பர்கள் மத்தியில்
நாம் ஹீர�ோவாக இருப்போம். ஒருவர் நன்றாக உடை அணிந்திருந்தால் மட்டும்
ப�ோதாது. நாம் பேசும் வார்த்தைகள்தான் நம்மை யார் என்று உறுதிசெய்யும். எதை,
யாரிடம், எப்படி, எப்போது பேசுகிற�ோம் என்ற தெளிவு வேண்டும்.

நாமே பேசுவது, மற்றவர் பேசும்போது பேசாமல் இருந்து கவனிப்பது,
இன்னொருவர் பேசுவதைச் சமாளிப்பது, மற்றவர் பேசுவதைக் கண்டுக�ொள்ளாமல்
இருப்பது இந்த நான்கையும் திறம்படக் கையாளுவதுதான் 'எஃபெக்டிவ் கம்யூனிகேஷன்'.

13

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

ஆகவே, பேச்சுத்திறனை வசப்படுத்த அடிப்படை ப�ொது அறிவு மட்டும் இருந்துவிட்டால்
ப�ோதாது.நாகரிக பேச்சும் அவசியம். இவை அனைத்தையும் விட பேசும்போது, நாம்
ச�ொல்வதை மற்றவர் கவனிக்கிறாரா? கேட்டும் கேட்காமல் இருக்கிறாரா? பதில்
ச�ொல்ல விருப்பம் இல்லையா? எனப் பல க�ோணங்களில் ய�ோசிக்க வேண்டும்.

தாய்மொழியில் பேச சிக்கல் இருக்காது. ஆனால், ஆங்கிலம் உலக ம�ொழியாக
திகழ்ந்துவருகிறது. இதில்தான் நாம் திறமையை அதிகமாக வளர்த்துக்கொள்ள
வேண்டும்.

ஆங்கிலம், தமிழ் ப�ோல் ஒரு ம�ொழிதான். பேசப் பேசதான் வரும். அதனால்
தவறாகவே இருந்தாலும் நண்பர்களிடம் ஆங்கிலம் பேசிப் பழகலாம். அப்போதுதான்
ம�ொழி அறிவை வளர்த்துக்கொள்ள முடியும். பேசும் முறையைக் கற்றுக்கொண்ட
ஒருவருக்கு ம�ொழித்திறனும் இருந்துவிட்டால் ஆளுமைத் திறனும் தானாக வந்துவிடும்.
பேசும்போது கவனிக்க வேண்டியவை:
• ஒருவரை மட்டம் தட்டிப் பேசக்கூடாது.
• அர்த்தமில்லாமல் வீண் வாதங்களைத் தவிர்க்க வேண்டும்.
• க�ோபத்தில் பேசும்போதுகூட வார்த்தையைக் கவனித்துப் பேச வேண்டும்.
• மாணவர்களிடம் பேசும்போது அவர்களை ஊக்குவிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்த

வேண்டும்.
• மற்றவர்களுக்குப் புரியும்படி பேச வேண்டும்.
• ச�ொல்ல வரும் விஷயத்தைச் சுருக்கமாக ச�ொல்லி முடிக்க வேண்டும்.
• மாணவர்கள் விவாதங்கள், கலந்தாய்வு களில் ஆர்வம் செலுத்த வேண்டும்.
• பேசும்போது முதலில் சாதகமான விஷயத்தைச் ச�ொல்லிவிட்டு பிறகு பாதகமான
• செய்தியை ச�ொல்ல வேண்டும்.
• வெளிப்படையாகப் பேசுவதை எல்லார் முன்னிலையிலும் ரகசியங்களை

மறைமுகமாகவும் பேச வேண்டும்.

14

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

முனைவர் செ. ம�ோகன் குமார் செல்லையா

விரிவுரையாளர், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம், பேராக்.

தமிழுறவே திராணி வேண்டும்!

இரும�ொழி திட்டம் வேண்டாம் இரண்டக நிலைமை வேண்டாம்
இருந்தழிழைக் குலைக்க வேண்டாம் இருளில் திளைக்க வேண்டாம்
திரும�ொழியாம் தமிழை நாட்டில் இருண்ட உள்ளம் மாறவேண்டும்
தமிழரே அழிக்க வேண்டாம் இருவிழியும் மலர வேண்டும்

தமிழ்க்கல்வி வாழ வேண்டும் தமிழறிவியல் கற்க வேண்டும்
தமிழர்நெறி செழிக்க வேண்டும் கணிதமும் தமிழில் வேண்டும்
தமிழறம் காண வேண்டும் தமிழர்கல்வி தகமை வேண்டும்
தரணியெங்கும் ஒலிக்க வேண்டும் தமிழுணர்வு எழும்ப வேண்டும்

தமிழ்மொழியும் உயர வேண்டும் இருவேறு கற்றல் வேண்டாம்
தன்மானம் காக்க வேண்டும் இடிபாடு நிலையும் வேண்டாம்
இமியளவும் ச�ோர்வு வேண்டாம் பிறப்புரிமை இழக்க வேண்டாம்
இனியேணும் இழக்க வேண்டாம் பின்னடைவுத் தமிழுக்கு வேண்டாம்

அமுதம�ொழி நிலைக்க வேண்டும் தமிழ்க்கல்வி வளர வேண்டும்
அணிதிரண்டு சேர வேண்டும் தண்டமிழ் தழைக்க வேண்டும்
அமைதியாக நம் உணர்வை தமிழர்மானம் தரணி காக்க
அரசறியச் செய்ய வேண்டும் தமிழுறவே திராணி வேண்டும்!

15

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

கற்பித்தல் த�ொடங்கி கற்றல் வரை
முனைவர் அருள்நாதன் விசுவாசம்

விரிவுரையாளர், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம், பேராக்
த�ொன்று த�ொட்டு கல்வி கற்றல் என்ற சூழலில் கற்பித்தல்
முதலிடம் வகித்து வந்தது எனலாம். குருகுலம் த�ொடங்கி சென்ற
நூற்றாண்டு முற்பகுதி வரை இந்நிலை இருந்ததைக் காண
முடிந்தது. கற்பித்தலின் அணுகுமுறை, கற்பித்தலுக்கான பாடத்
துணைப்பொருள் என கற்பித்தலே முதன்மையாக உணரப்பட்டது.
இதற்குச் சான்றாக கதை ஒன்றைக் கூறுவர். நூறு வருடங்களுக்கு
முன்பு இறந்த ஒரு மருத்துவர�ோ, ப�ொறியியலாளர�ோ,
கணக்காய்வாளர�ோ மீண்டும் இந்த யுகத்தில த�ோன்றினார் என்றால்
அவரால் தன் த�ொழிலை நடத்த இயலாது காரணம் அவர்களுடைய
துறை அபரித வளர்ச்சியையும் மாற்றத்தையும் கண்டிருக்கும்.

அவர்கள் துறைசார்ந்த அணுகுமுறைகள், சாதனங்கள் என எல்லாம் புதியனவாக
இருக்கும். மாறாக, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஆசிரியர் ஒருவர்
மீண்டும் த�ோன்றினார் என்றால் மீண்டும் அவர் தம் ஆசிரியர் பணியில் ஈடுபட இயலும்
எனக் கூறுவர் ஏனெனில், ஆசிரியர் துறையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதே
அதற்குக் காரனம். ஆனால், இன்றைய நிலை அவ்வாறு இல்லை என்பதே உண்மை.
ஏனெனில், பத்து வருடங்களுக்கு முன் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்,
இன்று மீண்டும் இப்பணிக்குத் திரும்பினார் என்றால் பல புதிய விடயங்களைத் தெரிந்து
க�ொள்ளாமல் தமது ஆசிரியர் பணியைத் திறம்பட மேற்கொள்ள இயலாது. கால
மாற்றத்திற்கு ஏற்ப கல்வித்துறையும் மிகத் துரிதமாக பல மாற்றங்களை அடைந்து
வருகின்றது என்பது திண்ணம். அதிநவீன த�ொழிற்நுட்ப வளர்ச்சியும் அதன் பயன்பாடும்
நான்காம் த�ொழில் புரட்சி ஆகியவை இம்மாற்றங்களுக்கு அடிப்படையாக உள்ளன.

கல்வித்துறையின் அடிப்படையாக விளங்கும் கற்றலும் கற்பித்தலும் கண்ட மாற்றங்களைக்
கீழ்க்கண்டவாறு காணலாம்.

படம்1: கற்றல் கற்பித்தலின் பரிணாமம் கற்பித்தல்

16

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

கற்பித்தல்:
கற்பித்தல் மட்டுமே நடைபெற்ற காலக்கட்டம் இருந்ததைச் சரித்திரத்திலும் பழைய
இலக்கியங்களிலும் காண்கின்றோம். குருகுலக் கல்வியை இதன் காட்டாகக்
க�ொள்ளலாம். இங்கு மாணவர் சேர்க்கை முதலே எல்லா உரிமையும் ஒருங்கே
உடையவராக ஆசிரியர் திகழ்வார். கற்பிக்க உதவும் சாதனங்களையும்
அணுகுமுறைகளையும் அங்குக் காண முடிந்தது. தமிழர்கள் அறுபத்து நான்கு
கலைகளையும் கற்றுத் தேர்ந்தனர் எனக் கூறுங்கால் கற்பித்தல் நிச்சயம் நடந்திருத்தல்
வேண்டும். த�ொல்காப்பியரும் பனம்பாரனாரும் ஒருசாலை மாணாக்கார் எனும் செய்தியின்
வழி கிறிஸ்துவிற்கு முன்பே தமிழ்க்கூறும் நல்லுலகில் கற்பித்தல் நடைபெற்று வந்திருப்பது
நாம் அறிந்தத�ொன்றாகும். மகாபாரதக்கதையில் வரும் துர�ோணர் ப�ோன்ற
கதாபாத்திரங்கள் அக்கால ஆசிரியர்களின் நிலையை நன்கு விளக்குவதாக அமைகின்றது.

அக்கால நிலையில் கற்பித்தல் முதன்மை பெற்றிருந்தது. கற்பித்தலின் விளைவாக

மட்டுமே மாணவரின் கற்றல் அல்லது மாணவரின் தேர்ச்சி பார்க்கப்பட்டது. இந்நிலையில்

ஒருசில மாற்றங்கள் ஏற்பட்டு வந்திருந்தாலும், அம்மாற்றங்கள் கற்றுக் க�ொடுக்கப்பட்ட

பாடப்பொருள்களில் இருந்ததே தவிர அணுகுமுறையில் பெரிய அளவில் எவ்வித

மாற்றங்களும் ஏற்படவில்லை. இந்நிலை 19-ஆம் நூற்றாண்டுவரை த�ொடர்ந்தது.

காட்டாக, நம் நாட்டு த�ோட்டப்புறங்களில் உருவான திண்ணைப் பள்ளிவரை இந்நிலை

த�ொடர்ந்தது எனலாம். பாடப்பொருள்களில் மாற்றம் இருப்பினும் அணுகுமுறை

‘குருகுல’ அணுகுமுறையே த�ொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வந்தது.

த�ொடக்கப்பள்ளிகளுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட கலைத்திட்டம் (KBSR) அமலுக்கு

வரும்வரை பள்ளிக்கூடங்களிலும் இந்நிலை இருந்து வந்தது.

கற்பித்தல் கற்றல்:
த�ொடக்கப்பள்ளிகளுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட கலைத்திட்டம் அமலுக்கு வந்த பின்
கற்பித்தல் கற்றல் (Pengajaran dan Pembelajaran) என்ற கருத்துமை முன்னெடுக்கப்பட்டது.
இக்காலக்கட்டத்திலும் கற்பித்தலுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. பாடத்
துணைப்பொருட்கள் (Bahan Bantu Mengajar - BBM) ப�ோன்ற ச�ொற்களின் பயன்பாடுகள்
இதனை உறுதிபடுத்துகின்றன. இக்காலக்கட்டத்தில் ஆசிரியர்களின் கற்பித்தலை
வளப்படுத்தும் நடவடிக்கைகள், பயிற்சிகள் பல நடத்தப்பட்டன. ஆக, ஆசிரியர்களின்
கற்பித்தலுக்கு முதன்மை வழங்கப்பட்டது; மாணவர்களின் கற்றலானது ஆசிரியரின்
கற்பித்தலின் விளைபயனாக மட்டுமே கருதப்பட்டது. மாணவன் ஆசிரியரின் கற்பித்தலின்றி
சுயமாக எதனையும் கற்க இயலாது என்று பெரும்பாலான ஆசிரியர்கள் நம்பிக்கை
க�ொண்டிருந்தனர்.

கற்றல் கற்பித்தல்
த�ொடக்கப்பள்ளிகளுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட கலைத்திட்டத்தைத் த�ொடர்ந்து
த�ொடக்கப்பள்ளிக்கான தர அடிப்படையிலான கலைத்திட்டம் (KSSR) அமலுக்கு வந்த
சூழலில் கற்பித்தலைப் பின்தள்ளி கற்றல் முதன்மைப்பெற்றது. ஆக, கற்றல் கற்பித்தல்
(Pembelajaran dan Pengajaran) என அமலுக்கு வந்தது. இருப்பினும் ஆசிரியர்களே
த�ொடர்ந்து வகுப்பறையில் அதிகம் பங்களிப்பவராக இருப்பதைக் காண முடிந்தது.
மாணவர்கள் ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடப்பொருளை வெறுமனே பெறுகின்ற
நிலையினை இக்காலக்கட்டத்திலும் காண முடிந்தது.

17

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

கற்றல் வழிகாட்டல்
த�ொடர்ந்து 21-ஆம் நூற்றாண்டு கற்றல் கற்பித்தல், 21ஆம் நூற்றாண்டு வகுப்பறை
என்ற க�ொள்கைகள் அமலுக்கு வந்தபின் கற்றல் கற்பித்தல் என்ற க�ொள்கையில் மிகப்
பெரிய மாற்றம் ஏற்பட்டு, கற்பித்தல் என்ற ச�ொல் மறைந்து கற்றல் வழிகாட்டல்
(Pembelajaran dan Pemudahcara) என புதிய பரிணாமத்தை அடைந்தது. ஆசிரியரின்
கற்பித்தல் என்ற நிலை மிகப் பெரிய மாற்றம் கண்டது. மாணவன் ஒருவனின் கற்றலுக்கு
ஆசிரியரின் கற்பித்தல் திறன் பெரிதும் துணை புரியாது, ஆனால் ஆசிரியர் மாணவர்
ஒருவரின் கற்றலுக்கு வழிகாட்ட மட்டுமே இயலும் என்ற கருத்துமை முன்னெடுக்கப்பட்டது.
வகுப்பறையில் ஆசிரியரின் பங்களிப்பு, கட்டுப்பாடு வெகுவாக குறைந்தது. மாணவன்
ஒவ்வொருவரும் தத்தம் நிலையில் புதிய விடயங்களைக் கற்றுக் க�ொள்ள ஆசிரியர்கள்
வழிகாட்டக்கூடியவராகத் திகழ வேண்டும். மாணவர்கள் 4C எனப்படும் த�ொடர்பாடல்,
ஆக்கம், விமர்சனசிந்தனை, உடனுழைப்பு என்ற அடிப்படையில் பாடங்களைக் கற்றுக்
க�ொள்ள ஆசிரியர்கள் வழிகாட்டாக இருத்தல் வேண்டும்.

கற்றல்:
இம்மாற்றம் நடைபெற்றுக் க�ொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் நமது கல்வி
நான்காவது த�ொழிற்புரட்சியின் காரணமாக மற்றும�ொரு மாற்றத்தை எதிர்கொள்ள
தயாராகும் சூழலில் இருக்கின்றது. இந்நிலையில் ஆழக் கற்றல் (Deep Learning) எனும்
புதிய கல்வி அமலாக்கத்தை ஆசிரியர் ஒவ்வொருவரும் எதிர்கொள்ள தயாராக வேண்டும்.
இந்தப் புதிய பரிணாமத்தில் கற்றல் மட்டுமே இருக்கும்; கற்பித்தல் இல்லாத சூழல்
ஏற்படும். மாணவர் ஒருவர் சுயமாக ஒன்றைக் கற்றுக்கொள்ள ஆசிரியர் மாணவர்களைத்
தயார் படுத்த வேண்டிய சூழலில் இருத்தல் வேண்டும். ஆகவே, 4C-ஆக இருந்த
அடிப்படைத் திறன்கள் இப்பொழுது 6C-ஆக மாற்றம் கண்டுள்ளது. ஆக்கம், ஆய்வு,
த�ொடர்பாடல், இணைந்து செயல்படுதல் ஆகியவற்றுடன் குடிமைப்பண்பு, ஆளுமை
எனும் திறன்களும் இதில் அடங்கும்.

முடிவு:
ஆசிரியர்களும் வருங்கால ஆசிரியர்களும் இந்த மாற்றங்களை உணர்ந்தால் மட்டுமே
நம் நாட்டில் சிறந்த கல்விமுறையை உருவாக்கிட இயலும். ஆசிரியர்கள் தாங்கள்
மட்டுமே அறிவின் ஊற்று என்ற எண்ணத்தை மாற்றி, த�ொழிற்நுட்ப பயன்பாட்டின்
வழியும் பணித்திட்டம் வழி கற்றல் (project based learning) வழியும் மாணவர்கள் உலகில்
பல்வேறு மூலைகளில் இருந்தும் பல நபர்களிடம் இருந்தும் தகவல்களைப் பெற்று
தங்கள் பணித்திட்டத்தை நிறைவு செய்ய வழிகாட்ட வேண்டும். ஆசிரியர்கள் இந்த
மாற்றத்தை ஏற்றுக் க�ொள்ளும் மனநிலையில் இருக்கின்றனரா? பள்ளியில் அதற்கான
த�ொழிற்நுட்ப வசதிகள் உள்ளனவா? மாணவர்களின் தயார்நிலை எவ்வாறு உள்ளது?
பெற்றோர் இவ்வாறான புதிய அணுகுமுறையினை ஏற்றுக் க�ொள்வார்களா? மாற்றம்
இல்லையெனில் முன்னேற்றம் இல்லை. இதனை மனதில் க�ொண்டு செயல்படுவ�ோம்.
மாற்றம் ஏற்போம்; முன்னேற்றம் க�ொள்வோம்.

18

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

செய்யுளும் ம�ொழியணியும் மனமகிழ் கற்றலும்
(Language Arts and Fun Learning)

திரு. குணசீலன் சுப்பிரமணியம்

விரிவுரையாளர், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம், பேராக்.

முன்னுரை:
மலேசியக் கல்வி அமைச்சு, மாணவர்களின் முழுமையான ஆற்றலை மேம்படுத்துவத�ோடு
சமன்நிலை, இணக்கம், உயர்வெண்ணம் ஆகியவற்றை உறுதிப்படுத்தி அறிவாற்றல்,
ஆன்மிகம், உள்ளம், உடல் ஆகிய கூறுகளை உள்ளடக்கிய மாந்தரை உருவாக்கும் பல
திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அவ்வகையில், 2011 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட
தர அடிப்படையிலான கலைத்திட்டத்திலும் (கே.எஸ்.எஸ்.ஆர்) பின், 2017இல்
சீரமைக்கப்பட்ட கே.எஸ்.எஸ்.ஆர் கலைத்திட்டத்திலும் 21ஆம் நூற்றாண்டு திறன்களைக்
க�ொண்ட மாணவர்களை உருவாக்குவதற்கான கற்றல் நடவடிக்கைகளை
முன்னெடுத்துள்ளது. சிந்திப்பதிலும் வாழ்வியல் திறனிலும் த�ொழில் தர்மத்திலும்
மேம்பாடடைந்த மாணவர்கள் உருவாக்கத்தை அடிப்படையாகக் க�ொண்ட கற்றல்
திறன்களும் அணுகுமுறைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவ்வகையில்,
நெகிழ்வுத் தன்மையும் மகிழ்ச்சியும் நிறைந்த வகுப்பறையில் மாணவர்கள் தங்களின்
அறிவார்ந்த சிந்தனைத் திறன்களையும் மென்திறன்களையும் வளர்த்துக் க�ொள்வதற்கு
ஏதுவாக Language Arts (செய்யுளும் ம�ொழியணியும்), Fun Learning (மனமகிழ் கற்றல்)
ஆகிய அணுகுமுறைகளைக் கல்வியமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

செய்யுளும் ம�ொழியணியும் (Language Arts):
செய்யுளும் ம�ொழியணியும் என்பது ஒருங்கிணைக்கப்பட்ட கே.பி.எஸ்.ஆர், கே.பி.எஸ்.
எம் கலைத்திட்டத்தில் மலேசியக் கல்விச் சூழலில் இலக்கிய வகைகளைக் குறிக்கும்
த�ொடராக வழங்கப்பட்டு வந்துள்ளது. தமிழுக்கே சிறப்பாக அமைந்துள்ள இலக்கியம்
சார்ந்த கூறுகளை விட்டுக்கொடுக்காமல், செய்யுளும் ம�ொழியணியும்தான் Language
Arts என்று, புதிய கே.எஸ்.எஸ்.ஆர் கலைத்திட்டத்தில் அதன் நிலைப்பாடு த�ொடர்ந்து
தக்க வைக்கப்பட்டுள்ளது. இன்று செய்யுளும் ம�ொழியணியும் கற்றல் தரங்களை
உள்ளடக்கிய தனித் திறனாக, தனி பாட வேளையில் கற்பிக்கப்படுகின்றது. இதில்
த�ொடக்கப்பள்ளிக்கான கலைத்திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள செய்யுள்கள்,
பழம�ொழிகள், இணைம�ொழிகள், உவமைத்தொடர்கள், மரபுத்தொடர்கள்,
இரட்டைக்கிளவிகள் ஆகியவை அடங்கியுள்ளன. மாணவர்கள் செய்யுள் ம�ொழியணிகளை

19

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

வாசித்து, உய்த்துணர்ந்து, வளமான ம�ொழியாற்றலுடன் படைப்புகளைப் படைப்பவர்களாக
உருவாக வேண்டுமென்பதே கலைத்திட்டத்தின் ந�ோக்கமாகும்.

செய்யுளும் ம�ொழியணியும் தான், Language Arts எனும் நிலையில், அதன் (Lan-
guage Arts) கூறுகளான கதை, கவிதை, இசை கூட்டிப் பாடுதல், வசனம் பேசுதல்,
நடிப்பு என கலை சார்ந்த நடவடிக்கைகளை இப்பாடத்தில் உட்புகுத்திக் கற்பிக்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் வாழ்வியல�ோடு த�ொடர்புடைய, வயதிற்கேற்ற
சவால் நிறைந்த, ஆர்வத்தைத் தூண்டும் நடவடிக்கைகளைக் க�ொண்ட, கவனிப்பும்
ஊக்குவிப்பும் நிறைந்த, ஆக்கத் திறனை வளர்க்கும் கற்றலாகச் செய்யுளும்
ம�ொழியணியும் ஆசிரியர்களால் வகுப்பறைகளில் நடத்தப்பட வேண்டும் என்பதே
கல்வியமைச்சின் எதிர்ப்பார்ப்பு. அவ்வகையில்தான் இந்தச் செய்யுளும் ம�ொழியணியும்
கற்றல் கற்பித்தல் வகுப்பறைகளில் மனமகிழ் கற்றல் அணுகுமுறையைக் க�ொண்டு
அமையவேண்டுமென கல்வியமைச்சின் கலைத்திட்ட மேம்பாட்டுப் பிரிவு
பரிந்துரைத்துள்ளது(கே.எஸ்.எஸ்.ஆர் ஆசிரியர் வழிகாட்டி நழுவம்:2010). இதற்கான
ப�ோதுமான விளக்கங்கள், மாநிலங்களின் தமிழ்மொழி அதிகாரிகள், தேசிய முதன்மைப்
பயிற்றுநர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மனமகிழ் கற்றல் (Fun Learning:
2011ஆம் ஆண்டு மலேசியக் கல்வியமைச்சு, கே.எஸ்.எஸ்.ஆர். கலைத்திட்டத்தை
அமல்படுத்திய ப�ோது Fun Learning அல்லது Didik Hibur என்றழைக்கப்படும் மனகிழ்
கற்றல் அணுகுமுறையை அறிமுகப்படுத்தியது. மனமகிழ் கற்றல் என்பது நெகிழ்ச்சித்
தன்மை நிறைந்த, இதமான எந்த வித அழுத்தமும் அற்ற மகிழ்ச்சியான வகுப்பறை
சூழலைக் முன்னிலைப்படுத்தும் கற்றல் வழிகாட்டல் அணுகுமுறையாகும். இவ்வகை
வகுப்பறைகளில் மாணவர்கள் தத்தம் திறன்களை உணர்ந்துக�ொண்டு, வாழ்க்கை பற்றிய
புரிதலை இயல்பாகவே கற்றுக்கொள்ள வாய்ப்பினைப் பெறுகின்றனர். மனமகிழ் சார்ந்த
கற்றல் வழிகாட்டல்வழி மாணவர்களிடையே மகிழ்ச்சிகரமான மன உணர்வும் தைரியமும்
தன்னம்பிக்கையும் வளரும். மேலும், ஆசிரியர்களுடனான மாணவர்களின் உறவு
மேம்படுவத�ோடு, சுமூகமான கருத்துப் பரிமாற்றங்களும் நிகழும். கலைத்திட்டத்தின்
எதிர்ப்பார்ப்பான, அறிவாற்றலும் திறனும் பண்பும் நிறைந்த மாணவர்களின்
உருவாக்கத்திற்கு இத்தகைய மனமகிழ்சார் கற்றல் சூழல் மிக-மிக அவசியமாகும். இந்த
மனமகிழ் கற்றல் அணுகுமுறையில் ‘குறைவான கற்பித்தல் நிறைவான கற்றல்’ எனும்
க�ோட்பாட்டிற்கேற்ப ஆசிரியர்கள் வழிகாட்டிகளாக மட்டுமே இயங்குதல் வேண்டும்.
மாணவர்கள் சுயமாகக் கற்றுக்கொள்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும்
நடவடிக்கைகளையும் ஆசிரியர்கள் வரையறுத்து வழிகாட்ட வேண்டும். இந்த மாணவர்
மையக் கற்றலில் ‘Teach less, Learn More’ என்ற வரிகளின் ப�ொருளை ஆசிரியர்கள்
நன்குணர்ந்து செயல்படுவது மிக முக்கியம். ஆசிரியர்களின் புத்தாக்கச் சிந்தனையும்
ஆக்ககரமான செயல்பாடுமே வகுப்பறை கற்றல் நெகிழ்வுத் தன்மைமிக்கதாகவும்
மகிழ்ச்சி நிறைந்ததாகவும் அமைய உதவும்.

புத்தாக்கச் சிந்தனை நிறைந்த கற்பித்தல் வழிகாட்டலின்வழி மாணவர்களின்
அறிவு, உணர்வு, நடத்தை ஆகியவை மேம்படும் என்று கல்வி ஆய்வாளர் அப்துல்
ரஷிட்(2012) குறிப்பிடுகின்றார். ஆசிரியர்களின் புத்தாக்கச் சிந்தனை இல்லாத
வகுப்பறைகளில் கல்வியில் நாட்டமில்லாத, அறிவுக்கு வேலை க�ொடுக்காத மாணவர்களே
நிறைந்திருப்பர். இந்நிலையில் கல்வியமைச்சு வகுத்தளித்துள்ள வரையறைக்குட்பட்டு,

20

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

மனமகிழ் கற்றல் அணுகுமுறைகளை ஆசிரியர்கள் பின்பற்றி கற்றல் நடவடிக்கைகளைத்
திட்டமிட்டால் நிறைவான மாற்றங்களைக் காணமுடியும்(அப்துல் ரஷிட், 2012:39).

உளவியல் அடிப்படையில் மகிழ்ச்சிகரமான சூழலில் கற்கின்ற மாணவர்களின்
கற்றல் செயல்பாடுகள் சிறப்பானதாக அமையுமென உளவியலாளர்கள் கருதுகின்றனர்.
அத்தகு நிலையைக் கருத்திற்கொண்டுதான் மனமகிழ் கற்றல் கூறுகள்
வரையறுக்கப்பட்டுள்ளன. இதன்வழி மாணவர்களின் உடல், உள, உணர்வு, சமூக
நிலைகளில் நேர்மறை மாற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு.

பரிந்துரைகள்:
செய்யுள் ம�ொழியணிகளையும் ப�ொருளையும் அறிந்து மனனம் செய்து கூறும் மரபுவழி
கற்றல் முறைகள் இன்று மாறிவிட்டன. காலத்தின் தேவைக்கேற்ப உயர்நிலைச்
சிந்தனைத் திறன் அடிப்படையில் ஒவ்வொன்றையும் பயன்பாட்டு நிலையிலும் பகுத்தாய்ந்து,
மதிப்பிட்டு, ஏடல்களையும் படைப்புகளையும் உருவாக்கும் வகையிலும் கற்றல், மதிப்பீட்டு
சூழல்கள் அமைந்துள்ளன. நம் ஆசிரியர்கள் ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ எனும்
பழைய அணுகுமுறைகளையே பின்பற்றிக் க�ொண்டிருக்காமல் ‘புதியன புகுதலும் வழுவல
கால வகையினானே’ என, காலத்தேவைக்கேற்ற புதிய கற்பித்தல் செயல்முறைகளைப்
பயன்படுத்திச் செயல்பட வேண்டும். அவ்வகையில் ஆசிரியர்கள் செய்யுளும் ம�ொழியணியும்
பாடத்தின் ந�ோக்கத்தைப் புரிந்துக�ொண்டு, முறையான திட்டமிடல�ோடு மாணவர்களைக்
கவர்ந்திழுக்கும் உத்திகளைப் பயன்படுத்தி கற்றல் கற்பித்தலை நடத்த முனைய
வேண்டும்.

மனமகிழ் கற்றல் நடவடிக்கைகள்:
ஆசிரியர்கள் மனமகிழ் கற்றலின் கூறுகளை நன்கு அறிந்து க�ொள்வத�ோடு தங்களின்
நேர்மறை தன்மைகளை வளர்த்துக் க�ொண்டால், விளைபயன்மிக்க கற்றல் கற்பித்தலை
வகுப்பறையில் காண முடியும்.

ஆசிரியர்கள் கற்றல் நடவடிக்கை திட்டமிடலில் பின்பற்ற வேண்டிய கூறுகள்:

அ. நகைச்சுவை உணர்வு, முருகுணர்ச்சி, விளையாட்டு, இசை, நாடகம், கலை
சார்ந்த கற்றல் நடவடிக்கைகள்

ஆ. ஆசிரியர் மீதான பயமின்மையும் ஒத்திசைவான மனநிலையும்

இ. ஈர்ப்பான பல்வேறு கற்றல் நடவடிக்கைகள்
- சிக்கல் களையும் விளையாட்டு நடவடிக்கைகள்
- கலை சார்ந்த ஆடல், பாடல், நடிப்பு, பாகமேற்றல் ப�ோன்ற நடவடிக்கைகள்
- ஏற்புடைய, கவரக்கூடிய பயிற்றுத்துணைப் ப�ொருட்கள், தகவல் த�ொழில் நுட்பம்
சார்ந்த காட்சிகள், விளையாட்டுகள்

ஈ. வெற்றியைக் க�ொண்டாடுதலும் த�ோல்வியைத் தூற்றுதலும் இல்லாத நடவடிக்கைகள்
- பல்வேறு ம�ொழி விளையாட்டுகள்
- நல்லுணர்வை வளர்க்கும் நடவடிக்கைகள்
- சுதந்திரமாகச் செயல்பட வைக்கும் நடவடிக்கைகள்

21

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

- படைப்பாற்றலை வெளிப்படுத்த உதவும் நடவடிக்கைகள்
- உடல்மொழி சார்ந்த விளையாட்டுகள்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் குறிப்பாக, பீடிகையின் ப�ோத�ோ பாட முடிவின்
ப�ோத�ோ இந்தக் கற்றல் அணுகுமுறைகளைக் கையாளலாம். கதைக் கூறுதல், பாடல்
பாடுதல், கவிதை ஒப்புவித்தல், நடித்தல், பாகேமேற்றல் ப�ோன்ற படைப்பாக்கக்
கூறுகளை வகுப்பில் ஆசிரியர்கள் நடத்துவதன்வழி மாணவர்களின் தனித் திறமைகள்
வெளிப்படுவத�ோடு பெருமித உணர்ச்சியும் மகிழ்ச்சியும் உருவாகும்.

மனமகிழ் கற்றலை முன்னெடுக்கும் ஆசிரியரின் தன்மைகள்:

அ. வகுப்பில் மனமகிழ் கற்றலை முன்னெடுக்கும் ஆசிரியர் நெகிழ்வுத் தன்மை
நிறைந்தவராக இருத்தல் அவசியம்.

• ஆசிரியரின் த�ோற்ற வெளிப்பாடு மிக முக்கியம். அவர் நகைச்சுவையுணர்வும்
மாணவர்களிடம் அணுக்கவுணர்வும் அக்கறையும் மிக்கவராக இருத்தல் வேண்டும்.

• படைப்புணர்வுமிக்கவராக இருத்தல் வேண்டும்.

• சூழலுக்கேற்ப மாற்றங்களை ஏற்றுக் க�ொண்டு செயல்படுபவராக இருத்தல்
வேண்டும்.

• நடவடிக்கைகளைச் சிறப்பாக மேலாண்மை செய்பவராகவும் கட்டளைகளைச்
சரியாகவும் தெளிவாகவும் பிறப்பிக்கும் ஆற்றலுடையவராகவும் இருத்தல்
வேண்டும்.

• வகுப்பறை நடவடிக்கைகளின்போது மாணவர்களை இயல்பாகப் பாராட்டும்
தன்மை க�ொண்டவராக, மட்டம் தட்டாதவராக இருத்தல் வேண்டும்.

இத்தகைய பண்புகளைக் க�ொண்டு, கற்றல் நடவடிக்கைகளைச் சிறந்த
முறையில் ஆசிரியர்கள் நடைமுறைப்படுத்தினால் மாணவர்களிடையே பல்வகை
நுண்ணறிவாற்றல், உயர்நிலைச் சிந்தனைத் திறன், படைப்புத்திறன் ப�ோன்றவை
வளர்க்கப்படுவத�ோடு, 21ஆம் நூற்றாண்டு கற்றல் திறன்களான 6C எனப்படும்
த�ொடர்பாடல் திறன், கூடியிணைந்து செயல்படும் திறன், ஆய்வுச் சிந்தனை, ஆக்கச்
சிந்தனை, குடிமைப்பண்பு, தனிமனித பண்புநலன் ஆகிய அறிவார்ந்த திறன்களும்
பண்புகளும் நன்முறையில் மேம்படும்.

முடிவுரை
தமிழ்க்கல்வியின்வழி ஆய்வு, ஆக்கம், புத்தாக்கம், உருவாக்கம் சிந்தனைகள் க�ொண்ட
தமிழ் மாணவர்களை உருவாக்கும் உன்னதப் பணியில் தமிழாசிரியர்கள் உள்ளனர்.
இந்நிலையில், கல்வியமைச்சு வகுத்தளித்துள்ள அணுகுமுறைகளை பின்பற்றாமல்
ஆசிரியர்கள் செயல்படுவது, தமிழாசிரியர்களையும் தமிழ்ப்பள்ளிகளையும் நம்பி வரும்
தமிழ் மாணவர்களை, 21ஆம் நூற்றாண்டின் கல்விச் சிந்தனைக்கேற்ப மேம்பாடடைந்த
மாணவர்களாக உருவாக்கும் முயற்சியைப் பின்தள்ளும் ஒரு செயலாகும். வகுப்பறை

22

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

செயற்பாடுகளில் மாணவர்களுக்குப் ப�ொருத்தமான மனமகிழ் கற்றல் அணுகுமுறைகளைப்
பயன்படுத்திக் கற்பிக்க வேண்டிய ப�ொறுப்பு ஆசிரியருக்கு அவசியமாகும். வெறுமனே
ஏட்டுக்கல்வியை வழங்கிய காலம் இன்று இல்லை. மாணவர்கள் விரும்புகின்ற
ஆசிரியர்களாக மாறி, வகுப்பறைகளை மாற்றியமைத்துச் செயல்பட வேண்டியது
காலத்தின் கட்டாயம். இதற்கு மனமகிழ் கற்றல் (Fun Learning) அணுகுமுறை
உறுதுணையாக அமையும்.

மேற்கோள் நூல்கள்:
Abdul Rasid Jamian.(2016). Pengaplikasian Teknik Didik Hibur Meningkatkan
Pencapaian Penulisan Karangan Bahasa Melayu, Jurnal Pendidikan Malaysia

41(1)(2016): 39-45
கணபதி.வி.(2002). நற்றமிழ் கற்பிக்கும் முறைகள். சென்னை:சாந்தா பதிப்பகம்.
சுப்புரெட்டியார்.(1970). தமிழ் பயிற்றும் முறை. சென்னை: மணிவாசகம் பதிப்பகம்
தர ஆவணம். ஆண்டு 1 – 5 (BPK)
கே.எஸ்.எஸ்.ஆர் முதன்மைப் பயிற்றுநருக்கான பயிற்சி வழிகாட்டி கையேடு:
ஆண்டு 1-6
KONSEP KSSR.(2010). Bahagian Pembangunan Kurikulum, KPM.
KSSR Mengapa Tranformasi.(2011). BPK.,KPM.
Journal of Tamil Eduation volume. (2016). UPSI
Majalah Pendidik (Edisi Jun 2018)

எங்கள் தமிழ் உயர்வென்று நாம் ச�ொல்லி ச�ொல்லி
தலைமுறைகள் பலகழித்தோம்;

குறைகளைந்தோ மில்லை (பாவேந்தர்)

23

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

ஐந்தாம் ஆண்டு தமிழ்ப்பள்ளி மாணவனிடையே தமிழ் ம�ொழி தாள் இரண்டில்
ஏற்படும் சிக்கல்களும் அதனைக் களைவதற்கான வழிகளும்: ஒரு பகுப்பாய்வு

திரு. முத்துக்குமார் பழனிசாமி

விரிவுரையாளர், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம், பேராக்.

1.0 முன்னுரை:
க�ோர்னம் (2017) கூற்றின் படி கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் எழுத்து முக்கியமான
ம�ொழிக்கூறுகளில் ஒன்றாகும். இந்த எழுத்துக்கூறுகளில் வாக்கியங்கள், வழிகாட்டிக்
கட்டுரை, திறந்தமுடிவுக் கட்டுரை (வடிவம், வடிவமில்லாதது) அடங்கும். தமிழ்ப்பள்ளிகளில்
தமிழ் ம�ொழி தாள் இரண்டில் வாக்கியம் அமைத்தல் (பிரிவு அ), வழிகாட்டிக் கட்டுரை
(பிரிவு ஆ), திறந்தமுடிவுக் கட்டுரை (பிரிவு இ) ஆகிய கேள்விகள் இடம் பெற்றுள்ளன
(கே.எஸ்.எஸ்.ஆர், 2014). மாணவன் தாள் இரண்டு எழுதும் நடவடிக்கையில் நிறைய
சிக்கல்கள் எதிர்கொள்வதை ஆய்வாளர் கண்டறிந்தார். ஆகவே மாணவனுக்கு எந்த
வகையான சிக்கல்கள் ஏற்படுகின்றன என்பதை வகுப்பு உற்றுந�ோக்கல், ஓர் ஆசிரியரின்
நேர்காணம், ஒரு மாணவரின் நேர்காணல், மாணவனின் வாக்கிய ஆவணங்கள்
ஆகியவற்றின் மூலம் சிக்கலைக் கண்டறிந்தார். இறுதியாக இச்சிக்கலை எப்படிக்
களையலாம் என்று வழிகளையும் பரிந்துரைத்துள்ளார்.

2.0 ஆய்வின் குவியம்:
மலேசியத் தேர்வு வாரியத்தின் (2014,2015) புள்ளிவிவரப்படி மாணவர்கள் தாள் இரண்டின்
வினாக்களுக்கு விடையளிப்பதில் சிரமப்படுகிறார்கள். வாக்கியங்கள், வழிகாட்டிக்
கட்டுரை, திறந்தமுடிவுக் கட்டுரை ஆகியனவற்றை ஆசிரியரின் வழிகாட்டல�ோடு
எழுதுவதிலும் கேள்வியில் வழங்கப்பட்ட கட்டளைகளைக் கவனித்து தாள் இரண்டிற்குப்
பதில் எழுதுவதிலும் சிக்கல்களை எதிர்நோக்குகிறார்கள்.

3.0 ஆய்வு இலக்கியங்களின் மீள்நோக்கு:
மாணவர்களின் எழுத்துப்பிழைகள், ச�ொற்பிழைகள், உயர்திணை அஃறிணை, ஒருமை
பன்மை, பால்களைப் பயன்படுத்தும் விதம், சந்திப்பிழை, ணகரம், னகரம், ரகரம், றகரம்,
லகரம், ழகரம், ளகரம், நிறுத்தற்குறிகள் ஆகியன மாணவர்களின் வாக்கியம் எழுதும்
ந�ோக்கத்தைப் பாதிக்கின்றன (சரவணன், 2017).

சுப்பையா (1987), கட்டுரைகள் எழுத மாணவர்களுக்குக் கட்டுரைச் சட்டகம்
முக்கியம் என்கிறார். இச்சட்டகம் மூலம் வழிகாட்டி, திறந்தமுடிவுக் கட்டுரைகளைச்
சிறப்பாக எழுதலாம் என்றும் கூறுகிறார்.

24

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

4.0 ஆய்வின் ந�ோக்கம் ஏற்படும்
• ஐந்தாம் ஆண்டு மாணவனிடையே தமிழ்மொழி தாள் இரண்டில் ஏற்படும்
சிக்கல்களைக் கண்டறிதல்.
• ஐந்தாம் ஆண்டு மாணவனிடையே தமிழ்மொழி தாள் இரண்டில்
சிக்கல்களைக் களைவதற்கான வழிமுறைகளைக் கண்டறிதல்.

4.1 ஆய்வின் வினா:
• ஐந்தாம் ஆண்டு மாணவன் தமிழ்மொழி தாள் இரண்டில் எவ்வகை சிக்கல்களை
எதிர்நோக்குகிறான்?
• ஐந்தாம் ஆண்டு மாணவனுக்குத் தமிழ்மொழி தாள் இரண்டில் ஏற்படும்
சிக்கல்களைக் களைவதற்கு உதவும் வழிமுறைகள் யாவை?

5.0 ஆய்வு முறைமை:
மஞ்ஜோங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தமிழ்ப்பள்ளியின் ஐந்தாம் ஆண்டு
மாணவனின் தாள் இரண்டு ஆவணங்கள் இவ்வாய்வுக்குத் தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டன.
இது மூன்று பகுதிகள் அடங்கிய ஒரு மாணவரின் ஆவணத்தரவு அடங்கும். த�ொடர்ந்து,
ஓர் ஐந்தாம் ஆண்டு தமிழ்ப்பள்ளி ஆசிரியரும் ஒரு மாணவனும் இந்த ஆய்வில்
நேர்க்காணலுக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஆசிரியரின் பாட நேரத்தில் வகுப்பு
உற்றுந�ோக்கலும் மேற்கொள்ளப்பட்டது.

6.0 செயல்திட்ட முறைமை:

எண் குறிப்பு நடவடிக்கை
1
ஒரு மாணவனின் தமிழ் • தமிழ்மொழி தாள் இரண்டில் ஏற்பட்டுள்ள
2 ம�ொழி தாள் இரண்டின் சிக்கல்களை அடையாளங் காணுதல்.

ஆவணங்கள் • தமிழ்மொழி தாள் இரண்டின் சிக்கல்களை
(பிரிவு அ,ஆ,இ) வகைப்படுத்துதல்.

• ஆசிரியரின் நேர்காணலின் மூலம் தமிழ் ம�ொழி

தாள் இரண்டின் சிக்கல்களை அடையாளங்

காணுதல்.

ஓர் ஆசிரியரின் நேர்காணல் • தமிழ்மொழி தாள் இரண்டின் சிக்கல்களை

வகைப்படுத்துதல்.

• கண்டறிந்த சிக்கல்களைக் களைய

வழிமுறைகளைக் காணுதல்.

• மாணவரின் நேர்காணலின் மூலம் தமிழ் ம�ொழி

தாள் இரண்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை

3 ஒரு மாணவனின் நேர்காணல் அடையாளங் காணுதல். சிக்கல்களை
• தமிழ்மொழி தாள் இரண்டின்

வகைப்படுத்துதல்.

4 வகுப்பு உற்றுந�ோக்கல் • தமிழ்மொழி தாள் இரண்டின் கற்றல் கற்பித்தல்
முறையை ந�ோக்கல் (பிரிவு அ,ஆ,இ)

25

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

7.0 சிக்கல்களைக் களைவதற்கான வழிமுறைகள்:

அட்டவணை 7 தாள் இரண்டின் அ,ஆ,இ பகுதிகளில் ஏற்படும் சிக்கல்களைக் களையும்
வழிமுறைகள்.

வாக்கியச் சிக்கல்களைக் வழிகாட்டிக் கட்டுரைச் திறந்தமுடிவுக் கட்டுரைச்

களைவதற்கான வழிமுறைகள். சிக்கல்களைக் களைவதற்கான சிக்கல்களைக் களைவதற்கான

வழிமுறைகள். வழிமுறைகள்.

• வாக்கியங்களில் எழுவாய், • முறையில்லாத பேச்சு • நீண்ட வாக்கியங்கள்
பயனிலை, ம�ொழி பயன்பாட்டைத் எழுதுவதைத் தவிர்க்க
செயப்படுப�ொருள் தவிர்த்துச் சரியான பேச்சு வேண்டும்.
அவசியம். ம�ொழியில் எழுத
வேண்டும்.

• வாக்கியத்தை விரிவுபடுத்தி • கதை வழிகாட்டி • எழுதிய வாக்கியங்களைப்
படித்து சரி பார்க்கும்
எழுதப் பழக வேன்டும். உருவாக்கப்பட வேண்டும் பழக்கம் மாணவரிடையே
வளர வேண்டும்.

• எழுதிய வாக்கியங்களை • மாணவர்கள் அதிகம் • ல,ழ,ள,ந,ண,ன,ர,ற
மீண்டும் சரி பார்க்க கதைகளை வாசிக்க எழுத்துகளின்
வேண்டும். வேண்டும். வேறுபாட்டைத் தெரிந்து
பயன்படுத்த வேண்டும்.

• தமிழ் எழுத்து வடிவத்தைப்
பின்பற்ற வேண்டும்.

• படத்திலுள்ள • திருப்புமுனை அமைந்த • மாணவர்களின் வாசிப்புப்
பழக்கம் அதிகப்பட
நடவடிக்கைகளுக்குச் கதைகளை எழுத முயல வேண்டும்.

சரியான வேண்டும்.

வினைச்சொற்களைப் பயன்

படுத்த வேண்டும்.

• வினைச்சொற்களை

நிகழ்காலத்தில்

மாணவர்கள் எழுத

வேண்டும்.

• பேச்சு ம�ொழி • கதை எழுத முறையான • நேரப் பயன்பாடு முக்கியம்.
பயன்பாட்டைத் தவிர்த்து உத்திகளைப் பயன்படுத்த
தூய தமிழில் எழுத வேண்டும்.
வேண்டும்.

8.0 ஆய்வின் முடிவு:
எனவே, மாணவர்களின் தாள் இரண்டின் சிக்கல்கள் (பிரிவு அ, ஆ, இ) அட்டவணை 1
முதல் 6 வரை விளக்கப்பட்டுள்ளது. பிரிவு அ, ஆ, இ (மாணவனின் எழுத்து ஆவணம்)
ஆகியவற்றின் சிக்கல்கள் தமிழ்மொழி இலக்கணக் க�ோட்பாடுகள் உதவிய�ோடு
விளக்கப்பட்டுள்ளன. இதனைத் த�ொடர்ந்து ஆசிரியர் மாணவர் நேர்காணலின் மூலமும்
மாணவர்கலின் சிக்கல்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த நேர்காணலுக்குத் தேவையான
முக்கியக் கருத்துகளும், சார்பு கருத்துகளும் கற்றல் க�ோட்பாடுகள் மூலம்
வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நடத்தை கற்றல் க�ோட்பாட்டில் முக்கியக் கருத்தாக

26

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

மாணவனின் கற்றல் நடத்தையைக் கூறலாம். இதில் சார்பு கருத்தாக அவனின் ச�ோம்பல்
தனத்தை விவரிக்கலாம். அடுத்ததாக அறிவாற்றல் க�ோட்பாடு மூலம் முக்கியக் கருத்தாக
மாணவரின் சிந்தனையாற்றலை விவரிக்கலாம். சார்பு கருத்துகளாக கலைச்சொற்கள்,
திருப்புமுனை ஆகியன அடங்கும். இறுதியாக முரண்பாடான கற்றல் க�ோட்பாடு
மாணவனின் முந்தைய அறிவை முக்கியக் கருத்தாகக் க�ொண்டிருக்கிறது. இதில் சார்புக்
கருத்தாக வாசிப்புப் பழக்கத்தைச் ச�ொல்லலாம். த�ொடர்ந்து வகுப்பின் உற்றுந�ோக்கலின்
மூலமும் சிக்கல்கள் விளக்கப்பட்டுள்ளது. வகுப்பின் உற்றுந�ோக்கல் கல்லா சிப்பம் மூலம்
அறியப்பட்டுள்ளது. ஆகவே தமிழ்மொழி தாள் இரண்டில் மாணவர்கள் பல சிக்கல்களை
எதிர்கொள்கிறார்கள் என்பது நிரூபணமாகிறது. இறுதியாக இச்சிக்கல்களுக்குத்
தேவையான வழிமுறைகளும் அட்டவணை 7இல் வழங்கப்பட்டுள்ளன.

9.0 த�ொடராய்விற்கான பரிந்துரைகள்:
த�ொடராய்வில் ஆய்வாளர்கள் இன்னும் அதிகமான எண்ணிக்கை க�ொண்ட மாணவர்களின்
தமிழ்மொழி தாள் இரண்டில் ஏற்படும் சிக்கல்களையும் தவிர்க்கும் வழிவகைகளையும்
ஆராயலாம். மேலும், மற்ற மாவட்ட, மாநில ஆசிரியர்களையும் மாணவர்களையும் இந்த
ஆய்வில் ஈடுபடுத்தலாம்.

மேற்கோள்கள்

Kurram kavur cittu (2017). Eḻuttukaḷai oruṅkiṇaippataṉ mūlam eḻututal tiṟaṉkaḷai
mēmpaṭuttutal:Eḻutavum pēcavum. Dewan Siswa Bil 4 2017, kōlālampūr:Ṭvīṉ

ṭraṉ ṭāṉ pusṭākā.

Kupasan Mutu Jawapan (2014). Lembaga Peperiksaan Malaysia. Kementerian
Pendidikan Malaysia.

Kupasan Mutu Jawapan (2015). Lembaga Peperiksaan Malaysia. Kementerian
Pendidikan Malaysia.

Kurikulum Standard Sekolah Rendah (2014). Pusat Perkembangan Kurikulum,
Kementerian Pendidikan Malaysia.

Saravanan, N.J.(2017). Maanakkarukkup Pizaiyindri Elutakk Karpithal. Thamilil puthuth
thadangal. Ulagath Tamil Araayichi Niruvanam, Chennai, India.

Subbiah, G. (1987). Teaching of Composition – Priciples and methods.Journal of Tamil
Studies. Department of Linguistic Madurai Kamaraj University, 031: 051-057

27

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

உலக ம�ொழிகளில் த�ொன்மை

உலக ம�ொழிகளில் த�ொன்மை வாய்ந்ததும், பண்பட்டதும், நனிசிறந்ததும்
உயர்நிலையில் உள்ளதும், அமிழ்தினும் இனிய தாய்மொழியான தமிழ்மொழியே.

இதன் த�ோற்றமும் மரபும் அமைப்பும் நடையும் ஒழுங்குமுறையும் இயக்கமும்
தனித்தன்மை வாய்ந்தவை; தன்னிகரற்றவை. பிறம�ொழி கலப்பின்றித் தனித்து இயங்கும்
உயர்தனிச் செம்மொழியே (classical language) என்று ம�ொழிநூல் அறிஞர்கள் பகர்வது
நாம் பெற்ற பேறு.

செம்மொழி என்பது மிகத் த�ொன்மையும் நீண்ட நெடிய வரலாற்றுப் பின்னணியும்
க�ொண்டதாக இருக்கும் என்பது ப�ொதுவான கருத்து. அந்த வகையில் உலகின்
த�ொன்மை ம�ொழிகளாக ஆறு ம�ொழிகளை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ‘யுனெஸ்க்கோ’
அறிவித்துள்ளது. அவை தமிழ், சமஸ்கிருதம், சீனம், இலத்தீனம், கிரேக்கம், இப்ரூ
ஆகியன.

இவற்றுள் சமஸ்கிருதம் பேச்சு ம�ொழியாக இல்லை. ‘மந்திரங்கள்’ என்ற
உருவில் மட்டுமே இருக்கிறது. லத்தீன், இப்ரூ ம�ொழிகள் வழக்கொழிந்துவிட்டன.
இஸ்ரேலிய அரசு ஏசுபிரான் பேசிய இப்ரூ ம�ொழிக்கு மீண்டும் உயிரூட்டி வருகிறது.
கிரேக்க ம�ொழியும் கிட்டத்தட்ட அழிவின் எல்லையைத் த�ொட்டுவிட்டு இப்போது
மறுவாழ்வு பெற்று வருகிறது. சீனம�ொழிய�ோ பட எழுத்து அமைப்பில் அமைந்தது.
ஆதலால், மாந்தர் உள்ளுணர்வுகளை சீன ம�ொழியால் மிகத் துல்லியமாக வெளிப்படுத்த
முடியாது என்பது ம�ொழியறிஞர்கள் கருத்து.

ஆனால், சிறந்த இலக்கிய வளம், செம்மாந்த இலக்கண அரண், செறிவான
விழுமியம், ப�ொதுமை மரபு, உயரிய சிந்தனை,சிறந்த ச�ொல்வளம், வரலாற்றுப் பின்னணி,
தனித்தியங்கும் மாண்பு, அழிவில்லா வாழ்வு, காலத்திற்கேற்ற புதுமை என பலவகையிலும்
சிறப்புப் பெற்றிருக்கும் ஒரே ம�ொழி நம் தாய்மொழி. அன்று தாம் வாழ்ந்த காலத்தில்
பிறம�ொழிகள�ோடு வளமாக வாழ்ந்து, இன்று தன்னோடு வாழ்ந்த ம�ொழிகள் பல அழிந்த
பின்பும் கூட இன்னும் இனிய வளத்தோடு வாழ்கின்ற ஒரே ம�ொழி, நம்முடைய
தமிழ்மொழிதான். முன்னைப் பழம்பொருளுக்கும் பழம்பொருளாய், பின்னைப் புதுமைக்கும்
புதுமையாய் விளங்கும் தமிழ் தெய்வ நிலையில் வைத்துக் க�ொண்டாடப்படுகிறது.
ஆன்றோரும், சான்றோரும் தெய்வத் தமிழ் என்றே கூறுகின்றனர்,

ஒரு ம�ொழியைச் செம்மொழியாக ஏற்றுக் க�ொள்ள வேண்டுமெனில் அதற்கு
11 தகுதிப்பாடுகள் இருக்க வேண்டும் என்று ம�ொழியியல் வல்லுனர்கள் வரையறை
செய்துள்ளனர். இந்த 11 தகுதிப்பாடுகளையும் உருவாக்கியவர்கள் மேலை நாட்டு
ம�ொழி அறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் பழம்பெறும் ம�ொழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எந்த ஒரு
ம�ொழிக்கும் செம்மொழியாகிய 11 தகுதிகளும் முழுமையாக இல்லை. ஆய்வு
அறிக்கையின்படி பார்த்தோமேயானால், சமஸ்கிருதத்திற்கு 7 தகுதிகளும், இலத்தின்,
கிரேக்க ம�ொழிகளுக்கு 8 தகுதிகளும் மட்டுமே உள்ளன என்பது அறிஞர்கள் கூற்று.
ஆனால் என்ன ஒரு வியப்பு என்றால், நம் அன்னை தமிழுக்கு மட்டுமே செம்மொழித்

28

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

தகுதிபாடுகள் பதின�ொன்றும் முழுமையாக உள்ளது. மேல்நாட்டு வல்லுனர்கள் வகுத்த
ம�ொழித் தகுதிப்பாட்டுக்கு நம்முடைய தமிழ்மொழி முற்றும் முழுவதுமாக ஒத்துப்போவது
மிகப் பெரிய வரலாற்று உண்மையாகும்.

தமிழ்ச்செம்மொழிக்கு இருக்கின்ற அந்தத் தகுதிகளைக் காண்பது அறிவுடைமையாகும்.

1. த�ொன்மை (Antiquity)
2. தனித்தன்மை (Individuality)
3. ப�ொதுமைப் பண்பு (Common characters)
4. நடு நிலைமை (Neutrality)
5. தாய்மைத் தன்மை (Parental kinship)
6. பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு (Finding expression in the culture, art and

life experiences of the civilized society)
7. பிறம�ொழி கலப்பில்லாத தனித்தன்மை (Ability to function independently without any

impact of influence of any other language and literature)
8. இலக்கிய வளம் (Literary prowess)
9. உயர்ச்சிந்தனை (Noble ideas and ideals)
10. கலை, இலக்கிய தனித்தன்மை வெளிப்பாடு (Orginality in artistic and literary

expressions)
11. ம�ொழிக்கோட்பாடு (Linguistic principles)

இப்படி 11 தகுதிகளும் முழுமையாகப் பெற்றுள்ள தமிழ்மொழியைத்
தாய்மொழியாகப் பெற்றதற்காக ஒவ்வொரு தமிழரும் பெருமையும், பீடும் க�ொண்டு
ம�ொழியின் பெருமையை, வரலாற்றை, பாரம்பரியத்தை அறிந்து, உணர்ந்து க�ொண்டால்
தமிழர்கள் உலக இனங்களுக்கு இணையாக, ஒப்பாக, நிகராக நிமிர்ந்து நிற்க முடியும்
என்பது திண்ணம். ஆனால், அதற்கான பற்றும் செயல்பாடும் எந்த அளவில் உள்ளன
என்பதை எண்ணுகின்ற ப�ொழுது உள்ளம் வேதனைக் கடலில் மூழ்கின்றது.

பெரும்பாலான இளைய தலைமுறையினர் தமிழ் என்று வருகின்ற ப�ொழுது,
ஏன�ோ தான�ோ நிலையிலேயே இயங்குகின்றனர். தமிழில் எதையும் எப்படியும் பேசலாம்,
எழுதலாம் என்ற மனநிலையில் உழன்று, வரைதுறையின்றி ஆங்கிலச் ச�ொற்களையும்,
மலாய் ச�ொற்களையும் வாரி இறைக்கின்றனர்.

நன்றி
திரு.சு.மேகநாதன்,
(சிலிர்த்தெழும் சிந்தனைகள்)

29

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

சிந்திக்க.. சாரலின் ஒரு துளி!

"எல்லா நிலைகளிலும் தமிழ் இன்று ஓங்கி ஒலித்துக் க�ொண்டிருக்கின்றது. கடந்த 30
ஆண்டுகளில், 80 நாடுகளில் தமிழ் பரவியுள்ளது. தமிழ் ஓர் உலக ம�ொழி"
(இணையம்)

என்றெல்லாம் பெருமையாக எழுதப்படும் எழுத்துகளையும் பேசிக்கொள்ளும் பேச்சையும்

நாம் படிக்க, கேட்க நேர்கிறது; மகிழ்ச்சிதான். ஆனால், இங்கு உண்மையில் நடப்பது

என்ன?

தமிழ்க்கல்வி எதற்காக?

தமிழ்ப்பள்ளி எதற்காக?

என வினா எழுப்பும் நிலை இன்று மலேசியத் தமிழர்களிடையே, தமிழ்ப் பேசும்
மக்களிடையே அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் மிகுந்து வருகிறத�ோ எனும் அச்சம்
எழுகிறது. அண்மையில் நாளிதழ் ஒன்றில் வெளிவந்த தகவல்படி, கடந்த எட்டு
ஆண்டுகளுக்குமுன் நம் பள்ளிகளில் 109,487 ஆக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை,
இன்று 30% சரிவு கண்டுள்ளது. தற்போது தமிழ்ப்பள்ளியில் (2018), 81,322 மாணவர்கள்
பயில்வதாகவும் தேசிய பள்ளிகளில் சுமார் 70,000 பேரும் சீனப்பள்ளிகளில் சுமார் 14,000
பேரும் பயில்வதாகத் தகவல் பகிரப்பட்டுள்ளது (நண்பன்,11.12.2018).

இந்நிலை த�ொடர்ந்து நீடித்தால், இந்நாட்டில் தமிழ்க்கல்வியின் எதிர்காலம்,
தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம், ஈப்போ ஆசிரியர் கல்விக் கழக, தமிழ் ஆய்வின் பிரிவின்
எதிர்காலம்... எல்லாம் கேள்விக்குறி தான். இதன் உள்ளார்ந்த ப�ொருளை மாணவ
ஆசிரியர்கள் உணர வேண்டும்.

நம்மால் என்ன செய்ய முடியும்?

தமிழ்ப்பள்ளிகள் காலத்திற்கேற்ற தரமான கற்றல் கற்பித்தலையும் கல்விச் சேவையையும்
முன்னெடுக்க நாம் வழிகாட்டலாம்; உதவலாம். பயிற்சிப் பெற்றுச் செல்லும் இளம்
ஆசிரியர்கள் தங்கள் ஆளுமையின்வழியும் தரமான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்வழியும்
பெற்றோர்களின் கவனத்தைத் தமிழ்க்கல்வியின்பால் ஈர்க்கலாம். தமிழ்ச் சார்ந்த
உணர்வை மட்டுமே நாம் முன்னெடுத்து, இன்றைய இளம் பெற்றோர்களைக் கவர
முடியாது. தமிழ்ப்பள்ளிகள், மதிப்பு கூட்டப்பட்ட ஈர்ப்புகளை (Value Added Services)
க�ொண்டிருக்க வேண்டும். இத்தகைய முன்னெடுப்புகளால், நம் பள்ளிகளை
முதன்மைப்படுத்துவதன் மூலம் இன்றைய பெற்றோர்களின் விருப்பப் பள்ளிகளாக நம்
தமிழ்ப்பள்ளிகள் மாறுவதற்கான சாத்தியங்கள் உண்டு. இவற்றைச் செயல்படுத்தும்
திறனையும் ஆற்றலையும் ஆசிரியர்கள் பெற வேண்டும்; சிந்திக்க வேண்டும். இதன்வழி
த�ொடர்ந்து தமிழ்க்கல்விக்கு வளம் சேர்க்க முடியும்.

தமிழ்ப்பள்ளி நம் அடையாளம்!
தமிழ்ப்பள்ளியே

நமது அறிவார்ந்த தேர்வாகட்டும்.

30

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

ஆக்கச் சாரல்

31

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

படைப்பாற்றல் திறன்

படைப்பாற்றல் என்பது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கலை இலக்கியவாதிகள் உட்பட
அனைவருக்கும் அவசியமாது. படைப்பாற்றல் சிந்தனையின் மூலம் ஒன்றிலிருந்து
இன்னொற்றைப் புதிதாக உருவாக்க முடியும். எந்த ஒரு விசயத்தையும் பார்க்கின்ற க�ோணம்
மாறுபடும். சிந்தனை, எழுத்து, பேச்சு, செயல் என அனைத்து நடவடிக்கைகளிலும் மாறுபட்ட
பார்வை உருவாகும். இந்த மாறுபட்ட க�ோணம் ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கும் சிறந்த முடிவு
எடுப்பதற்கும் உதவும்.
படைப்பாற்றல் வளர்த்துக் க�ொள்வது எப்படி?
புதுமை நாட்டம் இல்லாதவர்களால் படைப்பாற்றல் சிந்தனையை வெளிப்படுத்த
முடியாது. மாறுதலை விரும்பாதவர்களும் புதிதாக ஒன்றை உருவாக்க முடியாது. ஆகவே,
புதுமை நாட்டம் எல்லாருக்கும் தேவை. 'புதியன விரும்பு' என்றார் பாரதி. 'வேதம் புதுமை செய்'
என்றும் ஆணையிட்டார். புதிதாக உருவாக்கும் பண்புதான் இந்தப் படைப்பாற்றல்.
படைப்புத் திறன் உயர வேண்டுமானால் 'நூல் பல கல்' என்ற பழம�ொழியை
மறந்துவிடக் கூடாது. நிறைய கற்க வேண்டும் என்பதில் கவனம் தேவை. தேர்ந்தெடுத்துக்
கற்க வேண்டும்.
வாசிக்கும் திறனை வள்ர்த்துக் க�ொள்ளும் ப�ோது அது ய�ோசிக்கும் திறனுக்கு
அடித்தளமாய் அமைந்துவிடும். புதிய புதிய கருத்துகளை உள்ளத்தில் த�ோற்றுவிக்கும்.
சிந்தனைகள் மாறுபட்டிருக்கும்.
நமது மூளையின் வலப் பக்கத்தில்தான் புதிய எண்ணங்கள் த�ோன்றுகின்றன. நமது
பள்ளிகளில் இடப் பக்க மூளையை அதிக அள்வில் பயன்படுத்தவே பயிற்சி கிட்டுகிறது. நாம்
முயன்றால் வலப் பக்க மூளையைப் பயன்படுத்தும் திறனை வளர்த்துக் க�ொள்ள முடியும்.
படைப்புத் திறனை வெளிப்படும்போதுதான் அது தமக்கும் சமுதாயத்திற்கும் பயன்படும்.
பல நூல்களையும் த�ொடர்ந்து பயில்வது அறிவாற்றலை வளர்க்கும். அது படைப்புத் திறன்
வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும்.

நன்றி: பசுமைக்குமார்,

32

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

விழித்தேன் கும்மிப் பாட்டு

உன்னைக் கண்டேன் மனம்விட்டுப் வந்தேனடி நானும் வந்தேனடி,
பேசினேன்- பிடித்திருந்தது ஒரு கருத்துச் ச�ொல்லிட வந்தேனடி,
பெற்ற தாய்க்கு ஈடாக உன்னைப் இது ஆண்மகன் ப�ோடுர கும்மியடி,
பார்த்தேன் க�ொஞ்சம் காது க�ொடுத்துக்
அதுதான் தவற�ோ? கண் க�ொண்டே கேளுங்கடி.
குருடனானேன்..
நான�ோ பேதை பேசுங்கடி தமிழ் பேசுங்கடி,
நல்லா நாவுமனந்திட பேசுங்கடி,
விழித்தவளாய் மீண்டும் சந்திப்பேன் எட்டுத்திசையும் ஒலிக்கச் செய்யுங்கடி,
உன்னை மன்னித்து என்னை நல்ல தமிழிலே நீங்கள் பேசுங்கடி.
உயர்த்திக் க�ொள்வேன்
எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் பாரதியார் வந்தாரடி - நல்ல
எதிர்ப்பில்லாது வாழ்வேன் தமிழில் கவிதை ச�ொன்னாரடி,
இப்படிக்கு, பாரதிதாசன் வந்தாரடி - நல்ல
தமிழில் பாடச் ச�ொன்னாரடி,
*கார்த்திகா சுப்பிரமணியம் (எஸ் 6) வரதராசர் வந்தாரடி - நல்ல
தமிழில் எழுதச் ச�ொன்னாரடி,
சாதி மறு! சண்டைய�ொழி! சாலமன் பாப்பையா வந்தாரடி - நல்ல
தமிழில் பேசச் ச�ொன்னாரடி.

வீட்டுக்குவீடு சாதிப்பேச்சு கத்துரண்டி நானும் கத்துரண்டி- என்
ஊரெல்லாம் ரெண்டாப் ப�ோச்சே, த�ொண்டை தண்ணீர் வற்றக்
அடேய்; மனிதத்தை விற்காதே, நில் கத்துரண்டி,
இனி மிருகங்களே காரி உமிழும்! நான் ச�ொல்வதைக் க�ொஞ்சம்
மிச்சத்தை மீட்கவேணும் கேளுங்கடி,
மனிதர்களாய் ஒன்று கூடு, தமிழ்மொழியில் கலப்பு வேணாமடி.

சாதியை விடு பேசுங்கடி தமிழ் பேசுங்கடி-நல்லா
சாதி ப�ோகட்டும் விடு நாவுமனந்திடப் பேசுங்கடி,
ஓ மனிதனே வா’ எட்டுத்திசையும் நம்மொழி ஓங்குமடி,
என் மனிதர்களே வா “நான் சாதியற்றவன்” நம் ம�ொழியினை வாழ வையுங்கடி,
ச�ொல் “நான் சாதியற்றவன்” தமிழ்மொழியை வாழ வையுங்கடி

சாதியற்ற இடத்தில்தான் நாளை *அரவிந்தன் கணேசன் (எஸ் 6)
மனிதர்கள் மனிதர்களாகப் பிறக்கக் கூடும்,
மழை நிலா காற்று ப�ோல நாமும்
இயற்கையாய் பிறப்போம்;
மனிதம் நிறைந்தவர்களாய் வாழ்வோம்!

*தர்ஷினி அண்ணாமலை (எஸ் 7)

33

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

அழகான ம�ௌனம்

நான் வாசித்த நாவலில் என்னைக் கவர்ந்தது ‘அழகான மெளனம்’ என்ற நாவலாகும்.
எழுத்தாளர் நிலாவண்ணன் கைவண்ணத்தில் மலர்ந்த நாவல்தான் ‘அழகான மெளனம்’.
வாசகர்களின் மனத்தைக் கவர்ந்த நாவல்தான் இந்நாவல். இந்நாவலில் எழுத்தாளர் நம்
சமூகத்தில் நிகழ்ந்த அவலங்களையும் வாழ்க்கையையும் மிக அழகாகக் கூறியுள்ளார்
என்றே கூற வேண்டும். ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் தமிழர்கள் மலாயாவிற்குக்
கால் அடி வைத்தது, இந்த மண்ணில் அவர்கள் பட்ட இன்னல்களும் த�ோட்டப்புற
வாழ்க்கையும் சமுதாய மாற்றமும் மிகத் தெள்ளத் தெளிவாக இந்நாவலில்
உணர்த்தியுள்ளார் எழுத்தாளர். முதலில், இந்நாவலில் ‘செலமாட் மாலாம்’ த�ோட்டத்தில்
வாழ்ந்த மக்கள் மற்றவர்களுக்கு அடிப்பணிந்து சென்றது ஒரு சமுதாயச் சிக்கலாகவே
தெரிந்தது. த�ோட்டப்புற மக்கள் இரப்பர் சீவும் வேலையிலே தங்களை ஈடுப்படுத்திக்
க�ொண்டனர். ஆங்கிலேயரின் ஆட்சியில் த�ோட்டப்புற மக்களைக் கண்காணிப்பவர்
கங்காணி ஆவார். இந்தக் கங்காணிகள் ஆங்கிலேயருக்கு அடிப்பணிந்தே தங்கள்
வாழ்க்கையை வழிநடத்திச் சென்றனர். கங்காணிகள் மட்டும் அடிப்பணிவத�ோடு
இல்லாமல் த�ோட்டப்புற மக்களையும் அடிப்பணியவே செய்தனர். ஆங்கிலேயர்களும்
த�ோட்டப்புற மக்களை அடிமைத்தனமாகவே வழிநடத்தினர் என்பதை இந்நாவலில்
கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

மேலும், தங்களைவிடத் தாழ்ந்தவர்கள் எப்பொழுதுமே முன்னேறக்கூடாது
எனும் மனப்போக்கு உள்ள சமுதாயமாகத் த�ோட்டப்புற தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதைப்
பிரதிபலித்துள்ளார் எழுத்தாளர். மேல்நிலை வர்க்கம் கீழ்நிலை வர்க்கத்தின் வளர்ச்சியைக்
கண்டு ப�ொறாமை க�ொள்வது இந்நாவலில் காணப்படும் சமுதாயச் சிக்கல்களில்
ஒன்றாகும். ஒருவரின் வளர்ச்சியை மனதார ஏற்றுக்கொள்ளாத மனிதர்கள் ப�ொறாமை
குணத்தோடு செயல்படுவதை நினைத்தால் மிகவும் வருத்தமாகத்தான் இருக்கின்றது.
அதுமட்டுமல்லாமல், த�ோட்டப்புறமக்கள்வாழ்வில்பிடிப்பில்லாமல் ப�ொறுப்பற்றவர்களாகவே
வாழ்ந்தது ஒரு சமுதாயச் சிக்கலாகவே இந்நாவலில் வெளிப்படுத்துகிறார் எழுத்தாளர்.
பெண்களைக் காட்டிலும் ஆண்கள்தான் குடும்பத்தையும் ப�ொறுப்பையும் சரியாகப்
பார்த்துக் க�ொள்ள வேண்டும். ஆனால், இந்நாவலில் ஆண்களைவிடப் பெண்கள்தான்
தங்கள் குடும்பத்தைக் கவனிக்கின்றனர்.

குடும்பச் சுமையையும் தனிமரமாகவே சுமக்கின்றனர். த�ொடர்ந்து, த�ோட்டப்புற
சமூகத்தில் நெறியற்ற வாழ்க்கையை வாழும் சூழல் காணப்படுகின்றது. இதுவும் ஒரு
சமுதாயச் சிக்கலாகவே இந்நாவலில் வெளிப்படுகிறது. நாம் வாழ்க்கையை நெறிய�ோடு
வாழ்வதுதான் நாம் வாழ்கின்ற வாழ்க்கைக்கு அர்த்தம். இந்நாவலில் த�ோட்டத்து
மக்களில் பலர் நெறிக்குட்பட்டு வாழ்ந்ததற்கான எந்தவ�ொரு சான்றும் இல்லை.
சான்றாக, ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தனர். நாயாக உழைத்துக்
குடிப்பழக்கத்திற்காகப் பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்யும் சமுதாயமாகச்
சித்தரிக்கப்படுள்ளனர். சுருங்கக்கூறின், இந்நாவலில் த�ோட்டப்புற மக்களின்
வாழ்க்கையும் அவலநிலையும் வாசகர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்பது திண்ணம்.
மனிதர்கள் மாறினால் நிச்சயமாகச் சமுதாயத்தில் மாற்றம் காணும் என்பதுதான்
உண்மை. ஆகையால், சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்குவது நமது இன்றியமையாத
கடமையாகும்.

*உதாஷினி முருகையா (கியு 4)

34

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

தத்தெடுத்தல்

குழந்தை இல்லாத ஒரு பெண் தாய்மைக்கு ஆசைப்படுவது குற்றமா? அவளும் அவளது
கணவனும் சேர்ந்து ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பது தவறா? அப்படித்
தத்தெடுத்து வளர்க்கும் பெற்றோரையும் அக்குழந்தையையும் சமூகம் ஏற்க மறுப்பது
சரியா?

சுகப்பிரசவத்தின் வழி குழந்தை பெற்றால் மட்டுமே ஒரு பெண் முழுமையான
தாய்மையை அடைகின்றாள், அறுவை சிகிச்சையின் வழி குழந்தையைப் பெற்றெடுக்கும்
பெண்கள் முழுமையான தாய்மை நிலையினை அடையவில்லை என்று விவாதிப்பவர்களின்
மத்தியில் இக்கேள்வியைக் கேட்டால் பதில் எப்படி வரும். அறுவை சிகிச்சையின் வழிய�ோ
அல்லது சுகப்பிரவத்தின் வழிய�ோ, எந்த வகையில் பெற்றாலும் ஒவ்வொரு பெண்ணும்
பத்துத் திங்கள் தன்னுடைய குழந்தையைக் கருவறையில் சுமந்து பல சிக்கலகளைத்
தாண்டித்தானே அந்தக் குழந்தையை ஈன்றெடுக்கிறாள். இதிலே பலருக்கு மாற்றுக்
கருத்துகள் இருக்கும்போது தத்தெடுப்பை எத்தனைப்பேர் ஏற்றுக்கொள்வர்.
நெற்றிக்கண்ணைத் திறக்கச் ச�ொல்லவில்லை; அறிவு கண்ணையாவது சற்றுத் திறந்து
பாருங்கள்.

தாய்மை என்பது உடலால் மட்டும் ஏற்படக்கூடிய ஓர் உறவு அல்ல, தாய்மை
என்பது மனதால் உணரக்கூடிய ஓர் உணர்வு. ஒரு பெண் குழந்தையைப் பெற்றால்
மட்டுமே அவள் தாய்மை நிலையினை அடைய இயலும் என்பது தவறு. இயற்கையாகவே
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் தாய்மை உணர்வு இருக்கும். இனிமேலும், குழந்தை
இல்லை என்பதற்காக இந்தச் சமூகம் எந்தவ�ொரு பெண்ணையும் தாழ்த்திவைக்கக்
கூடாது. இந்நிலையில் மாற்றத்தைக் க�ொண்டுவருவது இளைஞர்களின் கையில்
மட்டுமே இருக்கிறது.

தத்தெடுப்பதன் வழி ஒரு பெண் தாய் என்ற தகுதியை மட்டும் பெறப்போவதில்லை,
தாய்ப்பாசத்திற்காக ஏங்கும் பிஞ்சு குழந்தைகளுக்குத் தாயாகப் ப�ோகிறாள்.
தாய்ப்பாலைக் க�ொடுப்பவள் மட்டும் தாயல்ல, தாயில்லாக் குழந்தைக்குத் தாயாக
மாறுபவளும் தாய்தான். பெற்றெடுப்பவள் உறவுக்கு உயிரளிக்கிறாள், தத்தெடுப்பவன்
உறவில்லாத உயிருக்கு உறவளிக்கிறாள். அன்பின் மறுச�ொல் தத்தெடுப்பு. தத்தெடுத்தாலும்
தாய்மைதான் என்று கூறவில்லை, தத்தெடுப்பதும் தாய்மைதான்.

*லெட்சுமி வெள்ளைச்சாமி (எஸ் 6)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு (குறள்:1)



'A' is the beginning af all alphabets

God is the origin of the universe

35

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

த�ொன்மையின் த�ொடர்ச்சி: படித்ததில் பிடித்தது

நம்பிக்கை:
மனிதனின் ஆழ்ந்த நம்பிக்கையானது மாந்தரினத்தின் அறிவாற்றலின் மீதும்
படைப்பாற்றலின் மீதும் உள்ளது. அத்தகைய நம்பிக்கையினாலே இன்றைய மாந்தனின்
வாழ்க்கையை நல்லொழுக்கங்களும் நற்சிந்தனைகளும் பண்பாட்டு கூறுகளும் அறிவியல்
கண்டுபிடிப்புகளும் வடிவமைத்துள்ளன. இருப்பினும், பலர் இனத்தின் அறிவாற்றல்,
படைப்பாற்றல், உழைப்பு முதலியவற்றின் மீது நம்பிக்கையும் நல்லெண்ணமும்
க�ொண்டிராமல் வாழ்கின்றனர். இவர்களால் நன்மையும் நல்விளைவும் ஏற்படுவதில்லை
என்பதே உண்மை. அவ்வகையில் மனிதனின் அறிவாற்றலின் மீதும் படைப்பாற்றலின்
மீதும் நம்பிக்கை க�ொண்ட சிறுமியின் கதை இக்கட்டுரையை மேலும் மெருகூட்டுகிறது.

பதினான்கு ஆண்டு அகவையே உடைய ஜே.எஸ் எனும் சிறுமி தனக்கு
அரியத�ொறு புற்றுந�ோயால் இன்னும் க�ொஞ்சக் காலத்தில் தான் இறக்கவுள்ள
செய்தியை அறிந்தாள். உடல் துயர்களைக் கடந்து சிந்தித்ததில் தனது இறப்பிற்குப்
பின் தன் உடலைக் கிரைய�ோஜெனிக் என்னும் முறையில் பாதுகாக்க வேண்டும் என்று
எண்ணம் க�ொண்டு உயர்நீதிமன்றத்தில் வேண்டினாள். நீதிமன்றத்தில் காரணம்
கேட்டறிகையில் அச்சிறுமி கூறிய பதிலானது, “எதிர்காலத்தில் எனக்கு ஏற்பட்டுள்ள
ந�ோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்படும். பின் கண்டுபிடிக்கப்பட்ட மருத்தைப்
பயன்படுத்தி என் உடலில் உள்ள ந�ோயைத் தீர்த்தால் நான் மீண்டும் உயிர் பெறுவேன்”
என்று கூறினாள். இதன்வழி அச்சிறுமியின் நம்பிக்கையும் வாழ்வின் மீது அவள்
க�ொண்டிருந்த பற்றையும் காணமுடிகிறது.

தாய்மொழி:
மாந்தனின் வாழ்வை வடிவமைப்பதில் எண்ணம், ச�ொல், செயல் ஆகிய மூன்று கூறுகளும்
முக்கியப் பங்கினையாற்றுகிறது. எண்ணுவதற்கும் எண்ணியதைச் ச�ொல்வதற்கும்
ம�ொழியே அடிப்படையாக விளங்குகிறது. அவ்வகையில், மாந்தர் இனத்தின் குறியீடாகவும்
அடையாளமாகவும் ம�ொழி விளங்குகிறது. இனம் வாழ்ந்தால், ம�ொழி வாழும் என்பதை
உணர வேண்டும். இதனையடுத்து, ம�ொழியானது ஒலி வடிவத்தையும் வரி வடிவத்தையும்
அடிப்படையாகக் க�ொண்டு அமைந்துள்ளது.

த�ொடர்ந்து தாய்மொழி எனும் ச�ொல்லின் ப�ொருள் தாய் பேசும் ம�ொழி என்று
பலரும் தவறாக எண்ணுகின்றனர். மாறாகத், ‘தாய்’ எனும் ச�ொல் அன்னை, முதல்,
முதற்றரம், முதன்மை எனப் பல ப�ொருட்களில் வழங்கப்படுகிறது. அவற்றுள் முதன்மை
என்னும் ப�ொருளிலேயே ‘தாய்மொழி’ என்னும் ச�ொல் பயன்படுத்தப்படுகிறது. எனவே,
தந்தை வழி பெறப்படும் ம�ொழியே தாய்மொழி அல்லது முதன்மை ம�ொழியாகும். மேலும்,
ப�ொருள் தேடலிலும், வசதியான வாழ்வு வேட்கை நிரம்பியுள்ள வாழ்வில் த�ொழிலுக்குத்
த�ொடர்பான ம�ொழியைக் கற்றுக் க�ொள்வதில் ஆர்வம் க�ொண்டுள்ளனர். ஆகவே,
ம�ொழி என்பது த�ொடர்பாடலின் கருவி அல்ல. மாறாக, உயிர், உரிமை, உணர்வு ப�ோன்ற
களங்களில் ம�ொழி இயங்குகிறது.

*மாலினி கணேசன் (எஸ் 6)

36

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

மழை சிறகுகள் வேண்டுமா?

அஃது ஒரு வளையாத சிறகு வேண்டும் என நினைக்கும்
ஒற்றை நிற வானவில்! மாந்தர்களே!
கரங்கள் க�ொடுத்தும் சிறகின்மேல்
மேகம் ம�ோகம், நியாயமா?
பிரசவித்த கரங்கள் உழைப்பிற்கு மூலதனம்.
முத்துப்பெண் வாழ்வில் உயர பறக்க, சிறக்க
மூலதனம் வேண்டும்.
தவழ்ந்திடும் மேகங்கள் உருகி, மாந்தர்களே
பூமியில் கலந்திடும் வைபவம்! மீண்டும் கேட்கிறேன் சிறகு வேண்டுமா?

நாமதில் நனைவது பரவசம், *தேவஜிதா நாகராஜ் (கியு 4)
நம்மில் அது வழிவது ஒருசுகம்!!

*ய�ோகேந்திரன் அம்ரோஸ் (கியு 4) உனக்கான வாழ்க்கை
மீண்டும் வருவேன்
அம்மா ஒரு ம�ொட்டாக,
உன் சுவாசத்தினால்
எங்கே பார்த்தாலும் காதலர்கள் உயிர�ோட்டம் பெற்றிட
என்னைத்தான் காதல் செய்ய உன் கரங்களினால்
அழகிய மலர்களாகப் பிறவி பெற
யாரும் இல்லை என்று உன் சிரிப்பினால் இன்பமான
வீடு திரும்பினேன்….. வாழ்க்கையை வாழ்ந்திட
காத்திருந்தாள் …. உனக்கே உனக்காக மட்டும்
என் அம்மா!!! இந்த வாழ்க்கையை வாழ்ந்திட
உன் நிழலாக
மீண்டும் பிறப்பேன் ஒரு ம�ொட்டாக!
இளவரசி செல்வராஜ் (கியு 4)
*ஹஸ்வினி மாரிமுத்து (கியு 4)
அர்த்தம்
இளைய நிலா ஒன்று
அன்று வண்ணத்துப்பூச்சியாய் ஈவிரக்கமற்ற
வளாகத்தில் சிறகடித்துப் பறந்தாய். மனிதனால்

ஆனால் இன்றோ துவண்டு கிடக்கிறது!
சிறகு இழந்த பறவையாய் தவிக்கின்றாய் மனிதம் மாய்ந்து ப�ோனது.

பள்ளியில்..! *பிரியா (கியு 4)
நாளைய உன் விடியல்?

மீனா தியாகராஜன் (கியு 4)

37

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

மாண்டுவிட்டதா மாந்தநேயம்
‘மனிதன்’, இது வெறும் வார்த்தையல்ல; இயற்கையின் உச்சக்கட்டப் படைப்பு. பல
க�ோடி ஆண்டு பரிணாம வளர்ச்சியின் விளைவால் இயற்கைக்குக் கிடைத்த பரிசு
மனிதனாவான். வரம்பு இல்லா இவ்வாழ்க்கையில், வலிமை பெற்ற மனிதன் மனிதநேயம்
எனும் மகுடத்தைச் சூட்டினால் மட்டுமே வைரமாய் மிளிர முடியும். வாழ்க்கையில் மனித
நேயம் முக்கியமான ஒன்று என்பதை அனைவரும் அறிவர்; ஆனால், மனித நேயம்
என்றால் என்ன? அதன் இலக்கு என்ன? என்பதைச் சற்று விரிவாகப் பார்த்தோமேயானால்
மனித நேயமானது மனிதன் தான் தேடுகின்ற நிறைவை அல்லது குறிக்கோளை
அடைவதற்கான முயற்சிகளை அறிவுடன் செயல்படுத்த உதவுகின்றது என்று கூறினால்
அது மிகையாகாது. மேலும், மனித நேயம் என்பது மனிதர், மனிதர் மேல் மட்டுமல்லாது;
கண் முன்னே கிடக்கும் அனைத்திலும் நேயத்தைப் பகிர்வதேயாகும்.


த�ோன்றின் புகழ�ோடு த�ோன்றுக அஃதிலார்
த�ோன்றலின் த�ோன்றாமை நன்று.
எனும் தெய்வப்புலவரின் திருவாக்கினிற்கேற்பப் பிறந்தோம்;
இறந்தோம்; சதா வாழ்க்கையைக் கழித்தோம்; இடையே ஓரிரு
வெற்றிக்கனிகளை உடன்வாங்கிக் க�ொண்டோம் என்றில்லாமல்
பிறந்த பலனைப் பிறர் பெற இவ்வுலகிற்கு ஏதாவது தம்மால்
இயன்றவற்றைக் க�ொடுக்க வேண்டும். க�ொடுக்காவிட்டாலும்
பரவாயில்லை கெடுத்துவிடாது செயல்பட வேண்டும். ஆம்,
இவ்வாறு மாண்போடு வாழ்ந்தவர்கள்தாம் அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா,
ஹெலன் கெல்லர் ப�ோன்ற சான்றோர்கள். 'தனக்கு மிஞ்சியது தான் தானமும் தருமமும்’,
என்ற தகைமையைத் தாண்டித் தன் வாழ்வை முழுவதுமாகச் சமூகப் பணிகளுக்காகவே
அர்ப்பணித்துத் தங்களின் தினசரி வாழ்வினைக் கடத்தியவர்கள். மனிதநேயத்தின் மறு
உருவமாய் வாழ்ந்து அனைவரின் உள்ளங்களிலும் தடம் பதித்தவர்கள். மனிதநேயம்
இங்குத் தலைத்தோங்கியது; நிமிர்ந்து நின்றது.
இன்றைய நிலைய�ோ, மனிதநேயம் மண்ணோடு மண்ணாகி மாண்டுவிட்டது.
மாண்டுவிடவில்லை; மாய்த்துவிட்டோம் என்றுதான் கூற வேண்டும். மனித நேயம் வளர
வேண்டுமே தவிரக் கற்பழிப்பு, க�ொடுமை, க�ொலை, தகாத பேச்சுவார்த்தைகளின் மூலம்
சாகக்கூடாது. ‘அரிது, அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது', என்ற ஔவையின்
அருளிற்கிணங்கப் பிறந்த வாழ்க்கையில் பிறர் மனம் புரிந்து, மதித்து உயர வேண்டுமே
தவிர மனிதநேயம் வீழ்ச்சியுறக் கூடாது.
விலைமதிப்பில்லா ஒன்று உயிர். என்னைப் ப�ொருத்தமட்டில் உயிருக்குப்
ப�ோராடும் அந்த ந�ொடியிலும் கூட இன்று அதனைக் கைப்பேசியில் பதிவு செய்து சமூக
வளைத்தளங்களில் பகர்கிறார்களே! அங்கே, மாண்டுவிட்டது மனிதநேயம். ‘வாடிய
பயிரைக் கண்டப�ோதெல்லாம் வாடியது மனம்’, முல்லைக்குத் தேர் க�ொடுத்த பாரி
ஆகியவையெல்லாம் மறந்து பிறர் துன்பத்தில் இன்பம் காண்கிறார்கள் இன்றைய
சமூகம். எங்கே த�ொலைந்து ப�ோனது இந்த மனிதநேயம்.

*காந்திமதி செல்வராஜ் (எஸ் 5)

38

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

வினா ?

கற்றில னாயினுங் கேட்க அஃத�ொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை (குறள்: 414)

ஒருவர் இப்புவியில் நூல்களைக் கற்கவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய
வேண்டும். இது அவ்வொருவருக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த ப�ோது ஊன்றுக�ோல்
ப�ோல் துணையாக நிற்கும் என்கின்றார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். ஒரு மனிதனுக்கு
வாழ்க்கையில் இருக்க வேண்டிய முக்கிய ஞானங்களில் ஒன்றாகக் கேள்வி ஞானத்தை
வான்புகழ் வள்ளுவர் குறிப்பிடுகின்றார். செவிச் செல்வமே சிறந்தத�ொரு செல்வம்
என்றும் அவர் ப�ோற்றுக்கின்றார். கேள்வி என்னும் ச�ொல் இரு ப�ொருள்படும். ஒன்று
செவியால் கேட்டல், மற்றொன்று வினா கேட்டல். அவ்வகையில் செவிமடுக்கும் திறனை
வலுப்படுத்துவற்குக் கேள்வி கேட்கும் திறன் என்பது அனைவரிடமும் இருக்க வேண்டிய
முக்கியத் திறனாகக் கருதப்படுகின்றது.

கேள்வி கேட்பது என்பது ஒரு கலையாகவே கருதப்படுகின்றது. ஒருவர்
தன்னுடைய அறிவு பசியினைத் தீர்த்துக் க�ொள்வதற்குக் கேள்விகளைக் கேட்க
வேண்டும். கேள்வி கேட்பது ஒரு தனிமனித உரிமையாகவும் கருதப்படுகின்றது. ஆனால்,
இன்றைய மாணவர் சமுதாயத்தினரிடையே கேள்வி கேட்கும் திறன் குன்றி வருகின்றது
என்றே கூறவேண்டும். தேவையான இடங்களில் கேட்பதைக் காட்டிலும் தேவையற்ற
கேள்விகளையே அதிகம் கேட்டுக் க�ொண்டிருக்கின்றனர் எனலாம்.

ஒரு கேள்வியானது சில அடிப்படை கூறுகளை மையமாகக் க�ொண்டு திகழ
வேண்டும். அவ்வகையில் பார்த்தோமேயானால், ஒருவர் கேட்கும் கேள்வி சுருக்கமாக
இருத்தல் அவசியம். அதுமட்டுமின்றிக், கேள்விகளை நாம் தெளிவாகக் கேட்கும்
ப�ொழுது அது பிறரிடம் த�ொடர்பாடலை வலுப்படுத்துகிறது. அத�ோடு, நாம் கேட்கும்
கேள்வியானது ஒருவரின் சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைவத�ோடு நமக்கும்
பிறருக்கும் நன்மை பயக்கும் வகையிலும் இருக்க வேண்டும்.

ஒரு சீனப் பழம�ொழியானது ‘கேள்வி கேட்பவன் ஐந்து நிமிடங்களுக்கு
முட்டாளாக இருகின்றான். ஆனால், கேள்வி கேட்காதவன் வாழ்நாள் முழுவதும்
முட்டாளாகத் திகழ்கின்றான்’ என்று குறிப்பிடுகிறது. அழுத பிள்ளை பால் குடிக்கும்
என்பது ப�ோலக், கேள்வி கேட்டால் மட்டுமே தெளிவு பிறக்கும் என்பது திண்ணம்.
விக்டர் என்பவர் கேள்வி கேட்பதனால் 16 நன்மைகள் ஏற்படுவதாகக் கூறியுள்ளார்.
அவற்றுள் சில, கேள்வி கேட்கும் ப�ொழுது நம் சிந்தனையில் தெளிவு பிறப்பதாக அவர்
குறிப்பிடுகிறார். அத�ோடு, நம் ஐயங்களைத் தீர்க்கும் ஒரு பாலமாகவும் கேள்வி கேட்கும்
திறன் அமைகின்றது.

த�ொடர்ந்து, நம் அறிவாற்றலை வளரச் செய்ய கேள்வி கேட்கும் திறன் ஓர்
ஊன்று க�ோலாக அமைவத�ோடு ஒன்றினைச் சார்ந்த நமது புரிதலை வலுப்படுத்துகிறது
என்கின்றார் அவர். மேலும், கேள்வி கேட்பதன் வழி ஒருவர�ோடு நமது த�ொடர்பாடல்
மேம்படுகின்றது; அத�ோடு ஒருவர் மீது ஒருவருக்கும் நம்பிக்கையும் அதிகரிக்கின்றது
என்கிறார் விக்டர், (2016) அவர்கள். அதன�ோடு, கேள்வி கேட்பதன்வழி நாம் ஒரு
முடிவினைத் தெளிவாக எடுப்பத�ோடு, வாழ்க்கை பாதையினைச் சீராக அமைத்துக்
க�ொள்ள முடியும் என்று அவர் வலியுறுத்துகின்றார். ஆகையினால், கேள்வி என்பது ஒரு
மனிதனின் வாழ்வில் இன்றியமையாத ஒரு கூறாகக் கருதப்படுகின்றது எனலாம்.

*இந்திராபானு சுப்ரமணியம் (ஆர் 5)

39

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

மயில் சஞ்சிகை எண்ணங்கள் வண்ணங்கள்

கற்பவர் தமக்கு நீயே த�ோழன் நல்ல எண்ணத்தை விதைத்திடு!
கவர்ந்து இழுப்பதிலே நீயே சிறந்தவன் நல்ல செயல்களைச் செய்திடு!
கற்பவர் தமக்குச் சிறந்த நண்பன் நல்ல மனிதனாய் எழுந்திடு!
கடமையைக் காக்கும் காவலன் நல்ல பெயரைப் பெற்றிடு!

புத்திக்கு விருந்து க�ொடுப்பவன் *ய�ோகேஸ்வரி முனியாண்டி (கியு 4)
புதியதாய்ச் சிந்தனை வளர்ப்பவன் பாதை
புத்தம்புதியதாய் பல்நிறம் க�ொண்டவன்
பதுமன் ஆசியைப் பெற்றவன்

*கலையரசி கணேசன் (கியு 4) கற்கள் நிறைந்த பாதையிலே
கால்கள் இரண்டும் ப�ோகிறதே

கதிர்கள் மாறும் ப�ோக்கினிலே

அபலைப் பெண் காயம் நிறைய ஏற்படுதே

கடலைப் பார்த்தாள் *சங்கீதா விஜயகுமாரன் (கியு 4)
காதலி தவிப்புடன்

மடலை வீசினாள்
மாமன் நினைப்புடன்

உடலை வருத்தினாள்
உணர்வை நிறுத்தினாள்

சுடலைப் பெண்ணாய்
சுவாசப் பெட்டியில்

*ஷாலினி நாயர் குமாரன் (கியு 4)

மனிதன் இயற்கை

எழிலை ரசித்தவன் இயற்கைக்கு நடுவில் ஆடம்பரமாய்
அழிக்க முற்பட்ட ப�ோது ஜ�ொலிக்கிறது சீமாட்டியின்
அழிக்காதே என்றொரு குரல் மாளிகை வீடு!
எழுந்திருந்தால் - இன்று வரிசைக்கட்டி
அழிந்திருக்குமா? மின்சார கம்பிகளில் உறங்குகின்றன
எல்லாம் விதியல்ல அங்கு வாழ்ந்த பறவைகள்!
மனிதனின் சதி…

*சிவனேஸ்வரி நடேசன் (கியு 4) *க�ோ.ரின�ோஷா (கியு 4)

40

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

சிந்தனை மாற்றம்

நமக்குச் சிந்தனை மாற்றம் அவசியம் தேவை. சிந்தனையில் ஏன் மாற்றம் தேவை?
காரணம், நமது வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டிய பண்புகள், அறிவுடைமைகள்,
திறமைகள், சிந்தனை வளங்கள் இப்படி எல்லாமே த�ொடர்ந்து சிறையில் வைக்கப்பட்டு
வருகின்றன. எதிர்மறையான சிந்தனைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
எதிர்மறையான சிந்தனைகளைச் சுமந்து இன்றைய மனிதன், மற்றவர்கள் தனது
உயரத்துக்கு மேல் வளரக் கூடாது என்று எண்ணிப் ப�ொறாமை, தீய நட்பு, புறங்கூறுதல்,
மானம் காக்காமை, வெறுப்புக், க�ொலை, க�ொள்ளை, திருட்டுக், கற்பழிப்பு, ப�ோன்ற
தீயப் பண்புகளைச் சுமந்து க�ொண்டிருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, நமது நல்ல சிந்தனைகளை நம்மிடமிருந்து விரட்டி அடிக்கும்

நச்சுச் செயல்பாடுகள் நம்மை வளைத்துக் க�ொள்ளத் த�ொடங்குகின்றன. ஆயிரமாயிரம்

ஆண்டுகளாக அமைதியாக நமது வாழ்க்கை பாதையில் வழிகாட்டி வந்த நீதி நூல்கள்

இன்று எங்கே? நாமே நமது நூல்களை மண்ணில் புதைத்து விட்டோமா? நமது

கலாச்சாரத்திற்குச் சம்பந்தமேயில்லாத தீயச் சிந்தனைகள் நமது வளமான உரமான

சிந்தனைகளை அசைத்துக் க�ொண்டுதான் வருகின்றத�ோ?. நாம் வெறுமனே இருந்தாலும்

காலம் நகர்ந்து க�ொண்டேதான் ப�ோகிறது. எனவே, ஒரு தெளிந்த சிந்தனை

மாற்றத்திற்கு நம்மால் தேதி குறிக்க இயலாததால், உடனே நமது சிந்தனை மாற்றம்

அடைவதற்கு வழி வகுத்திட வேண்டும். ஒரு மனிதனின் வாழ்வில் சிந்தனை மாற்றம்

மிகவும் அவசியமாகத் திகழ்கிறது.

*சிந்தியா முருகன் (எஸ் 5)

வரலாறு வாழட்டும்

வரலாறு வாழட்டும் என்ற கட்டுரையில் முனைவர் சீ.அருண் அவர்கள் ஓர்
இனத்தின் பதிவுகள் எங்கு அடையாளப்படுத்தப் படுகிறத�ோ அதாவது ஆவணப்படுத்தப்
படுகிறத�ோ அதுவே வரலாறு என்கிறார். நம் சிந்தையில் உதித்த ஒரு மிகச் சிறந்த
சான்றாக ஐயா சீனி நைனா முகமது அவர்களின் படைப்புகளான உங்கள் குரல்
ஆகட்டும் த�ொல்காப்பியக் கடலில் ஒரு துளி ஆகட்டும் இவை அனைத்தையுமே
ஆவணப்படுத்தியதால் தான் இன்றுவரை அது அனைவரிடத்திலும் பயன்பாட்டில் இருந்து
வருகிறது. இனிவருங்காலங்களில் வரலாற்று படைப்புகளையும் சாதனைகளையும்
ஆவணப்படுத்த கல்வியாளர்களாகிய நாம் முற்பட வேண்டும். சுருங்கக்கூறின்,
சாதனையாகட்டும் எதுவாகட்டும் நாம் முயன்றால் மண்ணுலகம் மட்டுமல்லாது
விண்ணுலகம் வரை சரித்திரம் படைக்க முடியும்.

*அருளரசி ஜெயசீலன் (எஸ் 7)

41

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

மனிதநேயத்திற்கு முதன்மை க�ொடுப்பீர்!

இப்புவியில் வாழும் அனைத்து மானிடர்களுக்கும் மனிதநேயப் பண்பு மிக முக்கியமானதாகக்
கருதப்படுகின்றது. மனிதநேயம் என்பது அன்பு, கருணை, இரக்கம், சமூக நுண்ணறிவு
ப�ோன்ற பலம் வாய்ந்த குணங்களின் த�ொடர்பாகும். இப்பண்பு உலகத்தில் வசிக்கும்
அனைத்து உயிர்களின் மேலும் பாகுபாடின்றிச் செலுத்தக்கூடியது ஆகும். இக்கூற்றையே
கணியன் பூங்குன்றனார் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” எனும் ச�ொற்றொடரில்
மனிதநேயக் கருத்தைத் தம் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்துகின்றார். இருப்பினும்,
காலச்சுளற்சிக்கேற்ப மனிதனின் மனிதநேயப் பண்பு சீர்குழைந்தும், சுயநலம்
மேல�ோங்கியும் செல்கின்றது என்று குற்றம் சாற்றுவதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

சுயநலத்தை நாடிச்செல்லுபவர்கள் பிறர் வாழ்க்கை முறையில் கேடு
விளைப்பவர்களால் ஆளாகுகின்றனர். உலகத்தின் மூலைகளில் நிகழும் தீயச்
சம்பவங்களுக்குக் கரணியங்களாகவும் மனிதநேயமற்றவர்கள் தென்படுகின்றனர்.
காட்டாக, 2012-ஆம் ஆண்டு, இந்தியா, புது டெல்லியில் நகரும் பேருந்தில் கற்பழித்து
வெளியே தூக்கெறியப்பட்ட சம்பவதில் 23 வயது கல்லூரி மாணவி உயிர் இழந்தார்.
இந்தச் சம்பத்தில் 6 நபர்கள் ஈடுபட்டனர். இவர்களின் எண்ணமும் செயலும் க�ொடிய
மிருகங்களைக் காட்டிலும் க�ொடடூரமானது. இச்செயல் மனிதநேயத்தை இழந்த
மனிதக் குலத்தைச் சுட்டிக்காட்டுகின்றது.

அதுமட்டுமின்றி, ஏப்ரல் 2018இல், ஆப்பிரிக்கா நாட்டில், தந்தை தன் 6 மாதக்
குழந்தையைச் சுயநலத்திற்காகக் கட்டடத்தின் கூறை பகுதியிலிருந்து வீசினார்.
இருப்பினும், அக்குழந்தை காவல்துறை அதிகாரியால் காப்பாற்றப்பட்டது. தன்
வாழ்க்கையில் உள்ள சிக்கல்களால் மற்றொரு உயிர் துன்புருத்துவது மனிதநேயமற்ற
செயலாகும். அதுமட்டுமல்லாது, ஏப்ரல் 2018-இல், காஷ்மிரில் நடந்த 8 வயது சிறுமியான
அஷிபா பானுவின் க�ொலை மற்றொரு கற்பழிப்புச் சம்பவமாக உருவெடுத்துள்ளது.
இந்தச் செயல் மனிதனின் மழுங்கிய எண்ணத்தை வெளிக்கொணருகின்றது.

அதனைத் த�ொடர்ந்து, இந்தியாவில் கற்பழிப்புச் சம்பவம் நாளுக்கு நாள்
பெருகிக�ொண்டிருக்கின்றது. காட்டாக, ஜூலை 2018-இல், 7 வயது சிறுமியைக்
கற்பழித்துக் க�ொலை செய்த சம்பவம் மக்களிடையே எதிர்ப்பு தெரிவித்த வண்ணம்
உள்ளது. மனிதநேயப் பண்பை இழந்து சமூக நுண்ணறிவற்றுச் செயல்படும் மனிதக்
குலத்திற்கு ஒரு பாடமாக அமையாகத் தண்டனை க�ொடுக்க மக்கள் திறல்கின்றனர்.
மேலும், திருவள்ளுவரின்,

அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு
என்புத�ோல் ப�ோர்த்த உடம்பு (குறள் 80)

எனும் குறளுக்கு ஏற்றவாறு, இக்காலத்தின் மனிதனின் அன்பு, கருணை ப�ோன்ற
குணங்கள் குன்றியிருப்பது, அம்மனிதர்கள் பயனற்றவர்களாகக் கருதப்படுகின்றனர்.

இதனைத் த�ொடர்ந்து, ஜூலை 2018-இல், மலேசியாவில், 6 மாதக் குழந்தையைப்
பணிப்பெண்ணிடம் விட்டு வேலைக்குச் சென்ற பெற்றோர்கள், இரவு அக்குழந்தையைப்
பிணமாக அப்பணிப்பெண்ணின் வீட்டின் குளிர்சாதனப்பெட்டியில் கண்டெடுத்தனர்.

42

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

அழுகையை நிறுத்த அக்குழந்தையை அடித்ததால், அவன் இறந்தான். குற்றம் அறியாக்
குழந்தையை அடித்துப், பிணத்தை மறைத்து வைக்கும் செயல், மனிதநேயத்திற்கு
மாறானது ஆகும்.

அதுமட்டுமல்லாது, பல ஆண்டு காலமாகத் த�ொடர்ந்து நிகழும் க�ொடுமைகளில்
இஸ்ராயில்-காசா ப�ோரும் அதில் அடங்கும். இந்தப் ப�ோரில் பல குற்றமற்ற உயிர்களும்
சின்னஞ்சிறு குழந்தைகளும் இறக்கின்றனர். மனிதநேயமற்ற செயலினால் க�ோடி
மக்கள் க�ொத்துக் க�ொத்தாய் உயிர் துறக்கின்றனர். த�ொடர்ந்து, மனிதர்களை
மட்டுமல்லாது, ஐந்தறிவு க�ொண்ட பிராணிகளையும் துன்புறுத்துதல், அதன் உடல்
உறுப்புகளை வெட்டி ஊனம் ஆகுதல் ப�ோன்ற மனிதநேயமற்ற செயல்கள் மனிதனின்
பகுத்தறிவின் பயன்பாட்டை வினவுகின்றது. பிராணிகளைப் பாதுகாப்பதற்குச் சட்டங்களும்
இயக்கங்களும் (PETA) அமைத்துள்ளது. இருப்பினும், பிராணிகளைக் காக்க வேண்டியது
ஆறறிவு படைப்புகளின் கடமையாகும். மனிதநேயமற்ற மனிதன் மானிடக் குலத்திற்குத்
தகுதியற்றவனாகத் திகழ்கிறான்.

மனிதநேயம் குன்றிவரும் இக்காலக்கட்டத்தில் அன்பிற்கும் கருணைக்கும்
அடிமைப்பட்டவர்களும் இப்புவியில் வாழ்ந்து க�ொண்டிருக்கின்றனர். காட்டாகக்,
காஜாங், மலேசியாவில் தாயால் மேற்மாடியிலிருந்து பின் பக்கமாக வீசி எறியப்பட்ட
குழந்தையைக் காப்பாற்றி, மருத்துவமனையில் சேர்த்துக் கவனித்துக் க�ொண்ட
இளைஞரை நாம் மனிதநேயம் க�ொண்டவராகப் பாராட்ட வேண்டும். இவருடைய
மனிதநேயச் செயலைப் பாராட்டி; வான�ொலி நிலையம் மூலம் நேர்காணல் செய்யப்பட்டது.
இதன்வழி, மனிதர்கள் மனிதநேயப் பண்புடன் இன்றும் செயல்படுகின்றனர் என்பதைக்
குறிக்கின்றது.

அதுமட்டுமல்லாது, மற்றொரு காட்டாக, மே 2018-இல், பிரான்ஸ் நாட்டில்,
அடுக்குமாடி வீட்டில் பெற்றோர் கவனிப்பில் இருந்து தவறிய 4 வயது குழந்தை கீழே
விழப் ப�ோவதைக் கண்ட மாலி நாட்டுத் த�ொழிலாளி நான்கு மாடிகளைத் தாவி ஏறி
அக்குழந்தையைக் காப்பாற்றினார். இத்துணிச்சலைக் கண்ட பிரான்ஸ் நாட்டு அதிபர்,
அந்த ஆடவருக்குப் பிரான்ஸ் நாட்டுக் குடியுரிமை வழங்கிச் சிறப்பித்தார். அந்நாட்டு
மக்கள் அவ்வாடவருக்குச் ‘சிலந்தி மனிதன்’ எனப் பெயர் சூட்டினர். மேலும், ஜூன்
2018-இல், சீனா நாட்டிலும் இவ்வாறு கைவிடப்பட்ட 2 வயது குழந்தையை ஐந்து மாடி
தாவிக் காப்பாற்றிய முன்னாள் இரணுவர் ஒருவருக்கும் மக்களால் பாராட்டும்;
சிறப்பிக்கவும் பட்டது. இச்சம்பவங்களின்வழி, மனிதநேய இன்றும் வாழுகின்றது எனத்
தெளிவுப்படுகின்றது.

ஆகவே, மானிடராய்ப் பிறந்தமைக்கு நாம் என்றும் பிறருக்குத் தீமையை
விளைத்தல் கூடாது. அதே வேளை, அன்பு, கருணை, இரக்கம், சமூக நுண்ணறிவு,
பகுத்தறிவு ப�ோன்ற குணங்களைக் க�ொண்டு மனிதநேய நிறைந்த மானிடராய்த்
திகழ்வது அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் அமையும். எக்காலச்சூழல்
மாறினாலும், மனிதனிடம் இயற்கையாக உள்ள மனிதநேயப் பண்பு மாறுதல் கூடாது.
இல்லையேல், தீயச்செயல்கள் மனிதக்குலத்தை அழித்துவிடும்.

*கல்பனா அன்னப்பன் ஜெயபாலன் (எஸ் 7)

43

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

நம்மை ஆளும் ஆளுமை

இவ்வுலகில் மனிதனின் பிறப்பானது மிகவும் சிறப்பு மிகுந்தது. காரணம், மனிதர்கள்
இவ்வுலகில் பல மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கின்றனர். இந்த மாற்றங்கள் அனைத்தும்
மனிதர்களின் சிந்தனையாற்றலாலும், தனித்திறமையாலும் ஆளுமையாலும் நிகழ்ந்தது
என்று கூறினால் அது மிகையாகாது. ஒவ்வொரு மனிதனும் அவரவர் தனித்தன்மைகளைக்
க�ொண்டு செயல்படுகின்றனர். அவ்வகையில் ஒவ்வொரு மனிதனிடமும் பல ஆளுமைகள்
இருக்கின்றது.

ஆளுமை என்பது ஒரு மனிதனின் உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல்களிலிருந்து
உருவாகக்கூடிய பழக்கவழக்க நடத்தை, அறிவாற்றல் மற்றும் உணர்ச்சி வடிவங்களின்
த�ொகுப்பாக வரையறுக்கப்படுகிறது. அதாவது ஆளுமை என்பது ஒரு மனிதனை
ஒட்டும�ொத்தமாக அடையாளப்படுத்தக்கூடிய அம்சமாகும். அறிவாற்றல் மிக்க ஒருவர்
சிறந்த ஆளுமையாளராக விளங்குவார் என்பதில் எவ்வித உத்தரவாதமும் இல்லை.
மனிதர்களிடம் பல வகையான ஆளுமைகள் இருக்கின்றன. அவை முறையே
க�ொள்கையாளர், பகிர்வர், நுட்பமானவர், நெகிழ்வு தன்மை க�ொண்டவர், நட்பு
பாராட்டுபவர், ஆக்கப் படைப்பாளர், தூரந�ோக்குச் சிந்தனையாளர், ஏரணச்
சிந்தனையாளர் மற்றும் நேர்த்தியாளர் ஆகும்.

முதலாவதாக, ஆளுமைகளுள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது
க�ொள்கையாளர். க�ொள்கையாளர் என்பவர் ஒரு க�ொள்கை அல்லது பிடிமானத்தோடு
வாழ்பவராவார். அத�ோடு, இக்கொள்கையாளர் ஒரு க�ொள்கையை உருவாக்குபவராகவும்
அதனை மக்கள் பின்பற்ற வழிவகுப்பவராகவும் இருக்கின்றார். உதாரணத்திற்குக்,
க�ொன்ஃபுசியுஸ் மற்றும் ச�ொக்ரடிஸ் ப�ோன்றவர்கள் பல க�ொள்கைகளை மக்களுக்காக
எடுத்துரைத்து அதனைப் பின்பற்றியும் வாழ்ந்திருக்கின்றனர். இரண்டாவதாகப், பகிர்வர்
ஆளுமையும் ஒரு மனிதனிடம் கட்டாயம் இருக்க வேண்டிய ஆளுமையாகும். பகிர்வர்
ஆளுமையானது மனிதன் தனக்குத் தெரிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்வது ஆகும்.
இவ்வாளுமையானது ஆசிரியர்களிடம் பெருமளவில் காணப்படுகிறது. காரணம்,
ஆசிரியர்கள் தங்களுக்குத் தெரிந்தவற்றை மாணவர்களிடம் பகிர்ந்து க�ொள்வர்.

மூன்றாவதாக, மனிதனிடம் இருக்க வேண்டிய ஆளுமைகளுள் ஒன்று
நுட்பமானவர். நுட்பமானவர் என்பவர் ஒரு விடயத்தை மிகவும் நுட்பமாகவும் துள்ளியமாகவும்
ஆராய்ந்தும் கண்காணித்தும் செயல்படுபவராவார். இவ்வாறான ஆளுமை காவல் துறை
அதிகாரிகளிடம் பெரிதளவில் காணப்படுகிறது. அடுத்ததாக, மனித ஆளுமைகளுள்
ஒன்று நெகிழ்வு தன்மை. சூழ்நிலைக்கு ஏற்றவாறும் ஒரு விடயத்திற்கு ஏற்றவாறும்
மாற்றிக் க�ொள்பவர்களை அல்லது செயல்படுபவர்களை நெகிழ்வு தன்மை உடையவர்
என்று குறிப்பிடலாம். எடுத்துக்காட்டாக, ஒரு பேச்சாளரால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு
மாறிப் பின் க�ொடுக்கப்பட்டிருக்கும் தலைப்புக்கு ஏற்பச் செயல்படுவார்.

கூடுதலாக, ஏரணச் சிந்தனை என்பது மனிதர்களிடம் உள்ள ஆளுமையாகும்.
ஏரணச் சிந்தனையாளர் என்பவர், தான் கூறும் அல்லது செய்யும் செயல்கள்
அனைத்தையும் காரணக் காரியத்தோடு கூறுபவர் அல்லது செயல்படுத்துபவர். இவ்வாறான

44

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

மனிதர்கள் ஒரு விடயத்தைப் பற்றி கூறினால் அதனை மெய்ப்பிப்பதற்குப் பல
சான்றுகளைத் தெரிவிப்பர். காட்டாக, சர் ஐசக் நியூட்டன் அவர்கள் இவ்வுலகில் புவி
ஈர்ப்புச் சக்தி உள்ளது என்பதைப் பல சான்றுகள�ோடும் ஆதாரங்கள�ோடும் மக்களுக்கு
நிரூபித்தார். மேலும், மனிதர்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய ஆளுமைகளுள்
ஒன்று நட்பு பாராட்டுபவர். நட்பு பாராட்டுபவர் என்பவர் அனைவரிடத்திலும் எளிமையாகவும்
அன்பாகவும் பழகக்கூடியவர் ஆவார். இவ்வாறு பழகுவதன் மூலம் அவர் தன்னிடம்
பழகுபவர்களை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார். இத்தகைய ஆளுமை உள்ளவர்
அனைவராலும் விரும்பப்படுவார்.

அதுமட்டுமின்றி, மனிதனிடம் இருக்க வேண்டிய மிக முக்கிய ஆளுமைகளுள்
ஒன்று தூரந�ோக்குச் சிந்தனையாளர். எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை ஊகித்துக்
கூறுபவரே தூரந�ோக்குச் சிந்தனையாளர் என்று கருதப்படுகின்றார். இந்த ஆளுமையின்
மூலம் மனிதர்கள் தங்களின் சிந்தனையாற்றலை வளர்த்துக்கொள்வத�ோடு காலத்திற்கு
ஏற்பவும் செயல்படுகின்றனர். அடுத்ததாக, ஆக்கப் படைப்பாளர் ஆளுமையும்
மனிதர்களிடம் இருக்க வேண்டிய ஆளுமைகளுள் ஒன்று. இந்த ஆக்கப் படைப்பாளர்
என்பது ஒரு படைப்பைப் புதுமையாகவும் புத்தாக்கத்துடனும் படைப்பவராவார். இவரின்
படைப்புகள் அனைத்தும் சிறப்பானதாகவும் அனைவரின் கவனத்தை ஈர்க்கும்
வண்ணமாகவும் இருக்கும். இந்த 21ஆம் நூற்றாண்டில் நமது நாட்டின் கல்வியமைப்பும்
ஆக்கப் படைப்பாளர் ஆளுமை க�ொண்ட மாணவர்களை உருவாக்குவதற்கு முக்கியத்துவம்
வழங்குகிறது. இறுதியாக, நேர்த்தியாளர் ஆளுமை உடைய ஒருவர் தன்னுடைய
வேலையை அல்லது தனது பணியை மிகவும் நேர்த்தியாகச் செய்து முடிப்பவராவார்.
இவ்வாளுமை உடையவர் ஒவ்வொரு வேலையையும் திட்டமிட்டுச் செய்து முடிப்பவராக
இருப்பார். அத�ோடு இவரின் வேலைகள் அனைத்தும் முறையாக இருக்கும். இவ்வாளுமை
உடையவர்கள் நேரத்தை வகுத்தும் அதனைப் பின்பற்றியும் வாழ்வார்கள்.

சுருங்கக்கூறின், ஆளுமை என்பது ஒரு மனிதனின் குணத்தொகுப்பு என்றும்
கூறலாம். இவ்வகையான ஆளுமைகளைப் பெற்றிருக்கும் ஒரு மனிதரின் வாழ்க்கை
சிறப்பாக இருக்கும் என்று கூறினால் அது மிகையாகாது. இந்த ஆளுமைகள்
அனைத்தும் ஒரு மனிதனை 21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப வாழ வழி செய்வத�ோடு
மட்டுமல்லாமல் ஒரு மனிதனின் திறமைகளை வளர்த்து அவனைச் சமுதாயத்தில் உயர்ந்த
நிலைக்கு இட்டுச் செல்கிறது. ஆளுமைகள் மனிதர்களை முன்னெடுத்தே செல்கிறது.

*ஸ்ரீதரன் பாலகிருஷ்னன் (ஆர் 5)

45

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

ஆடம்பர வாழ்க்கை

''க�ொடை புடிச்சி நைட்டுல

பறக்கப் ப�ோறேன் ஹைட்டுல

தலக் காலு புரியல

தலைக் கீழ நடக்குறேன்

எனும் இந்தப் பாடல் வரிகளே தற்கால நம்மவர்களின் நிலையினைப் பிரதிப்பலிப்பதாக
அமைகிறது. ஆம்! ஆடம்பரம்; எங்கும் எதிலும் ஆடம்பரம், மழை ப�ோலப் ப�ொங்கி
நீர�ோடைப்போல நம் மக்களிடையே பெருக்கெடுத்து ஓடுகிறது. அமைதியாகச்
சுபிட்சமாக வாழ்ந்த இயல்பான வாழ்க்கையைத் துறந்து ஆடம்பரத்திற்காக இரைத்தேடும்
பறவைகளைப் ப�ோல அலைந்து க�ொண்டிருக்கின்றனர் பலர். அதிலும், நம் தமிழ்
மக்களில் சிலர் ஆடம்பரம் எனும் ப�ோதைக்கு அடிமைகளாகிப் ப�ோதைப்பித்தர்களாகவே
வாழ்ந்து க�ொண்டிருக்கின்றனர். ப�ொதுவாக, அவசியம் என்பது வேறு, அத்தியாவசியம்
என்பது வேறு. தேவையைப் பூர்த்தி செய்யும் வண்ணமாய் அமைவது அவசியம்;
தேவைக்கேற்பப் ப�ொருள் இருந்தும் வீணே விரயம் செய்வது அத்தியாவசியம்.
ஆகையால், தகுதிக்கு மீறிய அத்தியாவசியச் செலவுகளைச் செய்து நடைமுறை
வாழ்க்கையை வாழ்வதே ஆடம்பரமாக இங்குப் ப�ொருள் பெயர்க்கப்பட்டுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் இதுவே நாகரிகமாக மாறிவிட்டது எனலாம்.

இத்தகு நிலைக்கு மூலக் காரணம் என்ன? ஆடம்பரமாக வாழும் சிலரின்
தாக்கமும் மனப்போக்கும்தான் காரணம். குறிப்பாக அவர்களைப் ப�ோலச் செல்வச்
செழிப்பாக வாழ வேண்டும் என்ற ஆசையும் ஒரு விதமான ப�ோட்டியுணர்வும்தான் இதில்
அடங்கியுள்ளது. அத�ோடு, ஊர் தம்மையும் தமது வாழ்க்கையையும் கண்டு மெச்ச
வேண்டும் என்ற இழிவான குணம் க�ொண்டு, இந்த ஆடம்பரத்தை விரும்பித் தெரிவு
செய்கின்றனர் பலர். தற்போதைய காலக்கட்டத்தில் பார்த்தோமாயின், பிறப்பு முதல்
இறப்பு வரை இந்த ஆடம்பரமானது பின்தொடர்ந்துள்ளது என ஆணித்தரமாகக்
கூறலாம். பிறந்த குழந்தைக்குக் காது குத்துதல் த�ொடங்கி, பெயர் சூட்டுதல்,
திருமணம், திருமண விருந்து, வலைக்காப்பு , இறப்பு அதிலும் சரவெயுடன் ஆட்டம்
க�ொண்டாட்டமாக, இவ்வாறு பல வகையான நிகழ்வுகளை ஏற்பாடு செய்து பணத்தை
வாரிவாரி இறைக்கின்றனர் சிலர். இயல்பாக இவையாவும் ஆடம்பரத்தின்
வெளிப்பாடாகவே அமைகிறது.

இத்தகு ஆடம்பர வாழ்க்கை எனும் ஆழ்க்கடலில் மூழ்கி வெளியே வர இயலாத
நிலையில் சிக்கிக்கொண்டிருக்கும் நமக்குப் பல வகையிலான தீமைகளே உண்டாகின்றன
என்பது நிதர்சனமான உண்மை. அவ்வகையில் முதலாவதாகப், பணம் அதிகமாக
விரயமாகும். தற்சமயத்தில் பெரியவர்களைக் காட்டிலும் இளைஞர்களே ஆடம்பரத்திற்கு
அதிகமாக வசப்படுகின்றனர். பெரும்பாலும் இவர்கள் பணத்தின் மதிப்பு அறியாமல்
அதிலும் அதனை ஈட்டுவதற்கு இவர்களின் பெற்றோர் படும் துன்பத்தை அறியாமல்
கண்மூடித்தனமாகச் செலவு செய்கின்றனர். இதனால், சிக்கன உணர்வு அவர்களிடையே
விதைக்கப்படாமல் ப�ோகும். அத�ோடு ஊதாரித்தனமாகச் செலவு செய்யும் ப�ோக்கும்

46

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

அவர்களிடையே வளரும். மேலும், பணத்தின் அருமையும் மதிப்பும் அறியாமலே ப�ோகும்.
இதனைத் தவிர்த்து, வீண் விரயம் உண்டாகும். குறிப்பாக நம்மிடம் ஏற்கெனவே
இருக்கும் ஒன்றினை மீண்டும் வாங்குவதில் பயன்கிடையாது. உதாரணத்திற்கு, நம்மிடம்
சட்டைகள் பல இருந்தும் அதனைப் ப�ோடாமல் மீண்டும் சட்டைகளை வாங்கி
அலமாரியை நிரப்புவதில் ஏது பயன்.
த�ொடர்ந்து, நம்மைக் கடன்காரர்களாக நிலைக்குலைக்கும் சூழலுக்கும் இது
தள்ளும். ஆடம்பரத்தை விரும்பும் பலர் பிறருடன் ப�ோட்டி ப�ோட்டு அவர்களுடன்
ஈடுக�ொடுத்து வாழ்வதற்காகவே வசதியாக வாழ்வதாய்க் காட்டிக்கொள்வர். இதன்
விளைவாகத்தான், பிறரிடம் கடன் வாங்கும் சந்தர்ப்பமும் ஏற்படுகின்றது. அத�ோடு
மட்டுமில்லாமல், கடனுக்காகவும் ப�ொருட்களை வாங்கித் தங்களை ஆடம்பரமாகக்
காட்டிக் க�ொள்வர். உதாரணத்திற்கு, தம்மிடம் ஏற்கெனவே வாகனம் இருந்தும்
மீண்டும் வேற�ொரு வாகனத்தைக் கடனுக்கு வங்குதல் வீண் ஆடம்பரமாகும். இத்தகைய
கடன்களை அடைக்க முடியாத பட்சத்தில் நாம் நிரந்தர கடனாளியாகவே ஆவ�ோம்.
நம்மிடம் இருந்த ச�ொத்தும் பறிப்போகும்; அத�ோடு நமது வாழ்க்கையும் சரிவைக்
காணும். பிறர் தன்னை உயர்வாக நினைக்க வேண்டும் என்பதாலும் தன் புகழைப்
பாடுவதற்காகவும் இந்த ஆடம்பரத்தை விரும்பி நாடுகின்றனர்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கொப்ப ஆடம்பரமான
வாழ்க்கையானது நமது அன்றாட வாழ்க்கை முறைக்கு அத்தியாவசியமான ஒன்று. நாம்
வாழும் வாழ்க்கையானது நமக்கும் நமது குடும்பத்தின் தகுதிக்கும் ஏற்புடையதாக
அமைவது சிறப்புக் காரணம். இதன்வழி ஓர் அழகான எதார்த்தமான, இயல்பான
வாழ்க்கையை வாழ முடியும். ஆக, வாழ்க்கை என்பது ஒரு முறை தான் அதனைப்
பிறருக்காக வாழ்வதை விடுத்து நமக்காக வாழத் த�ொடங்குவ�ோம்; ஆடம்பரத்தை
விட்டொழித்து எளிமையைப் ப�ோற்றுவ�ோம், வாரீர்.

*கீர்த்தனா பாலகிருஷ்ணன் (எஸ் 5)

47

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

தெளிவான சிந்தனை வேண்டும்

“எத்தனை க�ோடிப் படைக�ொண்டு
வந்தாலும் மாயையே நீ

சித்தத் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாய�ோ மாயையே!”

என்று மகாகவி பாரதியார் பாடுகிறார். தெளிவான சிந்தனையும் உயர்ந்த எண்ணங்களும்
க�ொண்ட மனிதரிடத்தில் மாயை எனும் ப�ொய்யின் சாயல் அண்டாது என்று குறிப்பிடுகிறார்.
அறிவுச்சார்ந்த சமுதாயம் உருவாக வேண்டுமென்றால் அச்சமுதாயத்தின் ஒவ்வொரு
அங்கத்தினரும் முதிர்ச்சியாகச் சிந்தித்து, நலமான சமூகவியல் வாழ்க்கையைக்
கட்டமைக்க முற்பட வேண்டும். கற்றோர்களும் சாதனையாளர்களும் நிறைந்திருக்கும்
நம் சமுதாயத்தில், இந்தப் பகுத்தறிவு சிந்தனைக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம்
வழங்கப்படுகிறது என்பதில் இன்னமும் ஐயங்கள் எஞ்சி நிற்கின்றன. வெளி இன்பத்திலும்
சுகத்திலும் அகப்பட்டுத் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் சீரழித்துக்
க�ொண்டிருக்கும் அறியாமை க�ொண்ட மனிதர்களின் எண்ணிக்கை நமது சமுதாயத்திலும்
பெருகிய வண்ணம் இருக்கிறது. பண்பாடும் நாகரிகமும் வளர்ந்து வருகிறது என்று
கூறும் நம் சமுதாயத்தில்தான், இன்னமும் மதுபழக்கத்திற்கு அடிமையாகி, கனவுகளையும்
கடமைகளையும் சிதைத்துப், புத்தி மழுங்கித் திரியும் பலர் இருக்கிறார்கள்; பெருகியும்
வருகின்றார்கள்.

பதின்ம வயதினர் முதல் முதிய�ோர் வரை மதுவுக்கு அடிமையாகும் சூழல் இன்று
காணப்படுகின்றது. இவர்களில் குடும்ப நலனுக்காகப் ப�ோராடக் கூடிய நம் குடும்பத்
தலைவர்கள் கூட பலர் மதுவுக்கு அடிமையாகி, குடும்பத்தாரின் கனவுகளையும்
எதிர்ப்பார்ப்புகளையும் மிதித்துக் க�ொண்டிருக்கின்றனர். உழைக்க வேண்டும் என்ற
எண்ணத்தை இழந்து, மது அருந்துவதற்காக எந்தத் தீங்கையும் செய்யக்கூடிய
நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். குடும்பத்தை மறந்து, பிள்ளைகளின் கனவுகளை
மறந்து, குடும்பப் பெருமையை மறந்து தண்ணீரில் மிதக்கும் அவலமும் நம் குடும்பத்
தலைவர்களிடம் காணப்படுகின்றது.

ப�ோதையில் இருக்கும் எந்த மனிதனும் தெளிவாக இருப்பதில்லை. உடலில்
ஆற்றல் குன்றி, மனநலமும் உடல் வலிமையும் குறைந்து ஆபத்தின் விளிம்பில்
வாழ்கின்றனர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் இந்தக் குடிக்காரர்கள், தம்
உயிரையும் மற்றவர்களின் உயிரையும் பணயம் வைக்கின்றனர். இந்த மது என்ற
மாயையை ஒழிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து சிந்தித்துத் திட்டமிட வேண்டும்.
அறிவும் நெறிதவறாப் பண்பும் க�ொண்ட மனித வளத்தையும் சமுதாயத்தையும் உருவாக்கப்
புறப்படும் ஆசிரியர்களான நாம் 'குடி கெடுக்கும் குடியைப்' பற்றிய விழிப்புணர்வை நம்
சமூகத்தில் விதைக்க வேண்டும்.

*தரிஷினி அன்பழகன் (எஸ் 5)

48

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

சகியே! முடியவில்லை

திக்குத் திசையறியாமல் நின்றேன் பிஞ்சு கால்களால் தத்தித் தவழ்ந்த
ஒருப�ொழுது – கலங்கரை வயதில் – என்
விளக்காய் ஒளிவீசினாய் அன்று, கண்களைக் கட்டிவிட்டு
அன்பின்வழி இணைந்தோம் ‘ஆட்களைக் கண்டுபிடி’ என்றார்கள்
விதியின் சதியால் பிரிந்தோம்! முயன்றேன் ... முடியவில்லை
நாம் பதித்த காலடித்தடங்கள் -இன்று
காணாமல்போயின – ஆனால், ஓடும் கால்களால் சுயகாலில் வாழ்கின்ற
உனதன்பு மட்டும் என்றும் என் வயதில் – நான்
நினைவ�ோடு! கண்களைத் திறந்துக�ொண்டே
ஆட்களைக் கண்டுபிடிக்க
*பிரவீணா காளிமுத்து (கியு 4) முயல்கிறேன் ... முடியவில்லை

நட்பு *ரதி குணசேகரன் (கியு 4)

உன் விழிகளில் என்னைச் உறவுகள்
சிறை வைத்தாய்,
கள்ளமில்லா உள்ளத்துடன் உன் கருவறையில் 10 மாதம் தங்க
என்மீது அன்பு வைத்தாய், எனக்கு இடம் க�ொடுத்தாய்!
எந்நாளும் என் உருவமில்லாமல் இருந்த எனக்கு நீ
சுவாசத்ந்தில் கலந்தாய் உயிர் க�ொடுத்தாய்!
என் வாழ்வே நீயானாய், உள்ளிருந்து உதைத்த உதைகளை
எல்லாம் காணும் மாயை இன்று, வெளியில் ச�ொல்லி வெட்கப்பட்டு,
கானல் நீராய் ஆனது முறைய�ோ? மகிழ்ந்தவளே, மனம் குளிர்ந்தவளே...
என் வருகைக்கான நாட்களைக்
*தர்ஸ்ஷினி கெங்காதரன் (கியு 4) கணக்கிட்டுக் காத்துக் க�ொண்டிருந்தாய்...
ஆயிரம் முகத்தை நான் பார்த்தால் கூட
வேண்டும்! உன் முகமே என் இதயக் கூட்டில்
நிற்கின்றது.
மனதில் உறுதி வேண்டும்! ஒவ்வொரு ந�ொடியும் என் விழியை
வாழ்வில் தெளிவு வேண்டும்! மூடினால் நீ வருகிறாய்.…
பணியில் சிரத்தை வேண்டும்! விழி திறக்கையில் ஏன�ோ மறைகிறாய்..
செழுமையில் வாழ்ந்திட வேண்டும்! நீ இல்லையென்றால் நானும் இல்லை
இங்கே
*கலைவாணி பாலசந்திரன் (கியு 4) என் சுவாசமும் நீதானே.… .

*ஜனனி ஆனந்தன் (யு 9)

49

தமிழ்ச்சாரல், ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம்
Tamil Charal, IPG Kampus Ipoh

மாற்றங்களும் த�ோற்றங்களும்

நாம் புதிய மலேசியா எனும் சிந்தனை குதிரையில் சவாரி செய்ய நாம் நம்மைத்
தயார்படுத்திக் க�ொள்ள வேண்டும். நாம் முன்னோக்குச் சிந்தனையைக் க�ொண்டிங்கு
செயல்பட வேண்டும். நாம் நம்மை முன்னேறச் செய்வதற்கு, எதிர்காலத்தைப் பற்றிச்
சிந்திக்க வேண்டும். பல புதிய மாற்றங்களைக் க�ொண்டு வர வேண்டும். முன்னேற்றத்தை
ந�ோக்கி பீடு நடை ப�ோட்டுக் க�ொண்டிருக்கும் இவ்வேளையில், நாம் வளர்ச்சிக்
கண்டவர்களாக இருப்பது அவசியமாகும். நாம் முன்னேறப் பல மாற்றங்களை ஏற்றுக்
க�ொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாட்டின் இலக்கை நாம் அடைய முடியும்.

புதிய மலேசியா நல்ல நம்பிக்கையை ந�ோக்கி, ஒரு சிந்தனை மாற்றத்தை
ந�ோக்கிப் புறப்படுகிறது. இந்தச் சிந்தனை மாற்றம் நாம் நாட்டிற்கு ஒரு நல்ல
மாற்றத்தை அமைத்துக் க�ொடுக்கும். மக்களுக்கு மட்டுமில்லாமல் நாட்டிற்கும் இது
ஒரு புதிய முகமாகும். மாற்றங்கள் எனப்படுவது கண் முன் நிகழும் ஒவ்வொரு அசைவிலும்
நாம் காணுகின்ற நிஜங்களாகும். உதாரணத்திற்கு, வானிலிருந்து பெய்யும் மழைத்துளி,
தண்ணீராக, வெள்ளமாக மாற்றம் காண்கிறது. சிறு துளிகள்தான் பெருவெள்ளமாக
மாற்றம் காண்கிறது. அது ப�ோல, நாட்டில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் ஒரு
கனவாக இருந்த காலம் ப�ோய், தற்பொழுது நினைவாகி வருகின்றது.

நூறு ஆண்டுகளக்கு முன்பு இருந்த க�ோலாலம்பூரை இப்பொழுது நம்மால்
காண இயலாது. உதாரணத்திற்கு, முன்பு க�ோலாலம்பூர் தெருக்களில் ஓடிக்
க�ொண்டிருந்த மாட்டு வண்டிகளை இப்பொழுது இழுத்து வர முடியாது. பல நவீன
வளர்ச்சி அடைந்த இக்காலத்தில் மாட்டு வண்டிக்குப் பதிலாகப் பல இயந்திரங்கள்
பயன்பாட்டில் உள்ளன. இதுவே ஒரு பெரிய மாற்றமாகும். அதுமட்டுமில்லாமல்,
க�ோலாலம்பூர் இன்று மாநகரமாய், தலைநகரமாய் நிமிர்ந்து திகழ்கிறது. மிக அழகான,
உயரமான கட்டடமாகத் திகழ்கிறது. க�ோலாலம்பூர் தற்போது பல நவீன மாற்றங்களைக்
கண்டுள்ளது. அதுப�ோல தான் நம் வாழ்க்கையும். மாற்றத்திற்கு உட்பட்டதே.

பல மாற்றங்கள் நாட்டுக்கு முன்னேற்றத்தை, வளர்ச்சியை, நல்லிணக்க
நல்வாழ்வைக் க�ொண்டு வந்துள்ளன. மனித வாழ்க்கையில் சிக்கல்கள், வேதனைகள்,
ச�ோதனைகள் கடந்து சென்றால் தான் பல புதிய மாற்றங்களைக் காண முடியும்.
நமக்கென்று நல்ல பண்புகள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை எடுத்துப் பயன்படுத்திக்
க�ொள்கின்ற மனப்பக்குவங்களை நம் மனத்துள் விதைக்க வேண்டும். இந்தச் சிந்தனை
இருந்தால் மட்டுமே நம்மால் மாற்றத்தை ஏற்றுக் க�ொள்ளும் மனப்பக்குவம் ஏற்படும்.

*மவீணா பாலசந்திரன் (யு 9)

நேற்றைய சரிதம்
இன்றைய நிகழ்வு

நாளைய உலகும் மாறுமடா!

பாட்டனும் பூட்டனும்
ச�ொல்லிய அறத்தின்
படிமங்கள் எப்படி மாறுமடா?

(தமிழ்மணி எல்லோன்)

50


Click to View FlipBook Version